பாரதி ராஜா மீது ஏன் வழக்கு? விநாயகன் இறக்குமதி கடவுள் இல்லை என்பதை மறுக்கத் தயாரா?
கடந்த ஜனவரி 18ஆம் தேதி இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் ‘கடவுள்-2’ திரைப்படத் தொடக்க விழாவில் சென்னை வடபழனியில் பேசிய இயக்குனர் பாரதி ராஜா, ‘விநாயகன் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்’ என்று பேசினார். அதற்காக இந்து மக்கள் கட்சி காவல் நிலையத்தில் புகார் கூறி பிறகு உயர்நீதிமன்றத்திலும் மனு போட்டு உயர்நீதி மன்ற உத்தரவின்படி காவல்துறை பாரதி ராஜா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. பாரதி ராஜா பேசியது ‘இந்து’க்களைப் புண்படுத்துகிறதாம். வரலாற்றைக் கூறுவதே மதத்தைப் புண்படுத்துவதாகி விடுமா? கி.பி. 642ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் தமிழ் நாட்டிற்குள் விநாயகன் வழிபாடு நுழைந்தது. ‘வாதாபி’யை ஆண்ட சாளுக்கிய மன்னன் புலிகேசி மீது ‘வாதாபி’க்கு படை எடுத்துச் சென்ற பல்லவ மன்னர் படைத் தளபதி பரஞ்சோதியின் வெற்றிக்குப் பிறகு அவனால் அங்கிருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்ததுதான் ‘விநாயகன் சிலை’. ‘விநாயகனை’ வைத்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அரசியல் ஊர்வலங்களை நடத்திய பாலகங்காதர திலகர்...