ஊர்த் தமிழன் – சேரித் தமிழன் பேதத்தை ஒழித்திட தயாராவோம்!
இரட்டை தம்ளர், இரட்டை சுடுகாடு என்ற சாதித் தீண்டாமை வடிவங்களை எதிர்த்து பரப்புரை நடத்திய பெரியார் திராவிடர் கழகம், அம்பேத்கர் பிறந்த நாளில் பரமக்குடியிலிருந்து ‘ஊர்-சேரி’ என்ற இரட்டை வாழ்வுரிமை அவலங்களை எதிர்த்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ‘சுதந்திரம்’ பெற்று விட்டதாக கூறப்படும் ஒரு நாட்டில், ஊரின் கடைக் கோடியில் சாதியால் ஒதுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் தனியாகக் குடியமர்த்தப்பட்டுக் கிடக்கிறார்கள். ஒவ்வொரு கிராமமும், ‘ஊர்-சேரி’ என்று பிரிந்து கிடக்கிறது. இப்படி ஒரு இழிவானதலைகுனியத்தக்க பிரிவினை அமைப்பு நீடித்து வருகிறதே என்ற சிந்தனைகூட வற்றிப் போய், தமிழர் சமூகம் கிடக்கிறது என்பதுதான் வேதனை. “மனிதனை மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக்கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும். ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ பூமிப் பிளவில் அழியச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த...