Author: admin

ஆனைமலையில் எச்.ராஜாவை கைது செய்ய வலியுருத்தி கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆனைமலையில் எச்.ராஜாவை கைது செய்ய வலியுருத்தி கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆனைமலையில் எச்.ராஜாவை கைது செய்ய வலியுருத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் தமிழகத்தின் ஒற்றுமையையும் அமைதியையும் சீர்க்குழைக்கும் வகையில் வன்முறையை தூண்டி வரும் எச் ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி! கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் இன்று 07-03-2018 மாலை 5மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது. ஆனைமலை நகரச்செயலர் வே.அரிதாசு தலைமையில் நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது. கண்டன உரையாக நாகராசு (திராவிடர் கழகம்) பரமசிவம் (சிபிஎம் ) மணிமாறன் ( வெல்ஃபேர் பார்ட்டி ) அப்பன் குமார் (விசிக) #அதிமுக (#தினகரன்_அணி ) Arv சாந்து சாகுல் அமீது. (இந்திய ஜவ்கீத் ஜமாஅத் ) தினேசு குமார் (தமிழ்நாடு மாணவர் மன்றம் ) இறுதி உரையாக, தோழர் வெள்ளிங்கிரி யாழ் (திவிக பொறுப்பாளர் ) தோழர் காசு.நாகராசன் (தமிழ்நாடு திராவிடர் கழகம்) உரையாற்றினார்கள். நூற்றுக்கணக்கான தோழர்கள்,...

எச்ச ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கோபி

எச்ச ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கோபி

கோபிசெட்டிபாளையத்தில் 08/03/2018 அன்று அனைத்து கட்சி சார்பில் எச்ச ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றன.

வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் !

வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் !

வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் ! கலந்துரையாடல் கூட்டம் 25.02.2018 ஞாயிற்றுகிழமையன்று மாலை 6.00 மணியளவில் பெரம்பூரில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட செயலாளர் தோழர் இரா. செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தோழர் ஏசு குமார் முன்னிலை வகிக்க, தோழர்கள் நா.பாஸ்கர், நாகேந்திரன் , ராஜீ, சங்கீதா, சங்கவி , தினேஷ், இரமேசு, பிரசாந்த், மோகன்ராஜ், சதிசு, சரவணன், தீபக், இளவரசன், சாரதி, செல்வம் என அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு அவரவர் கருத்துகளை முன் வைக்க, அத்தனையும் ஆலோசிக்கப் பட்டது. வரும் நாட்களில் வடசென்னை மாவட்ட திவிக செயல்பாடுகள் குறித்து தோழர்களின் கருத்தை கவனத்தில் ஏற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. வரும் ஏப்ரலில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. துண்டறிக்கைக்கு பதிலாக டாக்டர் அம்பேத்கரின் சட்டங்களால் நாம் பெறும் பலன்களை சிறு புத்தகமாக...

‘சுயமரியாதை திருமணம்’

‘சுயமரியாதை திருமணம்’

‘சுயமரியாதை திருமணம்’ திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 26.02.2018 பகல் 12 மணிக்கு சென்னையை சார்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் நிவேதா ஆகியோருக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் தாலி மறுத்து சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தோழர்.தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்), தோழர்.ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), தோழர்.வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர், தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்), தோழர்.இரா.செந்தில்குமார் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தோழர்கள், இணையர்களின் நட்புறவுகள் வந்திருந்து வாழ்த்துகளை கூறினர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

“நிமர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு – சென்னை.

“நிமர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு – சென்னை.

“நிமர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு – சென்னை. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 04.03.2018 மாலை 6 மணிக்கு “நிமிர்வோம்” வாசகர் சந்திப்பு கலந்துரையாடல் கூட்டம் தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர்.பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார். நிமிர்வோம் ஏப்ரல் மற்றும் மே மாத புத்தகங்களை பற்றிய தங்களுடைய கருத்துகளை தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், ராஜீ, சங்கீதா, ரவிபாரதி ஆகியோர் சிறப்பாக எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் “திராவிடம் தமிழ்தேசியம்” என்ற தலைப்பில் விரிவான ஒரு விளக்கத்தையும், ஆய்வுகளையும் தோழர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல் துறையில் கழகத்தின் சார்பில் சென்னையில் மனு !

புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல் துறையில் கழகத்தின் சார்பில் சென்னையில் மனு !

புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல் துறையில் கழகத்தின் சார்பில் சென்னையில் மனு ! 08.03.2018 அதிகாலை திருவெற்றியூர் கிராம தெருவில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை மீது சில சமூக விரோதிகள் சிவப்பு ( காவி ) நிற பெயின்டை ஊற்றி அவமதித்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு திரிபுராவில் தோழர். லெனின் சிலையை உடைத்த போது, தமிழக பாஜக தேசிய செயலர் H .ராஜா சமூக வலைதளத்தில் அதை ஊக்கப்படுத்தியும் தமிழகத்திலும் இதே போல் ஈவெரா ( தந்தை பெரியார்) உடைபடும் என பதிந்ததால் தமிழகமெங்கும் எதிர்ப்பு போராட்டங்கள் வீரியமானது. அதன் தொடர்ச்சியாய் திருப்பத்தூரிலும், திருவெற்றியூரிலும் மனித விடுதலைக்காக உழைத்த தலைவர்கள் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தியும் டாக்டர் அம்பேத்கர் சிலை பெயின்ட் ஊற்றியும் அவமதிக்கப்பட்டுள்ளது. இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு காவல்துறை தலைமை ஆணையரிடம் மனு தரப்பட்டது . திவிக...

திருப்பூரில் ஆர்ப்பாட்டம் !

திருப்பூரில் ஆர்ப்பாட்டம் !

  பெரியார் சிலையை உடைப்போம் என்று சொன்ன எச்.ராஜாவையும் திருப்பத்தூரில் அய்யா சிலையை சேதப்படுத்திய காவி காலிகளை கண்டித்து, 7-3-2018 இன்று புதன் மாலை 5மணிக்கு,திருப்பூர் பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலை கழகம்,திராவிடர்கழகம்,தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திமுக,மதிமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள்,முற்போக்கு இயக்கங்கள் என அனைத்து அரசியல் கட்சி தோழர்களும் கலந்து கொண்டனர்.

மதுரையில் பா.ஜ.க.அலுவலக்ம் முற்றுகை !

மதுரையில் பா.ஜ.க.அலுவலக்ம் முற்றுகை !

மதுரையில் பா.ஜ.க.அலுவலக்ம் முற்றுகை ! மதுரையில் எச்.ராஜாவை கண்டித்து பா.ஜ.க அலுவலகம் 06.03.2018 அன்று முற்றுகையிடும் போராட்டம் நடை பெற்றது. முற்றுகை முயன்ற தி.வி.க த பெ.தி.க, மற்றும் புஇ மு தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்செங்கோட்டில் எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு !

திருச்செங்கோட்டில் எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு !

திருச்செங்கோட்டில் எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு ! கழகத்தோழர்கள் கைது ! பெரியார் சிலையை அகற்றவேண்டும் என கூறிய பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜாவைக்கண்டித்து 07.03.2018 அன்று திருச்செங்கோடு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறையின் தடையையும் மீறி எச்.ராஜா கொடும்பாவி கொளுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கழகத்தோழர்களை காவல்துறை கைது செய்தது.

தூத்துக்குடியில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

தூத்துக்குடியில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

தூத்துக்குடியில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு ! எச்.ராஜாவை கைது செய்யக்கோரி…. திரிபுராவில் உலகப் புரட்சியாளர் லெனின் சிலையை இடித்து தள்ளிய இந்துத்துவ பாஜக குண்டர்களின் செயலை ஆதரித்து, பாஜகவின் ஹரிஹர சர்மா “இன்று லெனின் சிலை நாளை பெரியார் சிலை” என்று தனது முகநூலில் பதிந்ததன் மூலம் கலவரத்தை தூண்டப்பார்த்த H.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்பாணிப்பாளரிடம் 07.03.2018 அன்று தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.. இதில் தோழமை அமைப்புகளான விசிகவிலிருந்து தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் தோழர் கா.மை.அகமது இக்பால் தலைமையிலும், ஆதித் தமிழர் கட்சியின் கி.கில்லுவின் தலைமையிலும் எண்ணற்ற தோழர்கள் கலந்து கொண்டனர்..

வேலூர் மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

வேலூர் மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

வேலூர் மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு ! தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசிவரும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை உடனடியாக கைதுசெய்யகோரி 7.3.2018 வேலூர் மாவட்ட SPயிடம் வேலூர் மாவட்ட #திவிக சார்பாக புகார் அளிக்கப்பட்டது.  

ஏற்காட்டில் எச்.ராஜ உருவபொம்மை எரிப்பு !

ஏற்காட்டில் எச்.ராஜ உருவபொம்மை எரிப்பு !

ஏற்காட்டில் எச்.ராஜ உருவபொம்மை எரிப்பு ! தோழர் லெனின், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்கரட்டீஸ் பெரியார் ஆகியோர் சிலைகள் சேதப்படுத்திய மதவாத பிஜேபி கட்சியையும், எச். ராஜாவையும் கண்டித்து ஏற்காடு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 08.03.2018 அன்று ஏற்காடு அண்ணா சிலை அருகில் மதியம் 1.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்தது.

ஈரோட்டில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

ஈரோட்டில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

ஈரோட்டில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! ஈரோடு அக்கிரஹாரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் சிலையை அகற்ற வேன்டும் என கூறிய பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து 08.03.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

குமரி மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

குமரி மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு ! பார்ப்பன வெறிப்பிடித்த பாரதீய சனதா கும்பல் திரிபுராவில் புரட்சியாளர் லெனின் சிலையை உடைத்ததுபோல் தமிழ் நாட்டில் பெரியார் சிலையை உடைப்போமென்றும், சாதியை ஒழித்து சமத்துவம் ஏற்படுத்தத் துடித்த பெரியாரை சாதி வெறியனென்றும் கூறிக் கொண்டு உடம்பு முழுவதும் சாதி,மத வெறிப்பிடித்துத் திரியும் ஆரிய வந்தேரி பார்ப்பான் எச்ச.ராஜாவை பிடித்து சிறையில் தள்ளி தமிழகத்தை மதவெறிக் கும்பல்களிடமிருந்து காப்பாற்ற வேண்டி; திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம் சார்பாக இன்று 07-03-2017, புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீ நாத் அவர்களிடம் புகார் மனு தோழர்.வழக்குரைஞர்.வே.சதா(மாவட்டத் தலைவர்,)தலைமையில் தோழர்கள் தமிழ் மதி(மாவட்டச் செயலாளர்),நீதி அரசர்(தலைவர்,பெரியார் தொழிலாளர் கழகம்),சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்), அப்பாஜி(வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர்,தி.மு.க),வைகுண்ட ராமன்,வின்சென்ட் ஆகியோரால் வழங்கப்பட்டது.

மனித நேயன் தோழர் பாரூக் முதலாமாண்டு நினைவேந்தல் !

மனித நேயன் தோழர் பாரூக் முதலாமாண்டு நினைவேந்தல் !

மனித நேயன் தோழர் பாரூக் முதலாமாண்டு நினைவேந்தல் ! திராவிடர் விடுதலைக் கழகம் கோவை சார்பில்……… குருதி கொடை முகாம் – கருத்தரங்கம் – நினைவரங்கம் நாள் : 18-03-2018 காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை

திருப்பூரில்  ”மகளிர் நாள் மாநாடு – பேரணி !”

திருப்பூரில் ”மகளிர் நாள் மாநாடு – பேரணி !”

மார்ச் 12 – திருப்பூரில் ”மகளிர் நாள் மாநாடு – பேரணி !” திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்…… ”பெண்ணே எழு! விடுதலை முழக்கமிடு” எனும் முழக்கத்துடன்… பேரணி : கொடியசைத்து பேரணி துவக்கி வைப்பவர் ”தோழர் கொளத்தூர் மணி அவர்கள்” தலைமை : தோழர் சுசீலா இடம் : திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாநாடு திடல் இராயபுரம், திருப்பூர் வரை பேரணி துவங்கும் நேரம் 4 மணி மாநாடு : 12.03.2018 மாலை 5 மணி முதல் கலைநிகழ்ச்சிகள் நிமிர்வு கலையகம் தலைமை : பார்வதி திவிக திருப்பூர் வரவேற்புரை : சரண்யா, திவிக திருப்பூர் முன்னிலை : திருப்பூர் சரசுவதி, பிரியா, அஷ்விதா, ஜெயா, சந்திரா, பாண்டிச் செல்வி, கோமதி, ஜான்சி, ஜெயந்தி, இந்துமதி, தமிழ்மதி, சசிகலா, சங்கவி, கொளஞ்சி, மாலதி, கல்பனா, இராஜலட்சுமி, தனலட்சுமி, ஷைலஜா, பல்லடம் சரசுவதி, மைதிலி, மகாலட்சுமி, ஷாலினி, சாரதி, வசந்தி,...

ஹெச்.ராஜாவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும் – விடுதலை இராஜேந்திரன்

ஹெச்.ராஜாவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும் – விடுதலை இராஜேந்திரன்

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப் பட்டதைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் பெரியார் சிலைகள் உடைக் கப்படும்’ என்று பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிடப் பட்டது. அது, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு, தனக்குத் தெரியாமல் தன் அட்மின் அந்தக் கருத்தை வெளியிட்டுவிட்டதாக ஹெச்.ராஜா சொல்லி, அதற்கு வருத்தமும் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரனிடம் கேட்டோம். அவர், நம்மிடம் தெரிவித்த கருத்து: “ஹெச்.ராஜாவின் முகநூலில் வெளியான கருத்து தமிழகத்தில் எவ்வளவு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். திருப்பத்தூரில் பெரியார் சிலையை உடைத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தின் மனதையும் அந்தக் கருத்து புண்படுத்தியிருக்கிறது. ஹெச்.ராஜாவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்திருக்க வேண்டும். ஆனால், கோழைத்தனமான, தொடைநடுங்கி அரசாக தமிழக அரசு இருப்பதால், அது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....

‘நிமிர்வோம்’ – பிப்ரவரி 2018 இதழ்

‘நிமிர்வோம்’ – பிப்ரவரி 2018 இதழ்

‘ஆண்டாள்’, ‘தேவதாசி மரபு’ குறித்து ஆய்வுக் கட்டுரைகள் நேர்மையின் சிகரம் ஓமந்தூரார். தமிழ் நாட்டைப் புறக்கணிக்கும் நடுவண் ஆட்சி டார்வின் கோட்பாடு; மத்திய அமைச்சருக்கு அறிவியல் மறுப்பு. திருமூலரை எதிர்க்காத பார்ப்பனர்கள் வள்ளலாரை எதிர்ப்பது ஏன்? சிறுபான்மை ஜாதிகளை விலக்கி வைக்கும் ‘ஜனநாயகம்’. சுயமரியாதைத் திருமணம் பற்றி அண்ணா. புரட்சிக் கவிஞர் நாடகம் குறித்து பெரியார். மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 08032018 இதழ்

நாகை மாவட்டக் கழகத் தலைவர் மகாலிங்கம் துணைவியார் படத்திறப்பு

நாகை மாவட்டக் கழகத் தலைவர் மகாலிங்கம் துணைவியார் படத்திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் நாகை மாவட்ட தலைவர் ம.மகாலிங்கம் துணைவியார் ம.சுந்தராம்பாள் 7.10.2017 அன்று சனிக்கிழமை காலை 9 மணி யளவில்  முடிவெய்தினார். அவருடைய உடல் மறுநாள் 08.10.17 அன்று எந்த வித மூட சடங்குகளுமின்றி எரியூட்டப்பட்டது. தன்னுடைய கண்களை கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய படத்திறத்திறப்பு நிகழ்வில் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

கழகத் தோழர்கள் நேரில் ஆய்வு விழுப்புரம் வெள்ளம்புத்தூரில் நடந்தது என்ன?

கழகத் தோழர்கள் நேரில் ஆய்வு விழுப்புரம் வெள்ளம்புத்தூரில் நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம் திருகோயிலூர் போகும் வழியில் அரகண்டநல்லூரை அடுத்து உள்ள வலதுபுரத்தில் வெள்ளம் புத்தூர் கிராமம், விழுப்புரத்திலிருந்து 56 கிமீ தூரத்தில் உள்ளது .அங்கே தலித் மக்கள் 130 குடும்பங்கள் உள்ளனர்.  வன்னியர் சமூகம் நாயக்கர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகம் மற்றும் மலைவாழ் நரிக் குறவர்கள் 300 குடும்பங்கள்  வசிக் கிறார்கள். சம்பவம் 21-02-2018 அன்று ஏழுமலை (மறைவு) மனைவி ஆராயி அவர் மகன்கள்  பாண்டிதுரை வயது 26, சரத்குமார் வயது 22,  விஜி வயது 19, இவர்கள் மூவரும் பெங்களூரில் வேலை செய்து வந்தனர். அஞ்சலட்சி வயது 17 திருப்பூரில் வேலைசெய்து வந்தவருக்கு 23-02-18 அன்றுதான்  தகவல் தெரிவித்துள்ளனர். தனம் 13 எட்டாம் வகுப்பு படிக்கிறார். சமயன் வயது 9 நான்காம் வகுப்பு. அன்று இரவு ஆராயி தனம் சமயன் கடுமையாக தாக்கப்பட்டு வியாழன் விடியற்காலை  22-02-18 அன்று பக்கத்து வீட்டில் உள்ள தனம்  உடன்படித்த சிறுமி கதவை திறந்து...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (5) ‘சுப்ரபாதம்’ எப்படி யாரால் வந்தது?

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (5) ‘சுப்ரபாதம்’ எப்படி யாரால் வந்தது?

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து… (கடந்த வார தொடர்ச்சி) வைதீக மரபு என்ற பார்ப்பன மரபு தமிழை எப்படி ஊடுருவி அழித்தது என்பதற்கு ஒரு சான்றாக ‘நாலாயிர திவ்ய பிரபந்தத்தை’ சுட்டிக் காட்ட முடியும். தமிழ் ஆழ்வார்களால் பாடப்பட்ட நான்காயிரம் பக்திப் பாடல்களின் தொகுப்பு இது. திவ்யம் என்றால் ‘தூய்மை’ என்று பொருள். ப்ரபந்தம் என்றால் ‘திரட்டு’ என்பது பொருள். ‘ஆழ்வார்களின் நாலாயிர அருளிச் செயல்’ என்பதுதான் இந்த நூலுக்கான தமிழ்ப் பெயர். ஆனால் இது ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற சமஸ்கிருதப் பெயருக்கு  மாற்றப்பட்டது. இன்று வரை ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற சமஸ்கிருத பெயரையே தமிழில் எழுதப்பட்ட நான்காயிரம் பாடல் தொகுப்பும் தாங்கி நிற்கிறது. இது...

புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம்  கழக ஏட்டுக்கு 50 சந்தாக்களை வழங்கியது

புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் கழக ஏட்டுக்கு 50 சந்தாக்களை வழங்கியது

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் அதன் அமைப்பாளர் தீனதயாளன், 50 புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கான சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளரிடம் இயக்கம் சார்பில் அளித்தார். 24.2.2018 அன்று பெரியார்-அம்பேத்கர்-சிங்காரவேலனார் நினைவு நாள் பொதுக் கூட்டம், பேரணி புதுச்சேரியில் எழுச்சியுடன் நடந்தது. பேரணி முடிந்து ‘சதேசி மில் வாயில்’ (பேருந்து நிலையம் அருகே) பொதுக் கூட்டம், லெனின் சுப்பையா மற்றும் மக்கள் மன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் உரையாற்றினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

மார்ச் 18இல் கோவையில் பாரூக் நினைவு நாள் குருதிக் கொடை – கருத்தரங்கு

மார்ச் 18இல் கோவையில் பாரூக் நினைவு நாள் குருதிக் கொடை – கருத்தரங்கு

16.03.2018 அன்று இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக் முதலாமாண்டு நிகழ்வுகள் 18.03.2018 அன்று நடைபெறு கிறது கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலளார் விடுதலை இராசேந்திரன், முன்னிலை யிலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகிறது. முதல் நிகழ்வாக மனிதநேயன்  பாரூக் குருதிக் கொடை முகாம் நிகழ்கிறது. முகாமை இரசீதா பாரூக் துவக்கி வைக்கிறார். அன்று மாலை 4 மணியளவில் ‘வரலாற்றில் மதங்களின் வன்முறைகள்’ என்கிற கருத்தரங்கம் நடைபெறுகிறது. நம் இரத்ததில் ஜாதி மத பேதமில்லை; ஏற்ற தாழ்வு இழிவுமில்லை; உயர்தவன் தாழ்ந்தவன் எண்ணமில்லை. அனைவரும் வருக குருதிக் கொடை முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9677404315 முகாம் நடைபெறும் இடம்: அண்ணாமலை அரங்கம்; நாள் – 18.03.2018 காலை 8:30 மணி முதல்; அனைவருக்கும் சான்றிதழ் உடனே வழங்கப்படும். ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம்,  கோவைமாவட்டம். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் கூடியது

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் கூடியது

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவல கத்தில் 04.03.2018 மாலை 6 மணிக்கு “நிமிர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு கலந்துரையாடல் கூட்டம் இரா.உமாபதி (தென் சென்னை மாவட்டச் செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத் தார். ‘நிமிர்வோம்’ ஏப்ரல் மற்றும் மே மாத இதழ்களைப் பற்றிய தங்களுடைய கருத்துகளை தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், ராஜீ, சங்கீதா, ரவிபாரதி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். ஒவ்வொரு தோழரும் ஒரு கட்டுரையை மய்யப் பொருளாக எடுத்துக் கொண்டு அதன் உள்ளடக்கத்தோடு தங்கள் கருத்துகளையும் இணைத்து சிறப்பாக உரையாற்றினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “திராவிடம் தமிழ்த் தேசியம்” என்ற தலைப்பில் விரிவாகப் பேசினார். தோழர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம்: கழகம் ஆதரவு

சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம்: கழகம் ஆதரவு

காஞ்சிபுரம் – திருவள்ளூரில் புதிய சட்டக் கல்லூரி திறப்பதை காரணம் காட்டி 126 ஆண்டு காலம் பாரம்பரிய மிக்க சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை மூடுவதற்கு முயற்சிக்கும் அரசைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டக் கல்லூரி மாணவர்களின் இந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு 03.03.2018 காலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இராஉமாபதி, வழக்கறிஞர் திருமூர்த்தி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி சிவா ஆகியோர் நேரில் சென்று மாணவர்களின் போராட்டத்திற்கு கழக ஆதரவை தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

நீட்டை இரத்து செய்ய உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்தல்

நீட்டை இரத்து செய்ய உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்தல்

உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் உலகத் தமிழ் அமைப்பு நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தியுள்ளது. மார்ச் 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் அமைப்பு சார்பில் பேசிய அதன் தலைவர் முனைவர் வை.க. தேவ்டென்னசி நீட் தேர்வு முறையினால் உருவாகும் பாதிப்புகளை விளக்கினார். நீதியரசர் அரி. பரந்தாமன் பேசுகையில், “ஆந்திராவில் நீட்டை நீக்கக் கோரி அம்மாநில அரசே முழு நாள் அடைப்பு நடத்தியதையும், அதைத் தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபுவை மோடியும், அமீத்ஷாவும் பேச்சு நடத்த அழைத்துள்ளதையும் சுட்டிக் காட்டி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் சோம்பிக் கிடக்கிறார்கள்?அவையில் கொந்தளித்திருக்க வேண்டாமா” என்று கேட்டார். கழக சார்பில் தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி கலந்து கொண்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவவனர் வேல் முருகன், தியாகு, மருத்துவர் ரவிந்திரநாத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

பார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி ஊழல் கொள்ளை

பார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி ஊழல் கொள்ளை

பஞ்சாப் தேசிய வங்கியின் நிர்வாக இயக்குனர் உஷா ஆனந்த சுப்ரமணியம் என்ற பார்ப்பனப் பெண் அதிகாரியும், அய்.சி.அய்.சி. வங்கி நிர்வாக இயக்குனர் என்.எஸ். கண்ணன் என்ற பார்ப்பனரும் இப்போது சி.பி.அய். விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட் டிருக்கிறார்கள். திருமதி உஷா அனந்த சுப்ரமணியம் இப்போது அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குனர் தேசிய மய வங்கிகளின் தலைமைப் பொறுப் பிலுள்ள பார்ப்பன அதிகாரிகள், தொழிலதிபர் களுக்கு வழங்கிய கடன்கள் குறித்து ஆய்வு செய்ய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களில் பொது மேலாளர் – நிர்வாக இயக்குனர் போன்ற உயர்பதவிகளில் 99 சதவீதம் பேர் பார்ப்பனர்கள் ஒரு சதவீதம் பேர்கூட பிற்படுத்தப் பட்டவரோ, தாழ்த்தப்பட்டவரோ இல்லை என்று 2017 ஜனவரியில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் கூறுகிறது. மற்றொரு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வெளிக் காணரப்பட்டுள்ள ஒரு தரவின்படி, 2017 மார்ச் 31உடன் முடியும் கடந்த...

முதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து சமூக நீதிக்கு மற்றுமொரு பேரிடி

முதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து சமூக நீதிக்கு மற்றுமொரு பேரிடி

மருத்துவக் கல்வி விஷயத்தில் தொடர்ந்து சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, இப்போது ஓசையில்லாமல் இன்னொரு துரோகத்தை செய்திருக்கிறது. நடப்பாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இது மிக கடுமையாக கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்கள்(மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டத்தின்படி அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27ரூ இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் இந்த ஒதுக்கீடு பொருந்தும். ஆனால், நடப்பாண்டில் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு எந்த அறிவிப்பும் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு...

2019 தேர்தலுக்காக மத வெறியைத் தூண்ட திட்டம் மீண்டும் ‘இராமராஜ்ய ரத யாத்திரை’

2019 தேர்தலுக்காக மத வெறியைத் தூண்ட திட்டம் மீண்டும் ‘இராமராஜ்ய ரத யாத்திரை’

இந்தியாவில் ‘இராமராஜ்யம்’ அமைப்பதற்கும், அயோத்தியில் இராமன் கோயில் கட்டுவதற்கும் ‘சங்பரிவார்’, ‘இராமராஜ்ய யாத்திரை’ ஒன்றைத் துவக்கி இருக்கிறது. இது “அரசியல் யாத்திரையல்ல; ஆன்மிக பரப்புரை யாத்திரை” என்று அறிவித்துக் கொண்டு கடந்த பிப்.13ஆம் தேதி (மகாசிவராத்திரி நாள்) உ.பி. மாநிலம் அயோத்தியிலிருந்து புறப்பட்டுள்ளது. 41 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரை, 6 மாநிலங்களில் 6000 கிலோ மீட்டர் ‘இராமராஜ்ய’ பிரச்சாரம் செய்து மார்ச் 25 அன்று தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்தில் நிறைவடைகிறது. விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் சம்பத்ராய் என்பவர் தொடங்கி வைத்துப் பேசுகையில், “இந்த யாத்திரையை ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத் ஒருங்கிணைக்கவில்லை” என்று ‘எங்கப்பா குதிருக் குள் இல்லை’ என்ற வகையில் பேசி இருக்கிறார். ‘ஸ்ரீ இராமதாச மிஷன் யுனிவர்சல் சொசைட்டி’ என்ற அமைப்பு இதை நடத்துகிறதாம். (கேரளா – மகாராட் டிரத்தில் மட்டும் செயல்படும் அமைப்பு இது) தேர்தலை சந்திக்க விரும்பும் ம.பி.., கருநாடக மாநிலங்களில் இந்த...

கொளத்தூர் படிப்பகத்தில் பெண்கள் சந்திப்பு

கொளத்தூர் படிப்பகத்தில் பெண்கள் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கொளத்தூர் படிப்பகத்தில் 24.2.2018 ஞாயிறு அன்று பெண்கள் சந்திப்பு காயத்ரி தலைமையில் நடந்தது. கொளத்தூர் மேட்டூர் நங்கவள்ளி காவலாண்டியூர் திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண் டனர். கூட்டத்தில் சர்வதேச பெண்கள் தின வரலாறு குறித்தும் பெண்கள் தின விழா நடத்துவது குறித்தும் கலந்துரையாடப் பட்டது. இயக்கப் பணிகளில் பெண் களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்தும் பேசப்பட்ட து   தோழர்கள் சூரிய குமார் டைகர் பாலன் நங்கவள்ளி கிருஷ்ணன் கொளத்தூர் பரத் , ஆனந்த் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களைச் செய்தனர்.தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி கலந்து கொண்டார். தோழர்கள் அனிதா, சுதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

தலைமைக் கழகத்தில்  ஜாதி – தாலி மறுப்பு மணவிழா

தலைமைக் கழகத்தில் ஜாதி – தாலி மறுப்பு மணவிழா

சென்னை திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையத்தில் 26.2.2018 பகல் 12 மணியளவில் ஜாதி-தாலி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த விழா சிறப்புடன் நடைபெற்றது. சென்னை எம்.கணேசன்-மீனாட்சி ஆகியோரின் மகன் ஜி. இராமகிருஷ்ணன், சென்னை சைதாப்பேட்டை ஜே.ஏ.பார்த்திபன்-ஜூலி ஆகியோரின் மகள் பி.நிவேதா ஆகியோரின் மணவிழாவை உறுதி ஏற்புக் கூறி பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நடத்தி வைத்தார். தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், செயலாளர் இரா. உமாபதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், வடசென்னை மாவட்டச் செயலாளர் செந்தில், உள்ளிட்ட தோழர்களும் நண்பர்களும் திரண்டிருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 01032018 இதழ்

சுகாதாரக் கேடு: மயிலைப் பகுதி தோழர்கள் புகார் மனு

சுகாதாரக் கேடு: மயிலைப் பகுதி தோழர்கள் புகார் மனு

சென்னை மயிலாப்பூர் குடிசை மாற்று வாரியம் பகுதி பிள்ளையார் தெருவில் பல மாதங்களாக சாக்கடை நீர் வெளியேறி பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு, பல்வேறு நோய்கள் போன்றவைகளுக்கு அவதிக்குள்ளாகி வருகிறது. இந்த அடிப்படை பிரச்சனையை உடனடியாக தீர்வு காண கோரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற் பொறியாளரிடம் 05.02.2018 அன்று மயிலாப்பூர் பகுதி தலைவர் இராவணன் மயிலாப்பூர் தோழர்களுடன் கோரிக்கை மனுவை அளித்தார். உடனடி தீர்வு காணா விடில் பகுதி மக்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

கோவையில் கழக சார்பில் மார்ச் 18இல் பாரூக் நினைவேந்தல்

கோவையில் கழக சார்பில் மார்ச் 18இல் பாரூக் நினைவேந்தல்

கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் பிப்.11 அன்று தோழர் கலை அலுவலகத்தில் நடைபெற்றது. மதவெறிக்கு பலியான ஃபாரூக் நினைவு நாளை மார்ச் 18 அன்று காலை பாரூக் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்கம் செலுத்தி, அன்று கருத்தரங்கமும் குருதிக் கொடையும் வழங்க முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, விஜயக்குமார் (இணைய தள பொறுப்பாளர்), ரகுபதி, ஸ்டாலின், ராஜா, திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் முத்து, மாநகர அமைப்பாளர் ஜெயந்த், விஜயகுமார், உசேன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

சென்னையில் காதலர் தினம்

சென்னையில் காதலர் தினம்

உலக காதலர் தினமான 14.02.2018  அன்று இந்து மக்கள் கட்சி அமைப்பினர் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காதலர் தினத்தை கொண்டாடக் கூடாது என சென்னை கடற்கரையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த இருப்பதாக இருந்த அறிவிப்பையடுத்து, சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் இரண்யா, பகுத்தறிவாளன், யுவராஜ், பிரபாகரன், காவை கனி, மா.தேன்ராஜ் போன்றோர் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் காதலர்களுக்கு சாக்லெட், துண்டறிக்கை வழங்கி காதலர் தினத்தை வரவேற்றனர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

மார்ச் 12இல் பெரியாரிய பெண்கள் மாநாடு-திருப்பூர்

மார்ச் 12இல் பெரியாரிய பெண்கள் மாநாடு-திருப்பூர்

2018க்கான திருப்பூர் திவிக செயல் திட்டம் குறித்து விவாதிக்க மாவட்ட கலந்துரையாடல் வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் 11/2/2018 மாலை 5 மணிக்கு மாநகர் அமைப் பாளர் முத்து தலைமையில் நடந்தது. நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி உள்ளிட்ட 15 தோழர்கள் கலந்து கொண்டனர் கழக செயல்பாடுகளை 2018 ஆம் வருடம் மக்களிடம் எவ்வாறு எடுத்து செல்வது, தமிழ்நாடு மாணவர் கழகம் கட்டமைப்பை வலுப்படுத்துவது போன்ற செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டன. கருணாநிதி 10 இளைஞர்களுக்கு பறையடிக்கப் பயிற்சித் தர முன் வந்தார். மார்ச் 12இல் பெரியாரிய பெண்கள் மாநாடு சிறப்புடன் நடந்தேற ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டது. இராயபுரத்தில் சிறப்பாக மாநாட்டை நடத்துவது எனவும் பெரியார்சிலை முதல் மாநாட்டு திடல் வரை அணிவகுப்பு ஊர்வலம் செல்லவும் முடிவெடுக்கப்பட்டது. தோழர் பார்வதி நன்றியுரையுடன் 7:30 மணிக்கு கலந்துரையாடல்...

வடசென்னை மாவட்ட  கலந்துரையாடல்

வடசென்னை மாவட்ட கலந்துரையாடல்

வடசென்னை மாவட்ட  திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 25.02.2018  அன்று மாலை 6  மணியளவில் பெரம்பூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட செயலாளர் இரா. செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஏசு குமார் முன்னிலை வகிக்க,  நா.பாஸ்கர், நாகேந்திரன் , ராஜீ, சங்கீதா, சங்கவி , தினேஷ், இரமேசு, பிரசாந்த், மோகன்ராஜ், சதிசு, சரவணன், தீபக், இளவரசன், சாரதி, செல்வம் என அனைத்துத் தோழர்களும் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர். ஏப்ரலில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. டாக்டர் அம்பேத்கரின் இட ஒதுக்கீடு சட்டங்களால் கிடைத்த பலன்களை சிறு நூலாக பத்தாயிரம் பிரதிகள் தயாரித்து மக்களிடமும் கல்லூரி மாணவர்களிடமும் பிரச்சாரமாக கொண்டு சேர்ப்பதென முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வட சென்னையில் தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பரப்புரைப் பயணம் நடத்துவதென முடிவு செய்யப் பட்டது. நா. பாஸ்கர் நன்றி கூறினார் ....

விழுப்புரம் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்  விழுப்புரம் மாவட்ட கடுவனூர் கிராமத்தில் 11-02-2017 அன்று நடத்தப் பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர். மா.குப்புசாமி தலைமை வகித்தார். கடந்த  2017  மே 21 முதல்  11-02-2018 வரை இயக்கம் சார்பாக மாவட்ட அளவில் நடத்தப்பட்ட  செயல் பாடுகள் குறித்தும் – போராட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மற்றும் ‘நிமிர்வோம்’ சந்தா சேர்பது சார்பாகவும் பேசப்பட்டன. வருகின்ற ஏப்ரல் 14- அன்று அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டும் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் பிறந்த நாள் நினைவாகவும் கழம் சார்பாக பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஒரு வார அளவில் தமிழகத்தின் தனித்தன்மையை காப்போம் என்ற தலைப்பில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 01032018 இதழ்

களப்பணியில் கழகத் தோழர்கள் தூத்துக்குடி மாணவர்களிடம் வரவேற்பைப் பெற்ற கழக துண்டறிக்கை

களப்பணியில் கழகத் தோழர்கள் தூத்துக்குடி மாணவர்களிடம் வரவேற்பைப் பெற்ற கழக துண்டறிக்கை

தூத்துக்குடி மாவட்ட மாணவர் கழகம் சார்பாக 21.02.2018 அன்று  “மாணவர்களே! இருள் சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்” எனும் தலைப்பில் தமிழக மாணவர்கள் எவ்வாறு இந்துத்துவ மோடி அரசால் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான அரசுப் பணிகள் எவ்வாறு பிறருக்கு தாரைவார்க்கப்படு கின்றன, நமக்கான வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெளி மாநில மாணவர்கள் பெரும்பான்மையாக பங்கெடுக்கும் அளவிற்கு கதவைத் திறந்து விட்டுருக்கிற பா.ஜ.க. எடுபிடி அரசான தமிழக அரசின் நய வஞ்சகத்தை துண்டறிக்கையாக தயார் செய்து அதை தூத்துக்குடியில் அமைந்துள்ள கல்லூரி மாணவர் களிடம் பரப்பி விழிப்புணர்வை உண்டாக்கும் முயற்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. பல மாணவர்கள் இந்த துண்டறிக்கையை படித்துவிட்டு தங்களுக்குத் தோன்றிய சந்தேகங்களை தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் பிரபாகரன் போன்றவர்களிடம் கேட்டு அறிந்த...

சென்னை கருத்தரங்க உரை: குறுந்தகடு தயார்!

சென்னை கருத்தரங்க உரை: குறுந்தகடு தயார்!

30.1.18 அன்று சென்னையில் கழகம் நடத்திய ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சுந்தரவள்ளி, ஆய்வாளர் வாலாஜா வல்லவன் ஆற்றிய உரை – குறுந்தகடாக தயாராகியுள்ளது. நன்கொடை : ரூ.100 தொடர்புக்கு :  72992 30363 / 98414 89896 பெரியார் முழக்கம் 01032018 இதழ்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (4) சங்கராச்சாரிகள் கர்ப்பகிரகத்துக்குள் நுழைவதே வேத மரபுக்கு எதிரானதுதான்!

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (4) சங்கராச்சாரிகள் கர்ப்பகிரகத்துக்குள் நுழைவதே வேத மரபுக்கு எதிரானதுதான்!

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து… (கடந்த வார தொடர்ச்சி) ஆண்டாள் தேவதாசி மரபில் வந்தவராக இருக்கலாம் என்று கூறியதற்கே ஆண்டாளை அவமதித்து விட்டதாக துள்ளிக் குதிக்கும் ஜீயர் – வைணவப் பார்ப்பனர்களுக்கு அவர்களின் வேதமரபு குறித்து சிலவற்றைக் குறிப்பிட்டாக வேண்டும். இதையெல்லாம் அவர்கள் பேச வைத்து விட்டார்கள். பெரியார் இயக்கத்தவர்களாகிய நாங்கள். அந்த ‘ஆபாசங்களை’ எல்லாம் இனியும் பேச வேண்டிய அவசியமில்லை என்று கடந்து போய்விட்டோம். ஆனால் எங்களை மீண்டும் வேத மரபின் வண்டவாளங்களைப் பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அவர்களே உருவாக்கியிருக்கிறார்கள். வேதங்கள் நான்கு. அய்ந்தாவதாக ஒரு வேதம் உண்டு. அதை ‘விவேக சாகரம்’ என்று கூறுகிறார்கள். அந்த ‘விவேக சாகரம்’ என்றால் என்ன என்பதை வைதீகத்தில்...

கமலஹாசனின் ‘மய்யம்’

கமலஹாசனின் ‘மய்யம்’

மக்களுக்கு நீதி கேட்கும் மய்யத்தோடு மதுரையில் களமிறங்கி யிருக்கிறார் நடிகர் கமலஹாசன். கட்சித் தொடங்கும் உரிமை அவருக்கு உண்டு. எதிர்காலத்தில் அவரின் செயல்திட்டங்களே  வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும்.  அவரது ‘நிலைப்பாடுகள்’ மற்றும் கொள்கை திசை வழி இனிமேல்தான் தெரியும். ஆனாலும், “நான் இடது சாரியுமல்ல; வலதுசாரியுமல்ல; இரண்டுக்கும் ‘மய்யமானவன்’ என்று அவர் தன்னை  அடையாளப் படுத்தியிருக்கிறார். தத்துவங்களில் ‘மய்யம்’ என்பது வேறு; நிகழ்வுகளில் ‘மய்ய’ நிலைப்பாடு எடுப்பது என்பது வேறு. இரண்டுக்குமிடையிலான குழப்பத்தில் கமலஹாசன் மூழ்கியிருப்பதாகவே தெரிகிறது. காஞ்சி சங்கராச்சாரி, தமிழ்த் தாய் வாழ்த்துக்கு ஏன் மரியாதை காட்டவில்லை என்ற கேள்விக்கு சங்கராச்சாரி அப்படி செய்திருக்கக் கூடாது என்றோ, எழுந்து நிற்காதது அவரது உரிமை என்றோ கூறவில்லை. கமலகாசனின் ‘மய்ய’மான கருத்து, ‘கண்ட கண்ட இடங்களில் தமிழ்த் தாய் வாழ்த்துகளைப் பாடக் கூடாது’ என்பதாகவே இருந்தது. ஆண்டாள் தேவதாசி மரபில் வந்திருக்கலாம் என்று பேசிய கவிஞர் வைரமுத்துக்கு ஜீயர்கள், வைணவப் பார்ப்பனர்களிடமிருந்தும்,...

அரசே! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடு! விழுப்புரத்தில் தலைவிரித்தாடும்  ஜாதி வன்கொடுமை

அரசே! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடு! விழுப்புரத்தில் தலைவிரித்தாடும் ஜாதி வன்கொடுமை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்துக் குட்பட்ட கிராமங்களில் தலித் குடும்பங்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல்கள், ஜாதி ஆதிக்கச் சக்திகளால் தொடர்ந்து நடப்பது அதிகரித்து வருகிறது. வழக்கம்போல காவல்துறை தலித் மக்கள் மீதான தாக்குதல் என்றால் அலட்சியம் காட்டுவது போலவே இதிலும் செயல்பட்டு வருகிறது. தற்போது திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்த தலித் குடும்பத்தைச் சார்ந்த ஆராயி (4), அவரது மகள் தனம் (15), மகன் சமையன் (10) ஆகியோர் மீது மர்ம நபர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவன் சமையன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்துவிட்டார். உயிருக்குப் போராடிய நிலை யில் ஆராயியையும் அவரது மகள் தனத்தையும் முதலில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்து, அங்கு பிராணவாயு (ஆக்ஸிஜன்) இல்லாததால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மருத்துவ மாணவர்களின் மர்ம மரணங்களுக்குக் காரணம் யார்?

மருத்துவ மாணவர்களின் மர்ம மரணங்களுக்குக் காரணம் யார்?

சண்டிகாரில் உள்ள பி.ஜி.அய்.எம்.இ.ஆர் – மத்திய அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேல் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்ற தமிழ்நாட்டு மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் யு.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்றுவந்த தமிழக மாணவர் சரத்பிரபுவின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. 2016-ல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த தமிழக மருத்துவ மாணவர் சரவணன் மர்ம மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி விலகாத நிலையில் நடந்திருக்கும் மற்றொரு சம்பவம் இது. சரவணன் போலவே சரத்பிரபுவும் விஷ ஊசி செலுத்தப்பட்டே இறந்திருக்கிறார். சரவணன் மரணத்தைப் பொறுத்தவரை, அது ஒரு தற்கொலை என்றே எய்ம்ஸ் நிர்வாகமும், டெல்லி காவல் துறையும் சொல்லிவந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவுகள், அது தற்கொலை அல்ல என்பதை உறுதிப்படுத்தின. இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேறு விஷயம்! சில நாட்களுக்கு முன்பு,...

அய்.அய்.டி.யில் சமஸ்கிருதத்தில் கடவுள் வாழ்த்தா?

அய்.அய்.டி.யில் சமஸ்கிருதத்தில் கடவுள் வாழ்த்தா?

சென்னை அய்.அய்.டி.யில் மத்திய அமைச்சர்கள் நித்தின் கட்காரி, பொன். இராதா கிருஷ்ணன் பங்கேற்ற விழாவில், ‘மகாகணபதி’ என்ற சமஸ்கிருதப் பாடல் இறை வாழ்த்துப் பாடலாக பாடப்பட் டுள்ளது. வழக்கமாக அரசு விழாவில் பாட வேண்டிய தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டுள்ளது. சமஸ் கிருதத்தைவிட மூத்த மொழி தமிழ் என்று அண்மையில் மோடி அளித்த ஒரு பேட்டிக்காக மோடிக்கு பாராட்டு மாலை களைத் தூக்கிக் கொண்டு ஒரு அணியே நீண்ட வரிசையில் நின்றது. இப்போது மோடி ஆட்சியின் உண்மையான முகம் ஒரு வாரத்துக் குள்ளேயே கிழிந்து தொங்குகிறது. மாணவர்கள் தாமாகவே முன் வந்து சமஸ்கிருதப் பாடல்களைப் பாடினார்கள் என்று அய்.அய்.டி. இயக்குனரான பாஸ்கர் இராமமூர்த்தி விளக்கமளித்திருக் கிறார்.  மாணவர்கள் தாமாக முன் வந்து தான் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தைத் தொடங் கினார்கள்.  அதை மட்டும் ‘இராம மூர்த்திகள்’ தடை செய்தது ஏன்? மாணவர்கள் தாமாகவே முன் வந்து அய்.அய்.டி. வளாகத்தில் மாட்டுக்கறி விருந்து...

திருப்பூர் இலட்சுமிநாதன் முடிவெய்தினார்

திருப்பூர் இலட்சுமிநாதன் முடிவெய்தினார்

திருப்பூரில் பெரியாரைப் பேணிய குடும்பம் தோழர் அருணாசலம் அவர்களின் மகள் இலட்சுமி நாதன் (93) பிப்ரவரி 9, மாலை 3 மணிக்கு பெரியார் காலனியில் உள்ள அவரின் இல்லத்தில் இயற்கை எய்தினார். கடல் கடந்து இலங்கை சென்று தன் உழைப்பால் ஜவுளி வியாபாரத்தை கொழும்பு மற்றும் மதுரையில் நிறுவிய அருணாசலம் , இளவயது முதல்கொண்டே பெரியாரிய கொள்கையில் நாட்டம் கொண்டு குடிஅரசு பத்திரிக்கையை தொடர்ச்சியாக படித்து தன் குடும்பத்தார் அனைவரையும் பெரியாரிய வாழ்க்கை முறைக்கு  திருப்பினார். மூத்த மகனின் சுயமரியாதை திருமணத்தை திருப்பூரில் தந்தை பெரியாரைக் கொண்டு மிக சிறப்பாக நடத்தினார். அவரின் இரு மகள்களில் ஒருவரான இலட்சுமி நாதன், பெரியார் திருப்பூர் வரும்போதெல்லாம் அவருக்கு பிடித்தமான பிரியாணி செய்து பெரியாருக்குக் கொடுத்து உபசரிப்பார். 1945 மதுரை சுயமரியாதை மாநாட்டில் குடும்ப சகிதம் கருப்பாடை அணிந்து கலந்துகொண்டு  கொள்கைத் தூணாய் இருந்தவர். சுயமரியாதை வாழ்வின் அங்கமாய் தன் இரு மகன்களுக்கும் இரணியன்,...

கழகம் எடுத்த  தமிழர் திருநாள் எழுச்சி

கழகம் எடுத்த தமிழர் திருநாள் எழுச்சி

கடலூர் : கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பாக 2018ஆம் ஆண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு  மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் ஓட்டப் பந்தயம், கோ-கோ போன்ற எண்ணற்ற போட்டிகள், காவல் துறையின் எதிர்ப்பை மீறி, ஒலிபெருக்கி அனுமதி மறுத்த போதும் அதை பொருட்படுத்தாது நடத்தியே தீருவோம் என்று நமது தோழர்களும், கிராம பொதுமக்களும், தீர்மானம் போட்டு சிறப்பாக நடத்தி முடித்தனர். 16.01.2018 அன்று இரவு பரிசளிப்பு விழா நடைபெற்று விழா இனிதே முடிவுற்றது. விழாவை முன்னின்று மிகச் சிறப்பாக நடத்திய திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நட. பாரதிதாசன் (மாவட்டச் செயலாளர்), நட. பாபு அம்பேத்கர், பாலமுருகன் சிலம்பரசன், மற்றும் தமிழ்நாடு  மாணவர் கழகத் தோழர்கள் பாலாஜி, தினேஷ், மோகன், மணிகண்டன் ஆகியோர் முன்னின்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். பேராவூரணி :  போராட்டப் பண்பே தமிழர்களின்...

கொளத்தூர் கழக செயல் வீரர் டைகர் பாலன் இல்ல மண விழா

கொளத்தூர் கழக செயல் வீரர் டைகர் பாலன் இல்ல மண விழா

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர், புலிகள் மின்கலப் பணி மையம் டைகர் பாலு – ஜோதிமணி இணையரின் மகள் ஜோ.பா. ஓவியா – கோபிச் செட்டிப்பாளையம் குணசேகரன்- உமா இணையரின் மகன் கோ.கு.முகிலன் ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை இணையேற்பு விழா, 14-2-2014 அன்று காலை 11-00 மணிக்கு, கொளத்தூர் எஸ்.எஸ்.மகால் திருமண மண்டபத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடந்தேறியது. சேலம் மாவட்ட தி.வி.க. தலைவர் கொளத்தூர் சூரியகுமார் வரவேற்புரை ஆற்றினார். தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி, வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறச்செய்து நிகழ்த்திவைத்தார். த.பெ.தி.க. அமைப்புச் செயலாளர் கோவை. வெ. ஆறுச்சாமி, தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கோபி கலைக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் (ஓய்வு) பேராசிரியர் செ.சு. பழனிசாமி, கோபி மாவட்ட தி.க. தலைவர் யோகானந்தம், திண்டுக்கல் சம்பத், தூத்துக்குடி பால் பிரபாகரன், கோபி ம.தி.மு.க....

வேத மரபைத் தோலுரித்து, விடுதலை இராசேந்திரன் பேச்சு (3) ‘நாத்திகர்’களுக்கு சிகிச்சைத் தரக் கூடாது என்றவர் சங்கராச்சாரி

வேத மரபைத் தோலுரித்து, விடுதலை இராசேந்திரன் பேச்சு (3) ‘நாத்திகர்’களுக்கு சிகிச்சைத் தரக் கூடாது என்றவர் சங்கராச்சாரி

 ‘சதி’ நெருப்பில் பார்ப்பனர் தள்ளிய பெண்ணை மீட்ட பிரிட்டிஷ் அதிகாரி ‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து… (கடந்த வார தொடர்ச்சி) பிரிட்டிஷ் ஆட்சியில் சமஸ்கிருதத்துக்கு மட்டும் தனியே கல்லூரி தொடங்க பார்ப்பனர்கள் மனு தந்ததையும் அதற்கு இராஜாராம் மோகன்ராய் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் குறிப்பிட்டோம். இது குறித்து பல ஆண்டுகாலம் விவாதங்கள் நடந்தன. கடைசியில் பிரிட்டிஷ் அரசு சமஸ்கிருதக் கல்வித் திட்டத்தைக் கைவிட்டது. இதில் உறுதியாக செயல்பட்டவர். அப்போது  பிரிட்டிஷ் அமைச்சரவையில் சட்டக் குழு உறுப்பினராக இருந்த மெக்காலே தான், 1835ஆம் ஆண்டு எத்தகைய கல்வியை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்று அவர் முன் வைத்த கல்விக் குறிப்பு ஆவணம், வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. மெக்காலே ஆவணம் இவ்வாறு...

மேட்டூரில் காதலர் நாளில் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

மேட்டூரில் காதலர் நாளில் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

உலக காதலர் தின நாளில் இந்து மற்றும் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் காதலர்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக காதலர்களை கண்டால் நாங்கள் தாலி கட்ட சொல்லுவோம் என்று அறிக்கை விட்டிருந்தனர்.  அதனால்  14.02.2018 அன்று தோழர்கள் திராவிடன் பரத் (கொளத்தூர்), கண்ணன், சந்திரசேகர் (நங்கவள்ளி) ஆகியோர் ஒருங்கிணைப்பில் மேட்டூர் அணைப் பூங்காவில் காதலர்கள் வரவேற்பு பதாகையுடன் நின்று பூங்காவிக்கு வந்த காதலர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் மலர், இனிப்பு மற்றும்  விழிப்புணர்வு துண்டறிக்கை ஆகியவை விநியோகித்தனர். நிகழ்வில் வைரவேல் மாரியப்பன் (நாமக்கல்  மாவட்ட  அமைப்பாளர்), கிருட்டிணன் (சேலம் மாவட்ட அமைப்பாளர்), முகில்ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர்) உள்ளிட்ட 30 தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 22022018 இதழ்

சூளுரைத்தார், கவிஞர் வைரமுத்து வடமொழி எதிர்ப்போடு தமிழின விடுதலையை முன்னெடுப்போம்

சூளுரைத்தார், கவிஞர் வைரமுத்து வடமொழி எதிர்ப்போடு தமிழின விடுதலையை முன்னெடுப்போம்

“வடமொழி எதிர்ப்பும் இனவிடுதலை இயக்கமும் மீண்டும் புத்துயிர் பெறச் செய்வோம்” என்று சூளுரைத்தார் – கவிஞர் வைரமுத்து. ஆண்டாள் தேவதாசி மரபில் வந்தவராக இருக்கலாம் என்று ஓர் ஆய்வாளர் கருத்தை மேற்கோள் காட்டினார் என்பதற்காக, கவிஞர் வைரமுத்துவை பார்ப்பனர்கள் மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். எச். ராஜா என்ற பார்ப்பனர், வைரமுத்துக் குடும்பத்தினரை இழிவுபடுத்தினார். அய்யங்கார் பார்ப்பனர்கள், வைரமுத்து, திருவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்து ஆண்டாளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திறந்தமேனியுடன் வீதிக்கு வந்து போராடினார்கள். ‘தினமணி’ ஆசிரியரான ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் வைத்தியநாதனுடன் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கம் காட்டி வந்தார் வைரமுத்து.  கட்டுரை வாசிப்பு நிகழ்ச்சிகளை பா.ஜ.க.வின் ஊதுகுழலான ‘தினமணி’யே ஏற்பாடு செய்து அந்தக் கட்டுரைகளை முழுமையாக ‘தினமணி’ வெளியிட்டு வந்தது. தருண் விஜய் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர், திருக்குறள் பெருமை பேசினார் என்பதற்காக அவருக்கு தமிழகத்தில் மேடை அமைத்துக் கொடுத்தார் வைரமுத்து. பா.ஜ.க.விடம் வைரமுத்து காட்டிய ‘நேசக்கரம்’ நீண்ட நாள் நிலைக்கவில்லை. ‘ஆண்டாள்’...