Category: பெரியார் முழக்கம்

ஊர்த் தமிழன் – சேரித் தமிழன் பேதத்தை ஒழித்திட தயாராவோம்!

ஊர்த் தமிழன் – சேரித் தமிழன் பேதத்தை ஒழித்திட தயாராவோம்!

இரட்டை தம்ளர், இரட்டை சுடுகாடு என்ற சாதித் தீண்டாமை வடிவங்களை எதிர்த்து பரப்புரை நடத்திய பெரியார் திராவிடர் கழகம், அம்பேத்கர் பிறந்த நாளில் பரமக்குடியிலிருந்து ‘ஊர்-சேரி’ என்ற இரட்டை வாழ்வுரிமை அவலங்களை எதிர்த்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ‘சுதந்திரம்’ பெற்று விட்டதாக கூறப்படும் ஒரு நாட்டில், ஊரின் கடைக் கோடியில் சாதியால் ஒதுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் தனியாகக் குடியமர்த்தப்பட்டுக் கிடக்கிறார்கள். ஒவ்வொரு கிராமமும், ‘ஊர்-சேரி’ என்று பிரிந்து கிடக்கிறது. இப்படி ஒரு இழிவானதலைகுனியத்தக்க பிரிவினை அமைப்பு நீடித்து வருகிறதே என்ற சிந்தனைகூட வற்றிப் போய், தமிழர் சமூகம் கிடக்கிறது என்பதுதான் வேதனை. “மனிதனை மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக்கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும். ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ பூமிப் பிளவில் அழியச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த...

வடசென்னையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

வடசென்னையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

புளியந்தோப்பு பகுதி கழகத்தின் சார்பில் அம்பேத்கரின் 122-வது பிறந்த நாளை முன் னிட்டு “அம்பேத்கரின் எதிர்பார்ப்பு நிறைவேறி யுள்ளதா” என்ற தலைப் பில் மாபெரும் விளக்கப் பொதுக் கூட்டம் நடை பெற்றது. சி.அருள்தாஸ் தலைமை வகிக்க, விசுயன், தா.இ.கோவிந்தன் முன்னிலை வகிக்க வரவேற்புரையினை அ.அமுல்ராசு நிறைவேற்றினார். தொடர்ந்து மாவட்டக் கழகத் தலைவர் ஏ.கேசவன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ச.குமாரதேவன், கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் சிற்பிராஜனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பொது மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிற்பிராசன் நடத்தி முடிக்கும்போது ஆரவாரமும், கைத்தட்டலுமாக பொதுமக்கள் வரவேற்பளித்தனர். நிகழ்ச்சியில் புதிதாக ஏழு தோழர்கள் (மது, விஜி, அண்ணாமலை, தமிழ், ராஜசேகர், அப்பு, சுதாகர்) கழகத்தில் இணைந்தனர். நன்றியுரையினை சுப்ரமணியன் நிகழ்த்தினார். பெரியார் முழக்கம் 19042012 இதழ்

பெரியாரின் தொண்டு: தலைமை நீதிபதி பெருமிதம்

பெரியாரின் தொண்டு: தலைமை நீதிபதி பெருமிதம்

கடந்த காலங்களில் சாதி ரீதியான பாகுபாட்டை மிக அதிகமாக கண்டிருக்கிறோம். அவையெல்லாம் இந்திய வரலாற்றின் கருப்பு நாட்கள். தமிழகத்தில் பெரியாரின் அயராத உழைப்பின் காரணமாகத்தான் இன்று ஒரு சில குக்கிராமங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சாதி பாகுபாடு துடைத்தெறியப்பட்டது. பெரியாரின் குரலை அடுத்துதான், இடஒதுக்கீட்டு கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் இன்று பல்வேறு துறைகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் போன்ற சாதியினருக்குவேலை கிடைப்பதற்கான வழியை அமைத்துக் கொடுத்தவர் அந்த பெரியார்தான். – உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த அம்பேத்கர் விழாவில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் உரையிலிருந்து. (நன்றி: ‘தினத்தந்தி’ 17.4.2012) பெரியார் முழக்கம் 19042012 இதழ்

30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தலித் குழந்தைகூட சேர்க்கப்படாத அரசு தொடக்கப் பள்ளி

30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தலித் குழந்தைகூட சேர்க்கப்படாத அரசு தொடக்கப் பள்ளி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பச்சயன்காடு என்ற ஊரில் உள்ளாட்சித் துறை நடத்தும் தொடக்கப் பள்ளியில் ஒரு தலித் மாணவர்கூட இல்லை என்ற அதிர்ச்சியான செய்தி வெளி வந்துள்ளது. இது குறித்து ‘இந்து’ நாளேடு (ஏப், 2012) முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பச்சயன்காடு கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 1980 ஆம் ஆண்டிலிருந்தே தலித் சமூகத்தைச் சார்ந்த ஒரு குழந்தைகூட படிக்க முன் வரவில்லை. இந்தப் பள்ளி இயங்கும் பகுதியில், பச்சயன்காடு, தெருக்காடு கிராமங்களில் தலித் குடியிருப்புகள் இருக்கின்றன. 1980 ஆம் ஆண்டுக்கு முன் இப்பகுதி  தலித் மக்கள் தங்கள் குழந்தை களை இப்பள்ளியில் சேர்த்து வந்தனர். அதே ஆண்டின் இடைக்காலத்தில் தலித் குழந்தைகள் மீது அவமதிப்பும், பாகுபாடும் திணிக்கப்பட்டதால், தங்கள் குழந்தைகளை அப்பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திக் கொண்டனர். இந்த அவமதிப்பை எதிர்த்து இப்படி ஒரு முடிவை எடுத்தவரின் பேரன்...

காஞ்சியில் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

காஞ்சியில் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

சென்னை தாம்பரத்தில் 31.3.2012 மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ம.ரே.ராச குமார் தலைமை வகிக்க, க.வே.சேகர் வரவேற்புரையாற்ற, மு.தினேசு குமார், டேவிட் பெரியார் முன்னிலை யில் கா.ரவிபாரதி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந் திரன் கருத்துரை வழங்கினர். நிகழ்வின் இறுதியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தனது உரையில் அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் பற்றியும், இராஜீவ் காந்தி ஒப்பந்தத்தால் அழிவை நோக்கியுள்ள கூடங்குளம் நிலை பற்றியும் தனித் தமிழ்நாடு எண்ணத்தை தமிழக மக்களின் மனதில் எண்ண வைக்கும் இந்திய அரசின் நிலை பற்றியும் தெளிவாக கூறியுள்ளார் பெரியார் முழக்கம் 19042012 இதழ்

வரலாறுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை தமிழகத்தில் நடந்த இராமாயண எதிர்ப்பு இயக்கங்கள்

வரலாறுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை தமிழகத்தில் நடந்த இராமாயண எதிர்ப்பு இயக்கங்கள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையி லிருந்து: “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவர்களுக்கு வால்மீகி இராமாயணமோ, துளசிதாச இராமா யணமோ தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது கம்ப இராமாயணம தான். இராவணன என்பவன் ஒரு ஒழுக்கமான மன்னன் என்றும், கடத்தி வந்த சீதையைக்கூட மாண்புடன் நடத்திய பண்பாளன் என்றும்தான் நினைக்கிறார்களே தவிர, வில்லன் கொடியவன் என்ற சிந்தனையே தமிழ்நாட்டு மக்களிடம் இல்லை” என்று மற்றொரு ஆய்வாளர் எழுதுகிறார். ஒரு பெரிய பிரச்சார இயக்கம் இரா மனுக்கு எதிராக நடைபெறுகிறது; இராவணனை வைத்து காவியங்கள் உள்ளன என்றும் எழுதியுள்ளார். 1922 ஆம் ஆண்டு திருப்பூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில மாநாடு நடக்கின்றது. கோவில் களில் நுழைய இதுவரை அனுமதிக்கப்படாத நாடார்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று, பெரியார் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். (1950 வரை நாடார்களும்  கோவிலுக்குள்...

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (7)

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (7)

1917ஆம் ஆண்டு நிகழ்வுகள் (2) நீதிக்கட்சியின் வளர்ச்சியைக் கண்ட காங்கிரஸ் கட்சியினர், தமது கட்சியிலுள்ள பார்ப்பன ரல்லாதாரை திருப்தி செய்யவும், பார்ப்பனரல்லாதார் நலனில் காங்கிரசுக்கும் அக்கறையுள்ளது என்பதாகக் காட்டிக் கொள்ளவும், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு பார்ப்பனரல்லாதார் அமைப் பினை ‘சென்னை மாகாண சங்கம்’ என்ற பெயரில் தோற்றுவிக்கலாயினர். இதன் அமைப்புக் கூட்டம் செப்டம்பர் 15 இல் கூட்டப்பட்டு, அடிதடி ரகளையில் முடிந்தது. அதன் பின் மீண்டும் செப்டம்பர் 20 இல் கூட்டப்பட்டு, இதன் அமைப்பாளர் கேசவபிள்ளையால் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ‘பார்ப்பனரல்லாதாருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சீர்திருத்தம் அமைய வேண்டும் என்று மாண்டேகுவிடம் கூறுதல்’ இச்சங்கத்தின் நோக்கம் என்பதால் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ‘சென்னை மாகாண சங்கம்’ என்பது மதுரைப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் உண்டான ஒரு சங்கம் என்று நீதிக்கட்சியினர் எடுத்துக் கூறினர். ‘இந்து’ நாளிதழ் இச்சங்கம் மிகவும் அவசியமானது என்று எழுதியது. சென்னை மாகாணச் சங்கத்தின் தலைவராக...

சேலம் கிழக்கு கழகம் சாதனை; கழக ஏட்டுக்கு 580 சந்தாக்கள்

சேலம் கிழக்கு கழகம் சாதனை; கழக ஏட்டுக்கு 580 சந்தாக்கள்

2.4.2012 திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு சேலம் தாதகாப்பட்டி பெரியார் உடற்பயிற்சி மையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட பெரியார் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்க, மாவட்ட தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா ஆயிரம் சேர்ப்பது என முடிவு செய்து முதல் தவணையாக 580 சந்தாக்கள் தலைமைக்கு அனுப்பப்பட்டது. மீதி சந்தாக்களை விரைவில் வசூலித்து ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது. மே மாதம் 26 ஆம் தேதி, ஓமலூரில் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துடன் நாத்திகர் விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஏற்காடு கோடை விழாவின்போது, அரசு கண்காட்சி சாலையில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து, புகைப்பட கண்காட்சி மற்றும் புத்தக விற்பனை செய்வது என்றும், ஜூன் மாதம் ஏற்காடு பகுதியில் படிப்பகம் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மே 6 ஆம் தேதி ஆத்தூரிலும், ஜூன்...

தலையங்கம் ‘மனுதர்மத்துக்கு’ மரண அடி

தலையங்கம் ‘மனுதர்மத்துக்கு’ மரண அடி

‘சூத்திரர்களுக்கு கல்வி தரக் கூடாது’ என்று கூறியது ‘மனுதர்மம்’. அந்த பார்ப்பன மனுதர்மக் கோட்பாட்டுக்கு தந்துள்ள மரண அடிதான். 2009 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்வித் திட்டம், 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வியை இலவசமாக கட்டாயமாக வழங்குவதை உறுதி செய்யும் இத் திட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதி சுவதந்தர் குமார் ஆகியோர், அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார், நீதிபதி கே.எஸ். இராதா கிருஷ்ணன்.  இத் தீர்ப்பு அரசு நிதி உதவி பெறாத மைனாரிட்டி கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்ற மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பெரும்பான்மை தீர்ப்பின் படி அரசின் இந்த சட்டம், அரசு  உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறாத மைனாரிட்டி அல்லாத பள்ளிகளுக்கு பொருந்தும்....

ஆனூராருக்குப் ‘பெரியார் ஒளி’ விருது

ஆனூராருக்குப் ‘பெரியார் ஒளி’ விருது

நெய்வேலியில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தொல். திருமாவளவன் வழங்கினார் 2007 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி யினர் சமூகத் தொண்டாற்றி வரும் தலித் அல்லாதவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டி வருகின்றனர். 2012 ஆம் ஆண் டிற்கான ‘பெரியார் ஒளி’ விருது கழகத் தின் துணைத் தலைவர் ஆனூர் செகதீச னுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அதேபோல் ‘அம்பேத்கர் சுடர்’ விருது முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தோழர் என். வரதராஜனுக் கும், ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது ஆய்வறிஞர் கந்தசாமிக்கும் ‘காமராசர் கதிர்’ விருது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமாருக்கும், ‘காயிதே மில்லத் பிறை’ விருது பேராசிரியர் அப்துல் காதருக்கும், ‘மொழி ஞாயிறு’ விருது பேராசிரியர் க.பா.அறவாணனுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் அன்று மாலை 7 மணிக்கு நெய்வேலியில் நடந்த எழுச்சியான...

சமூக ஒற்றுமையை சீர்குலைத்து வெறுப்பை வளர்க்கும் சாதிய வாழ்க்கைக்கு முடிவு கட்டுவோம்

சமூக ஒற்றுமையை சீர்குலைத்து வெறுப்பை வளர்க்கும் சாதிய வாழ்க்கைக்கு முடிவு கட்டுவோம்

பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் கழகத்தின் 15 நாள் பரப்புரை இயக்கம் தொடங்கியது உசிலம்பட்டியில் சாதி வெறியர்கள் கல்வீச்சில் தோழர் படுகாயம்; சலசலப்புகளுக்கு அஞ்சாமல் பயணம் தொடருகிறது இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு போன்றவற்றிற்கு எதிராக பரப்புரை நடத்திய பெரியார் திராவிடர் கழகம், இந்த ஆண்டு ஊர் – சேரி என்று இருப்பதற்கு எதிராக, பரப்புரை பயணத்தை துவங்கியுள்ளது. அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், சாதி ஒழிப்புப் போராளி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில், சாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக் கழகம் பயணத்தை துவங்கியது. தாழ்த்தப்பட்டவர் மத்தியில் மட்டுமே பேசிய சாதி ஒழிப்பு இயக்கங்களுக்கு மாறாக, பிற்படுத்தப் பட்டவர்கள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று, அவர்களிடத்திலே தீண்டாமை கொடுமைகளை விட்டொழிக்குமாறு வலியுறுத்தி, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பரப்புரை செய்து வரும் கழகம், இவ்வாண்டு தாழ்த்தப்பட்ட அமைப்புகளோ, சாதி ஒழிப்பு...

இதுவா, தமிழ்ப் புத்தாண்டு?

இதுவா, தமிழ்ப் புத்தாண்டு?

சித்திரையில் தொடங்குகிறதாம் ‘தமிழ்ப் புத்தாண்டு’. தமிழக முதல்வர் ஜெயலலிதா, இதுதுதான் தமிழர்களின் ‘புத்தாண்டு’ என்று நீட்டி முழக்குகிறார். இப்போது பிறந்துள்ள “தமிழ்” வருடத்தின் பெயர் என்ன தெரியுமா? “நந்தன” – இது தமிழா என்று கேட்டு விடாதீர்கள். வடமொழி தான்! ‘பிரபவ’ தொடங்கி ‘அட்சய’வில் முடியும் 60 ஆண்டுகளின் பெயர் களுமே சமஸ்கிருதம் தான்! மருந்துக்குக்கூடதமிழ் இல்லை. ஆனால், இதற்குப் பெயர் ‘தமிழ்’ப் புத்தாண்டாம்! இதோ 60 ஆண்டுகளின் பெயர்களைப் பாருங்கள்! பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோத்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்ரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, ஸர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துர்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராக்ஷஸ,...

பன்னாட்டு நிறுவனங்கள் – பார்ப்பனர்கள் – ‘பகவான்கள்’ கூட்டுக் கொள்ளை

பன்னாட்டு நிறுவனங்கள் – பார்ப்பனர்கள் – ‘பகவான்கள்’ கூட்டுக் கொள்ளை

விவசாய மான்யம், உணவு மான்யம் போன்ற மான்யங்கள் வழங்குவதால்தான் கடும் நிதி நெருக்கடிகளை சந்திப்பதாக மத்திய அரசு புலம்புகிறது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள சர்வதேச நிதியமைப்புகளான உலக வங்கி, சர்வதேச நிதியமைப்பு போன்ற நிறுவனங்களும் இதே கருத்தையே வலியுறுத்துகின்றன. ஆனால், பெரும் தொழில் நிறுவனங்களான கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் பெரும் தொகை ஒவ்வொரு ஆண்டும் தள்ளுபடி செய்யப்படுவது பற்றி, பார்ப்பன ஊடகங்களோ, இந்திய பார்ப்பன ஆட்சியோ, சர்வதேச நிதியமைப்புகளோ, வாய் திறப்பதில்லை. 2005 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை பெரும் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் தள்ளுபடி செய்யப்பட்ட வருமான வரி மட்டும் ரூ.3,95,878 கோடி. (2005 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக 48.17 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது) இதே காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள ‘எக்சைஸ்’ வரி – ரூ.9,55,726 கோடி. (217.81 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது) இதே காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட சுங்கவரி (கஸ்டம்ஸ் டூட்டி) –...

அஞ்சலகத்தில் “தீண்டாமை”யை  கண்டித்து கழகம் போராட்டம்

அஞ்சலகத்தில் “தீண்டாமை”யை கண்டித்து கழகம் போராட்டம்

கோவை மாவட்டம் அன்னூர் வடவள்ளி ஊராட்சியில் அஞ்சலகத்தில் அங்குள்ள தலித் மக்களை அனுமதிக்காததை கண்டித்தும் அதே ஊராட்சிக்கு உட்பட்ட தாத்தம்பலயத்தில் செயல்படும் அங்கன்வாடியில் தலித் குழந்தைகளை அனுமதிக்காததை கண்டித்தும் சின்னவடவல்லியில் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் 16.4.2012  அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் து.ராமசாமி, கலங்கல் வேலுசாமி, சூலூர் குமாரவேல், கோவை வே.கோபால், இர. இரஞ்சித் பிரபு, சா.கதிவரன், அன்னூர் பொறுப்பாளர்கள் ஜோதி ராம், ஈஸ்வரன், இராமன், கணேசன், வீரமுத்து மற்றும் நூற்றுக்கணக்கான தோழர்கள், பெண்கள் பங்கேற்றனர். கழகம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தவுடன் ஊராட்சி தலைவர் கணேசன் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து அங்கன்வாடி செயல்படும் கட்டிடம் தனியாருக்கு சொந்தம் என்பதால் பொது கட்டிடம் தேவை என்று முறையிட்டதை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் தனது சிறப்பு நிதியிலிருந்து ரூ.6.5 லட்சம் ஒதுக்கி யுள்ளார். பெரியார் முழக்கம் 26042012 இதழ்

வரலாறுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை நடிகவேள் எம்.ஆர்.ராதா நாடகத்தைத் தடுக்க வந்த சட்டம்

வரலாறுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை நடிகவேள் எம்.ஆர்.ராதா நாடகத்தைத் தடுக்க வந்த சட்டம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து: எம்.ஆர்.இராதா நாடக உலகில் முழுக்க முழுக்க பெரியார் கருத்துகளைப் பற்றி மட்டுமே பேசியவர். சினிமாவை விரும்பியவர் அல்ல. 1937 முதல் 1942 வரை சினிமாவில் நடித்து, சினிமா வேண்டாம் என்று நாடகம் நடிக்க வந்தவர். பன்னிரண்டு ஆண்டு களுக்குப் பிறகு, ‘இரத்தக் கண்ணீர்’ நாடகத்தை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று, பி.ஏ. பெருமாள் கேட்ட பிறகு சினிமாவில் நடிக்க வருகிறார். அப்போதுகூட, “நான் தினமும் நாடகம் நடிப்பேன், நேரம் இருக்கும்போது மட்டும் தான் படப்பிடிப்பிற்கு வருவேன், என்னை தொல்லை கொடுக்கக் கூடாது” என்று சொல்வாராம். இன்னொன்று ‘இரத்தக் கண்ணீர்’ நாடகத்தில் தன் மனைவியை நண்பனுக்கு திருமணம் செய்து வைக்கும் காட்சியை எந்த காரணத்தைக் கொண்டும் நீக்கிவிடக் கூடாது என்பது எம்.ஆர்.இராதாவின் மற்றொரு கோரிக்கை. அவர் நாடகத்தை துவக்கும் போதெல் லாம் பெரியார்...

நன்கொடை

நன்கொடை

தென் சென்னை மாவட்டக் கழகப் பொருளாளர் கரு. அண்ணாமலை-வெ.தமிழ்ச் செல்வி ஆகியோரின் 2வது மகன் அண்.அன்பரசன், 12.4.2012 அன்று 14 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் ரூ.2000 அளித்தார்.  நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்.) பல்லாவரம் பம்மல் அ.பா. செல்வராசு நினைவு  (16.3.2012) நாளை முன்னிட்டு தலைமைக் கழக அலுவலக நிதியாக அவரது மகள் ஜோசப் ஸ்டாலின் ரூ.5000 நன்கொடை அளித்தார். தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தபசி குமரன் பெற்றுக் கொண்டார். பெரியார் முழக்கம் 26042012 இதழ்

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (8)

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (8)

1917ஆம் ஆண்டு நிகழ்வுகள் (3) திராவிடர் சங்கத்தின் பணியும் தொடர்ந்தது. நவம்பரில் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பட்டம் பெற்ற திராவிட மாணவர்கட்கு வழக்கம்போல் விருந்தும் பாராட்டும் நடைபெற்றது. நாயரின் வேண்டுகோளுக்கிணங்க அலெக்சாண்டர் கார்டியூ தலைமை வகித்து, திராவிட மாணவர்கள் கல்வியில் நாட்டம் செலுத்த வேண்டுமென்றும், நாட்டிற்கு நற்றொண்டு செய்ய வேண்டுமென்றும், அறிவுரைகளும், பாராட்டும் வழங்கினார். பனகல் அரசர், பித்தாபுரம் ராஜா, பவானந்தம் பிள்ளை, கே.வி.ரெட்டி, தியாகராயர், ஜஸ்டிஸ் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க, நடேசனார் வாழ்த்துச் செய்திகளை வாசித்தார். ‘அரசு தலைமைச் செயலாளரான கார்டியூ விழாவுக்கு தலைமை வகித்தது கண்டிக்கத்தக்கதென்றும், ஒரு சார்புடைய இச்சங்கத்தின் நலனில் கார்டியூ போன்ற அரசு அலுவலர்கள் அக்கறை கொண்டிருப்பது தேசீய உணர்ச்சிக்கு வெடி வைப்பதென்றும், அன்னிபெசண்டின் பார்ப்பன பத்திரிகையான ‘நியூ இண்டியா’ நவம்பர் 26 இல் எழுதி ஓலமிட்டது. முதல் உலகப் போரில் பிரிட்டிஷாருக்கு இந்திய மக்கள் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கியதைக் கருத்திற் கொண்டு நல்லொழுக்கத்தைக்...

‘சாதி கவுரவத்திற்காக’ குடும்பத்தினராலே கொல்லப்படும் இளம் பெண்கள்

‘சாதி கவுரவத்திற்காக’ குடும்பத்தினராலே கொல்லப்படும் இளம் பெண்கள்

தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞரைத் திருமணம் செய்துவிட்ட “குற்றத்துக்காக” மகளையே தாயும் அவரது மாமியாரும் கொலை செய்து வீட்டில் புதைத்துள்ளனர். ‘சாதி கவுரவத்தை’க் காப்பாற்றிட நடந்த இந்த கொலை, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ‘எவி டென்ஸ்’ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட முயற்சியால் வெளிவந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கலியூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது திருச்செல்வி, தலித் சமூகத்தைச் சார்ந்த டேனியல் ராஜ் என்ற இளைஞரை காதலித்தார். இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருப்பூரில் ஒரு தொழிற் சாலையில் வேலை செய்தனர். ஆதிக்கசாதியைச் சார்ந்த பெண்ணின் தாய் மற்றும் அவரது மாமியார், திருமணத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி நாடகமாடியதை நம்பி, அம்மை நோயுடன் பெண் வீடு திரும்பியபோது, தாயும், மாமியாரும் பூச்சி மருந்தை பெண்ணின் வாயில் திணித்து, குடிக்குமாறு கட்டாயப்படுத்தினர். அந்தப் பெண் மறுக்கவே, கையையும் காலையும் பிடித்துக் கொண்டு, பூச்சி மருந்தை வாயில் ஊற்றி, பிறகு கழுத்தை நெறித்து...

தலையங்கம் சென்றார்கள்; திரும்பினார்கள்

தலையங்கம் சென்றார்கள்; திரும்பினார்கள்

இந்திய நாடாளுமன்ற குழு எதிர்க்கட்சித் தலைவர் பாரதிய ஜனதாவைச் சார்ந்த சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைச் சென்று, தமிழர் வாழும் பகுதிகளையும் சில அகதிகள் முகாம்களையும் பார்வையிட்டு, ராஜபக்சேவை சந்தித்துவிட்டு திரும்பியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கட்சிகள் இதில் இடம் பெறவில்லை. இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் கடுமையாக விமர்சித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரதிநிதிகள், இக்குழுவில் இராசபக்சேவைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு சேர்க்கப்படவில்லை என்று தெரிகிறது. ஈழத்தில் இறுதி கட்ட இனப் படுகொலையின்போது போரை நிறுத்தி, தமிழினத்தைக் காப்பாற்றுங்கள் என்று தமிழகமே திரண்டு நின்று குரல் கொடுத்தபோது, அதை காதில் போட்டுக் கொள்ள காங்கிரஸ் ஆட்சி தயாராக இல்லை. இனப் படுகொலை வெற்றிகரமாக நடந்து முடியட்டும் என்றே அதற்கான உதவிகளை செய்து கொண்டு காத்திருந்தார்கள். இப்போது போரின் பாதிப்புகளைக் கண்டறிய குழுவை அனுப்புகிறார்கள். ஏதோ, ராஜபக்சே ஜனநாயக ஆட்சியை நடத்தி வருவது...

திருப்பூர் நோக்கி திரளுவீர்!

திருப்பூர் நோக்கி திரளுவீர்!

பெரியார் கொள்கையைக் கவசமாக உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்டு வரும், கழகத்தின் கொள்கைத் தோழர்களே! காலத்தின் தேவையும்,  அவசியமும்  நமது களச் செயல்பாட்டை தீர்மானிக்கிறது. பார்ப்பனியமும் அதன் கொடூர வடிவமான சாதியமும் உயிர்த் துடிப்போடு மனித மாண்புகளை சிதைத்து வருகிறது! வாழ்வியலை சீரழித்து, வன்மத்தையும், வெறுப்பையும், கொலைகளையும் தூண்டி விடும் சாதியத்தை எதிர்த்து, பரமக்குடியில் பெரியார் திராவிடர் கழகம் தொடங்கிய பரப்புரை பயணம் – தொடருகிறது! சில இடங்களில் எதிர்ப்பு, கல்வீச்சு; பல இடங்களில் இறுக்கம்; அமைதி; வேறு பல இடங்களில் வரவேற்பு; பாராட்டு – என்று வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு சூழல்களை எதிர்கொண்டு, தோழர்கள் பயணிக்கிறார்கள்! சாதிய ஒடுக்குமுறைக்கு பலியாகிக் கிடக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் அல்ல, சாதியைத் திணிக்கும் மக்கள் வாழும் பகுதி களில் மட்டுமே இந்தப் பரப்புரை நடக்கிறது! சுய மரியாதை சூடேற்றி – தன்மானப் போருக்கு அழைப்பு விடுத்த நமது அறிவு ஆசான் தந்தை பெரியார்...

பரப்புரைப் பயணத்தில் கழகம் வற்புறுத்தல் பார்ப்பனியத்துக்கு அடிமையாகாதீர்; தலித் மக்களை அடக்க முயலாதீர்!

பரப்புரைப் பயணத்தில் கழகம் வற்புறுத்தல் பார்ப்பனியத்துக்கு அடிமையாகாதீர்; தலித் மக்களை அடக்க முயலாதீர்!

  தலித் மக்களை அடக்க முயலாதீர் என்று பிற்படுத்தப்பட்டோருக்கு வேண்டுகோள் விடுத்து, கழகத்தின் பரப்புரை இயக்கம் தொடருகிறது: 15.4.2012 அன்று மேலூர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், 16.4.2012 அன்று செக் கானூரணி, சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளிலும், 17.4.2012 அன்று தேனி, பெரியகுளம், வத்தலகுண்டு, ஆத்தூர் ஆகிய பகுதிகளிலும் பரப்புரை நடத்தப்பட்டது. 18.4.2012 அன்று சின்னாளப்பட்டி, கோபால்பட்டி, நத்தம் ஆகிய பகுதிகளிலும், 1.4.2012 அன்று திருவெறும்பூர், காட்டூர் ஆகிய பகுதிகளிலும், 20.4.2012 அன்று இலால்குடி, பூவாளூர், கீழப்பளூர், அரியலூர் ஆகிய பகுதிகளிலும், 21.4.2012 அன்று குன்னம், பேரளி, பெரம்பலூர் காந்தி சிலை, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளிலும் பரப் புரைகள் நடைபெற்றன. திருச்சி மாவட்டத்தில் பரப்புரை நடந்த இரண்டு நாட்கள் மூத்த பெரியார் தொண்டர் ஆசிட் தியாகராசன், பயணக் குழுவின ரோடு பயணம் செய்து, பரப்புரையை பாராட்டினார். அதேபோல் இலால்குடி முத்துச்செழியன், பயணக் குழுவை சந்தித்து, தனது பாராட்டுகளையும்...

நெல்லை இந்து கல்லூரியில் விடுதலை இராசேந்திரன் உரை

நெல்லை இந்து கல்லூரியில் விடுதலை இராசேந்திரன் உரை

திருநெல்வேலி இந்து கல்லூரியில் மதுரை பல்கலை ஆசிரியர் சங்கம் நடத்திய சமூகநீதி கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் 16.4.2012 பகல் 12 மணியளவில் சிறப்புரையாற்றினார். ‘சமூக நீதியும் கல்வியும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், சமூக நீதிப் போராட்ட வரலாறு, சமூக நீதிக் கொள்கைகள் தற்போது உலகமயமாக்கல் சூழலில் சந்திக்கும் நெருக்கடிகளை விளக்கினார். எழுத்தாளரும், மார்க்சிய சிந்தனையாளருமான அருணன், இஸ்லாமியர்கள், பெண்களுக்கு மறுக்கப்படும் சமூக நீதிகளை விளக்கியும், இந்துத்துவ மதவாத சக்திகளின் பிற்போக்கு கருத்தியலால் சமூகம் சந்திக்கும் நெருக்கடிகளை யும் விளக்கினார். பேராசிரியர் முனைவர் செல்லப்பா தலைமை தாங்கினார். சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் நீலகண்டன் வரவேற்றுப் பேசினார். கருத்தரங்கை கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார். கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள் பெருமளவில் பங்கேற்றனர். ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று நெல்லையில் மாலை 7 மணி அளவில் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் மன்றத்தின் சார்பில் அம்சா அரங்கில்...

அத்தாணியில் பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம்

அத்தாணியில் பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம்

அந்தியூர் ஒன்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் 133-வது பிறந்த நாள் விழா, கீழ்வானி இந்திராநகர் கிளையின் பெயர் பலகை திறப்பு விழா, கழகத்தின் புதிய நூல் வெளியீட்டு விழா பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம் ஆகியவை 8.3.2012 அன்று நடைபெற்றது. விழாவிற்கு பகுத்தறி வாளர் பேரவைத் தோழர் ஜீ.மா. சுந்தரம் தலைமையேற்றார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கீழ்வானி இந்திரா நகரில் கழகத்தின் பெயர்ப் பலகையை திறந்து வைத்து கொடியேற்றினார். சுந்தரம் இல்லத்தில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு, அனைவரும் ஊர்வலமாக அத்தாணி பொதுக் கூட்ட திடலுக்கு வந்தடைந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் தலைவர் கழகக் கொடியினை ஏற்றி வைக்க, பொதுக் கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்கின. வீரன் வரவேற்புரையாற்ற, மடத்துகுளம் மோகன், ‘மந்திரமல்ல தந்திரமே!’ நிகழ்ச்சி நடத்தினார். பொள்ளாச்சி விஜய ராகவன் கழக வெளியீடுகளை அறிமுகம் செய்தார். மாவட்ட கழகத் தலைவர் நாத்திக சோதி, தலைமை ஆலோசனைக்...

நீலகிரியில் நடந்த மாபெரும் கண்டனக் கூட்டத்தில் கழகத் தலைவர் அறிவிப்பு

நீலகிரியில் நடந்த மாபெரும் கண்டனக் கூட்டத்தில் கழகத் தலைவர் அறிவிப்பு

தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் ஆட்களின் வன்முறை அடாவடியை எதிர்த்து ‘மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு’ கெலமங்கலம் ஒன்றியம், நீலகிரியில் கழகத் தோழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம், கிருட் டிணகிரி மாவட்டம் கெலமங்கலத் தில் 28.4.2012 மாலை நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் பழனிச் சாமி தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செய லாளர் கோவை இராமகிருட்டிணன், கழக வழக்கறிஞர் குமார தேவன், மாவட்டத் தலைவர் குமார், தருமபுரி மாவட்ட அமைப்பாளர் வேடியப் பன் ஆகியோர் கண்டன உரையாற் றினர். இந்திய பொதுவுடைமைக் கட்சி யின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் மற்றும் அவரது ஆட்களால் தொடர்ந்து நடந்தேறி வரும் வன்முறைச் செயல்களால் பாதிக்கப்பட்டிருந்த பொது மக்கள் பெருமளவில் திரண்டு கண்டன உரைகளை உற்சாகமாக வரவேற்று கையொலி எழுப்பியும் ஆரவாரம் செய்தும் தமது ஆதரவைத் தெரிவித்தனர்.  6.4.2012...

மதுரை ஆதினமும் காஞ்சி ஜெயேந்திரனும்

மதுரை ஆதினமும் காஞ்சி ஜெயேந்திரனும்

மதுரை  ‘குருமகா சன்னிதானமாக’ இருந்த அருணகிரி,  மதுரை ஆதினத்தின் 293வது மடாதிபதியாக நித்யானந்தாவுக்கு முடிசூட்டி விட்டார். மடாதிபதியாக தனது வாரிசை நியமிக்கும் முழு உரிமை தனக்கு உண்டு என்கிறார் மதுரை ஆதினம். ‘சிவபெருமானும் பார்வதியும்’ தனது கனவில் வந்து கேட்டுக் கொண்டதற்கேற்ப இந்த முடிவை எடுத்துள்ளதாக மதுரை ஆதினம் அடித்துக் கூறுகிறார். ‘தினமலர்’ பார்ப்பன நாளேடும், இந்து மக்கள் கட்சி போன்ற இந்து அமைப்புகளும் இதைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. “சிவபெருமானா வது, கனவில் வருவதாவது; என்ன காதில் பூசுற்று கிறார்களா? இந்தக் கதை எல்லாம் நாங்கள் ஏற்கத் தயாராக இல்லை” என்று இந்து அமைப்புகளே தமிழ்நாட்டில் பகுத்தறிவுடன் சிந்திக்கத் தொடங்கி விட்டதாக சந்தேகிக்க வேண்டியிருக்கிறது! இதேபோல் பெரியாரியல்வாதிகள் கேள்வி கேட்டால், பக்தர்கள் உணர்வைப் புண்படுத்துவதாக இதே இந்து அமைப்புகள் போராடக் கிளம்பி விடு வார்கள். ‘இந்து’ அமைப்புகளுக்கு மட்டும் இப்படி பகுத்தறிவு வந்து விட்டதாக கூறி விட முடியாது. சைவ...

‘அக்சய திருதி’யும் ‘இந்து’ நாளேடும்

‘அக்சய திருதி’யும் ‘இந்து’ நாளேடும்

‘அக்சய திருதி’ என்று ஒரு புதுக்கரடி இந்து மதத்தின் பெயரில் பிரபலமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, நகை வர்த்தகம் செய்யும் வணிக நிறுவனங்களும், ஊடகங்களும் இதை ஊதிப் பெருக்கி, பாமர மக்களின் மடமையை சுரண்டி வருகின்றன. அன்றைய நாளில் ஒரு கிராம் நகையாவது வாங்கினால், ஆண்டு முழுதும் நகை குடும்பத்தில் குவியுமாம். ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஒரு பெரும் கூட்டம், கடைகளில் அலைமோதுகிறது. கூட்டத்தில் நகை வாங்க வந்து, நகையை திருட்டுக் கொடுப்போரும் அதிகம். போலி தங்கக் காசுகள் மோசடி வேறு. இவ்வளவு கூத்துகளுக்கிடையில், ‘அக்சய திருத்தியா’ என்பது குறித்து ‘இந்து’ நாளேட்டில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் நாள் ‘அக்சய திருதி’ அன்று அந்த நாளேட்டின் முதல் பக்கம் முழுதும் ஒரு நகை வணிக நிறுவனம் தந்துள்ள விளம்பரத்தில் ‘இந்து’ ஏடே தனது வாசகர்களுக்கு இந்தப் ‘புனித நாளில்’ வாழ்த்துகளைத் தெரிவிப்பதுபோல குறிப்பிடப்பட்டிருந்தது. “இந்த நாளில் தங்கம் வாங்கினால்,...

வரலாற்றை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை வாழ்நாள் முழுதும் இனத்துரோகம் செய்தவர் ம.பொ.சி.

வரலாற்றை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை வாழ்நாள் முழுதும் இனத்துரோகம் செய்தவர் ம.பொ.சி.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து: பெரியார் விநாயகர் சிலை உடைப்புப் போராட் டம் நடத்தியபோது தி.மு.க.வினர் சொன்னார்கள்… “நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்” என்று. தேர்தலுக்கு போனவுடன் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொள்கையில் வழுவ ஆரம்பித்து, சன் டி.வி.யில் இராமாயணம் போட ஆரம்பித்து விட்டார்கள். இராமாயண எதிர்ப்பு என்பது அந்த கதையை எதிர்ப்பதாக பொருள் அல்ல. அதை வைத்துக் கொண்டு தமிழர்கள் மத்தியில் பார்ப்பனி யத்தை புகுத்தும் ஏற்பாடு என்பதால் தான் எதிர்க்கப் படுகிறது. 1938 இல் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியபோது சொன்னார்… “இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது மொழிப் போராட்டம் அல்ல. பண்பாட்டு போராட்டம். தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு, சமய, இயல் ஆகியவற்றில் மனுதர்மத்தை புகுத்தும் சூழ்ச்சியை எதிர்க்கும் போராட்டம் இது” என்று சொன்னார். ஆங்கிலம்...

காற்றில் பறக்கும் ஒப்பந்தம்

காற்றில் பறக்கும் ஒப்பந்தம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது வில்லூர்.  வில்லூரில் வாழும் தலித் மக்கள், ஆதிக்கசாதியினர் வாழும் வீதிகளில் சைக்கிளில் போக முடியாது. 2011 ஆம் ஆண்டு மே முதல் தேதி தலித் இளைஞர் ஒருவர், பொது வீதியில் சைக்கிள் ஓட்டிச் சென்றார் என்பதற்காக சாதிவெறியர்களால் தாக்கப்பட்டார். இது கலவரமாக மாறி, காவல் துறை தலையிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட காவல்துறை அதிகாரி தலித் பிரதிநிதிகளையும், ஆதிக்கசாதி பிரதிநிதிகளையும் அழைத்து சமரசப் பேச்சு நடத்தினார். கடந்த ஏப். 24 ஆம் தேதி இரு பிரிவினருக்கிடையே உடன்பாடு கையெழுத்தானது. இதன்படி இரு தரப்பும் சமாதானமாக நட்புறவுடன் பழகி வருகிறார்கள் என்று காவல்துறை கூறிக் கொண்டாலும், உண்மை நிலவரம் அப்படி அல்ல என்று நேரில் பார்வையிட்ட ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர் கூறுகிறார். ‘உடன்பாடு காகிதத்தில் தான் இருக்கிறது, மீண்டும் தலித் மக்கள் பொது வீதிகளில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கப்படுவது இல்லை’...

போராட்டத்தை விளக்கி பரப்புரை

போராட்டத்தை விளக்கி பரப்புரை

மனுதர்ம எரிப்புப் போராட்டத்தை விளக்கி தமிழகம் தழுவிய பரப்புரை இயக்கத்தை கழகம் தொடங்கு கிறது. இது குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி திருப்பூர் கூட்டத்தில் வெளியிட்ட செயல் திட்டம்: இந்து – ஜாதீய வாழ்வியலுக்கு எதிரான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லவும், ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்காக தமிழ்நாடு அரசும் மக்களும் ஆற்ற வேண்டிய கடமைகள்  குறித்த திருப்பூர் தீர்மானங்களை விளக்கும் வண்ணமும், மனுஸ்மிருதி எரிப்புப் போராட்டம் ஏன்? எதற்கு? என விளக்கவும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக முழுமையான பரப்புரைகளை நடத்த உள்ளோம். இந்தப் பரப்புரைகளில் இன்றும் மனு தர்மம் எந்தெந்த வழிகளில் உயிர்ப்புடன் உள்ளது என்பவைகளை எளிதாக விளக்கும் வகையில் புகைப்படங்கள் நிறைந்த சாதி ஒழிப்புக் கண்காட்சியும் இடம்பெறும். முதற்கட்டமாக சேலம் கிழக்கு, தஞ்சை, திருவாருர், நாகை ஆகிய மாவட்டங்களில் கிராமப் பிரச்சாரப் பயணங்கள் நடக்க உள்ளன. ஒரு குழு மே மாதம் 14 ஆம்...

‘ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு’ப் பயண நிறைவில் தமிழக அரசுக்கு வலியுறுத்தல் வாழ்விடங்கள் தீண்டாமைக்கு முடிவு கட்டுக!

‘ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு’ப் பயண நிறைவில் தமிழக அரசுக்கு வலியுறுத்தல் வாழ்விடங்கள் தீண்டாமைக்கு முடிவு கட்டுக!

தலித் மக்களின் வாழ்விடங்களில் பின்பற்றப் படும் தீண்டாமை வடிவங்களை தடுத்து நிறுத்த தமிழக அரசு முன் வரவேண்டும் என்று திருப்பூரில் நிறைவடைந்த ‘ஜாதிய வாழ்வியல் எதிர்ப்புப் பரப்புரை’ப் பயணத்தில் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. அரசு கட்டித் தரும் குடியிருப்புகள், வீட்டுமனை விற்பனைகளில் பின்பற்றப்பட்டுவரும் ‘தீண்டாமை களை’ இத் தீர்மானங்கள் சுட்டிக்காட்டி அரசின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஏப்.29 அன்று திருப்பூர் அரிசிக் கடை வீதியில் நடைபெற்ற பயண நிறைவு விழா நிகழ்வில் பயணத்தில் பங்கேற்ற தோழர்களால் கழக சார்பில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்: தமிழ்ப் பேரரசர்கள் காலத்திலிருந்து இன்றுவரை நிலைத்து இருக்கும் “ஊர் – சேரி” என்ற இரட்டை வாழ்விடங்களை – வாழ்விடத் தீண்டாமையை ஒழிக்கும் வகையிலும், “தாழ்த்தப் பட்ட சமுதாய மக்களுக்குத் தனியாக சேரி என்று இருப்பதைத் தடைசெய்யவேண்டும்”, “இனி கட்டப் போகும் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்கள் ஊருக்கு உள்ளேயே கிடைக்கும் இடங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளாகக் கட்டவேண்டும்” என்று 1947 ஆம் ஆண்டிலிருந்தே...

அரசியல் சட்டத்துக்கு எதிரான ‘மனுதர்மத்துக்கு’ தடை போடுக! நவ. 26 இல் மனுதர்மம் எரிக்கப்படும்!

அரசியல் சட்டத்துக்கு எதிரான ‘மனுதர்மத்துக்கு’ தடை போடுக! நவ. 26 இல் மனுதர்மம் எரிக்கப்படும்!

திருப்பூர் நிறைவு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு அரசியல் சட்டத்துக்கு எதிரான மனுதர்மத்தை மத்திய அரசு தடை செய்யக் கோரியும், வாழ்வியலில் சட்டப்பூர்வமாக திணிக்கப்படும் சாதி ஒடுக்குமுறைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்தக் கோரியும், கழக சார்பில் தமிழகம் முழுதும் ‘மனுதர்மம்’ தீயிடப்படுகிறது. திராவிடர் இயக்க நூற்றாண்டில் ஜாதிய வாழ்வியல் எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தியுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி பரமக்குடியில் மாவீரன் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சாதி ஒழிப்பு உறுதியேற்று, பயணம் தொடங்கியது. பயணக் குழுவினர், சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு முருகேசன் நினை விடத்தில் வீரவணக்கம் செலுத்தினர். ஏப். 29 ஆம் தேதி திருப்பூரில் பயணம் நிறைவடைந்தது. அன்று காலை கோவை மாவட்டம் சோமனூரி லுள்ள செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தி, பயணத்தைக் குழுவினர் நிறைவு செய்தனர். ஆதிக்கசாதியைச் சார்ந்த...

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை வடக்கு தெற்கு மாநகர மாவட்ட கழகங்களின் கலந்துரை யாடல் கூட்டம் 8.4.2012 ஞாயிறு காலை 11 மணிக்கு கோவை அண்ணா மலை அரங்கில் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது. சமீபத்தில் முடிவெய்திய பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு சுப்பையா, சிந்தனையாளர் சங்கமித்ரா ஆகியோ ருக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக் கப்பட்டது. தொடர்ந்து தோழர்களின் கருத்துரைகளையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோவை மாநகரில் பார்ப்பன சங்கம் நடத்தும் மின் மயானத்தை அனைத்து சாதியினருக்கான பொது மயானமாக அறிவிக்க வலியுறுத்தி மே மாதம் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவது எனவும், தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அனுமதி மறுக்கம் அன்னூர் வடவள்ளி கிராம அங்கன்வாடி மையத்திலும் அஞ்சல் நிலையத்திலும் நிலவும் தீண்டாமை யைக் கண்டித்து எதிர்வரும் 16 ஆம் நாள் வடவள்ளியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் திராவிடர் இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சி சாதனைகளை விளக்கம்...

சென்னையில் கழகம் நடத்தும்  முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

சென்னையில் கழகம் நடத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

மே 19 அன்று மாலை சென்னை எம்.ஜி.ஆர். நாளில் முள்ளி வாய்க்கால் நினைவு நாளில் ஈழ விடுதலைக்கு அய்.நா. வாக்கெடுப்பு நடத்தக் கோரும் பொதுக் கூட்டம் பெரியார் திராவிடர் கழக சார்பில் நடக்கிறது. துணைத்தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கழகத் தலைவர், பொதுச்செயலாளர்கள் உரையாற்றுகிறார்கள். பெரியார் முழக்கம் 10052012 இதழ்

பெண்ணுரிமையை வலியுறுத்திய ஓர் விவகாரத்து வழக்கு

பெண்ணுரிமையை வலியுறுத்திய ஓர் விவகாரத்து வழக்கு

மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த மே 3 ஆம் தேதி வந்த ஒரு விவகாரத்து வழக்கு, பெண்ணுரிமைக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அமர்வு நீதிபதிகள் பி.பி.மஜீம்தார் மற்றும் அனூப்போத்தா இந்த வழக்கில் எழுப்பிய கேள்விகளும் மிகவும் அர்த்தமிக்கதாகும். 30 வயது கணவன், தனது 26 வயது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். திருமணமானவுடன் இந்த இணையர் தேனிலவுக்கு சென்றபோது மணமகள் கணவருடன், குழந்தை பிறப்புத் தடைக்கான ஆணுறை இல்லாமல் உடல் உறவு கொள்ள மறுத்துவிட்டார். ‘குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இப்போது உரிய நேரமல்ல; பொருளாதார ரீதியாக என்னை வளர்த்துக் கொண்ட பிறகே குழந்தை பெற்றுக் கொள்வேன்’ என்று அந்தப் பெண் கூறிவிட்டார். இது தனக்கு மன உளைச்சலை உருவாக்கிவிட்டது என்று கணவர் வழக்கு தொடர்ந்தார். ‘தனது குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய தன்னை பொருளாதாரத்தில் நிலைப்படுத்திக் கொள்ள விரும்பியிருக்கிறார் இந்தப் பெண்’ என்று கூறிய நீதிபதி, ‘இதில் முடிவெடுக்கும்...

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்

உள்நாட்டுப் பாதுகாப்புகளில்கூட மத்திய அரசு நேரடியாக தலையிடுவதை மாநில அரசுகள் எதிர்க்கின்றன. அரசியல் சட்டம் உருவாக்கிய காலச் சூழல் வேறு; இப்போதைய நிலை வேறு; அரசியல் நிர்ணய சபை, வலிமையான மத்திய அரசையே விரும்பியது. பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா போராடியதையும் சமஸ்தான மன்னர்கள் தங்களின் ஆளும் உரிமைகளை விட்டுக் கொடுக்க மறுத்ததை யும் கவனத்தில் கொண்டு, மாநிலங்கள் வலிமையாகி விடக் கூடாது. மத்திய அரசு வலிமையாக இருக்க வேண்டும் என்றே காங்கிரஸ் விரும்பியது. நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பலரும் தங்கள் துறைகளுக்கான முழு அதிகாரம் தங்களிடமே இருக்க வேண்டும் என்று விரும்பினர்.  1950 ஆம் ஆண்டு நேரு உருவாக்கிய திட்டக் கமிஷன்கூட இதே கண்ணோட்டத்தில் தான் உருவாக்கப்பட்டது. இது பேரதிகார மிக்க அமைப்பாக எதிர்காலத்தில் மாறிவிடும் என்று சர்தார் பட்டேல்கூட அச்சம் தெரிவித்தார். அதுதான் நடந்தது. திட்டக் கமிஷன் பற்றி அரசியலமைப்பில் எதுவும் குறிப்பிடப்பட வில்லை. ஆனால், அரசியல்...

வரலாற்றை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை அயோத்தியிலிருந்து ராமன் தெற்கே வந்தது ஏன்?

வரலாற்றை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை அயோத்தியிலிருந்து ராமன் தெற்கே வந்தது ஏன்?

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து: பெரியார் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் தொடர்ந்து செய்தார். எம்.ஆர்.இராதா நாடகத்தின் வழியாக இராமாயண எதிர்ப்பு செய்யும்போது, பெரிய கலவரம் ஏற்படுகிறது. அப்போது காங்கிரஸ் காரர்கள் தான் எதிர்த்தார்கள். ஒரு அவதாரத்தை போட்டதற்கே இவ்வளவு கூச்சலிடுகிறார்களே, பத்து அவதாரத்தையும் காட்டியாக வேண்டும் என்று குத்தூசி குருசாமியிடம் சொன்னாராம் இராதா. அதன் பிறகு, குத்தூசி குருசாமி எழுதிய ‘தசாவதாரம்’ என்ற நாடகத்தை எம்.ஆர். இராதா நடித்தாராம். புராணம் என்ற பெயரால், அவர்கள் புரட்டுகளை நம்ப வைத்து நம் மீது பார்ப்பனப் பண்பாட்டைத் திணிப்பதற்கு எதிரானதுதான் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம். இராமர் பாலம் என்பதை எங்களுடைய மத நம்பிக்கை என்று அவர்கள் சொல்கிறார்கள். இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்று சொல்கிறோம். அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவது என்பதுதான் காந்தி சொல்லிக் கொடுத்த மதச்...

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (9)

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (9)

லண்டனில் தடையை தகர்த்து உரிமை முழக்கமிட்டவர் டாக்டர் நாயர் 1918 ‘தேசிய’ பார்ப்பனக் காங்கிரஸ்வாதிகள், அவர்களின் கையாளாகப் பயன்பட்ட அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தின் யோக்கியதை, ஆகியவற்றை நீதிக்கட்சித் தலைவர்கள் அவ்வப் போது தோலுரித்துக் காட்டி வந்ததோடு பார்ப்பனரல்லாதார் இன எழுச்சியை தூண்டியும் வந்தனர். நாயரின் எழுத்துகள் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தின. அன்னி பெசன்டின் வாழ்க்கை வளர்ச்சிகள் என்று, நாயரால் எழுதப்பட்ட ஆங்கில நூல், அன்னிபெசன்டின் அரசியல் வீழ்ச்சிக்குப் பெருங்காரணமாய் அமைந்தது. இந்நூல், “டுநயன நெயவநச ளஉயனேயட டிக 1913” என்ற தலைப்பில் நாயரால் மெயில் ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். அன்னிபெசன்டுக்கும் லெட் பீட்டருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்தை அம்பலப்படுத்திட அவரின் ஊழல்களை வெட்ட வெளிச்சமாக்கியது. இதற்கென அன்னிபெசன்ட் நாயர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து பெரிய (பாரிஸ்டர்) வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடினார். நாயர் வழக்கறிஞர் எவரு மின்றி, தமது தரப்பு...

‘மனுதர்ம’ப் பிடிக்குள் 1,18,674 தோழர்கள்

‘மனுதர்ம’ப் பிடிக்குள் 1,18,674 தோழர்கள்

‘மனுதர்மம்’ – ‘பிராமணர்களுக்கு’ உரிய தொழிலாக, ‘வேதம் கற்றல், வேதம் கற்பித்தல், யாகம் நடத்துதல், யாகம் நடத்த உதவுதல் பணக்காரர்களாக இருந்தால் பிச்சை கொடுத்தல், ஏழையாக இருந்தால் பிச்சை எடுத்தல்’ என்று கூறுகிறது. (அத் 1 – ஸ்லோகம் 88) ஷத்திரியனுக்கு ‘மக்களைக் காத்தல், பிச்சைப் போடுதல், வேள்வி செய்வது, வேதம் கற்பது, புலன் இன்பத்தில் பற்றுக் கொள்ளாது இருத்தல்’ என்று கூறுகிறது. (அத் 1, ஸ்லோகம் 89) ‘ஆடு மாடு மேய்த்தல், கொடையளித்தல், யாகம் செய்தல், வாணிபம் செய்தல், வட்டிக்கு கடன் தருதல், நிலத்தைப் பயிர் செய்தல்’ ஆகியவை வைசியனுக் குரிய தொழிலாகக் கூறுகிறது. (அத் 1 – ஸ்லோகம் 90) ‘சூத்திரனு’க்கு உரிய தொழிலாக ‘மனுதர்மம்’ கூறுவது …..? “மேலாண்மை படைத்த இறைவன் சூத்திரருக்கு விதித்துள்ள ஒரே கடமை, மேல் வர்ணத்தாருக்கு, அவர் தம் மதிப்பு மரியாதை குன்றாமல் உழைத்தல்”. (அத் 1. ஸ்லோகம் 91) ‘பிராமணன்’, ‘சத்திரியன்,...

காடுவெட்டி குருவின் பேச்சு: மருத்துவர் ராமதாசு ஏற்கிறாரா?

காடுவெட்டி குருவின் பேச்சு: மருத்துவர் ராமதாசு ஏற்கிறாரா?

மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் நடத்திய சித்திரைப் பவுர்ணமி நாள் விழாவில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குரு, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு முன்னிலையில், “வன்னிய சாதிப் பெண்களை எவராது கலப்பு திருமணம் செய்தா தொலைச்சுப்புடுவேன்” என்று மிரட்டியுள்ளார். ஒரு பாதிக்கப்பட்ட சமூகம் தனக்கான உரிமைகளைக் கோரும்போது இப்படி சாதி வெறி பேசுவது மிக மோசமான பார்ப்பனியத்தை உறுதிப்படுத்தும் பேச்சாகும். மக்கள் தொலைக் காட்சி ஒளிபரப்பிய அந்த நேரடி நிகழ்ச்சியில் குருவின் பேச்சை பலரும் கேட்டார்கள். ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகையும் (மே 13) இவ்வாறு வெளியிட்டுள்ளது: “நம் இனத்துப் பெண்களைப் பலாத்காரம் செஞ்சு கலப்புத் திருமணம் செய்றாங்க. நாம எச்சரிக்கையா இருக்கணும். நம்ம சாதியில்தான் நாம கல்யாணம் செய்யணும். எவன்டா சாதிய ஒழிச்சான்? நான் வன்னியர் சங்கத் தலைவர் சொல்றேன். யாராவது எங்க பொண்ணுங்களுக்கு கலப்புத் திருமணம் செஞ்சு வைச்சா… தொலைச்சுப் புடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.” காடுவெட்டி குருவின் பேச்சு, மருத்துவர்...

‘மனுதர்ம’த்தின் அதிகாரம்: ஆய்வாளர் ரொமிலா தாப்பர் கேள்வி

‘மனுதர்ம’த்தின் அதிகாரம்: ஆய்வாளர் ரொமிலா தாப்பர் கேள்வி

இராமாயணத்தையோ மதநூல்களையோ சமூகப் பார்வையில் ஆய்வு செய்து ஏதேனும் நூல் வந்தால், உடனே அதைத் தடை செய்ய பார்ப்பனர்களும் இந்துத்துவா அமைப்புகளும் மத அமைப்புகளும் கூக்குரலிடுகின்றன. ஆனால், ‘பிராமணனை’ உயர்வுபடுத்தி ‘சூத்திரனை’ பார்ப்பனரின் வைப்பாட்டி மகன் என்று இழிவுபடுத்தும் ‘மனுதர்மம்’ தடைபோடப்படவில்லை. ‘மனுதர்மத்தின்’ புதிய பதிப்புகள் இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பார்ப்பன ஏடுகள் அதற்கு மதிப்புரை எழுதி பாராட்டுகின்றன. எந்த ஒரு நூலுக்கும் தடை கோரும்போது கண்மூடித்தனமாக ஊடகங்கள் அதற்கு ஆதரவாக கருத்துகளை உருவாக்குவது சரிதானா? என்ற கேள்வியை மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் எழுப்பியுள்ளார். “இந்த நூல் எங்கள் மதத்தினரின் உணர்வுகளை ஒட்டு மொத்தமாகப் புண்படுத்துகிறது என்று எதிர்ப்பு வந்தால், ஊடகங்கள் அப்படிப் புண்படுத்துவது என்று கூறப்படுவது உண்மையா என்பதை ஆய்வு செய்ய வேண்டாமா? எதிர்ப்பு தெரிவிக்கும் மத அமைப்பு எது? அந்த மதத்தில் குறிப்பிட்ட எந்தப் பிரிவினரின் உணர்வு பாதிக்கப்பட்டுள்ளது? இது குறித்து ஆராய்வது கிடையாது....

பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சட்டத் திருத்தம் வருகிறது

பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சட்டத் திருத்தம் வருகிறது

தாழ்த்தப்பட்டோர் பழங்குடிப் பிரிவினருக்கு அரசுப் பதவிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கிடும் மாயாவதி ஆட்சியின் ஆணையை உ.பி. உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இந்த பதவி உயர்வை உறுதி செய்யும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர். வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை காங்கிரஸ் ஏற்க மறுத்தபோது 1925 இல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார். பெரியார் அன்று வலியுறுத்திய கொள்கையையே இன்று காங்கிரசாரும் பேசுகிறார்கள் என்பதே பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. நாடாளு மன்றத் துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமி பதிலளிக்கையில், இடஒதுக்கீட்டின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி, புதிய மசோதா ஒன்றைக் கொண்டு வரும் முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது என்றும், இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்றும் தெரிவித்தார். இத்தகைய இடஒதுக்கீடுகளின் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர் ஏற்கனவே பல மாநில அரசுகள் இது தொடர்பாக கொண்டு வந்த பல சட்டத் திருத்தங்களை நீதிமன்றங்கள்...

மேட்டூரில் ‘மே’ நாள்

மேட்டூரில் ‘மே’ நாள்

பெரியார் தொழிலாளர் கழகம் மேட்டூர் அனல் மின்சார நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பாக மே 1 தொழிலாளர் தினத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் கி.முல்லைவேந்தன் தலைமை வகித்து கழகக் கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார். பெரியார் தொழிலாளர் கழக தலைவர் சக்திவேல், செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடியேற்று விழா நிகழ்வில் ஏராளமான தொழிலாளர்களும் கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, ‘மே’ நாள் கொண்டாடப் பட்டது. பெரியார் முழக்கம் 17052012 இதழ்

கழகத்தின் புதிய வெளியீடுகள்

கழகத்தின் புதிய வெளியீடுகள்

பரப்புரைப் பயணத்துக்காக கழக சார்பில் வெளியிடப்பட்ட புதிய நூல்கள்: இந்துவாகச் சாக மாட்டேன் – டாக்டர் அம்பேத்கர் – பக். 32; நன்கொடை : ரூ.10. தேச பக்தி – தேசியம் என்னும் சூழ்ச்சி – பெரியார் – பக். 32; நன்கொடை : ரூ.20. ஜனநாயகத்தின் முட்டாள்தனம் – பெரியார் – பக். 32; நன்கொடை : ரூ.20. புராணங்களை எரிக்க வேண்டும் – பெரியார்- பக். 32; நன்கொடை : ரூ.20. சபாஷ் அம்பேத்கர் – பெரியார்     – பக். 30; நன்கொடை : ரூ.10. இடஒதுக்கீடு உரிமைப் போராட்ட வரலாறு – கொளத்தூர் மணி – பக். 46; நன்கொடை : ரூ.30. தீண்டாமையை ஒழிக்கும் வழி               – பெரியார்- பக். 32; நன்கொடை : ரூ.10. மேற்கண்ட சிறு வெளியீடுகள் புதிதாக மக்களிடம் பரப்பப்பட்டன. தொடர்புக்கு : சேலம்: 9786316155  – கோவை :...

‘இராமன் பாலம்’ புரட்டைக் கண்டித்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

‘இராமன் பாலம்’ புரட்டைக் கண்டித்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், “மணல் திட்டு இராமன் பாலமா? அது தேசிய சின்னமா” கண்டன ஆர்ப்பாட்டம் 7.4.2012 சனிக்கிமை மாலை 4 மணியளவில் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் செ.நாவாப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் சி.ஆசைத்தம்பி, திருமால், திருநாவுக்கரசு, பெ.கோவிந்தன், லோ.கோபி, சு.தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ப.கண்ணன், பெரியார் தி.க. இல. சிலம்பன், ந. வெற்றிவேல், ந. அய்யனார், விடுதலை சிறுத்தை ஆ.இராமலிங்கம், வி.வி.மு. பெரியார் வெங்கட் ஆகியோர் உரையை தொடர்ந்து, நங்கவள்ளி அன்பு கண்டன உரை நிகழ்த்தினார். ச.கா. இளையராசா, கு.க. சாக்ரடீசு, விழுப்புரம் மா.கணேசன், சங்கர் உள்பட பல பகுதிகளி லிருந்தும் ஏராளமான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப் பாட்டத் தில் இராமர் பாலம் தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்கிற அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்து தோழர்கள் முழக்கமிட்டனர்.   பெரியார் முழக்கம் 17052012 இதழ்

மாட்டிறைச்சி உணவுத் திருவிழாவுக்கு ‘மனுதர்மக் கும்பலின்’ எதிர்ப்பு

மாட்டிறைச்சி உணவுத் திருவிழாவுக்கு ‘மனுதர்மக் கும்பலின்’ எதிர்ப்பு

பார்ப்பனர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டவர்கள் என்பதற்கு அவர்களின் வேதங்களே சான்று கூறுகின்றன. வால்மீகி இராமாயணத்தில் இராமன் மாட்டுக்கறியை சுவைத்து சாப்பிட்டதை விரிவாக எடுத்துக் கூறுகிறது. புத்தர் இயக்கம் கால்நடைகளை தீயிலிட்டு எரிக்கும் பார்ப்பன யாகங்களை எதிர்த்தது. உழைக்கும் மக்களின் உற்பத்திக் கருவிகளான ஆடு மாடுகள், உயிருடன் நெருப்பில் பொசுக்கப்படும் யாகத்தால், விவசாயம் கடும் நெருக்கடிக்குள்ளானது. எனவே விவசாயத்தை தொழிலாகக் கொண்ட திராவிடர்கள் புத்தரின் கருத்துகளை ஏற்றனர். பார்ப்பனர்களின் செல்வாக்கு இழந்தது. மீண்டும் தங்களை உயிர்ப்பித்துக் கொள்ள பார்ப்பனர்கள் புத்த மதத்தில் மக்கள் செல்வாக்குள்ள கருத்துகளை தங்கள் கருத்துகளாக ‘சுவீகரித்து’க் கொண்டனர். அப்போதுதான் பார்ப்பனர்கள் ‘மாட்டிறைச்சி’ சாப்பிடுவதை கைவிடுகிறார்கள். ‘சைவ’த்துக்கு மாறுகிறார்கள். மாட்டிறைச்சி உண்பவர்கள் தீண்டத்தகாதவர் கள்; இழிவானவர்கள் என்ற மனுதர்ம சிந்தனையை பார்ப்பன சிந்தனையை சமூகத்தில் திணித்தார்கள். இப்போதும் இங்கே உணவு முறையில் மூன்று பிரிவினர் உண்டு. ஒன்று – சைவம்; இரண்டு – அசைவம்; மூன்று – மாட்டிறைச்சி சாப்பிடும் அசைவம்....

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி இராமன் பாலம் கட்டுவதற்கு முன்பு – இங்கே இராவணன், சூர்ப்பனகை எப்படி வந்தார்கள்?

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி இராமன் பாலம் கட்டுவதற்கு முன்பு – இங்கே இராவணன், சூர்ப்பனகை எப்படி வந்தார்கள்?

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து: வால்மீகி இராமாயணத்தை சீனிவாச அய்யங்கார் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சி.ஆர். நரசிம்ம ஆச்சாரியார் தமிழில் மொழி பெயர்த்தார். அதில்… எண்பது மைல் அகலம், எண்ணூற்று எட்டு மைல் நீளத்திற்கு இராமன் பாலம் கட்டியதாகத்தான் வால்மீகி இராமாயணம் சொல்கிறது. இங்கிருந்து இலங்கைக்கு முப்பது மைல் தூரம் தான். எனவே எண்ணூற்று எட்டு மைல் நீளத்திற்கு இங்கு பாலம் கட்டியிருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் கூட இராமாயணப்படி இராமன் கட்டியது மிதக்கும் பாலம் தானே தவிர, நிலம் வரைக்கும் இருந்த பாலம் அல்ல. அது மட்டும் அல்லாமல் இராமாயணக் கதைப்படி இராமன் திரும்பி வந்தவுடன், இதன் வழியாக அரக்கர்கள் வந்துவிடுவார்கள் எனக் கருதி, அம்பு எய்தி பாலத்தை அழித்து விடுகிறான். நாம் வைக்கும் வாதங்கள் என்னவென்றால்…. சூர்ப்பனகை இங்கு வருகிறாள், அவள் தாக்கப்பட்ட...

அந்த இமயமும் பசிபிக்கும் எமக்குச் சொந்தம்!

அந்த இமயமும் பசிபிக்கும் எமக்குச் சொந்தம்!

மேல்கோடி பலூச்சி முதல் கீழ் முனையின் பர்மா வரை படர்ந்து, அகன்று, பாரின் உச்சி என உயர்ந்து நிற்கும் இமயத்தை பற்றி என்ன தோன்றும்?  அதன் ஒப்பிலாக் குளிர் உறை பேரூர்களான ஸ்ரீநகர், சிம்லா, முசௌரி, நைனிடால், டார்ஜிலிங், ஷில்லாங் பற்றி  எல்லாம் என்ன உணர்வு ஏற்படும்? வியப்பு – இனிய பூரிப்பு – அமைதியான ஆனந்தம் – இந்த இமயம் எமது என்ற பெருமை – எந்த நினைவை எப்படி அளந்து எப்படித்தான் சொல்ல முடியும்? அது அளவையில் அடங்காப் பேருணர்வு! பசிபிக் பெருங்கடல் நான்கில் மூன்று பகுதி நீர் சூழ் உலகில் – கடலில் பெருங் கடலாய் இருக்கும் பசிபிக் கடலைப் பற்றி என்ன தோன்றும்? ஆழ்கடல்! இமயம் அளவு உயரம் தலைகீழாகப் போவது போன்ற பள்ளங்களை – படுபாதாளங்களை, ஆழ அகலங்களைக் கொண்ட கடல்! இந்தக் கடலினுள்ளேயே எரிமலைகளாம், மூழ்கி மூழ்கிப் போன கோடிக்கணக்கான கப்பல்களாம், நாகரிகத்தின்...

நன்கொடை

நன்கொடை

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் 5.5.2012 அன்று நடைபெற்ற நாத்திகர் விழாவில் தங்கள் ஆண் குழந்தைக்கு    ‘கபிலன்’ என்று பெயர் சூட்டியதன் நினைவாக ரூ.500 நன்கொடையாக கழக ஏட்டுக்கு வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 17052012 இதழ்

இமயமும் பசிபிக்கும் எமக்கே சொந்தம் சங்க மித்ரா

இமயமும் பசிபிக்கும் எமக்கே சொந்தம் சங்க மித்ரா

அனல் வீசும் எழுத்துக்களால் ஆரியத்தைச் சுட்டெரித்த எழுத்தாளர் சங்கமித்ரா முடிவெய்திவிட்டார். ஆனாலும் அவர் எழுத்துக்கள்  உயிர்த் துடிப்புடன் வாழ்கின்றன.  பெரியாரை மதிப்பீடு செய்து, அவரது பேனா முனையிலிருந்து வெடித்து எழுந்த இந்தக் கருத்து விதைப்பை, அவரது நினைவாக  ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. பெரியார் முழக்கம் 17052012 இதழ்

ஆகமக் கோயிலிலிருந்து அறநிலையத் துறை அமைச்சர் வரை ஆட்டிப் படைக்கிறது ‘மனுதர்மம்’

ஆகமக் கோயிலிலிருந்து அறநிலையத் துறை அமைச்சர் வரை ஆட்டிப் படைக்கிறது ‘மனுதர்மம்’

“சூத்திரன் அருகில் இருக்கும்போது பிராமணன் வேதம் ஓதலாகாது.” – மனுதர்மம் அத்4; சுலோகம் 99 “கோயில் கர்ப்பகிரகத்துக்குள் ‘சூத்திரர்’ அர்ச்சகர் ஆகக் கூடாது என்ற நிலையே இன்றும் நீடிக்கிறது. அந்த உரிமை பார்ப்பனருக்கு மட்டுமே உண்டு என்கிறது மனு நீதி. இப்போதும் சட்டங்களை புறந்தள்ளி விட்டு, ‘ஆட்சி’ செய்து வருகிறது. ‘மனுநீதி’ இதற்கு சான்றாக சட்டமன்றத்தில் மே 8 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆற்றிய உரையை கீழே தருகிறோம்: தமிழகச் சட்டமன்றத்தில் 8.5.2012 இந்து சமய அறநிலையத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் பங்கேற்றுப் பேசுகையில்: “பெரியார் நூற்றாண்டையொட்டி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அமைத்த நீதிபதி மகாராஜன் குழு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிட ஆகமங்கள் தடை விதிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி கம்பரசம்பேட்டையில் அனைவருக்குமான வேத – ஆகம பயிற்சிக் கல்லூரி...