புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் கழக ஏட்டுக்கு 50 சந்தாக்களை வழங்கியது

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் அதன் அமைப்பாளர் தீனதயாளன், 50 புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கான சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளரிடம் இயக்கம் சார்பில் அளித்தார். 24.2.2018 அன்று பெரியார்-அம்பேத்கர்-சிங்காரவேலனார் நினைவு நாள் பொதுக் கூட்டம், பேரணி புதுச்சேரியில் எழுச்சியுடன் நடந்தது. பேரணி முடிந்து ‘சதேசி மில் வாயில்’ (பேருந்து நிலையம் அருகே) பொதுக் கூட்டம், லெனின் சுப்பையா மற்றும் மக்கள் மன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் உரையாற்றினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 08032018 இதழ்

You may also like...