கொளத்தூரில் “எது திராவிடம்? எது சனாதனம்?” பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாள் பொதுக்கூட்டம் கொளத்தூர் நகர கழக சார்பில் 23.12.2023 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள கழக செயல்வீரர் இளஞ்செழியன் நினைவரங்கில் நடைபெற்றது.

மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியோடு பொதுக்கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார் தலைமை தாங்க, கொளத்தூர் நகர தலைவர் சி. ராமமூர்த்தி வரவேற்புரையாற்றினார். திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் ம. மிதுன் சக்கரவர்த்தி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராசு கிழக்கு மாவட்டத் தலைவர் க. சக்திவேல், நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, மேட்டூர் நகரச் செயலாளர் சு குமாரப்பா, தி.மு.க. கொளத்தூர் நகரச் செயலாளர் பெ. நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், கழக தலைமைக்குழு உறுப்பினர் சக்திவேல், மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, தமிழ்நாடு மாணவர் கழக நாகராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சேட்டு குமார், கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன், திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் மண் தன்னுரிமை இயக்க நெறியாளர் பேராசிரியர் த. ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிறைவாக கொளத்தூர் ப. குமார் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

You may also like...