Author: admin

ஜாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை !

வாட்ஸ்அப் ஊடகம் மூலம் செங்குட்டுவன் வாண்டையார் என்பவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தூண்டிவிட்டு கலவரத்தை உண்டாக்கும் தீய நோக்கத்தோடும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து,சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து ஜாதி மோதலை உருவாக்கும் முயற்சியாக பேசி வருவதற்காக அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில்கடந்த 23.03.2016 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. ஜாதிவெறியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டதை அடுத்து சென்னை மாவட்டக் கழக செயலாளர் தோழர் உமாபதி மற்றும் கழகத் தோழர் செந்தில் FDL ஆகியோருக்கு ஜாதி வெறியர்கள் அலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். வாட்ஸ் அப் கால், ஸ்கைப்,நெட்கால் வாயிலாக எளிதில் கண்டுபிடிக்க இயலாத வகையில் மறைந்திருந்து கோழைத்தனமாக ஆபாசமாக பேசுவதுதான் இந்த ஜாதி வெறியர்களின் வீரம் போலும்?இதுபோல் ஆபாசமாகவும்,கொலை மிரட்டல்...

ஜாதி வெறியர்களுக்கு எதிராக கழகம் புகார் மனு சென்னை 23032016

வாட்ஸ் அப் வழியாக சட்டவிரோதமாக ஜாதி வெறியைத் தூண்டி, கலவரத்தை உண்டாக்கும் நோக்கோடு ‘தலித் மக்களை தனிமை படுத்த வேண்டும் , அவர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க கூடாது , வேலை கொடுக்க கூடாது , சோற்றுக்கு வழியில்லாமல் மாற்றி நடு தெருவில் நிறுத்த வேண்டும்’ என்று பேசியுள்ள M.R.செங்குட்டுவன் வாண்டையார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன்,தலைமைச் செயலவை உறுப்பினர் தோழர் அய்யனார்,மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி,மாவட்ட தலைவர் தோழர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் தோழர் பிரகாசு,தோழர் செந்தில் FDL,தோழர் செந்தில் உள்ளிட்ட தோழர்கள் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று 23.03.2016 மாலை 03.30 மணியளவில் புகார் மனு அளித்துள்ளனர்.

உடுமலை சங்கர் படுகொலையை கண்டித்து பேராவூரணியில் கண்டன ஆர்ப்பாட்டம் 25032016

இன்று (25.03.2016) மாலை 5 மணிக்கு பேராவூரணியில் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஜாதி மறுப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் ஜாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தோழர் எவிடன்ஸ் கதிர்,தோழர் ஆறு.நீல கண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள்.

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் தேன்கனிகோட்டை 27032016

பொதுக்கூட்டம் ! கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம். நாள் : 27.03.2016. மாலை 4.00 மணி. இடம் : தேன்கனிக்கோட்டை,பேருந்து நிலையம். சிறப்புரை : ”தோழர் கொளத்தூர் மணி,” தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் லோகு.அய்யப்பன், தலைவர்,பாண்டிச்சேரி திராவிடர் விடுதலைக் கழகம். பொதுக்கூட்டம் முன்னதாக ‘புத்தர் கலைகுழு’வினரின் கலைநிகழ்ச்சி நடைபெறும் !  

சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுக – பொதுக்கூட்டம் சென்னை 22032016

“சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுக” என இன்று 22.3.16 மாலை 5 மணிக்கு அம்பேத்கர் திடலில் தோழர் நல்ல கண்ணு தலைமையேற்க தோழர்கள் சுந்தர மூர்த்தி, செந்தில், தெய்வமணி, அருண பாரதி, தமிழ்நேயன், நாகை திருவளளுவன் உரையாற்றினர். அவரகளை தொடர்ந்து தோழர் பொழிலன் தமிழக மக்கள் முண்ணனி, பொதுச் செயலர், கோவை இராமகிருஷ்ணன் தந்தை பெரியார் திராவிடர் கழகம், கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் கழகம் உரையாற்றிய பின் நிறைவாக தோழர் தியாகு பேசிய பிறகு பொதுக் கூட்டம் இரவு 10.00 மணியளவில் நிறைவடைந்தது செய்தி குகநந்தன் லிங்கம்

சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு – பயிலரங்கம் தூத்துக்குடி 13032016

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த 13.03.2016 அன்று தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி ஒன்றியத்தில் வைத்து, “சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு” என்ற தலைப்பில் ஒருநாள் பயிரங்கம் நடைபெற்றது. பயிற்சியளித்தவர் மாநில பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள். காலை 9 மணிக்கு தொடங்கிய பயிலரங்கம் மதியம் 1:30 மணிவரை நடந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 2:30க்கு தொடங்கிய பயிலரங்கம் மாலை 6 மணிவரை நடைபெற்றது. இந்த இருவேளைகளிலும், சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு என்ன என்பதைப்பற்றி பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள் மிக அழகாக, தெளிவாக விளக்கி கூறினார். பயிலரங்கம் முடிந்த பிறகு தோழர்கள் தங்களது கருத்துகளையும், சந்தேகங்களையும் பரப்புரை செயலாளரிடம் கேட்டு விளக்கம் பெற்றனர். இப் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் தேநீரும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. தோழர்களுக்கு மதிய உணவாக சுவையான மாட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட்டது. இப்பயிலரங்க...

தெருமுனைக் கூட்டம் சித்தோடு 20032016

தெருமுனைக்கூட்டம்,சித்தோடு ! ஈரோடு மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சித்தோடு கிளையில் சித்தோடு தட்டாங்குட்டை பகுதியில் 20.03.2016 மாலை 6 மணியளவில் தோழர் வேல்மாறன் தலைமையில் தோழர் கமலக்கண்ணன் முன்னிலையில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் தோழர் முருகேசன் பெரியாரிய பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார் . அவரைத் தொடர்ந்து நாமக்கல் வடக்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் பகுத்தறிவு பாடல் பாடினார் . ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேணு மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் ப.ரத்தினசாமி ஆகியோரது உரையைத் தொடர்ந்து காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது .இறுதியாக கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது . இரவு தோழர்களுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த தோழர்கள் மாவட்ட அமைப்பாளர் குமார் , காவை சித்துசாமி , நங்கவள்ளி சிவக்குமார் , கொங்கம்பாளையம் சத்தியராஜ், சவுந்திரபாண்டியன், ராஜேஷ், ரங்கம்பாளையம்...

தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள் -கருத்தரங்கம் மேட்டுப்பாளையம் 20032016

தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ”தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள்” எனும் கருத்தரங்கம் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பிறந்த நாளான 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு மேட்டுப்பாளையம் அன்னபூர்ணா அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் தோழர் ஆசிரியர் சிவகாமி அவர்கள் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை புறநகர் மாவட்ட தலைவர் தோழர் பா.இராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கழக மாநில பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி,மாநகர் மாவட்டத் தலைவர் தோழர் நேரு தாசு,மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் நிர்மல் குமார்,பகுத்தறிவாளர் கழக தோழர் கள்ளக்கரை சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவியர் தோழர் தூரிகை சின்னச்சாமி அவர்கள் கைரேகையிலேயே வரைந்த கை’நாட்டுக்காக’ உழைத்த காமராஜர் எனும் ஓவியத்தை கருத்தரங்கில் கழக தலைவர் அவர்களிடம் வழங்கினார். ”கல்வி கற்காத காமராஜரின் கல்விப்புரட்சி” எனும் தலைப்பில் கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர்...

உடுமலை சங்கர் படுகொலை கண்டித்து நெமிலியில் ஆர்ப்பாட்டம் 20032016

20.03.2016 காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், உடுமலை சங்கர் அவர்களின் ஆணவப் படுகொலையை கண்டித்து நெமிலியில் கழக பிரச்சார செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்.இரா.பா.சிவா (திவிக) தோழர்.திலீபன் (திவிக) தோழர்.விழுப்புரம் அய்யனார் (திவிக) தோழர்.சங்கர் (திராவிடர் கழகம்) மற்றும் தோழமை அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஜாதி ஆணவக்கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக – பொதுக்கூட்டம் சென்னை 22032016

சென்னையில் பொதுக்கூட்டம் ! திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நட்டநடுத் தெருவில் சங்கர் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த காணொளி கண்டிருப்பீர்கள். சங்கரின் காதல் துணைவி கௌசல்யாவையும் கொடூரமாகத் தாக்கியது கௌசல்யாவின் தந்தை அனுப்பிய கூலிப்படை! இதைத்தான் ஆணவக் கொலை என்கிறோம். இதற்கு எதிராகத்தான் தனிச்சட்டம் கோருகிறோம். நம் கண்கள் கண்ட இப்படுகொலை நம்மையெல்லாம் நிலைகுலையச் செய்தது. படுகொலை செய்யப்படும் அளவுக்கு சங்கர் செய்த குற்றம் காதலித்ததும் அவரையே மணமுடித்ததும் எந்த அச்சுறுத்தலுக்கும் மீறி எதிர்காலத்தை காதல் துணையோடு எதிர்கொண்டதும் மட்டும்தான். மட்டும்தான். காதலித்ததிலிருந்து எதிர்கொண்டிருந்தது வரை இந்தச் சமூகம் எவ்வகையிலெல்லாம் அவர்களுக்குத் துணை நின்றது? குறிப்பாக சாதி ஒழிப்பை இலட்சியமாய்க் கொண்ட நாம் என்ன செய்தோம்? சாதி ஒழிப்பிலேயே அவரவர் காட்டும் வழிமுறைகளும் கண்ணோட்டங்களும் கோட்பாடுகளும் வேறு வேறாக இருக்கின்றன. அவற்றை பற்றி நாம் நமக்கும் மாறி மாறி விவாதித்துக்  கொண்டிருக்கிறோம். ஆனால், இளவரசனுக்குப் பிறகு, கோகுல்ராஜுக்குப் பிறகு காதலர்க்குத்...

பெரியாரியல் விளக்கப் பொதுக்கூட்டம் மேட்டூர் 18032016

பெரியாரியல் விளக்க பொதுக்கூட்டம் – மேட்டூர் – 18.03.2016. 18-03-2016 வெள்ளிக்கிழமை மாலை 6-00 மணியளவில், சேலம் மாவட்டம் மேட்டூர் சதுரங்காடி திடலில் ‘பெரியாரியல் விளக்கப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது. மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டம், கழகத் தோழர்களின் பறை இசையோடு துவங்கியது. தொடர்ந்து மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவினர் (பாடகர்கள்; முத்துக்குமார், கோவிந்தராசு, அருள்மொழி. இசை; குமரப்பா, சீனி, காளியப்பன்) பகுத்தறிவு மற்றும் ஜாதி ஒழிப்புப் பாடல்களை பாடினர். பொதுக்கூட்டத்திற்கு நகரத் தலைவர் செ.மார்ட்டின் தலைமை ஏற்க, நகர துணைச் செயலாளர் குமரப்பா வரவேற்பு உரை ஆற்றினார். கொளத்தூர் குமரேசன், மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி ஆகியோர் உரைகளுக்கு பின், புலவர் செந்தலை ந.கௌதமன் அவர்கள் உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக நகர பொருளாளர்...

தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள் கருத்தரங்கம் மேட்டுப்பாளையம் 20032016

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும், ”தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள்” கருத்தரங்கம். பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பிறந்த நாளில், இடம் : அன்னபூர்ணா அரங்கம்,மேட்டுப்பாளையம். நேரம் : மாலை 4.30 மணி. நாள் 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை. தலைமை : ஆசிரியர் சிவகாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் மாநில அமைப்பாளர். வரவேற்புரை : பா.இராமச்சந்திரன்,புறநகர் மாவட்ட தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். முன்னிலை : திருப்பூர் துரைசாமி, மாநில பொருளாளர், திராவிடர் விடுதலைக் கழகம். நேரு தாசு,மாநகர் மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். நிர்மல் குமார்,மாநகர் மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். கள்ளக்கரை சுந்தரமூர்த்தி,பகுத்தறிவாளர் கழகம், கருத்துரை : ”கல்வி கற்காத காமராஜரின் கல்விப்புரட்சி” எனும் தலைப்பில் கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர் மணி’ அவர்கள். ”தமிழகத்தில் தந்தை பெரியாரின் சமுதாயப்புரட்சி” எனும் தலைப்பில் ‘ரெயின்போ வெங்கட்ராமன்’, மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர். நன்றியுரை...

செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை 17032016 விடுதலை இராசேந்திரன்

கும்முடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில் சுபேந்திரன் அவர்களின் கால்கள் ஆய்வாளர் டெல்லிபாபுவால் உடைக்கப்பட்டது. முகாம் தலைவர் சிவக்குமார் அவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி இழிவுபடுத்தியுள்ளார்கள். இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் செய்தியாளர் சந்திப்பு நேற்று 17.03.2016 வியாழன் அன்று காலை 11 மணியளவில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அனைத்து ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் கலந்து இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். கால்கள் உடைபட்டுள்ள சுபேந்திரன் அவர்களை அவரின் துணைவியார், மகள் மற்றும் சிவகுமார் ஆகியோர் நேரில் வந்திருந்து செய்தியாளர்களிடம் தங்களுக்கு ஏற்பட்டதை முழுமையாக விளக்கினர். தோழர் தியாகு நமது கோரிக்கைகள் குறித்து விளக்கினார். மற்ற கேள்விகளுக்கும் பதிலளித்தார். திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை, தமிழக மக்கள் முன்னணி வழக்குரைஞர் பாவேந்தன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் க.அருணபாரதி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர்...

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு அலுவலகம் முற்றுகை திருப்பூர் 16032016 – நிழற்படங்கள்

திருப்பூரில், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதில் காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 16.3.2016 அன்று கழக பரப்புரை செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காவல்துறை முற்றுகைக்கு அனுமதி மறுத்துவிட்ட நிலையிலும் முற்றுகைப் போராட்டம் தடையை மீறி எழுச்சியுடன் நடைபெற்றது. • ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் வரவேண்டும். • ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதை மாற்றிக் கொள்ள வேண்டும். • ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோரின் வாழ்வுரிமைப் பாதுகாப்பைப் புறக்கணித்து, வாக்குரிமை பேசும் அரசியல் கட்சிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். • ஜாதி எதிர்ப்பு – தீண்டாமை எதிர்ப்புக்கான போராட்டக் களத்தை மேலும் வலிமையாக்கிட ஜாதி எதிர்ப்பு, சமூகநீதி இயக்கங்களின் வலிமையான ஒற்றுமை உருவாக வேண்டும். எனும் கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்ற இந்த...

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு அலுவலகம் முற்றுகை சென்னை 16032016 – நிழற்படங்கள்

சென்னையில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில்.காவல்துறையின் தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 16.03.2016.புதன் கிழமை,காலை 10 மணி அளவில் ,சென்னை மயிலாப்பூர்,ஐ.ஜி.அலுவலக வளாகத்தில் உள்ள காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாவட்ட தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி, இளந்தமிழகம் அமைப்பின் தோழர் செந்தில்,பரிமளா,அம்பேத்கர் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தோழர் ஜெயமணி, எம்.ஆர்,எஸ் தொழிலாளர் சங்கத்தின் தோழர் சேகர், மரணதண்டனை எதிர்ப்புக்குழுவின் தோழர் டேவிட் பெரியார் உள்ளிட்ட 45 தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டார்கள். முற்றுகைப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக கடந்த 3 ஆண்டுகளில் 82 பேர் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தலித் இளைஞர்கள். இளவரசன்,...

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு பிரிவை முற்றுகையிட வாரீர்

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு பிரிவை முற்றுகையிட வாரீர்

ஜாதி வெறிக்கு எதிராக தொடர்ந்து சமரசமின்றி போராடிவரும் திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் பல இன்னல்கள் இழப்புகளை சந்தித்து சிறிதும் தொய்வின்றி தொடர்ந்து துணிவுடன் போராடிவருகிறது. உடுமலையில் நடைபெற்ற ஜாதிவெறிப்படுகொலை தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. இது போன்ற ஜாதிய வன்கொடுமைகளை தடுப்பதற்க்காகவே காவல்துறையில் தீண்டாமை ஒழிப்புப்பிரிவு என்றொரு தனிப்பிரிவு இயங்கிக் கொண்டிருக்கிறது. தனிப் பிரிவாக செயல்படவேண்டி உருவாக்கப்பட்ட இந்த பிரிவு செயல்பாடுகள் இன்றி,தங்கள் கடமைகளை செய்யாமல் கோமா நிலையில் கிடக்கிறது. ஜாதி வெறிப்படுகொலைகளை தடுக்க அரசு எந்த முயற்சிகளையும் எடுக்காத நிலையில் தமிழக அரசின் காவல்துறையில் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரிவு அலுவலகங்களை நாளை 16.03.2016 அன்று காலை திராவிடர் விடுதலைக் கழகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறது. சென்னையில் கழக பொதுச்செயலாளர் ”தோழர் விடுதலை ராஜேந்திரன்” தலைமையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள மாநில தீண்டாமை ஒழிப்பு பிரிவு தலைமை அலுவகமும், திருப்பூரில் கழக தலைவர் ”தோழர் கொளத்தூர் மணி”...

தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம்!

தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம்!

முற்றுகைப் போராட்டம்! காவல்துறையின் தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில். உடுமலை சங்கர் அவர்களை ஜாதி வெறியர்கள் ஆணவப் படுகொலை செய்ததை கண்டித்தும், தொடர்ந்து நடைபெறும் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்கத் தவறும் செயல்படாத காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவை கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க கடுமையான தனிச் சட்டம் இயற்றக்கோரியும் முற்றுகைப் போராட்டம். நாள் : 16.03.2016.புதன் கிழமை காலை 10 மணி. இடம்: காவல்துறை இயக்குனர் (I.G.) அலுவலக வளாகத்தில் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரிவு அலுவலகம்,மயிலாப்பூர், சென்னை. தொடர்புக்கு: தோழர் உமாபதி, செல் : 7299230363 சென்னை மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். ஜாதி வெறி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அணிதிரள்வோம் வாருங்கள்.

ஜாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூரில் புகார்

முகநூலில் ஜாதிவெறிப் படுகொலைகளுக்கு ஆதரவாகவும் மேலும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பதிவுகளை செய்து ஜாதி கலவரங்களை  தூண்டும் ஜாதிவெறியர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு தலைமையில் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் மாப்பிள்ளை சாமி,தோழர் அகிலன்,தோழர் தனபால் உள்ளிட்ட தோழர்கள் திருப்பூர் மாவட்ட இணையதள குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.  

குழந்தைகள் பழகு, மகிழ்வு முகாம்

குழந்தைகள் பழகு, மகிழ்வு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ”குழந்தைகள் பழகு,மகிழ்வு முகாம்”. நாள் : மே மாதத்தில், 20.05.2016 முதல் 24.05.2016 முடிய, 5 நாட்கள் இடம் : மதுரை கட்டணம் : 1000 ரூபாய் மட்டும். குறிப்பு : 10 வயது முதல் 15 வயது உள்ள குழந்தைகள் இருபாலரும் பங்கேற்கலாம். ”முன் பதிவு அவசியம்” பதிவு செய்ய அழைக்கவும் : 9842448175,9688856151.

தேர்தல் ஜனநாயகம்

தேர்தல் ஜனநாயகம்

”1. காசு கொடுத்து ஓட்டுப் பெறுகிறான். 2. காசு பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடுகிறான். 3. பொய்யும் புரட்டும் கூறி மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுகிறான். 4. ஓட்டின் பலன் என்ன, அதை எப்படி, எதற்கு பயன்படுத்துவது என்ற அறிவே இல்லாமல் ஓட்டுப் போடுகிறான். இவ்வளவுதானா? ஜாதிப் பெயர் சொல்லி ஓட்டுக் கேட்கிறான்; (தன்) ஜாதியான் என்பதற்காக ஓட்டுப் போடுகிறான். இவை ஜனநாயக பிரதிநிதித்துவ நிலைமை என்றால் நாட்டின் நிலைமையோ மக்கள் ஒருவனை ஒருவன் தொட முடியாத நான்கு ஜாதி, ஒருவருக்கொருவர் உண்ணல் கொடுக்கல் வாங்கல் இல்லாத 400 உள்பிரிவு, ஒருவருக்கொருவர் வெறுப்புக் கொண்ட பல மதம், கடவுள்கள், பல வேதங்கள், பல தர்மங்கள், இவற்றுள் பல ஜாதித் தொழில்கள், அவற்றின் படி ஒருவரை ஒருவர் அடக்கி ஆள பல இலட்சியங்கள், சூழ்ச்சிகள் இவை மாத்திரமேயல்லாமல் பெரிதும் கொள்கையே இல்லாத பல பதவி வேட்டைக் கட்சிகள்; இவற்றிற்கு ஏற்ற பத்திரிகைகள்; சாக்கடை...

‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என்கிறது தமிழ்த் தேசியம்; ‘ஆடு மேய்ப்பவரை ஐ.ஏ.எஸ். ஆக்கியது’ பெரியாரியம்: பால்பிரபாகரன் பேச்சு

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், கல்வி நிலையங்களில் நிலவும் ஜாதிய பாகுபாடுகளை நீக்க வலியுறுத்தியும், கண்டன பொதுக்கூட்டம் பாவூர் சத்திரம் பேருந்து நிலையத்தில் மார்ச் 3ம் தேதி மாலை 5 மணியளவில் கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் குரும்பலாபேரி மாசிலாமணி தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. துவக்கத்தில் மாவட்ட அமைப்பாளர் அன்பரசு வரவேற்றார். திராவிடர் விடுதலைக்கழக நிர்வாகிகள் சங்கர், லெட்சுமணன், பெரியார் திலீபன், தங்கதுரை, சபாபதி, மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய மோடி அரசை கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட தலைவர் பால்வண்ணன், கீழப்பாவூர் மதிமுக ஒன்றிய செயலாளர் இராம உதய சூரியன், கீழப்பாவூர் திமுக ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன், கழகத் தோழர் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக கல்வி வேலை வாய்ப்புகளில்...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (14) ஆதித்தனார் – ம.பொ.சி.யின் தடுமாற்றங்கள்! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (14) ஆதித்தனார் – ம.பொ.சி.யின் தடுமாற்றங்கள்! வாலாசா வல்லவன்

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோற்று விட்டவுடன் 1927 இல் கோவையில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யப்பட்டது. அதற்கு இரண்டு நாள் கழித்து தான் இந்த நெல்லூர் பார்ப்பனரல் லாதார் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தலைவர் சித்தூர் முனிசாமி நாயுடுவும், ஏ.பி.பாத்ரோவும் நீதிக் கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தை மாற்றுவதற்காவே, கட்சியில் பார்ப் பனர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டாம்; தேர்தல் களிலும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டாம்; தாங்களாகவே வெற்றி பெரும் பார்ப்பனர் களில் நாம் கொள்கைக்கு ஒத்து வருபவர்களை அமைச்சராக வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் என்ற நீதிக்கட்சியினரின் தீர்மானத்தை பெரியார் வழி மொழிந்தார். தெலுங்கரான மனத்தட்டை சேது...

சஞ்சய்தத்துக்கு ஒரு நீதி; 7 தமிழருக்கு ஒரு நீதியா?

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரு நாள்களுக்கு முன்புதான் தமிழக அரசுக்கு திடீர் ‘ஞானோதயம்’ வந்தது. ராஜீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிப்பது குறித்து மீண்டும் மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. நவம்பர் 2ஆம் தேதி உச்சநீதிமன்றம் இது குறித்து தீர்ப்பளித்தப் பிறகு, 3 மாத காலம் உறங்கிக் கிடந்தது தமிழக அரசு. எதிர்பார்த்தபடியே அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மல்லிகார்ஜுனா, இந்த 7 தமிழர்களை விடுதலை செய்யவே கூடாது; அவர்கள் தேச விரோதிகள்என்று சோனியா சொல்லிக் கொடுத்த மொழி களில் பா.ஜ.க. ஆட்சியை மிரட்டி விட்டார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று கூறி விட்டார். இந்த 7 தமிழர்களும், ராஜீவ் கொலையில் நேரடி தொடர்புடையவர்கள் அல்ல; ‘தடா’ சட்டத்தின் கீழ் மிரட்டி, சித்திரவதை செய்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தையே அவர்களுக்கு...

கோவையில் சர்வதேச மகளிர் நாள் விழா

கோவையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் நாள் விழாவில் மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். மார்ச் 8,சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி கோவையில் அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பணியாற்றும் பெண் பத்திரிக்கையாளர்கள் சர்வதேச பெண்கள் தினத்தை எழுச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடினர். கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ஒய்.ஏ.சாதிக் வரவேற்புரையாற்றினார். சர்வதேச பெண்கள் தினத்தின் சிறப்பு குறித்தும், காலம் காலமாய் பெண்கள் ஒடுக்கப்பட்டுவரும் இழிநிலை குறித்து தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் மாநிலப் பொறுப்பாளரும், திருப்பூர் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான சிவகாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக சர்வேதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் பெரிய வகையிலான கேக்கை வெட்டியும், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் எழுச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மூத்த பெண் பத்திரிக்கையாளர் சௌந்தர்யா ப்ரீத்தா உள்ளிட்ட அச்சு மற்றும் காட்சி ஊடகத்தின்...

பெரியார் சிலைகளை, சிலைகளுக்கு கீழே உள்ள வாசகங்களை மறைக்க கூடாது என கழகம் தொடர்ந்த வழக்கில் வெற்றி!

பெரியார் சிலைகளை, சிலைகளுக்கு கீழே உள்ள வாசகங்களை மறைக்க கூடாது என கழகம் தொடர்ந்த வழக்கில் வெற்றி! தமிழ்நாடு முழுவதும் இருக்க கூடிய தந்தை பெரியார் சிலைகளை மட்டுமல்ல, சிலைகளுக்கு கீழே உள்ள வாசகங்களை (கடவுள் மறுப்பு உள்ளிட்ட) மறைக்க கூடாது என நீதி மன்றம் இன்று அதிரடி உத்தரவு ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு இரத்தினசாமி அவர்கள் தொடர்ந்த வழக்கில் இன்று (11.03.2016) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேசு மற்றும் விமலா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை வழங்கியது. மேலும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் திராவிடர் விடுதலைக் கழக கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது என கொடுக்கப்பட்ட மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் கழகத்தின் சார்பாக வழக்கறிஞர்கள் தோழர் கான்சியஸ் இளங்கோ,தோழர் துரை அருண்...

இந்துத்துவாவும் பெண்களின் உரிமைகளும் – கருத்தரங்கம் ஈரோடு 12032016

இன்று (12.03.2016) ஈரோட்டில், ”உலக மகளிர் நாள் சிறப்புக் கருத்தரங்கம் !” நாள் : 12.03.2016,சனிக்கிழமை,மாலை 5.30 மணி. இடம் : யாளி ரெசிடென்சி அரங்கு,பிரப் சாலை,ஈரோடு. மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்தும் இக்கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி அவர்கள் ”இந்துத்துவாவும் பெண்களின் உரிமைகளும்” எனும் தலைப்பிலும் புரட்சி விடியல் பெண்கள் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் தமயந்தி அவர்கள் ”மதவெறியும் ஜனநாயக உரிமைகளும்” எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றுகிறார்கள்.

பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது?

பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது?

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் கதவுகள் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு திறந்தே இருக்கும். சமூக மாற்றத்திற் கான புரட்சிக் கர சிந்தனைகள் படிந்து நிற்கும் பல்கலைக் கழகம் இது. பேராசிரி யர்கள் பலரும் முற்போக்கு சிந்தனையாளர்கள் தான். இடது சாரி சிந்தனைகளின் தாக்கம் மிகுந்து நிற்கும் இப்பல்கலைக் கழகத்தில் அண்மைக் காலமாக மாணவர்களிடையே பார்ப்பனிய எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, பெண் ணுரிமை சிந்தனைகள் மேலோங்கி வருகின்றன. காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களில் இந்திய இராணுவத்தின் ஒடுக்குமுறை களுக்கு எதிராகவும் தேசிய சுயநிர்ணய உரிமைக்கு ஆதர வாகவும் குரல் கொடுத்து வரு கிறார்கள். இயற்கை வளங்கள், பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்படுவதற்கு எதிராக வும், மாணவர்கள் அழுத்தமாக குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர். இடது சாரி கட்சி களின் எல்லைகளைக் கடந்து சமூக எதார்த்தம் இந்த மாணவர் களை பார்ப்பன எதிர்ப்பு குறித்து வெளிப்படையாக போராட வைத்திருக்கிறது. மறைந்த திராவிடர் இயக்க ஆய்வாளர் எம்.எஸ்.எஸ். பாண் டியன்,...

கன்யாகுமாரின் புரட்சி முழக்கம் பார்ப்பனியத்திலிருந்து விடுதலை கேட்கிறோம்!

“நாங்கள் பார்ப்பனியத் திடமிருந்து ஜாதியிலிருந்து முதலாளித்துவத்திலிருந்து விடுதலை கேட்கிறோம். எங்கள் போராட்ட உணர்வை நசுக்கிட முடியாது” என்று பிரகடனப்படுத்தினார், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார். தேசத் துரோக குற்றச் சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார், இப்போது நாடு முழுதும் கவனிக்கப்படும் போராளி. உச்சநீதிமன்றம், பல நிபந்தனை களோடு அவருக்கு 6 மாதம் பிணை வழங்கியிருக்கிறது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற அவருக்கு, மாணவர்கள் எழுச்சியான வரவேற்பு அளித் தார்கள். சிறை மிரட்டல் அவர் உறுதியை குலைத்துவிடவில்லை. புடம் போட்ட போராளியாக வெளியே வந்திருக்கிறார். சிறை மீண்டு மாணவர்களிடையே அவர் ஆற்றிய உரையை 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வலைதளங்களில் பார்த்திருக் கிறார்கள். அதே நாளில் மோடி நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. மின்சார அதிர்வுகளை உருவாக்கியது போல் அமைந்திருந்தது. அவரது உரை என்று...

வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது – கவிதை நூல் வெளியீடு கோவை 13032016

”வெள்ளக்காக்கா மல்லாக்கப்பறக்குது” கவிதை நூல் வெளியீட்டு விழா ! கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நூலை வெளியிட்டு உரையாற்றுகிறார். நாள் : 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை,காலை 9.30 மணி. இடம் : அண்ணாமலை அரங்கம்.சாந்தி திரையரங்கம் அருகில், ரயில் நிலையம் எதிரில்,கோவை. வரவேற்புரை : தோழர் இனியன் நேருதாசு, மாநகர மாவட்ட தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். நூல் வெளியீட்டு அறிமுக உரை : ”தோழர் கொளத்தூர் மணி” அவர்கள் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் முதல் பிரதி பெற்றுக்கொள்பவர்: கோவிந்தம்மாள் அவர்கள். மதிப்புரை : கவிஞர் புவியரசு, எழுத்தாளர் பாமரன், எழுத்தாளர் இரா.முருகவேள். நன்றியுரை : தோழர் நிர்மல், மாநகர மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.

மதுரை அகதி முகாமில் ரவிச்சந்திரன் குடும்பத்தினரிடம் கழகத் தலைவர் ஆறுதல்

மதுரை திருமங்கலம் அருகில் உச்சம்பட்டியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 06032016 ஞாயிற்றுக் கிழமையன்று அங்கு சோதனையிடவந்த வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ரவிச்சந்திரன் அங்கு வந்துள்ளார். தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அப்போது அவர் தெரிவித்தார். ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த ரவிச்சந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து ரவிச்சந்திரன் உயிரிழந்தார் இறந்த ரவீந்திரனின் குடும்பத்திற்கு போதுமான நிவாரணம் அளிக்க வேண்டுமென்றும் அந்த வருவாய் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த முகாமில் உள்ள அகதிகள் கோரி போராட்டம் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அங்கு சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னார்....

பெரியார் நடத்திய போராட்டங்களும் தமிழர் அடைந்த பயன்களும் ஆனைமலை பொதுக்கூட்டம் – 05032016 – நிழற்படங்கள்

பொள்ளாச்சி ஆனைமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக பொதுக்கூட்டம் ! ”பெரியார் நடத்திய போராட்டங்களும்,தமிழர்கள் அடைந்த பலன்களும்” எனும் தலைப்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கு தோழர் அரிதாசு அவர்கள் தலைமை தாங்கினார்.தோழர்கள் அப்பாதுரை,இரா.ஆனந்த்,விவேக்சமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி,மாநில அமைப்புச்செயலாளர் ஈரோடு ரத்தினசாமி,மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி,தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், தோழர் சூலூர் பன்னீர் செல்வம்,மடத்துக்குளம் மோகன்,நேருதாசு,நிர்மல், வே.வெள்ளியங்கிரி, த.ராஜேந்திரன்,சீனிவாசன்,யாழ்மணி,மணிமொழி,சுந்தரமணி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். பள்ளத்தூர் நாவலரசு – மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு பகுத்தறிவுப்பாடல்கள் இடம்பெற்றன. தோழர் கோ.சபரிகிரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.  

உடுமலை – பேராசிரியர் இந்திரஜித் நினைவேந்தல் – நிழற்படங்கள்

முனைவர் க. இந்திரசித்து படத்திறப்பு ! உடுமலையில் கடந்த 27.01.2016 அன்று மறைந்த பேராசிரியர் முனைவர் க.இந்திரசித்து அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 05.03.2016 அன்று நண்பகல் 12 மணியளவில் உடுமலைப் பேட்டை சிங்கப்பூர் நகரில் உள்ள முனைவர் இந்திரசித்து அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. முனைவர் இந்திரசித்து அவர்கள் படத்தை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். முனைவர் இந்திரசித்து அவர்களின் இணையர் திருமதி. வீ.வளர்மதி அவர்கள் முனைவரின் நினைவுகளை கூடியிருந்த தோழர்களிடம் நெகிழ்சியோடு பகிர்ந்து கொண்டார். முனைவரின் மகள் கவிஞர் தமிழ்மகள்,முனைவரின் இணையர் திருமதி. வீ.வளர்மதி அவர்கள்,கவிஞர் கார்கோ ஆகியோர் எழுதிய இரங்கற்பாக்கள் வாசிக்கப்பட்டன. தோழர்கள் இலெனின் பாரதி, உடுமலை அருட்செல்வன், தோழர் பொள்ளாச்சி காசு.நாகராசன் பேரா.கண்டிமுத்து, தோழன் இராசா,தோழர் கொழுமம் ஆதி, உடுமலை துரையரசன், பேரா.பொன்னரசன், முனைவர் சி.டி.கோபால், சிவசக்திராமசாமி,திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர் தம்பி பிரபாகரன் உள்ளிட்ட தோழர்கள் இந்நிகழ்வில் கலந்து...

மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் நடைபாதை ஆக்ரமிப்பை எதிர்த்து மனு

தனியார் பள்ளிக்கு ஆதரவாக சென்னை மாநகராட்சியே ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தக் கோரி சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் சென்னை மேயர் அலுவகத்தில் மனு ! நேற்று 08.03.2016 அன்று மயிலாப்பூரில் மாநகராட்சியே மேற்கொள்ளும் நடைபாதை ஆக்ரமிப்பிற்கு எதிராக திவிக சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன் தலைமையில் சென்னை கழக தோழர்கள் மேயர் அலுவலகம் சென்று அந்த பணியை நிறுத்தக்கோரி மனு தந்தனர். கழக தோழர் செந்தில் அவர்கள் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

நூல்கள் வெளியீட்டு விழா

நூல்கள் வெளியீட்டு விழா

சென்னையில் 21.02.2016 ஞாயிறு மாலை 5 மணியளவில் தி.நகர், செ.தெ.நாயகம் பள்ளியில் தோழர் ரவிபாரதியின் ”முதல்படி”, சரவணகுமாரின் ”கருப்புச்சட்டை” ஆகிய நூல்கள் வெளியீட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக மதுமிதா வரவேற்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நாத்திகன் தொகுப்புரை வழங்கினார். கோவை கு. இராமகிருட்டிணன் நூல்களை வெளியிட, கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெற்றுக் கொண்டார். நூல்கள் குறித்து கோவை கு. இராம கிருட்டிணனும், கழகத் தலைவரும் உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் இலங்கை வடமாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசீதரன் பங்கேற்று உரையாற்றினார். வெளியிடப்பட்ட நூல்களுக்கு மதிப்புரை வழங்கி அருள் எழிலன் உரையாற்றினார். நிறைவாக நூலாசிரியர்கள் ரவிபாரதி, சரவணகுமார் ஏற்புரை மற்றும் நன்றியுரை வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 03032016 இதழ்

காதலர் நாளில் கழகத் தோழர் குமரேசன்-தரணி ஜாதி மறுப்பு மணவிழா வரவேற்பு

காதலர் நாளில் கழகத் தோழர் குமரேசன்-தரணி ஜாதி மறுப்பு மணவிழா வரவேற்பு

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் குமரேசன்-தரணி, ஜாதி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த வரவேற்பு நிகழ்வு காதலர் நாளான பிப்.14 அன்று மாலை 7 மணியளவில் இராயப்பேட்டை நல்வாழ்வு மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. கழகத் தோழர் குமரேசன், கழகத்தின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைக்குச் சென்றவர். கழக மாவட்ட செயலாளர் உமாபதி வரவேற்புரையாற்ற, தபசி. குமரன், வழக்கறிஞர்கள் துரை.அருண், திருமூர்த்தி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 03032016 இதழ்

வினா… விடை…!

வினா… விடை…!

‘கிங்’ ஆக இருப்பதையே எனது கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள். – விஜயகாந்த் ஜனநாயகம் – தேர்தல் – கூட்டணி எல்லாத்துக்கும் முழுக்குப் போட்டுட்டு மன்னராட்சிக்கு உங்களை போராட அழைக்கிறாங்க… புரியுதா, கேப்டன். 16,000 முன்னாள் இராணுவ வீரர்கள் ரிலையன்ஸ் அம்பானியின் சொத்துக் களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். – செய்தி அன்று ‘தேசத்தை’ காக்கும் பணி; இன்று தேசத்தின் ‘முதுகெலும்பை’க் காக்கும் திருப்பணி! என்னே தேசபக்தி…! முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் நானும் இருக்கிறேன். – சரத்குமார் வாங்க… வாங்க… உட்காருங்க… இதோ, டி. இராஜேந்தர், வந்துகிட்டே இருக்காரு… ஜெயலலிதா முதல்வராக, சபரிமலை அர்ச்சர்கள் தமிழகக் கோயில்களில் பூஜை. – செய்தி அதுதான், அய்யப்பனுக்கு பெண்கள் என்றாலே ஆகாதே; முதலமைச்சராக மட்டும் அனுமதிச்சிடுவானா? ஊழலே செய்யாத கட்சியுடன் கேப்டன் கூட்டணி அமைக்க பிரேமலதா கோயிலில் பிரார்த்தனை. – ‘தினமலர்’ விஜய்காந்துகிட்ட நேராக சொன்னா நிச்சயம் கேட்க மாட்டாருன்னு அவ்வளவு நம்பிக்கை. பாகிஸ்தான் பரோட்டா...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (13) ம.பொ.சி. ஆதரித்து விட்டால்-தமிழ் பார்ப்பனர் ஆகிவிடுவார்களா? வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (13) ம.பொ.சி. ஆதரித்து விட்டால்-தமிழ் பார்ப்பனர் ஆகிவிடுவார்களா? வாலாசா வல்லவன்

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி அடுத்தக் குற்றச்சாட்டு “சேதுரத்தினம் அய்யரை அமைச்சராகச் சேர்த்துக் கொண்டது”. 1926இல் சுயேச்சை அமைச்சரவை அமைத்த சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த சுயராச்சிய கட்சியை சேர்ந்த அரங்கசாமி முதலியார் ஆரோக்கியசாமி முதலியார் இருவரும் சைமன் கமிஷனை டாக்டர் சுப்பராயன் வரவேற்றதை கண்டித்து பதவி விலகினர். டாக்டர் சுப்பராயன் ஆட்சிக் கவிழும் நிலை ஏற்பட்டது. அன்றைய ஆளுநர் நீதிக்கட்சியினரை அழைத்து டாக்டர் சுப்பராயனுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண் டார். நீதிக்கட்சியைச் சார்ந்த முத்தையா முதலியாரையும் சுயராச்சிய கட்சியில் இருந்து விலகி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு வந்த சேதுரத்தினம் அய்யரையும் அமைச்சரவையில் சுப்பராயன் சேர்த்துக் கொண்டார். 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வி அடைந்தது. சுய ராஜ்ஜிய கட்சி தான் வெற்றி பெற்றிருந்தது. நீதிக்கட்சியில் 21 சட்டமன்ற உறுப்பினர்களும், சுயராச்சிய கட்சியில் 41 சட்டமன்ற உறுப்பினர்களும்...

“பெரியாரின் பெண் விடுதலை இன்னும் நிறைவேறவில்லை!”

“பெரியாரின் பெண் விடுதலை இன்னும் நிறைவேறவில்லை!”

கோவை ‘விடியல் பதிப்பகம்’ வெளியிட்டுள்ள ‘இந்துத்துவத்துக்கு எதிரான 5 நூல்’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்கு க.வி. இலக்கியா எழுதிய நீண்ட முன்னுரையின் – ஒரு பகுதி. “மனிதன் ஏன் பிறந்தானோ, ஏன் சாகிறானோ என்பது வேறு விஷயம். அது புறமிருந்தாலும் மனிதன் இருக்கும்வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியுமாகும்.” இது பெரியாரின் வார்த்தைகள். ‘கல்யாண விடுதலை’ என்ற கட்டுரையின் இறுதி பத்தி களில் இருந்து எடுத்துள்ளேன். பெரியார் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வரும் வார்த்தையாக இருப்பது ‘வெங்காயம்’ என்பதுதான். ஆனால், எனக்கு நினைவிற்கு வருவது ‘இன்பமும் திருப்தியும்’ என்ற வாக்கியமே. இரண்டு வார்த்தைகளை உடைய இந்த அழகான வாக்கியம், “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தில் மட்டும் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது. மக்கள் அனைவரும் சுயமரியாதையுடனும், பகுத்தறிவுடனும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று மட்டும் பெரியார் நிற்கவில்லை. அப்படிப்பட்ட வாழ்க்கையில் இன்பமும் திருப்தியும்...

வஞ்சகம் – பார்ப்பன சூழ்ச்சிக்கு பலியானவர்! அப்சல்குருவை நினைவு கூர்வது தேசத் துரோகமா?

தொலைக்காட்சி விவாதங்களில் சங்பரிவாரங் களின் பிரச்சார பீரங்கிகள் செவிப் பறைகளைக் கிழிக்கிறார்கள். “அப்சல் குருக்களாக மாறுவோம்; ஓராயிரம் அப்சல்குருக்கள் உருவாகுவார்கள்” என்று முழக்கமிட்டவர்கள் தேச துரோகிகளா? இல்லையா? இதை எப்படி ஒரு தேசம் அனுமதிக்க முடியும்? மீண்டும் மீண்டும் இதே கேள்விதான். அப்சல் குரு உண்மையிலே தேசத் துரோகி தானா? நாடாளுமன்றத் தாக்குதலில் அவர் பங்கு பெற்றவரா? அப்படியெல்லாம் எதுவும் இல்லை; கையில் சிக்கிய ஒரு அப்பாவியை வஞ்சகமாக பொய்யாகக் காவு கொடுத்தக் கயவர்கள் இவர்கள் என்பதை இந்த வழக்கின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் தெரிய வரும். இந்த வழக்கில் நடந்த முறைகேடுகளை – மோசடிகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறோம். • 2001, டிசம்பர் 3 ஆம் தேதி, நாடாளுமன்றத்தின் முன் தாக்குதல் நடந்தது. இந்த கொடும் குற்றத்தில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளும் அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 7 பேரும் இதில் கொல்லப்பட்டனர்....

மதுரை நகரில் கழக மாநாட்டின் எழுச்சி

மதுரை நகரில் கழக மாநாட்டின் எழுச்சி

மதுரையில், ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை 27.2.2016 அன்று ஒபுளா படித் துறையில் சிறப்புடன் நடத்தியது. மாவட்ட செயலாளர் மா.ப. மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்புரையாற்ற, மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பகத்சிங், கழகப் பிரச்சார செயலாளர் பால். பிரபாகரன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இரா. செல்வம், கம்யூனி°ட் மா.லெ. மாவட்டச் செயலாளர் மேரி ஆகியோரைத் தொடர்ந்து எஸ்.டி.பி.அய். மாநில செயலாளர் நெல்லை முபாரக், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். சகாயராஜ் நன்றி கூறினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, விருதுநகர் கணேசமூர்த்தி, விஜயகுமார், சூலூர் பன்னீர்செல்வம், காளையார் கோயில் முத்துகுமார், தனபால், சங்கீதா, வழக்கறிஞர் பொற்கொடி ஆகியோர் மாநாட்டின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினர். காவல்துறை விதித்த தடையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு...

‘ஜனநாயகம்’ பெரியார்

‘ஜனநாயகம்’ பெரியார்

கேள்வி : உலகத்தில், மகா பித்தலாட்ட மான சொல் எது? பதில் : அதுவா, அதுதான் ஜனநாயகம் என்கின்ற சொல். கேள்வி : அது என்ன, கடவுள் என்பதை விட மகா பித்தலாட்டமான சொல்லா? பதில் : அய்யய்யோ, கடவுள் என்பது ஒரு பொதுப் பித்தலாட்டமான சொல்; இந்தப் பித்தலாட்டத்தில் எல்லோருக்கும் பங்கு வரும். ஜனநாயகம் என்கின்ற பித்த லாட்டச் சொல் அப்படி அல்ல; தந்திரக் காரனுக்கு – அயோக்கியனுக்கு – இவர்களே சேர்ந்த கோஷ்டிக்குத்தான் பங்கும், பயனும் உண்டு. போக்கற்ற ஆளுக்கெல்லாம், பித்தலாட்ட வாழ்வு கோஷ்டிக்கெல்லாம் பிழைக்கும் வழி – ஜனநாயகம்தான். கேள்வி: இதுவே இப்படியானால் – ஜன நாயக முன்னணி, ஜனநாயக அய்க்கிய முன்னணி, ஜனநாயக முற்போக்கு முன்னணி, ஜனநாயக தீவிர முன்னணி, ஜன நாயக அதிதீவிர முன்னணி, ஜனநாயக சுயேச்சை முன்னணி, சுயேச்சை ஜனநாயக முன்னணி, ஜனநாயகக் கூட்டணி – என்பது போன்ற சொற்களின் தன்மை என்ன...

மத்திய மனிதவளத் துறையினரின் சமஸ்கிருதத் திணிப்பு

மத்திய மனிதவளத் துறையினரின் சமஸ்கிருதத் திணிப்பு

மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தலைமையிலான கல்வி ஆலோசனைக் குழு, மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருதத்தைத் திணிக்க முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. “ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகள் மாணவர்களுக்கு தேவையாக இருப்பினும் நமது பரந்துபட்ட கலாச்சாரத்தைக் கற்பிக்கும் வகையில் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதற்காக 3ஆவது மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்க முடிவு செய்துள்ளோம். வரும் கல்வி ஆண்டு முதல் மத்திய அரசின் கீழ்வரும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சமஸ்கிருதம் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்படும். இதற்காக விரைவில் சமஸ்கிருத மொழி நூல்கள் அச்சிடப்பட இருக்கின்றன” என்று  ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சமஸ்கிருதத் திணிப்பு என்பது பார்ப்பனியத் திணிப்பேயாகும். இந்தியாவில் சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் மொழி சமஸ்கிருதம். அதுகூட பேசும் மொழி அல்ல; கோயில்கள், சடங்குகள், யாகங்களுக்காக பார்ப்பனர்கள் மட்டுமே பயன்படுத்தும் மொழி. பல்வேறு...