மதுரைப் பகுதியில் சட்டவிரோத ‘பால்ய’ திருமணங்கள்
மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுமிகளுக்குத் திருமண வயது வரும் முன்பே ‘பால்ய விவாகம்’ நடத்தும் கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சில குறிப்பிட்ட சாதிப் பிரிவைச் சார்ந்தவர்கள், பள்ளிப் படிப்பு படிக்கும் போதே, பெண்கள் ‘காதலில்’ சிக்கி விடுவார்கள் என்று அஞ்சியும் அதனால் தங்களின் குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்றும், அதைத் தவிர்க்கவே இளம் வயதில் திருமணம் செய்து வைத்து விடுவதாகவும் கூறுகிறார்கள். உசிலம்பட்டி அருகே வி.கல்லுப்பட்டியைச் சார்ந்த 8வது படிக்கும் 13 வயது சிறுமிக்கு அவரைவிட 17 வயது அதிகமுள்ள மணமகனுக்கு அடுத்த சில வாரங்களில் திருமணம் நடைபெற உள்ளது. இது தங்களின் சாதி வழக்கமாகத் தொடர்ந்து வருகிறது என்கிறார்கள். பெண்ணின் தாய்க்கு 11 வயதிலும், பெண்ணின் மூத்த சகோதரிக்கு 12 வயதிலும் திருமணம் நடந்ததாம். ‘எங்களுக்கு குடும்ப கவுரவமும் உறவுகளுமே முக்கியம்’ என்கிறார், 70 வயது மூதாட்டி கருப்பாயி. தாய்மாமனுக்கு பெண் கேட்க முழு உரிமை உண்டு. “எனக்கு பெண்...
