Category: திவிக

கழகக் களப் பணியாளர் தமிழரசு முடிவெய்தினார் நெகிழ்ச்சியுடன் நடந்த படத்திறப்பு

கழகக் களப் பணியாளர் தமிழரசு முடிவெய்தினார் நெகிழ்ச்சியுடன் நடந்த படத்திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயல்வீரர், பெரியார் தொண்டர், கழகக் களப் பணியாளர் கோ. தமிழரசு (44)  11.06.2020  அன்று  நள்ளிரவு உடல்நலக் குறைவால் முடிவெய்தினார். தோழர் தமிழரசு படத்திறப்பு நிகழ்வு சென்னை தலைமை அலுவலகத்தில் 17.09.2020 காலை 10 மணியளவில் நடை பெற்றது. நிகழ்விற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். தோழர்கள் சி. இலட் சுமணன், தா. சூர்யா, கோ. வீரமுத்து, தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் க.சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தோழர் தமிழரசுவின் இயக்க உணர்வையும், தோழர்களுக்கு தாமாக முன் வந்து உதவிடும் பண்பையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர். கருப்பு பிரதிகள் நீலகண்டன், ‘விரட்டு’ ஆனந்த், தலைமைக்குழு உறுப் பினர் அய்யனார் ஆகியோர் தமிழரசு அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் படத்தைத் திறந்து வைத்து  உரை யாற்றினார். மாவட்டத் தலைவர் ம.வேழவேந்தன் நன்றி...

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் !

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் !

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் ! ___________________________________ அன்பார்ந்த தோழர்களே! வணக்கம். நேற்று (22-7-2020) கோவை மாவட்டம், அன்னூரில் பெரியாரிய இயக்கத் தோழர்களும், ஜனாயக சக்திகளும் இணைந்து முன்னெடுத்த ஒரு போராட்டம், நம்மைப் போன்ற முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்த தோழர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது. என்னதான் நடந்தது? அன்னூருக்கு அருகிலுள்ள நல்லி செட்டிப் பாளையம் எனும் ஊரைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் சண்முகநாதன் என்பவர் மோடி குறித்தும் கந்தசஷ்டிக் கவச சிக்கல் குறித்தும் முகநூலில் பதிவிட்டிருந்தார் என்பதற்காக இந்து அமைப்பினர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனே, அன்னூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்றினைப் பதிவு செய்து 21.07. 2020 அன்று மாலை அத்தோழரைக் கைது செய்துள்ளனர். அதேவேளையில் பெரியார் குறித்து மிகக்கேவலமாக முகநூலில் பதிவுகளைப் போட்டுள்ள அன்னூர்...

இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!

இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!

18-7-2020 இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை கொரோனாவின் வருகை. வரலாற்று வளர்ச்சிப் போக்கை விரைவுபடுத்தியுள்ளது. அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டியவர்களாக தமிழ் மக்களாகிய நாமும் உள்ளோம். கொரோனா ஏற்படுத்தும் அரசியல் பொருளியல் சங்கிலித் தொடர் நிகழ்வுகளால் எழப்போகும் போராட்டங்களும் கொரோனா போலவே உலகெங்கும் பரவுவது திண்ணம். மென்மேலும் மக்கள்திரளின் காலமாக எதிர்காலம் விரிகிறது. ஆயினும் அந்த மக்கள்திரளின் கருத்தை அறிவதற்குத் தேர்தல் வழியாக அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெயராளர்களின் கருத்தையே இன்றைய பன்னாட்டுலக அரசுகள் கோரி நிற்கின்றன. இது அரசியலில் ஒரு குடியாட்சிய மரபாக வளர்ந்து வந்திருக்கக் காண்கிறோம். ஒற்றையாட்சி அரசமைப்புக்கு உட்பட்ட நாடாளுமன்றத்திற்கான இடங்களைப் பிடிப்பதால் இலங்கைத் தீவுக்குள் ஈழத் தமிழர்களுக்கு பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், இலங்கைத் தீவுக்கு வெளியே பன்னாட்டரங்கில் தமிழர்களின் வேணவாக்களை...

ஆனைமலை யில் தி.வி.க. தோழர் சிவா கைது

ஆனைமலை யில் தி.வி.க. தோழர் சிவா கைது

#திவிக_தோழர்_ஆனைமலை_சிவா_கைது தோழர்ஆனைமலை யில் தி.வி.க. தோழர் சிவா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் அவரின் வீட்டின் அருகிலுள்ள கறையான் புற்றில் மக்கள் வழிபாடு செய்வது வழக்கம் அதனை இடித்து விட்டதாக பொய்யான வழக்கு. கொரானாவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்க கூடாது என்று அரசு அறிவித்து இருக்கும் வேலையில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை கண்டு நாம் சொன்னால் தவறாக போய்விடும் என்று காவல்துறை, வருவாய் துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார். அந்த துறையினரும் அந்த இடத்திற்கு வந்து மக்களை கண்டித்தும் அறிவுரையும் வழங்கி உள்ளனர். கடந்த 10. 7. 2020 அன்று இரவு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மது போதையில் தோழர் சிவா வீட்டின் அருகில் வந்து நின்று கொண்டு காவல்துறைக்கும் ஆர் ஐ .க்கு தகவல் சொன்னவன் யார் என்று எங்களுக்கு தெரியும். தைரியம் இருந்தால் வெளியே வா என்று கடுமையான கெட்ட வார்த்தைகள்...

கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு

கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு

“கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு பற்றி #திராவிடர்_விடுதலைக்_கழகப் #பொதுச்செயலாளர் #விடுதலை_இராசேந்திரன்” “YouTube channel ஒன்றின் மீது, பாஜக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறது. “இந்த channel ஹிந்து கடவுள்களின் புனிதத்தை கெடுக்கிறது; கடவுள்களுக்கு பாலியல் விளக்கங்களை அளிக்கிறது; இது மதத்தின் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குகிறது” என்று அந்த புகார் கூறுகிறது. தமிழ்நாடு காவல்துறையின் cyber crime, இது குறித்து விசாரித்து, 5 பிரிவுகளின் கீழ், அந்த youtube channel மீது வழக்குகளை பதிவு செய்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஜாதி, மதம், இனம், மொழி சம்மந்தமாக விரோத உணர்வை தூண்டுகின்ற 5 பிரிவுகள் இந்த வழக்குகளாகும். உண்மையில் இந்த youtube channel என்ன செய்திருக்கிறது? ஹிந்து கடவுள்களுக்கான பல்வேறு புராணங்களில், 1. ஹிந்து கடவுள்களின் பிறப்புகள், 2. அவர்களின் அவதார மகிமைகள், 3. சடங்கு ஆச்சாரங்களுக்கு ஹிந்து புராண நூல்களில் கூறப்படுகின்ற விளக்கங்கள் இவற்றை அந்த நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்… – – – – – – – – – – – – – முதல் அமர்வு – – – – – – – – – – – – – சூலை 17, 18, 19 (வெள்ளி, காரி, ஞாயிறு – மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 வரை) கருத்தரங்கம் 1 (சூலை 17) ————————- தலைப்பு: மநு நூலும் வேத புராண சாஸ்திரங்களும் தமிழருக்கு எதிரானவை.. தலைமை: தோழர் கோவை கு. இராமக்கிருட்டிணன் கருத்துரையாளர்கள்: பேராசிரியர் வீ அரசு தோழர் குடந்தை அரசன் தோழர் நிலவழகன் கருத்தரங்கம் 2 (சூலை 18) ————————- தலைப்பு: ஆரியப் பார்ப்பனியம் ஏன் எதிர்க்கப்பட வேண்டியது.. தலைமை: தோழர் வாலாசா வல்லவன் கருத்துரையாளர்கள்: தோழர் இரா.அதியமான் பேராசிரியர் கருணானந்தம் வழக்கறிஞர் அருள்மொழி கருத்தரங்கம் 3...

ஊடகத்துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்! #SaveJournalismfromBrahmanism

ஊடகத்துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்! தமிழ்நாட்டு வரலாற்றில் பல நூற்றாண்டுகால இடைவெளிக்குப் பிறகு பார்ப்பன ஆதிக்கத்தோடு மிகக் கடுமையான போராட்டத்தைத் தொடங்கியவர் தோழர் பெரியார். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர்கழகம் என பல இயக்கங்களின் தலைவராக இயங்கினாலும், அவரது பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரின் தொடக்கம் “குடிஅரசு” எனும் ஊடகம் தான். வடநாடுகளில் பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரைத் தொடங்கிய தோழர் அம்பேத்கரின் தொடக்கமும் “மூக்நாயக்” எனும் ஊடகம் ஏடுதான்.  பார்ப்பனப் பத்திரிகைகளின் நிலைபற்றிய தோழர் அம்பேத்கரின் வரிகள்…. “வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவைப் பற்றிய செய்திகளைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சி தான் ஒட்டுமொத்த இந்திய மக்களின் பிரதிநிதியாகத் திகழ்கிறது என்று தான் எண்ணுவார்கள். தலித் மக்கள் உட்பட அனைவரின் பிரதிநிதியாக காங்கிரஸ் கட்சியைத்தான் கருதுவார்கள். இதற்கு முக்கியக் காரணம் தலித் மக்களுக்கென்று தனியாக ஒரு ஊடகம் இல்லை. காங்கிரஸின் கருத்துக்களுக்கு மாற்றான உண்மைகளை எழுத பட்டியலின மக்களிடம் பத்திரிகைகள் எதுவுமே...

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை  –   மா.பொழிலன்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை – மா.பொழிலன்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை  –   மா.பொழிலன் மா. பொழிலன்:  pozhilantamizh@gmail.com பாவலரேறு  ஐயா பெருஞ்சித்திரனார்  அவர்களின்  எழுத்தாற்றல், நூலாக்கங்கள் குறித்தெல்லாம் மணிக்கணக்காக, நாள் கணக்காகப் பேசிக் கொண்டிருக்கவும், எழுதிடவும் இயலும். அதே போல் மறு அச்சாக்கம் செய்யப்பெற்று அண்மையில் வெளிவந்துள்ள ஐயா அவர்களின் நான்கு நூல்களுள் செயலும் செயல் திறனும், ஓ…ஓ.. தமிழர்களே!, சாதி ஒழிப்பு  குறித்தெல்லாம் விரிவாக, அறிந்திட ஏராளமான செய்திகள் உள்ளன. இந்நிலையில், ஐயா அவர்கள் ‘பெரியார்’ குறித்து எழுதிய கட்டுரைகள், பாடல்களின் தொகுப்பாகவே இந்நூல் வெளி வந்துள்ளது. அண்மையில் பெரியார்  படத்தைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர் படத்தின் மீது சிறுநீர் பெய்து இழிவுபடுத்தியதுமான நிகழ்வுகள் நடைபெற்ற சூழலில் பெரியார் குறித்து அறிய வேண்டுவதும், ஆய்வு செய்ய வேண்டுவதும், இன்றியமையாததாகவே எண்ணுகிறோம். பெரியாரின் படத்தைச் சில நாள்களுக்கு முன்னர் எரித்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களோ வைதீகக் கருத்துடைய வர்களோ மட்டும் அல்லர்; தமிழ்த்தேசம் தேவை என்பதாகக்...

பெரியார் என்ன பெருங்கேடரா….?  – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி

பெரியார் என்ன பெருங்கேடரா….? – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி

பெரியார் என்ன பெருங்கேடரா….?                                                    – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி கடந்த மார்ச்சுத் திங்களில் சென்னையில் நிகழ்ந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு பாடல்தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். அங்கு நிகழ்வரங்கின் நுழைவாயிலில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நூல்களுள் நாம் வெளியிட்ட தூயதமிழ்ப்பெயர்கள் – நூலினையும் விற்பனைக்கு வைத்திருந்தோம்.  மேற்பார்வைக்கு எம்முடன் வந்த சிறுவன் ஒருவனை அமர்த்தியிருந்தேன்.  அந்தத் தூயதமிழ்ப் பெயர்கள் நூலின் முன்அட்டையில் திருவள்ளுவர் படமும் பின்அட்டையில் பாவாணர், பாவேந்தர், பாவலரேறு படங்களுடன் பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் படமும் அச்சிட்டிருந்தோம்.  அந்த நூலைப் பார்த்த தோழர் ஒருவர், அதிலிருந்த பெரியாரின் படத்தைப் பார்த்து, “இவனைப் போட்டிருப்பதால் தான் இதை வாங்க யோசிக்கிறேன்…” என்றாராம்.  நிகழ்வின் இறுதியில் நாங்கள் புறப்படும்போதுதான் இதை அந்தச் சிறுவன் எங்களிடம்...

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

*திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு தீர்மானங்கள் :* திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழுக் கூட்டம் 30.06.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் டீம் லிங்க் செயலி வழியாக நடைபெற்றது. தலைமைக் குழுக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைக் குழுக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராஜன், அன்பு தனசேகர், சூலூர் பன்னீர்செல்வம், உமாபதி, மடத்துக்குளம் மோகன், அய்யனார், இளையராஜா, காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமைக் குழுக் கூட்டம் காலை 10.30 மணி அளவில் துவங்கி மதியம் 2 30 மணி வரை நடைபெற்றது. கழக அமைப்பின் இணையதள செயல்பாடுகள், கருத்தரங்குகள், கொரோனா பேரிடர் காலத்தில்...

இணைய வழி தொடர் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் இணைய வழி தொடர் கருத்தரங்கம் நேரம் : மாலை 6:30 மணிக்கு தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களின் அறிமுக உரையோடு பல்வேறு இயக்க தலைவர்களின் கருத்துரைகள் திராவிடர் விடுதலைக் கழக முகநூல் பக்கத்திலும் facebook.com/dvk12 யூ ட்யூப் பக்கத்திலும் youtube.com/dvkperiyar நேரலையில் காணலாம் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளவும். திவிக இணைய தள பிரிவு

ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் 3 – கொளத்தூர் மணி

ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் 3 – கொளத்தூர் மணி

திமுக பங்கு முந்தைய கட்டுரை படிக்க தி.மு.கவின் பங்கும் குறைந்ததல்ல. 22.9.1981 அன்று நடைபெற்ற ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான இலங்கைத் தூதரக முற்றுகைப் போரில் ஏராளமானோர் சிறைப்பட்டனர். திராவிடர் கழகம் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து, சிறைப்படுத்தப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு மிகப்பெரிய பொதுக் கூட்டத்தினை சில நாட்களில் நடத்தியது. ஈழப் போராளித் தலைவர்கள் குட்டிமணி, செகன், தங்கதுரை ஆகியோர் சிங்கள அரசால் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, 28.8.1982ஆம் நாளை ஈழத்தமிழர் பாதுகாப்பு நாளாக அறிவித்து, அனைவரையும் கருப்புப் பட்டை அணிய வலியுறுத்தியதோடு தமிழ்நாடு முழுதும் கண்டனக் கூட்டங்களை தி.மு.க நடத்தியது. திராவிடர் கழகத்தினரும் இணைந்து அக்கூட்டங்களை நடத்தினர். பாண்டியனார் சந்தை (பசார்) வழக்கு போன்ற அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுமாறும், இலங்கை அரசு கேட்டிருந்தவாறு போராளித் தலைவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது போன்ற முடிவுகள் திராவிடர் கழகத்தால் 18.6.83 அன்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டு, 2.7.1983...

ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் 2 – கொளத்தூர் மணி

உள்நுழையும் முன் முன்னுரை படிக்க தமிழ்நாட்டில் இருந்து பிழைப்பு தேடி, இலங்கை மலையக இரப்பர் தோட்டங்களுக்கு வேலைக்குப் போய், கொத்தடிமைகளாய் உழன்று வந்தனர், ‘இந்திய வம்சாவழித் தமிழர்கள்’. அம்மலையகத் தமிழர்களின் வாக்கு உரிமை பறிப்பு, குடியுரிமை நீக்கம் 1940களின் இறுதியில் நிகழ்ந்தது. அப்போது அம்மக்களுக்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் எழுந்தன. அம் மக்களின் நிலை குறித்து விரிவான கட்டுரைகளும் செய்தித் தாள்களின் முதன்மைச் செய்திகளும் நூல்களும் வெளிவந்தன. அரசியல் அமைப்புகள் மாநாட்டுத் தீர்மானங்களாகவும், செயற்குழு தீர்மானங்களாகவும் அம் மக்களுக்கான ஆதரவைத் தெரிவித்தன. தமிழக, இந்திய ஒன்றிய அரசுகளை அம்மக்களுக்கு ஆதரவாக செயலாற்றத் தூண்டின. அவற்றை செய்தவை திராவிடர் கழகமும், அப்போது புதிதாய் தோன்றியிருந்த திராவிடர் முன்னேற்றக் கழகமுமே ஆகும். ஈழக் கோரிக்கையை ஆதரித்து அதைத் தொடர்ந்து 1970களின் பிற்பகுதியில் எழுந்த தனித்தமிழ் ஈழக் கோரிக்கையை ஆதரித்து குரல் கொடுத்தவையும் இவ்விரு கழகங்களேயாகும். ஈழத்தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் எல்லாம் அரசுப் படைகளால் அடித்துத்...

உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது! – திவிக அறிக்கை

உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது! – திவிக அறிக்கை

உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது! ஜாதி ஆணவப்படுகொலை செய்பவர்களுக்கு இத்தீர்ப்பு துணிச்சலைக் கொடுத்துவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது! திராவிடர் விடுதலைக் கழக அறிக்கை : 2016 மார்ச் 13 அன்று ஜாதி மறுப்புத் திருமணம் செய்தார் என்கின்ற ஒரே காரணத்திற்காக உடுமலையில் பட்டப்பகலில் நடுவீதியில் சங்கர் மிகக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். அவர் காதலித்து திருமணம் செய்த கௌசல்யா பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர். அதனால் பிற்படுத்தப்பட்ட ஜாதி வெறியர்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சங்கரைப் படுகொலை செய்தனர் என்பது தான் இந்த படுகொலைக்கும் கௌசல்யா மீதான கொடூர கொலை முயற்சி தாக்குதலுக்கும் அடிப்படையான காரணம். இது கொலை வழக்கு மட்டுமல்ல கொலை செய்யும் நோக்கில் கொடுங்காயம் ஏற்படுத்திய கொலை முயற்சி வழக்கும் கூட. இதற்கு ஜாதிய ஏற்றதாழ்வுகள் மட்டுமே காரணம். சங்கரைப் படுகொலை செய்யும்...

ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் – கொளத்தூர் மணி

முன்னுரை தமிழ்நாட்டில் ஏறத்தாழ எல்லோருடைய உணர்வுகளும் ஈழத்துக்கும், ஈழ விடுதலைக்கும் ஆதரவானவைகளாக உள்ளன. ஆனால் செயல்தளத்தில், ஈழ ஆதரவு செயல்பாடுகளில் அவ்வாறு கூறிவிட முடியாது. மற்றொரு பக்கம், ஈழ ஆதரவு என்பதை, சொற்களால் பெரும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் செயல்பாட்டுத் தளத்துக்கு வந்ததில்லை. ஈழத்தில் 2009 மே திங்களில் நடந்து முடிந்த கடைசிக் கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், ஈழத்தின் அப்பாவித் தமிழ் மக்களை அழித்தொழித்தும் வெறியாட்டம் ஆடிய இலங்கை அரசுக்கு, இந்திய காங்கிரசு அரசு ஆயுதம், ஆளணி, உளவு, தொழில்நுட்ப உதவிகள் என முழுமையாய்த் துணை நின்றது. அவ்வரசின் கூட்டாளியாக இருந்த தி.மு.க. தன்னல நோக்கில் அமைதி காத்தும், தமிழ்நாட்டில் தன்னெழுச்சியாய் நடந்த ஈழ ஆதரவுப் போராட்டங்களைத் தந்திரமான பட்டினிப் போர், பகட்டுப் பேச்சுக்களாலும் – கூர்மழுங்கவும் செய்தது. உள்ளுக்குள் உறைந்து கிடந்த விடுதலைப் புலிகள் மீதான பகையுணர்வு அவ்வாறு வெளிப்பட்டது. அது அந்தக் கட்சியில் பெரும்பான்மையாக...

ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் ! மக்கள் பணியில் உயிர்நீத்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் அளித்துள்ள இரங்கல் செய்தி : திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர்களில் ஒருவருமான ஜெ.அன்பழகன் இன்று மரணமடைந்துவிட்டார்.கொரானோ தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். கடந்த சில வாரங்களாக கட்சியின் தலைமை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உணவுப் பொருள்களை வழங்குகிற உதவிகளை செய்துவந்தது. “ஒன்றிணைவோம் வா” என்ற பெயரில் செயல்பட்ட அத்திட்டத்தில் தீவிரமாக பங்கேற்று செயலாற்றி வந்தார் ஜெ.அன்பழகன். 1995ம் ஆண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அவர். மருத்துவர்கள் ஆலோசனையை மீறி பொது தொண்டாற்ற வந்தார் அவர். பொதுத்தொண்டின் வழியாக கிடைக்கின்ற மரணம் என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய மரணம்தான். இந்த மரணம் அவருக்கும்...

விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம் – கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கடும் கண்டனம்

விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம் – கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கடும் கண்டனம்

விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம், திராவிடர்விடுதலைக் கழகம் கடும் கண்டனம். இந்த சட்டவிரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களுக்கு திவிக முழு ஆதரவு ! இது குறித்து திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை : விகடன் பத்திரிக்கை குழுமம் 170 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. கொரோனா காலத்தில் வாழ்க்கை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்களுக்கு இப்படி ஒரு பேரதிர்ச்சியை விகடன் குழு கொடுப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. 1947ம் ஆண்டு தொழில் தகராறு சட்டப்படி இது சட்ட விரோத நடவடிக்கையாகும். கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு ஒரு தாக்கீதை பிறப்பித்திருந்தது இந்த ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு நிறுவனமும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தராமல் இருக்கக் கூடாது என்பதோடு அவர்களை...

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க!

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க!

“புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க!” – கூட்டறிக்கை – 16.05.2020 புலம்பெயர்தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்தக் கூடாது! சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்! தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலத்தை ஏற்படுத்தக் கூடாது! சனநாயக ஆற்றல்கள், இயக்கங்கள்,கட்சிகளின் கூட்டறிக்கை! பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொல்லொணா துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.கடந்த 50 நாட்களாக அவர்கள் கைக்குழந்தைகளுடன் வெறுங்கால்களிலும் சொந்த ஊர் நோக்கி நடந்தே செல்லும் காட்சிகளைப் பார்த்து வருகிறோம். கொரோனா பேரிடரின் போதும் பெருமுதலாளிகளுக்கு 68,000 கோடி கடனைத் தள்ளுபடி செய்யும் நடுவண் அரசு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் செல்வதற்கு போக்குவரத்தைக்கூட ஏற்பாடு செய்யாமல் மிக மோசமாக புறக்கணித்தது. முதல்சுற்று ஊரடங்கு அறிவிப்பின்போதே தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்தே செல்லும் தொழிலாளர்களைக் காப்பாற்ற நடவடிக்கை...

திருப்பூர் அவினாசி பழங்கரை – ஆர் எஸ் எஸ் மாவட்ட தலைவர் வன்கொடுமை – திவிக உள்ளிட்ட அமைப்புகள் புகார்

திருப்பூர் அவினாசி பழங்கரை – ஆர் எஸ் எஸ் மாவட்ட தலைவர் வன்கொடுமை – திவிக உள்ளிட்ட அமைப்புகள் புகார்

திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு அமைப்புகள் இனைந்து ஜாதி ஒழிப்பு கூட்டியக்கம் தொடங்கி அதன் வாயிலாக போராடி அவினாசி ஒன்றியம் பழங்கரை கிராமம் தேவம்பாளையம் அருந்ததிய பகுதியில் வசித்து வரும் ஜாதிய ஒடுக்குமுறைக்கு ஆளான லோகநாதன், த/பெ.முருகன் மாலதி ,த | பெ. முருகன் (இருவரும் அண்ணன் தங்கை) ஆகியோர் மீது ஜாதிய வன்மத்தை நடத்திய ஆதிக்க ஜாதியினர் மீது முதல் தகவல் அறிக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது ~~~~~~~~~~~~~~~~~ 16.5.2020 ~~~~~~~~ திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா பழங்கரை கிராமம் தேவம்பாளையம் அருந்ததியர் பகுதியில் வசித்துவரும் முருகன் என்பவர் மகன் லோகநாதன், மகள் மாலதி, அவர்களது வீட்டில் இருந்து அருகில் உள்ள கல்லாங்காடு தோட்டத்தில் லோகநாதன் ஆட்டுக்குட்டி சென்று விட்டது, என்று சொல்லி கல்லாங்காடு தோட்டத்தின் உரிமையாளர் மூர்த்தியின் மகன் பிரவீன் என்பவர், ஆட்டுக்குட்டியை பிடித்துச் சென்று விட்டு ,கொடுக்க மறுத்திருக்கிறார் லோகநாதன் மாலதியும்...

காவி நிறக் குட்டிக்கு பாலும்  கருஞ் சாந்துநிறக் குட்டிக்கு காலும்.!  உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி

காவி நிறக் குட்டிக்கு பாலும் கருஞ் சாந்துநிறக் குட்டிக்கு காலும்.! உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி

காவி நிறக் குட்டிக்கு பாலும் கருஞ் சாந்துநிறக் குட்டிக்கு காலும்.! உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி உச்சநீதிமன்றம் இந்திய அரசியல் சட்டத்தில் மிக முக்கிய அங்கம்.அரசியலமைப்புச் சட்டம் அதன் பாதையில் பயணிக்கின்றதா எனக் கண்காணிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் காவல் நாயாக விளங்கும் மக்களாட்சியின் மூன்று பெரிய தூண்களில் ஒன்று. ஆனால் இன்று அந்த  தூண் கறையான் அரித்து உளுத்துப் போனதற்கு சமூக நீதி என்ற பாதுகாப்பு இல்லாததே முக்கிய காரணம். உச்ச நீதிமன்றம் ஏழைகளுக்கு எட்டாத எட்டிக்காயாகவும் அங்கு கட்சிக்காரர்களைப் பொறுத்தும் வழக்கறிஞர்களுக்கு ஏற்பவும்  தீர்ப்புகளும் வழங்கப்படுகின்றன என பொதுமக்கள் நம்பிக்கை இழந்ததற்கும் அதுவே காரணம். மெட்றாஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக விசாரணை நீதிபதி பதவியில் இருந்து உயர்வு பெற்ற  தமிழகத்தைச் சேர்ந்த  திருமிகு ஏ. வரதராஜன் பின்னர் 10.12.1980 அன்று திருமதி இந்திரா காந்தி அமைச்சரவையில்  ஆந்திராவைச் சேர்ந்த துணிச்சலான திருமிகு பி.சிவசங்கர் அவர்கள்  சட்ட அமைச்சராக இருந்தபோது உச்ச நீதிமன்ற...

தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – கழகத் தலைவர் கோரிக்கை

தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – கழகத் தலைவர் கோரிக்கை

தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களின் அறிக்கையை முழுதுமாக நானும் ஏற்றுக் கொள்கிறேன் தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு எனது ஒப்புதலை அளிக்கிறேன். வன்கொடுமைப் புகார்களை அளிப்பதற்கு வாய்ப்பாக ஓர் புகார் எண்ணை அறிவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் 11-5-2020   தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களுடைய அறிக்கையோடு நானும் கீழ்க்கண்ட செய்தியினை அரசின் கவனத்திற்கும், காவல்துறைத் தலைமையின் கவனத்திற்கும், பொதுமக்களின் கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன். பவானியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளமதி என்ற பெண்ணும் கவுந்தப்பாடி யைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த செல்வன் என்பவரும் அவர்கள் இருவரின் முழு சம்மதத்தோடு கொளத்தூரை அடுத்த காவலாண்டியூரைச் சேர்ந்த திரு ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் 9-3-2020 அன்று திருமணம் செய்து கொண்டார்கள். செய்தியறிந்த பெண்ணின் குடும்பத்தினரும் அவர்களுக்குத் துணையாக ஏறத்தாழ நாற்பது ஐம்பது அடியாட்களும் வந்து திருமணத்தை...

தமிழகத்தை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – எவிடென்ஸ் கதிர்

தமிழகத்தை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – எவிடென்ஸ் கதிர்

தமிழகத்தை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக புகார் உதவி எண்கள் உருவாக்க வேண்டும் பத்திரிக்கை செய்தி இந்த கொரானா காலத்திலும் சாதிய கொலைகள், ஆணவ கொலைகள், காவல் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், குடியிருப்புகள் தாக்கப்படுதல், சாதி ரீதியாக இழிவுபடுத்தி அவமானபடுத்துதல் போன்ற வன்முறைகள் தலித்துகள் மீது அதிகரித்து உள்ளன. அதுமட்டுமல்ல நாற்காலியில் உட்கார அனுமதி மறுக்கின்றனர். சாதி ரீதியாக இழிவாக பேசுகின்றனர். பணி செய்யவிடாமல் சித்திரவதை செய்கின்றனர் என்று மூன்று பஞ்சாயத்து தலைவர்கள் புகார் தெரிவித்து இருக்கின்றனர். கடந்த நான்கு நாட்களில் 4 தலித்துகள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தலித்துகள் மீது சாதிய கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தமிழக முதல்வர் இக்கொடுமைகளுக்கு எதிராக உரிய அளவிற்கு நடவடிக்கை எடுக்க வில்லை. குழந்தைகள் மீதும் பெண்கள் மீதும் வன்முறை தடுப்புக்கு என்று உதவி எண்களை அரசு வெளியிட்டு இருக்கிறது. அவற்றின்...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 11

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 11

காட்சி – 11 இடம் : இலங்கை இராவணன் அவை. பாத்திரங்கள் : இராவணன், மேகநாதன், கும்பகர்ணன், விபீடணன், அமைச்சர்கள், அவைப் பிரதிநிதிகள், சேனாவீரர்கள், மற்றும் பலர். இராவ : சிங்கத்தின் பீடத்திலே சிறு நாயை ஏற்றி விட்டார்கள்! துரோகம் வீரத்தை விழுங்கிவிட்டது! வாலியை மறைந்து நின்று கொன்றுவிட்டு, சுக்ரீவனை மன்னனாக்கி விட்டார்களாம் அந்த ஆரியச் சிறுவர்கள். மேக : சதிக்குச் சாய்ந்துவிட்டதே அப்பா; சமருக்கு அஞ்சாத தென்னாடு. இராவ : வஞ்சகர்கள் பெருகிவிட்டார்கள் குழந்தாய்! மேக : மாற்றானின் கால்பிடித்து மன்னன் ஆவதைவிட, மானத்தை விட்ட செயல் வேறு உண்டா? இராவ : பதவிப் பித்து மானத்தை மறக்கடித்துவிட்டது ஒன்றுபட்ட தமிழகத்திலே தமிழன் வாழ்க்கையிலே பிளவு, ஆரியத்தின் ஊடுருவல்…. மேக : அந்த பேதத்தை நீக்க வேண்டியது தங்கள் கடமை அப்பா. இராவ : அதற்காகத் தமிழனும் தமிழனும் மோதிக் கொள்ள வேண்டியதுதான்; வந்திருக்கும் ஆரியர்களுக்காக வாளேந்தி நிற்பவர்கள் யார்?...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 10

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 10

காட்சி – 10 இடம் : கிட்கிந்தையில் ஒரு மலை அடிவாரம் பாத்திரங்கள் : அனுமன், அங்கதன், சாம்பவந்தன், மற்றும் பலர் அனு : நீங்கள் எல்லோரும் இங்கேயே இருங்கள். நான் மட்டும் சம்பாதி முனிவன் சொன்ன விவரப்படி இலங்கை சென்று சீதாபிராட்டியாரைக் கண்டு திரும்புகிறேன். நான் வருகிறவரையில் வேறு எங்கும் போகாதீர்கள். அங்க : *ஆமாம்! (* கி.கா. 53-ம் சருக்கம் 1-2 55-ம் சருக்கம் 1-16) சீதையைக் காணாமல் நாம் சுக்ரீவனையோ ராமனையோ பார்ப்பதற்கில்லை. அந்தக் கொடியவர்கள் குணம்தான் நாம் அறிந்ததாயிற்றே. அனு : நான் எப்படியும் சீதையைக் கண்டே திரும்புகிறேன். அங்க : அனும! நீ எப்படி இலங்கைக்குப் போவாய்? அனு : இலங்கைக்குப் போவது முடியாத காரியமென்று நினைத்துவிட்டாயா அங்கதா? அங்க : இடையிலே பெருங்கடல் இருக்கிறதாமே! அனு : இல்லை! அனுபவமில்லாதவர்கள் – ஆய்ந்து பார்க்கத் திறனில்லாதவர்கள் கட்டிய கதையப்பா அது எனது. –...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 9

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 9

காட்சி – 9 இடம் : சுக்ரீவன் கொலுமண்டபம். பாத்திரங்கள் : அங்கதன், அனுமான், ராமன், லட்சுமணன், மற்றும் பலர். [கிட்கிந்தையில் சுக்ரீவனுக்கு முடிசூட்டப்பட்ட சில காலத்திற்குப் பிறகு ஒரு நாள் சுக்ரீவன் கொலுவிருக்கிறான். அங்கதனும் அனுமானும் அருகில் இருக்கின்றனர்; ராமனும் லட்சுமணனும் உட்கார்ந்திருக்கின்றனர்.) ராமன் : சுக்ரீவ! உன் ஆசை, நிறைவேறிவிட்டது. என் கடமையும் முடிந்து விட்டது; இனி நீ எனக்கு சீதையை மீட்டுத் தரவேண்டும். லட்சு : சீதையை ராவணன் எங்கு சிறையிட்டிருக்கிறான் என்பதை முதலில் கண்டறிந்தாக வேண்டும். அனு : பிரபு, நேற்று இந்த நகை மூட்டையைத் தெற்கே உள்ள குன்றின் அடிவாரத்தில் நமது வீரர்கள் கண்டெடுத்து வந்தனர். இவைகள் ஒரு வேளை பிராட்டியாருடைய நகைகளாக இருந்தாலும் இருக்கலாம். [ராமனும் லட்சுமணனும் ஆவலோடு அந்த நகை மூட்டையை வாங்கிப் பிரிக்கின்றனர்.) ராமன் : *சீதா! அய்யோ ! இவைகள் உன் நகைகள் போலவே இருக்கின்றதே. தம்பி லட்சுமணா!...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 8

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 8

காட்சி – 8 இடம் : கிட்கிந்தையில் மலையும், காடும் அடர்ந்த ருஷ்யமுக பர்வதத்தின் ஒரு பகுதி. பாத்திரங்கள் : சுக்ரீவனும், அனுமானும். சுக்ரீவன் : இனிமேலும் நான் அரசனாக முடியும் என்று நீ நினைக்கிறாயா? அனும! அனு : ஏன் முடியாது சுக்ரீவா? சாதுர்யமும் சமயோசிதமும் நிறைந்த இந்த அனுமான் உன் அருகில் இருக்கும் போது, நீயேன் சாம்ராஜ்ய அதிபதியாக முடியாது? சுக் : *என்ன இருந்தாலும் என் அண்ணனுக்கு நான் அவ்வளவு பெரிய துரோகம் செய்திருக்கக் கூடாது. அவனைக் குகைக்குள்ளே விட்டு, பாறையால் மூடி விட்டு, இறந்து விட்டதாக ஊரை ஏமாற்றி அவன் மனைவியைக் கைது செய்து அரசையும் கைப்பற்றிக் கொண்டேனே அது பெரிய துரோகமல்லவா? (* *கி.கா. 10-ம் சருக்கம் 11-28 ) அனு : துரோகம், பழி, பாவம் – இவைகளையெல்லாம் பார்த்தால், பலரும் புகழ பேரரசன் ஆக முடியுமா? சுக் : அதற்காக….? அனு...

தமிழக அரசும், குடிமை சமூகமும்- பாதுகாப்பு அரண்

தமிழக அரசும், குடிமை சமூகமும்- பாதுகாப்பு அரண்

பெருமதிப்பிற்குரியீர், வணக்கம்! தமிழக அரசும், குடிமை சமூகமும்- பாதுகாப்பு அரண். இன்றைய நிலையில் கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்கவும், அவசர நிலை என்ற காலகட்டத்தை கடந்து,  நிரந்தரமான தீர்வுக்கு  ஒரு தொலைநோக்கு பார்வையை முன்வைக்கவும் வேண்டிய கட்டாயத்தில் இந்தியா மற்றும் முக்கியமாக தமிழகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதுநாள்வரையில் இந்த இயக்கம் அரசின் சட்ட திட்டம் மற்றும் போலீஸ் நிர்வாகத்தின் கெடுபிடி கட்டாயங்களுடன் நடந்தேறுகிறது. நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலமாகவும், தூய்மை பணியாளர்கள் மற்றும்  மருத்துவ பணியாளர்களின் தன்னலமற்ற முழு நேர உழைப்பின்  மூலமாகவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் பாராட்டுக்குரிய முனைப்பும், அரசு ஊழியர்களின் கடமையும், தூய்மை மற்றும் மருத்துவ பணியாளர்களின் சீரிய பணியும் சிறப்பாக இருப்பினும், நாம் எதிர் கொண்டிருக்கும்  கொரானா தொற்று நோய்  சவாலுக்கு நீண்டகால,  நிரந்தர தீர்வாக இவை அமையாது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன: முதலாவதாக, பெருமளவிற்கு மக்கள்...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 7

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 7

காட்சி -7 இடம் : மதங்கவனத்திலே ஒரு பகுதி பாத்திரங்கள் : ராமன், லட்சுமணன். [ராமன் உட்கார்ந்து பாடிக் கொண்டிருக்கிறான்; லட்சுமணன் ஒரு மான் குட்டியைக் கொன்று தூக்கி வருகிறான்.) ராமன் : சீதா; சிங்காரப் பெட்டகமே! சிந்தை நிறை அமுதே! என் உயிர் பறிக்கும் ஓவியமே! உன்னை எங்கேயடீ கண்டு தேடுவேன்… சீதா! லட்சு : (தலையில் அடித்துக்கொண்டு) அண்ணா! கொஞ்ச நேரம் சும்மா இருக்கமாட்டே நீ? ராமன் : லட்சுமணா! என் சீதையை இராவணன் இந்நேரம் என்ன பண்றானோ தெரியலையேடா! சீதா! உன் ராமன் காட்டிலே இப்படிக் கதறுகிறேனே, இது உன் காதிலே விழலையா? சீதா, சீதா…. (குதிக்கிறான்] லட்சு : சீதா! சீதா!! சீதா!! அவள் எக்கேடு கெட்டால் என்ன? எவன் தூக்கிக்கிட்டுப் போனால்தான் என்ன? அவள் செத்தால்கூட என்ன அண்ணா ! அப்படி மோசம் வந்துவிடும் உனக்கு? அவள் போனால் அயோத்தியிலே பேரழகி *பிரபாவதி இருக்கா;...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 6

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 6

காட்சி – 6 இடம் : இராவணன் அரண்மனையில் ஒரு பகுதி. பாத்திரங்கள் : இராவணன், சீதை, மேகநாதன், இரண்டொரு வீரர்கள். [சீதை தலைவிரி கோலமாக நிற்கிறாள்.) இராவ : ஏதோ நடந்தது நடந்துவிட்டது. இனி நீ வருந்திப் பயன் இல்லை. அந்த மூடர்கள் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் உன்னை அவர்களோடு அனுப்பிவிடுகிறேன், வருந்தாதே. மேக : தந்தையே! ஆரியச் சிறுக்கிக்கா இரக்கம்! அநீதி இழைத்தவன் மனைவிக்கா மரியாதை! இராவ : எதிரிக்கும் இரங்க வேண்டியது இலங்கையின் பண்பல்லவா மகனே? மேக : இரக்கத்தைக் கோழைத்தனமென்று கருதிவிடுவார்கள் இழிந்தவர்கள். இந்தச் சிறுக்கியைச் சித்திரவதை செய்ய வேண்டும். இவள் அங்கங்களைச் சிதைத்து அனுப்பினால்தான் ஆரியர்களுக்குப் புத்தி வரும். இனியேனும் யாருக்கும் தீங்கு இழைக்க மாட்டார்கள். இராவ : இந்திரசித்தா! ஆத்திரப்படாதே… அறிவிலா மூடர்கள் செய்த வேலையை நாமும் செய்யலாமா? நமக்குத் தீங்கு செய்தவர்கள் வெட்கப்படும் அளவுக்கு மரியாதை செய்ய வேண்டாமா? அதுதானே...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 5

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 5

காட்சி – 5 இடம் : பஞ்சவடி குடிசை பாத்திரங்கள் – ராமன், லட்சுமணன், சீதை. [வழக்கம்போல் குடித்துக் குலவிக் கொண்டிருக்கிறார்கள்.) ராமன் ; லட்சுமணா! நேற்ற நடந்த அஜமேத யாகத்துலே ஏண்டா நமக்கு சரியா பங்கு வரல்லே? இந்த ரிஷிப் பசங்களுக்கு யாகம் யாகம்னு ஊர்லே உள்ள ஆடுமாடுகளை எல்லாம் ஒழிச்சுக் கட்ட, நாம் உதவுறோம். நமக்கு என்னடான்னா ஒன்னும் சரியான பங்கே வரமாட்டேங்குதே! உம்…. லட்சும : அண்ணா ! நம்ம பசிக்கு இனிமே யாகத்துக்கு அஜம் போதாது கஜம் தான் வேணும். ராமன் : அதுக்கென்னடா நடத்தினா போச்சு (சீதையிடம்) பிரிய நாயகி! என்ன அவனையே பார்த்துகிட்டு இருக்கே! போய் நேற்று குதிரைக்கால் ரசம் வச்சேல்லே, அதிலே பாக்கியிருந்தா கொண்டா. [சீதை உள்ளே போனதும்.] லட்சும : ஏன் அண்ணா ! நானோ இளைஞன், வயிறு சரிந்து வாலிபம் குலைந்து நிற்கும் அண்ணியைப் பற்றி நீ ஏன்...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 4

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 4

காட்சி – 4 இடம் – இராவணன் அந்தப்புரம். பாத்திரங்கள் : இராவணன், வண்டார்குழலி, மாரீசன், தண்டகாரண்யத்திலிருந்து வந்த அகம்பனன் என்ற ஒற்றன். அகம்பனன் : மன்னர் மன்ன! இராவணன் : யார், அகம்பனனா! என்ன? அகம் : மறத்தமிழ் பரம்பரைக்கு மாறா அவமானம். இராவ : என்ன! அகம் : ஆரியர்கள் அநீதி, அளவை மீறிவிட்டது அரசே! மாரீசன் : விவரமாகச் சொல். அகம் : ஆரிய ராம லட்சுமணர்கள், அன்னை காமவல்லியை உருக்குலைந்து விட்டனர். இராவ : என்ன! (மீசை படபடவெனத் துடிக்கிறது. கண்களில் பொறி பறக்கிறது) தகர்க்கப்பட்டதா தமிழனின் தன்மானம் ! மாறாத அவமானம் ! மாரீசன் : பதறாதே இராவணா! அகம்பனா! சொல்…. பிறகு? அகம் : அவமானம் தாங்காத அம்மையார், தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள், இராவ : (மிகுந்த சோகம்) என் குலக்கொடி மறைந்து விட்டாளா! தங்கையே, உனக்கு இந்த முடிவா கிட்ட...

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 3

இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 3

காட்சி – 3 இடம் : தண்டகாரண்யம் பாத்திரங்கள் : ராமன் சீதை, லட்சுமணன் (சீதை, நடுவிலிருக்க, ராமனும், லட்சுமணனும் இருபக்கங்களிலும் இருந்து கொண்டு கொஞ்சி குலவிக் கொண்டு; மூங்கில் குழாய்களில் மதுவை ஊற்றி மூவரும் அருந்திக் கொண்டிருக்கின்றனர்.) ராமன் : (போதையுடன்) லட்சுமணா! மது (சீதையைக் காட்டி) மாது மனுஷனுக்கு வேறு என்னடா வேணும்…? லட்சுமணன் : எனக்குத் தெரியாது அண்ணா ? ராமன் : என்னடா உளர்றே! லட்சுமணன் : (குடித்துக் கொண்டே எனக்குப் பாதி சுகம்தானே அண்ணா தெரியுது. (சீதையைப் பார்த்துக்கொண்டே ஒன்னு இல்லையே. (சீதை முறைக்கிறாள்.) ராமன் : (உடனே) சீதா – உம் நீ ஒன்னு போட்டுப் பாரேன்.. இல்லேன்னா நீயும் அசுர வம்சத்தைச் சேர்ந்தவளாயிடுவே சுராபானத்தின் சுகம் வேறு எதிலே இருக்கு? சாப்பிடு சீதே…. சும்மா சாப்பிடு. [சீதையிடம் கொடுக்க அவள் வாங்கிக் குடிக்கிறாள்.) லட்சுமணன் : என்ன அண்ணா ! சீதைக்கு...

ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2

ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2

ஆரணி காண்டமும், கிஷ்கிந்தா காண்டமும் காட்சி – 2 இடம் : இலங்கையில் இராவணன் கொலு மண்டபம். பாத்திரங்கள் : இராவணன், மேகநாதன், கும்பகர்ணன், விபீடணன், மற்றும் அமைச்சர்கள், சேனா வீரர்கள், மந்திரி சபையினர். [நாட்டின் ஆட்சி விவகாரங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.] மேகநாதன் : தந்தையே! அந்தத் தருக்கர்களின் கொட்டத்தை அடக்காவிட்டால், நாடு நாசகாரர்களின் வேட்டைக்காடாக மாறிவிடும் – விரைவிலே அந்த வீணர்களை ஒழிக்கத் திட்டம் தேவை! சேனாதிபதி : மன்னர் மன்ன! தமிழரசி, தங்கள் மூதாட்டி தடாதகை அம்மையார் தாக்கப்பட்ட போதே இதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். கும்பகர்ணன் : கொலையும் வேள்வியும் மட்டுமே அவர்கள் குறிக்கோளாக இருக்க முடியாது. கொடி போட்டு ஆளவும் திட்டம் இருக்கும் என்று நம்புகிறேன் அண்ணா ! இராவணன் : உம்: ஆச்சர்யம்! சிங்கக் கூட்டத்திலே சிறு நரிகள்; செந்தாமரை ஓடையிலே முதலைகள் ; தமிழகத்திலே ஆரியர்கள் ! வேட்டைக்கு வேறு இடம் கிடைக்கவில்லை...

இராமாயண நாடகம் – பால காண்டமும், அயோத்தியா காண்டமும்

இராமாயண நாடகம் – பால காண்டமும், அயோத்தியா காண்டமும்

பால காண்டமும், அயோத்தியா காண்டமும் காட்சி – 1 இடம் : காட்டில் வால்மீகி ஆசிரமம். பாத்திரங்கள் : வால்மீகி, சீதை, லவன், குசன். [மெளனமாக அமர்ந்திருந்த வால்மீகி தனக்குள்ளாகவே கூறிக்கொள்கிறார்.) “உண்மையை, உலகம் ஒரு நாள் அறிந்தே தீரப் போகிறது. ஏன் நாமே அதைக் கூறிவிடக் கூடாது.” [இப்பொழுது சீதையும் லவகுசர்களும் அங்கு வருகிறார்கள்.] வால்மீகி : காலம் வந்து விட்டது சீதா! காவியத்தைத் தொடங்கப் போகிறேன்; உன் கண்மணிகளின் இதயங்களிலே புதிய கருத்துக்களைத் தூவப் போகிறேன். சீதை : எல்லாம் உங்கள் கிருபை மகரிஷே! வால் : குழந்தைகாள்! ஏடுகளை எடுத்து வந்து என்னருகில் அமருங்கள். (குசனும் லவனும் ஏடு எழுத்தாணிகளுடன் வந்து வால்மீகியின் முன்னர் அமர்கின்றனர்.) வால் : கண்மணிகாள்! காலத்தைக் கடந்து நிற்கப் போகும் ஒரு மாகாவியத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்; உலகு கண்டு வியக்க இருக்கும் அம் மா ஓவியத்தைக் கவனமாகத் தீட்டி வாருங்கள்....

பாத்திரங்கள் – இராமாயண நாடகம்

பாத்திரங்கள் – இராமாயண நாடகம்

பாத்திரங்கள் திராவிடர்கள் இராவணன் – இலங்கை வேந்தன் மேகநாதன் (இந்திரசித் – இராவணன் மைந்தன் கும்பகர்ணன் – இராவணன் தம்பி வண்டார்குழலி (மண்டோதரி) – இராவணன் மனைவி அதிகாயன் – இராவணன் சேனாபதி மாரீசன் – இராவணன் மாமன் சபரி – தமிழ் மறையவரின் பெண் வாலி – கிட்கிந்தை, மன்னன் காமவல்லி (சூர்ப்பகை) – இராவணன் தங்கை கரன் – திராவிட மன்னன் தூஷணன் – கரனது சேனாதிபதி சம்பூகன் – திராவிடத் தவசி அகம்பணன் – ஒற்றன்     ஆரியர்கள் ராமன் – ஆரியர் தலைவன் லட்சுமணன் – ராமனின் தம்பி பரதன் – அயோத்தி அரசன் சத்துருக்கண் – ராமனின் தம்பி தசரதன் – ராமனின் தகப்பனாகக் கருதப்படுபவன்.

இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல்கள்

இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல்கள்

இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல்கள் தந்தை பெரியார் எழுதிய ராமாயணப் பாத்திரங்கள். கடலங்குடி பண்டித நடேச சாஸ்திரியாரின் வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு. C.R. ஸ்ரீனிவாச அய்யங்கார் B.A., எழுதிய வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு. A.V. நரசிம்ம ஆச்சாரியாரின் வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு கோவிந்த ஆச்சாரியாரின் வால்மீகி ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பு. பண்டித மன்மதநாத்தத்தர் எழுதிய வங்களா & ஆங்கில ராமாயண ஆராய்ச்சி ஆகியவையாகும். “சுமித்திரை, கோசலை, கைகேயி என்ற தசரதன் மனைவியர்கள் முறையே ஹோதா, அத்வர்யூ. உத்காதர என்ற ரிஷிகளுக்குப் பெற்ற பிள்ளைகளே ராம. பரத லஷ்மண சத்துருக்கணர்கள்.” – மன்மதநாத்தத்தர் ராமன் சீதையை பட்டமகிஷியாக மணம் புரிந்து கொண்டிருந்தாலும் போகத்துக்கா ஸ்ரீதாமா, சுதாமா, ரதினிபா, பிரபாவதி போன்ற பல பெண்களை வைத்துக் கொண்டிருந்தான். வால்மீகி ராமாயணம் அயோத்தியாகாண்டம் 3-ம் சருக்கம்; By C.R. சீனிவாச அய்யங்கார் B.A.   திரு ஸ்ரீனிவாச அய்யங்கார் தனது...

இராமாயண நாடகம் – தந்தை பெரியார் அவர்களின் மதிப்புரை

முதற் பதிப்புக்கு தந்தை பெரியார் அவர்களின் மதிப்புரை தோழர் திருவாரூர் தங்கராசு அவர்கள் எழுதிய இராமாயண நாடகம் என்னும் இப் புத்தகத்திற்கு என்னை ஒரு மதிப்புரை எழுதித் தரும்படி கேட்டார். எனக்குள்ள பல நெருக்கடியும் அவசரமுமான வேலைகளுக்கிடையில் இப் புத்தகம் முழுவதையும் தொடர்ச்சியாகப் படித்துப் பார்க்க நேரம் இல்லாததால் மேற்போக்காகவும், அங்குமிங்குமாகவும் பல பக்கங்களைப் படித்தேன்; அதிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், இப்போது நாட்டில் பார்ப்பனர்களும் புலவர்களும் இராமாயணத்தைப் பற்றிச் செய்து வரும் இராமாயணப் பிரச்சாரம், எவ்வித பொறுப்பும் கவலையும் இல்லாமல் மக்களுக்கு இராமாயணம் பற்றி இருந்து வரும் பக்தியையும் மூட நம்பிக்கையையும் அவர்கள் தங்களுக்கு ஆதரவாகக் கொண்டு, தங்கள் இஷ்டப்படி இராம பக்தி பெருகவும் மூட நம்பிக்கை வளரவும் பார்ப்பன உயர்வுக்கு ஏற்பவும் தக்கவண்ணம் பிரச்சாரம் செய்து வருவதைக் கண்டு வேதனைப்பட்டு, பாமர மக்கள் இடையில் இருக்கும் மூட பக்தியையும் இராமாயண சம்பந்தமான மூடநம்பிக்கையையும் எப்படியாவது ஒழிக்கவேண்டும் என்கிற...

சங்க தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்கும் விழா

சங்க தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்கும் விழா

கோவை மாவட்ட கலைக்கூடத்தில் நடந்த கட்டிட தொழிலாளர் சங்கம் நடத்திய சங்க தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்கும் விழாவில், கழகத்தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு நலவாரிய அட்டைகள் வழங்கியதுடன் சிறப்புரையாற்றினார். மேலும், பாவேந்தர் பாரதிதாசன் பேரவை. புலவர் செந்தலை கவுதமன் மற்றும் சூலூர் பன்னீர்செல்வம், சூலூர் பாபு, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பெரியார் முழக்கம் 12032020 இதழ்

பெரியார் தொண்டர் ஆசிட் தியாகராசன் படத்திறப்பு

பெரியார் தொண்டர் ஆசிட் தியாகராசன் படத்திறப்பு

பெரியார் தொண்டர் ஆசிட் தியாகராசன் நினைவேந்தல் தலைமை கழக அலுவலகத்தில்  04.03.2020 அன்று மாலை 6:30 மணியளவில் தொடங்கியது.  தென் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் வரவேற்புரையாற்றினார். தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தலைமையில் நிகழ்வு நடந்தது. வட சென்னை மாவட்டத் தலைவர் யேசுகுமார் முன்னிலை வகித்தார்.  கழகத் தலைவர் கொளத்தூர் மணி படத்தைத் திறந்து வைத்தார்.  கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். நிகழ்வை தென் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி தொகுத்து வழங்கினார். சூலூரில் : 01.03.2020 அன்று சூலூர் அறிவியல் பூங்காவில் (எஸ். ஆர். எஸ்.மண்டபம்) ஆசிட் தியாகராசன் படத்திறப்பு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மறைந்த தோழர் ஆசிட் தியாகராசன் படத்தை திறந்து வைத்து அவரின் களப்பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார். தொடர்ந்து கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்...

சென்னை கருத்தரங்கில் வாலாஜா வல்லவன் பேச்சு ‘மநு’ சாஸ்திரமே இப்போதும் ஆட்சி செய்கிறது

சென்னை கருத்தரங்கில் வாலாஜா வல்லவன் பேச்சு ‘மநு’ சாஸ்திரமே இப்போதும் ஆட்சி செய்கிறது

திருச்சி பெரியார் சரவணன் எழுதிய ‘திராவிடர் விவசாய சங்கம்’ நூலின் திறனாய்வு கருத்தரங்கம் 01.03.2020 அன்று சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி சென்னை மாவட்டப் பொறுப்பாளரும் பெரியாரிய ஆய்வாளருமான வாலாசா வல்லவன் நிகழ்த்திய உரை: திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தை பெரியார் 1952இல் தொடங்கி இருக்கிறார்கள். அது குறித்த இந்த புத்தகம் திராவிடர் விவசாய தொழிலாளர் கழகத்தின் அமைப்பினுடைய நோக்கங்கள் பற்றி 1952இல் வெளிவந்தது. தற்போது 2016ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தினரால் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள் ஏன் சங்கம் வைத்திருக்கின்றனர், நாம் ஏன் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் வைத்திருக்கிறோம் என்பதைப் பற்றி பெரியார் சொல்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி அப்போது ஒன்று தான். இந்திய பொதுவுடமைக் கட்சி. சோவியத்தி லிருந்து கட்டளை வந்தால் டெல்லி அதை ஏற்கும். இங்கிருக்கின்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு பார்ப்பனிய சூழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில் இந்த மண்ணிற்கு உண்டான ஒரு...

அரசுப் பள்ளிகளில் பட்டியல் பிரிவு குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய பணிப்பதா? சட்ட நடவடிக்கை எடுக்க, கோவை மாநகர் கழகம் புகார்

அரசுப் பள்ளிகளில் பட்டியல் பிரிவு குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய பணிப்பதா? சட்ட நடவடிக்கை எடுக்க, கோவை மாநகர் கழகம் புகார்

கோவை மாநகர கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 காலை 11 மணியளவில் வ.உ.சி. பூங்கா அருகிலுள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.  அதில்கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தோழர் ஃபாரூக் நினைவு நாளை ஒட்டி 17.03.2020 அன்று  அண்ணாமலை அரங்கில் கருத்தரங்கம் மற்றும் மறைந்த  தோழர்கள் பேராசிரியர் அன்பழகன்,  ஆசிட் தியாகராஜன், இராவணன் ஆகியோரது படத்திறப்பு நடத்துவது. 09.03.2020 திங்கள் கிழமை அன்று அரசு பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளை  கழிவறைகளை அகற்ற வற்புறுத்தும் ஜாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு துறை ரீதியாக மட்டுமே நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்து ஆசிரியர்கள் ஜெயந்தி, குமரேஷ்வரி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் காலை 10 மணிக்கு மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது . இதில் தோழர்கள் செ. வெங்கடேசன்,  ச. மாதவன், ஆ.சுரேஷ்,  நா.வே. நிர்மல்குமார் ப.கிருட்டிணன்   மா.நேருதாசு ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்துரையாடலின் முடிவின்படி 9.3.2020 திங்கள் அன்று  கோவை  மாவட்டத்தில்...

சென்னையில், டெல்லி கலவரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னையில், டெல்லி கலவரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தில் இதுவரை 53 பேர் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூரையாடப்பட்டன. இஸ்லாமியர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. 02.03.2020 அன்று மாலை 4:30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உரிமைக்காகப் போராடிய மக்களைத் தாக்கியதைக் கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், கலவரக்காரர் களைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி, சிபிஐ(எம்.எல்) ரெட் ஸ்டார், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், எஸ்டி.பி.அய், தமிழ்த் தேசியப் பேரியக்கம், பி.எஃப்.அய், மக்கள் அரசுக் கட்சி, மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சி, தமிழர் விடியல் கட்சி, தமிழ்த் தேச மக்கள் கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் கலந்து கொண்டன. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு டெல்லி கலவரத்தின்...

கடவுள் – மத மறுப்பாளராக 98 வயது வாழ்ந்து காட்டிய திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் விடைபெற்றார்

கடவுள் – மத மறுப்பாளராக 98 வயது வாழ்ந்து காட்டிய திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் விடைபெற்றார்

இனமானப் பேராசிரியர் அன்பழகன், தனது 98ஆவது அகவையில் மார்ச் 7, 2020இல் முடிவெய்தினார். திராவிடர் இயக்கத் தூண்களில் ஒருவர். தமிழையும் சுயமரியாதைக் கொள்கைகளையும் தனது இரு கண்களாகப் போற்றியவர். மிகச் சிறந்த பேச்சாளர். மாணவப் பருவத்திலிருந்தே அவரது திராவிடர் இயக்கப் பயணம் தொடங்கி விட்டது. தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகாலம் இருந்து கலைஞரின் உற்ற துணைவராக செயல்பட்டவர். மிக மிக எளிமையானது அவரது வாழ்க்கை. 7 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். பெரியார் குறித்து ஆழமான அவரது உரைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. கடவுள் – ஜாதி – மதமற்ற வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர். ஒரு கடவுள் மறுப்பாளர் 98 வயது வரை வாழ முடியும் என்ற செய்தியையும் அவரது மரணம் உணர்த்தி நிற்கிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தினர். மதச் சடங்குகள் ஏதும் இன்றி திராவிடர் இயக்க அடையாளங்களோடு அவரது இறுதி நிகழ்வுகள் நடந்தன. திராவிடர்...

சேலம் மேற்கு மாவட்டக் கழக சார்பில் மேட்டூரில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் தொடக்கம்

சேலம் மேற்கு மாவட்டக் கழக சார்பில் மேட்டூரில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் தொடக்கம்

சேலம் மேற்கு மாவட்ட  திராவிடர் விடுதலைக் கழகத்தின் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் சார்பாக முதல் கலந்துரையாடல் கூட்டம் 26.01.2020 கொளத்தூர் பெரியார் படிப்பகத்தில் பகல் 12.00 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையிலும், தலைமை செயற்குழு உறுப்பினர் காவை ஈசுவரன் முன்னிலையிலும்  நடைபெற்றது. அதற்கு முன்பாக கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குருதிக் கொடை முகாமில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தோழர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் முதல் கூட்டத்தில் வாசகர் வட்டத்தின் பொறுப்பாளராக மே.கா. கிட்டு அறிவிக்கப் பட்டார். தலைமை செயற்குழு உறுப்பினர் அ.சக்திவேல்  அறிமுக உரைக்கு பின்னர்  வாசகர் வட்டத்தில் நவம்பர்,  டிசம்பர் 2019 மாத ‘நிமிர்வோம்’ இதழில் வெளிவந்த கட்டுரைகளை பற்றிய விவாதத்தினை வாசகர் வட்ட பொறுப்பாளர் மே.கா. கிட்டு விளக்கினார். மேலும் இனி ஒவ்வொரு மாத இறுதியிலும் நிமிர்வோம் வாசகர்...

ஈரோடு குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தில்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

ஈரோடு குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

23.02.2020 அன்று மாலை 4 மணிக்கு சூஞசு சூசுஊ ஊஹஹ குடியுரிமைச் சட்டங்களை திரும்ப பெறக் கோரி ஈரோட்டில் செல்ல பாட்ஷா வீதியில் (ஈரோடு தினசரி மார்கெட் பின்புறம்) இஸ்லாமிய பெண்கள் பெரும் திரளாக நடத்தும் உரிமை மீட்பு தொடர் முழக்க 3ஆம் நாள் போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் கூறினார். தனது உரையில் இது அனைத்து மக்களுக்குமான பாதிப்பு என்று உணராமல் பல்வேறு மக்கள் இன்னும் அமைதி காப்பதாகவும் தோழர்கள், குறிப்பாக பெண்கள் முன்னெடுத்து போராடுவது மகிழ்ச்சிக்கும் நன்றிக்கும் உரியது என்றும் தன் நீண்ட உரையில் குறிப்பிட்டார். திராவிட முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இந்த சட்டங்களுக்கு எதிராக எப்போதும் போல் திமுக அரணாக நின்று காக்கும் என்று தன் உரையில் குறிப்பிட்டார். 500 பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த சட்டங்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி...

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

கோவையில் பிப். 9 அன்று நடந்த நீலச்சட்டை பேரணியன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி  முன்னிலையில்,  துளசி, அறிவரசு, சுரேசு, அசோக், மாதவன் ஆகிய புதிய தோழர்கள் இணைந்தனர். இவர்கள் கோவை மாவட்டத் தோழர்கள். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த  சமூக செயற்பாட்டாளர் மருத. உதயகுமார்  16.02.2020 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தன்னை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். பெரியார் முழக்கம் 05032020 இதழ்

காவலாண்டியூர் ஈசுவரன் கழக ஏட்டுக்கு நன்கொடை

காவலாண்டியூர் ஈசுவரன் கழக ஏட்டுக்கு நன்கொடை

காவலாண்டியூர் கழகத் தோழர், தலைமைக் குழு உறுப்பினர் ஈசுவரன் மகன் கனிகாசெல்வன்-இலக்கியா ஜாதி மறுப்பு மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.5000/- நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 05032020 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

நாச்சியார் கோயில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகக் கட்டமைப்பு நிதிக்கு ரூ.20,000/-மும், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினம், ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன், கட்டமைப்பு நிதியாக ரூ.5000/-மும் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 05032020 இதழ்

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய மக்கள் பதிவேட்டின் (என்.பி.ஆர்.) ஆபத்துகள்

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய மக்கள் பதிவேட்டின் (என்.பி.ஆர்.) ஆபத்துகள்

தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கும்; எளிய குடிமக்கள் தலையில் தங்களை நிரூபித்துக் கொள்ளும் சுமையை அழுத்துகிறது மத்திய அரசு என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பிப். 17, 2020 அன்று பேராவூரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: சென்ற இதழ் தொடர்ச்சி மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census) நாம் சொல்வதை அவர்கள் எழுதிக் கொள்வார்கள். எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை மதம் என்னவென்று சென்சசுக்காக கேட்டார்கள்; அவர் ‘திராவிட மதம்’ என்று கூறினார். எம்.ஜி.ஆர்.  இந்து மதம் என்று கூற வில்லை. ஆனால் அப்படி ஒரு மதம் உண்டா என்று கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது; மக்கள் சொல்வதை எழுதிக் கொள்ள வேண்டும். அதற்கென உள்ள கையேடு அப்படித்தான் கூறுகிறது. அதை எழுதிக் கொண் டார்கள். மக்கள் என்ன கூறுகிறார்களோ அதை எழுதிக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர்-யை திராவிட...