முகிலன் எங்கே? சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் படுகொலை குறித்த ஆவணங்களை கடந்த பிப்ரவரி 15 அன்று வெளியிட்ட சூழலியல் போராளி முகிலன் அன்றிரவே காணமல் போனார். அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, “தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்!” என்ற முழக்கத்தோடு 27.2.2019 அன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தோழர் முகிலன் காணாமல் போனதற்கு எடப்பாடி அரசும், காவல்துறையுமே பொறுப்பு என்ற கண்டன முழக்கங்களோடு துவங்கிய ஆர்பாட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் துவக்க உரையாற்றினார்.

தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தமிழர் விடுதலைக் கழகம் சௌ.சுந்தரமூர்த்தி, டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீபக், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை. திருவள்ளுவன், எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆ.சா.உமர் பாருக், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், பச்சைத் தமிழகம் கட்சி அருள், ஆதித் தமிழர் கட்சி துணைப் பொதுச்செயலாளர் திருமுருகச்செல்வன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர்  தபசி குமரன், மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி பெரியசாமி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகப் பேச்சாளர் பிஸ்மில்லா கான், மக்கள் பாதை உமர் முக்தார், தமிழக தேசிய முன்னணித் தலைவர்  பொழிலன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி

(மே 17) ஆகியோர் உரையாற்றினர்.

பெரியார் முழக்கம் 07032019 இதழ்

You may also like...