இராசிபுரத்தில் தெருமுனைக் கூட்டம்; கருத்தரங்கம்

8.4.2018 காலை 10 மணிக்கு இராசிபுரம் பழைய பேருந்து நிலையம், லயன்ஸ் கிளப் ஹாலில் ‘ஆரியம்-திராவிடம்-தமிழ் தேசியம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சுமதி மதிவதனி தலைமை வகித்தார். பிடல் சேகுவேரா முன்னிலையில் திருப்பூர் முத்துலட்சுமி வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் வி. பாலு, கலைமதி (திரைப்பட துணை இயக்குனர்), வீரா. கார்த்திக் (தமிழ்நாடு அறிவியல் மன்றம், மாவட்டச் செயலாளர், ஈரோடு வடக்கு), கோபி. வேலுச்சாமி (தலைமைக் கழகப் பேச்சாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். இறுதியாக மணிமேகலை நன்றி கூறினார்.

மாலை 6:30 மணியளவில் இராசிபுரம் பழைய கதர்க் கடை அருகே கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் இரா.பிடல் சேகுவேரா, வி. பாலு  (தி.மு.க) ஆகியோர் உரைக்குப் பின் கோபி.வேலுச்சாமி,  கலைமதி (துணைஇயக்குனர், திரைப்படத்துறை) சிறப்புரையாற்றினர். திருப்பூர் சாரதி நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 12042018 இதழ்

You may also like...