Category: திவிக

மேட்டூர் கழக முயற்சி வெற்றி: திடீர் விநாயகர் சிலை அகற்றப்பட்டது

மேட்டூர் கழக முயற்சி வெற்றி: திடீர் விநாயகர் சிலை அகற்றப்பட்டது

இந்து முன்னணியினரால் மேட்டூர் பேருந்து நிலையத்திற்கு எதிராக நீதிமன்றம், அரசு உத்தரவுகளை மீறி திடீரென வைக்கப்பட்ட வினாயகர் சிலை மேட்டூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முயற்சியால் அகற்றப்பட்டது 29.08.2022 காலை 11.00 மணியளவில் இந்து முன்னணியின் சேலம் கோட்ட செயலாளர் பழனிசாமி மற்றும் மேட்டூர் நகர இந்து முன்னணித் தலைவர் தமிழ்ச் செல்வன் சேர்ந்து மேட்டூர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் முறையாக அனுமதி எதுவும் பெறாமல் திடீரென ஒரு வினாயகர் சிலையை வைத்தனர். நீதிமன்ற உத்தரவுகள்,அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியும், சுற்றுச் சூழல், நீர்நிலைகளை மாசுபடுத்தும் பிளாஸ்ட் ஆப் பாரிஸ் இரசாயன கலவையால் செய்யப்பட்ட அந்த சிலை போக்குவரத்திற்கு இடையூறாகவும் வைக்கப்பட் டிருந்தது. தகவல் அறிந்து மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின், மேட்டூர் காவல் ஆய்வாளருக்கு தொலைபேசியில் இச்செய்திகளை கூறி இதனால்  சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்....

கோபியில் 144 இடங்களில் கிராமப்புறப் பிரச்சாரம்

கோபியில் 144 இடங்களில் கிராமப்புறப் பிரச்சாரம்

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் 4.09.2022  ஞாயிறு காலை 10 மணியளவில் கோபியில் நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது. அலிங்கியம் பகுதி செந்தில்குமார் தலைமை ஏற்க மாவட்ட செயலாளர்  வேணுகோபால், கழகத்தின் வெளீயீட்டு செயலாளர் இராம இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரியார் பிறந்தநாள் நிகழ்வுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப் பட்டது. செப்.17 தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவினை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய பகுதிகளில் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. பெரியரின் 144 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மாவட்ட கழகத்தின் சார்பில் சனாதனத்தை வேரறுப்போம் என்ற தலைப்பில் 144 இடங்களில் கிராமப்புறப் பிரச்சாரப் பயணம் நடத்துவது எனவும், அதன் இறுதியில் நிறைவுவிழா பொதுகூட்டம் சத்தி அல்லது நம்பியூரில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின்  ஒன்றிய,நகர ,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 08092022 இதழ்

“முழக்கம்” கட்டுரைகள் குறித்து  கலந்துரையாடல்

“முழக்கம்” கட்டுரைகள் குறித்து கலந்துரையாடல்

நிகழும் அரசியல் சூழல் குறித்த விவாதமும், முழக்கத்தில் வந்த கட்டுரைகளும் மற்றும் தற்போது சமூகத்தில் எழும் விவாதமாக இலவசம் தவறா? மற்றும் இவையெல்லாம் இலவசமா? என்றும் விவாதிக்கப்பட்டது. சென்னை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களின் பங்கெடுப் பில் நிகழ்வு ஒருக்கிணைக்கப்பட்டு நடத்தப் பட்டது. (இந்திய ஒன்றிய பொருளாதாரம் குறித்தும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் இலவச என்று சொல்லக்கூடிய விலையில்லா பொருட்கள் மற்றும் மாநிலங்களைப் பற்றி வந்த தோழர்களின் பார்வையும் சமூக மாற்றத்தையும் கலந்தாலோசிக்கப்பட்டது.) பெரியார் முழக்கம் 01092022 இதழ்

கழகத்தில் புதிய தோழர்கள் இணைந்தனர்

கழகத்தில் புதிய தோழர்கள் இணைந்தனர்

27-08-2022, சனிக்கிழமை அன்று சிதம்பரம் ஹக்ஷசூ மஹாலில் புதிய தோழர்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தில்  இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட தலைவர் அ.மதன்குமார் வரவேற்பு கூறினார். கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் ந. அய்யனார் புதிய தோழர்களை வரவேற்று உரையாற்றினார், அதன்பின் புவனகிரி சதிஷ்குமார் -புவனகிரி, ரஞ்சித்குமார் -அம்பிகாபுரம், வெங்கடேஷ் – கந்தமங்கலம், அன்பரசன் – கோவிலாம்பூண்டி, பிரேம் – பூதவராயன் பேட்டை, சிவா – பூதவராயன் பேட்டை, ஆகாஷ் – கோழிப்பள்ளம், ஆகாஷ் – கருவேப்பிலங்குறிச்சி, இன்பராஜ் – பூதவராயன் பேட்டை, விக்கி – பூதவராயன்பேட்டை, நன்பரசன் – பூதவராயன் பேட்டை, ராஜேஷ் – கணகரப்பட்டு. உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் கழகத் தலைவரின் தலைமையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி  புதிய தோழர்களை வரவேற்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் ஆசிரியர் அறிவழகன், கழகத்தின் கடலூர்...

விநாயகன் அரசியல் ஊர்வலத்தில் விதிமீறல்களைக் கண்காணிக்கக் கோரிக்கை

விநாயகன் அரசியல் ஊர்வலத்தில் விதிமீறல்களைக் கண்காணிக்கக் கோரிக்கை

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடைபெறும் ஊர்வலங்கள், சிலை கரைப்பு நிகழ்ச்சிகளில் அரசு ஆணை, நீதிமன்ற உத்தரவுகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை சரியாக கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 24.08.22 புதன்கிழமை மாலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் முகில்ராசு,கழக நிர்வாகிகள் தனபால், ராமசாமி மாணவர் கழகத்தின் மகிழவன், கழகத் தோழர்கள் அய்யப்பன் திலகவதி, மாரிமுத்து ஆகிய தோழர்கள் பங்கேற்றனர். ஈரோடு வடக்கு மாவட்டம்: திராவிடர் விடுதலைக் கழகம் ண ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக, பிள்ளையார் சிலையை வைப்பதற்கும், கரைப்பதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்,  தமிழ் நாட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும், சிலை வைப்பவர்கள் அரசின் விதி முறைகளை கடைபிடிக்கிறார்களா என்றும்  விதி மீறல்கள் இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை...

சனாதனத்தை வீழ்த்துவோம் – பெரியார் பிறந்தநாள் தோழர்கள் தயாராகிறார்கள்

சனாதனத்தை வீழ்த்துவோம் – பெரியார் பிறந்தநாள் தோழர்கள் தயாராகிறார்கள்

கோவை மாநகர  திராவிடர் விடுதலைக் கழக  கலந்துரையாடல் கூட்டம் 27.8.2022 மாலை 4மணி முதல் 6.30 வரை  வழக்கறிஞர்  கார்கி  அலுவலகத்தில்  நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எதிர்வரும் செப் – 17 பெரியார் 144ஆவது பிறந்தநாளில் காலை 9 மணிக்கு கோவை காந்திபுரம் பெரியார் சிலைக்கு மாநகர தலைவர் நேருதாசு தலைமையில்  மாலை அணிவித்து   துண்டறிக்கை வழங்குவதெனவும் தொடர்ந்து சித்தாபுதூர், ரத்தினபுரி ஆறு முக்கு, பீளமேடு, காந்தி நகர், சவுரிபாளையம், உக்கடம், டுழு தோட்டம், பனைமரத்தூர், சூலூர், வடபுதூர், அன்னூர், மேட்டுப்பாளையம்  பகுதிகளில்  படத்திறப்பு விழா நடத்துவது. 2 .        செப் – 17 பெரியார் பிறந்தநாள் முடிந்த பிறகு கோவை மாவட்டத்திற்குட்பட்ட நகர கிராமப் பகுதிகளில்  தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது. பெரியார் பிறந்தநாள் விழா சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் சுவரொட்டிகள்  800 அச்சடித்து கோவை மாவட்டத்தில் ஒட்டுவது. சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் துண்டறிக்கை...

விநாயகன் ஊர்வலம்: கோவை, சென்னை கழக சார்பில் காவல்துறையிடம் மனு

விநாயகன் ஊர்வலம்: கோவை, சென்னை கழக சார்பில் காவல்துறையிடம் மனு

கோவையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றக் கோரி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.08.22 திங்கள் காலை கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடக்கும் ஊர்வலங்கள் மற்றும் சிலை அமைப்பது ஆகியவை குறித்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற கோரியும், சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்ட் ஆஃப் பாரிஸ், சுட்ட களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது என்ற அரசாணையை சரியாக பின்பற்ற கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலை வைக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கோஷங்கள் போடுவதை வீடியோ பதிவு செய்வோம் நீங்கள் யாரேனும் விதிமுறை மீறல் சிலையை பார்த்தால் ஆதாரம் அனுப்புங்கள் அதற்கும் நடவடிக்கை எடுப்போம்....

கழக சார்பில் காவல்துறையிடம் மனு: “கிடுகு” (சங்கிகளின் கூட்டம்) திரைப்படத்தை வெளியிட தடை போட வேண்டும்

கழக சார்பில் காவல்துறையிடம் மனு: “கிடுகு” (சங்கிகளின் கூட்டம்) திரைப்படத்தை வெளியிட தடை போட வேண்டும்

ஜாதி, மத மோதல்களை உருவாக்க முயற்சிக்கும் ‘கிடுகு’ திரைப்படத் தயாரிப்பாளர் ராமலட்சுமி, இயக்குனர் வீரமுருகன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 22.08.22 திங்கள் காலை சென்னை காவல் ஆணையர்  அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. கிடுகு (சங்கிகளின்கூட்டம்) எனும் பெயரில் ஒரு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. ராமலட்சுமி என்பவர் தயாரிப்பில் வீரமுருகன் என்பவர் இயக்கத்தில்  இத்திரைப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் சில காட்சிகளில் தமிழ்நாட்டு அரசின் திராவிட மாடல் குறித்து பொய்யான தகவல்களைக் கூறி அவதூறு பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை உயர்த்திக் காட்டும்படியான காட்சிகளும் குறிப்பிட்ட மதங்கள் மீது வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும், ‘ராமசாமி நாயக்கருக்கு’ எதுக்கு சிலை என்று வன்முறையை தூண்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்று ஒருவர் ஆவேசமாகப் பேசி, தமிழ் மண்ணை காவி...

திமிர் பேச்சு கண்ணனை கைது செய்: கழகம் ஆர்ப்பாட்டம்

திமிர் பேச்சு கண்ணனை கைது செய்: கழகம் ஆர்ப்பாட்டம்

திருவரங்கத்தில் உள்ள பெரியாரின் சிலையை அகற்ற வேண்டும் என பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை கைது செய்யக் கோரி 10.08.2022  அன்று காலை 10.30 மணி அளவில் ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புகள் பங்குபெற்றன. கண்டன உரையாற்றியவர்கள்: 1. நாத்திகஜோதி –  ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர். 2. சித்திக்  – த.மு.மு.க; 3. சிந்தனைச் செல்வன் – தமிழ்ப் புலிகள் கட்சி; வீரகோவிந்தன் – ஆதித் தமிழர் பேரவை; 5. சலீம் – மனிதநேய மக்கள் கட்சி; வேங்கை பொன்னுசாமி – தமிழ்ப் புலிகள் கட்சி; 7. நிலவன் – நீரோடை; கண.குறிஞ்சி – ஞருஊடு; 9. திருப்பூர் துரைசாமி – பொருளாளர் தி.வி.க.; இராம.இளங்கோவன் – வெளியீட்டுச்...

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

சேலம் மேற்கு மாவட்ட திவிகவின் சார்பில் கழகத்தின் 11ம் ஆண்டு துவக்க நாளில் தெருமுனைக் கூட்டங்கள் 12.08.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பறை முழக்கம்,மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் கொள்கைப் பாடல்களுடன் துவங்கியது. முதலாவதாக வழக்கறிஞர் கண்ணகி “பெரியாரின் தேவை, பெண்ணுரிமை” ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினார். அடுத்து கழகத்தின் பரப்புரைச் செய லாளர் பால்.பிரபாகரன்,  “திராவிடர் விடுதலைக் கழகம் கடந்து வந்த பாதைகளையும், தமிழக உரிமை களுக்காக கழகம் செய்த போராட்டங்கள், பரப்புரைகள் மற்றும் ஒன்றிய பிஜேபி அரசினால் நாம் எவ்வாரெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம்” என்பதை பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார். கொளத்தூர் பேருந்து நிலையத்தில் திரளான பொதுமக்கள் உரையை கேட்டனர். பொது மக்களுக்கு திராவிடர் விடுதலைக்கத்தின் கடந்த 10 ஆண்டு கால பரப்புரை, போராட்டங்கள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை விளக்கி துண்டறிக்கை வழங்கப்பட்டது. நிறைவாக கொளத்தூர் நகர செயலாளர்  அறிவுச்செல்வன் நன்றியுரை கூற தெருமுனைக் கூட்டம் 11...

இரசாயன வினாயகன் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க அமைச்சரிடம் மயிலாடுதுறை கழகம் மனு

இரசாயன வினாயகன் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க அமைச்சரிடம் மயிலாடுதுறை கழகம் மனு

மயிலாடுதுறையில், தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதி மன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலைகள் பிளாஸ்ட ஆப் பாரீஸ் என்ற வேதிப் பொருளால் செய்யப்பட்டு வர்ணம் பூசி  விநாயகர் சதுர்த்திக்காக தயாராகி வருகின்றன. நீர் நிலைகளை மாசுபடுத்தும் இந்தச்  செயலை தடுத்து நிறுத்த கோரி 05.09.2022 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்  மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் வீ.மெய்யநாதனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அப்பொழுது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன்  உடனிருந்தார். இந்நிகழ்வில் திவிக மாவட்ட தலைவர் மகாலிங்கம், செயலாளர் மகேஷ், அமைப்பாளர் செந்தில்குமார், பொருளாளர் விஜயராகவன், நகர தலைவர் நாஞ்சில் சங்கர், செயலாளர் நடராஜன், தோழர்கள் தில்லைநாதன், கார்த்திக், ராகவன், வழக்குரைஞர் சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப் பாளர், இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது....

மேட்டூர் பெண்கள் சந்திப்பில் கொளத்தூர் மணி உரை பெரியார் காலம் போராட்டக் காலம்; தற்போது அறுவடைக் காலம்

மேட்டூர் பெண்கள் சந்திப்பில் கொளத்தூர் மணி உரை பெரியார் காலம் போராட்டக் காலம்; தற்போது அறுவடைக் காலம்

பெண்கள் சந்திப்பு நிகழ்வு 07.08.2022 ஞாயிறு காலை 10.00 மணியளவில் மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. திருப்பூர் யாழினியின் கடவுள் – ஆத்மா மறுப்பு மற்றும் பாடலுடன் தொடங்கியது. கீதா வரவேற்புரை நிகழ்த்த சுதா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.முதலில் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தோழர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். தேநீர் இடைவேளைக்கு பிறகு கோவை அமிலா சுந்தர் “அன்னை மணியம்மையார்” பற்றியும், திருப்பூர் சங்கீதா “பெரியாரின் பெண்ணியம்” பற்றியும் உரை நிகழ்த்தினர். மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு 2.30 மணிக்கு இரண்டாம் அமர்வு தொடங்கியது. நிகழ்வில் முத்துக்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் பெண்ணுரிமை மற்றும் ஜாதி ஒழிப்பு பாடல்களை பாடினர். அதனைத் தொடர்ந்து ஆனந்தி “பெண் ஏன் அடிமையானாள்” எனும் தலைப்பிலும்,  மனோரஞ்சனி “பெண்களும் மூட நம்பிக்கைகளும்” எனும் தலைப் பிலும்,  வசந்தி “மூவலூர் இராமாமிர்தம்” அம்மையாரைப் பற்றியும், வழக்கறிஞர் கண்ணகி “பெண்ணுரிமைச் சட்டங்கள்” பற்றியும் சிறப்பாக உரை நிகழ்த்தினர். பிற்பகல்...

மாட்டிறைச்சி உணவு கடைக்கு சீல்:  கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மாட்டிறைச்சி உணவு கடைக்கு சீல்: கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலத்தில் மாட்டிறைச்சி உணவு கடைக்கு சீல் வைத்த சேலம் மாவட்ட வருவாய்த் துறை, மாநகராட்சி, காவல்துறை ஆகியவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில் முற்போக்கு இயக்கங்கள் இணைந்து 05.08.2022 வெள்ளி காலை 10 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விசிகவின் மாநகர மாவட்டப் பொருளாளர் காஜா மொய்தீன் தலைமை தாங்கினார். இந்து முன்னணியின் கைப்பாவையாக மாறிப்போன சேலம் வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி, காவல்துறை ஆகியவற்றின் அராஜகப் போக்கை கண்டித்து ஆர்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து முற்போக்கு இயக்கங்களின் பொறுப்பாளர்கள் தங்களது கண்டன உரைகளை பதிவு செய்தனர். விசிக மண்டல அமைப்புச் செயலாளர் நாவரசன் – ஊஞஐ (ஆ) மாவட்டச் செயலாளர் சண்முகராஜா – தமுமுக பொறுப்புக்குழுத் தலைவர் முகமது ரபீக் – ஞகுட மாவட்டத் தலைவர் பைரோஸ்கான் – ளுனுஞஐ பொதுச் செயலாளர் ஷெரிப் பாஷா –...

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் ‘தொடர் அரசியல்’ பயிலரங்கில் கழகத் தலைவர் உரையாற்றினார்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் ‘தொடர் அரசியல்’ பயிலரங்கில் கழகத் தலைவர் உரையாற்றினார்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை – காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்கள்  இணைந்து நடத்தும், தொடர் அரசியல் பயிலரங்கம், அம்பத்தூர் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியில் 31.07.2022 அன்று  காலை 10:30 மணியளவில் தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘இந்துத்துவ அரசியலை’ப் பற்றி வகுப்பு எடுத்தார். இறுதியாக தோழர்கள் ஆர்வமுடன் கேள்விகளைக் கேட்டு தெளிவு பெற்றனர். பெரியார் முழக்கம் 04082022 இதழ்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்ட திவிக சார்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி கோவையில் முன்னெடுக்கும் நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் இணையம் வழியில் (உடிகேநசநnஉந உயடட அநநவiபே) 29.07.2022 வெள்ளி இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் மாவட்ட, நகரப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் : 1)         கழகத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவை விளக்கும் வடிவமைப்பை உருவாக்கி ஒரு வாரம் முன்பே முகநூல், இன்ஸ்டாகிராம்,டுவிட்டர் பக்கங்களில் பகிர்வது, பரப்புவது. 2)         12.08.2022 வியாழன் அன்று காலை 8.00 மணிக்கு கோவை காந்திபுரம் பெரியார் சிலைக்கு கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து கழக உறுதிமொழி எடுப்பது. 3)         தொடர்ந்து சவுரிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சிவராஜ் தலைமையில் கழகக் கொடியேற்றி கழக உறுதிமொழி எடுப்பது.   பெரியார் முழக்கம் 04082022 இதழ்

கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.07.2022 வியாழக்கிழமை சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நங்கவள்ளி பகுதியில் உள்ள வனவாசியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடை பெற்றது. முதல் நிகழ்வாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி  வனவாசியில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். பொதுக் கூட்ட ஆரம்பமாக மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவினர் ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு பாடல்களைப் பாடினர். அதனைத் தொடர்ந்து காவை இளவரசன் ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்வை மக்கள் மத்தியில் மிக எளிமையாக செய்து காட்டினார்.அது கூடியிருந்த மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்து வனவாசி பகுதி நகர செயலாளர் பழ. உமாசங்கர் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு தலைமை உரை நிகழ்த்தினார். திவிக மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்டத் தலைவர் சூரியகுமார், ஒன்றிய அமைப்பாளர் கிருஷ்ணன், நகர அமைப்பாளர் ராஜேந்திரன், நகர பொருளாளர் கதிர்வேல், பன்னீர்செல்வம் ஆகியோர்...

பெரியார் பல்கலை முறைகேடுகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் பல்கலை முறைகேடுகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

20.07.2022 புதன் காலை 11.00 மணி அளவில் பெரியார் பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து கண்டன கோரிக்கை ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், திராவிட பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர் முல்லை வேந்தன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிறைவாக கொளத்தூர் மணி கண்டன உரையில், பெரியார் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையின் வினாத்தாளில் ஜாதி குறித்து கேட்கப்பட்டமையைக் குறித்தும், மாநில அரசின் அறிவுரைகளை மதிக்காமல் புதிய கல்வி கொள்கையை நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்படுத்தி வரும் துனணவேந்தரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் உரை நிகழ்த்தினார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி பொது மக்களுக்கு துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏற்காடு, சேலம், கோவை, திருப்பூர், இளம் பிள்ளை, நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் சுள,...

மூன்று நாள்கள் திருச்சியில் விவாதங்களுடன் நடந்தன களப்பணியாளர்களுக்கு கழகம் பயிற்சி வகுப்புகள்

மூன்று நாள்கள் திருச்சியில் விவாதங்களுடன் நடந்தன களப்பணியாளர்களுக்கு கழகம் பயிற்சி வகுப்புகள்

திராவிடர் விடுதலைக் கழகத் தின் களப் பணியாளர்கள் 47 பேருக்கு பயிற்சி முகாம், திருச்சி டான்பாஸ்கோ மீடியா அரங்கில் ஜூலை 23, 24, 25 தேதிகளில் நடைபெற்றது. பல்வேறு தலைப்பு களில் வகுப்புகள் நடத்தப்பட்ட தோடு விவாதங்களுடன் நடந்தன. முதல் நாள்: கொள்கை முன்னெ டுப்பில் பெரியாரின் அணுகு முறைகள் – விடுதலை இராசேந்திரன், பெண் ணியம்/டுழுஞகூணு – ஆசிரியர் சிவகாமி, தமிழ் வளர்ச்சியில் பெரியாரின் தொண்டு – பால் பிரபாகரன், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் / போதாமைகள்/ஆணவக் கொலைகள் – திண்டிவனம் இரா.முருகப்பன். இரண்டாம் நாள் : பெரியாரும் அயோத்திதாசரும் / அம்பேத்கர்/ எம்.சி. இராஜா / இரட்டைமலை சீனிவாசன் /சகஜானந்தா ஆகியோரும் – கொளத்தூர் மணி, மக்கள் உளவிய லும் கொள்கை பரப்புரைகளும் – மருத்துவர் சிவபாலன், இந்திய ஒன்றியமும் தமிழர் தன்னாட்சியும் – ஆ.வந்தியத்தேவன் (மதிமுக), ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டுப் புரட்டுகள் – விடுதலை இராசேந்திரன். மூன்றாம் நாள்...

மதுரையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி

மதுரையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி

தமிழ் நாடு அரசின் உயர்கல்வித் துறையை புறக்கணித்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு  விழாவில் பங்கேற்க வந்த ஆர்.என். ரவியைக் கண்டித்து மதுரையில் மாவட்ட கழக ஒருங் கிணைப்பில் அனைத்து ஜனநாயக இயக்கங்களின் சார்பில், 13.7.2022 அன்று காலை 11 மணியளவில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலார் மா.பா. மணி அமுதன் தலைமை தாங்கினார். சி.பி.ஐ., சி.பி.எம்., அதிமமுக, தபெதிக, தமுமுக, தமிழ் புலிகள், ஆதித்தமிழர் பேரவை,  ஆதித்தமிழர் கட்சி,  புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட இயக்கங்களின் மாநில,  மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தோழர்களையும் காவல் துறை கைது செய்து மாலையில் விடுவித்தது. பெரியார் முழக்கம் 21072022 இதழ்

பாஜக நிர்வாகிகள் மீது கழகம் புகார் மனு

பாஜக நிர்வாகிகள் மீது கழகம் புகார் மனு

திருப்பூரில் 15.07.22 அன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முறையான அனுமதி ஏதும் இல்லாமல் செல்ஃபி வித் அண்ணாமலை என்று விளம்பரம் செய்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கல்லூரி முதல்வருக்கு மிரட்டல் விடுத்தும், கல்லூரி மாணவிகள், மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளின் மீது தக்க பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளும்படி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 16.07 22 திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு தலைமை யில் திருப்பூர் மாநகரச் செயலாளர்  மாதவன், 15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து, தோழர்கள் திலகவதி, பிரசாந்த் ஆகியோர் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 21072022 இதழ்

மகிழ் உணவகம் : கழகத் தலைவர் திறந்தார்

மகிழ் உணவகம் : கழகத் தலைவர் திறந்தார்

ஈரோடு வெள்ளோட்டில் மகிழ் உணவகத்தை 17.07.2022 ஞாயிறு அன்று  கழகத் தலைவர் கொளத்தூர் மணி  திறந்து வைத்தார். பெயர்ப் பலகையை திமுக வின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்  வி.சி. சந்திரகுமார் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக மாநகர பகுதி செயலாளர் அக்னி சந்திரன், கொங்கு இளைஞர் பேரவை லிங்கேஸ்வரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 21072022 இதழ்

மேட்டூர் – கோவையில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

மேட்டூர் – கோவையில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

மேட்டூர் : மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 15.07.2022 மாலை 5.00 மணி அளவில் கல்வி வள்ளல் காமராசர் 120ஆவது பிறந்தநாள் விழா  நகரத் தலைவர் செ.மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது. மேட்டூர் சின்ன பார்க் பகுதியில் உள்ள காமராசர் உருவச்சிலைக்கு தோழர்கள் அனிதா, கீதா, அறிவுமதி ஆகியோர் மாலை அணிவித்தனர். நகர செயலாளர் குமரப்பா முழக்கங்கள் எழுப்பினார். மேட்டூர் 16ஆவது வார்டு மஜீத் தெரு பகுதியில் காமராசர் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம் மாலை 6.00 மணிக்கு தொடங்கியது. முதல் நிகழ்வாக பறைமுழக்கம், பகுத்தறிவு, ஜாதி ஒழிப்பு பாடல்கள் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு தோழர்களால் நடத்தப்பட்டது.  தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.  நங்கவள்ளி அன்பு, தலைமை செயற்குழு உறுப்பினர் அ. சக்திவேல் ஆகியோர் உரையாற்றினர். நங்கவள்ளி, மேட்டூர் சுளு, கொளத்தூர் ஆகிய பகுதியிலிருந்து பொறுப்பாளர் களும், தோழர்களும் கலந்து...

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூரில் பா.ஜ.க.வினர் அரசு கல்லூரிகளின்  பெயர்களை முறைகேடாக பயன்படுத்தி துண்டறிக்கைகளை அச்சிட்டு “செல்பி வித் அண்ணாமலை” என்று விளம்பரப்படுத்தி கல்லூரி களுக்குள் அத்து மீறி நுழைய திட்டமிட்டு இருந்தார்கள். அண்ணாமலையைக் கூட்டி வந்து சாலைகளில் கூட்டமாக கூட காவல்துறையிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், அனுமதியும் பெறாமலும் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வினர் பேசினால் பரப்புரையில் ஈடுபட்டால் என்ன பேசுவார்கள் என்பதை பொதுமக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் குளிர் காய்வது போன்ற  பொது அமைதியை குலைக்கும் வகையில் தான் இவர்களின் பேச்சுக்கள் இருக்கும். இச்செய்தி பரவிய உடன் திராவிடர் விடுதலை கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு, திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு இந் நிகழ்விற்கு கழகத்தின் கடும் கண்டனத்தை பதிவு...

களப்பணியாளர் பயிற்சி; இடம் மாற்றப்பட்டுள்ளது

களப்பணியாளர் பயிற்சி; இடம் மாற்றப்பட்டுள்ளது

திருச்சியில் வருகிற ஜூலை 22,23,24,25 ஆகிய தேதிகளில் முதல் நாளில் இணையதள பயிற்சி வகுப்பும், மற்ற மூன்று நாள் களப்பணியாளர்கள் பயிற்சி வகுப்பும் நடைபெறவுள்ளது. கடந்த வாரம் அறிவித்த இடம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. திருச்சி காருண்யா நகர் “டான் பாஸ்கோ மீடியா” என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. தலைமைக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட தோழர்கள் மட்டுமே பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வார்கள். குறிப்பு : பேருந்து எண் 13, 45, 125 ஆகிய நகரப் பேருந்துகளில் (திருச்சி மத்திய பேருந்து நிலையம் – விராலிமலை செல்லும் பேருந்துகள்) 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, செல்லும் திசையின் வலதுபுறம் சுமார் 200,300 மீட்டரில் ‘டான் போஸ்கோ’ நிறுவனம் உள்ளது. பெரியார் முழக்கம் 14072022 இதழ்

திருச்சியில் ஒரு நாள் இணையதள பயிலரங்கம்!

திருச்சியில் ஒரு நாள் இணையதள பயிலரங்கம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத் தோழர்களுக்கான ஒருநாள் இணையதள பயிலரங்கம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்  முன்னிலையிலும் நடைபெறுகிறது. நாள் : 22.07.2022 வெள்ளிக்கிழமை நேரம் : காலை 9:30 முதல் மாலை வரை இடம் : கூஆளுளுளு நிறுவன பயிற்சி அரங்கம், திருச்சி. சமூக வலைத்தளங்களில் இயங்கும் மற்றும் இயங்க ஆர்வம் உள்ள திராவிடர் விடுதலை கழகத் தோழர்களுக்கு மட்டுமான ஒருநாள் பயிலரங்கம். இணையதளம், சமூக வலைத்தளங்கள் குறித்த அறிமுகம், அவை இயங்கும் விதங்கள், எளிமையாக பயன்படுத்துவதற்கான வழிகள், தொழில் நுட்பம் சார்ந்த விளக்கங்கள் ஆகியவை குறித்து கழகத்தின் இணையதள செயல் பாட்டாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் விளக்கம் அளிக்க உள்ளார்கள். நுழைவுக் கட்டணம் ரூபாய் 100/- (நூறு ரூபாய் மட்டும்) முன் பதிவிற்கு : பரிமளராசன் – 7871962024 சமூக ஊடக பொறுப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம். விஜயகுமார் இணையதள பொறுப்பாளர்,...

களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்: முக்கிய அறிவிப்பு

களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்: முக்கிய அறிவிப்பு

திராவிடர் விடுதலைக் கழகக் களப்பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் ஜூலை 23, 24, 25 தேதிகளில் திருச்சி ‘டி.எம்.எஸ்.எஸ்.’ பயிற்சி மய்யத்தில் (தொடர் வண்டி நிலையம் அருகில்) நடைபெறுகிறது. சமூக நீதி – மதவாதம் – பெண்ணுரிமை – மாநில சுயாட்சி, சமூகம், உளவியல் எனும் பல்வேறு தலைப்புகளில் பயிற்சியளிக்கப் படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். பயிற்சியாளர்கள் ஜூலை 22 இரவே மய்யத்திற்கு வந்து சேர வேண்டும். – கொளத்தூர் மணி (தலைவர்) விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்) பெரியார் முழக்கம் 07072022 இதழ்

திருப்பூர் பெரியார் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு மண விழா

திருப்பூர் பெரியார் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு மண விழா

கிறிஸ்டினா – மகாதேவன் சாதி மறுப்பு  இணையேற்பு நிகழ்வு, திருப்பூர் அம்மாபாளையம்  தந்தை பெரியார் படிப்பகத்தில்  28.06.2022 அன்று  மாலை 6.00 அளவில் நடைபெற்றது . திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு தலைமை வகித்தார். திருப்பூர் மாநகரத் தலைவர் தனபால்  வரவேற்பு கூறினார். மாநகர அமைப்பாளர் முத்து,வேலம்பாளையம் பகுதி பொறுப்பாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் மன்றம் தலைவர் சிவகாமி, ஆதித் தமிழர் பேரவை வழக்கறிஞர் அணி  கனகசபை,  தமிழ்நாடு மாணவர் கழகம் திருப்பூர் மகிழவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க,  யாழினி தமிழ்நாடு மாணவர் கழகம், மாதவன் நகர செயலாளர் திவிக, திலகவதி அம்மாபாளையம், மணிகண்டன், ஸ்ரீஜா, சண்முகம், சூப்பர் ஸ்டார் மக்கள் முன்னேற்ற கழகம் திருப்பூர் ஆகியோர் உட்பட தோழர்கள் மற்றும் மணமகன் உறவினர்கள் வாழ்த்தினார்கள். இணையர், கிறிஸ்டினா – சகாதேவன் நன்றி கூறினர். இறுதியாக இணையர், கழக வளர்ச்சி நிதியாக ரூபாய் இரண்டாயிரம் மாவட்டத்...

நன்கொடை

நன்கொடை

மேட்டூர் புதுச்சாம் பள்ளி கழகத் தோழர் செந்தில் குமார், கழகத் தலைவரை சந்தித்து கழக வளர்ச்சி நிதிக்காக ரூ.2500/- வழங்கினார். பெரியார் முழக்கம் 23062022 இதழ்

திருப்பூரில் ‘பிரியாணிபாளையம்’ உணவகம் திறப்பு

திருப்பூரில் ‘பிரியாணிபாளையம்’ உணவகம் திறப்பு

திருப்பூரில் பிரியாணிபாளையம் ரெஸ்ட்டாரெண்ட் அண்ட் கேட்டரிங் திறப்பு விழா பல்லடம் ரோடு, ஹோட்டல் டி.ஆர்.ஜி. பில்டிங்கில் 17.06.2022 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உணவகத்தை திறந்து வைத்தார். உணவகத்தின் முதல் விற்பனையைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி துவங்கி வைத்தார். முதல் விற்பனையை திருப்பூர் மாநகர மேயர் தினேஷ் குமார் பெற்றுக் கொண்டார். அடுத்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கிட்ஸ் கிளப்குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் சேர்மன் மோகன் கார்த்திக், கழகப் பொருளாளர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, திருப்பூர் மாவட்ட திவிக தலைவர் முகில் ராசு, கூநுமுஞஹ தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் செயலவை உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்....

கொளத்தூர் மணி 75ஆவது பிறந்த நாள் குடும்ப விழாவாக நடந்தது

கொளத்தூர் மணி 75ஆவது பிறந்த நாள் குடும்ப விழாவாக நடந்தது

கிராமப் பிரச்சாரங்கள், கழகத்  தோழர் சந்திப்புக் கூட்டங்களை அதிகரிக்க கழகத் தலைவர் வேண்டுகோள் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் குடும்ப விருந்து நிகழ்ச்சி மேட்டூர் தூய மரியன்னை சமுதாயக் கூடத்தில்  கொளத்தூர் மணி தலைமையில் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக நகர, கிளைக் கழக, ஒன்றியப் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களும், தோழர்களும் கழகத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும், இயக்க வளர்ச்சி குறித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். கலந்துரையாடல் கூட்ட இடைவேளையில் கழகத் தலைவருக்கு 75ஆவது பிறந்த நாள் விழா கேக் வெட்டப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதன் பின்பு தலைவருக்கு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ரூ.75,000/- வழங்கப்பட்டது. பிறகு குடும்ப விருந்து நிகழ்வு மதியம் 2.00 மணிக்கு நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட...

இயக்க வளர்ச்சி – தீவிர கொள்கைப் பரப்பலுக்கான திட்டங்களை விவாதித்தது, கழகத் தலைமைக் குழு

இயக்க வளர்ச்சி – தீவிர கொள்கைப் பரப்பலுக்கான திட்டங்களை விவாதித்தது, கழகத் தலைமைக் குழு

17.6.2022 அன்று திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி இல்ல வளாகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் பகல் 11.30 மணியளவில்  தொடங்கியது. 17 உறுப்பினர் களில் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் உட்பட 14 பேர் பங்கேற்றனர். இயக்க செயல்பாடுகள், ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற தலைப்பில் நடந்த வீதிக் கூட்டங்கள், மண்டல மாநாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் பலரும் கருத்துகளைத்  தெரிவித்தனர். மாலை 7 மணி வரை கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. கழகத்தின் தொடக்க நாளான ஆகஸ்டு 12ஆம் தேதி ஆண்டுதோறும் பரப்புரைப் பயண நிறைவு மாநாடாக இதுவரை நடத்தப் பட்டது. கொரானா காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக பயணங்கள் நடத்த முடியவில்லை. 2022, ஆகஸ்டு 12 – கழகம் தொடங்கி 10ஆம் ஆண்டு நிறைவு பெறுவதால், 10 ஆண்டு நிறைவு விழாவோடு...

‘பீமா கோரே கான் – எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீடு

‘பீமா கோரே கான் – எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீடு

‘பீமா கோரே கான் – எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீட்டு நிகழ்வு, 11.06.2022 மாலை 5.30 மணியளவில் சென்னை தியாகராயர் அரங்கத்தில் நடை பெற்றது. பீமா கோரே கான் அரசியல் சிறைப்பட்டோர் விடுதலைக் குழு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் சரசுவதி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் து. ராசா நிகழ்வில் பங்கேற்று நூலை வெளியிட்டுப் பேசினார். தமிழ்நாடு சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு குடியரசு கட்சித் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.கு. தமிழரசன், வன்னி அரசு (வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர்) மற்றும் தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர்கள் கருணானந்தம், அ. மார்க்ஸ், சிவக்குமார், நெல்லை முபாராக் (எஸ்.டி.பி.அய்), நாகூர் மீரான் (பி.எஃப்.அய்.), வழக்கறிஞர் ப.பா. மோகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றுப் பேசினர். முன்னதாக விரட்டுக் கலையைச் சார்ந்த...

தோழர்தமிழரசு நினைவேந்தல்

தோழர்தமிழரசு நினைவேந்தல்

பெரியார் தொண்டர், கழக களப்பணியாளர் கோ.தமிழரசு இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு 11.06.22 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. மயிலாப்பூர் பெரியார் படிப்பகத்தில் அறிவரசுவின் நினைவுகள் பகிரப்பட்டு கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டு அறிவரசு  படத்திற்கு கழகத் தோழர் இரண்யா மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து 9:30 மணியளவில் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், அறிவரசு படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வுகளில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், மாவட்டத் தலைவர் வேழ வேந்தன், மாவட்ட செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 16062022 இதழ்

மருத்துவர்கள் தமிழரசி-அ.கிருபாகரன் ஜாதி மறுப்பு மணவிழா

மருத்துவர்கள் தமிழரசி-அ.கிருபாகரன் ஜாதி மறுப்பு மணவிழா

கழகத் தோழர் சி.சிகாமணி – ச.மோகனம்பாள் இணையரின் மகள் மருத்துவர் சி.தமிழரசி – மருத்துவர் அ.கிருபாகரன் ஆகியோரது இணையேற்பு நிகழ்வு 08.06.2022 அன்று மாலை 7 மணியளவில், வேப்பேரி ரித்திங்டன் சாலையில் உள்ள லுஆஊஹ கட்டடத்தில் நடைபெற்றது. புத்தர் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கோவன் தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்விற்கு, மக்கள் அதிகாரம் ப.வினோத் வரவேற்பு கூறினார். சேத்துப்பட்டு க.இராசேந்திரன் முன்னிலை வகித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று வாழ்க்கை இணையேற்பை நடத்தி வைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்,  முனைவர் தொல்.திருமாவளவன், கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர், சமூகநீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு தலைமை செயலக ளுஊ/ளுகூ நலச்சங்கம் மீனலோசனி, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன்,...

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூரில் பா.ஜ.க.வினர் அரசு கல்லூரிகளின்  பெயர்களை முறைகேடாக பயன்படுத்தி துண்டறிக்கைகளை அச்சிட்டு “செல்பி வித் அண்ணாமலை” என்று விளம்பரப்படுத்தி கல்லூரி களுக்குள் அத்து மீறி நுழைய திட்டமிட்டு இருந்தார்கள். அண்ணாமலையைக் கூட்டி வந்து சாலைகளில் கூட்டமாக கூட காவல்துறையிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், அனுமதியும் பெறாமலும் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வினர் பேசினால் பரப்புரையில் ஈடுபட்டால் என்ன பேசுவார்கள் என்பதை பொதுமக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் குளிர் காய்வது போன்ற  பொது அமைதியை குலைக்கும் வகையில் தான் இவர்களின் பேச்சுக்கள் இருக்கும். இச்செய்தி பரவிய உடன் திராவிடர் விடுதலை கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு, திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு இந் நிகழ்விற்கு கழகத்தின் கடும் கண்டனத்தை பதிவு...

கோவை அண்ணா சிலை முன்பு கலைஞர் பிறந்த நாள் நிகழ்வு

கோவை அண்ணா சிலை முன்பு கலைஞர் பிறந்த நாள் நிகழ்வு

3.6.2022அன்று காந்திபுரம் அண்ணா சிலை முன்பு திராவிட இயக்கத் தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை லோகு தலைமையில் கொள்கை முழக்கங்கள் எழுப்பிக் கொண் டாடப்பட்டது. கோவை மாநகரத் தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. பெரியார் முழக்கம் 09062022 இதழ்

சடங்குகள் இன்றி கோவை கழகத் தோழர் இல்லத் திறப்பு

சடங்குகள் இன்றி கோவை கழகத் தோழர் இல்லத் திறப்பு

கோவையில் கடந்த ஜூன் 5ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ‘டிட்டோ போட்டோஸ்’ புகைப்பட நிறு வனம் நடத்தும் சிவராஜ் கண்ணுமா இல்லத்தை புலவர் செந்தலை கவுதமன் திறந்து வைத்தார். இல்லத் திறப்பு நிகழ்ச்சியில் பார்ப்பனர்களின் வைதீக சடங்கு சம்பிரதாயங்கள் தவிர்க்கப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலராலும் பேசுப் பொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, கோவை மாவட்டச் செயலாளர் வெள்ளிங்கிரி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி மற்றும் திருப்பூர் கோவை மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09062022 இதழ்

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல்: திராவிட மாடல் விளக்கக் கூட்டம்

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல்: திராவிட மாடல் விளக்கக் கூட்டம்

கழக செயல்வீரர், தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன்  முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் நமக்கான அடையாளம் திராவிட மாடல் விளக்கப் பொதுக்கூட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 01.06.2022, புதன் கிழமை மாலை 6 மணியளவில் கணியூர் பெரியார் திடலில்  நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணியளவில் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் கழகக் கொடி ஏற்றப்பட்டது.  முனைவர் பேராசிரியர் சுந்தரவள்ளி (தமுஎகச) கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மடத்துக்குளம் மோகன் இணையர் ஜோதிமணி மகள் அறிவுமதி மற்றும் கழக நிர்வாகிகள் தோழர்கள் கணக்கன், சிவானந்தம், ஐயப்பன், சரவணன், வெள்ளிங்கிரி, ஆனந்த், நீலாம்பூர் கருப்புசாமி, பாண்டியநாதன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மாலை 6 மணி அளவில் கணியூர் பெரியார் திடலில் நமக்கான அடையாளம் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. யாழினி –  ஆனைமலை வினோதினி ஆகியோர் கொள்கைப் பாடல்களை...

சென்னை கழகத்தினர் முயற்சி வெற்றி; தெருக்களில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படுகின்றன

சென்னை கழகத்தினர் முயற்சி வெற்றி; தெருக்களில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படுகின்றன

சென்னை மயிலாப்பூர் கழகத் தோழர்கள், தெருக்களில் ஜாதிப் பெயர்களை நீக்கக்கோரி கடந்த ஏப்.6ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகளிடம்  கோரிக்கை மனுவை வழங்கியதைத்  தொடர்ந்து நகரம் முழுதும் ஜாதிப்பெயைர நீக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களின் பெயர்ப் பலகைகளை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி ரூ.8.43 கோடி செலவில் தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்தப் பெயர் பலகைகளில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் பணியுடன் சேர்த்து தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 171-வது வார்டில் உள்ள சாலையின் பெயரை சென்னை...

வர்க்க-வர்ண ஆதிக்க ஒழிப்புக்கு இளைஞர்கள் சூளுரை : செஞ்சட்டைக் கடலில் மதுரை

வர்க்க-வர்ண ஆதிக்க ஒழிப்புக்கு இளைஞர்கள் சூளுரை : செஞ்சட்டைக் கடலில் மதுரை

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் மே 29 அன்று நடந்த செஞ் சட்டைப் பேரணியால் மதுரை குலுங்கியது. கருஞ்சட்டைப் பேரணி, நீலச் சட்டைப் பேரணிகளைத் தொடர்ந்து செஞ் சட்டைப் பேரணிக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருமான கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுது மிருந்தும் இளைஞர்கள் பெண்களும் ஆண்களு மாய் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து பார்ப்பபனிய பாசிசத்தை வீழ்த்துவோம்; இந்தியாவில் ஒற்றை ஆட்சியைத் திணிக்காதே; இது பெரியார் மண் – சனாதன சக்திகளை அனுமதியோம் என்று உணர்ச்சி முழக்கமிட்டு வந்தனர். திராவிடர் விடுதலைக்கழக சார்பில் சென்னை, மேட்டூர், சேலம், நங்கவள்ளி, கொளத்தூர், மயிலாடுதுறை, நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து தனிப் பேருந்துகளிலும் வேன்களிலும் திரண்டு வந்திருந்தனர். கழகப் பெயருடன் கழகக் கொடி செஞ் சட்டையில் அச்சிடப்பட்டிருந்தது. விடுதலை சிறுத்தைகள், தந்தை...

செஞ்சட்டைப் பேரணி மாநாட்டில் கொளத்தூர் மணி உரை கொள்கை எதிரியை அடையாளம் கண்டு விட்டோம்; கொள்கை அணியை உருவாக்குவோம்!

செஞ்சட்டைப் பேரணி மாநாட்டில் கொளத்தூர் மணி உரை கொள்கை எதிரியை அடையாளம் கண்டு விட்டோம்; கொள்கை அணியை உருவாக்குவோம்!

தி.க. கொடியை உருவக்கிய பெரியார், நடுவில் உள்ள சிவப்பு வட்டம் பெரிதாகி, சிவப்புக் கொடியாக மாறும் என்று கூறியதை நினைவு கூர்ந்தார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.  மதுரை செஞ்சட்டை பேரணிக்குத் தலைமை யேற்ற கழகத் தலைவர் மாநாட்டில் ஆற்றிய உரை: பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் நோக்கத்தை ஒருங்கிணைப்பாளர் பொழிலன் விளக்கியிருக்கிறார். இந்த மூன்று பேரணிகள் நடந்ததும் இதன் முதன்மை மாந்தர்களாக காட்டப்படுகிற பெரியாரும், அம்பேத்கரும், மார்க்சும் எளிய வஞ்சிக்கப்பட்ட மக்களை இலக்காக கொண்டு தத்துவங்களை உருவாக்கிப் போராடியவர்கள். இந்த மண்ணில், சுரண்டப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்கள் இன்னும் இருக்கிறார்கள். அந்த சூத்திரர்களும், பஞ்சமர்களும் தான் உழைப்புச் சுரண்டல்களுக்கு உள்ளானவர்களாக இருக் கிறார்கள். இந்த மூன்று பேரின் நோக்கமும் ஒன்று தான். ஆனால், தனித்தனியாக இயங்கி வந்திருக் கிறோம். இது இயங்கக் கூடாது என்ற கருத்து 30’களில் தோன்றியிருந்தாலும், இடையில் பிரிவு, உறவு இரண்டும் நடந்திருக்கின்றன. ஆனால், இந்த வேளையில், இந்த நாட்டில்...

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தையில்: ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கும்பகோணம் மீன் மார்க்கெட் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மண்டல மாநாடு 16.5.2022 அன்று மாலை சிறப்புடன் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் மு. இளங்கோவன் தலைமையில் சா.வெங்கடேசன் (ஒன்றிய அமைப்பாளர்) முன்னிலையில் நடைபெற்றது. கு. பாரி (தஞ்சை மாவட்ட செயலாளர், தி.வி.க.), தெ. மகேசு (மாவட்டச் செயலாளர்), திருச்சி நாகம்மையார் இல்லத்துப் பெண்ணைத் திருமணம் செய்தவரும், திராவிடர் கழகத் தோழருமான பவுண்டரீகபுரம் முருகேசன், பொறியாளர் திருநாவுக்கரசு (உழவர் இயக்கம்), சி.த. திருவேங்கடம் (மாவட்ட அமைப்பாளர்), சா. விவேகானந்தன் (மண்டல செயலாளர் வி.சி.க.) உள்ளிட்டோர் மாநாட்டில் பேசினர். முன்னதாக, பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் திரிபுரசுந்தரி மற்றும் தி.க. தோழர்கள் குணா, சங்கர், கழகத் தலைவர்-பொதுச் செயலாளருக்கு துண்டுகளை அணிவித்து மகிழ்ந்தனர். கரிகாலன் நன்றி கூறினார். தொடர்ந்து 20...

பார்ப்பன எதிர்ப்பு ஆன்மீகத்தையும் அரவணைத்ததே திராவிடக் கோட்பாடு

பார்ப்பன எதிர்ப்பு ஆன்மீகத்தையும் அரவணைத்ததே திராவிடக் கோட்பாடு

மே 21இல் குடியாத்தத்தில் நடந்த கழக மண்டல மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து: குடியாத்தம், வேலூர் மாவட்டங்கள் திராவிடத்தின் கொள்கை வேர்களைத் தாங்கி நிற்கிறது, ஆரிய எதிர்ப்பு என்ற சனாதன வர்ணாஸ்ரம பார்ப்பன எதிர்ப்புக்கு களமாடிய முன்னோடிகள் இந்த மாவட்டத்தில் உண்டு. பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, சமூக சீர்த்திருத்தப் படை ஒன்றை இப்பகுதியில் உருவாக்கி, தேனீர்க் கடை இரட்டைக் குவளைத் தீண்டாமை – பார்ப்பன உயர்ஜாதியினர் வீதிகளில் தீண்டப்படாத மக்கள் நடக்கும் உரிமை மறுக்கப்பட்ட சமூகக் கொடுமைகளை எதிர்த்து நேரடி நடவடிக்கையில் இறங்கினார். சாவு சேதி சொல்லவும், பறை அடிக்கவும் தீண்டப்படாத மக்கள் மீது அவமானங்கள் சுமத்தப்பட்டதை எதிர்த்து பறை எரிப்புப் போராட்டம் நடத்தியபோது திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற வேண்டும் என்று பெரியார் ‘விடுதலை’யில் அறிக்கை விடுத்தார். 1954இல் ஈரோட்டில் பெரியார் நடத்திய புத்தர் கொள்கை பரப்பு மாநாடு – குலக் கல்வி திட்ட எதிர்ப்பு மாநாடுகளில்...

சதுர்வேதிமங்கலம் – ஆரிய மாடல் சமத்துவபுரம் – திராவிட மாடல்

சதுர்வேதிமங்கலம் – ஆரிய மாடல் சமத்துவபுரம் – திராவிட மாடல்

தமிழ்நாட்டில் தமிழ் மன்னர்கள் பலரும் ஆரியத்தைக் கொண்டாடியதாகவே வரலாறு கூறுகிறது. ‘பிராமணர்’களுக்கு ஊர்களும் கிராமங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. வேதப் பார்ப்பனர்ககளின் வேத அறிவே உலகத்தை வாழ்விக்கும் என்று மன்னர்கள் நம்பினார்கள். அதற்குப் பெயர் ‘சதுர்வேதிமங்கலம்’; தமிழ் தாத்தா என்று கொண்டாடப்படும் சங்க இலக்கிய சுவடிகளைத் தொகுத்த உ.வே.சாமிநாதய்யர், தனது பிறந்த ஊரான ‘உத்தமதானபுரம்’ பிராமணர்களுக்கு ‘தானமாக’ வழங்கப்பட்ட ஊர் என்பதை தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார். ஒரு அரசர், தனது வேதபண்டிதர் பரிவாரங்களுடன் தங்கள் கிராமத்தில் ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்து, உணவு உண்டு, வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொண்டாராம். பிறகுதான்  அன்றைய தினம் அமாவாசை என்பது தெரிந்து அதிர்ந்து போனாராம். அமாவாசையில் வெற்றிலைப் பாக்கு போடுவது- தெய்வக் குற்றமாம். இந்தக் ‘குற்றத்துக்கு’ பரிகாரம் தேட, அருகிலிருந்த வேத பண்டிதர்கள் ஆலோசனைப்படி  அந்தப் பகுதியை வேத பண்டிதர்களுக்கு தானமாக்கி வீடுகளைக் கட்டித் தந்தாராம். அதுவே தான் பிறந்த உத்தமதானபுரம் வரலாறு என்று...

சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி ‘நீண்டகாலமாக சிறைப்படுத்தப்பட்ட இஸ்லாமியர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுவிக்க – அரசு முன்வர வேண்டும்!

சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி ‘நீண்டகாலமாக சிறைப்படுத்தப்பட்ட இஸ்லாமியர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுவிக்க – அரசு முன்வர வேண்டும்!

சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி: பேரறிவாளன் விடுதலை என்பது அனை வருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். ஈழ ஆதரவாளன் என்ற முறையில், ஈழம் தொடர்பானது என்று கருதிக் கொண்டு, ஏதோ பயங்கரவாதம் நடந்து விட்டதாக பேசிக்கொண்டு அரசுகள் அவர் மீது வழக்கு புனைந்ததும், தண்டிக்கப்பட்டதும் வேறு கதை என்றாலும் கூட, இப்போது இவரது விடுதலையை 30 ஆண்டுகள் கடந்தும் காலம் தாழ்த்திக் கொண்டிருந்த அரசுகளுக்கு குறிப்பாக ஆளுநருக்கு தலையில் குட்டு வைத்ததைப் போல இந்த தீர்ப்பினை நான் பார்க்கிறேன். அவர் நேரடியான குற்றச் செயலில் ஈடுபடவில்லை என்று வழக்கே கூறினாலும், அவருக்கு உட்சபட்ச தண்டனை வழங்கப் பட்டது. அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின்பும், இவ்வளவு காலம் சிறையில் இருந்தார் என்பதை எந்த மனிதநேயர் களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பாலானோரால் தேசத் தந்தை என்று சொல்லப்படுகின்ற காந்தியைக் கொன்ற கோபால் கேட்சேவிற்கு 15...

சிவகங்கை மண்டலத்தில் தொடர் பரப்புரை  மாநில கல்வி உரிமைகளைப் பறித்து, மதவெறியைத் திணிக்கிறது, ஆரிய மாடல்

சிவகங்கை மண்டலத்தில் தொடர் பரப்புரை மாநில கல்வி உரிமைகளைப் பறித்து, மதவெறியைத் திணிக்கிறது, ஆரிய மாடல்

மதுரை – சிவகங்கை : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” தெருமுனைக் கூட்டங்களின் நிறைவாக சிவகங்கையில் 13.05.2022 வெள்ளி மாலை 5.00 மணியளவில் சிவகங்கை சண்முக ராஜா கலையரங் கில் இராமச்சந்திரனார் நினைவரங்கத் தில் மண்டல மாநாடு நடை பெற்றது. மண்டல மாநாட்டிற்கு நா.முத்துக் குமார் தலைமை தாங்கினார். தவச் செல்வன், ரமேஷ் முன்னிலை வகித்தனர். அறிவுமதி வரவேற்புரை யாற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநிலப் பொரு ளாளர் திருப்பூர் துரைசாமி, மதுரை மாவட்டச் செயலாளர் மணியமுதன், மா.பா., மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் பெரியார் முத்து நன்றி கூறினார். முன்னதாக மாநில உரிமையை பறிக்காதே! கல்வி உரிமையை தடுக்காதே! மத வெறியை திணிக்காதே! எனும் முழக்கத்தோடு நமக்கான அடையாளம் திராவிட மாடல் தெருமுனைக்...

குடந்தையில் கொளத்தூர் மணி பேட்டி: தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!

குடந்தையில் கொளத்தூர் மணி பேட்டி: தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!

குடந்தையில் நடைபெற்ற கழக மண்டல மாநாட்டுக்கு வருகைப் புரிந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. குடியரசுத் தலைவர் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகிற ஒரு அரசு ஊழியர் என்பது தான் இவரது தகுதி நிலை ஆகும். ஆளுநர் தன்னிச்சையாக எதிலும் செயல்பட முடியாது. அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பது தான் அரசியலமைப்பு அவருக்கு விதித்திருக்கிற கடமை ஆகும். ஆளுநர் உரை என்பது கூட அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை படிப்பது தானே தவிர ஆளுநர் தனது கருத்தை சொல்வதற்கு உரிமை இல்லை. ஆனால், அண்மைக் காலங்களில் தமிழ்நாடு ஆளுநர், ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினால், அரசியலமைப்புச் சட்டத்தில், மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க காலவரையறை இல்லை என்பதை மட்டும் வைத்துக் கொண்டு, இதுவரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களைக் கூட முடக்கிப் போட்டிருக்கிறார்....

28 தெருமுனைக் கூட்டங்கள்; கோவையில் மண்டல மாநாடு : ‘திராவிட மாடலின்’ சமூகநீதி – சுயமரியாதை கொள்கைகளுக்கு மக்கள் பேராதரவு

28 தெருமுனைக் கூட்டங்கள்; கோவையில் மண்டல மாநாடு : ‘திராவிட மாடலின்’ சமூகநீதி – சுயமரியாதை கொள்கைகளுக்கு மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு கோவை டாடாபாத் ஆறுமுக்கு சாலையில் 11.5.2022 புதன் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. முன்னதாக 23.04.2022 அன்று கோவை மேட்டுப் பாளையத்தில் துவங்கி கோவை திருப்பூர் உடுமலை பொள்ளாச்சி என பல்வேறு பகுதிகளில் 07.05.2022 வரை 28 தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து நமக்கான அடையாளம் திராவிட மாடல் எனும் பரப்புரையை கோவை திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியது. நிறைவாக மண்டல மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் துவக்க நிகழ்வாக திராவிட மாடல் குறித்தப் பாடல்களை மேட்டூர் டி.கே. ஆர் இசைக் குழு வினர் பாடினர். இதில் கழகத் தோழர்கள் மேட்டூர் கோவிந்த ராஜ், கோவை கிருஷ்ணன், புரட்சித் தமிழன், பொள்ளாச்சி வினோதினி ஆகியோர் பாடல்களை பாடினர். பின்பு திராவிட மாடல் மண்டல மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு கோவை மாநகர கழகச்...

பள்ளிப்பாளையத்தில் மண்டல மாநாடு எழுச்சி ஆரியத்துக்கு எதிராக உருவானதே திராவிடம்

பள்ளிப்பாளையத்தில் மண்டல மாநாடு எழுச்சி ஆரியத்துக்கு எதிராக உருவானதே திராவிடம்

ஈரோடு மண்டல மாநாடு – பள்ளிப்பாளை யத்தில் எழுச்சியுடன் நடந்தது. நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை விளக்கி 33 தெருமுனைக் கூட்டங்களைத் தொடர்ந்து மண்டல மாநாடு நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாட்டின் நோக்கங்களை விளக்கி, ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக 8 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பாக 25 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், நாமக்கல் மாவட்டம் சார்பாக 10 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும் நடைபெற்று முடிந்திருந்தன. தெருமுனைக் கூட்டங்களில், மாவட்ட இயக்க முன்னோடிகளும் ,திரளான தோழர்களும், தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். பள்ளிபாளையத்தில் மண்டல மாநாடு : ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாடு 09.05.22 திங்கள் மாலை 5 மணிக்கு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நேரு திடலில் தொடங்கியது. மாநாட்டையொட்டி பள்ளிபாளையம் நகர் முழுவதும் சுவரொட்டிகளும்...

இராசிபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

இராசிபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா, ஆணவப் படு கொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் பாராட்டு விழா, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற (தி.மு.க.கூட்டணி) முதல் நகர்மன்ற பெண் தலைவர், மற்றும் நகர்மன்ற பெண் உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா நடைபெற்றன. இம்முப்பெரும் விழா 25.04.2022 அன்று மாலை 5 மணியளவில், ராசிபுரம் கன்னட சைனியர் மண்ட பத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு, திராவிடர் விடுதலைக் கழக நகரச் செயலாளர் பிடல் சே குவேரா தலைமை வகித்தார்.திராவிடர் விடுதலை கழக நகர அமைப் பாளர் சுமதி மதிவதனி வரவேற்பு கூறினார். நிகழ்விற்கு, மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, இராசிபுரம் நகரத் தலைவர் அன்பரசன், வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய...