Category: சென்னை

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி! சென்னை 08082018

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி! சென்னை 08082018

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி ! சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விடை பெற்ற திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு 08.08.2018) காலை 11 மணிக்கு இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை நோக்கி தோழர்கள் வீரவணக்க முழக்கத்தோடு நடந்து வந்து இறுதி வீரவணக்கத்தை செலுத்தினார்கள். கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் தோழர்.அன்பு தனசேகரன் ஆகியோர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு இறுதி மரியாதை செலுத்தி வீரவணக்க உரையாற்றினார்கள். தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். இறுதியாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தோழர் அல்லி – தோழர் இரமேசு பெரியார் இணையரின் மகன் A.R..அம்பேத்கரின் முதல் பிறந்த நாள் விழா ! சென்னை 05082018

தோழர் அல்லி – தோழர் இரமேசு பெரியார் இணையரின் மகன் A.R..அம்பேத்கரின் முதல் பிறந்த நாள் விழா ! சென்னை 05082018

தோழர் அல்லி – தோழர் இரமேசு பெரியார் இணையரின் மகன் A.R..அம்பேத்கரின் முதல் பிறந்த நாள் விழா ! கழகத்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு ”பெரியார் பிற்படுத்தப்ப்ட்டவர்களுக்கான தலைவர் என்பது சரியா?” எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். மேலும் புத்தர் கலைக்குழு மணிமாறன் மகிழினி,சங்கர் சமூகநீதி அறக்கட்டளை தோழர் கவுசல்யா,ஊடகவியலாளர் தோழர் ஆசீப் ஆகியோரும் உரையாற்றுகிறார்கள். நாள் : 05.08.2018 ஞாயிறு நேரம் : மாலை 5.00 மணி. இடம் : இக்சா மையம்,பாந்தியன் சாலை,அருங்காட்சியகம் எதிரில்,எழும்பூர்,சென்னை.

தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! சென்னை 01082018

தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! சென்னை 01082018

ஆகஸ்ட் 1ல், தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! ஜனநாயக போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பை கண்டித்தும், போராடுவோர் மீது போடப்படும் பொய் வழக்குகளை நிறுத்த வலியுறுத்தியும், 8 வழிச்சாலை பிரச்சனையில் போராடும் மக்கள்,விவசாயிகள் உணர்வுகளை மதிக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு நீதி கோரியும் தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! நாள் : 01.08.2018 புதன் கிழமை. நேரம் : மாலை 3.00 மணி. இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில். பல்வேறு அரசியல்கட்சிகள்,சமுதாய அமைப்புகள், ஜனநாயக சக்திகள் பங்கேற்கும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழர் வாழ்வுரிமைக்கூட்டமைப்பு.

மலக்குழியில் இறங்கிய மனிதரை தடுத்து மயிலை தோழர்கள் போராட்டம்

மலக்குழியில் இறங்கிய மனிதரை தடுத்து மயிலை தோழர்கள் போராட்டம்

மந்தவெளி சென்ட் மேரிஸ் பாலத்திற்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.07.2018) அன்று மலக்குழியில் இறங்கி எந்த ஒரு பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் இரண்டு பேர் வேலை பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட மயிலாப்பூர் பகுதித் தலைவர் இராவணன், பகுதி செயலாளர் மாரி மற்றும் மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி வெளியே மீட்டுள்ளனர். மேலும், மலக்குழியில் மனிதர்களை இறக்கி வேலை வாங்கக் கூடாது என்று அவர்களை வேலைக்கு அனுப்பிய ஒப்பந்ததாரர்களை எச்சரித்து வந்துள்ளனர். இப்பகுதியில் இதுபோன்ற சம்பவத்தால் ஏற்கெனவே இரண்டு பேர் இறந்துள்ள நிலையில், பொறுப்பற்ற முறையில் மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் மீண்டும் மனிதர்களை மலக்குழியில் இறக்கி வேலை செய்ய கட்டாயப் படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மலக்குழியில் மனிதர்களை இறக்குவதை முற்றிலுமாக தடுத்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்கள் திட்டமிட்டுள்ளனர். பெரியார் முழக்கம்...

சென்னை, ஈரோட்டில்  காமராஜர் பிறந்தநாள் விழா

சென்னை, ஈரோட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா

திராவிடர் விடுதலைக் கழகம் தென்சென்னை மாவட்டம், திருவான்மியூர் பகுதியில் கடந்த 18.07.2018 (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு “சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் ந.விவேக் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் மு.தமிழ்தாசன், சே.கந்தன், பா.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து கூட்டத்தின் தொடக்கமாக ‘யாழ்’ பறையிசை முழக்கத்தோடு, வீதி நாடகங்களை நடத்தினர். ந. அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இரா. உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் காமராசரின் வரலாற்றை குறித்து எடுத்துரைத்தனர். சிறப்புரையாற்றிய பேராசிரியர் சுந்தரவள்ளி, காமராசரின் சமூகநீதி வரலாற்றை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பெரம்பலூர் துரை தாமோதரனின் ‘மந்திரமல்ல.! தந்திரமே!’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியை பகுதி மக்களிடையே ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிகழ்த்தினார். பகுதி மக்களும் அறிவியல் விளக்கத்தை ஆர்வமுடன் கவனித்தனர். பகுதிவாழ் பெண்கள் பெருமளவில் திரண்டு, முன்வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்டனர். இறுதியாக...

சென்னைக் கருத்தரங்கில் ஆய்வாளர்கள் தெளிவுரை எட்டுவழிச் சாலை மக்களுக்கு அல்ல; கார்ப்பரேட்டுகளுக்கே!

சென்னைக் கருத்தரங்கில் ஆய்வாளர்கள் தெளிவுரை எட்டுவழிச் சாலை மக்களுக்கு அல்ல; கார்ப்பரேட்டுகளுக்கே!

‘பூவுலகின் நண்பர்கள்’ சென்னையில் நடத்திய கருத்தரங்கில் பேசிய ஆய்வாளர்கள் எட்டு வழிச் சாலை சட்டத்துக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை விளக்கினர். ‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பில் ‘புதிய எட்டு வழிச் சாலை’, ‘அறிவியல் – சூழலியல் சட்டரீதியான பார்வை’ என்ற தலைப்பில் 22.7.2018 மாலை 5.30 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் ஆய்வரங்கம் நடந்தது. பேராசிரியர் கே.பி.சுப்ரமணியன் (ஓய்வு – நகர கட்டமைப்பு பொறியியல் துறை, அண்ணா பல்கலைக் கழகம், பேராசிரியர் ஜனகராஜன் (தலைவர், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம்), வெற்றிச் செல்வன் (வழக்கறிஞர்) ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள். பொறியாளர் சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்) நிகழ்வை ஒருங்கிணைத்தார். பொறியாளர் சுந்தர்ராஜன் தனது தொடக்க உரையில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத் துக்கு அனுமதிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் இந்த எட்டு வழிச் சாலை பற்றிய எந்தக்...

பார்வையற்ற சிந்தனையாளர்களின் சாதனை பெரியார் பேச்சு – எழுத்துக்கள் –  86 மணி நேர – ஒலி புத்தகமாகியது

பார்வையற்ற சிந்தனையாளர்களின் சாதனை பெரியார் பேச்சு – எழுத்துக்கள் – 86 மணி நேர – ஒலி புத்தகமாகியது

‘விடியல் பதிப்பகம்’, மலிவுப் பதிப்பாக வெளியிட்ட பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட நூல் ‘பெரியார் – இன்றும், என்றும்’. 1000 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை மலிவுப் பதிப்பாக ரூ.300க்கு ‘விடியல் பதிப்பகம்’ வெளியிட்டது. பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் இந்த நூலை வாங்கினார்கள். இந்த நூலில் பெரியார் கட்டுரைகளை பார்வையற்றோர் அறியும்  நோக்கத்தில் ஒலி வடிவில் பதிவேற்றப்பட்டு ஒலிப் புத்தகமாக (குறுவட்டு) கடந்த ஜூலை 14ஆம் தேதி பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை சார்பில் வெளியிடப் பட்டது. 86 மணி நேரம் பெரியார் எழுத்துகள் குரலாக ஒலிக்கிறது. பெண்கள் பலரும் தாமாக ஆர்வத்துடன் முன் வந்து பெரியார் எழுத்துகளை தங்கள் குரலில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது. சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி அரங்கில் காலை 10 மணியளவில் நடந்த இந்த நிகழ்வில் பார்வையற்ற தோழர்களோடு 300 கல்லூரி மாணவிகளும் பங்கேற்றனர். கல்லூரி முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொண்டனர். ‘ஒலிப்பதிவு குறுவட்டு’வுக்கு...

“சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் – சென்னை 18072018

“சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் – சென்னை 18072018

  திராவிடர் விடுதலைக் கழகம் தென்சென்னை மாவட்டம், திருவான்மியூர் பகுதியில் கடந்த 18.07.2018 (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு…. “சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் தோழர்.ந.விவேக்(தென்சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் மு.தமிழ்தாசன், சே.கந்தன், பா.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்.இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து கூட்டத்தின் தொடக்கமாக “யாழ்” பறையிசை முழக்கத்தோடு, வீதி நாடகங்களை நடத்தினர். தோழர்.ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் காமராசரின் வரலாற்றை குறித்து எடுத்துரைத்தார். பின்பு இந்த கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற பேராசிரியர்.சுந்தரவள்ளி அவர்கள் காமராசரின் சமூகநீதி வரலாற்றை நினைவு கூர்ந்து பகுதி மக்களிடையே எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ச்சியாக, பெரம்பலூர் துரை தாமோதரனின் மந்திரமல்ல.! தந்திரமே.! அறிவியல் விளக்க நிகழ்ச்சியை பகுதி மக்களிடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்த்தினார். பகுதி மக்களும் அறிவியல் விளக்கத்தை ஆர்வமுடன் கவனித்தனர். இறுதியாக தோழர்.மா.தேன்ராஜ்(திருவான்மியூர் பகுதி...

முகநூலில் அவதூறு கழகம் சார்பாக சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்

முகநூலில் அவதூறு கழகம் சார்பாக சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்

முகநூலில் கழகத்தின் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்.! 19.07.2018 மாலை 5 மணிக்கு கழக தென்சென்னை மாவட்ட தலைவர் தோழர்.வேழவேந்தன், வடசென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.செந்தில் FDL மற்றும் கழகத் தோழர்கள் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர். சென்னை அயனாவரம் பகுதியில் 11 வயதுள்ள ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை 17 பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த ஒருவரும் இருப்பதாக பொய்யான ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் பரவப்பட்டு வந்தது. கழகத்தின் மீது அவதூறு பரப்பும் தீயுள்நோக்கத்தோடு அவதூறு பரப்பும் வீரமணி என்பவரால் உருவாக்கப்பட்ட செய்தியினை பாலசுப்பிரமணியம், ராமலிங்கம், வெங்கட்ராஜூ மற்றும் பலரால் பகிரப்பட்டுள்ளது. குற்றவாளிக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் வேண்டுமென்றே கழகத்திற்கு கெட்ட...

சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் சென்னை 18072018

சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் சென்னை 18072018

“சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் வரும் 18.07.2018 மாலை 6 மணிக்கு திருவான்மியூர், லட்சுமிபுரம் காந்திசிலை அருகில்…. “யாழ்” குழுவினரின் பறையிசை, வீதி நாடகம் மற்றும் *பெரம்பலூர் தாமோதரனின் மந்திரமல்ல தந்திரமே.! அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும்…. சிறப்புரை : *பேராசிரியர்.சுந்தரவள்ளி* *தோழர்.தபசி.குமரன்* தலைமை நிலையச் செயலாளர் *தோழர்.கு.அன்புதனசேகர்* தலைமைக் செயற்குழு உறுப்பினர் *தோழர்.ந.அய்யனார்* தலைமைக் குழு உறுப்பினர் *தோழர்.மா.வேழவேந்தன்* தென்சென்னை மாவட்டத் தலைவர் *தோழர்.இரா.உமாபதி* தென்சென்னை மாவட்டச் செயலாளர் *தோழர்.கரு.அண்ணாமலை* திவிக *கல்வி வள்ளல் காமராருக்கு தமிழர்கள் முன்னெடுக்கும் நன்றிப் பெருவிழா….* *அனைவரும் வாரீர்.!*

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  ‘நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. (21.6.2018 இதழ் தொடர்ச்சி) இட ஒதுக்கீடு இல்லை, எல்லோருக்கும் சம வாய்ப்பு என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதைத் தான் இப்போது மெதுவாகக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்தில் முதுநிலை படிப்பவர்கள் குறைந்தது அரசிடம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். ஆனால் இப்போது, காலம் முழுவதும் செய்ய வேண்டுமென்றும் கூறுகிறார்கள். அதுகுறித்து நமக்குத் தெரியாது. இவர்கள் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றாவிட்டால் 45 லட்சம் ரூபாய்க்கு பாண்ட் எழுதி கொடுத்துவிட்டுத் தான் வெளியே செல்ல வேண்டும்.  அதனால் நமக்கு மருத்துவர்களாக, அறுவை சிகிச்சை நிபுணர்களாக, உயர் சிகிச்சை மருத்துவர்களாக நம் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைக்கிறார்கள். ஆனால்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பில் வி.பி.சிங் படம் திறப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பில் வி.பி.சிங் படம் திறப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத் தின் 5வது சந்திப்பு 23.06.2018 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் விடு தலைக் கழகத்தின் சென்னை தலைமை அலுவலகத்தில் வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலை வர்) தலைமையில் நடைபெற்றது. பெரியார் யுவராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். ‘நிமிர்வோம்’ அக்டோபர் மாத இதழ்க் குறித்து ராஜீ மற்றும் இமானுவேல் துரை தங்களது பார்வையை எடுத்துரைத்தனர்.  தொடர்ந்து, சமூகநீதி காவலர் வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி அவருடைய உருவப்படத்தை மதிமாறன் (எழுத்தாளர்) திறந்து வைத்து “இட ஒதுக்கீடு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 28062018 இதழ்

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே!

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே!

ஏப்ரல் 30, 2018 அன்று பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி ‘நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. இந்த தன்மானம்-தன்னுரிமை மீட்பு மாநாட்டில் விவாதிப்பதற்கு ஆயிரக்கணக்கான செய்திகளை அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள். 2014ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சி தொடங்கிய காலத்திலிருந்து மிக வேகமாக இந்த வேலையைச் செய்து கொண் டிருக்கிறார்கள். இதையெல்லாம் காங்கிரசு செய்ய வில்லையா என்றால் அது நமக்குத் தேவையில்லை. அவர்கள் இருட்டில் திருடிக்கொண்டு போனார்கள். இவர்கள் பேருந்து நிலையத்தில் பட்டப் பகலில் கத்தியைக் காட்டி வெட்டுகிற கொலைகாரர்களைப் போல மிகத் துணிச்சலாக மனிதாபிமானமற்றவர் களாக, எதையும் மதிக்காதவர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் மறைவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால், 1955 டிசம்பரில்தான் மொழிவழி மாநிலங்கள் பற்றிய சிந்தனையைப்...

ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பன்னாட்டு தமிழ் வழக்கறிஞர்கள் மாநாடு சென்னை 09062016

ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பன்னாட்டு தமிழ் வழக்கறிஞர்கள் மாநாடு சென்னை 09062016

ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சென்னை மாநாடு: இலங்கையில் நடைபெற்றது உள் நாட்டுப் போர் அல்ல; இன அழிப்புக்குப் பலர் பொறுப்பு ஆர்வத்தைத் தூண்டிய பன்னாட்டு தமிழ் வழக்கறிஞர்கள் மாநாடு பதிப்பு: 2018 ஜூன் 11 10:16 தமிழ்நாடு, சென்னையில் பிட்டி. தியாகராயர் அரங்கில், ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியாவினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஈழத்தமிழர்களுக்கான குற்றவியல் நீதியும், ஈடுசெய் நீதியும் மறுக்கப்படக்கூடாது, இலங்கையே தன்னைத் தானே விசாரித்துக்கொள்ளும் உள்ளக விசாரணை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 2009...

தோழர் பத்ரி நாராயணன் நினைவுநாள் மாநாட்டில் திருமுருகன் காந்தி உரை சென்னை 30042018

தோழர் பத்ரி நாராயணன் நினைவுநாள் மாநாட்டில் திருமுருகன் காந்தி உரை சென்னை 30042018

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ‘நீர் மறுப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை.. நமக்கு நிலம் பாழ்பட்டிருக்கிறது, நீர் மறுக்கப்பட்டிருக்கிறது, நீட் திணிக்கப்பட்டிருக்கிறது. இதிலே நீர் மறுப்பைப் பற்றி என்னுடைய கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ்நாட்டுக்கான நீர் மறுப்பு என்பது இந்திய அரசுடைய சதித் திட்டமாகத்தான் ஒட்டுமொத்த தரவுகளையும் பார்க்கும்போது நாம் உணர முடியும். இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு என்பது நீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலமாக உள்ளது. வற்றாத நதியான காவிரியிலிருந்து ஒரு பகுதி நீர் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. காவிரி நீர் உரிமை தொடர்பாக வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் அன்றைய மைசூர் மாகாண அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் முதல்...

கழகத் தோழர் குகன் தாயார் முடிவெய்தினார்

கழகத் தோழர் குகன் தாயார் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழகத் தோழரும் முன்னாள் சுங்கத்துறை கண்காணிப்பு அதிகாரியுமான குகானந்தம் (குகன்) தாயார் ஜெயம்மாள் (86) – மே 27 அன்று முடிவெய்தினார். நங்கநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஏராளமாகத் திரண்டு வந்து இறுதி மரியாதைச் செலுத்தினர். கழகத் தோழர்களின் இறுதி வணக்க முழக்கங்களோடு இறுதி ஊர்வலம் புறப்பட்டு மீனம்பாக்கம் இடுகாட்டில் எவ்வித மூடச் சடங்குமின்றி அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 31052018 இதழ்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மதுரை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து 22.05.2018 அன்று மாலை 6 மணிக்கு மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம், மே 17, புரட்சிகர இளைஞர் முன்னணி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் இணைந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சாலை மறியலில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்து இரவு 11 மணிக்கு விடுதலை செய்தது. பேராவூரணி : 23.05.2018 அன்று மாலை அண்ணா சாலை பேராவூரணி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் எதிர்ப்பையும் மீறி ஸ்டெர்லைட் ஆலையை ஏன் உடனடியாக மூட வில்லை? போராடும் மக்கள் ஆட்சியர் அலுவலகம் வந்த போது ஆட்சியர் எங்கு போனார்? ஏன் அமைதியாகப் போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? காவலர்களால் திட்டமிட்டு கலவரம் நடத்தப்பட்டது ஏன்? இராணுவ உதவி வேண்டுமானால் தருவதாக...

முள்ளிவாய்க்கால் படுகொலை: வீரவணக்கம் செலுத்தத் திரண்ட 1000 தோழர்கள் கைது

முள்ளிவாய்க்கால் படுகொலை: வீரவணக்கம் செலுத்தத் திரண்ட 1000 தோழர்கள் கைது

முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்திட சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை காவல்துறை கைது செய்தது. மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தஇந்த நிகழ்ச்சியில், திராவிடர் விடுதலைக் கழகம், ம.தி.மு.க., தமிழர் விடியல் கட்சி, எஸ்.டி.பி.அய்., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், த.பெ.தி.க., தமிழர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. அனைவரும் கைது செய்யப்பட்டனர். இரவு விடுதலையாகும் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி, மாண்டுபோன தமிழர்களுக்கும் விடுதலைப் புலி மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தினர். பேராவூரணியில் : பேராவூரணியில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப் பின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆறு நீலகண்டன் தலைமையில் திராவிடர் விடுதலைக் கழக  சித.திருவேங்கடம்,  சிபிஎம் பொறுப்பாளர்கள் கருப்பையா, வேலுச்சாமி சி.பி.ஐ. பொறுப்பாளர்கள் ராஜமாணிக்கம், சித்திரவேலு, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தி.வி.க. தா.கலைச்செல்வன், மதிமுக குமார்,...

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு இந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு இந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மீத்தேன் எதிர்ப்புத் திட்ட கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் ‘நிலம் பாழ்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. ஒரு பேராபத்தை தமிழகம் எதிர்நோக்கியிருக் கிறது. வரலாற்றிலே இவ்வளவு பெரிய பேராபத்தை தமிழகம் எப்போதாவது சந்தித்திருக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. எல்லாத் தளங் களிலும் தமிழகம், தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அதுகுறித்துதான் இந்த மண்டல மாநாட்டிலே அறிவார்ந்த தலைவர்கள் பேசவிருக்கிறார்கள். அதிலே, தமிழகத்தின் நிலம் எப்படிப் பாழ்படுகிறது, வாழ முடியாத ஒரு பகுதியாக தமிழ்நாடு எப்படி மாற்றப்படுகிறது, இதனால் என்ன ஆகும் என்பது குறித்து என்னுடைய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். ஒரு மனித இனத்திற்கு வாழ்வதற்கு அடிப்படை யானது மண். மண்தான் மனித வாழ்வை வடிவமைக் கிறது. ஒரு...

எஸ்.வி. சேகரைக் கைது செய் காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை-கைது

எஸ்.வி. சேகரைக் கைது செய் காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை-கைது

பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி….. சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தைத் தோழர்கள் முற்றுகையிடும் பேராட்டத்தை நடத்தி கைதானார்கள்.  கழகத் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் சென்னை எழும்பூரில் 16.05.2018 அன்று மாலை 4 மணிக்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.வி.சேகரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எஸ்.வி.சேகரை போல் வேடமணிந்து, கை விலங்கு பூணூலுடன் தோழர்கள் வந்தனர். எஸ்.வி.சேகரின் உருவப்படம் எரிக்கப்பட்டது. தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்),  ந.அய்யனார்  (தலைமைக் குழு உறுப்பினர்),  வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்),  இரா.செந்தில்குமார் (வடசென்னை மாவட்டச் செயலாளர்),  ஏசுகுமார்(வடசென்னை மாவட்டத் தலைவர்) மற்றும் கழகத் தோழர்கள் 50 பேர் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர். தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு புதுப்பேட்டை சமூகநலக் கூடத்தில் அடைக்கப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர். போராட்டம் நடக்க இருப்பதை அறிந்த காவல்துறை ஆர்ப்பாட்டத்துக்கு முதல் நாள் நள்ளிரவில் ...

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களை படுகொலை செய்த எடப்பாடி அரசையும், காவல்துறையை கண்டித்து சென்னையில் மறியல் 22052018

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களை படுகொலை செய்த எடப்பாடி அரசையும், காவல்துறையை கண்டித்து சென்னையில் மறியல் 22052018

 சென்னை அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட கழகத் தோழர்கள் காவல்துறையால் குண்டு கட்டாக இழுத்து செல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 100 நாட்களாக போராடி வரும் மக்கள் மீது காவல்துறையின் அடக்குமுறையை ஏவி துப்பாக்கி சுடு நடத்தி 10 பேர்களுக்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்த எடப்பாடி அரசையும், காவல்துறையை கண்டித்து…. சென்னை அண்ணா சாலையில் 22.05.2018 மாலை 6.30 மணிக்கு தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்)அவர்கள் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தோழர்கள் அனைவரும் புதுப்பேட்டை சமூகநலக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

பெண் பத்திரிக்கையாளர்களை தரக் குறைவாக பேசிய எஸ்.வி சேகரைக் கைது செய்யக் கோரி சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம் முற்றுகை 16052018

பெண் பத்திரிக்கையாளர்களை தரக் குறைவாக பேசிய எஸ்.வி சேகரைக் கைது செய்யக் கோரி சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம் முற்றுகை 16052018

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக…இரா.உமாபதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் தலைமையில்…. உயர்நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்குப் பிறகும் “காவல்துறை உறங்குவது ஏன்?” பெண் பத்திரிக்கையாளர்களை தரக் குறைவாக பேசிய… எஸ்.வி சேகரைக் கைது செய்க…. சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம் முற்றுகை 16.05.3018 (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு….வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகம்… தொடர்புக்கு : 7299230363

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’  உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய உரிமை முழக்க ஊர்திப் பேரணியின் பரப்புரை குறித்த ஓர் தொகுப்பு: 9.5.2018 காலை 12 மணியளவில் ஈரோடு பெரியார் நினைவு இல்லம் அருகில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி ஆரம்பமானது. மதியம் 2 மணிக்கு பவானியில் பயண நோக்கம் குறித்து நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் பேசினார். அம்மாபேட்டையில் 3 மணியளவில் மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கழக ஒன்றிய செயலாளர் வேல் முருகன், வழக்கறிஞர் பிரகாஷ், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் பிரகலாதன், மணிகண்டன் (தி.க.), மகாலிங்கம் (தி.க.), வை. இராமன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), செல்வராஜ் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) உரையாற்றினர். மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் 3 மணிக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 3.30 மணிக்கு மேட்டூர் நகர தி.வி.க. சார்பில் உணவு ஏற்பாடு...

கல்வி வேலை வாய்ப்பு உரிமை கோரி தமிழ்நாடு மாணவர்க் கழகம் ஆர்ப்பாட்டங்கள்

கல்வி வேலை வாய்ப்பு உரிமை கோரி தமிழ்நாடு மாணவர்க் கழகம் ஆர்ப்பாட்டங்கள்

திருப்பூரில் : திருப்பூர் 02-05 2018 புதன்கிழமை காலை 11 மணி அளவில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக தமிழக மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பு உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சியின் முன்பு நடைபெற்றது. 1)            தமிழக அரசு இயற்றிய ‘நீட்’ விலக்கு தொடர்பான சட்ட மசோதாவுக்கு இசைவு கோரியும், 2)            கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25ரூ மாணவர் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தக் கோரியும், 3)            பட்டியலின பழங்குடி மாணவர்களின் பொறியியல் படிப்பைத் தடுக்கும் அரசாணை 51,52 யை இரத்து செய்து முன்பு இருந்ததுபோல அரசாணை92 ஐ நடைமுறைப்படுத்தக்  கோரியும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோரிக்கை மனு ஆட்சியர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. நிகழ்வில்  தேன்மொழி (மாவட்ட அமைப்பாளர் – டி.எஸ்.எப்.),  தமிழ் செழியன் (டி.எஸ்.எப்.), மதுலதா (டி.எஸ்.எப்.) ஆகியோர் உரையாற்றினர். வீ. சிவகாமி (தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்), முகில் இராசு (மாவட்ட தலைவர்...

திருமுடிவாக்கத்தில்  பெரியார் சிலை திறப்பு

திருமுடிவாக்கத்தில் பெரியார் சிலை திறப்பு

சென்னையை அடுத்த திருமுடிவாக்கத்தில் அப்பகுதி மக்களின் முயற்சியில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதனையொட்டி 19.4.2018 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்தார். பொதுக்கூட்டத்தில் காஞ்சி மக்கள் மன்றத் தோழர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்றச் செயலாளர் பாசறை செல்வராசு, தந்தை பெரியார் திராவிடர் கழக குன்றத்தூர் பரந்தாமன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பெரியார் முழக்கம் 03052018 இதழ்

சென்னையில் கழக மாநாட்டின் எழுச்சி “தன்னுரிமை கிளர்ச்சிக்குத் தயாராவோம்!”

சென்னையில் கழக மாநாட்டின் எழுச்சி “தன்னுரிமை கிளர்ச்சிக்குத் தயாராவோம்!”

பெரியாரிய களப் போராளி பத்ரிநாராயணன் படுகொலை செய்யப்பட்ட ஏப்.30ஆம் நாளில்  தன்மான தன்னுரிமை மீட்பு மாநாட்டை  ‘நிலம் பாழ் – நீர் மறுப்பு – நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் மண்டல மாநாடாக இராயப்பேட்டை வி.எம். சாலையில் எழுச்சியுடன் நடத்தியது. ஏப்.30, 2018 காலை பத்ரி அடக்கம் செய்யப்பட்ட அவரது நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், நூற்றுக்கணக்கான தோழர்களுடன் மலர்வளையம் வைத்து உறுதி மொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர். தோழர்கள் எடுத்த உறுதி மொழி: “பெரியார் இலட்சியப் பணியில் உயிர்ப் பலியாகிய பத்ரியின் நினைவு நாள் எங்களின் கொள்கை உணர்வுகளை புதுப்பிக்கும் நாள். கொள்கைத் தோழன் பத்ரியே… இராயப்பேட்டை பகுதியில் நீ பெரியாரின் கொள்கையை வலிமையாகப் பரப்பினாய்; திசை மாறி குழம்பி நின்ற இளைஞர்களை இயக்கமாக்கி நல்வழிப்படுத்தினாய்; தோழர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்று அரவணைத்தாய்; இயக்கத்தில் பதவி என்பது...

ஊடகவியலாளர்களை தரக் குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை கண்டித்து ஆர்ப்பாட்டம் 25042018 சென்னை

ஊடகவியலாளர்களை தரக் குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை கண்டித்து ஆர்ப்பாட்டம் 25042018 சென்னை

தமிழ் தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், இளந்தமிழகம் இயக்கங்களின் ஒருங்கிணைப்பில்.. ஊடகவியலாளர்களை தரக் குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை கண்டித்து… போராடிய ஊடகவியலாளர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற கோரியும்…. #கண்டன_ஆர்ப்பாட்டம்… (25.04.2018)மாலை 4 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது  

களப் போராளி பத்ரியின் நினைவுச் சுவடுகள்’’ -விடுதலை இராசேந்திரன்

களப் போராளி பத்ரியின் நினைவுச் சுவடுகள்’’ -விடுதலை இராசேந்திரன்

  1996ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் சென்னையில் பெரியார் சிலை முன் 120 திராவிடர் கழக இளைஞர்கள் பழைய கருப்புச் சட்டையை கழற்றி புதிய கருஞ்சட்டை அணிந்து திராவிடர் கழகத்திலிருந்து விலகி பெரியார் திராவிடர் கழகமாக செயல்பட உறுதி ஏற்றனர். அந்த நிகழ்வுக்கு நான் தலைமை தாங்கினேன். அந்த 120 இளைஞர்களில் பெரும்பான்மை இளைஞர்கள் இராயப்பேட்டை யில் பெரியாரியலை முன்னெடுத்த களப்பணியாளர் தோழர் பத்ரி நாராயணனால் உருவாக்கப் பட்டவர்கள். இந்தப் புதிய அமைப்பு, திராவிடர் கழகம் நடைபோட்ட பாதையிலிருந்து விலகி புதிய திசையில் பயணித்து இயக்கப் போக்கில் பண்பு மாற்றங்களை உருவாக்கியது என்றே சொல்லலாம். அதில் முதன்மையான கூறு பார்ப்பன ஆதிக்க எதிர்ப்போடு நின்றுவிடாமல் பார்ப்பனீயத்தை உள்வாங்கி ஜாதி வெறியோடு பட்டியலின மக்களுக்கு எதிராக நின்ற இடைநிலை ஜாதிகளின் பார்ப்பனீ யத்தையும் இணைத்து எதிர்க்க வேண்டும் என்பதாகும். பட்டியல் இனப்பிரிவு மக்களின் போராட்டங்களோடு கரம் கோர்த்த பெரியார் திராவிடர் கழகம்...

‘ஏப்.30 – சென்னை மாநாடு தோழர்களே திரளுவீர்!’

‘ஏப்.30 – சென்னை மாநாடு தோழர்களே திரளுவீர்!’

‘ஏப்.30 – சென்னை மாநாடு தோழர்களே திரளுவீர்!’ ஏப்.30 – சென்னை மாவட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்துக்கு அடித்தளமாகச் செயல்பட்டு ‘எதிரிகள் – துரோகிகளால்’ வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட களப்பணியாளர் பத்ரிநாராயணன் நினைவு நாள். பத்ரியின் நினைவு நாளில் சென்னையில் மண்டல மாநாட்டையும், திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது. ‘நிலம் பாழ் – நீர் மறுப்பு – ‘நீட்’ திணிப்பு – தன்மான தன்னுரிமை மீட்பு மாநாடு’ என்று காலத்தின் தேவைக்கேற்ற தலைப்போடு மாநாடு நடக்கிறது. மாநாட்டை விளக்கி நகரம் முழுதும் சுவரெழுத்துகளை தோழர்கள் எழுதி வருகிறார்கள். மாநாட்டின் நோக்கம் காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு இழைத்த அநீதிகளை விளக்கி இது வரை 50,000 துண்டறிக்கைகளை மாநகர் முழுதும் தோழர்கள் பகுதி பகுதியாகச் சென்று மக்களிடம் வழங்கி, நிதி திரட்டி வருகிறார்கள். கழகச் செயல் வீரர்கள் ஒவ்வொரு நாளும் கழகக் கொடி துண்டறிக்கைகளுடன் புறப்பட்டு,...

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் நான்காவது சந்திப்பு ! சென்னை 29042018

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் நான்காவது சந்திப்பு ! சென்னை 29042018

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் நான்காவது சந்திப்பு ! வருகிற ஞாயிற்றுக்கிழமை (29.04.18) மாலை 5 மணிக்கு திவிக தலைமை அலுவலகத்தில் நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் நான்காவது கூட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் நிமிர்வோம்,ஆக.,செப். இதழ்களை குறித்து வாசகர் விமர்சனமும், தலித் முரசு ஆசிரியர் தோழர். புனிதபாண்டியன் அவர்கள் ‘அம்பேத்கர் காண விரும்பிய சமூக ஜனநாயகம்’ தலைப்பின் கீழும் கருத்துரையாற்றுகிறார்கள்.  

SC/ST வன்கொடுமைச் சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய கருத்தரங்கம் !  19.04.2018 – சென்னை.

SC/ST வன்கொடுமைச் சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய கருத்தரங்கம் ! 19.04.2018 – சென்னை.

SC/ST வன்கொடுமைச் சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய கருத்தரங்கம் ! 19.04.2018 – சென்னை. ஏற்கனவே காவல்துறையின் அக்கறையற்றத் தன்மை, உயர்ஜாதியினரின் பண,ஆட்பலம், ஒடுக்கப்பட்ட மக்களின் அறியாமை, உயர்ஜாதி நிலவுடமையாளர்களைச் சார்ந்திருக்கவேண்டிய அவலநிலை போன்ற எண்ணற்றக் காரணங்களால் சட்டத்தின் நோக்கத்தை ஓரளவுகூட நிறைவு செய்யாதநிலையில் அண்மையில் வன்கொடுமைச் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பு மேலும் சட்டத்தை நீர்க்கச் செய்துள்ளது. இதுகுறித்து ஆயவும், உரிய தொடர் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஏற்பாட்டி, சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் 19-4-2018 அன்று மாலை 5-00 மணிக்கு அவ்வமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் உதயம் மனோகரனின் தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இளைஞர் இயக்கம் மருத்துவர் எழிலன், மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, மேனாள் நீதிநாயகம் அரிபரந்தாமன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

தமிழ்நாடு-புதுச்சேரி நீட் நிரந்திர விலக்கு மாநாடு ! சென்னை 19042018

தமிழ்நாடு-புதுச்சேரி நீட் நிரந்திர விலக்கு மாநாடு ! சென்னை 19042018

தமிழ்நாடு-புதுச்சேரி நீட் நிரந்திர விலக்கு மாநாடு ! சென்னை காமராசர் அரங்கத்தில் 19-4-2018 அன்று பிற்பகல் 3-00 மணிக்கு, அமெரிக்கத் தமிழர்களால் நடத்தப்படும் உலகத் தமிழர் அமைப்பினரால் “தமிழ்நாடு-புதுச்சேரி நீட் நிரந்திர விலக்கு மாநாடு நடைபெற்றது. கழகத்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இம்மாநாட்டில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், கல்வியலாளர்கள், மருத்துவர்கள்,திரைத்துறையினர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.  

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும் – கருத்தரங்கம் சென்னை 19042018

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும் – கருத்தரங்கம் சென்னை 19042018

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும்” – கருத்தரங்கம். தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 19.04.18 சென்னை YMCA கட்டிடத்தில் “வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும்” கருத்தரங்கம் நடைபெற்றது. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி உரையாற்றினார். மருத்துவர் எழிலன் மற்றும் சட்ட வல்லுனர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். படங்கள் : தோழர் Kugan Oli

“ஆசிஃபாவும் தேசத்துரோகியா?” கண்டன ஆர்ப்பாட்டம் ! சென்னை 20042018

“ஆசிஃபாவும் தேசத்துரோகியா?” கண்டன ஆர்ப்பாட்டம் ! சென்னை 20042018

“ஆசிஃபாவும் தேசத்துரோகியா?” பச்சிளங் குழந்தைகளையும் சீரழிக்கும் மதவெறியைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ! கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில்….. 20.04.2018 மாலை 3 மணிக்கு ஆட்சியாளர் அலுவலகம் அருகில், சென்னை கண்டன உரை : #தெகலான்_பாகவி SDPI #குணங்குடி_அனிஃபா மனிதநேய மக்கள் கட்சி #திருமுருகன்_காந்தி மே 17 இயக்கம் #செந்தில் சேவ் தமிழ் #டைசன் தமிழர் விடியல் கட்சி திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

“தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாட்டிற்கான ஆரம்ப பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்.

“தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாட்டிற்கான ஆரம்ப பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்.

“தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாட்டிற்கான ஆரம்ப பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம். 30.04.2018 அன்று “தோழர்.பத்ரி நாராயணன்” அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாளில் இராயப்பேட்டை வி.எம்.தெருவில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கான சுவர் விளம்பர பணியில் கழகத்தோழர்கள். நிலம் பாழ்,நீர் மறுப்பு,நீட் திணிப்பு இவற்றிற்க்கெதிராக “தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாடு நடைபெறவுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

சென்னையில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

சென்னையில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

சென்னையில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக… டாக்டர்.அம்பேத்கர் பிறந்த நாளான 14.04.2018 அன்று காலை 8 மணிக்கு சேத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் உருவச்சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து திருவான்மீயூர், பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு, அம்பேத்கர் மணிமண்டபம், மயிலாப்பூர், இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் திருஉருவச்சிலை, படங்களுக்கு மாலை அணிவித்து, முழக்கங்களோடு மரியாதை செலுத்தப்பட்டது. கழகத் தோழர்கள் பலரும் வந்திருந்து மரியாதை செலுத்தினர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

திருப்பூர் : மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழா 14.04.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே நடைபெற்றது. கழக பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் கனல் மதி வாசிப்பில் கழகத் தின் ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ ஏற்பு கழகத் தோழர்களால் ஏற்கப்பட்டது. நிகழ்வின் இடையே பெரியார் பிஞ்சுகள் யாழினி, முத்தமிழ் ஆகி யோரின் பிறந்த நாள் அவ்விடத் திலேயே கேக் வெட்டி கொண்டாடப் பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாநில அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர பொறுப்பாளர் மாதவன், மாணவர் கழக தேன்மொழி, இணைய தள...

அய்.பி.எல். போட்டிக்கு எதிராகக் கழகம் மறியல்

அய்.பி.எல். போட்டிக்கு எதிராகக் கழகம் மறியல்

சென்னை சேப்பாக்கம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என வலியுறுத்தி 10.04.2018 அன்று மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் சாலை மறியலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டத் தோழர்கள் ஈடுபட்டனர். பெரியார் முழக்கம் 19042018 இதழ்

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

அய்.பி.எல். சுவர் விளம்பரம் : கழகத் தோழர்கள் அழித்தனர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்கள் இணைந்து 05.04.2018 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “ஐபிஎல் வேண்டாம்” – “காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பைத் தெரிவித்தனர். மந்தவெளி இரயில் நிலையம் முற்றுகை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சார்ந்த மக்கள் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகை யிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். விழுப்புரத்தில் அஞ்சலகம்...

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்து மூடச் சென்ற கழகத் தோழர்கள் கைது; வழக்குப் பதிவு

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்து மூடச் சென்ற கழகத் தோழர்கள் கைது; வழக்குப் பதிவு

காவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகத்தைக் கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னை நுங்கம்பாக் கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்தைக் கழகம் அறிவித்தது. வருமான வரித் துறை அலுவலகம் எதிரே கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் தோழர்கள் தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிட மாட்டோம் என்ற முழக்கத்தோடு வருமான வரித் துறை அலுவலகம் நோக்கி சென்றனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கழகத் தோழர்களைக் கைது செய்தனர். பூட்டு – பூட்டுச் சங்கிலியை பறி முதல் செய்தனர். மாலை வரை ஆயிரம் விளக்கு சமூகநலக் கூடத் தில் வைக்கப்பட்டு, சொந்தப் பிணையில் காவல்துறை விடுதலை செய்தது. அனைவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை மாவட்டக் கழகப் பொறுப் பாளர்கள் வேழவேந்தன், உமாபதி, ஏசு, செந்தில் (எப்டி.எல்.), மயிலை சுகுமார், தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், ஜாதி...

சென்னையில் மோடிக்கு கறுப்புக் கொடி 12042018

சென்னையில் மோடிக்கு கறுப்புக் கொடி 12042018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் இந்திய நாட்டின் பிரதமர் மோடியை கண்டித்து இன்று சென்னைக்கு வருகை தந்த மோடிக்கு… கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் தமிழக கூட்டமைப்பு இயக்கங்களுடன் இணைந்து… இன்று (12.04.2018) காலை 8 மணிக்கு கிண்டியில் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். கறுப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363 Like

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம் சென்னை 12042018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம் சென்னை 12042018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ததை உடனடியாக திரும்ப பெறக் கோரியும்… கடந்த 4 நாட்களாக சென்னை பல்கலைக் கழகத்தை சார்ந்த மாணவர்கள் கார்த்திக், அன்பழகன், கார்த்திகேயன் ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (12.04.2018) மாலை 7 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன், இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்), அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்)மற்றும் கழகத் தோழர்கள் மாணவர்களை நேரில் சந்தித்து பேசினர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாள் 30042018 சென்னை

தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாள் 30042018 சென்னை

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்… தோழர்.பத்ரி நாராயணன் நினைவு நாள்… #நிலம்_பாழ்..#நீர்_மறுப்பு..#நீட்_திணிப்பு “தன்மான தன்னுரிமை மீட்பு” மண்டல மாநாடு…. நாள் : ஏப்ரல் 30, 2018 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு… இடம் : வி.எம்.தெரு, இராயப்பேட்டை, சென்னை -14 வாருங்கள் தோழர்களே.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு 14042018 சென்னை

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு 14042018 சென்னை

டாக்டர் அண்ணல்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான நாளை (14.04.2018) கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் காலை 8 மணிக்கு சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக் கொள்கிறோம். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

IPL கிரிக்கெட் சுவர் விளம்பரங்கள் அழிப்பு ! சென்னை

IPL கிரிக்கெட் சுவர் விளம்பரங்கள் அழிப்பு ! சென்னை

IPL கிரிக்கெட் சுவர் விளம்பரங்கள் அழிப்பு ! ”ஐபிஎல்_வேண்டாம் ! காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் !” என்று எழுதி எதிர்ப்பை தெரிவித்தனர் ! 05.04.2018 அன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதியை சார்ந்த தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்களும் இணைந்து…. சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “#ஐபிஎல்_வேண்டாம்” “#காவிரி_மேலாண்மை_வாரியம்_வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பை தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

சென்னையில் இரயில் நிலையம் முற்றுகை ! கைது !

சென்னையில் இரயில் நிலையம் முற்றுகை ! கைது !

சென்னையில் இரயில் நிலையம் முற்றுகை ! கைது ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியை சார்ந்த மக்கள் இணைந்து… காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகையிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

“தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாட்டிற்கான ஆரம்ப பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்.

“தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாட்டிற்கான ஆரம்ப பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்.

  30.04.2018 அன்று “தோழர்.பத்ரி நாராயணன்” அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாளில் இராயப்பேட்டை வி.எம்.தெருவில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கான சுவர் விளம்பர பணியில் கழகத்தோழர்கள். நிலம் பாழ்,நீர் மறுப்பு,நீட் திணிப்பு இவற்றிற்க்கெதிராக “தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாடு நடைபெறவுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

சேப்பாக்க ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் !

சேப்பாக்க ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் !

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சேப்பாக்கம் விளையாட்டு அரங்கம் முற்றுகையிடப்பட்டது. சென்னை சேப்பாக்கம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என வலியுறுத்தி 10.04.2018 அன்று மாலை 5 மணியளவில் நடை பெற்ற இப்போராட்டத்தில் சென்னை அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடு), சாலை மறியலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் ஈடுபட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” –  சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும்  ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்.

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” – சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்.

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” – சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள்  ”டாக்டர் அம்பேத்கர் – இந்திய சமூகம்” எனும் தலைப்பில் முற்பகல் முதல் அமர்வில் கருத்துரையாற்றுகிறார். பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நிகழவிருக்கிறது. நாள் : 03.04.2018 செவ்வாய்க்கிழமை. நேரம் : காலை 09.30.மணி. இடம் : பவளவிழா கலையரங்கம்,மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகம்.  · Provide translation into English