Category: மதுரை

மதுரையில்  புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

மதுரையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

மதுரையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் மதுரை மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளில் சாதி ஒழிப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைப்புகள் தமிழ்த்தேச_மக்கள்_முன்னணி திவிக தபெதிக நாணல்_நண்பர்கள் குறிஞ்சியர்_விடுதலை_இயக்கம் இளந்தமிழகம்

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

திருப்பூர் : மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழா 14.04.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே நடைபெற்றது. கழக பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் கனல் மதி வாசிப்பில் கழகத் தின் ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ ஏற்பு கழகத் தோழர்களால் ஏற்கப்பட்டது. நிகழ்வின் இடையே பெரியார் பிஞ்சுகள் யாழினி, முத்தமிழ் ஆகி யோரின் பிறந்த நாள் அவ்விடத் திலேயே கேக் வெட்டி கொண்டாடப் பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாநில அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர பொறுப்பாளர் மாதவன், மாணவர் கழக தேன்மொழி, இணைய தள...

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

அய்.பி.எல். சுவர் விளம்பரம் : கழகத் தோழர்கள் அழித்தனர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்கள் இணைந்து 05.04.2018 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “ஐபிஎல் வேண்டாம்” – “காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பைத் தெரிவித்தனர். மந்தவெளி இரயில் நிலையம் முற்றுகை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சார்ந்த மக்கள் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகை யிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். விழுப்புரத்தில் அஞ்சலகம்...

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது ! 02.04.2018 – புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி. திராவிடர் விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்காத மத்திய பா.ஜ.க மோடி அரசைக் கண்டித்து . Pause -5:25 Additional visual settings Enter Watch and ScrollClick to enlarge Unmute

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது ! 02.04.2018 – புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி. திராவிடர் விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்காத மத்திய பா.ஜ.க மோடி அரசைக் கண்டித்து .   காணொளிக்கு

மதுரையில் பா.ஜ.க.அலுவலக்ம் முற்றுகை !

மதுரையில் பா.ஜ.க.அலுவலக்ம் முற்றுகை !

மதுரையில் பா.ஜ.க.அலுவலக்ம் முற்றுகை ! மதுரையில் எச்.ராஜாவை கண்டித்து பா.ஜ.க அலுவலகம் 06.03.2018 அன்று முற்றுகையிடும் போராட்டம் நடை பெற்றது. முற்றுகை முயன்ற தி.வி.க த பெ.தி.க, மற்றும் புஇ மு தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

‘சோடா பாட்டில்’ வீச்சுப் பேச்சுக்கு ஜீயர் மீது காவல்துறையில் புகார்

‘சோடா பாட்டில்’ வீச்சுப் பேச்சுக்கு ஜீயர் மீது காவல்துறையில் புகார்

‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ என்ற தலைப்பில் கொளத்தூரில் வரும் 03.02.2018 அன்று நடைபெறவிருக்கும் கருத்தரங்கில் சடகோப ராமானுஜ ஜீயர் என்பவர் சென்று சோடா பாட்டில் வீசுவோம், எதற்கும் துணிவோம் எனவும் நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கும் போது நான் சொல்வது போல் செய்யுங்கள். இந்தக் கால சாமியார் எல்லாம் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் தேவைப்பட்டால் நாங்களும் கண்ணாடி விடுவோம். எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிடுவோம் என்று வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார். அதனை மேடையில் இருப்பவர்களும் ஆமோதித்து கைதட்டுகிறார்கள். நான் சொன்னபடி செய்வீர்களா என அரங்கில் இருந்தவர்களைப் பார்த்து கேட்கிறார், அனைவரும் செய்வோம் என முழங்குகிறார்கள். எனவே சடகோப ராமானுஜ ஜீயர், மேடையில் இருந்தவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் ஆகியோர் மீது வன்முறையை தூண்டுதல், கலவரத்தை ஏற்படுத்தும் உள் நோக்கத்துடனும் கூட்டுச் சதியிலும் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 27.01.2018 மாலை...

விஜயேந்திரன்-எச். ராஜா பார்ப்பனத் திமிர் காஞ்சி சங்கர மடம் முற்றுகை

சமஸ்கிருத விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்த காஞ்சி விஜயேந்திரன், நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த எச். ராஜா மன்னிப்புக் கேட்கக் கோரி தமிழகம் முழுதும் கழகத்தினரும், இன உணர்வாளர்களும் முற்றுகை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சேலம்: சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் 25.1.18 மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தைக் கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக் கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந் திரன், எச்.ராஜா செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து...

பேருந்து கட்டண உயர்வு – கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 24012018

பேருந்து கட்டண உயர்வு – கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 24012018

மக்களை திரட்டுவோம் மக்கள் விரோதிகளை விரட்டுவோம் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 24.1.18 காலை 11 மணி புதூர் பேருந்து நிலையம் திராவிடர் விடுதலைக் கழகம் மதுரை

புகார் மனு, உருவ பொம்மை எரிப்பு – மதுரை திவிக

ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக “சேரி பிஹேவியர்” என்றும் திமுக நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களை தரம் தாழ்ந்தும் விமர்சித்த நித்யானந்த பீட பெண்களையும் அவர்களை தூண்டிவிடுகிற நித்யானந்தாவையும்  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும் தொடர்ச்சியாக மத கலவரங்களை தூண்டும் விதமாக பேசிய எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும் திராவிடர் விடுதலைக் கழம் ஒருங்கிணைப்பில் மதுரை காவல் ஆணையாளரிடம் 19012018 புகார் அளிக்கப்பட்டது விடுதலை சிறுத்தைகள் தமிழ்புலிகள் குறிஞ்சியர் விடுதலை பேரவை தபெதிக DYfi உள்ளிட்ட இயக்கங்கள் பங்கு பெற்றன இன்று 20012018  காலை 11 மணி அளவில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் நித்யானந்தா, எச்.ராஜா ,நயினார் நாகேந்திரன் உருவ பொம்மை எரிப்பு . தலித் மக்களை இழிவு படுத்தியும் கலைஞர் ,திருமாவளவன் ,சீமான், கனிமொழி, ஆசிரியர் வீரமணி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிக்கிற நித்யானந்தா...

நீட் எதிர்ப்புக் கருத்தரங்கத்தினிடையில் ஒரு வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு ! மதுரை 23122017

நீட் எதிர்ப்புக் கருத்தரங்கத்தினிடையில் ஒரு வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு ! 23-12-2017 வெள்ளிக் கிழமை, மதுரை,இராமசுப்பு அரங்கில் நடைபெற்ற நீட் எதிர்ப்புக் கருத்தரங்கத்தினிடையில் ஒரு வாழ்க்கை இணையேற்பு நிகழ்வும் நடந்தேறியது. சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், செட்டியூரைச் சேர்ந்த இராசேந்திரன் – இராசாமணி இணையரின் மகன் பூபதிதாசுக்கும், கவலாண்டியூர் சம்பத் – இராஜேஸ்வரி இணையரின் மகள் தாரணிக்கும், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் மீ.த.பாண்டியன் உறுதிமொழிகள் கூறி, வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்தார். மணமக்கள் மணவிழா மகிழ்வாக பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.10,000/= (பத்தாயிரம்) வழங்கினர்.

நீட் எதிர்ப்புக் கருத்தரங்கம் – மதுரை 23122017

23-12-2017 வெள்ளிக் கிழமை, மாலை 6-00 மணியளவில், மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள இராமசுப்பு அரங்கத்தில், மதுரை மாவட்ட நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாக நீட் எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் அரங்கமாய் நடைபெற்றக் கல்வியாளர் அரங்கம், நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின், ஒருங்கிணைப்பாளர் தோழர் ரபீக் ராஜா (இளந்தமிழகம்) தலைமை வகித்தார். குடியாத்தம் அரசுக் கலைக் கல்லூரி, முன்னாள் முதல்வரும், கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமாகிய முனைவர் ப.சிவக்குமார், மதுரைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு – புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் செயலாளருமாகிய முனைவர் முரளி, கல்வியாளர் பர்வதவர்த்தினி ஆகியோர் உரையாற்றினர். அடுத்து நடைபெற்ற அரசியல் அரங்கிற்கு, தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் முகிலரசன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனியமுதன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம். செரீப், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் மீ.த....

மதுரையில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் மணவிழாவோடு நடந்தது

மதுரையில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் மணவிழாவோடு நடந்தது

23-12-2017  வெள்ளிக் கிழமை, மாலை 6-00 மணியளவில், மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள இராமசுப்பு அரங்கத்தில், மதுரை மாவட்ட நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாக நீட் எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் அரங்கமாய் நடைபெற்றக் கல்வியாளர் அரங்கத்திற்கு நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின், ஒருங்கிணைப்பாளர் ரபீக் ராஜா (இளந்தமிழகம்) தலைமை வகித்தார். குடியாத்தம் அரசுக் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வரும், கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமாகிய முனைவர் ப.சிவக்குமார், மதுரைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு – புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளருமாகிய முனைவர் முரளி, கல்வியாளர் பர்வதவர்த்தினி ஆகியோர் உரையாற்றினர். அடுத்து நடைபெற்ற அரசியல் அரங்கிற்கு, தமிழ்ப்புலிகள் கட்சியின் முகிலரசன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம். செரீப், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் மீ.த....

கவின் கல்லூரி மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 22112017

கவின் கல்லூரி மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் ! மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்…….. நாள் : 22.11.2017 புதன்கிழமை நேரம் : காலை 10.30 மணி. இடம் : புதூர் பேருந்து நிலையம், மதுரை கண்டன உரை : பால்.பிரபாகரன், பரப்புரைச் செயலாளர்,தி.வி.க. எபிடன்ஸ் கதிர். எவிடன்ஸ் அமைப்பு பிரதாப் (பிரகாஷின் சகோதரர்) மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.  

தோழர் மதுக்கூர் மைதீன் நினைவேந்தல் கூட்டம் மதுரை 10112017

தோழர் மதுக்கூர் மைதீன் நினைவேந்தல் கூட்டம். நாளை மதுரையில்.. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு நினைவேந்தல் உரை நிகழ்த்துகிறார்கள். நாள் : 10.11.2017 வெள்ளிக்கிழமை. நேரம் : மாலை 4.00 மணி. இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில், மதுரை.

RSS ஊர்வலத்திற்க்கு தடை விதிக்க கோரி காவல் ஆனையாளரிடம் புகார் மதுரை 04102017

RSS ஊர்வலத்திற்க்கு தடை விதிக்க கோரி காவல் ஆனையாளரிடம் புகார் மதுரையில் மதவெறி RSS ஊர்வலத்திற்க்கு தடை விதிக்க கோரி தமிழ் புலிகள் கட்சி ஆதித்தமிழர் பேரவை ஆதித்தமிழர் கட்சி தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளந்தமிழகம் புரட்சிகர இளைஞர் கழகம் சிபிஎம்எல் உள்ளிட்ட அமைப்பு தோழர்களை திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைத்து மதுரை மாவட்ட ஆனையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது

பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம் மதுரை

கலகக்காரனின் 139 பிறந்த நாளையொட்டி திராவிடர் விடுதலைக் கழகம் நீட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு இணைந்து பேரணியாக சென்று, பெரியார் சிலைக்கு மாலையிட்டு நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரைகளை தொடங்கினர்

மதுரையில் நீட்டுக்கு எதிராக போராடிய தோழர்கள் கைது !

மதுரையில் நீட்டுக்கு எதிராக போராடிய தோழர்கள் கைது !

மதுரையில் நீட்டுக்கு எதிராக போராடிய தோழர்கள் கைது ! 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக அரசு ! நள்ளிரவில் சிறையில் அடைப்பு ! தமிழக காவல்துறையின் அராஜகம் ! நேற்று 07.09.2017 அன்று காலை மதுரை தமுக்கம் மைதானத்தில் நீட் தேர்விற்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்புகள் கலந்து கொண்டன.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கூட்டியக்கத் தோழர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி கடுமையாக தாக்கியுள்ளது.இத்தாக்குதலில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச்செயலாளர் தோழர் மணியமுதன் மா.பா. அவர்களுக்கு காலில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் மாணவர்கள்,இயக்கத்தோழர்கள் பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் 75 பேரை தமிழக காவல்துறை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது...

நீட் தேர்வுச்சதியும், மோடி அரசின் கல்விக் கொள்ளையும் – கருத்தரங்கம் மதுரை 01092017

நாளை (01.09.2017) மதுரையில், “கருத்தங்கம்” ‘நீட் தேர்வுச்சதியும், மோடி அரசின் கல்விக் கொள்ளையும்’ ‘பறிபோகும் சமூக நீதி’ எனும் தலைப்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கருத்துரையாற்றுகிறார். மேலும் பல்வேறு தலைப்புகளில் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கருத்துரையாற்றுகிறார்கள். நாள் : 01.09.2017 வெள்ளிக்கிழமை. நேரம் : மாலை 5 மணி இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில், மதுரை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு மாணவர் இயக்கம், தமிழ்நாடு மாணவர் கழகம்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி – மதுரை உண்ணாவிரதத்தில் தோழர் பால்.பிரபாகரன் எழுச்சியுரை

உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு  மொழியாக ஆக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார் செய்தி – வைரவேல் காணொளியை காண

கதிராமங்கலம் காப்போம், நெடுவாசல் மீட்போம் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 24072017

பல எதிர்ப்புகளை கடந்து கொட்டும் மழையில் கதிராமங்கலம் காப்போம், நெடுவாசல் மீட்போம் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மேலூரில் 24072017 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி வரவேற்புரையாற்றினார். தமிழ் பிரபாகரன் மாநகர் பொறுப்பளர், சத்திய மூர்த்தி மேலூர் பொறுப்பாளர், ஆசிரியர் நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மீ.த.பாண்டியன்.தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் வெ.கனியமுதன். துனை பொது செயலாளர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரறிவாளன். பொதுச் செயலாளர். தமிழ் புலிகள் கட்சி பெரியார்.சரவணன். மாநில கொள்கை பரப்புச் செயலாளர். தமிழக வாழ்வுரிமை கட்சி கா.சு.நாகராசு. ஒருங்கிணைப்பாளர்.பெரியார் திராவிடர் கழகம் சிதம்பரம். மாவட்ட செயலாளர். ஆதித்தமிழர் கட்சி தலித்.ராஜா ஆதித்தமிழர் பேரவை தாஹா. SDPI கட்சி மேலூர் தொகுதி தலைவர். இரணியன். பொதுச் செயலாளர். வன வேங்கைகள் பேரவை ரோசி. சமூக செயற்பாட்டாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினர் பரமக்குடி கர்ணன் ,ரமேஸ் ,சகாயராஜ் ,கோபால் உள்ளிட்ட தோழர்களும் தோழமை அமைப்பு தலைவர்கள் தோழர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகை காயத்ரி ரகுராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு மதுரை 12072017

சேரி behavior என்றும் மீனவர்களை குடிகாரர்கள் என்றும் விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகை காயத்ரி ரகுராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அந்த பேச்சுக்களை வெளியிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரியும் மதுரையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் துனை ஆணையாளர் மகேஷ் குமார் அவர்களிடம் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை ஆணையாளர் நம்மிடம் உறுதி அளித்துள்ளார். உடன் மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி, மாநகர தலைவர் தமிழ் பிரபாகரன், அழகர் பிரபாகரன் சத்திய மூர்த்தி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்

காவிகள் நுழையா தமிழகம், கலவரம் இல்லா தமிழகம் – சுவரொட்டியில் மதுரை திவிக பதிலடி

மதுரை முழுதும் பாஜகவினர் நூற்றுக்கணக்கான இடங்களில் “கழகங்கள் இல்லா தமிழகம் ” என்ற விளம்பரத்தை செய்துள்ளது. அதற்கு பதிலடியாக காவிகள் நுழையா தமிழகம், கலவரம் இல்லா தமிழகம் – என்ற தலைப்பில் பிரம்மாண்ட சுவரொட்டிகளை தயாரித்து மதுரை மாவட்ட திவிக தோழர்கள் மதுரையெங்கும் ஒட்டியுள்ளார்கள்  

ஆணவ கொலையை கண்டித்து முற்றுகை போராட்டம் மதுரை 23052017

ஆணவ கொலையை கண்டித்து முற்றுகை போராட்டம் மதுரை 23052017

காதல் திருமணம் செய்த சுகன்யாவை பெற்றோர்களே எரித்து கொண்ட, சாதி ஆவண படுகொலையை கண்டித்து மதுரையில் தலைமை தபால் நிலையம் முற்றுகையில், திராவிடர் விடுதலை கழகம்  

மாட்டிறைச்சிக்கு ஆதரவாக மதுரையில் கழக சுவரொட்டிகள்

மதுரையில் மாட்டிறைச்சிக்கு எதிராக இந்துத்வா கும்பலால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கு அருகிலேயே மாட்டிறைச்சியை ஆதரித்து  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் செய்தி மணி அமுதன்

நெடுவாசல் மீட்போம்! இரயில் மறியல் போராட்டம் மதுரை 08032017

நெடுவாசல்மீட்போம் ! நாளை மதுரையில் ரயில் மறியல் போராட்டம். நாள் : 08.03.2017 நேரம் : காலை 10:30 மணி. இடம்: ரயில் நிலையம்,மதுரை. “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கை விடக் கோரியும் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழர் விரோதி மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும் திராவிடர்விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் பல்வேறு தோழமை அமைப்புகள் பங்கேற்கும் ரயில்மறியல் தொடர்புக்கு: மா.பா.மணிகண்டன், மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம், மதுரை மாவட்டம். 9600 40 8641  

பழங்குடிகளின் உரிமை மீட்பு கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 17022017

மதுரையில் காவல் துறைக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்.. குறவர் சமுதாய மக்களை திருடர்களாக சித்தரித்து தொடர்ச்சியாக அவர்கள் மீது பொய் வழக்கு போடும் போக்கை தொடரும் காவல் துறையினருக்கு தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனத்தை தெரிவித்து இன்று மதுரையில் நடைபெற்ற குறிஞ்சியர் நலச்சங்கம் சார்பிலான கண்டன ஆர்பாட்டத்தில் தலைமை உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புத் தோழர்கள் கலந்து கொண்டனர். செய்தி மா பா மணிகண்டன் உரிமை

மதுரையில் நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ! 31012017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 31.1.2017 அன்று காலை 11 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்ட கழகச்செயலாளர் தோழர் மா.பா.மணிகண்டன் தலைமை தாங்கினார்

மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம் 31012017

31012017 காலை 11 மணிக்கு மதுரை ரயில் நிலையம் எதிரில் தங்கை நந்தினிக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.. அனைவரும் வருக திராவிடர் விடுதலைக் கழகம் மதுரை.9600408641

தீண்டாமை ஒழிப்பு பிரிவு முற்றுகை போராட்டம் மதுரை 31012017

தீண்டாமை ஒழிப்பு பிரிவு முற்றுகை போராட்டம் மதுரை 31012017

அரியலூர் நந்தினிக்கு நீதிவழங்கு. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதுரையில் செயல்படாத காவல்துறையின், “தீண்டாமை ஒழிப்பு பிரிவு” முற்றுகை போராட்டம்….! நாள்:31.01.2017. செவ்வாய்க்கிழமை. நேரம்:காலை11.00 மணி.  

ஜாதி கலவரங்களை தூண்டும் பேச்சு மதுரை திவிக மனு 04012017

கல்வி, பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ள தேவர் சமூக மக்களை முன்னேற்றாமல், அவர்களை மூளை சலவை செய்து வன்முறையாளர்களாக மாற்றும் விதமாகவும், இரு தரப்பினரிடையே ஜாதி கலவரங்களை தூண்டும் விதமாகவும், பட்டியலின மக்களை கொலை செய்யம் படியும், இழிவுபடுத்தியும் பேசிய. -தமிழ் நாடு தேவர் பேரவை தலைவர். முத்தையா என்பவரை கைது செய்யக் கோரியும், இது போன்ற வன்மம் கக்கும் ஜாதி சங்கங்களை தடை செய்ய கோரியும் மதுரை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பிலும், புரட்சிகர இளைஞர் கழகம் சார்பிலும் மதுரை காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் மனு 04012017 அன்று மாலை 5 மணிக்கு தோழர் மணிகண்டன் அவர்களால் அளிக்கப்பட்டது. உடன் புரட்சிப் புலிகள் மாவட்ட நிர்வாகிகள் பீமாராவ், அகிலன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், திவிக மாநகர் பொறுப்பாளர் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்துள்ளனர்.

மதுரையில் கழக பொதுக்கூட்டம் !

புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மா.பா. மணிகண்டன் தலைமை வகித்தார். மாநகர் பொறுப்பாளர் காமாட்சி பாண்டி வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட துனை செயலாளர் பிலால் ராஜா வாழ்த்துரை வழங்கினார். கழக தலைவர் கொளத்தூர் மணி, ஆதித்தமிழர்கட்சித் தலைவர் கு. ஜக்கையன் ,கழக மாநில பரப்புரை செயலாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மேலூர் சத்திய மூர்த்தி நன்றி தெரிவித்தார். காவை இளவரசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். தோழர்கள் திருப்பதி, அழகர், பேரையூர் ராஜேஷ்,தளபதி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டில் மதிமுக நகர செயலாளர், இளங்குமரன் மதிமுக ஒன்றிய செயலாளர், ஜெயராஜ் ஆகியோர் ,தமிழ்நாடு முஸ்லீம் முனேற்ற கழக தோழர்கள்...

மதுரையில் 480 தோழர்கள் கைது ஆணவக் கொலைகளைத் தடுக்காத காவல்துறை அலுவலகம் முற்றுகை

ஆணவக் கொலைகளைத்  தடுக்கத் தவறிய காவல்துறையைக் கண்டித்து, தென்மண்டல காவல் துறை ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம் 3.11.2016 அன்று, காலை 11-00 மணியளவில் நடைபெற்றது. மதுரை, புதூர் பேருந்து நிலையத்தில் அணி திரண்ட தோழர்களிடையே கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்  தமிழ்ப்புலிகள்கட்சித் தலைவர் நாகை. திருவள்ளுவன் நோக்க உரையாற்றினார். திராவிடர் விடுதலை கழகத் தலைவர்கொளத்தூர்மணி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலைக் கட்சியின் மீ.த.பாண்டியன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமக்கிருட்டிணன், மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எச்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் பாகவி, ஆதிதமிழர்ப் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் புதுக் கோட்டை செரீப், மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகப் பொதுச் செய்லாளர் பிரிசெல்லா பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், மே 17 இயக்கம் திருமுருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நேசன், விடுதலைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆற்றலரசு ஆகியோர் உரையாற்றிய பின்னர்...

தென்மண்டல ஐ.ஜி.அலுவலக முற்றுகை – ஆணவக்கொலை மதுரை 03112016

ஆணவக் கொலைகளைத்  தடுக்கத்  தவறிய காவல்துறைக் கண்டித்து, தென்மண்டல காவக்துறை ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம்  3-11-2016 அன்று, காலை 11-00 மணியளவில் நடைபெற்றது. மதுரை, புதூர் பேருந்து நிலையத்தில் அணிதிரண்ட தோழர்களிடையே கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்  தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை.திருவள்ளுவன் நோக்க உரையாற்றினார். திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலைக் கட்சியின் மீ.த.பாண்டியன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமக்கிரிட்டிணன், மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எச்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் பாகவி, ஆதிதமிழர்ப் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் புதுக்கோட்டை செரீப், மக்கள் ஜனநாயக முன்னேஏற்றக் கழகப் பொதுச் செய்லாளர் பிரிசெல்லா பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், மே 17 இயக்கம் திருமுருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நேசன், விடுதலைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆற்றலரசு போன்றோர் உரையாற்றிய பின்னர் ஐ.ஜி...

தென் மண்டல ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டம் மதுரை 03112016

இன்று 03112016 பெரியாரிய, தலித்திய, தமிழ்த்தேசிய மற்றும் முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் தென் மண்டல ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டம். நெல்லையில் திண்டுக்கல் சிவகுருநாதன், பெண் காவலர் ராமு, திண்டுக்கல்லில் பாண்டிச்செல்வி, தேனியில் தங்கபாண்டியன் ஆகியோரின் கொலைகளுக்கு காரணமான சாதி வெறி கொலையாளிகளை கைது செய். குற்றவாளிகளை தப்பவிடாதே! சாதிவெறிக்கு துணை போகாதே! சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்று. சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கு. சாதி ஆணவப் படுகொலைகளுக்கு சிபிஐ விசாரணை நடத்து. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தென் மண்டல ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டத்தினை அனைத்து தோழமை இயக்கங்களும் இணைந்து நவம்பர் 3 அன்று நடத்த உள்ளோம். வாய்ப்புள்ளோர் பங்கேற்கவும்

மதுரையில் ரயில் மறியல் போரட்டம் (14.10.2016) ! 67 பேர் கைது !

ரயில் மறியல் போரட்டம் (14.10.2016) ! 67 பேர் கைது ! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் மதவெறி பாஜகவின் மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகள் பங்கேற்ற ரயில் மறியல் போராட்டம் 14.10.2016 காலை 11 மணியளவில் மதுரை ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது. கழக அமைப்புச்செயலாளர் ரத்தினசாமி,பொருளாளர் துரைசாமி,பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன்,மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா.,தோழர் காமாட்சி பாண்டி,மாவட்ட செயலாளர் திலீபன் செந்தில், மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி உள்ளிட்ட கழக தோழர்களும்,தோழர் மீ.த.பாண்டியன் (சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை),மேரி (சி.பி.எம்.எல்.மக்கள் விடுதலை), சிதம்பரம்(ஆதித்தமிழர் கட்சி),தமிழ் நேயன் (தமிழ் தேச மக்கள் கட்சி), குமரன்,புரட்சிகர இளைஞர் முண்ணனி, நாகை.திருவள்ளுவன்(தமிழ் புலிகள் கட்சி), ஆதவன் (ஆதித்தமிழர் பேரவை), பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), தோழர் ரபீக்(இளந்தமிழகம்), அண்ணாமலை (சட்டபஞ்சாயத்து இயக்கம்) ஆகியோர் உள்ளிட்ட இயக்க தோழர்கள் இப்போராட்டத்தில் கலந்து...

மதுரையில் ரயில் மறியல் போராட்டம்!

14.10.2016 மதுரையில் ரயில் மறியல் போராட்டம்! கழக தலைவர் தலைமையில் நடக்கவுள்ளது. காவிரி பிரச்சனையில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மத்திய ஆளும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஐ கண்டித்து. தோழமை அமைப்புகள் பங்கேற்கின்றன.

மாட்டிறைச்சி – எனது உரிமை; எனது உரிமை – கருத்தரங்கம் மதுரை 25092016

மதுரையில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பில் “மாட்டிறைச்சி – எனது உரிமை – எனது உரிமை “ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. முதலில் நிகழ்ச்சி நடத்த திட்டமிருந்த பள்ளி மைதானத்துக்குக் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப் பட்டதால், மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவ்ர் சாமுவேல்ராஜ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் ஷேக் மொய்தீன் மற்றும் தமிழ்ப்புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் உரையாற்றினர்.

மாட்டிறைச்சி எனது உணவு, எனது உரிமை – கருத்தரங்கம் மதுரை 25092016

தமிழ்புலிகள் கட்சி நடத்தும் கருத்தரங்கம் பகல் 1.30 மணிக்கு தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பார்ப்பனீயத்தின் உணவு கோட்பாடு – தலைப்பில் கருத்துரை

மதுரையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் 01092016

1-9-2016 அன்று பிற்பகல் 2-00 மணிக்கு மதுரை ஓபுலா படித்துறையில், மக்கள் உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், மனித உரிமைக் காப்பாளர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கைப் பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்தும்,  வழக்கைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மதுரை மாவட்டம், மொட்டமலையைச் சேர்ந்த அலைகுடிகளான குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கூலிவேலை செய்துவந்தவர்களை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்து, 63 நாட்கள் சட்டவிரோதமாக அடைத்துவைத்து சித்திரவதை செய்துவருவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டு விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தனர் தோழர் ஹென்றி திபேனும், உதவும் குரல் அமைப்பினரும். தொடர்ந்து சட்ட்விரோதமாகக் காவலில் வைத்ததோடு, சித்திரவதை செய்தும், பெண்களைப் பாலியல் துன்புறுத்தலும் செய்த காவல்துறையின்ர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தக்கலையிலும், மதுரையிலும் அர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. அவ்வார்ப்பட்டத்தின்போது காவல்துறையினரை மிரட்டியதாக, பிணையில் வர முடியாத பிரிவுகளில் எட்டு நாட்கள் கழித்து தோழர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கில் புனைந்ததைக் கண்டித்து...

ஹென்றி திபேன் மீதான பொய்வழக்கினை திரும்பபெறக் கோரி குரல் முழக்க தொடர் ஆர்ப்பாட்டம்

மதுரையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் ! கழக தலைவர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்! தமிழகத்தில் சமூக செயல்பாட்டாளர் மீது திட்டமிட்டு பதிவுசெய்யப்படும் பொய் வழக்குகள், தாக்குதல்கள் ஆகியவற்றை தடுத்து நிறுத்தக்கோரியும், மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் ஹென்றி டிபேன் அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாள் : 01.09.2016 வியாழக்கிழமை. இடம் : ஒபுளா படித்துறை,மதுரை. நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.   உண்மையை பேசுவது போலீசுக்கு பிடிக்காது…! குமுறும் ஹென்றி டிபேன் விகடன் செய்தி படிக்க இங்கே சொடுக்கவும்

மதுரை அகதி முகாமில் ரவிச்சந்திரன் குடும்பத்தினரிடம் கழகத் தலைவர் ஆறுதல்

மதுரை திருமங்கலம் அருகில் உச்சம்பட்டியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 06032016 ஞாயிற்றுக் கிழமையன்று அங்கு சோதனையிடவந்த வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ரவிச்சந்திரன் அங்கு வந்துள்ளார். தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அப்போது அவர் தெரிவித்தார். ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த ரவிச்சந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து ரவிச்சந்திரன் உயிரிழந்தார் இறந்த ரவீந்திரனின் குடும்பத்திற்கு போதுமான நிவாரணம் அளிக்க வேண்டுமென்றும் அந்த வருவாய் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த முகாமில் உள்ள அகதிகள் கோரி போராட்டம் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அங்கு சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னார்....