நங்கவள்ளியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் பொதுக்கூட்டம்

சேலம் : சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் தானாபதியூரில் இந்து முன்னணியின் தடையைத் தகர்த்து சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! 2024 தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் 03.03.2024 அன்று தானாபதியூர் பகுதியில் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் சர்வாதிகார BJP அரசின் அவலங்களை விளக்கி பாடல்கள் பாடப்பட்டது.
தொடர்ந்து கார்ப்பரேட் சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல – தந்திரமே என்கின்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வனவாசி நகர செயலாளர் பழ.உமாசங்கர் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு தலைமையுரையாற்றினார்.
தொடர்ந்து கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சக்திவேல், தானாபதியூர் தி.மு.க.இளைஞரணி சந்திரசேகரன், இளம்பிள்ளை திவ்யா, நங்கவள்ளி CPI ஒன்றியச் செயலாளர் பழ. ஜீவானந்தம், தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் திருமதி வழக்கறிஞர் முத்து முத்தையா, நிறைவாக கழகத் தலைவர் அவர்கள் தமது நிறைவுரையில் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறக் கூடாது, ஏன் வெற்றி பெறக் கூடாது என்ற விளக்கத்துடன் உரை நிகழ்த்தினார். நிறைவாக வனவாசி நகர தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 07032024 இதழ்

You may also like...