தெருமுனைக் கூட்டம் சித்தோடு 20032016

தெருமுனைக்கூட்டம்,சித்தோடு !

ஈரோடு மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சித்தோடு கிளையில் சித்தோடு தட்டாங்குட்டை பகுதியில் 20.03.2016 மாலை 6 மணியளவில் தோழர் வேல்மாறன் தலைமையில் தோழர் கமலக்கண்ணன் முன்னிலையில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது .

கூட்டத்தில் தோழர் முருகேசன் பெரியாரிய பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார் . அவரைத் தொடர்ந்து நாமக்கல் வடக்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் பகுத்தறிவு பாடல் பாடினார் . ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேணு மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் ப.ரத்தினசாமி ஆகியோரது உரையைத் தொடர்ந்து காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது .இறுதியாக கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது . இரவு தோழர்களுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த தோழர்கள்
மாவட்ட அமைப்பாளர் குமார் , காவை சித்துசாமி , நங்கவள்ளி சிவக்குமார் , கொங்கம்பாளையம் சத்தியராஜ், சவுந்திரபாண்டியன், ராஜேஷ், ரங்கம்பாளையம் கிருஷ்ணன், பிரபு, காஞ்சிக்கோயில் சாமியப்பன், திருமூர்த்தி, சித்தார் தினேஷ், சித்தோடு நடராஜன், சங்கர், பிரபு,கணேஷ், கோபாலன், ரமேஷ் .

தெருமுனைக் கூட்ட ஒருங்கிணைப்பு ; நகரச் செயலாளர் சிவானந்தம், காவை எழிலன்.

முன்னதாக,ஈரோடு மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த பிப்ரவரி 07ம் தேதி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது . அக்கூட்டத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி எதிர்ப்பு பரப்புரைக் கூட்டம் மாதம் தோறும் சித்தோடு கிளைக் கழகம் சார்பாக நடத்துவது என தீர்மானித்து அதன் முதல் கூட்டமாக 21.02.2016 அன்று சித்தோடு ஜே.ஜே.நகரில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது .

இதில் காவை இளவரசனின் மந்திரமில்லை தந்திரமே! நிகழ்ச்சியும் கோபி வேலுச்சாமி, காவை சித்துசாமி, ஈசுவரன் ஆகியோர் உரையாற்றினர்.

489_1716441045306455_993205590664848884_n 940977_1716441028639790_7944990651298569421_n 10415626_1716441041973122_4003407597709569213_n

You may also like...