குத்துச்சண்டை போட்டியில் வென்றவர்களுக்கு மயிலை தி.வி.க. நினைவுப் பரிசு

அகில இந்திய மற்றும் தமிழ்நாடு அளவிலான குத்துச் சண்டை போட்டியில் சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். அதில் பதக்கம் வென்றவர் களுக்கு திவிக சார்பில் நினைவு பரிசுகளை கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் வழங்கினர்.

அகில இந்திய போட்டியில் அஸ்வின் – வெண்கலம், பிரவீன் – வெள்ளி, மகேஷ் – வெள்ளி, ராஜ் – வெண்கலம், சரண் – வெண்கலம், மாணிக்கம் – வெண்கலம், கார்த்திக் – வெண்கலம் வென்றனர். தமிழ்நாடு அளவிலான போட்டியில் மாணிக்கம் தங்கப் பதக்கத்தையும், கார்த்திக் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.  நிகழ்வில் கழக வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கான 100 சந்தா மற்றும் மாத ஏடான நிமிர்வோமிற்கான 20 சந்தா தொகைகளை கழகத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரிடம் மயிலை பகுதி சார்பாக தோழர்கள் வழங்கினர்.

பெரியார் முழக்கம் 19122019 இதழ்

You may also like...