கொளத்தூர் படிப்பகத்தில் பெண்கள் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கொளத்தூர் படிப்பகத்தில் 24.2.2018 ஞாயிறு அன்று பெண்கள் சந்திப்பு காயத்ரி தலைமையில் நடந்தது. கொளத்தூர் மேட்டூர் நங்கவள்ளி காவலாண்டியூர் திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண் டனர். கூட்டத்தில் சர்வதேச பெண்கள் தின வரலாறு குறித்தும் பெண்கள் தின விழா நடத்துவது குறித்தும் கலந்துரையாடப் பட்டது. இயக்கப் பணிகளில் பெண் களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்தும் பேசப்பட்ட து   தோழர்கள் சூரிய குமார் டைகர் பாலன் நங்கவள்ளி கிருஷ்ணன் கொளத்தூர் பரத் , ஆனந்த் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களைச் செய்தனர்.தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி கலந்து கொண்டார். தோழர்கள் அனிதா, சுதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

பெரியார் முழக்கம் 01032018 இதழ்

You may also like...