உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது! – திவிக அறிக்கை
உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது! ஜாதி ஆணவப்படுகொலை செய்பவர்களுக்கு இத்தீர்ப்பு துணிச்சலைக் கொடுத்துவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது! திராவிடர் விடுதலைக் கழக அறிக்கை : 2016 மார்ச் 13 அன்று ஜாதி மறுப்புத் திருமணம் செய்தார் என்கின்ற ஒரே காரணத்திற்காக உடுமலையில் பட்டப்பகலில் நடுவீதியில் சங்கர் மிகக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். அவர் காதலித்து திருமணம் செய்த கௌசல்யா பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர். அதனால் பிற்படுத்தப்பட்ட ஜாதி வெறியர்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சங்கரைப் படுகொலை செய்தனர் என்பது தான் இந்த படுகொலைக்கும் கௌசல்யா மீதான கொடூர கொலை முயற்சி தாக்குதலுக்கும் அடிப்படையான காரணம். இது கொலை வழக்கு மட்டுமல்ல கொலை செய்யும் நோக்கில் கொடுங்காயம் ஏற்படுத்திய கொலை முயற்சி வழக்கும் கூட. இதற்கு ஜாதிய ஏற்றதாழ்வுகள் மட்டுமே காரணம். சங்கரைப் படுகொலை செய்யும்...
