இலங்கை தூதரகம் முற்றுகை ! 29112019 சென்னை

இலங்கை தூதரகம் முற்றுகை ! தோழர்கள் கைது !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இனப்படுகொலை குற்றவாளியே
கோத்தபய ராஜபக்சேவே திரும்பிப் போ ! என்கிற முழக்கத்துடன் இன்று 29.11.2019 – வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் இரா உமாபதி தலைமையில்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டது.

இம் முற்றுகைப் போராட்டத்தில் மே 17, தந்தை பெரியார் திராவிடர் கழகம், இளந்தமிழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இனப்படுகொலை குற்றவாளி கோத்தபய ராஜபக்சே, இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் நேற்று (28.11.2019 ) இந்தியா வந்திருக்கிறார்.

You may also like...