சிறைவாசி தண்டனைக் குறைப்புகளின் முழு தகவல்களையும் வழங்க ஆணையர் உத்தரவு சிறைக்குள்ளே பேரறிவாளன் உறுதியுடன் நடத்தும் சட்டப் போராட்டங்கள்
ராஜீவ் கொலை வழக்கில் நீதி மன்றங்களால் நிரூபிக்க முடியாத குற்றச் சாட்டுகளுக்குப் பிறகும் 26 ஆண்டு களாக சிறைக் கம்பிகளுக்குள் இருந்து உறுதி தளராது சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் பேரறிவாளன். டெல்லி அதிகார பீடத்தில் ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும் தங்கள் அதிகாரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம், தனது முழுமையான அதிகாரச் செல் வாக்கையும் முறைகேடாகப் பயன் படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு முட்டுக் கட்டைகளைப் போட்டு வருகிறது. இதன் உச்சகட்டமாக குடியரசுத் தலைவர் வழியாக இவர்களின் விடுதலைக்கான தடையைப் பெற்று உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்தது நடுவண் ஆட்சி. நாட்டைக் கெடுத்ததே நேரு வின் குடும்பம் என்று பேசி வரும் பா.ஜ.க.வும், சங்பரிவாரங்களும் ராஜீவ் கொலைக் குற்றத்தில் நேரடி தொடர் பில்லாத சிறைவாசிகளின் விடுதலையை உறுதியாக மறுக்கின்றன என்றால் பார்ப்பன அதிகார வர்க்கம் ஆட்சிகளை தங்களின் பார்ப் பனிய திசையில் செலுத்திக் கொண்டிருக்...
