கோவையில் கழக சார்பில் மார்ச் 18இல் பாரூக் நினைவேந்தல்

கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் பிப்.11 அன்று தோழர் கலை அலுவலகத்தில் நடைபெற்றது. மதவெறிக்கு பலியான ஃபாரூக் நினைவு நாளை மார்ச் 18 அன்று காலை பாரூக் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்கம் செலுத்தி, அன்று கருத்தரங்கமும் குருதிக் கொடையும் வழங்க முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, விஜயக்குமார் (இணைய தள பொறுப்பாளர்), ரகுபதி, ஸ்டாலின், ராஜா, திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் முத்து, மாநகர அமைப்பாளர் ஜெயந்த், விஜயகுமார், உசேன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 01032018 இதழ்

You may also like...