Category: சென்னை

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது !

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது !

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது ! பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் பேட்டி. திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக….. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து…. இன்று 02.04.2018 (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. காணொளிக்கு

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” –  சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும்  ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” – சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” – சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள்  ”டாக்டர் அம்பேத்கர் – இந்திய சமூகம்” எனும் தலைப்பில் முற்பகல் முதல் அமர்வில் கருத்துரையாற்றுகிறார். பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நிகழவிருக்கிறது. நாள் : 03.04.2018 செவ்வாய்க்கிழமை. நேரம் : காலை 09.30.மணி. இடம் : பவளவிழா கலையரங்கம்,மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகம்.

வருமான வரித்துறை அலுவலகம் பூட்டுபோடும் போராட்டம்.!

வருமான வரித்துறை அலுவலகம் பூட்டுபோடும் போராட்டம்.!

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக… காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்க்குலைக்கும் மத்திய அரசை கண்டித்து…. நாள் : 02.04.2018 (திங்கட்கிழமை) நேரம் : காலை 10 மணி இடம் : நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகம், சென்னை.

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச். ராஜாவைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உருவ பொம்மை எரிப்புகள் நடந்தன. குமரி மாவட்டத்தில் 07-03-2017 புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீநாத்திடம் புகார் மனு வழக்குரைஞர் வே.சதா (மாவட்டத் தலைவர்) தலைமையில் தமிழ்மதி (மாவட்டச் செயலாளர்), நீதி அரசர் (தலைவர், பெரியார் தொழிலாளர் கழகம்), சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்), அப்பாஜி (வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர், தி.மு.க), வைகுண்ட ராமன், வின்சென்ட் ஆகியோரால் வழங்கப் பட்டது. ஆனைமலை : கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின்  ஒருங் கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் 07-03-2018 மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது. ஆனைமலை நகரச் செயலர் வே.அரிதாசு தலைமையில், நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது. கண்டன உரையாக நாகராசு (திராவிடர் கழகம்), பரமசிவம் (சிபிஎம் ), மணிமாறன்  (வெல்ஃபேர் பார்ட்டி), அப்பன்குமார் (விசிக), சாந்துசாகுல்அமீது (இந்திய...

இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் சென்னை 06032018

இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் சென்னை 06032018

இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் – முடிவுகள் 20 அன்று இராஜபாளையம் வழியாக மதுரை வரும் இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் – (சென்னை_06_03_2018) முடிவுகள். 1. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் இராமராஜ்ஜிய இரத யாத்திரை தமிழகத்தில் நுழைய அனுமதிக்காதே என தமிழகக் காவல்துறைத் தலைவரிடம் மனு அளிப்பது 2. இரதயாத்திரையை தமிழ்நாட்டில் நுழையும் செங்கோட்டை எல்லையிலேயே #தடுப்பு_மறியல்! தலைவர்கள் திரளாகக் கட்சியினருடன் கலந்து கொள்வது. 3. நெல்லை, மதுரை, விருதுநகர், தென்காசி, இராஜபாளையம் ஆகிய இடங்களில் போராட்டத் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்துவது 4. காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு எனும் பெயரில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைப்பது. தொடர் செயல்பாடுகளை முன்னெடுப்பது 5. தோழர் மீ.த.பாண்டியன் ஒருங்கிணைப்பாளர் எனத் தீர்மானிக்கப்பட்டது. கூட்ட ஒருங்கிணைப்பு – தலைமை தோழர் மீ.த.பாண்டியன் தலைவர், தமிழ்தேச மக்கள் முன்னணி பங்கேற்றோர்: தோழர் கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் தோழர்...

‘சுயமரியாதை திருமணம்’

‘சுயமரியாதை திருமணம்’

‘சுயமரியாதை திருமணம்’ திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 26.02.2018 பகல் 12 மணிக்கு சென்னையை சார்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் நிவேதா ஆகியோருக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் தாலி மறுத்து சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தோழர்.தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்), தோழர்.ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), தோழர்.வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர், தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்), தோழர்.இரா.செந்தில்குமார் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தோழர்கள், இணையர்களின் நட்புறவுகள் வந்திருந்து வாழ்த்துகளை கூறினர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

“நிமர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு – சென்னை.

“நிமர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு – சென்னை.

“நிமர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு – சென்னை. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 04.03.2018 மாலை 6 மணிக்கு “நிமிர்வோம்” வாசகர் சந்திப்பு கலந்துரையாடல் கூட்டம் தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர்.பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார். நிமிர்வோம் ஏப்ரல் மற்றும் மே மாத புத்தகங்களை பற்றிய தங்களுடைய கருத்துகளை தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், ராஜீ, சங்கீதா, ரவிபாரதி ஆகியோர் சிறப்பாக எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் “திராவிடம் தமிழ்தேசியம்” என்ற தலைப்பில் விரிவான ஒரு விளக்கத்தையும், ஆய்வுகளையும் தோழர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் கூடியது

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் கூடியது

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவல கத்தில் 04.03.2018 மாலை 6 மணிக்கு “நிமிர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு கலந்துரையாடல் கூட்டம் இரா.உமாபதி (தென் சென்னை மாவட்டச் செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத் தார். ‘நிமிர்வோம்’ ஏப்ரல் மற்றும் மே மாத இதழ்களைப் பற்றிய தங்களுடைய கருத்துகளை தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், ராஜீ, சங்கீதா, ரவிபாரதி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். ஒவ்வொரு தோழரும் ஒரு கட்டுரையை மய்யப் பொருளாக எடுத்துக் கொண்டு அதன் உள்ளடக்கத்தோடு தங்கள் கருத்துகளையும் இணைத்து சிறப்பாக உரையாற்றினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “திராவிடம் தமிழ்த் தேசியம்” என்ற தலைப்பில் விரிவாகப் பேசினார். தோழர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம்: கழகம் ஆதரவு

சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம்: கழகம் ஆதரவு

காஞ்சிபுரம் – திருவள்ளூரில் புதிய சட்டக் கல்லூரி திறப்பதை காரணம் காட்டி 126 ஆண்டு காலம் பாரம்பரிய மிக்க சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை மூடுவதற்கு முயற்சிக்கும் அரசைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டக் கல்லூரி மாணவர்களின் இந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு 03.03.2018 காலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இராஉமாபதி, வழக்கறிஞர் திருமூர்த்தி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி சிவா ஆகியோர் நேரில் சென்று மாணவர்களின் போராட்டத்திற்கு கழக ஆதரவை தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

நீட்டை இரத்து செய்ய உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்தல்

நீட்டை இரத்து செய்ய உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்தல்

உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் உலகத் தமிழ் அமைப்பு நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தியுள்ளது. மார்ச் 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் அமைப்பு சார்பில் பேசிய அதன் தலைவர் முனைவர் வை.க. தேவ்டென்னசி நீட் தேர்வு முறையினால் உருவாகும் பாதிப்புகளை விளக்கினார். நீதியரசர் அரி. பரந்தாமன் பேசுகையில், “ஆந்திராவில் நீட்டை நீக்கக் கோரி அம்மாநில அரசே முழு நாள் அடைப்பு நடத்தியதையும், அதைத் தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபுவை மோடியும், அமீத்ஷாவும் பேச்சு நடத்த அழைத்துள்ளதையும் சுட்டிக் காட்டி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் சோம்பிக் கிடக்கிறார்கள்?அவையில் கொந்தளித்திருக்க வேண்டாமா” என்று கேட்டார். கழக சார்பில் தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி கலந்து கொண்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவவனர் வேல் முருகன், தியாகு, மருத்துவர் ரவிந்திரநாத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

தலைமைக் கழகத்தில்  ஜாதி – தாலி மறுப்பு மணவிழா

தலைமைக் கழகத்தில் ஜாதி – தாலி மறுப்பு மணவிழா

சென்னை திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையத்தில் 26.2.2018 பகல் 12 மணியளவில் ஜாதி-தாலி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த விழா சிறப்புடன் நடைபெற்றது. சென்னை எம்.கணேசன்-மீனாட்சி ஆகியோரின் மகன் ஜி. இராமகிருஷ்ணன், சென்னை சைதாப்பேட்டை ஜே.ஏ.பார்த்திபன்-ஜூலி ஆகியோரின் மகள் பி.நிவேதா ஆகியோரின் மணவிழாவை உறுதி ஏற்புக் கூறி பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நடத்தி வைத்தார். தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், செயலாளர் இரா. உமாபதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், வடசென்னை மாவட்டச் செயலாளர் செந்தில், உள்ளிட்ட தோழர்களும் நண்பர்களும் திரண்டிருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 01032018 இதழ்

சுகாதாரக் கேடு: மயிலைப் பகுதி தோழர்கள் புகார் மனு

சுகாதாரக் கேடு: மயிலைப் பகுதி தோழர்கள் புகார் மனு

சென்னை மயிலாப்பூர் குடிசை மாற்று வாரியம் பகுதி பிள்ளையார் தெருவில் பல மாதங்களாக சாக்கடை நீர் வெளியேறி பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு, பல்வேறு நோய்கள் போன்றவைகளுக்கு அவதிக்குள்ளாகி வருகிறது. இந்த அடிப்படை பிரச்சனையை உடனடியாக தீர்வு காண கோரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற் பொறியாளரிடம் 05.02.2018 அன்று மயிலாப்பூர் பகுதி தலைவர் இராவணன் மயிலாப்பூர் தோழர்களுடன் கோரிக்கை மனுவை அளித்தார். உடனடி தீர்வு காணா விடில் பகுதி மக்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

சென்னையில் காதலர் தினம்

சென்னையில் காதலர் தினம்

உலக காதலர் தினமான 14.02.2018  அன்று இந்து மக்கள் கட்சி அமைப்பினர் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காதலர் தினத்தை கொண்டாடக் கூடாது என சென்னை கடற்கரையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த இருப்பதாக இருந்த அறிவிப்பையடுத்து, சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் இரண்யா, பகுத்தறிவாளன், யுவராஜ், பிரபாகரன், காவை கனி, மா.தேன்ராஜ் போன்றோர் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் காதலர்களுக்கு சாக்லெட், துண்டறிக்கை வழங்கி காதலர் தினத்தை வரவேற்றனர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை-கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை-கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலையில் பாரி சிவக்குமார் (மாணவர் கழக அமைப்பாளர்)  தலைமையில் நடந்தது. 21.01.18 அன்று மாலை 3 மணிக்கு, சென்னை பனகல் மாளிகை முன்பு டெல்லியில் மர்ம மரணம் அடைந்த திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் சரத் பிரபு மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டியும், வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்தும், தோரட் பரிந்துரைகளை அமுல்படுத்தக் கோரியும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களின் குறைகளைக் கேட்க பேராசிரியர் தகுதியுள்ள தனி அலுவலர் நியமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச்  சென்ற கழக அமைப்பினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் சைதை மாநகர தொடக்கப் பள்ளியில் அடைக்கப்பட்டு, மாலை விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 22022018 இதழ்

ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது தலைநகரில் கழகம் எடுத்த ‘காதலர் நாள்’

ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது தலைநகரில் கழகம் எடுத்த ‘காதலர் நாள்’

தென் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் 11.2.2018 மாலை 4 மணியளவில் சென்னை அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் காதலர் நாள், ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது. காஞ்சி மக்கள் மன்றத்  தோழர்களும், ம.க.இ.க. தோழர் காமராசும் ஜாதி ஒழிப்புப் பாடல்களைப் பாடினர். தோழர்கள் ஜெயநேசன், ரவிபாரதி கவிதைகளை வாசித்தனர். தொடர்ந்து, ‘எது தேவை? வாழ்வியல் காதலா? தெய்வீகக் காதலா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. வே. மதிமாறன் நடுவராக இருந்தார். ‘வாழ்வியல் காதலே’ என்ற அணியில் திலகவதி, சுபா ஆகியோரும், ‘தெய்வீகக் காதலே’ என்ற அணியில் மேட்டூர் பரத், சென்னை யுவராஜ் ஆகியோரும் பேசினர். வே. மதிமாறன் தனது உரையில், ‘தெய்வீகக் காதல் கூட ஒரு பெண் ஆண் கடவுளை நினைத்து உருகி, அவனுக் காகவே அர்ப்பணித்துக் கொண்டவளாக இருப்பதற்கே அனுமதிக்கிறதே தவிர, ஒரு ஆண், பெண் கடவுளுக்காக உருகி, உருகி,...

ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா சென்னை 11022018

ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா சென்னை 11022018

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்…. ஜாதி_மறுப்பு_இணையோருக்கு_பாராட்டு_விழா….. நாள் : 11.02.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு…. இடம் : டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபம், அடையாறு, சென்னை சிறப்புரை : #தோழர்_விடுதலை_இராசேந்திரன் பொதுச் செயலாளர்.,திவிக #பேராசிரியர்_சரசுவதி #எழுத்தாளர்_மதிமாறன் கவிதை, பாடல், வாழ்த்துரை,பட்டிமன்றம்,கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்…. #ஆணவக்_கொலைகள்_சாகட்டும்…. #ஜாதி_மறுப்பு_திருமணங்கள்_வாழட்டும் ஜாதி மறுப்பு இணையர்கள் முன்பதிவு அவசியம்

“ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை” தமிழை மறுக்கும் வேதமரபுகள் – கருத்தரங்கம் 30012018

“ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை” தமிழை மறுக்கும் வேதமரபுகள் – கருத்தரங்கம் 30012018

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக 30.01.2018 அன்று நடைபெற்ற “ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை” #தமிழை_மறுக்கும்_வேதமரபுகள்கருத்தரங்கம் இராயப்பேட்டை, விஜய் திருமண மண்டபத்தில் தோழர்.அன்புதனசேகரன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் ஒருங்கிணைத்தார். தொடக்கமாக தோழர்.சுகுமார் (தென்சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரையாற்றினார். அதை தொடர்ந்து தோழர்.வாலஜாவல்லவன் (மார்ச்சிய பெரியாரிய கட்சி) அவர்கள் பல்வேறு வரலாற்று ஆய்வுகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆண்டாள் பற்றிய தனது ஆய்வுகளையும், தமிழை மறுக்கும் வேதமரபுகள் பற்றியும், சங்கராச்சாரியின் வரலாறுகளையும் பல்வேறு கருத்துகளையும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ச்சியாக முனைவர்.தோழர்.சுந்தரவள்ளி அவர்கள் பல்வேறு கருத்துகளை கூறி சிறப்புரையாற்றினார். இறுதியாக தோழர்.ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

விஜயேந்திரன்-எச். ராஜா பார்ப்பனத் திமிர் காஞ்சி சங்கர மடம் முற்றுகை

சமஸ்கிருத விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்த காஞ்சி விஜயேந்திரன், நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த எச். ராஜா மன்னிப்புக் கேட்கக் கோரி தமிழகம் முழுதும் கழகத்தினரும், இன உணர்வாளர்களும் முற்றுகை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சேலம்: சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் 25.1.18 மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தைக் கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக் கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந் திரன், எச்.ராஜா செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து...

ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா சென்னை 11022018

ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா சென்னை 11022018

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்…. ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா….. நாள் : 11.02.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு…. இடம் : டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபம், அடையாறு, சென்னை சிறப்புரை : தோழர் விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர்.,திவிக பேராசிரியர்.சரசுவதி எழுத்தாளர்.மதிமாறன் கவிதை, பாடல், வாழ்த்துரை,பட்டிமன்றம்,கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்…. ஆணவக் கொலைகள் சாகட்டும்…. ஜாதி மறுப்பு திருமணங்கள் வாழட்டும் ஜாதி மறுப்பு இணையர்கள் முன்பதிவுக்கு… தொடர்புக்கு : 7299230363/8056460580

காஞ்சி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் !

          காஞ்சி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் ! நாளை (25.01.2018) திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் ஒருங்கிணைந்து…. #காஞ்சி_சங்கர_மடம்_முற்றுகைப்_போராட்டம்… நாளை (25.01.2018) காலை 10 மணிக்கு… இடம்: பெரியார் சிலை எதிரில், சங்கர மடம், காஞ்சிபுரம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் பார்ப்பனியத் திமிரோடு தமிழ்த் தாய் வாழ்த்தை இழிவுபடுத்திய விஜயேந்திர சரஸ்வதியை கண்டித்து.. தமிழையும், தமிழர்களையும் அவமதித்தற்காக விஜயேந்திர சரஸ்வதி மற்றும் எச்.ராஜா ஆகிய இருவரும் திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முழக்கத்தோடு… #முற்றுகைப்_போராட்டம்… பார்ப்பனீய கொட்டத்தை அடக்க தோழர்களே அணிதிரள்வீர்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தமிழக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!! 21012018

தமிழக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!! மருத்துவக் கல்லூரி மாணவர் சரத்பிரபு டெல்லியில் படுகொலையை (மர்ம மரணம்) கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் நடைபெறுகிறது. நாள் : 21.01.2018 (ஞாயிற்றுக்கிழமை)  நேரம் : மாலை 3 மணி இடம் : மத்திய கைலாஸ், சென்னை. வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் மர்ம மரணம் தொடர்கதையாகிவிட்டது. சென்ற ஆண்டு டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் படித்த திருப்பூரை சேர்ந்த மருத்துவர் சரவணன், சேலம் முத்துகிருஷ்ணன் ஆகியோர் இந்த ஆண்டு மருத்துவர் சரத் பிரபு. வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தியும், தொடரும் படுகொலைக்கு சிபிஐ விசாரணை வேண்டியும் தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து #தமிழ்நாடு_மாணவர்_கழகம்நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம். வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொள்ளவும்.!! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363/9688310621

மத்திய அரசுப் பணிகளில் தமிழர் உரிமை பறிப்பு – புத்தக வெளியீடு சென்னை 17012018

திவிக பொதுச்செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் வெளியிட தோழர் திருமுருகன் காந்தி பெற்றுக்கொள்ள இயக்கத்தோழர்கள் ஆதரவுடன் எளிமையான நூல் வெளியீடு விழா 17012018 அன்று ,”மத்திய அரசுப் பணிகளில் தமிழர் உரிமை பறிப்பு” சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டது எழுத்தாளர் – தோழர் அன்பு தனசேகர் மொத்த பக்கங்கள் – 40 நன்கொடை – 25

18ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு, பொங்கல் விழா சென்னை 12012018

நித்திரையில் இருக்கும் தமிழா… சித்திரையல்ல உன் புத்தாண்டு… தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு… திருவல்லிக்கேணியில் 18ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு…பொங்கல் விழா… வரும் 12.01.2018 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு…. வி.எம்.தெரு, இராயப்பேட்டையில்…. பரிசளிப்பு வாழ்த்துரை…. தோழர்.கோபி நயினார், ‘அறம்’ திரைப்பட இயக்குனர் திருநங்கை.தாரிகா பானு, சித்த மருத்துவ மாணவர் மு.குணசேகரன், முதன்மை செய்தி ஆசிரியர்…நீயூஸ் 18 விடுதலை.இராசேந்திரன், பொதுச் செயலாளர், திவிக மருத்துவர்.சரவணன், மாநிலத் துணைத் தலைவர், மருத்துவர் அணி, திமுக ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர், திமுக ஆர்.என்.துரை, தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர், திமுக எஸ்.எஸ்.பிரபு, ஒ.செ.மா.அ.செயலாளர், புரட்சி பாரதம் வாருங்கள் தோழர்களே இது நம்ம விழா… பொங்கல் விழாக் குழு திருவல்லிக்கேணி பகுதி தொடர்புக்கு : 7299230363

காதலர் தின விழா 14022018 சென்னை

ஜாதி மதம் ஒழிக்க! சமத்துவம் படைக்க!! காதல் செய்வீர்!!! ஜாதி எனும் பாறையை பிளக்க!! காதல் எனும் வெடியை தவிர வேறேதுமில்லை!!! ஆதலால் காதல் செய்வீர் !!!…. ஜாதி மறுப்பு இணையர்களே அணி திரள்வோம் #புரட்சியாளர்_அம்பேத்கர்_மணிமண்டபம் நோக்கி …. ஒரு உயிர் தனது உணர்வையும் அன்பையும் யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவும் செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது …. தனது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவரவர் உடையதே அன்றி … ஜாதிக்கோ மதத்திற்கோ இங்கு வேலை இல்லை ….. அவ்வாறு தடையாய் அமையும்பட்சத்தில் #ஜாதியின்_வேர்கள்_காதல்_எனும்_கேடயத்தால்_அழிக்கப்படும் …. நிகழ்வுகள் : பறையிசை மற்றும் கலைநிகழ்ச்சி பட்டிமன்றம் இணையர்களுக்கான போட்டிகள் நடைபெறும் …. முன்பதிவிற்கு : 8056460580 , 7299230363 திராவிடர் விடுதலை கழகம்

தலைமைக் கழகத்தில் “நிமிர்வோம்” வாசகர் வட்டம்

தலைமைக் கழகத்தில் “நிமிர்வோம்” வாசகர் வட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாத இதழான “நிமிர்வோம்” இதழ் குறித்து வாசகர் வட்டம் (31.12.2017) மாலை 6 மணிக்கு தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் தலைமையில் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டத்தினை வே.இராமசாமி ஒருங்கிணைத்தார். பிப்ரவரி மற்றும் மார்ச் 2017 இதழ்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், பிரகாஷ், மதன்குமார், வே.இராமசாமி இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் குறித்து தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். சிறப்புரையாற்ற – மார்க்சிய  – பெரியாரிய ஆய்வாளர் க.காமராசன் “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூல் குறித்து விரிவாகப் பேசினார். தன் ஆழமான கருத்துகளையும், நூலின் சிறப்புகளை குறித்து தோழர்களிடம் தெளிவான விளக்கத்தை கொடுத்தார். மா.தேன்ராஜ் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

நிமிர்வோம் வாசகர் வட்டம் – சென்னை 31122017

நிமிர்வோம் வாசகர் வட்டம் – சென்னை. திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாத இதழான “நிமிர்வோம்” இதழை குறித்து வாசகர் வட்டம் 31.12.2017 அன்று மாலை 6 மணிக்கு தலைமைக் குழு உறுப்பினர் தோழர்.ந.அய்யனார் அவர்கள் தலைமையில் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டத்தினை தோழர்.வே.இராமசாமி ஒருங்கிணைத்தார். இந்த வாசகர் வட்டத்தின் பிப்ரவரி மற்றும் மார்ச் 2017 இதழைக் குறித்து விவாதிக்கப்பட்டது. வாசகர் வட்டத்தில் இதழைக் குறித்து தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், பிரகாஷ், மதன்குமார், வே.இராமசாமி போன்ற தோழர்கள் இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை குறித்து தங்களது பார்வையும், கருத்துகளையும் எடுத்துரைத்தனர். வாசகர் வட்டத்தில் சிறப்புரையாற்ற தோழர்.க.காமராசன் அவர்கள் “வால்கோவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை குறித்து தன் ஆழமான கருத்துகளையும், நூலின் சிறப்புகளை குறித்து தோழர்களிடம் தெளிவான விளக்கத்தை கொடுத்தார். இறுதியாக, தோழர்.மா.தேன்ராஜ் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

தந்தை பெரியார் 44வது நினைவு நாள் சென்னை 24122017

தந்தை பெரியாரின் 44வது நினைவு நாளான இன்று 24.12.2017 சென்னை சிம்சன் பெரியார் பாலம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர். விடுதலை இராசேந்திரன்அவர்கள் தலைமையில் சென்னை மாவட்ட திவிக தோழர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். உடன் தலைமை நிலைய செயலர் தோழர் தபசி குமரன், தென்சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், செயலாளர் தோழர் உமாபதி, வடசென்னை மாவட்ட தலைவர் யேசுகுமார், செயலாளர் செந்தில் FDL மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டு ஜாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராய் உறுதியேற்றனர் பின்னர் தோழர்கள் 10.00 மணிக்கு தியாகராய நகரிலும், 10:30 மணிக்கு ஆலந்தூர், 11மணிக்கு இராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து வீர வணக்கம்.

குடிசைப் பகுதி மக்களின் கட்டாய வெளியேற்றத்தைக் கண்டித்து முதல்வர் வீடு முற்றுகை: தோழர்கள் கைது

குடிசைப் பகுதி மக்களின் கட்டாய வெளியேற்றத்தைக் கண்டித்து முதல்வர் வீடு முற்றுகை: தோழர்கள் கைது

சென்னை ஆயிரம் விளக்கு பகுதிகளில் அமைந்துள்ள திடீர் நகர், மக்கீஸ் தோட்டம் பகுதி குடியிருப்பில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் தமிழக அரசை கண்டித்து….. 25.11.2017 அன்று காலை 11 மணிக்கு பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்தை திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த பொறுப்பாளர்கள், தென் சென்னை மாவட்டச் செய லாளர் இரா. உமாபதி, வடசென்னை மாவட்ட செயலாளர் செந்தில் (எப்.டி.எல்.), தலைவர் ஏசுகுமார், மயிலை தோழர்கள் மாரி, சுகுமார், இராவணன், சிவா, குமரேசன், ஜா. உமாபதி, மாணிக்கம், யுவராஜ், இலட்சுமணன், தேன்ராஜ் உள்ளிட்ட கழகத்தினர், தமிழ்நாடு இளைஞர்கள் இயக்கம் ராஜா, அம்பேத்கர் மக்கள் படை மதிபறையனார், இளந்தமிழகம் செந்தில், பச்சைத் தமிழகம்  மற்றும் பல்வேறு இயக்கத்தை சார்ந்த தோழர்கள் ஒன்றிணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பினர். தமிழக அரசுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பி, முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு முற்றுகை சென்னை 25112017

ஆயிரம் விளக்கு பகுதிகளில் அமைந்துள்ள திடீர் நகர், மக்கீஸ் தோட்டம் பகுதி குடியிருப்பில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் தமிழக அரசை கண்டித்து….. இன்று (25.11.2017) காலை 11 மணிக்கு கீரின்வேஸ் சாலையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்தை திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த தோழர்கள், தமிழ்நாடு இளைஞர்கள் இயக்கம், அம்பேத்கர் மக்கள் படை, இளந்தமிழகம் மற்றும் பல்வேறு இயக்கத்தை சார்ந்த தோழர்கள் ஒன்றிணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பினர். தமிழக அரசுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பி, முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம் ! சென்னை 25112017

தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம் ! சென்னை 25112017

தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம் ! நாள் : 25.11.2017 சனிக் கிழமை நேரம் : காலை 11 மணி இடம் : கிரீன்வேஸ் சாலை, சென்னை. ஆயிரம் விளக்கு, திடீர் நகர் போன்ற பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஏழை மக்களை கார்ப்ரெட் நலனுக்காக கட்டாய வெளியேற்றம் செய்யும் தமிழக அரசை கண்டித்து. அனைத்து இயக்க தோழர்களும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்களும் ஒன்றிணைந்து… நாளை 25.11.2017 காலை 11 மணிக்கு கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம். தொடர்புக்கு : தோழர்.இரா.உமாபதி 7299230363 மாவட்டத் தலைவர் திராவிடர் விடுதலைக்கழகம்.

பெரியார் தொண்டரின் நேர்மை

தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியில் உள்ள 5.75 இலட்சம் பணத்தை இரயில்வே நிர்வாகத் திடம் பொய்யாமொழி என்ற கூலித் தொழிலாளி ஒப்படைத்தார். அவரின் செயலை இரயில்வே நிர்வாகம் பாராட்டியிருக்கிறது. சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார். இவர் கடந்த 1ஆம் தேதி சேலம் விரைவு இரயிலில் சென்னை வந்தபோது அவர் கொண்டுவந்த பையில் 10.75 இலட்சம் ரூபாயை பையுடன் தவறவிட்டார். சென்னை எழும்பூர் சென்றதும் கொண்டுவந்த பெட்டியில் பணம் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து எழும்பூர் இரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் இரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் உள்ள பணத்தை எடுத்த பொய்யாமொழி போலீஸில் ஒப்படைத்தார். 10.75 இலட்சரூபாயில் 5.75 இலட்சம் மட்டுமே இருந்த காரணத்தால், இரயில்வே போலீஸார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அப்போது வேறு ஒரு மர்மநபர் ஒருவர்...

தலைமை செயலக முற்றுகைப் போராட்டம் சென்னை 30102017

#செய்துவிட்டது_கேரளம் #அறிவித்து_விட்டது_கர்நாடகம் #தமிழகம்_சோம்பிக்_கிடப்பதா? ஜாதியின் பெயரால் மறுக்கப்படும் எதையுமே சமூகநீதியால் அனைவருக்கும் உரித்தாக்குவதே ஜாதிய கட்டமைப்பை தகர்க்கும் எளிய வழி. அந்தவகையில் ஆகம விதி என்ற பெயரால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாகவும், மற்ற ஜாதியினருக்கு மறுக்கப்பட்டும் வருகிற சைவ, வைணவ ஆலயங்களுக்கான அர்ச்சகர் பணியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என்ற பெரியாரின் இறுதிக் கனவிற்கு உயிர் கொடுத்திருக்கிறது பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி. விரைவில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கப் போவதாக அறிவித்திருக்கிறது கர்நாடக அரசு. இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையைப் பிறப்பித்த தமிழக அரசு இன்னும் நிறைவேற்றாமல் என்ன செய்துக் கொண்டிருக்கிறது? ஒற்றைப் பண்பாடு, ஒற்றைக் கலாச்சாரம் என்று பெருமைகொள்ளும் இந்து மதத்தில் வேறு எங்கும் இல்லாத ஆகமவிதிகள் தமிழ்நாட்டிற்கு மட்டும் எப்படி வந்தது? தமிழ்நாட்டில் உள்ள 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆலயங்களில் முறையாக ஆகம விதிகள் பின்பற்றப்படுவதே இல்லை. ஆகமத்தை பின்பற்றாத...

காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்றவர்கள் கைது சென்னை 02102017

காந்தி தேசத்தந்தை என்று இந்திய அரசு அறிவித்தாலும் தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியின் காவல்துறைக்கு காந்தி ஒரு பயங்கரவாதி ஆகிவிட்டார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு – காந்தியைக் கொன்ற மதவெறி சக்திகளை எதிர்த்து முழக்கமிட்டு, மாலையிட வந்த இளைஞர்களை காவல்துறை தடுத்து கைது செய்து விட்டது. “தேசத்தந்தைக்கு இதை விட வேறு சிறந்த மரியாதையை எப்படி காட்ட முடியும்?” நாட்டின் “சுதந்திர” த்திற்கு பிறகு காந்தி சிலைக்கு அவர் பிறந்தநாளில் மாலை அணிவிக்க தடைவிதித்த ஒரே மாநிலம் “தமிழ்நாடு” என்ற கின்னஸ் சாதனையை தமிழக காவல்துறை உருவாக்கியிருக்கிறது. இப்படி ‘தேசபக்தியுடன்’ முடிவெடுத்த காவல்துறையினருக்கு ‘சுதந்திரதின’ விழாவிலோ, ‘குடியரசு தின’ விழாவிலோ சிறந்த சேவைக்கான வீர விருதை வழங்கி இந்தியாவின் தேசபக்தியை உலகத்துக்குக் காட்டிக் கொள்ளலாம். “காந்திக்கு ஜே” காந்தியை அவமதித்த தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் டபுள் “ஜே”

சுயமரியாதை கால்பந்து கழகத்தின் 5ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி 24092017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மயிலை பகுதி நடத்தும்… #சுயமரியாதை_கால்பந்து_கழகத்தின் 5ஆம் ஆண்டு கால் பந்து போட்டி குருவிளையாட்டுத்திடல் மயிலாப்பூர் பகுதியில் 24.09.2017 காலை 8 மணியளவில் நடைபெற்றது. போட்டி துவக்கி வைக்க வந்த மயிலை த. வேலு (மயிலை கிழக்கு பகுதி செயலாளர், திமுக) அவர்களுக்கு தோழர்.மாணிக்கம் மற்றும் தோழர்.சி.பிரவீன் சால்வை அணிவித்து வரவேற்றனர். கால்பந்து போட்டியை மயிலை த.வேலு அவர்கள் இந்த கால்பந்து போட்டியை ஒருங்கிணைத்த மயிலை பகுதி தோழர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி போட்டியை துவக்கி வைத்தார். இந்த கால்பந்து போட்டியில் பல்வேறு பகுதியிலிருந்து 16 அணிகள் பங்கேற்றனர். இந்த கால்பந்து போட்டியில் AVP பிராட்வே அணி வெற்றி பெற்றது. இரண்டாவது அணியாக MKFC அணி வந்தது. இந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வரும் 26.09.2017 அன்று நடைபெறவுள்ள செரின் மேரீஸ் பாலம், மந்தவெளி இரயில் நிலையம் அருகில் தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்படும் என்று...

இழந்து வரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! சமூக நீதி சமத்துவ தெரு முனைக் கூட்டம் சென்னை பரப்புரை பயணக்குழு

23/09/2017   காலை 10.00 மணி   பூந்தமல்லி காலை 11.30 மணி   போரூர் மாலை 03.00 மணி இராமபுரம் மாலை 05.00 மணி  ஆதம்பாக்கம், அம்பேத்கர் சிலை   24/09/2017    காலை 10.00 மணி மேடவாக்கம் காலை 11.30 மணி   பள்ளிக்கரனை மாலை 03.00 மணி   மடிப்பாக்கம் மாலை 05.00 மணி    வேளச்சேரி   25/09/2017  காலை 10.00 மணி    வெட்டுவாங்கேணி காலை 11.30 மணி   பாலவாக்கம் மாலை 03.00 மணி   திருவான்மியூர் குளம் மாலை 05.00 மணி லெட்சுமிபுரம், திருவான்மியூர் (காந்தி சிலை)   26/09/2017    காலை 10.00 மணி அடையாறு (பி.எஸ்.என்.எல் ) காலை 11.30 மணி        டாக்டர் நடேசன் சாலை சந்திப்பு மாலை 03.00 மணி    திருவல்லிக்கேணி     வாகன பதிவு எண் TN 48 R 9999  Swaraj Mastha...

தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மயிலை 26092017

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் பகுதியின்… தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்…. நாள் : 26.09.2017,செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, இடம் : சென்மேரீஸ் பாலம், மயிலாப்பூர் சிறப்புரை : #தோழர்_கொளத்தூர்_மணி தலைவர் திவிக #நீதியரசர்_அரிபரந்தாமன் முன்னாள் நீதிபதி, உயர்நீதிமன்றம் சென்னை #தோழர்_விடுதலை_இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக #தோழர்_தபசி_குமரன் தலைமை நிலையச் செயலாளர், திவிக #தோழர்_அன்பு_தனசேகரன் தலைமை செயற்குழு உறுப்பினர், திவிக #வழக்கறிஞர்_திருமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றம், திவிக #வழக்கறிஞர்_தோழர்_துரை_அருண் சென்னை உயர்நீதிமன்றம், திவிக #தோழர்_இரா_உமாபதி தென் சென்னை மாவட்ட செயலாளர், திவிக #தோழர்_வேழவேந்தன் தென்சென்னை மாவட்ட தலைவர், திவிக #விரட்டு கலைக்குழுவின் பறையிசை மற்றும் வீதி நாடகம் நடைபெறும். #வாருங்க_தோழர்களே.! #சமூகநீதி_காத்த_தந்தை_பெரியாரின் #கொள்கையை_சூளுரைப்போம்.! #மற்றும்… #சுயமரியாதை_கால்பந்து_கழகத்தின் 5ஆம் ஆண்டு கால்பந்து போட்டி… நாள் : 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு இடம் : குருபுரம் விளையாட்டு திடல், மயிலாப்பூர். கால்பந்து போட்டியை தொடங்கி வைப்பவர் : #மயிலை_த_வேலு மயிலை...

தோழர் கவுரி லங்கேஷ் அவர்களுக்கு நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்வு சென்னை 17092017

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் கவுரி லங்கேஷ்அவர்களுக்கு நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்வு… திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக நேற்று (17.09.2017) மாலை 6 மணிக்கு தலைமை அலுவலகத்தில் தோழர்.பெரியார் யுவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தோழர். எட்வின் பிரபாகரன் முன்னிலை வகித்தார். நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வை தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். நினைவேந்தல் நிகழ்வின் தொடக்கமாக்க தோழர்.கார்த்திக் இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்வில் எழுத்தாளர்.கவுரி லங்கேஷ் அவர்களின் படத்தை கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தி, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நினைவேந்தல் நிகழ்வில் தோழர்.ஜெயநேசன், மனிதி இயக்கத்தின் தோழர்.செல்வி, இளந்தமிழகத்தின் தோழர்.செந்தில், மே17 இயக்கத்தின் தோழர். பிரவீன் மற்றும் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் எழுத்தாளர். கவுரி லங்கேஷ் அவர்களின் சமூக நோக்கத்தை குறித்தும், சமூகநீதிக்கான அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளை...

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சென்னை

தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாளான 17.09.2017 காலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் கழகப் பொதுச் செயலாளர் தோழர். விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் தி.நகர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கத்தோடு மரியாதை செலுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக கிண்டி ஆலந்தூர், மந்தவெளி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்பு, மயிலாப்பூர் பகுதியில் அமைக்கப்பட்ட பெரியாரின் திருஉருவப் படத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் மாலை அணிவித்தார். அதை தொடர்ந்து இராயப்பேட்டை மற்றும் சென்னை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, சமூகநீதி முழக்கத்தோடு மரியாதை செலுத்தப்பட்டது. தண்டையார்பேட்டை பகுதியில் கழக கொடி ஏற்றி, தோழர்.அனிதாவிற்கு வீர வணக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கடைசியாக, திருவொற்றியூர் பகுதியில் கழக கொடியை ஏற்றி தோழர்.அனிதா மற்றும் எழுத்தாளர்.தோழர்.கவுரி லங்கேஷ் அவர்களுக்கு மாலை அணிவித்து வீரவணக்க முழக்கமிட்டனர்.அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #எழுத்தாளர் கவுரி லங்கேஷ் நினைவேந்தல் படத்திறப்பு சென்னை 17092017

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #எழுத்தாளர் கவுரி லங்கேஷ் நினைவேந்தல் படத்திறப்பு நாள் : 17.09.2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணிக்கு. இடம் : திராவிடர் விடுதலைக் கழகம், தலைமை அலுவலகம், மயிலாப்பூர், சென்னை – 04 கண்டன உரை : #தோழர் விடுதலை க இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக தோழர் செந்தில் இளந்தமிழகம் தோழர் பிரவீன் மே 17 இயக்கம் தோழர் செல்வி மனிதி கோழையே உன்னிடம் தோட்டாக்கள்… என்னிடம் அழியா வார்த்தைகள்… எதற்கும் அஞ்ச மாட்டேன்…நான் #கவுரி_லங்கேஷ் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

ஜாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் தெருமுனைக்கூட்டம் சென்னை 11092017

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் பகுதி சார்பாக… ஜாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரனின் நினைவு நாள்….பெரியாரின் பிறந்தநாள் தெருமுனைக்கூட்டம் தோழர்.ஜா.உமாபதி அவர்கள் தலைமையில் நேற்று (11.09.2017) மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில், கூட்டத்தின் தொடக்கமாக தோழர்.நாத்திகன் மற்றும் தோழர்.கீர்த்தி அவர்களும் ஜாதி ஒழிப்பு பாடல்களையும், பகுத்தறிவு பாடல்களையும் பாடினார். தெருமுனைக் கூட்டத்தில் இமானுவேல் சேகரின் ஜாதி ஒழிப்பு போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள், அவரது படுகொலை குறித்தும் பல்வேறு நிகழ்வுகளை குறித்தும் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்), தோழர்.ந.அய்யனார்(தலைமைக் குழு உறுப்பினர்), தோழர்.வழக்கறிஞர் துரை அருண்(சென்னை உயர்நீதிமன்றம்) மற்றும் தோழர்.அன்பு தனசேகரன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக, சிறப்புரையாற்றிய தோழர்களுக்கும், வந்திருந்த தோழர்களுக்கும், காவல் துறைக்கும், தெருமுனைக் கூட்டத்திற்கு உறுதுணையாக இருந்த தோழமை தோழர்களுக்கும் தோழர்.சுகுமாறன் (சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவுச் செய்தார்.

ஜாதி ஒழிப்பு போராளி தோழர் இமானுவேல் சேகரின் நினைவு நாள் மற்றும் பெரியார் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

ஜாதி ஒழிப்பு போராளி தோழர் இமானுவேல் சேகரின் நினைவு நாள் மற்றும் பெரியார் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் மயிலை பகுதி சார்பாக… நாள் : 11.09.2017 திங்கட்கிழமை, மாலை 5 மணியளவில், இடம் : குயில் தோட்டம், (முன்புற பகுதி), சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை- 04. சிறப்புரை : தோழர்.கு.அன்பு தனசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர், திவிக தோழர்.அம்பேத் ராமசாமி தோழர்.வழக்கறிஞர்.துரை அருண் சென்னை உயர்நீதிமன்றம், திவிக தோழர்.இரா.உமாபதி தென்சென்னை மாவட்டச் செயலாளர், திவிக தோழர்.ந.அய்யனார் தலைமை செயற்குழு உறுப்பினர், திவிக வாருங்கள்_தோழர்களே.! பார்ப்பனிய கட்டமைப்பில் உள்ள இந்தியாவில் பார்ப்பனியத்தை நடைமுறையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆதிக்க சாதி இந்துக்களுக்கெதிராக போராடி தன் இன்னுயிரை நீத்த பார்ப்பனீய எதிர்ப்பு போராளி இம்மானுவேல் சேகரை நினைவு கூறுவோம்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி பாஜக அலுவலகம் முற்றுகை, மோடி உருவ மொம்மை எரிப்பு சென்னை 02092017

சென்னையில், மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய பா.ஜ.க. மோடி அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுருத்தியும் பா.ஜ.க. தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் நீட்டுக்கு எதிராக சமூக நீதி கோரி வழக்கு தொடுத்தவரும் மத்திய காவி பா.ஜ.க. மோடி அரசால் மருத்துவ படிப்பு கனவு சிதைக்கப்பட்டு தோழர் அனிதாவின் . படுகொலைக்கு காரணமான மோடி அரசை கண்டித்தும்,நீட் தேர்வை ரத்து செய்ய வலியுருத்தியும் 02.09.2017 அன்று மாலை 3 மணியளவில் பா.ஜ.க தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு மத்திய மோடி அரசுக்கு எதிராகவும், தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோக செயலை கண்டித்து போர் முழக்கமிட்டனர்… தமிழக கல்வி உரிமைகளை மாநில பட்டியலில் இருந்து நீக்கி, பொதுப்பட்டியலுக்கு...

அரியலூர் அனிதாவை தற்கொலைக்கு தூண்டிய மத்திய அரசை கண்டித்து திவிக சார்பில் மாநிலம் முழுதும் முற்றுகைப் போராட்டம் 02092017

நீட் தேர்வை திணித்து தமிழக கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான பா.ஜ.கவின் தமிழக தலைமையகம் கமலாயத்தை முற்றுகையிடும் போராட்டம்.. நீட் தேர்வை ரத்து செய் மாணவி அனிதாவின் கொலைக்கு நீதி வழங்கு! நேரம்:மாலை 3.00 மணி நாள்:02.09.2017 திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை   நீட் தேர்வினை திணித்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது காலை 10 மணிக்கு, கோவை இரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 4 மணிக்கு, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 3 மணிக்கு, சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை மாலை 5 மணிக்கு, மன்னார்குடி பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை பரப்புரைக் குழுவின் பயண எழுச்சி

சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்ற  சமூக நீதி – சமத்துவப் பரப்புரைப் பயணம் குறித்த செய்தித் தொகுப்பு. 7.8.2017 அன்று காலை 10 மணியளவில் தாம்பரம் அம்பேத்கர் சிலை அருகில் பரப்புரை நடைபெற்றது. இதில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் (காஞ்சிபுரம்) அக்பர் அலி தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு வரவேற்பு அளித்து ஜாகீர் உசேன் உரை நிகழ்த்தினார். பின் இரா. உமாபதி, விரட்டுக் கலைக் குழு ஆனந்த், விழுப்புரம் அய்யனார் ஆகியோருக்கு சால்வை அணிவித்தனர். ம.தி.மு.க.வை சார்ந்த தாம்பரம் மணி வண்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.2000 நன்கொடை அளித்தார். பிறகு 12 மணியளவில் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் பரப்புரை  நடைபெற்றது. பொத்தேரியில் தெள்ளமிழ்து, தினேஷ் ஆகியோர் தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளித்தும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்தனர். கூடுவாஞ்சேரி ராஜேஷ் ரூ.500 நன்கொடை அளித்தார். மாலை 4 மணியளவில் சிங்கபெருமாள் கோயில்...

பெரியார் கைத்தடி ஊர்வலம் சென்னை 31082017

திராவடர் விடுதலைக் கழகம் சார்பாக பெரியார் கைத்தடி ஊர்வலம் இன்று உழைக்கும் மக்களுக்கு குரல் கொடுக்காத இந்து முண்ணனி இராமகோபாலனே விநாயகர் அரசியலுக்கு அழைக்காதே, எங்கள் நாடு தமிழ்நாடு இங்கு ஏதடா இந்து நாடு என்ற முழக்கத்துடன் சென்னை ஐஸ்அவுஸில் 31.8.17 மாலை 4.00 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கண்டன ஊர்வலம நடைப்பெற்றது. கழக தோழர்கள் 200 பேருக்கு மேல் கலந்து கொண்டு110 பேர் கைதானார்கள். அனைவரும் இராயப்பேட்டை பேகம்சாகிப் தெருவில் உள்ள மாநகராட்சி சமூக கூடத்தில் காவலில் உள்ளனர். செய்தி குகநந்தன்

பெரியார் கைத்தடி ஊர்வலம் ! சென்னை 31082017

பெரியார் கைத்தடி ஊர்வலம் ! நாள் : 31.08.2017 வியாழக்கிழமை, மாலை 3.00 மணிக்கு. இடம் : ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி, சென்னை-05. மக்கள் வாழ்வுரிமைகளை பறித்தவர்கள் நடத்தும்… விநாயகர் ஊர்வலத்தை புறக்கணிப்போம்.! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்.. தலைமை : தோழர்.விடுதலை க.இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். #வாழ்வுரிமைக்கான_போராட்டத்துக்கு_குரல்_கொடுப்போம். #வாருங்கள்_தோழர்களே.! #மதவெறியை_மாய்போம்.! #மனிதநேயம்_காப்போம்.! திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 19.08.2017 மாலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்று முடிந்தது. கலந்துரையாடல் கூட்டத்தை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி ஒருங்கிணைத்தார். கூட்டத்தின் தொடக்கமாக கடவுள் மறுப்பு உரையை குகன் கூறினார். இதில், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்களது சமூகநீதி- சமத்துவ பரப்புரை பயணத்தின் அனுபவங்கள் குறித்தும், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனர். இதில் பேசிய கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வருகிற 25ஆம் தேதி நடைபெற இருக்கும் வினாயகர் சதுர்த்தி எப்படி இந்துமுன்னணி போன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் அவர்களின் சுயலாபத்துக்காக அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்களை கடவுளின் பெயரால் ஒன்றுதிரட்டி மற்ற மதத்தவருக்கு எதிராக மாற்றும் போக்கினை எப்படி முறியடிப்பது. வீட்டில் வணங்க வேண்டிய இந்த வினாயகர் சிலையை எதற்காக தெருவில் கொண்டுவந்து இது எப்படி அரசியல் ஆக்கப்படுகிறது, இதன் உள்நோக்கம்...