ஆளுனர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

தமிழ் நாடு ஆளுனர் மாளிகை முற்றுகைப் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று 04.02.2022 வெள்ளி மாலை 4.00 மணிக்கு சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தோழர் உமாபதி அவர்கள் தலைமையில் நடை பெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் ‘நீட்’ விலக்கு மசோதாவை ஏற்காத ஆளுனரின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை கண்டித்து உரையாற்றினார்.
இளந்தமிழகம் அமைப்பின் தோழர் செந்தில்,கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் அன்பு தனசேகர், தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன், சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தோழர் வேழவேந்தன் மற்றும் கழக நிர்வாகிகள்,தோழர்கள் ஏராளமாக பங்கேற்றனர்.

You may also like...