புத்தெழுச்சித் தந்த ஈரோடு தெற்கு மாவட்டத் தோழர்கள் சந்திப்பு

12.12.2021 ஞாயிறு அன்று காலை 11.00 மணியளவில் ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தோழர்களுடனான தலைமைக் கழக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் சித்தோடு பகுதியில் உள்ள மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் எழிலன் சுந்தரம் தலைமை வகித்தார். ஆசிரியர் ப.சிவக்குமார் கடவுள் மறுப்பு கூற நிகழ்வு தொடங்கியது. நிகழ்வின் தொடக்க வுரையாக கழக அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அனைத்து தோழர்களும் தங்கள் கருந்துகளை தெரிவித்தனர்.

‘புரட்சி பெரியார் முழக்கம்’ சந்தா சேர்ப்பு, கழக செயல்பாட்டினை வீரியப்படுத்துவது, புதிய தோழர்களை / இளைஞர்களை உருவாக்கி, பெரியாரியல் சித்தாந்தத்தைப் பயிற்றுவித்து களத்தில் செயல்பட வைப்பது போன்றவைக் குறித்து கருந்து தெரிவித்து விவாதித்தனர்.

அதனைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி கிராமபிரச்சாரம் கொண்டு செல்வது குறித்தும் சிக்கல்கள் வராமல் பிரச்சாரம் செய்திட ஆலோசனை வழங்கினார். நிறைவாக கழக பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழின் அவசி யத்தையும் அதனை மக்கள் மத்தியில் பிரச்சார இயக்கமாகக் கொண்டு செல்லவும், திராவிடர் இயக்கம் செய்த சாதனைகளை பட்டியலிட்டு இதற்காக இழப்புகளைச் சந்தித்த திராவிடர் இயக்கப் போராளிகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.

இக்கலந்தாய்வில் மாவட்ட; தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் எழிலன், மாவட்ட அமைப்பாளர் கிருட்டிணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கிருட்டிணன், மாநகர தலைவர் குமார், சத்தியமூர்த்தி, சிவக்குமார், பிரபு, கணேஷ், இந்தியப் பிரியன், விஜயரத்தினம், இராஜேஸ்வரி, கோபிநாத், செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 23122021 இதழ்

You may also like...