கோவையில் சர்வதேச மகளிர் நாள் விழா

கோவையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் நாள் விழாவில் மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மார்ச் 8,சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி கோவையில் அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பணியாற்றும் பெண் பத்திரிக்கையாளர்கள் சர்வதேச பெண்கள் தினத்தை எழுச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடினர். கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ஒய்.ஏ.சாதிக் வரவேற்புரையாற்றினார்.

சர்வதேச பெண்கள் தினத்தின் சிறப்பு குறித்தும், காலம் காலமாய் பெண்கள் ஒடுக்கப்பட்டுவரும் இழிநிலை குறித்து தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் மாநிலப் பொறுப்பாளரும், திருப்பூர் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான சிவகாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

முன்னதாக சர்வேதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் பெரிய வகையிலான கேக்கை வெட்டியும், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் எழுச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மூத்த பெண் பத்திரிக்கையாளர் சௌந்தர்யா ப்ரீத்தா உள்ளிட்ட அச்சு மற்றும் காட்சி ஊடகத்தின் பெண் செய்தியாளர்கள் மற்றும் துணை ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

12794414_1710539025896657_8830873684853831030_n

You may also like...