புதிய கல்விக் கொள்கை ஆபத்து: மாணவர்களிடம் இரண்டாம் கட்டமாக துண்டறிக்கை

புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் மீண்டும் குலக்கல்வியா? என்ற தலைப்புடன் மத்திய பா.ஜ.க.வின் கல்விக் கொள்கையின் ஆபத்தை மாணவர்களுக்கு புரியும் வகையில், இரண்டாம் கட்டமாக சென்னையில் ஆகஸ்டு 13, 15, 16 ஆகிய மூன்று நாட்களில் ஜெயின், குருநானக், நியூ கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ், பச்சையப்பன், எம்.ஜி.ஆர் ஜானகி ஆகிய 6 கல்லூரிகளில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 3000 துண்டறிக்கைகள் அச்சடிக்கப்பட்டு மாணவர் கழக தோழர்களால் வழங்கப்பட்டன.  எட்வின் பிரபாகரன், கார்த்திக் இராசேந்திரன், பிரகாசு, கனி செல்வன், பரத்குமார், தமிழ், பிரவீன், யுவராஜ் ஆகியோர் துண்டறிக்கைகளை வழங்கினர்.  நிகழ்வை யுவராஜ் ஒருங்கிணைத்தார்.

பெரியார் முழக்கம் 22082019 இதழ்

You may also like...