‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பு : புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

‘நிமிர்வோம்’ நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 12ஆவது சந்திப்பு 04.01.2020 அன்று  மாலை 5 மணிக்கு திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமார் தலைமை வகித்தார்.

‘பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள்’ நூலை ஆய்வு செய்து, இமானுவேல் துரையும், ‘ஆர்.எஸ்.எஸ் பரப்பும் வதந்திகளும், உண்மைகளும்’ என்ற தலைப்பில் எட்வின் பிரபாகரனும் கருத்துரை வழங்கினர்.  CAA மற்றும் NRC குறித்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்  விரிவாக சிறப்புரையாற்றினார். இறுதியாக இசை இனியாழ் நன்றி கூறினார். நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்றார்.

சென்னையைச் சார்ந்த தோழர்கள் அறிவுமதி, ஆதவன், தமிழன்பன், வினோத் ஆகியோர் கழகத்தில் இணைந்தனர்.

பெரியார் முழக்கம் 16012020 இதழ்

You may also like...