கொளத்தூரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

கொளத்தூர் : கொளத்தூர் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 09.04.2024 அன்று கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
பாடகர் கோவன் குழுவின் கலை நிகழ்ச்சி மற்றும் கலகக்காரன் குழுவின் தெருக்கூத்து நாடகத்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது.
கூட்டத்திற்கு கொளத்தூர் நகரத் தலைவர் ராமமூர்த்தி வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார் தலைமை தாங்கினார்.
இதில் திராவிடர் முன்னேற்றக் கழக கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சேட்டு குமார், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தீனரட்சகன், திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி மாவட்ட து. அமைப்பாளர் முருகேசன், ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.
கழக கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் நன்றி கூற பொதுக்கூட்டம் நிறைவுபெற்றது.

பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

You may also like...