Category: திவிக

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

மாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது அனைத்து இயக்கங்கள் கண்டனம்

மாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது அனைத்து இயக்கங்கள் கண்டனம்

மாட்டிறைச்சியை ஆதரித்த முகநூல் பதிவுக்காக கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் நா.வே. நிர்மல்குமார், காவல்துறையால் பிணையில் வெளிவர முடியாத சட்டப் பிரிவு களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் துறையின் சிறப்பு பிரிவுகள் தொடர்ந்து மக்களுக்காய் களத்தில் நிற்கும் தோழர்களின் முகநூல் பதிவுகளைத் தொடர்ந்து கண் காணித்து வருகிறது. அந்த வகையில் கோவையில் ஜாதி, மத வெறியர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டமக்களோடு களத்தில் நின்று போராடும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் நிர்மல் பதிவை பதிவிட்ட அன்றே காவல்துறை கண்காணித் திருக்கும். அதன் பிறகு ஜாதி ஆணவப் படு கொலைகளைத் தடுக்கத் தவறும் தமிழக அரசு, காவல் துறை ஆகியவற்றை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. 17.07.2019 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்புக் கடிதம் கொடுத்த காவல்துறை அக்கடிதத்தில் நிர்மலின் முகநூல் பதிவையே காரணம் காட்டி யுள்ளது. மேலும்...

நங்கவள்ளி கிருட்டிணன் இல்லத் திருமணவிழா

நங்கவள்ளி கிருட்டிணன் இல்லத் திருமணவிழா

கழக செயல்பாட்டாளரும், சேலம் மாவட்ட அமைப்பாளருமான பொ.கிருட்டிணன்-கி.லலிதா இணையரின் மகள் கி.தமிழ்ச்செல்வி-ஏ.பிரபு ஆகியோரது இணையேற்பு விழா 13.07.2019 சனி பகல் 11 மணியளவில் வனவாசி ரங்கண்ணா திருமண மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், பழ. ஜீவானந்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மேச்சேரி தமிழரசன், நங்கவள்ளி அன்பு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மணவிழாவிற்கு கழகத் தோழர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். பெரியார் முழக்கம் 01082019 இதழ்

சமூகநீதியாளர்கள் பங்கேற்று உரை 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சமூகநீதியாளர்கள் பங்கேற்று உரை 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்

நடுவண் அரசே! இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சீரழிக்கும் உயர்ஜாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை இரத்து செய்! தமிழக அரசே; 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்காதே! என்ற கோரிக்கைகளை முன் வைத்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஜூலை 29, 2019 மாலை 4.30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவர் எழிலன் (இளைஞர் இயக்கம்), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), செந்தில் (இளந்தமிழகம்), முனைவர் சுந்தரவள்ளி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்), மருத்துவர் இரவீந்திரநாத் (சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்) ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். சமூக நீதி தத்துவத்தின் நோக்கம் – இடஒதுக்கீடு சந்தித்த தடைகள் – 10 சதவீத இடஒதுக்கீட்டைத் திணித்து இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கும் மனுதர்ம சூழ்ச்சி – பா.ஜ.க ஆட்சியின் தேசிய கல்விக்  கொள்கையின் ‘வர்ணாஸ்ரம-குலக்கல்வி’ கருத்துகள்...

ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

தொடரும் ஜாதி வெறித் தாக்குதல்கள், ஜாதிய ஆணவப் படுகொலைகளை அலட்சியப்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்து  கோவையில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 23/07/2019 செவ்வாய் மாலை நான்கு மணியளவில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காவல் துறையின் தடையை மீறி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தலைமை நிர்மல்குமார் (கோவை மாநகர செயலாளர்), முன்னிலை ப கிருட்டிணன் (கோவை மாநகர அமைப்பாளர்), வரவேற்புரை மா.நேருதாசு (கோவை மாநகர தலைவர்), கண்டன ஆர்ப்பாட்டத்தில் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன், தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில்ராசு உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ...

சித்தோடு கழகம் எடுத்த காமராஜர் பிறந்தநாள் விழா

சித்தோடு கழகம் எடுத்த காமராஜர் பிறந்தநாள் விழா

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக கல்வி வள்ளல் காமராஜரின் 117ஆவது பிறந்தநாள் விழா கூட்டம் சித்தோடு நீலிக்கரட்டில் 17.07.2019 மாலை 6:30 மணியளவில் மாவட்டச் செயலாளர் எழிலன் தலைமையிலும் புரட்சிகர இளைஞர் முன்னணி ரங்கசாமி முன்னிலையிலும் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தைப் பற்றி விளக்கி உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து சௌந்தர் உரையாற்றினார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி, காமராஜரின் கல்வி சாதனைகள் குறித்தும், பெரியாரும் காமராஜரும் இத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றியும் சிறப்புரையாற்றி னார். இறுதியாக அப்பகுதியைச் சார்ந்த வேல்மாறன் நன்றியுரை வழங்கினார். வந்திருந்த கழகத் தோழர்களுக்கு வேல்மாறன் மாட்டிறைச்சி உணவு வழங்கினார். பெரியார் முழக்கம் 25072019 இதழ்

பெட்ரிசியன் கல்லூரி காமராசர் விழாவில் விடுதலை இராசேந்திரன் பேச்சு

பெட்ரிசியன் கல்லூரி காமராசர் விழாவில் விடுதலை இராசேந்திரன் பேச்சு

மாணவச் செல்வங்களே! ஜாதி எதிர்ப்பாளர்களாக மாறுங்கள்! சென்னை அடையாறில் உள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 15, 2019 அன்று காமராசர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கம் பகல் 11 மணியளவில் நடைபெற்றது. முதல் அமர்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘கல்விப் புரட்சி’ எனும் தலைப்பில் உரையாற்றினார். “கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்கே நமது நாட்டில் ஒரு புரட்சி நடத்த வேண்டியிருந்தது என்றால், அதற்கு என்ன காரணம்? ஜாதிய சமூகமாக நாம் இருந்ததுதான். மனுதர்ம அடிப்படையில் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் ‘சூத்திரர்கள்’ என்று இழிவுபடுத்தப்பட்டு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. பிறப்பின் அடிப்படையில் மறுக்கப்பட்ட கல்வி உரிமையை நேர் செய்வதற்கு வந்ததுதான் ஜாதியடிப்படையிலான இட ஒதுக்கீடு. ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்குக் காரணம் ஜாதியடிப்படையில் திணிக்கப்பட்ட பாகுபாடுகளை ஒழித்து, ஜாதி இல்லாத சமத்துவ நிலையை உருவாக்குவதற்கே தவிர, ஜாதியைக் காப்பாற்றுவதற்கு அல்ல. எனவே கல்விப்...

இதுதான் பெரியார் மண்

இதுதான் பெரியார் மண்

சென்னை தியாகராயர் நகரில் கழகக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மேடையில் மருத்துவர் எழிலன் பேசிக் கொண்டிருந்தார். “கூட்டம் நடக்கும் பகுதியில் அலகு குத்திக் கொண்டு சாமி ஆடிக் கொண்டு ‘ஓம் மகா சக்தி’ என்று முழங்கிக் கொண்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மேளதாளத்தோடு ஊர்வலமாகக் கோயிலை நோக்கிப் போகிறார்கள். அவ்வளவு பேரும் நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக் குடும்பத்தினர். மேடையில் பேசிக் கொண்டிருந்த மருத்துவர் எழிலன், பக்தி ஊர்வலம் சென்று முடியும் வரை தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். ஊர்வலம் சென்று முடிந்த பிறகு இந்த மக்களின் உரிமைகளுக்காகத் தான் பெரியார் தொண்டர்களாகிய நாம் போராடி வருகிறோம்” என்று கூறி தனது பேச்சைத் தொடர்ந்தார். அடுத்து பேச வந்த ஆளூர் ஷா நவாஸ், “இங்கே அமைதியாக பக்தி ஊர்வலத்திற்கு வழிவிட்டு பேச்சைக்கூட நிறுத்திக் கொண்டு பக்தர்கள் கடந்து செல்ல அனுமதித்தோம். இதுதான் பெரியார் மண்! நினைத்துப் பாருங்கள். இதுவே விநாயகன் ஊர்வலமாக இருந்திருந்தால்...

காமராசர், வி.பி.சிங் சாதனைகளை விளக்கிய எழுச்சி பொதுக் கூட்டம்

காமராசர், வி.பி.சிங் சாதனைகளை விளக்கிய எழுச்சி பொதுக் கூட்டம்

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் சமூக நீதித் தூண்கள் காமராசர்-வி.பி. சிங் சாதனைகளை நினைவுகூரும் பொதுக் கூட்டம் ஜூலை 21, 2019 அன்று தியாகராயர் நகர் முத்து ரங்கன் சாலையில் மாலை 7 மணியளவில் பறை இசையுடன் தொடங்கியது. விரட்டு கலைக் குழுவினர் பெரியார், மணியம்மையார், அம்பேத்கர், காமராசர், வி.பி. சிங் குறித்த எழுச்சிப் பாடல்களையும் ‘நீட்’ பாதிப்புகளை விளக்கும் நாடகங்களையும் நடத்தினர். நடுவண் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வித் திட்டம் குறித்த விமர்சனப் பாடல் அனைவரையும் கவர்ந்தது. சைதைப் பகுதி கழகத் தோழர் ப. மனோகரன் வரவேற்புரை யாற்றிட தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி, காமராசர்-வி.பி.சிங் சாதனைகளை நினைவு கூர்ந்து சமூக நீதி உரிமைகள் தமிழகத்தில் படிப்படியாக பறிக்கப்பட்டு பார்ப்பனியம் வேகமாக தலைதூக்கி வருவதை சுட்டிக் காட்டினார். இளைஞர் இயக்கத்தின் நிறுவனரும் பெரியாரிஸ்டுமான மருத்துவர் நா. எழிலன், காமராசரால் சத்துணவுத் திட்டம்...

11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்

11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்

ட    பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, இட ஒதுக்கீட்டை மேலும் பத்து ஆண்டுக்கு நீட்டித்துச் சட்டமியற்றினார். ட    புத்த மதத்தைத் தழுவிய  தாழ்த்தப்பட் டோருக்கும் இடஒதுக்கீடு உரிமைகளை அளித்தார். ட    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கான ஆணைக் குழுவுக்கு (கமிசன்) அமைச்சரக அதிகார உரிமையை வழங்கினார். ட    வானொலி, தொலைக்காட்சிகளில் ஆளுங்கட்சி யின் ஆதிக்கத்தை மாற்றத் தன்னாட்சி உரிமம் வழங்கும் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார். ட    அமைச்சர், முதலமைச்சர் உள்பட எவர்மீது ஊழல் புகார் வந்தாலும், அவற்றை விசாரிக்கும் (ஆராயும்) ‘லோக்பால்’ எனும் உயர்மட்ட ஆய்வுக் குழு அமைக்கச் சட்டமுன் வரைவுக் கொண்டு வரப்பட்டது, அவரது ஆட்சியில்தான். ட    அஞ்சலுறைகளைப் பிரித்துப் பார்ப்பது, தொலைபேசியின் மூலம் ஒட்டுக் கேட்பது போன்ற, மனித உரிமை மீறல்களுக்கு வழி வகுக்கும் அரசியல் சட்டத்தின் அய்ம்பத்தாறாவது பிரிவை நீக்கினார். ட    ஒரு மாநிலத்துக்கு மட்டும் தனியாக, அவசர நிலையை அறிவித்து, அடிப்படை உரிமையைப் பறிக்கும்...

காமராசர் சாதனைகள் – பறிபோகும் கல்வி உரிமைகளை கிராமம் கிராமமாக விளக்கினர் திருப்பூரில் கழகம் மூன்று நாள் பரப்புரைப் பயண எழுச்சி

காமராசர் சாதனைகள் – பறிபோகும் கல்வி உரிமைகளை கிராமம் கிராமமாக விளக்கினர் திருப்பூரில் கழகம் மூன்று நாள் பரப்புரைப் பயண எழுச்சி

திருப்பூர்  மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காமராசர் பிறந்த நாள் விழாவை கல்வி உரிமை மீட்புப் பரப்புரையாக 3 நாள்கள் பொது மக்கள் பேராதரவுடன் நடத்தினர். கல்விவள்ளல் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில், கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் மற்றும் தெருமுனை கூட்டங்கள் ஜூலை 14, 15, 16 தேதிகளில் திருப்பூர், பல்லடம், மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் மூன்று நாள்கள் நடைபெற்றது. பரப்புரை பயணம் – கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்று! தமிழ்நாட்டில் நீட் தேர்வை விலக்கு! புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை திணிக்காதே !  போன்ற கோரிக்கைகளை முன் வைத்து பயணம் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. முதல் நாள் 14.07.2019 அன்று திருப்பூர் அம்மாபாளையத்தில் அமைந்துள்ள காமராசர் சிலைக்கு, கழக பொருளாளர் துரைசாமி மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து அம்மாபாளையத்தில் முகில் இராசு தலைமையில் தெருமுனைக்...

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

ஈரோடு மாவட்டம் (தெற்கு) ஈஸ்வர மூர்த்தி, திருப்பூர் ரூ. 25,000/- ஆசிரியர் சிவக்குமார், ஈரோடு   ரூ. 20,000/- வேணுமெஸ், மேட்டூர்    ரூ. 20,000/- தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்     ரூ. 15,000/- பவானிடெக்ஸ் பெரியார் தொழிற்சங்க உறுப்பினர்கள்     ரூ. 15,000/- காசிபாளையம் வேலுச்சாமி வழியாக  ரூ. 15,000/- டாக்டர் சக்திவேல் (சக்தி மருத்துவமனை)    ரூ. 10,000/- டாக்டர் சுதாகரன் (சுதா மருத்துவமனை)     ரூ. 10,000/- மா. சீனிவாசன் (தமிழ்நாடு பேக்கர்ஸ்) ரூ. 10,000/- பெரியசாமி, குன்னத்தூர்  ரூ. 10,000/- கொடிவேரி ஜெயக்குமார்  ரூ. 10,000/- பெரியார் முழக்கம் 18072019 இதழ்

அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – நடுவண் ஆட்சிக்கு எச்சரிக்கை

அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – நடுவண் ஆட்சிக்கு எச்சரிக்கை

அணுக்கழிவு சேமிப்பு வைப்பகத்தை தமிழ்நாட்டுக்குள் திணிக்காதே! 14.07.2019 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை  மாநாடு காலை 11 மணி அளவில் தொடங்கியது. ஜப்பானில் புகுசிமாவில் ஏற்பட்ட விபத்தைப் பற்றியும் அணுக்கழிவு வைக்கப்பட்டிருக்கும் நான்காவது வளாகம் பற்றியும் விளக்கும் ஆவணப்  படமும் பிரான்சில் அணுக்கழிவு பாதுகாப்பு எவ்வளவு அபாயகர மானதாக இருக்கிறது என்பதை விளக்கும் ஆவணப்படமும் திரை யிடப்பட்டது. பின்னர் அறிவியல் அமர்வு தொடங்கியது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவரும் பியூசிஎல்-இன் தமிழ் மாநிலத் தலைவருமான தோழர் கண. குறிஞ்சி இவ்வமர்வுக்குத் தலைமை ஏற்றார். கூட்டமைப்பின் நீண்ட காலச் செயல்பாடு குறித்து விளக்கி அமர்வை ஒருங்கிணைத்தார். இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் தி.வேல்முருகன் தொடக்கவுரை ஆற்றினார். அணுக் கழிவுப் புதைப்பதைத் தடுப்பதற்கு இதை வெகுமக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் மோடி அரசு...

கோவையில் கழகம் நடத்திய  கல்விக் கொள்கைக் கருத்தரங்கம்

கோவையில் கழகம் நடத்திய கல்விக் கொள்கைக் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இந்தியை திணிக்காதே! கல்வியை காவி மயமாக்காதே! என்ற முழக்கத்துடன், புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019 பற்றிய கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் 12.07.2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கத்தில் மாலை 4:30 மணிக்கு நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு நேருதாசு தலைமை வகித்தார். வெங்கட் வரவேற்புரையாற்றினார். பா.இராமச்சந்திரன், யாழ் வெள்ளிங்கிரி, இரா. பன்னீர்செல்வம், நா.வே. நிர்மல் குமார், ஜெயந்த், கிருட்டிணன், சிலம்பரசன், வைத்தீஸ்வரி, அஜீத்குமார், சபரிகிரி, தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றிய விரிவான கருத்துரையை, பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் மாநில ஒருங் கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வழங்கினார். தமிழ்நாடு மாணவர் கழகத்தின் விஷ்ணு நன்றியுரையாற்றினார். பெரியார் முழக்கம் 18072019 இதழ்

டாக்டர் அறிவுக்கரசி நன்கொடை

டாக்டர் அறிவுக்கரசி நன்கொடை

மேட்டூர் மார்டின்-விஜயலட்சுமி மகள் அறிவுக்கரசி, ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு முடித்து விட்டு டெல்லிக்கு தேர்வெழுத செல்லும்போது ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு ரூ.2,000/- நன்கொடை அளித்தார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 18072019 இதழ்

மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் பேச்சு அணுக்கழிவுகளைப் புதைக்கும் பாதுகாப்பான இடம் உலகில் எங்குமே இல்லை

மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் பேச்சு அணுக்கழிவுகளைப் புதைக்கும் பாதுகாப்பான இடம் உலகில் எங்குமே இல்லை

கூடங்குளத்தில் ‘அணுக் கழிவு மய்யம்’ அமைக்கும் நடுவண் அரசின் ஆபத்தான திட்டத்தை எதிர்த்து அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் 14.7.2019 அன்று சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் ஒரு நாள் எச்சரிக்கை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: காலையிலிருந்து மாநாட்டில் தொடர்ந்து பங்கேற்று கருத்துகளைக் கேட்டு வருகிறீர்கள். அணுஉலை ஆபத்துகளை ஆழமாக உணர்ந்து, அதைத் தடுத்து நிறுத்தி, நமது மண்ணை மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை யும் உறுதியும் கொண்டவர்கள் என்பதாலேயே காலை முதல் அர்ப்பணிப்பு உறுதியுடன் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். கூடங்குளத்தில் 6 அணுஉலைகளைக் கொண்டு வந்து அணுஉலைப் பூங்காவாகவே மாற்றுகின்றன நடுவண் ஆட்சிகள். இப்போது பா.ஜ.க. ஆட்சி உலகிலேயே மிக மிக ஆபத்தான ‘அணுக்கழிவு கருவூலம்’ என்ற சேமிப்பு கிடங்கினையும் தமிழ்நாட்டிலேயே அமைக்கப் போகிறதாம். அணுக்கழிவு கருவூலம் அல்லது வைப்பகம் ஆபத்துகளை விளக்கி சூழலியல் ஆய்வாளர் நக்கீரன் எழுதிய...

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணம்

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணம்

புதிய கல்வி என்ற பெயரில்  குலக்கல்வியை திணிக்காதே மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்காதே இளைய தலைமுறையின் உரிமை முழக்க பரப்புரை! * நாம் மண்ணின் மைந்தர்கள்தலைமுறையாக இந்த மண்ணில்பிறந்தோம், வாழ்கிறோம், ஆனாலும், பிறவடமாநிலங்களை விட நாம்- வேறுபட்டுள்ளோம். * எவ்வளவு ஒடுக்கப்பட்ட ஜாதியானாலும் சரி; ஏழ்மையும், வறுமையும் நம்மைவாட்டினாலும் சரி; “எப்பாடுபட்டாவது- நமதுமகளை, மகனை படிக்க வைக்க வேண்டும்; உயர் கல்வியைத் தர வேண்டும்; என்ற கொள்கையே நமது பண்பாடு! * பெரியார் இட ஒதுக்கீட்டுக்காக 1919 முதலேபோராடினார். உரிமையைப் பெற்று தந்தார்.  காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்- அந்த உரிமைகளை படிப்படியாகவளர்த்தார்கள். அம்பேத்கர் சட்டத்தின்வழியாக நமக்கான இட ஒதுக்கீட்டுஉரிமைகளை உறுதிப்படுத்தினார். வி.பி.சிங்மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடுதந்தார். போராடிப்பெற்ற சமூக நீதிஉரிமைகளை தற்போது பறிகொடுத்து வருகிறோம் . இப்போது பாஜக ஆட்சியில் என்ன நடக்கிறது? ” உங்கள் கல்விக் கொள்கையை நீங்கள்தீர்மானிக்க முடியாது. நாங்களே  தீர்மானிப்போம்”என்கிறது பாஜக ஆட்சி. * நாம் வேண்டாம் என்ற ‘நீட்’டைதிணிக்கிறார்கள்; இந்தியை , சமஸ்கிருதத்தை படி என்கிறார்கள்;  கல்விவேலை இட ஒதுக்கீடுகளைப் பார்ப்பனஉயர்ஜாதியினருக்கும் தருவோம். அவர்கள்பட்டியலின ஜாதியினரை விட குறைந்தமதிப்பெண்கள் எடுத்தாலே போதும்என்கிறார்கள். மீண்டும் குலக்கல்வியை புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நம் தலையில்சுமத்துகிறார்கள். புதிய கல்வி கொள்கை என்ன கூறுகிறது? 3,5,8 ம் வகுப்புகளுக்கும்  அகில இந்திய தேர்வுஎன்கிறது. 8 ம் வகுப்பு முடித்த 14 வயதுகுழந்தைகள் விருப்பமான தொழில்கல்வியை கற்கலாம் என்ற பெயரில்குலக்கல்விக்கு கதவு திறக்கிறது;   பாடத்திட்டத்தையும் அகில இந்தியஅடிப்படையில் தயார் செய்வார்களாம்; நமக்கான கல்விக் கொள்கையை மத்தியஅரசே தீர்மானிக்குமாம். 3 வயது முதலே கல்வியாம், 30 குழந்தைகளுக்கு குறைவான கிராமப்புற பள்ளிகளை மூடுவார்களாம். ஒருங்கிணைந்த கல்வி வளாகத்திற்கு போக வேண்டுமாம். 3 வயது குழந்தை எப்படிச் செல்லும்? அதுமட்டுமா தோழர்களே! நமது வேலை வாய்ப்புகளைவடநாட்டார்களுக்கு வாரி வழங்குகிறார்கள்; நெஞ்சு பதறும் இந்த புள்ளி விவரங்களைப்படியுங்கள். தென்னக இரயில்வேயில் திருச்சிகோட்டத்தில் சமீபத்தில் எலக்டிரிசியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்டதொழில் பழகுநர் இடங்களுக்கு 1765 பேர்தேர்வு செய்யப்பட்டனர். அதில் 1600 பேர் வடஇந்தியர்கள். சென்னை மணலியில் உள்ள பெட்ரோலியநிறுவனத்தில் வேதியியல், இயந்திரவியல், மின்னியல் போன்ற 8 வகையானபொறியாளர்(ENGINEERING) பணிகளுக்கு 65 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.அவர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. தமிழக வருமான வரித்துறையில் 2012 ல்சேர்க்கப்பட்ட 384 பேரில் 28 பேர் தான்தமிழர்கள். 2014 ல் சேர்க்கப்பட்ட 78 பேரில் 3 பேர்தான் தமிழர்கள். 2018 ல்பணியிலமர்த்தப்பட்ட 100 ஆய்வாளர்களில்ஒருவர் தான் தமிழர். * வருமான வரித்துறையின்,  டேக்ஸ்அசிஸ்டென்ட் பணியில் அமர்த்தப்பட்ட 265 பேர்களில் 5 பேர்தான் தமிழர்கள். கடந்த சிலஆண்டுகளில் 10 சதவீதத்தை கூடஎட்டவில்லை. சமீப காலமாக நடைபெற்ற இரயில்வேதேர்வுகளில் கிட்டத்தட்ட 90 சதவீத அளவில்வடமாநிலத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக பீகாரைச் சேர்ந்தவர்கள் 2010-2019 வரை 18% தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் வருமான வரித்துறை, கலால்துறை, பாஸ்போர்ட் அலுவலகம் எனமத்திய அரசின் 55 வகையானஅலுவலகங்கள் உள்ளன. இவ்வாறான, பல்வேறு துறைகளில் 2011 ல் இருந்துபணியிலமர்த்தப்பட்டவர்களில் 99% வடஇந்தியர்கள்தான். 0.5% தான் தமிழர்கள். * மோடி தலைமையேற்ற கடந்த 62 மாதங்களில் தான், பாரத் மிகுமின்நிறுவனம், பெட்ரோலிய நிறுவனம், இரயில்வே, பெல் உள்ளிட்ட தமிழகத்தின்மத்திய அரசு நிறுவனங்களில் 90% வடஇந்தியர்களை பணியில் அமர்த்தியுள்ளதுமோடி அரசு. மண்ணின் மைந்தர்களாகிய நமது- கல்வி,வேலை,மொழி உரிமைகளை மறுத்துதமிழ்நாட்டை வடநாடாக்கும் முயற்சிகள்வேக வேகமாக நடக்கின்றனவிழித்துக்கொள்வோம் தோழர்களே!  இந்த ஆபத்துகளை தடுத்து நிறுத்துவோம்மக்கள் கருத்தை உருவாக்குவோம் இதற்காகவே இந்த பரப்புரை பயணம்.  உரத்து முழங்குவோம்! நடுவண் அரசே எங்கள் தலைமுறையைவாழவிடு! நாங்கள் மண்ணின் மைந்தர்கள்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 04082019

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 04082019

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கமிட்டி, கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை, இராயப்பேட்டை இலாயிட்ஸ் ரோடு விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.. மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி பொருப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும்.. தோழமையுடன் இரா.உமாபதி தொடர்புக்கு: 7299230363

திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் 04082019

திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் 04082019

திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பள்ளிபாளையம் பெரியார் நூல் கடையில், மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற உள்ளது. மண்ணின் மய்ந்தர்களின் உரிமை மீட்பு பயணத்தின் நிறைவு மாநாடு ஆகஸ்ட் 30 ம் தேதி பள்ளிபாளையத்தில் நடைபெற உள்ளது. நிறைவு விழா மாநாட்டை பற்றியும், மாவட்ட கழகத்தின் அடுத்த கட்ட நகர்வு பற்றியும் கலந்து ஆலோசிக்கப்படுவதால். மாவட்ட கழக பொருப்பாளர்கள், பகுதி பொருப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தோழமையுடன், சரவணன் தொடர்புக்கு: 9842510606

நியூ செஞ்சுரி 25 புதிய நூல்கள் வெளியீட்டு விழா ஈரோடு 07082019

நியூ செஞ்சுரி 25 புதிய நூல்கள் வெளியீட்டு விழா ஈரோடு 07082019

ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒட்டி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 25 புதிய நூல்கள் வெளியீட்டு விழா கழகத் தலைவர் புத்தக வெளியிட்டு பாராட்டுரை நாள் 07.08.2019 நேரம் காலை 11.30 மணி இடம் விபிவி மகால், ஈரோடு  

நிமிர்வோம் 11 வது வாசகர் வட்டம்

நிமிர்வோம் 11 வது வாசகர் வட்டம்

வருகிற ஆகஸ்டு 3 ம் தேதி நடைபெற இருந்த #நிமிர்வோம் 11 வது வாசகர் வட்டம் கூட்டம் தவிர்க்க இயலாத காரணத்தினால் தள்ளிவைக்கப்படுகிறது. மீண்டும் நடைபெறும் தேதி விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இராஜாதாலே அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு சென்னை 30072019

இராஜாதாலே அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு சென்னை 30072019

இந்திய குடியரசு கட்சி நடத்தும், அகில இந்திய விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் (DPI) நிறுவனர்- தலைவர் மற்றும் இந்திய குடியரசுக் கட்சியின் மூத்த தலைவருமான இராஜாதாலே அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, எழும்பூர் அருங்காட்சியகம் எதிரில் இக்‌ஷா மய்யத்தில், 30.07.2019 மாலை 7 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில், திராவிடர்விடுதலைக்கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு இராஜாதாலே பற்றின வரலாறுகளை பகிர்ந்து கொண்டார்…

மண்ணின் மைந்தர் உரிமை முழக்கப் பரப்புரைப் பயணம் நிறைவு விழா பள்ளிபாளையம்

மண்ணின் மைந்தர் உரிமை முழக்கப் பரப்புரைப் பயணம் நிறைவு விழா பள்ளிபாளையம்

பயண நிறைவு நாள் மாற்றம்: #அறிவிப்பு மண்ணின் மைந்தர் உரிமை முழக்கப் பரப்புரைப் பயணம் நிறைவு விழா – இடம் மற்றும் நாள் மாற்றம் அறிவிப்பு கடந்த ஜூலை-18″ 2019 பெரியார் முழக்கத்தில் வெளிவந்த #பரப்புரை_பயண_நிறைவு_விழா – இடம் *மேட்டூர்* , நாள் – 31. 08. 2019 என அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்படி பயண நிறைவு விழா *#பள்ளிபாளையத்தில்* ( #நாமக்கல்மாவட்டம்) *30.08.2019* *வெள்ளி* மாலை நடைபெறும் என அறிவிக்கிறோம். பயணக் குழு பொறுப்பாளர்கள் 30.08.2019 அன்று பள்ளிபாளையத்தில் பரப்புரை பயணம் நிறைவடையும் வகையில் பயணத் திட்டத்தை மாற்றியமைக்கும்படியும், தேவையெனில் மாநில பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு பயண திட்டத்தை வகுத்துக் கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம். #கொளத்தூர்மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் நிர்மல்குமார் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கோவை 31072019

தோழர் நிர்மல்குமார் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கோவை 31072019

ஆர்ப்பாட்டம் ! கோவை – 31.07.2019. தோழர் நிர்மல்குமார் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ! ”கருத்துரிமையை பறிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு” சார்பில் ……….. கழகத் தோழர் கோவை மாவட்டச்செயலாளர் தோழர் நிர்மல் குமார் அவர்கள் ஒரு முகநூல் பதிவிற்காக 27.07.2019 அன்று பொய் வழக்கில் தமிழக அர்சின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதனைக் கண்டித்தும்,தோழரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோவையில் ”கருத்துரிமையை பறிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு” சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 31.07.2019 அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு த.பெ.தி.க.பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் அவர்கள் தலைமை வகித்தார்.கழகத்தின் மாவட்டத்தலைவர் தோழர் நேருதாஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி கலையரசன், திராவிட தமிழர் கட்சியின் வெண்மணி, சிபிஎம் மாநில குழு உறுப்பினர் பத்மநாபன், தமிழ்தேசிய இறையாண்மைக்கட்சி தென்மொழி, பு.இ.முவின்...

தோழர்களே, கோவைக்குத் திரளுவீர்!

தோழர்களே, கோவைக்குத் திரளுவீர்!

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் தலைவிரித்தாடுகின்றன. ஜாதிகளைக் கடந்து ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொள்ள அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஜாதிவெறிக் கூட்டம் கையில் எடுத்துக் கொண்டு வீச்சறிவாளையும் கத்தியையும் தூக்கிக் கொண்டு வருகிறது. ‘நாம் எல்லோரும் இந்துக்கள்’ என்று மதவாதம் பேசும் கூட்டம், இந்துக்களுக்குள்ளே நடக்கும் ‘ஜாதிக் கொலைகளை’ எதிர்க்காமல் மவுனம் சாதிக்கிறது. தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகளே நடக்கவில்லை என்கிறது, தமிழக அரசு! ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சட்டத்தையும் கொண்டுவர மறுக்கிறது, மத்திய சட்ட ஆணையம். ஜாதியப் படுகொலைகளைத் தடுக்கும் மசோதாவைத் தயாரித்து 2011ஆம் ஆண்டு நடுவண் ஆட்சிக்கு அனுப்பி பல ஆண்டுகளாகியும் மசோதா கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஜாதி ஆணவப் படுகொலைகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு மாநில அரசுகளுக்கு 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 22 மாநில அரசுகள் பதிலளித்து விட்டன. தமிழ்நாடு மட்டுமே பதிலளிக்கவில்லை. இளைஞர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய முன் வந்தால் முதியவர்கள்...

கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் விழா சென்னை

கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் விழா சென்னை

காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறு பெட்ரிசியன் கல்லூரியில், கல்வி வளர்ச்சி நாள் நிகழ்வில் காமராசரின் கல்வி புரட்சி என்ற தலைப்பில், திராவிடர்  விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்

பொன்.இராமச்சந்திரன் ரூ.5000 நன்கொடை

பொன்.இராமச்சந்திரன் ரூ.5000 நன்கொடை

கழக ஆதரவாளர் சென்னை பொன். இராமச்சந்திரன், கழகக் கட்டமைப்பு நிதியாக தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரனிடம் ரூ.5000 நிதி வழங்கினார். பெரியார் முழக்கம் 11072019 இதழ்

சமூகநீதி_தூண்கள் காமராசர் – வி.பி.சிங் சாதனைகளை நினைவுகூறும் பொதுக்கூட்டம் சென்னை 21072019

சமூகநீதி_தூண்கள் காமராசர் – வி.பி.சிங் சாதனைகளை நினைவுகூறும் பொதுக்கூட்டம் சென்னை 21072019

#சமூகநீதி_தூண்கள் காமராசர் – வி.பி.சிங் சாதனைகளை நினைவுகூறும் பொதுக்கூட்டம் ஜுலை 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தியாகராயர் நகரில் நடைபெறுகிறது. சிறப்புரையாற்றுவோர் : தோழர்.#கொளத்தூர்_மணி தலைவர், திராவிடர் விடுதலை கழகம். தோழர்.#விடுதலை_ராசேந்திரன். பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலை கழகம். தோழர்.#ஆளூர்_ஷாநவாஸ் துனைபொதுச்செயலாளர் விசிக. தோழர்.#மருத்துவர்_எழிலன். அனைத்து தோழர்களும் அவசியம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு : இரா.உமாபதி தென்சென்னை மாவட்ட செயலாளர் 72992 30363  

தலைமை ஆசிரியரின் ஜாதி வெறியை எதிர்த்து களமிறங்கினர் கோவை கழகத் தோழர்கள்

தலைமை ஆசிரியரின் ஜாதி வெறியை எதிர்த்து களமிறங்கினர் கோவை கழகத் தோழர்கள்

கோவை சரவணம்பட்டி அருகே கரட்டு மேடு கந்தசாமி நகர் நகரில் உள்ள அரசு துவக்கப் பள்ளி யில் தாழ்த்தப் பட்ட சமூகத்தை சார்ந்த குழந்தை களிடம் ஜாதி வெறியுடன் தலைமையாசிரியர் ஜெயந்தி நடந்து வந்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் அந்த பகுதி மக்கள் புகார் அளித்ததனர். இதை அறிந்த  திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வெங்கட் கிருஷ்ணன் நிர்மல் அந்த பகுதிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட குழந்தை திவ்யபாரதி மற்றும் அங்கு படிக்கும் சில குழந்தைகளிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொண்டு அந்தப்  பகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அங்கு எதுவும் எடுக்கப்படவில்லை என்பது தெரிந்ததால். 26.6.2019 அன்று அந்த தலைமையாசிரியர் மீது சட்டப்படி தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் மாநகர காவல் ஆணையர் இடமும் மாவட்ட...

ஜாதி வெறிப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் நேரில் ஆறுதல்

ஜாதி வெறிப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் நேரில் ஆறுதல்

ஜாதி வெறி மனிதத்தையே சாகடிக்கிறது. மேட்டுப்பாளையம் அருகே தலித் பெண்ணோடு குடும்பம் நடத்தியதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த வினோத்குமார் என்ற 24 வயது இளைஞர், சொந்தத் தம்பியையே வெட்டிப் படுகொலை செய்து விட்டான். தாக்குதலுக்கு உள்ளாகிய தலித் பெண்ணும் மரணமடைந்து விட்டார். 24 வயதுள்ள இளைஞனைக்கூட ஜாதி வெறி எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கே அவமானம். கடந்த 5 ஆண்டுகளில் 185 ஜாதி வெறிக் கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. ‘கவுரவக் கொலை’களே தமிழ்நாட்டில் நடப்பது இல்லை என்று ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது சட்டசபையில் ‘வாய் கூசாமல்’ பேசினார். 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஜாதி வெறிப் படுகொலைகள் குறித்த விவரங்களை மாநில அரசுகளிடம் கேட்டது. 22 மாநில அரசுகள் விவரங்களை அனுப்பின. தமிழ்நாடு அரசு எந்த அறிக்கையையும்  அனுப்பவில்லை. தேசிய சட்ட ஆணையம், ஜாதி வெறியோடு திருமணங்களைத் தடுக்க முனைவதை சட்டப்படி குற்றமாக்கும் மசோதா ஒன்றை 2011ஆம் ஆண்டு...

டாக்டர் ரமேசுக்கு நேரில் ஆறுதல்

டாக்டர் ரமேசுக்கு நேரில் ஆறுதல்

கோவை சமூக செயல்பாட்டாளர் டாக்டர் ரமேஷ், மனைவி ஷோபனா சாலை விபத்தில் மரணமடைந்தார். துணைவரை இழந்த நிலையிலும் தொடர் விபத்திற்கு காரணமான அப்பகுதி டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி டாக்டர் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அந்த மதுபானக் கடை தற்போது மூடப்பட்டுள்ளது. 26.06.2019 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, டாக்டர் ரமேஷை இல்லத்தில் சந்தித்து நடந்தவற்றை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். கழகத் தோழர்கள் நேருதாஸ், நிர்மல்குமார் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 04072019 இதழ்

மேட்டூரில் வட்டார மாநாடு: மாவட்டக் கழகம் முடிவு

மேட்டூரில் வட்டார மாநாடு: மாவட்டக் கழகம் முடிவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்ட கலந்துரையாடல், ஜூன் 30 அன்று மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகிக்க, காவை ஈசுவரன், தலைமைக் குழு உறுப்பினர், முன்னிலை வகித்தார். நிகழ்வில், மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாநாடு நடத்துவது எனவும், மாநாட்டை ஏற்பாடு செய்வது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டு, பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) மேட்டூரில் வட்டார மாநாடு நடத்துவது. 2) வட்டார மாநாட்டின் நோக்கங்களை விளக்கி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றியங்களில் தெருமுனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது. 3) மாநாட்டிற்கான பணிகளை புதிய மாணவர் கழக தோழர்கள் செய்வார்கள். – என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில், சூரியக்குமார் சேலம் மேற்கு மாவட்ட தலைவர், டேவிட் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர், ஆர்.எஸ். சக்திவேல் தலைமைக் குழு உறுப்பினர் மற்றும் நகர, ஒன்றிய,...

பரப்புரைப் பயணத்துக்கு ஆனைமலை ஒன்றிய கழகம் தயாராகிறது

பரப்புரைப் பயணத்துக்கு ஆனைமலை ஒன்றிய கழகம் தயாராகிறது

30.06.2019 காலை 10 மணியளவில் ஒன்றிய தி.வி.க சார்பாக, ஆனைமலையில் கலந்துரையாடல்  நடைபெற்றது. பரப்புரைப் பயணத்துக்கு தயார் ஆவது என முடிவு செய்யப்பட்டது. கலந்துரையாடலில், ஒன்றிய தலைவர் அப்பாத்துரை, ஒன்றிய செயலாளர் அரிதாசு, ஒன்றிய அமைப்பாளர் சபரிகிரி, தோழர்கள் சிவா, கணேசன், மணி, பாலன், காஜா, சந்தோசு மற்றும் கோவை மாவட்டச் செயலாளர் யாழ் வெள்ளிங்கிரி, மடத்துக்குளம் இரா. மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்கண்ட தோழர்கள் கட்டமைப்பு நிதி வழங்கினர். ஏ.ஆர்.வி. சாந்தலிங்கம் – ரூ. 10000/-         மருத்துவர் வசந்த ஆல்வா – ரூ. 3000/- பழ.முருகானந்தம் – ரூ. 2000 /-                      – ஆகியோர் கட்டமைப்பு நிதியை அளித்தனர். பெரியார் முழக்கம் 04072019 இதழ்

தெருமுனைக் கூட்டங்கள் : திருச்செங்கோடு கழகம் முடிவு

தெருமுனைக் கூட்டங்கள் : திருச்செங்கோடு கழகம் முடிவு

திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் 30.06.2019 அன்று காலை 10 மணிக்கு பெரியார் மன்றத்தில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு, நகர செயலாளர் பூபதி தலைமை வகிக்க, கழகத் தோழர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். 1) தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துவது; 2) ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவுக் கூடம், எட்டுவழிச் சாலை போன்ற மக்கள் விரோதத் திட்டங்களை விளக்கும் வகையில் துண்டறிக்கைப் பிரச்சாரம் செய்வது; 3) காமராஜர் பிறந்தநாள் விழாவை ஏதேனும் அரசுப் பள்ளியில் கொண்டாடுவது – ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கார்த்தி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 04072019 இதழ்

நன்கொடை

நன்கொடை

திருவிடை மருதூர் வட்டம், அனக்குடி (அஞ்சல்), அம்மன் பேட்டை கிராமம் இரா.ராஜ்குமார்- எழிலரசி இணையருக்கு 15.06.2019 அன்று ஆண் மகன் வெற்றிச்செல்வன் பிறந்துள்ள மகிழ்வுக்காக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதிக்கு ரூ. 1000/- வழங்கியுள்ளார்கள். பெரியார் முழக்கம் 27062019 இதழ்

குன்னத்தூரில் காவல்நிலைய வளாக கோயில் சிலை அகற்றம்

குன்னத்தூரில் காவல்நிலைய வளாக கோயில் சிலை அகற்றம்

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலைய வளாகத்தில் சட்ட விரோதமாக விநாயகர் கோயில் கட்டி வழிபட்டு வந்த நிலையில், திராவிடர் விடுகலைக் கழகக் குன்னத்தூர் நகரப் பொறுப் பாளர் சின்னச்சாமி தலைமையில் தோழர்கள் 20.6.2019 அன்று குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். விநாயகர் சிலை அங்கிருந்து உடனடியாக அகற்றப்பட்டது. மேலும், கோயில் கட்ட எழுப்பிய சுவரும் அகற்றப்பட்டு, காவல் நிலைய பயன்பாட்டிற்குப் பயன்படுத்தவும் புகார்  அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 27062019 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

மதுரை மாவட்டம் மருத்துவர் சௌந்திர பாண்டியன் –            ரூ.   20,000 காமாட்சி பாண்டி தி.வி.க – ரூ.   10,000 தளபதி –      ரூ.   5,000 அழகர் பிரபாகரன் – தி.வி.க. –      ரூ.   4,000 நாக பாலன் – ரூ.   2,000 செயராமன் –      ரூ.   1000 விசு – ஆடிட்டர் –      ரூ.   1000 ராஜா – சிம்மக்கல்       –      ரூ.   1000 விஜயன் – சமூக நீதி பண்பாட்டு மையம் –      ரூ.   1000 கருப்பையா –     ரூ.   1000 சான் பெனடிக் – திருப்பரங்குன்றம் –      ரூ.   500 விஜய் – சிம்மக்கல் –      ரூ.   500 டேவிட் –      ரூ.   500 குமரேசன்...

மாநகராட்சிப் பள்ளிக்கு துரோணாச்சாரி பெயரா? திருப்பூரில் கடும் எதிர்ப்பு

மாநகராட்சிப் பள்ளிக்கு துரோணாச்சாரி பெயரா? திருப்பூரில் கடும் எதிர்ப்பு

திருப்பூர் இராயபுரம் பகுதியிலுள்ள புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு துரோணாச்சாரி நினைவாக ‘துரோணா’ என்று பெயர் சூட்டப்பட் டுள்ளதற்கு ஊர் மக்களிடம் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஏகலைவன் என்ற பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர். துரோணாச்சாரி உருவம்போல் பொம்மை செய்து குருவாகக் கருதி வில்வித்தை கற்றார் என்பதற்காக அவரது கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்டு வாங்கினார் துரோணாச்சாரி என்று மகாபாரதம் கூறுகிறது. ‘சூத்திரன்’, அவர் ‘குலதர்மத்துக்கு’ எதிராக வில்வித்தை கற்கக் கூடாது என்பது இதன் தத்துவம். ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் மாநகராட்சிப் பள்ளிக்கு ‘துரோணாச்சாரி’ பெயர் சூட்டுவது பச்சை வர்ணாஸ்ரம வெறிப்போக்காகும். இந்தப் பெயரை நீக்கக் கோரி, இராயபுரம் பகுதி மக்கள் அனைத்துக் கட்சியினரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளனர். இந்தக் குழுவில் கழகப் பொருளாளர் சு. துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன் மற்றும் த.பெ.தி.க., ம.தி.மு.க., பு.இ.ம., தி.மு.க. அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் இடம்...

கவரபாளையத்தில் ஜாதி மறுப்பு இணையர்கள் அறிமுக விழா

கவரபாளையத்தில் ஜாதி மறுப்பு இணையர்கள் அறிமுக விழா

ஆண்டி மடம் கழகத் தோழர் இராவணகோபால் தாயார் சரோஜா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் 22.6.2019 அன்று கவரப்பாளையம் வெங்கடேசுவரா திருமண மண்டபத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. நினைவு நாளில் ஜாதி – தாலி எதிர்ப்புடன் ஏற்கெனவே மறுமணவிழா நடத்திக்  கொண்ட இரா. இராவணகோபால்-நா. கோமதி மற்றும் இராவண கோபாலின் அண்ணன் மகள் ப. ஓவியா- இரா. விஜயகுமார் இணையர்களின் மணவிழா அறிமுக நிகழ்வும் நடந்தது. மறுமணத்தை முன் மொழிந்து ஏற்பாடு செய்த கோமதியின் மகன் மாணவர் கழகத் தோழர் பிரபாகரன் (படத்தில் கோமதியின் அருகில் நிற்பவர்) ஆவார். தி.க. மண்டல செயலாளர் தி. காமராஜ் தலைமையில் நடந்த நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக நாத்திகனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ அறிவியல் நிகழ்ச்சி நடந்தது. செ.பூ. அறிவழகன் (தி.மு.க.), க.நா. ஆராவமுதன் (தி.மு.க.) முன்னிலை வகித்தனர். பத்மநாபன், வழக்குரைஞர் துரை. அருண்,...

‘நீட்’ உருவாக்கும் குளறுபடிகள் – மோசடிகள்

‘நீட்’ உருவாக்கும் குளறுபடிகள் – மோசடிகள்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, மத்திய அரசு நிர்வாகத்தில் செயல்படுகிறது. மொத்தமுள்ள 200 மருத்துவக் கல்லூரி இடங்களில் புதுச்சேரியிலேயே வாழ்வோருக்கு 55 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்களும் நீட் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். ஆனால் ‘நீட்’ தேர்வு எழுதாமலேயே ‘புதுச்சேரி’யில் குடியிருப்ப தாகப் பொய்யான சான்றிதழ்களைத் தந்து 29 பேர் மாணவர் சேர்க்கைக்கான பூர்வாங்கப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் இவர்கள் இங்கே யும் ‘நீட்’ தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிக்கு மனு போட்டவர்கள். புதுச்சேரி உள்ளூர் மக்களுக்கான கோட்டாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து இடம் பிடிக்க, இந்த மோசடி நடந்திருக்கிறது. நீட் தேர்வு எழுதாமலே குறுக்கு வழியில் மருத்துவக் கல்லூரியில் நுழையும் மோசடியை சில பெற்றோர், ஆசிரியர் அமைப்புகள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, ஜிப்மர் தலைமை மருத்துவர் ஆர்.பி. சாமிநாதன், தவறு நடந்திருந்தால் அதை சரி செய்வோம் என்று கூறியிருக்கிறார்....

இராசிபுரம் நகராட்சி பள்ளியில் சேகுவேரா பிறந்த நாள் விழா

இராசிபுரம் நகராட்சி பள்ளியில் சேகுவேரா பிறந்த நாள் விழா

சேகுவேரா 92 ஆவது பிறந்த நாள் விழா ஜூன் 14 வெள்ளிக்கிழமை அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இராசிபுரம் பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சேகுவேரா, பெரியார், காரல்மார்க்ஸ், காமராசர், பகத்சிங், அம்பேத்கர், லெனின், புத்தர், பாரதிதாசன் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சிந்தனைகள் அடங்கிய நூல்கள் மற்றும் எழுதுகோல்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு பெரியார் உருவப்படம் வழங்கப்பட்டது. இராசிபுரம் நகர வளர்ச்சி மன்றத்தின் சார்பில் மின்விசிறி வழங்கப்பட்டது. நிகழ்விற்கு, பிடல்சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க.) தலைமை வகித்தார்.  மணிமாறன், நகர செயலாளர் சி.பி.ஐ. முன்னிலை வகித்தார். சுமதி மதிவதனி (தி.வி.க) வரவேற்புரையாற்றினார். சிறப்புஅழைப்பாளர்களாக  வி.பாலு, தி.மு.க. முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். சுந்தரம், அ.தி.மு.க. மீனா, மாவட்டச் செயலாளர், தேசிய மாதர் சம்மேளன சங்கம், பூபதி, கமல்ஹாசன் நற்பணி இயக்கம் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக  ஆசிரியர் அருணகிரி...

புதுவையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு – பொதுக் கூட்டம்

புதுவையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு – பொதுக் கூட்டம்

திராவிடர் இயக்க தமிழர் உரிமை மீட்பு விளக்கப் பொதுக் கூட்டம், புதுச்சேரியில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு நாளுடன் இணைத்து நடத்தப்பட்டது. ஜூன் 15, 2019 அன்று மாலை அரியாங்குப்பம் பிரம்மா சிலை அருகே நடந்த கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இரா. சிவா, அன்னை மணியம்மையார் படத்தைத் திறந்து வைத்தார். பெரியார் தொண்டர் சக்கினாமா படத்தை தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி திறந்து வைத்துப் பேசினார். யாழ் திலீபன் (தி.க.), பேராசிரியர் சுந்தரவள்ளி சிறப்புரையற்றினர். பெரியார் சிந்தனையாளர் இயக்க சார்பில் நடந்த இந்தப் பொதுக் கூட்டத்தை தோழர் தீனா ஒருங்கிணைத்தார். பெருமளவில் மக்கள் திரண்டு இறுதிவரை கருத்துகளைக் கேட்டனர். பெரியார் முழக்கம் 20062019 இதழ்

ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் கொளத்தூர் மணி பங்கேற்றார்

ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் கொளத்தூர் மணி பங்கேற்றார்

பெரியார் தொண்டர் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் ஜூன் 15ஆம் தேதி மாலை குடந்தை பவளம் திருமண மண்டபத்தில் நடந்தது. ‘கீதாலயனின் நினைவுகள் சட்டக் கல்வி மய்யம்’ சார்பில் நடந்த இந்த நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று தோழர் ஆர்.பி.எஸ். ஸ்டாலின், பெரியாரியலுக்கு ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்தார்.   இந்த நிகழ்வில் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன், சோழபுரம் கலியன், சாக்கோட்டை இளங்கோவன், வழக்கறிஞர் விவேகானந்தன்,  பேராசிரியர் ஜெயராமன், எஸ்.எம். ஜெயக்குமார் (அ.ம.மு.க.), வழக்கறிஞர் ஜார்ஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். பெரியார் முழக்கம் 20062019 இதழ்

சத்துணவில் வெங்காயம் பூண்டுக்கு தடையாம்!

சத்துணவில் வெங்காயம் பூண்டுக்கு தடையாம்!

மதுரை மாவட்டம் வலையப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மய்யத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த எம். ஜோதிலட்சுமி, எம். அன்னலட்சுமி என்ற தலித் பெண்கள், குழந்தைகளை பராமரிக்கும் பணியாளர் களாக நியமனம் செய்யப்பட்டனர். உள்ளூர் ஜாதி ஆதிக்கவாதிகள், தலித் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளைப் பராமரிப்பதா என்று எதிர்ப்பு தெரிவித்து, குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாதி வெறியர்கள் மீது வழக்குத் தொடராமல் தமிழக அரசு, இந்த இரண்டு தலித் பெண்களையும் இடமாற்றம் செய்தது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு அதே ஊரில் ‘தலித்’ பகுதியில் இவர்களை நியமனம் செய்திருக்கிறது. இத்தனைக்கும் 1563 அங்கன்வாடி பணியாளர்கள் பதவிக்கு ஆளும் கட்சியினர் இலஞ்சம் வாங்கிக் கொண்டு, 2017லிருந்து பணி யிடங்களை,7 நிரப்பாமல் காலம் கடத்திய நிலையில் நாகராஜன் என்ற மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்மையாக இந்தப் பணியிடங்களை தேர்வு செய்யப்பட்டவர்களைக் கொண்டு நிரப்பினார். அதற்காக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அடுத்த நாளே அவருக்கு இடமாற்றல்...

7 மாதம் ‘தடா’வில் சிறை சென்றவர் பெரியார் தொண்டர் ஞான. செபஸ்தியானுக்கு கழகம் இறுதி மரியாதை

7 மாதம் ‘தடா’வில் சிறை சென்றவர் பெரியார் தொண்டர் ஞான. செபஸ்தியானுக்கு கழகம் இறுதி மரியாதை

பெரியார் மருந்தியல் கல்லூரியின் தாளாளரும் முதுபெரும் பெரியார் தொண்டருமான தோழர் ஞான செபஸ்தியான் (101), 04.06.2019 அன்று திருச்சியில் முடிவெய்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இறுதி மரியாதை செலுத்தினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி,  திருச்சி புதியவன் மற்றும் கழக முன்னணிப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மறைந்த அய்யா ஞான செபஸ்தியான், விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்த ஈழ ஆதரவாளர். இ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா கொலை வழக்கில் பொய் குற்றச்சாட்டில் 7 மாதம் தடா சிறையில் இருந்தவரும் ஆவார். பெரியார் முழக்கம் 13062019 இதழ்

முகிலன் எங்கே?  சென்னை, எடப்பாடியில் ஆர்ப்பாட்டம்

முகிலன் எங்கே? சென்னை, எடப்பாடியில் ஆர்ப்பாட்டம்

சென்னை : சூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே, பதில் சொல்! என்ற முழக்கத்துடன், கண்டன ஆர்ப்பாட்டம் 01.06.2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் நிகழ்வை ஒருங்கிணைத்தது. ஆர்ப்பாட்டம்  ஆர்.நல்லக்கண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) தலைமையில் நடைபெற்றது. அனைத்து ஜனநாயக கட்சிகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டனத்தைப் பதிவு செய்தார். எடப்பாடி : சூழலியல் போராளி தோழர் முகிலன் எங்கே? என்ற முழக்கத்துடன் முகிலன் மீட்பு கூட்டியக்கத்தின் சார்பில் 06.06.2019 அன்று சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாலை 4 மணிக்கு, ஆதித் தமிழர் பேரவையின் க.ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ஜனநாயக அமைப்புகள் மற்றும் சூழலியல் தோழர்கள் கலந்து கொண்டு...

மேட்டூரில் ஒரு நாள் ‘பெரியாரியல்’ பயிற்சி வகுப்பு

மேட்டூரில் ஒரு நாள் ‘பெரியாரியல்’ பயிற்சி வகுப்பு

மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் ஜூன் 8, 2019 அன்று ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. மேட்டூரில் தொடர்ந்து மாலையில் மழை பெய்து வருவதால் பொதுக் கூட்டமாக நடக்க இருந்த நிகழ்ச்சியை பயிலரங்கமாக மாற்றிட தோழர்கள் திட்ட மிட்டார்கள். பயிற்சியில் 43 மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்றனர். மே 23, 24 தேதிகளில் காவலாண்டியூர் அய்யம் புதூரில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் 15 பேரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “ஏன் தோன்றியது திராவிட இயக்கம்?”, “திராவிடமும் தமிழ்த்  தேசியமும்” என்ற இரண்டு தலைப்பு களிலும் பேராசிரியர் சுந்தரவள்ளி, ‘பெண்ணியம் ஓர் அறிமுகம்’, ‘இந்துத்துவத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகள்’ என்ற இரண்டு தலைப்புகளிலும் வகுப்புகள் எடுத்தனர். காலை 10 மணியளவில் தொடங்கிய வகுப்புகள், இரவு 8 மணி வரை நீடித்தது. பயிற்சியாளர்கள் ஆர்வமுடன் வகுப்புகளைக் கேட்டனர். மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம், பயிற்சிக்கான ஏற்பாடுகளை...

மும்மொழித் திட்டத்தை எதிர்த்து மேட்டூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மும்மொழித் திட்டத்தை எதிர்த்து மேட்டூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மத்திய பா.ஜ.க. அரசு மும் மொழித் திட்டத்தைத் திணிப்பதை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுப் பணிகளில் தொடர்ந்து வட நாட்டவரை பணியமர்த்தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் மேட்டூர் பேருந்து நிலையத்தில் 07.06.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.கோவிந்த ராஜ் (சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்) தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திவிக தலைமை செயற்குழு உறுப்பினர் சக்தி கண்டன உரையாற்றியதைத் தொடர்ந்து, முல்லை வேந்தன் கண்டன உரை யாற்றினார். தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் வட நாட்டவர்களைத் தமிழகத்தில் பணியிலமர்த்தும் சூழ்ச்சியையும் விளக்கிப் பேசினார். இறுதியாக மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் நன்றியுரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத் திற்கு மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ், கொளத்தூர், காவலாண்டியூர், நங்கவள்ளி போன்ற பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தோழர்கள்...

மேட்டூர் படிப்பகத்தில்  தருமபுரி  நாடாளுமன்ற உறுப்பினர்  டாக்டர் செந்தில்

மேட்டூர் படிப்பகத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செந்தில், எம்.பி., கழகத் தலைவர் கொளத்தூர் மணியை 07.06.2019 வெள்ளிக்கிழமை மாலை மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 13062019 இதழ்

பால். பிரபாகரனிடம் வழங்கிய கட்டமைப்பு நிதி

பால். பிரபாகரனிடம் வழங்கிய கட்டமைப்பு நிதி

தலைமை கழக கட்டமைப்பு நிதிக்காக தூத்துக்குடி எம்.எஸ்.எம். அரிசி கடை அதிபர் எம்.எஸ். மாலவராசு ரூ. 25,000/- (ரூபாய் இருபத்தி அய்ந்தாயிரம் மட்டும்) கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரனிடம் வழங்கினார். பாளையங்கோட்டை கே.ஆர். குளிர்பானம் நிறுவனர் பொ. பொன்ராசு – ரூ. 2000/- மேலகரம் பேரா.பழனிவேல் ரூ. 1000/-   பெரியார் முழக்கம் 13062019 இதழ்