திருப்பூர் பெரியார் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு மண விழா

கிறிஸ்டினா – மகாதேவன் சாதி மறுப்பு  இணையேற்பு நிகழ்வு, திருப்பூர் அம்மாபாளையம்  தந்தை பெரியார் படிப்பகத்தில்  28.06.2022 அன்று  மாலை 6.00 அளவில் நடைபெற்றது .

திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு தலைமை வகித்தார். திருப்பூர் மாநகரத் தலைவர் தனபால்  வரவேற்பு கூறினார். மாநகர அமைப்பாளர் முத்து,வேலம்பாளையம் பகுதி பொறுப்பாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அறிவியல் மன்றம் தலைவர் சிவகாமி, ஆதித் தமிழர் பேரவை வழக்கறிஞர் அணி  கனகசபை,  தமிழ்நாடு மாணவர் கழகம் திருப்பூர் மகிழவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க,  யாழினி தமிழ்நாடு மாணவர் கழகம், மாதவன் நகர செயலாளர் திவிக, திலகவதி அம்மாபாளையம், மணிகண்டன், ஸ்ரீஜா, சண்முகம், சூப்பர் ஸ்டார் மக்கள் முன்னேற்ற கழகம் திருப்பூர் ஆகியோர் உட்பட தோழர்கள் மற்றும் மணமகன் உறவினர்கள் வாழ்த்தினார்கள். இணையர், கிறிஸ்டினா – சகாதேவன் நன்றி கூறினர்.

இறுதியாக இணையர், கழக வளர்ச்சி நிதியாக ரூபாய் இரண்டாயிரம் மாவட்டத் தலைவர் முகில் இராசுவிடம் வழங்கினர்.

 

காமராசர் பிறந்த நாளில் சமூக நீதி பரப்புரை: திருப்பூர் கழகம் தீவிரம்

திருப்பூர் மாநகர திராவிடர் விடுதலைக் கழகக் கலந்தாய்வுக் கூட்டம் 27.06.2022 திங்கட் கிழமை மாலை 6.00 மணியளவில் திருப்பூர் வீரபாண்டி பிரிவு கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

வரும் ஜுலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 15 மற்றும் 18 ஆம் தேதிகளில் கீழ்கண்ட இடங்களில் பரப்புரை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

15.07.2022 – வெள்ளி : 1) அம்மாபாளையம்,

2) மங்கலம், 3) குமரன் கல்லூரி, 4) மாஸ்கோ நகர்.

18.07.2022 – திங்கள் : 1) பெருமாநல்லூர், 2) செங்கப் பள்ளி,  3) குன்னத்தூர்.

கூட்டத்தில்  கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் முகில் ராசு, மாநகர செயலாளர் மாதவன், மாநகர அமைப்பாளர் முத்து, தெற்கு பகுதி அமைப்பாளர் ராமசாமி, தோழர்கள் ராசசிங்கம், திலகவதி, மாரிமுத்து, அய்யப்பன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பெரியார் முழக்கம் 30062022 இதழ்

You may also like...