Category: பெரியார் முழக்கம்

பனிமலர்-சதீஷ் சாதி மறுப்பு மணவிழா

பனிமலர்-சதீஷ் சாதி மறுப்பு மணவிழா

கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் இரா.பன்னீர்செல்வம் – தமிழ்ச் செல்வி ஆகியோரின் மகளும், சூலூர்  கழகத் தோழர் வீரமணியின் தங்கையுமான ப. பனிமலர் – இரா. சதீஷ் நாராயணன் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 27.2.2012 அன்று பேராசிரியர் சரசுவதி தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்க்கைத் துணை ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்தார். பொதுச் செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கு.இராமகிருட்டிணன், பேராசிரியர் புரட்சிக்கொடி, சூலூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சூ.ர. தங்கவேலு, வழக்கறிஞர் தடா சந்திரசேகர், வழக்கறிஞர் மகாலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இது ஒரு சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணமாகும். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 08032012 இதழ்

கழகத் தோழர் இரா. டேவிட் – இரா. தீபாஸ்ரீ    வாழ்க்கைத் துணை ஏற்பு விழா

கழகத் தோழர் இரா. டேவிட் – இரா. தீபாஸ்ரீ வாழ்க்கைத் துணை ஏற்பு விழா

22.1.2012 அன்று காலை 11.30 மணிக்கு சேலம் மேற்கு மாவட்டசெயலாளர் தோழர் இரா. டேவிட் – இரா. தீபாஸ்ரீ இணையரின் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையேற்க, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார். இவ்விழாவில் ம.தி.மு.க சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக் கண்ணன், சேலம் சங்கீதா மெடிக்கல் பாலசுப்ரமணியன், சேலம் மேற்கு மாவட்ட கழகத் தலைவர் சக்திவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். பெரியார் முழக்கம் 08032012 இதழ்

டில்லியின் அதிகார ஆணவம்

டில்லியின் அதிகார ஆணவம்

‘தேசிய பயங்கரவாத தடுப்பு மய்யம்’ ஒன்றை உருவாக்க மத்திய உள் துறை அமைச்சகம் மேற் கொண்ட முயற்சிக்கு காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் கடுமையாக எதிர்த்ததால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. மத்திய உளவு நிறுவனமே மாநிலங் களில் நேரடியாக தலையிட்டு பயங்கர வாத நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காகவே இந்த அமைப்பு உரு வாக்கப்பட்டுள்ளது. மாநில முதல மைச்சர்களை கலந்து ஆலோசிக்கா மலே ‘சட்டாம் பிள்ளைத்’தனமாக மத்திய அரசு செயல்பட்டது. மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் காங்கிரசோ, பா.ஜ.க.வோ, மத்தியில் அமைச்சரவை அமைக்க முடியாது என்ற நிலை வந்த பிறகும் காங்கிரஸ் ஏதோ, அகில இந்திய அளவில் செல்வாக்குள்ள கட்சி போல கற்பனைக் கனவில் மிதந்து கொண் டிருக்கிறது. உண்மையில் சோனியா காந்தி, இப்படி ஒரு கற்பனையில் மூழ்க்கிக் கிடந்தவர்தான். 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு நம்பிக்கை யில்லா வாக்கெடுப்பில் கவிழ்ந்தபோது சோனியா, தன்னிடம் 272 நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆதரவு...

நெடுமானூரில் கழகக் கூட்டம்

நெடுமானூரில் கழகக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 12.2.2012  ஞாயிறு மாலை 6 மணியளவில் கழகக் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நெடுமானூரில் நடைபெற்றது. தெ.செ. நாவாப் பிள்ளை தலைமை தாங்கினார். மு. திரு நாவுக்கரசு, பெரியசாமி, ரா. சிவராமன், ச. வசந்தகுமார் ஆகியோர் முன்னலை வகிக்க, ச.கா. இளையராசா வரவேற்புரையாற்றினார். செ. பிரபு, திருமால், நா.வெற்றிவேல், ந. அய்ய னார் ஆகியோர் கருத்துரையாற்றினர். இறுதியாக காவை இளவரசன் ‘மந்திரமல்ல தந்திரமே’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நிகழ்த்தினார். விழுப்புரம் கணேசன், பெரியார் வெங்கட், கி.ஆசைத்தம்பி, க.இராமர், கல்லை சங்கர் உள்பட ஏராளமான தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அ.ரமேசு நன்றி கூறினார். விழுப்புரம், கடுவனூர் கிளை கழகத் தோழர்களால் உருவாக்கப் பட்டது திராவிடன் சடுகுடு குழு. 18.1.2012 புதன் அன்று பொங்கல் விழாவை முன்னிட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 20 குழுவினர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிப் பெற்ற அணியினருக்கு முதல் பரிசுத்...

திருப்பூரில் கழகம் நடத்திய பொங்கல் விழா

திருப்பூரில் கழகம் நடத்திய பொங்கல் விழா

கழகம் சார்பாக திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் மூன்றாம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தை பொங்கல் விழா 22.1.2012 காலை நடைபெற்றது. அலமேலு பாலாஜி மருத்துவமனை மருத்துவர் மனோகர் பொங்கல் வழங்கி விழாவைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாலை 6 மணி வரை நடைபெற்றது. முல்லை பெரியாறு நாயகன் கர்னல் பென்னிகுயிக் படத்திற்கு சு. துரைசாமி (மாவட்ட தலைவர்) மாலை அணிவித்து துவக்கி வைத்தார். க. அகிலன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இரவு 7 மணிக்கு முல்லைப் பெரியாறு சிக்கலும் தீர்வும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.  தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். கழகத் தோழர்கள் மாஸ்கோ நகர் சம்பூகன், விசயன், பாடகர் தியாகு, மாநகரச் செயலாளர் முகில்ராசு, கிளாகுளம் செந்தில், கோபிநாத், மாதவன், தம்பி, பாலு, நீதியரசன், சாமுண்டிபுரம் மூர்த்தி, தண்டபாணி,...

உண்மைகளை மறைக்கும் இலங்கை விசாரணை ஆணையம்

உண்மைகளை மறைக்கும் இலங்கை விசாரணை ஆணையம்

இலங்கை தனக்குத் தானே ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்துக்கொண்டதற்குக் காரணம் சர்வதேச அளவில் உருவான அழுத்தம்தான். டப்ளின் நகரில் செயல்படும் மக்கள் ‘நிரந்தரத் தீர்ப்பாயம்’ – அதைத் தொடாந்து பான்கி மூன் நியமித்த மூவர்குழு விசாரணை அறிக்கைகள் – இலங்கை அரசின் போர்க் குற்றத்தை உறுதிப்படுத்தின. அய்ரோப்பிய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பின. இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி இலங்கை அரசு ஒரு விசாரணை ஆணையம் அமைக்கும் நிலைககு தள்ளப்பட்டது. ஏற்கனவே இலங்கை அதிபர் நியமித்த பல ஆணையங்கள் உருப்படியாக எந்த விளைவுகளையு ம் ஏற்படுத்தாத நிலையில், மீண்டும் இலங்கை ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது கண் துடைப்பு என்றே சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறின. இந்த விசாரணை ஆணையத்தின் தலைவரான சி.ஆர். டி.சில்வா, இலங்கை அரசின் தலைமை சட்ட அதிகாரியாவார். 2006-2009 ஆம் ஆண்டில் இலங்கை அதிபர் ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு...

அணுஉலை ஆபத்து விளக்கக் கூட்டம்

அணுஉலை ஆபத்து விளக்கக் கூட்டம்

வடசென்னை பெ.தி.க. சார்பில் கடந்த 22.2.12 அன்று புரசைவாக்கம் பகுதியில் அணுஉலை ஆபத்து என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கழக தலைவர் கொளத்தூர் மணி, துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர்கள், சுந்தரராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வடசென்னை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் குமாரதேவன் வரவேற்புரையாற்ற, மாவட்ட தலைவர் எ.கேசவன் தலைமையேற்க சமர்பா குமரன் மற்றும் நாத்திகன் இன எழுச்சிப் பாடல்கள் நிகழ்ச்சி தொடங்கியது. பெரியார் முழக்கம் 08032012 இதழ்

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி

1912 பார்ப்பன ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த காலம் இது! நூற்றுக்கு மூவராக மட்டுமேயிருந்த பார்ப்பனர்கள் அரசு உயர் பதவிகள் அனைத்திலும் மிகப் பெரிய அளவில் இடம் பெற்று ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக, ஒரு கணக்கெடுப்பின்படி டிப்டி கலெக்டர்களில் 55ரூ, சப்ஜட் களில் 83ரூ, மாவட்ட முன்சீப்களில் 72ரூ பார்ப்பனர்களாகவே இருந்தனர். உயர் பதவியிலுள்ள பார்ப்பனர்கள் தமக்குக் கீழ் உள்ள பார்ப்பனரல்லாதாரைப் பாரபட்சமாக நடத்துதல், பதவி உயர்வு பெறவிடாமல் அழுத்தி வைத்தல், சுய ஜாதி அபிமானத்துடன் அவர்களை இழிவுபடுத்துதல் ஆகிய கொடுமைகளைப் புரிந்து வந்தனர். இக்கொடுமைகளையும், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளியில் எடுத்துச் சொல்லக்கூட திராணி அற்றவர்களாகப் பார்ப்பனரல்லாத அரசு அலுவலர்கள் இருந்தனர். இந்த நிலையில் சென்னை ரெவின்யூபோர்டு அலுவலகத்திலும், மற்றும் சில அரசு அலுவலகங்களிலும் பணி புரிந்த சில பார்ப்பனரல்லாத எழுத்தர்களும் அலுவலர்களும் தங்கள் குறைகளை வெளியிடவும் பார்ப்பன ஆதிக்கத்தால்தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடவும், “சென்னை அய்க்கிய சங்கம்” என்ற...

மதுரைப் பகுதியில் சட்டவிரோத ‘பால்ய’ திருமணங்கள்

மதுரைப் பகுதியில் சட்டவிரோத ‘பால்ய’ திருமணங்கள்

மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுமிகளுக்குத் திருமண வயது வரும் முன்பே ‘பால்ய விவாகம்’ நடத்தும் கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சில குறிப்பிட்ட சாதிப் பிரிவைச் சார்ந்தவர்கள், பள்ளிப் படிப்பு படிக்கும் போதே, பெண்கள் ‘காதலில்’ சிக்கி விடுவார்கள் என்று அஞ்சியும் அதனால் தங்களின் குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்றும், அதைத் தவிர்க்கவே இளம் வயதில் திருமணம் செய்து வைத்து விடுவதாகவும் கூறுகிறார்கள். உசிலம்பட்டி அருகே வி.கல்லுப்பட்டியைச் சார்ந்த 8வது படிக்கும் 13 வயது சிறுமிக்கு அவரைவிட 17 வயது அதிகமுள்ள மணமகனுக்கு அடுத்த சில வாரங்களில் திருமணம் நடைபெற உள்ளது. இது தங்களின் சாதி வழக்கமாகத் தொடர்ந்து வருகிறது என்கிறார்கள். பெண்ணின் தாய்க்கு 11 வயதிலும், பெண்ணின் மூத்த சகோதரிக்கு 12 வயதிலும் திருமணம் நடந்ததாம். ‘எங்களுக்கு குடும்ப கவுரவமும் உறவுகளுமே முக்கியம்’ என்கிறார், 70 வயது மூதாட்டி கருப்பாயி. தாய்மாமனுக்கு பெண் கேட்க முழு உரிமை உண்டு. “எனக்கு பெண்...

பெண்ணுரிமையை மறுக்கும் தனியுடைமை

பெண்ணுரிமையை மறுக்கும் தனியுடைமை

இப்போது இங்கு பெண்ணுக்குத் தாலி கட்டப்பட்டது. இதற்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லப்பட்டாலும் இந்தத் தாலி கட்டுவதானது, “இந்தப் பெண் இந்த மாப்பிள்ளையினுடைய சொத்து” என்கின்ற அறிகுறிக்கு ஆகத்தான். இந்தத் தத்துவம் சுலபத்தில் மாறிவிடும் என்று நான் கருத முடியவில்லை. தாலி கட்டாத கல்யாணம் நடந்த போதி லும் மணப்பென் மணமகனுடைய சொத்து என்பது மாறிவிடும் என்று நான் நினைக்க முடியவில்லை. ஏனெனில், இத் திருமணத்துக்குச் சம்மந்தப் படாத கற்பு என்பது ஒன்று பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப் பட்டிருக்கிறது. கற்பு என்பதைச் சுகாதாரத்தையும், சரீரத் தத்துவத்தையும், பொது ஒழுக்கத்தையும் பொறுத்து நான் ஆதரிக்கிறேன் என்றாலும் இன்று அந்த முறையில் கற்பு கையாளப்படுவதில்லை. உதாரணம் என்னவென்றால் கற்பு ஆண்களுக்கு வலியுறுத்தப்படுவதில்லை என்பதிலிருந்தே உணர்ந்து கொள்ளலாம். அதற்கு உதாரணம் என்னவென்றால் இந்துக் கடவுள்கள் என்பவற்றிற்கும்கூட ஆண் கடவுள்களுக்குக் கற்பு வலியுறுத்தப்படுவதில்லை. ஆதலால், அந்த – அதாவது ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு...

ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேசப் பிடி இறுகுகிறது போர்க்குற்றங்கள்: அய்.நா. விவாதிக்குமா?

ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேசப் பிடி இறுகுகிறது போர்க்குற்றங்கள்: அய்.நா. விவாதிக்குமா?

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவிலுள்ள அய்.நா. அவையில் (அமெரிக்காவின் நியுயார்க்கிலும் அய்.நா. மன்றம் உள்ளது) தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையில் தமிழர்கள் மீதான போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலிமை பெற்று வருகிறது. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரலாம் என்று தெரிகிறது. அய்.நா.வில் எந்த நேரத்திலும் எந்த மாற்றமும் நிகழலாம் என்பதால்  அந்தத் தீர்மானம் கொண்டு வரப்படும்போதுதான் அது உறுதியாகும். ஆனாலும், அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தின் நகல், மனித உரிமைக் குழுவில் இடம் பெற்றுள்ள 47 உறுப்பு நாடுகளுக்கும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் கூட இலங்கை மீது சர்வதேச போர்க் குற்ற விசாரணையை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நகல் தீர்மானம் கூறுவது என்ன? இலங்கை அரசு, தனக்குத் தானே நியமித்துக் கொண்ட ‘கற்ற படிப்பினை மற்றும் பாதிப்பிலிருந்து மீட்டல்’ என்ற (எல்.எல்.ஆர்.சி.)...

உலகம் – உயிர் – சாதி தோன்றியது, இப்படித்தான்!

உலகம் – உயிர் – சாதி தோன்றியது, இப்படித்தான்!

ஆதாரங்களுடன் அறிவியல் கூறும் ஆராய்ச்சி முடிவுகளின்படி பிக்பேங்க் என்ற பெரிய வெடிச் சிதறல் காரணமாக இந்த ‘அண்டம்’ என்னும் பிரபஞ்சம் தோன்றி 1500 கோடி ஆண்டுகள் ஆகின்றது. அதன் தொடர்ச்சியாக விண்மீன் (நட்சத்திர) மண்டலங்களும் (கேலக்ஸி), அவற்றின் விண்மீன்களும் தோன்றின. இந்த அண்டத்தில் கோடானுகோடி விண்மீன்களை உள்ளடக்கிய கோடிக்கணக்கான விண்மீன் மண்டலங்கள் உள்ளன என்பதைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உருவான விண்மீன் மண்டலங்களில் ஒன்றுதான் நமது கதிரவ விண்மீனை (சூரிய நட்சத்திரத்தை) உள்ளடக்கிய பால்வெளி விண்மீன் மண்டலம் (மில்கி வே கேலக்ஸி) ஆகும். நமது இந்தப் பால்வெளி விண்மீன் மண்டலத்தில் மட்டும் நம் கதிரவனைப் போன்ற 20000 கோடி விண்மீன்கள் உள்ளன. பால்வெளி விண்மீன் மண்டலத்திலுள்ள நம் கதிரவ விண்மீன் தோன்றி இன்றைக்கு 500 கோடி ஆண்டுகள் ஆகின்றது. இன்னும் 600 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு நமக்கு ஒளி தந்து நம் உயிருக்கு ஆதாரமாக இருக்கும் இந்தக்...

திராவிடர் இயக்கம்: படிப்பினையும் தேவையும்

திராவிடர் இயக்கம்: படிப்பினையும் தேவையும்

திராவிடர் இயக்கம் குறித்து ‘இந்தியா டுடே’ இதழுக்கு (மார்ச் 14) கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை இது. சில சிறு மாற்றங்களுடன் ‘இந்தியா டுடே’ வெளியிட் டுள்ளது. இதழுக்கு அனுப்பிய முழுமையான கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். தமிழ்நாட்டின் சமூக வரலாற்றிலிருந்து திராவிடர் இயக்கத்தைப் பிரித்துப் பார்க்க இயலாது. இப்போது மீண்டும் திராவிடர் இயக்கம் பற்றிய விவாதங்கள் தொடங்கியுள்ளன. உண்மையில் ‘திராவிடர் இயக்கம்’ – அன்று சென்னை மாகாணத்தில் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்கு நீதி கேட்டு உருவானதுதான். தென்னாட்டில் அடங்கி யிருந்த கேரளா, ஆந்திரா, கருநாடக மாநிலங்களை உள்ளடக்கி எழுந்தது அல்ல. இஸ்லாமியர், கிறிஸ்தவர் உட்பட, பார்ப்பனரலலாதவர்கள் உரிமைக் குரல் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே தனி மனிதர்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கியது. 1909 ஆம் ஆண்டில் சென்னையில் புருஷோத்தம (நாயுடு), சுப்பிரமணியம் என்ற இரு வழக்கறிஞர்கள், பார்ப்பனரல்லாத மாணவர்களின் ‘கல்வி...

புழல் சிறைக் கைதியின் கடிதம்

புழல் சிறைக் கைதியின் கடிதம்

கடந்த சில மாதங்களாக சிறையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டைப் படித்து வருகிறோம். வெளியில் நடக்கும் செய்திகளை அறிந்து மிகவும் உற்சாகம் பெற்று வருகிறோம். 19.1.2012 இதழில் வெளிவந்த ‘25 ஆண்டுகளாக நடக்கும் கூடங்குளம் எதிர்ப்பு இயக்கம்’ என்ற கட்டுரை மிகச் சிறப்பாக உண்மைகளை விளக்கியது. கூடங்குளம் எதிர்ப்பு திடீரென்று தோன்றியதாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தரகு முதலாளிகளுக்கு சேவகம் செய்து வரும் ஏடுகளுக்கு இந்தக் கட்டுரை சரியான பதிலாக இருந்தது. – வே. சுந்தரமூர்த்தி, புழல் மத்திய சிறை பெரியார் முழக்கம் 15032012 இதழ்

புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா சேர்ப்பு: சென்னை மாவட்டக் கழகம் தீவிரம்

புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா சேர்ப்பு: சென்னை மாவட்டக் கழகம் தீவிரம்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தாக்கள் சேர்க்கும் பணியில் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் முனைப்பாக செயல்பட்டு வருகின்றனர். 500 சந்தாக்களை இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறார்கள். முதல் கட்டமாக பிப்.23 அன்று தலைமை அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் 100 சந்தாதாரர்களுக்கான தொகை, முகவரிப் பட்டியலை தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, கழகத் தலைவரிடம் வழங்கினார். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் பெருமளவில் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் இயக்க நூற்றாண்டு  கருத்தரங்குகளை மாநாடுபோல் நடத்துவது என்றும், புரட்சிக் கவிஞர் விழாவை பகுத்தறிவு தமிழ் உணர்வாளர்களை அழைத்து, அறிவியல் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழர் புரட்சிப் பண்பாட்டு விழாக்களாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கேசவன், வழக்கறிஞர் குமாரதேவன், தென்சென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தபசி குமரன் உள்ளிட்ட தோழர்கள் பலரும் கருத்தினைக்...

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (2)

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (2)

1913  சென்னை அய்க்கிய சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நடேசனார் மருத்துவமனைத் தோட்டத்திலேயே சிறப்பாக நடைபெற்றது. ஓரிருவரைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் ஆண்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டதானது பார்ப்பனர் தம் ஆதிக்கம் ஏனையோரை எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது என்பதைக் காட்டியதுடன், பார்ப்பனரல்லாதார் எனும் உணர்வின் ஒருமித்த வலிவையும் உணர்த்தியது. “சென்னை அய்க்கிய சங்கம்” என்ற பெயர் இச்சங்கத்தின் நோக்கத்தையும், ஆற்றும் பணியையும் குறிக்கும் வகையில் இல்லாமல், பொருத்தமற்றதாகக் காணப்படுவதால் ‘பார்ப்பனர் அல்லாதார் சங்கம்’ என்ற பெயர் முன்மொழியப்பட்டு விவாதிக்கப்பட்டது. பார்ப்பனரல்லாதார் என்று ஏன் எதிர்மறைப் பெயரால் குறிக்க வேண்டும்? திராவிடர் சங்கம் என்றே பெயரிடலாம் என்ற கருத்து பெரும்பான்மையோரால் முன்மொழியப்படவே சென்னை அய்க்கிய சங்கம் என்ற பெயரானது, ‘திராவிடர் சங்கம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. சென்னைக்கு வருகை தந்த ராயல் கமிஷனின் முன் அன்றைய அரசுத் தலைமைச் செயலாளராயிருந்த அலெக்ஸாண்டர் கார்டியூ சென்னை மாகாணத்தில் கல்வி மற்றும் வேலை...

தலையங்கம் தேசிய கட்சிகள் விடை பெறுகின்றன!

தலையங்கம் தேசிய கட்சிகள் விடை பெறுகின்றன!

இந்தியாவில் அய்ந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு தேசியக் கட்சி களுக்கும் எதிராகவே வந்துள்ளன. உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியை வீழ்த்தி, சமாஜ்வாடி கட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ளது.  இராகுல் காந்தி களமிறங்கியும் உ.பி.யில் காங்கிரஸ், நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. பஞ்சாபில் அகாலிதளத்தின் பிரகாஷ்சிங் பாதல், ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். பா.ஜ.க., அகாலிதளத்தின் கூட்டணி கட்சியாகும். கடந்த முறை ஊழல் புகார்களில் பா.ஜ.க. அமைச்சர்கள் பதவி விலகிய நிலையிலும் ஆட்சியின் எதிர்ப்புகளை காங்கிரஸ் கட்சியால் அறுவடை செய்ய முடியவில்லை. முலாயம்சிங் மகன் அகிலேஷ், உ.பி. தேர்தலுக்கு பொறுப்பேற்றதுபோல் பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் மகன் சுக்பீர்சிங் பாதல் தேர்தல் பொறுப்பை ஏற்று செயல்பட்டார். இந்து வாக்கு வங்கி, பா.ஜ.க.வுக்கும் ஜாட் சீக்கியர் வாக்கு வங்கி அகாலிதளத்துக்கும், பிற்படுத்தப்பட்ட சீக்கியர், ஜாட் அல்லாத சீக்கியர், தலித் சீக்கியர் வாக்கு வங்கி காங்கிரசுக்கும் இருந்த நிலையை மாற்றி, சுக்பீர்சிங்,...

8 நாட்கள் 84 பகுதிகளில் மரண தண்டனைக்கு எதிராக பரப்புரைப் பயணம்

8 நாட்கள் 84 பகுதிகளில் மரண தண்டனைக்கு எதிராக பரப்புரைப் பயணம்

மரணதண்டனைக்கு எதிராக வடாற்காடு மாவட்டம் சோலையார் பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தொகுதிகளில் உள்ள 84 ஊர்களில் பரப்புரைப் பயணம் நடந்தது. பிப்.15 இல் தொடங்கி பிப். 22 வரை 8 நாட்கள் நடந்த பரப்புரை பயணத்தில் மூன்று தமிழர் தூக்குத் தண்டனைக்கு எதிராக முன் வைத்த கருத்துகளை நியாயங்களை பல்லாயிரக்கணக்கான மக்கள் செவிமெடுத்தனர். பரப்புரைப் பயணம் பற்றிய செய்தித் தொகுப்பு: தோழர்கள் சிவலிங்கம் மற்றும் குட்டிமணி (பா.ம.க. ஒன்றிய செயலாளர்) ஆகியோர் வழிகாட்டுதலில் எட்டு நாட்கள் தெருமுனைப் பிரச்சாரப் பயணம் திருப்பத்தூர், சோலையார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு தொகுதிகளில் பல்வேறு சிற்றூர், பேரூர் மற்றும் நகரங்களில் சிறப்பாக நடந்து முடிந்தது. குமரேசன் மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் நிதியும், கே.சி.காமராஜ் திருமண மண்டபமும், வ.கி.அருணா மகிழுந்தும், ப.அன்பழகன் (தி.மு.க.) ஓய்விட அறையும் கொடுத்துதவினர். உணவு வழங்கியோர்: வ. கண்ணதாசன் (ம.தி.மு.க.), திருப்பத்தூர்அய்யம்பேட்டை பாலு (விடுதலை சிறுத்தைகள்), சா.பெரியார்தாசன்...

சென்னை பல்கலையில் பொதுச் செயலாளர்  விடுதலை இராசேந்திரன் அன்னை சரோஜினி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு

சென்னை பல்கலையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அன்னை சரோஜினி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு

சென்னை பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத் துறையில் அன்னை சரோஜினி நினைவு அறக்கட்டளை சார்பில் 7.3.2012 அன்று பிற்பகல் 3 மணியளவில் பவள விழாக் கலையரங்கில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியாரின் மனித நேயம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவரும், பெரியார் நாத்திகக் கருத்துகளில் தீவிர ஈடுபாடு கொண்டு   பணி ஓய்வு பெற்ற பிறகு தனது இல்லத்தில் மாதம் தோறும் மனித நேய பகுத்தறிவுக் கூட்டங்களை நடத்தியவருமான மருத்துவர் பேராசிரியர் கே. நடராசன், தனது துணைவி யார் நினைவாக நிறுவிய அறக்கட்டளையே அன்னை சரோஜினி நினைவு அறக்கட்டளை யாகும். தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் அரசு வரவேற்புரையைத் தொடர்ந்து, விடுதலை இராசேந்திரன் ஒரு மணி நேரம் உரை யாற்றினார். ஆன்மீகவாதிகள், அறநெறி யாளர்கள், சான்றோர்கள் என்று எல்லோரும் மனித நேயத்தை வலியுறுத்தினாலும், பெரியாரின் மனித நேயம் உள்ளடக்கத்திலும் பண்புகளிலும்...

கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிறார்கள் கருவறை பார்ப்பன ஆதிக்கம் ஒழிகிறது!

கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிறார்கள் கருவறை பார்ப்பன ஆதிக்கம் ஒழிகிறது!

கேரளாவில் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் பார்ப்பனர் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்ற ‘பிறப்பு ஆதிக்கம்’ ஒழிந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அமைதிப் புரட்சி நடந்து முடிந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் கேரள தேவஸ்வம் போர்டு காலியாக இருந்த 100 அர்ச்சகர் பதவிகளில் 50 பார்ப்பனரல்லாதாரை அர்ச்சகராக நியமனம் செய்துள்ளது. கேரள தேவஸ்வம் போர்டு சார்பாக அர்ச்சகர் பதவிக்கு அனைத்து சாதியினரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. பிறகு அவர்கள் நேர்முகப் பேட்டிக்கு அழைக்கப்பட்டனர். மொத்தம் 199 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 40 சதவீதம் பேர் பார்ப்பனரல்லாத அனைத்து சாதிப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள்.  கேரள கூடுதல் தலைமை செயலாளர் கே.ஜெயக்குமார் கூறுகையில்: “ஒருவர் உள்ளத்தாலும் செயல்களாலும் தான் ‘பிராமணர்’ ஆக முடியுமே தவிர, பிறப்பால் அல்ல இதைத்தான் பழங்கால புனித நூல்கள் கூறுகின்றன” என்றார். மலையாள இந்துவாகவும் ‘தந்திர சாஸ்திரங்கள்’ – பூசை முறைகள் பற்றி தெரிந்தவர் களாகவும் உள்ளவர்கள்...

திருவான்மியூரில் சுயமரியாதை சுடரொளிகள் படத்திறப்பு

திருவான்மியூரில் சுயமரியாதை சுடரொளிகள் படத்திறப்பு

குத்தூசி குருசாமி – குருவிக்கரம்பை வேலு சுயமரி யாதைப் பேரவை சார்பில் 1.4.2012 காலை 10 மணியளவில் திருவான்மியூரில் (பி.டி.இராபர்ட் இல்லம், 132 வால்மீகி தெரு, இரண்டாம் தளம்) சுயமரியாதை சுடரொளிகள் நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குத்தூசி குருசாமி, குருவிக்கரம்பை வேலு, சென்னை தே.மு.சண்முகம், த. லோகநாதன் படங்களை முறையே கவிஞர் தமிழேந்தி, முனைவர் வளர்மதி, ம.அருள்முகம், மருத்துவர் சவுந்தர பாண்டியன் திறந்து வைத்து உரையாற்றுகிறார்கள். பெரியார் முழக்கம் 22032012 இதழ்

அய்.நா. அலுவலகம் முன் தமிழர்களைத்  தாக்கிய சிங்கள குண்டர்கள்

அய்.நா. அலுவலகம் முன் தமிழர்களைத் தாக்கிய சிங்கள குண்டர்கள்

ஜெனிவாவில் நடக்கும் அய்.நா. கூட்டத்தில் பங்கேற்று வரும் மக்கள் உரிமை கண்காணிப்பக இயக்குனர் ஹென்றி டிஃபேன் ஜூனியர் விகடன் ஏட்டில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து: “இலங்கை விவகாரத்தைப் பேசுவதற்காக ஒரு தனி அமர்வு இருந்தது. இலங்கையில் இருந்து வந்திருந்த மனித உரிமையாளர்கள் சுனிலா, நிமல்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினார்கள். அமர்வுக்கு நேரில் வர முடியாத சரவணமுத்து என்பவர் ‘ஸ்கைப்’ மூலமாகப் பேசினார். அதே சமயம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி ஐரோப்பாவைச் சார்ந்த தமிழ்ச் சமுதாயத்தினர் சுமார் 5000 பேர் மாநாட்டு அரங்குக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இலங்கை அரசும் அங்கே தனியாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இதற்காக, இலங்கையில் இருந்து 126 பேரை அவர்களே அழைத்து வந்து இருந்தார்கள். இவர்கள் தவிர, அடியாட்களையும் அனுப்பி இருந்தது இலங்கை அரசு. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ்...

சர்ச்சையைக் கிளப்பும் அமெரிக்கத் தீர்மானம்: முதலில் சர்வதேச விவாதம் தொடங்கட்டும்!

சர்ச்சையைக் கிளப்பும் அமெரிக்கத் தீர்மானம்: முதலில் சர்வதேச விவாதம் தொடங்கட்டும்!

அமெரிக்க தீர்மானத்தின் மீது கடைசியாக நாடாளுமன்றத்தில் வாய் திறந்த பிரதமர் மன்மோகன் சிங், அய்.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் இறுதி நகல், தம்மிடம் இல்லை என்றும், அதை ஆதரிக்கும் மனப்போக்கில் இந்தியா இருப்பதாகவும் (ஐnஉடiநேன வடி எடிவந) கூறியுள்ளார். போருக்குப் பிறகு இலங்கை அரசு நியமித்த விசாரணை ஆணையமும் அந்த ஆணையத்தின் பரிந்துரையை இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததும் அவசர நிலை அங்கே தளர்த்தப்பட்டதும், உள்ளாட்சித் தேர்தலுக்கு இலங்கை அரசு தயாராகி வருவதும் உறுதியான நடவடிக்கைகள் என்று மன்மோகன் சிங் கூறுகிறார். இலங்கை அரசின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன் வைக்க மன்மோகன் சிங் தயாராக இல்லை. இது பற்றி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, “பிரதமர் உரையில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டது பற்றி எதையுமே குறிப்பிடவில்லை. மனித உரிமை மீறலுக்காக இலங்கை அரசு கண்டிக்கப்படும் என்றும் கூறவில்லை. இது மழுப்பலான, பயனில்லாத பதில்” என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவின்...

‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ அறிக்கையால் மேலும் நெருக்கடி போர் முடிந்த பிறகு இலங்கையின் கொடூரமான மனித உரிமை மீறல்கள்

‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ அறிக்கையால் மேலும் நெருக்கடி போர் முடிந்த பிறகு இலங்கையின் கொடூரமான மனித உரிமை மீறல்கள்

இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு, போர் முடிந்த பிறகு இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை, கடந்த 13 ஆம் தேதி அய்.நா.வின் அறிக்கையாக சமர்ப்பித்தது. இலங்கை அரசுக்கு உலக அரங்கில் மேலும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ள அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் இவை: சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் 9வது பிரிவு, “எந்த ஒரு நபரையும் சட்ட விரோதக் காவலிலோ, கைது செய்தோ, அடையாளம் தெரியாத ரகசிய இடத்திலோ தடுத்து வைக்கக் கூடாது” என்று திட்டவட்டமாக கூறுகிறது. இது சர்வதேச சட்டமாக ஏற்கப்பட்டுள்ளது. எல்லா அரசு களையும் இது கட்டுப்படுத்தும்; சாக்கு போக்குகள் எதையும் கூறி அரசு இந்த பிரகடனத்திலிருந்து விலகி நிற்க முடியாது. ஆனால், சட்ட விரோதமாக பல்வேறு அடக்கு முறை சட்டங்களின் கீழ் காவலில் தடுத்து வைப்பது சிறீலங்காவில் தொடர் கதையாகும். 1971 ஆம்...

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (3) அன்னிபெசன்ட் எடுத்த ‘ஆரிய அவதாரம்’

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (3) அன்னிபெசன்ட் எடுத்த ‘ஆரிய அவதாரம்’

1915 பார்ப்பனரல்லாத இளைஞர்களின் இன எழுச்சியின் வெளிப்பாடாக திராவிடர் சங்கத்தின் சார்பில் ‘திராவிடப் பெருமக்கள்’ மற்றும் பார்ப்பனரல்லாதார் கடிதங்கள் ஆகிய இரு வெளியீடுகள் வந்தன. பார்ப்பனர் அல்லாதாரின் கல்வியை ஊக்குவித்தும், பார்ப்பனருடன் போட்டியிட்டு முன்னேறும் வகையில் ஒன்று சேர்ந்து உழைக்கும்படி தூண்டும் வகையில் அமைந்த 21 கடிதங்களைக் கொண்டது, ‘பார்ப்பனர் அல்லாதார் கடிதங்கள்’ என்ற நூலாகும். இவ்விரு நூல்களும், எஸ்.கே.என். என்னும் சுருக்கப் பெயர் (முழுப் பெயர் தெரியவில்லை) உள்ளவரால் எழுதப்பட்டு, ‘இந்தியன் பாட்ரியாட்’ எனும் இதழாசிரியர் சி.கருணாகரமேனனால் வெளியிடப்பட்டவை ஆகும். செப்டம்பர் 25 இல் ‘ஹோம் ரூல்’ இயக்கத்தைத் தொடங்கிய அன்னிபெசன்ட் அம்மையார், அதனை முற்றிலும் பார்ப்பனர் நலனுக்கே அர்ப்பணித்தமையினை உணர்ந்த பார்ப்பனரல்லாத தலைவர்கள் மேலும் விழிப்புற்றுக் கிளர்ந்தெழுந்தனர். ஏற்கனவே காங்கிரசில் ஈடுபட்டு உழைத்து வந்த தியாகராயர், நாயர் ஆகியோர், தென்னாட்டுப் பார்ப்பனர்களும் வடநாட்டு ஆதிக்கமும் ஒன்று சேர்ந்து தென்னிந்திய திராவிடர்களுக்கு அநீதி இழைத்து வரும் ஓர் அமைப்பே காங்கிரஸ்...

டெல்லி பல்கலையில் ‘இந்து’ ராம் திணறல்; மாணவர்கள் அதிரடி கேள்விகள்

டெல்லி பல்கலையில் ‘இந்து’ ராம் திணறல்; மாணவர்கள் அதிரடி கேள்விகள்

ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் எதிராக நஞ்சை கக்கி எழுதியவரும், ராஜபக்சேயின் தமிழகப் பிரதிநிதியாக செயல்பட்டவருமான ‘இந்து’ ராம் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் மாணவர்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தார். கடந்த 14.3.2012 அன்று மாலை ஜவகர்லால் நேரு பல்கலை விடுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு சார்பில் ‘ஊடகங்களின் ஒழுங்கு’ என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருந்தார். உரை முடிந்தவுடன், மாணவர்கள் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தனர். “நீங்கள் ஊடக ஒழுங்கைக் காப்பாற்றினீர்களா? ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் பத்திரிகை ஒழுங்கைப் பின்பற்றாமல், ராஜபக்சேயின் முகவராக செயல்பட்டது தான், ஊடக ஒழுங்கா? கண்மூடித்தனமாக சீனாவை விமர்சனமின்றி ஆதரிப்பது சரியா? ‘இலங்கா ரத்னா’ விருதை இலங்கை அரசிடமிருந்து பெற்றது ஏன்? கொலைக் குற்றம் சாட்டப் பட்ட இளைய சங்கராச்சாரி விஜயேந்திரனை ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு வரும்போது எல்லையில் நீங்களே காரில் சென்று அழைத்து வரலாமா? என்ற கேள்விகளை சரமாரியாகத் தொடுத்தனர். “போருக்குப் பிறகு தமிழர்...

உலகம் – உயிர் – சாதி தோன்றியது, இப்படித்தான்!

உலகம் – உயிர் – சாதி தோன்றியது, இப்படித்தான்!

(சென்ற இதழ் தொடர்ச்சி) ஏன், எதற்கு எப்படி? என்று எதையுமே ஆராய்ச்சி செய்து பார் என்று ஏதென்சு நகரத்து இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டிய அறிஞர் சாக்ரடீசு நஞ்சு கொடுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பகுத்தறிவு பேசிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த புரூனோ என்ற பகுத்தறிவாதி 16.2.1600 இல் ரோமன் சர்ச்சில் வைத்து உயிரோடு எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வரலாற்றையும் நாம் மறந்து விடுவதற்கில்லை! போலியான மதக் கருத்துகளை யாரும் எதிர்க்கத் துணியவில்லை! துணிந்த ஒரு சிலரோ மக்கள் கூட்டத்தின் முன்பாக எரிக்கப்பட்டனர்.! கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர்! தூக்கிலிடப்பட்டனர்! கை கால்கள் துண்டிக்கப்பட்டனர்! இத்தகைய கொடுமையான தண்டனைகளை நேரில் கண்டபின் யாருக்கு போலி மதக் கருத்துகளை எதிர்க்கத் துணிவுண்டாயிருக்கும்? இவ்வாறு அறிவியல் உண்மைகளுக்குப் புறம்பான கருத்துகளை தங்கள் மத நூல்களில் கொண்டுள்ள அனைத்து மதங்களும் மக்களின் அறியாமை அச்சம், மூடநம்பிக்கை போன்றவைகளை அடித்தளமாகக் கொண்டு அழகாகவும், உறுதியாகவும் மனித சமுதாயத்தில் நிலைநிறுத்தப்பட்டன. உலகில்...

ராஜபக்சே நடத்தும் ‘ரவுடி அரசு’: அய்.நா. அதிகாரி கூறுகிறார்

ராஜபக்சே நடத்தும் ‘ரவுடி அரசு’: அய்.நா. அதிகாரி கூறுகிறார்

“ராஜபக்சே தனது அரசை ரவுடிகளின் நிறுவனமாக மாற்றியமைத்துள்ளார். (Rogue Institution) அப்படி மாற்றிக் கொண்ட சித்திரவதை, ஆள் கடத்தல் படுகொலைகளை அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தி, பெரிய அளவில் செய்து வருகிறார்” – இப்படி அய்.நா.வின் சித்திரவதைகளுக்கு எதிரான அய்.நா.வின் சிறப்புப் பிரதிநிதியே குற்றம் சாட்டியுள்ளார். இத்தகவலை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள் வி.சுரேஷ் மற்றும் டி.கே. நாகசாய்யா, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளனர். (மார்ச் 16, 2012) எந்த ஒரு குறிப்பிட்ட அரசுக்கும் எதிராக கண்டன தீர்மானம் வருவதை இந்தியா ஆதரிக்காது என்று இந்திய அரசு எடுத்துள்ள நிலையை அவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். மனித உரிமை மீறல் என்பதற்கான விளக்கம் என்ன? ஏதேனும் ஒருவர் அக்குற்றத்தை செய்கிறார்; அவர் இராணுவத்தினராக இருக்கலாம்; போலீசாக இருக்கலாம். மனித உரிமை மீறலுக்கு உள்ளாகிறவர், பொது மக்கள்; ஆயுதமற்ற நிராயுதபாணிகள். இவை எல்லாமே எப்படி நிகழ்கின்றன? சூன்யத்திலா? ஏதேனும் ஒரு...

‘அச்சம்’ போக்க வேண்டும் என்ற ஜெயலலிதா ‘அச்சுறுத்தி’ திணிக்கிறார்

‘அச்சம்’ போக்க வேண்டும் என்ற ஜெயலலிதா ‘அச்சுறுத்தி’ திணிக்கிறார்

மக்களின் அச்சத்தைப் போக்கிய பிறகே கூடங்குளம் அணுமின் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றார், முதல்வர் ஜெயலலிதா. அச்சத்தைப் போக்கும் வரை, திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால், தமிழக முதல்வர் நியமித்த விஞ்ஞானிகள் குழு, கூடங்குளம் இடிந்தகரை பகுதி மக்களை சந்திக்கவே மறுத்தது. மக்களின் அச்சம் அப்படியே நீடிக்கிறது. இப்போது முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களை அச்சுறுத்தி, 5000 போலீசையும், துணை ராணுவப் படைகளையும் குவித்து, போராட்டக் குழு தலைவர்கள் மீது தேச விரோதம் உள்ளிட்ட கொடூரமான சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து, கைது செய்து சிறையிலடைத்து, கூடங்குளம் அணு உலையைத் திறக்கப் போகிறது. ஈழத்தில் தமிழர்களை ஒழிக்கத் திட்டமிட்ட இலங்கை ராணுவம், அவர்களை முல்லைத் தீவு நோக்கி நெருக்கித் தள்ளியதுபோல், இடிந்தகரை மக்களும் இப்போது துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று நாடகமாடிய ஜெயலலிதா – இப்போது மக்களை அச்சுறுத்தி கூடங்குளம்...

அடக்கு முறையில் திணிக்கப்படும் அணுமின் நிலையம்

அடக்கு முறையில் திணிக்கப்படும் அணுமின் நிலையம்

எதிர்பார்த்தது நடந்து விட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை அப்பகுதி மக்கள் எதிர்ப்பை யும் மீறி துப்பாக்கி முனையில் இயங்கச் செய்வதற்கு தமிழக அமைச்சரவை முடிவெடுத் துள்ளது. ஒரு அணுஉலை அமைப்பதற்கு மேற்கொள்ளப் பட வேண்டிய அடிப்படையான ஆய்வுகளைப் புறக்கணித்துவிட்டு, பன்னாட்டு ஒப்பந்தத்தை பன்னாட்டு நிறுவனங்களின் மின்சாரம் தேவைக்காக இந்தியப் பார்ப்பன பனியா ஆட்சி, மக்கள் மீது திணிப்பதற்கு இப்போது மாநில ஆட்சியும் துணை போகிறது. அணு உலை தேவையா இல்லையா என்ற விவாதங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்; ஒரு அணு உலை அமையப் போகும் இடத்தின் நிலவியல் என்பது மிக முக்கியமாக ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும். அதற்காக அணுசக்தித் துறை வி.ஆர். வென்குலேர்ச்சர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு 1972 ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது.   நிலவியல் அமைப்பு, அதன் நிலைத்த தன்மை (ழுநடிடடிபiஉயட ளவயbடைவைல) கட்டாயம் ஆராயப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்திய பல்வேறு அம்சங்களில் முக்கியமானதாகும்....

கூடங்குளம் மக்கள் போராட்டத்தை ஒடுக்காதே! தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு

கூடங்குளம் மக்கள் போராட்டத்தை ஒடுக்காதே! தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு

கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் இடிந்த கரை மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பாளையங்கோட்டையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர்  மணி, இந்த ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பு விடுத்திருந்தார். மார்ச் 23 ஆம் தேதி பாளையங்கோட்டை ஜவகர் திடலில் பெரியார் திராவிடர் கழகம் ம.தி.மு.க., நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, த.தே.பொ.க., தமிழர் தேசிய விடுதலை இயக்கம், ஆதித் தமிழர் பேரவை, பா.ம.க., எஸ்.டி.பி.அய்., தமிழ்ப் புலிகள், காஞ்சி மக்கள்  மன்றம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், இந்திய தவ்ஹித் ஜமாத், அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்பு அமைப்பினரும், அணுஉலை எதிர்ப்பாளர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். பாளையங்கோட்டையிலிருந்து இடிந்தகரை நோக்கி பேரணியாக பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் புறப்படத் தயாரானார்கள். முன்னதாக ஜவகர் திடலில் நடந்த...

‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ அறிக்கையால் மேலும் நெருக்கடி போருக்குப் பிறகு சட்ட விரோத கைது-சித்திரவதைகள்

‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ அறிக்கையால் மேலும் நெருக்கடி போருக்குப் பிறகு சட்ட விரோத கைது-சித்திரவதைகள்

இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு, போர் முடிந்த பிறகு இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை, கடந்த 13 ஆம் தேதி அய்.நா.வின் அறிக்கையாக சமர்ப்பித்தது. இலங்கை அரசுக்கு உலக அரங்கில் மேலும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ள அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் இவை: இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 9(1)ன் கீழ், எந்தக் குற்றமும் குறிப்பிடாது ஒருவரை 18 மாதம் காவலில் வைக்க முடியும். அதற்குப் பிறகு, அவர் விடுதலை செய்யப்பட் டால், அவரது நடமாட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம் முடக்க முடியும். இந்த நடவடிக்கைகளை கேள்வி கேட்கவோ அல்லது நீதிமன்றம் தலையிடவோ உரிமையில்லை என்று பயங்கரவாத தடுப்புச் சட்டம் கூறுகிறது. கைதுக்கான ஆணை இல்லாமலே போலீஸ் கைது செய்யலாம். 72 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். கைது சட்டப்படி சரியானதுதானா என்று கேள்வி...

போராட்டத்தில் கழகத் தோழர்கள்

போராட்டத்தில் கழகத் தோழர்கள்

நெல்லையில் நடைபெற்ற இடிந்தகரை நோக்கிய பயணத்தில் பங்கேற்க தமிழகம் முழுதுமிருந்தும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஏராளமாக பங்கேற்றனர். பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், கோவை தோழர்களோடு கலந்து கொண்டார். சென்னையிலிருந்து 90 கழகத் தோழர்கள் இரயில் மூலமாக நெல்லைக்குச் சென்று போராட்டத்தில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 29032012 இதழ்

தூது போனாரா ‘துக்ளக்’ சோ?

தூது போனாரா ‘துக்ளக்’ சோ?

தமிழக அரசு கூடங்குளம் விவகாரத்தில் இப்படியொரு முடிவை அறிவித்ததில், பத்திரிகையாளர் சோவின் பங்கும் உண்டு என்கிறார்கள். இந்த அணு உலையை இயங்க வைப்பதையே தனது ஒரே பணியாகக் கொண்டு சுழன்று வந்த பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, தனது கடைசி அஸ்திரமாக சோவைத்தான் நம்பினாராம். இது சம்பந்தமாக அமைச்சரின் பிரதிநிதிகள் சோவைச் சந்தித்திருக்கிறார்கள். அதன் பின்னரே அரசின் நடவடிக்கையில் விறுவிறு மாற்றங்கள் ஏற்பட்டதாம். – ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ 29.3.2012 பெரியார் முழக்கம் 29032012 இதழ்

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (4) பகுத்தறிவும் – ஆன்மீகமும் கைகோர்த்தது!

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (4) பகுத்தறிவும் – ஆன்மீகமும் கைகோர்த்தது!

1916 திராவிடர் சங்கத்தின் சாதனைகளில் ஒன்று, டாக்டர் நடேசனார் அவர்களின் பெருமுயற்சியால், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு என அமைக்கப்பட்ட திராவிடர் இல்லம் எனும் விடுதியாகும். வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து பட்டப் படிப்புப் படிக்க வரும் பார்ப்பனரல்லாத மாணவர்கள் உணவுக்கும் தங்குவதற்கும் விடுதி வசதியின்றி இடையூறுகளுக்கு ஆளாயினர். பார்ப்பன விடுதிகளில் இவர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. எனவே, இவர்களின் நலன் காக்கும் பொருட்டு திராவிடர் இல்லம் எனும் விடுதியானது, ஜூலை மாதத்தில், திருவல்லிக்கேணி அக்பர் சாய்பு தெருவிலுள்ள விசாலமான கட்டடத்தில் நடேசனாரின் திறமையான நிர்வாகத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இந்த விடுதியானது வெளியூரிலிருந்து படிக்க வரும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு நல்லதொரு புகலிடமாக அமைந்தது. பார்ப்பனரல்லாத தலைவர்களான நாயரும், தியாகராயரும் ஒருவருக்கொருவர் மன வேற்றுமைக்கு உட்பட்டிருந்தது வலிமை யுடன் கூடிய பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றுவதற்குத் தடையாக இருந்தது என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் மனக்கசப்புக்கு ஆளானதற்குக் காரணமான, (சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த) பழைய சம்பவம் ஒன்று உண்டு....

தலையங்கம் அய்.நா. தீர்மானத்துக்குப் பிறகு….

தலையங்கம் அய்.நா. தீர்மானத்துக்குப் பிறகு….

அய்.நா. மனித உரிமைக் குழுவில் அமெரிக்கா-இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம், மார்ச் 22 ஆம் தேதி ஓட்டெடுப்பு வழியாக நிறைவேறிவிட்டது. தீர்மானத்தை ஆதரித்து 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்து நடுநிலை வகித்தன. இறுதிக் கடடத்தில் தீர்மானத்தை ஆதரிக்க முன்வந்த இந்தியா தீர்மானத்தின் நகலை திருத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அதன்படி தீர்மானத்தில் இலங்கை மீது சர்வதேசப் பிடிக்கு ஓரளவு வழிகுத்த வாசகங்கள் அகற்றப்பட்டன. இலங்கை அரசு தமிழர் பிரச்சனை தீர்வுக்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மனித உரிமைக் கவுன்சிலுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்; இலங்கை அரசே நியமித்த பாடம் கற்றல் மற்றும் நல்லிணக்க விசாரணை அறிக்கையின் போதாமையை சரி செய்து முழுமையான அறிக்கையாக்குவதற்கு அய்.நா.வின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இலங்கைப் பெற வேண்டும் என்ற வாசகங்கள் தீர்மானத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. இந்தப் பிரச்சனைகளில் இலங்கை அரசின் சம்மதம், விருப்பம் இருந்தால் மட்டுமே,...

விஞ்ஞானிகள்-உயரதிகாரிகள் அணுஉலை தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

விஞ்ஞானிகள்-உயரதிகாரிகள் அணுஉலை தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிராக இருப்பதால் அச்சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும், அதுவரை, புதிய அணுஉலைகள் தொடங்க தடைவிதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் விஞ்ஞானிகள், உயர் பதவிகளில் இருந்த அதிகாரிகள் பொது நலன் வழக்கை தொடர்ந்துள்ளனர். உச்சநீதிமன்றம் கடந்த வாரம்  வழக்கை விசாரணைக்கு அனுமதித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கும் அணுசக்தி தொடர்பான அமைப்புகளுக்கும் தாக்கீது பிறப்பித்துள்ளது. ‘பொது நலன்’அமைப்பின் இயக்குனர், ‘பொது நல வழக்கு மய்ய’த்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஈ.ஏ.எஸ்.சர்மா (எரிசக்தித் துறை முன்னாள் செயலாளர்), டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் (முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளர்), பேராசிரியர் டி.சிவாஜிராவ் (ஆந்திர மாநில மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் உறுப்பினர்), என்.கோபால்சாமி (முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்), கே.ஆர்.வேணுகோபால் (பிரதமரின் முன்னாள் செயலர்), டாக்டர் பி.எம்.பார்கவா (தேசிய அறிவுசார் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர்), அட்மிரல் லக்ஷ்மிநாராயணன் இராமதாசு (முன்னாள்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் இயக்க நூற்றாண்டில் சாதியக் கட்டமைப்புகளை எதிர்த்து கழகம் களமிறங்குகிறது

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் இயக்க நூற்றாண்டில் சாதியக் கட்டமைப்புகளை எதிர்த்து கழகம் களமிறங்குகிறது

இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு போன்று இரட்டை வாழ்விடங்களாக பிரிந்து கிடக்கும் ‘ஊர் – சேரி’ப் பிளவுக்கு எதிராக கழகம் கள  இறங்குகிறது. இது குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை: திராவிட இயக்க நூற்றாண்டில் சாதியக் கட்டமைப்புகளுக்கு எதிரான பெரியார் திராவிடர் கழகம் பரப்புரைப் பயணம். “… நம்மவர்கள் தங்களுக்கு சூத்திரப் பட்டமும், தீண்டாதார், பஞ்சமர் என்கிற பட்டமும் வேறு யாராலோ கொடுக்கப்பட்டதாய் கருதி மற்றவர் பேரில் கோபப்படுவது வடிகட்டின அறிவீனமே யாகும். ஏனெனில் எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல் லாம் சூத்திரப் பட்டமும், பஞ்சமப் பட்டமும் தானே எடுத்து தன் தலையில் சூட்டிக் கொண்டு திரிகின்றவனாவானே தவிர வேறில்லை. இந்தியாவில் இந்துமதம் உள்ளவரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போக மாட்டார்கள். அதுபோலவே இந்துமத வேதமும், சாஸ்திரமும், இராமாயண பாரதமும், பெரிய புராணம், சிவபுராணம், திருவிளையாடல் புராணம் முதலியவைகளும்...

கழகத்தின் புதிய வெளியீடுகள்

கழகத்தின் புதிய வெளியீடுகள்

“இராவண லீலா”  – தமிழ்நாட்டின் தேசிய விழா – ஈ.வெ.ரா. மணியம்மையார் 1974 ஆம் ஆண்டு அன்னை மணியம்மையார் நடத்திய ‘இராவண லீலா’ தொடர்பாக ‘விடுதலை’ ஏட்டில் வெளியிட்ட அறிக்கைகள்.      பக்.32; விலை: ரூ.10 “தமிழ்நாடு தமிழருக்கே” – ஈ.வெ.ரா. மணியம்மையார் ‘விடுதலை’யில் எழுதிய அறிக்கைகள், சொற் பொழிவுகளின் தொகுப்பு.  பக்.16;  விலை: ரூ.5 (திருப்பூரில் மார்ச் 18 அன்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூல்களை வெளியிட்டு, அறிமுக உரை நிகழ்த்தினார்.) நூல் பெற தொடர்புக்கு: பெரியார் திராவிடர் கழகம் தலைமையகம், 95 டாக்டர் நடேசன் சாலை, (முதல் மாடி), அம்பேத்கர் பாலம், சென்னை – 600 004. பேசி: 9941613535 பெரியார் முழக்கம் 05042012 இதழ்

சாதி அமைப்பைத் தகர்க்காமல் புரட்சி மலராது: மாவோயிசப் பெண் போராளி கூறுகிறார்

சாதி அமைப்பைத் தகர்க்காமல் புரட்சி மலராது: மாவோயிசப் பெண் போராளி கூறுகிறார்

பார்ப்பனர்கள் உருவாக்கிய சாதியமைப்பு இந்து மதத்தின் கோட்பாடாகி அதுவே சமூக அமைப்பாக கெட்டிப் படுத்தப்பட்ட நிலையில் சாதியமைப்பு தகர்க்கப்படாதவரை எந்த சமூகப் புரட்சியையும் கொண்டு வர முடியாது என்று பெரியாரும் அம்பேத்கரும் கூறினார்கள். சாதியக் கட்டமைப்பின் இறுக்கத்தைப் புரிந்து கொள்ளாத இடதுசாரிகள் வர்க்கப் போராட்டம் வெற்றிப் பெற்றால் சாதியை ஒழித்து விடலாம் என்றனர். இப்போது, தமிழ் தேசியம் பேசும் சில அமைப்புகள்கூட தமிழ் தேசியம் கிடைத்தால் சாதியை ஒழித்து விடலாம் என்கிறார்கள். சாதி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தாமலே தமிழ் தேசியத்தைக் கூர்மைப்படுத்திவிட முடியும் என்று கருதுகிறார்கள். இடதுசாரி கட்சிகள் சாதியப் பிரச்சனையைக் கடப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்ற முடிவுக்கு வந்து இந்தியாவில் வர்க்கமும் சாதியும் ஒன்றாகவே இருப்பதாகக் கூறி வருகிறார்கள். மார்க்சிய லெனினிய, மாவோயிச, புரட்சிகர குழுக்கள் நிலபிரபுத்துவ எதிர்ப்புப் புரட்சியை முன் வைக்கிறார்கள். ஆயுதம் தாங்கிய புரட்சியை முன்னெடுக்கும் மாவோயிச புரட்சியாளர்களும் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். இந்த இயக்கத்திலும்...

“குடிஅரசு” வாசகர் வட்டம் தொடக்க விழா

“குடிஅரசு” வாசகர் வட்டம் தொடக்க விழா

24.3.2012 சென்னை பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கத்தில் குடிஅரசு வாசகர் வட்டம் தொடக்க விழாவும் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது. ‘குடிஅரசு’ வாசகர் வட்டத்தின் தலைவர் வழக்கறிஞர் குமாரதேவன் தலைமையேற்க செயலாளர் க.ராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். கழகத்தின் துணைத்தலைவர் ஆனூர் செகதீசன், பெரம்பூர் கந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்புரையாற்றியவர்களுக்கு ‘குடிஅரசு’ வாசகர் வட்டத்தின் சார்பாக நினைவு பரிசும் பொன்னாடையும் வழங்கப்பட்டன. ‘திராவிடர் இயக்கம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய மறுமலர்ச்சி’ என்ற தலைப்பில் கழகத்தின் மூத்த வழக்கறிஞர் துரைசாமி, ‘திராவிடர் இயக்கத்தின் தேவை இப்பொழுதும்’ எனற தலைப்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினர். இறுதியாக ‘குடிஅரசு’ வாசகர் வட்டத்தின் பொருளாளர் வி.ஜனார்த்தனன் நன்றியுரையாற்றினார். திராவிடர் இயக்க உணர்வாளர்களும், நடுநிலை யாளர்களும் பெருமளவில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 05042012 இதழ்

கழக தலைமை நிலையத்தில் திராவிடர் இயக்கக் கருத்தரங்கு

கழக தலைமை நிலையத்தில் திராவிடர் இயக்கக் கருத்தரங்கு

18.3.2012 அன்று மாலை 5 மணிக்கு சென்னை கழக தலைமை அலுவலகத்தில் பட்டுக்கோட்டை இராமசாமி மணல்மேடு வெள்ளைச்சாமி சிந்தனை வட்டக் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு குரு. சரவணன் தலைமை வகித்தார். ‘திராவிடர் இயக்கம் – ஓர் ஓய்வு’ என்ற தலைப்பில் ஆய்வாளர் க. திருநாவுக்கரசு கருத்துரை வழங்கினார். 70-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர்களின் கேள்விகளுக்கு க. திருநாவுக்கரசு பதிலளித்தார். பெரியார் முழக்கம் 05042012 இதழ்

சேலம் மாணவர்களுக்கு கழகத்தினர் வழங்கிய இலவச குறுந்தகடுகள்

சேலம் மாணவர்களுக்கு கழகத்தினர் வழங்கிய இலவச குறுந்தகடுகள்

சிங்கள ராணுவம் ஈழத்தில் நடத்திய இனப்படுகொலைகளை சித்தரிக்கும் குறுந்தகடுகள், தாதகாப்பட்டி பெரியார் நூலகம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு, பொது மக்களுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 1350 குறுந்தகடுகள் வழங்கப்பட்டன. 16.3.2012 வெள்ளியன்று சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களிடம் பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை 650 குறுந்தகடுகளும், 17.3.2012 சனி அன்று சேலம் சட்டக் கல்லூரி சேலம் கெண்டலாம்பட்டி சௌடேஸ்வரி கல்லூரி மாணவர்களிடமும் மற்றும் பொது மக்கள், சமூக ஆர்வலர்களிடமும் சேலம் பழைய சூரமங்கலம் நீலாம்பாள் மேல்நிலைப் பள்ளியிலும் குறுந்தகடுகள் வழங்கப்பட்டன. கழகத் தோழர்கள் வெ.ப.அம்பிகாபதி (சிவசக்தி நகர்), செந்தில்குமார் (கொண்டலாம்பட்டி), செந்தில் (அன்னதானப்பட்டி), ல.லோகநாதன் (இந்திய பொதுவுடைமை கட்சி), மணிகண்டன் (இந்திய பொதுவுடைமை கட்சி) ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர். பெரியார் முழக்கம் 05042012 இதழ்

இது ஜனநாயகமா? சாதிய நாயகமா?

இது ஜனநாயகமா? சாதிய நாயகமா?

25.3.2012 ‘இந்து’ நாளேட்டில் பேராசிரியர் சுரா தராபுரி – இந்தியாவில் சாதிய தீண்டாமைக் கொடுமைகளை விளக்கி எழுதிய கட்டுரையின் சுருக்கம்: 1949 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்ட வரைவு நகலை முன்மொழிந்த அம்பேத்கர், மனிதர்களை பிளவுபடுத்தும் ஒரு சமூகமாக இந்த நாடு இருக்கிறதே, அதன் விளைவுகள் என்னவாகும் என்று தனது அச்சத்தைத் தெரிவித்தார். நிறுவனமாக்கப் பட்ட சாதிய கட்டமைப்பில் தலித் மக்கள் சந்திக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு கொடுமைகள்  பற்றிய சரியான புரிதல் அவருக்கு இருந்தது. மேல் கீழ் என்று ஏணிப்படி வரிசை போல் இந்த ஏற்றத் தாழ்வுகள்  நிலைநிறுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். தீண்டாமைக் கொடுமைகளை அவரே தனது வாழ்க்கையில் சந்தித்தார். சாதிக் கட்டமைப் பின் விளைவான தீண்டாமைக் கொடுமைகள் இப்போதும் தொடருகின்றன. 2012 பிப்.15 அன்று அரியானா மாநிலம் தவுகாத்பூர் கிராமத்தில் ஒரு தலித் இளைஞன் பொது குடிநீர்ப் பானையில் தண்ணீர் குடித்ததற்காக உயர்சாதியினர், அவரது கையை வெட்டினர்....

தமிழ்ச் செல்வன் – தனவதி வாழ்க்கை ஒப்பந்தம்

தமிழ்ச் செல்வன் – தனவதி வாழ்க்கை ஒப்பந்தம்

கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வடலூர் வே. கலியமுர்த்தி-இராதா ஆகியோரது மகன் க. தமிழ்ச்செல்வன், எம்.எஸ்.சி., பிஎச்.டி. – செ. தனவதி, பி.எஸ்சி., பி.ஜி.டி.சி.ஏ. ஆகியோரது வாழ்க்கைத் துணை ஏற்பு விழா, 29.1.2012 காலை 7 மணிக்கு வடலூர் இராதா திருமண மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், மத்திய அமைச்சர் வி.நாரா யணசாமி, புதுவை மாநில கழகத் தலைவர் லோகு அய்யப்பன் உள்பட பலரும் வாழ்த்தினர். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏடு வளர்ச்சிக்கு ரூ.2000 கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 05042012 இதழ்

சைதையில் கழகக் கூட்டம்

சைதையில் கழகக் கூட்டம்

19.3.2012 திங்கள் மாலை 6 மணிக்கு மேற்கு ஜோன்ஸ் சாலை, மேற்கு சைதாப்பேட்டையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி விளக்க  கூட்டம் நடை பெற்றது. சா. இராசு தலைமை வகித்தார். அ. தியாகு வரவேற் புரையாற்ற, ப. மனோகர் முன்னிலை வகித்தார். உடுமலை தமிழ்ச் செல்வன், கு. அன்பு தனசேகர் சிறப்புரை யாற்றினர். நிகழ்வின் தொடக்கத்தில் சம்பூகன் இசைக்குழுவினர் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. தோழர் நாத்திகன், ஜெயந்தி அம்பிகா பாடல்கள் பாடினார். கழகத் தோழர் அருண், தபேலா வாசித்தார். பெரியார் முழக்கம் 05042012 இதழ்

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (5)

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (5)

அன்னிபெசன்டின் ஹோம்ரூல் இயக்கப் பணிகள் செப்டம்பரில் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் பார்ப்பன ரல்லாத இனத்திற்கு பெரும் பாதிப்பு நிகழக் கூடும் என்கிற நியாயமான அச்சம், பார்ப்பனரல்லாதார் பெரிய அளவில் ஒன்றுபட்டு ஒரு இயக்கமாக இணைந்து இயங்க வேண்டியதின் இன்றியமையாமை யினை உணர்த்திற்று. இந்த முயற்சியின் விளைவாக, நவம்பர் 20 இல் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டி.எத்திராஜ் (முதலியார்) வீட்டில் நடேசனார், தியாகராயர், நாயர் உட்பட ஏறத்தாழ 30 பார்ப்பனரல்லாத பிரமுகர்கள், நாடெங்கிலும் இருந்து வந்து கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். (“விக்டோரியா பப்ளிக் ஹாலில்” கூடியதாகவும் ஒரு கருத்து இருக்கிறது) அவர்களுள் பனகல் அரசர், நாகை பக்கிரிசாமி, சர்.எ.ராமசாமி (முதலியார்), சேலம் எல்லப்பன், தஞ்சை அப்பாசாமி (வாண்டையார்), கரந்தை உமா மகேஸ்வரன் (பிள்ளை), மதுரை எம்.டி. சுப்பிரமணியம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இக்கூட்டத்தில் “தென்னிந்திய மக்கள் சங்கம்” என்ற பெயரில் ஒரு ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனி துவக்குவது என்றும், அதன்...

தலித் பத்திரிகையாளர்கள் இல்லாத ஊடகங்கள்

தலித் பத்திரிகையாளர்கள் இல்லாத ஊடகங்கள்

இந்தியாவின் செய்தி ஏடுகளின் அறைகளிலும், தொலைக்காட்சி நிறுவனங்களின் ‘கேமரா’ அறைகளிலும் பட்டியல் இனப்பிரிவினரையோ பழங்குடியினரையோ காண முடியவில்லை. இவர்களின் பங்கேற்பு இல்லாமலே ஊடகத் துறைகள் செயல்படுகின்றன என்று, இத்துறையில் நீண்டகாலமாக கவனம் செலுத்திவரும் பேராசிரியர் ஜெஃபிரே, புதுடில்லி பத்திரிகை ஆசிரியர் சங்கத்தில் நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டார். தேசிய ஊடகங்களில் இந்தப் பிரிவினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், இது குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தியிருந்தால், இந்த அநீதியை நீக்கியிருக்க முடியும் என்றார். அமெரிக்க ஊடகங்களில் கறுப்பின மைனாரிட்டியினர் பங்கேற்பு இல்லாமல் இருந்ததைக் கண்டறிந்து அந்நாட்டு பத்திரிகையாளர் கழகம் கறுப்பின மைனாரிட்டியினரின் பங்கேற்பை ஒரு காலக்கெடு நிர்ணயித்து உறுதிப்படுத்தியது. அதுபோன்ற சமூகத் தணிக்கை இங்கே கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பட்டியல் இன பழங்குடியினரின் பிரச்சனைகளுக்காக தரமான பத்திரிகை கொண்டு வருவதற்கு தனியாக அறக்கட்டளை ஒன்றை உருவாக்கலாம் என்ற யோசனையையும் அவர் முன் வைத்தார். மார்ச் 31 ஆம் தேதி பத்திரிகையாளர்...

தாம்பரம் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் உரை சேது சமுத்திரத் திட்டம்: ஜெயலலிதாவின் இரட்டை வேடம்

தாம்பரம் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் உரை சேது சமுத்திரத் திட்டம்: ஜெயலலிதாவின் இரட்டை வேடம்

ஆடம்ஸ் பாலத்தை ராமன் பாலம் என்று இந்துத்துவ பார்ப்பன சக்திகள் கூறி உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மதவெறி கருத்துகளையே முன் வைத்துள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்திவிட்டு, ‘ராமன் பாலத்தை’ இந்தியாவின் தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மத்திய அரசிடம் உச்சநீதி மன்றம் கருத்து கேட்டுள்ளது. இந்த நிலையில் ‘இராமன் பாலத்தை’ தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதி, தனது பார்ப்பன இந்துத்துவா ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இதே ஜெயலலிதா கடந்த காலங்களில் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து அமுல்படுத்தக் கோரி தேர்தல் அறிக்கைகளில் கூறியதையும் ‘ராமன் பாலம்’ என்ற கற்பனைக்கு எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் இல்லை என்பதையும் விளக்கி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து: இந்தப்...

கல்பாக்கம் அணுமின் நிலைய கதை என்ன?

கல்பாக்கம் அணுமின் நிலைய கதை என்ன?

கல்பாக்கம் அணுமின் நிலையம் – அதன் இலக்கு உற்பத்தி திறனில் 30 சதவீதத்தைத் தாண்டியதே இல்லை 1969 இல் கட்டுமானத்தைத் துவங்கிய மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் என்ற கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அணு உலைகளின் முதல் யூனிட் தன் மின் உற்பத்தியை ஜூலை 1983 இல் துவங்கியது. இது 235 மெகாவாட் திறனுள்ள அணு உலையாகும். இரண்டாவது யூனிட் 23.1.1986 இல் தன் உற்பத்தியைச் துவங்கியது. 1983-84-லிருந்து 2007-08 ஆம் ஆண்டு வரையிலான 25 ஆண்டுகளில் இந்த அணுமின் நிலையமானது – 50 சதவீதம் மேலாக இரண்டு ஆண்டுகளிலும் (1987-88 = 53.42ரூ, 2006-07 = 58.26ரூ) 40 ரூ – 50ரூ உற்பத்தியை நான்கு ஆண்டுகளிலும் (1984-85 = 45.04ரூ, 1985-86 = 48.46ரூ, 1986-86 = 41.71ரூ, 2005-06 = 40.58ரூ) 30ரூ – 40ரூ – உற்பத்தியை நான்கு ஆண்டுகளிலும் (1988-89 = 30.46ரூ, 2003-04...