Category: சென்னை

விநாயகர் சதுர்த்து நிகழ்ச்சியில் நீதிமன்ற,அரசு ஆணைகளை கடைபிடிக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட கழகம் சார்பில் மனு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தோழர்.தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர்) அவர்கள் தலைமையில் கழகத் தோழர்களுடன் இன்று (18.08.2017) காலை சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில்… வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வினாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.வினாயகர் சிலை தயாரிக்கும் இடங்களில் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பிளாஸ்டிக் ஆப் போரிஸ், இரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் வினாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது என்றும், சில மதவாத கும்பல்கள் வினாயகர் ஊர்வலங்களின் மூலம் மதநல்லொழுக்கத்திற்கு எதிராக செயல்படும் செயல்பாடுகளை தடுக்க காவல் ஆணையரை சந்தித்து மனுவை அளித்தனர். அதை தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை அலுவலகத்திலும், சென்னை மாசுகாட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திலும் மனுவை அளித்தனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் சென்னை 19082017

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் சென்னை 19082017

ஆகஸ்ட் 06 முதல் 12 வரை நடைபெற்று முடிந்த சமூக நீதி – சமத்துவ பரப்புரை பயணத்தை பற்றியும்…. மதவாத சக்திகளுக்கு எதிராக நடைபெறவிருக்கும் பெரியார் கைத்தடி ஊர்வலம்…. தந்தை பெரியார் பிறந்தநாள் விழா… போன்றவைகளை பற்றிய கலந்துரையாடல் கூட்டம் நாளை (19.08.2017 சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவகத்தில் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது…. சென்னை மாவட்டத்தின் பகுதி பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்… திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தொடர்புக்கு : 7299230363

சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணத் துவக்க விழா பொதுக்கூட்டம் சென்னை 06082017

இழந்து வரும் உரிமைகளை மீட்போம்.! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்.! தமிழகம் ழுழுவதும் “சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணத்தின்” துவக்கப் பொதுக்கூட்டம்…. நாள் : 05.08.2017, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, இடம் : கங்கையம்மன் கோயில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை. கருத்துரை: தோழர்.கொளத்தூர்.தா.செ.மணி கழகத் தலைவர், திவிக தோழர்.விடுதலை.க.இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக “விரட்டு” கலைக்குழுவின் வீதி நாடகம், கலை நிகழ்ச்சி நடைபெறும். “சூழ்ந்து வரும் ஆபத்துகளை முறியடித்து தமிழகத்தின் தனித்துவத்தைக் காப்போம் வாரீர்….!”  

இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் 30-ஆம் ஆண்டு… தோற்றது ஒப்பந்தமா ? இந்திய பாதுகாப்பா? கருத்தரங்கம் சென்னை 29072017

இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் 30-ஆம் ஆண்டு… தோற்றது ஒப்பந்தமா ? இந்திய பாதுகாப்பா? #கருத்தரங்கம்…. நாள் : இன்று (29.07.2017)மாலை 5 மணிக்கு இடம் : கவிக்கோ அரங்கம், மயிலாப்பூர், சென்னை -04 #கருத்தாளர்கள் : தோழர்.பண்ருட்டி.இராமச்சந்திரன் தோழர்.கொளத்தூர் மணி தோழர்.ஆழி.செந்தில்நாதன் தோழர்.செந்தில் தோழர்.ஜவாஹிருல்லா தோழர்.தியாகு தோழர்.T.S.S.மணி வாருங்கள் தோழர்களே.! ஈழத் தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை 28072017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக வடசென்னை மாவட்டம் நடத்திய வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் 28.07.2017 மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்டது…நிகழ்ச்சியின் தொடக்கமாக தோழர். இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் நிகழ்ச்சியின் தொடக்க உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக, காவை இளவரசன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? என்ற அறிவு சார்ந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதை கண்டு கொண்டிருந்த பொதுமக்களிடம் அறிவியல் கண்ணோட்டத்தோடு எல்லாமே தந்திரமே என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பொதுக்கூட்டத்தின் இடையில் மழை பெய்த காரணத்தால் அருகில் இருந்த கடைவீதிகளின் வாசலில் வந்திருந்த தோழர்கள் முன்னிலையில் கூட்டத்தை தொடர்ந்தனர். கூட்டத்தின் பேச்சாளர்களை வரவேற்று தோழர்.வ.சங்கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினர். அதன் பின் “புதிய கல்விக்கொள்கை குலக்கல்விக்கு மாதிரியே என்ற தலைப்பில் தோழர் P B பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை) அவர்கள் தனது ஆழமான கருத்துகளை கூறி சிறப்புரையாற்றினர். அடுத்ததாக, கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன்அவர்கள்...

சமூக நீதிப் பயணம் – சென்னை மாவட்டம் தயாராகிறது

23.07.2017 மாலை 6 மணிக்கு சென்னையில் கழக தலைமை அலுவலகத்தில் இரா. உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தலைமையில் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கமாக யுவராஜ் கடவுள் மறுப்பு கூறினார். கலந்துரையாடல் கூட்டத்தில் ஆகஸ்ட் 05, 2017 தொடக்க பொதுக்கூட்டம் முதல் ஆகஸ்ட் 12, 2017 மாலை திருசெங்கோட்டில் நடைபெறவிருக்கும் நிறைவு விழா பொதுக்கூட்டம் வரை தமிழ்நாடு முழுவதும் “சமூக நீதிப் பரப்புரை பயணம்” குறித்து பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, 28.07.2017 வடசென்னை, திருவேற்காடு பகுதியில் “வஞ்சிக்கப் படும் தமிழ்நாடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் பற்றியும், கடந்த 15.07.2017ல் நடைபெற்று முடிந்த காமராசர் விழா பற்றியும், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில், அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்), தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர்), அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இயக்க பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்....

திவிக சென்னை மயிலை பகுதி தோழர்களின் களப்பணிகள் 21072017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மயிலாப்பூர் பகுதி தோழர்கள் இன்று காலை (21.07.2017) விசாலாட்சி தோட்டம், பல்லக்கு நகர் போன்ற பகுதிகளில் குடிதண்ணீர் வராத காரணத்தால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.அந்த பகுதி மக்களின் பிரச்சனையை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் கையொப்பம் வாங்கி மயிலாப்பூர் பகுதி தலைவர் தோழர்.இராவணன் அவர்களின் தலைமையில் அந்த பகுதியின் “சென்னை குடிநீர் வாரியம்” ஆய்வாளரை சந்தித்து தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வழிவகை செய்ய வேண்டி தோழர்கள் எடுத்துரைத்து மனுவை அளித்தனர். அதை தொடர்ந்து, மயிலாப்பூர் பகுதியில் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை பெற வரும் பொதுமக்களிடம் இடைதரகர்கள் பணம் பெறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், பொது மக்களுக்கு இடையூறான வேலையில் ஈடுபடும் நபர்களை தடுக்க கோரியும் பொது மக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அரசு அலுவலர்களே முறையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியாளர்...

சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் 23072017

சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் ஆகஸ்ட் 06, 2017 முதல் ஆகஸ்ட் 12, 2017 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருக்கும் “சமூக நீதி பரப்புரை பயணத்திற்கான” கலந்துரையாடல் கூட்டம் 23.07.2017 மாலை 5 மணிக்கு…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவகத்தில் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்)அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது…. சென்னை மாவட்டத்தின் பகுதி பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்… திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

சென்னை விழாவில் பழ. கருப்பையா பேச்சு திராவிடர் இயக்கத்தின் பிள்ளை, காமராசர்

சென்னை விழாவில் பழ. கருப்பையா பேச்சு திராவிடர் இயக்கத்தின் பிள்ளை, காமராசர்

சென்னையில் ஜூலை 15ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய பழ. கருப்பையா, ‘காமராசர் – திராவிடர் இயக்கத்தின் பிள்ளை’ என்று கூறினார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாக்கிய எழுச்சியே காமராசரை காங்கிரஸ் தலைவராகவும் தமிழக முதலமைச்சராகவும் உயர்த்தியது என்றும் அவர் கூறினார். அவரது உரை : காமராசர் பிறந்த நாள் விழாவை பெரியார் இயக்கங்கள் நடத்துவதுதான் மிகப் பொருத்தமானது. பெரியார் பெரிதும் மதித்த தலைவர் காமராசர். பெரியாரின் சமூகப் புரட்சி மகத்தானது. பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதே முக்கியம் என்று கருதிய பெரியார், அதற்காக இந்தியாவின் ‘விடுதலை’கூட தள்ளிப் போகலாம் என்று முடிவெடுத்தார். அவர் அந்த சூழ்நிலையில் எடுத்த முடிவு சரியானது. 1976ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலையை இந்திரா காந்தி அறிவித்து, அடிப்படை உரிமைகளையே பறித்தார். அப்போது காமராசர், “நாட்டைக் காப்போம்; ஜனநாயகத்தைக் காப்போம்” என்ற...

காமராசர் விழா நிகழ்வில் அமைதியாக கடந்து சென்ற “சாமி ஊர்வலம்”

காமராசர் விழா நிகழ்வில் அமைதியாக கடந்து சென்ற “சாமி ஊர்வலம்”

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் இரா. உமாபதி, வரவேற்புரையில் காமராசர் விழாவுக்கு பகுதி வாழ் வணிகர்கள் காட்டிய  பேராதரவையும் விழாவுக்கு கடந்த 10 நாள்களாக ஒவ்வொரு பகுதியாக கடைகளில் துண்டறிக்கை வழங்கி, சிறு சிறு தொகையாக நன்கொடை திரட்டிய கழகத் தோழர்களின் களப் பணியையும் சுட்டிக் காட்டி உரையாற்றினார். “இந்த விழா இவ்வளவு சிறப்புடன் நடைபெறுவதற்கு இப்பகுதியில் உள்ள வணிகர்கள் நன்கொடைகளை வழங்கினர். எங்களுடைய பெரியார் படிப்பகம் அருகில் அடுத்தடுத்து, நாகாத்தம்மன், விநாயகன் கோயில்களும், இராமலிங்கசாமி கோயிலும் இருக்கின்றன. கோயில் நிர்வாகிகளும் கோயிலுக்கு வரும் பக்தர் களும் எங்களிடம் நட்பு பாராட்டுகின்றனர். இந்தக் கோயில்களுக்கிடையே படிப்பகக் கரும் பலகையில் ஒவ்வொரு நாளும் நாங்கள் எழுதும் பெரியார் சிந்தனைகளைப் படிக்கிறார்கள். ஒரு  நாள் கோயிலுக்கு வந்த அம்மையார் ஒருவர், “இங்கே நீங்கள் எழுதும் கருத்துகளை ஒவ்வொரு நாளும் படிக்கிறேன். எனக்கு நியாயமாகவே தெரிகிறது. எனக்கு பெரியார் நூல்கள் வேண்டும்” என்று...

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் சென்னை 15072017

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம். நாள் : 15.07.2017, சனிக்கிழமை நேரம் : மாலை 5.00 மணிக்கு இடம் : வி.எம் தெரு, இராயப்பேட்டை, சென்னை -14 வரலாற்றை நினைவுகூர்ந்து சிறப்புரையாற்றுவோர் : தோழர்.கொளத்தூர்.தா.செ.மணி (பெரியாரும் காமராசரும்) தோழர்.பழ.கருப்பையா (காமராசரும் சமூக நீதியும்) தோழர்.விடுதலை க.இராசேந்திரன் (காமராசரின் இன்றைய தேவை) மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள். விரட்டு கலைக்குழுவினரின் சமூக நீதி – ஜாதி எதிர்ப்பு கலை நிகழ்ச்சி நடைபெறும். “காமராசரின் பிறந்தநாளில் அந்த வரலாறுகளை நினைவு கூறுவதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருமை அடைகிறது. இது காலத்தின் தேவையாகிறது”. வாருங்கள் தோழர்களே காமராசரின் பிறந்தநாளில் அவரின் வரலாற்றை நினைவு கூறுவோம்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் 21062017

மாட்டுக்கறியை தடைக்கு தடை விதிக்கும் மதவாத மோடி அரசைக் கண்டித்து…. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் ஒன்றை பண்பாட்டை திணிக்க முயற்சிக்கும் மோடி அரசே.! மாட்டுக்கறி மீதான தடை நீக்கப்படவில்லை எனில் திராவிட நாடு மலர்ந்தே தீரும்.! என்ற கண்டன முழக்கத்தோடு காஞ்சி மக்கள் மன்றம் சார்பாக காஞ்சிபுரம், தாலுக்கா அலுவலகம் எதிரில்…திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) மற்றும் இயக்க தோழர்களும் இணைந்து இன்று (21.06.2017) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் யாதவ சாஷில பரிபரன சபை மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தோழர்கள் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக முதல்வர் வீடு முற்றுகை சென்னை 17062017

தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் பாஜகவின் பினாமியான தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம் 17062017 சனி அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அதில் 2000 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழர் விரோத பாஜகவின் அடியாளாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்தும், தமிழக செயல்பாட்டாளர்களை ஒடுக்க குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், UAPA என அடக்குமுறை கருப்பு சட்டங்களை ஏவுவதைக் கண்டித்தும், 4 தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தோழர்கள்...

இந்தி அழிப்புப் போராட்டம் சென்னை 05062017

திராவிடர் விடுதலைக் கழகம் 05062017 காலை 10.30 மணியளவில் சாஸ்திரி பவனில் இந்தி அழிப்புப் போராட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் 130 பேர் இவ்வழிப்பு போராட்டத்தில் கலந்து கைதானார்கள். மேலும் செய்திகள் விரைவில்

தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு சென்னை 04062017

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன் நினைவு அரங்கத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு” 04062017 மாலை திருவான்மியூர் தெப்பக் குளம் அருகில் நடைபெற்றது

அய்.அய்.டி மாணவர் சூரஜ் சந்தித்து கழகத் தலைவர், பொதுச்செயலாளர் ஆறுதல் சென்னை 03062017

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, துணைப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் மதிமாறன், கழக வழக்குறைஞர் அருண், சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஐஐடி மாணவர் சூரஜ்யை 03062017 அன்று இரவு 8.30 மணியளவில் பார்த்துவிட்டு தலைமை அலுவலகம் திரும்பினார்கள். அவரின் உறவினர்கள் ராஜகோபால், வாசுதேவன் தலைவரிடமும் பொதுச் செயலாளரிடமும் ஆர்வமாக தமிழகத்தின் ஆதரவை மற்றும் கேரள முதலமைச்சர், திமுக செயல் தலைவர், தமிழக காங்கிரஸ் தலைவர், மதிமுக பொதுச் செயலாளர் மற்றும் மாணவர்கள் எப்படி இதை பார்க்கிறார்கள் என்பதை விளக்கினர். செய்தி குகன்

இந்தி அழிப்பு போராட்டம் சென்னை 05062017

ஜூன் 5ல் “இந்தி அழிப்பு போராட்டம்” திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்…. மத்திய அரசு அலுவலகங்களில் “இந்தி அழிப்பு போராட்டம்” தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை.! பா.ஜ.க அரசே.! திணிப்புகளை திரும்பப் பெறு.!! நாள் : 05.06.2017, திங்கட்கிழமை காலை 10 மணிக்கு…. இடம் : சாஸ்திரிபவன், நுங்கம்பாக்கம், சென்னை தலைமை : கொளத்தூர்.தா.செ.மணி தலைவர்.திராவிடர் விடுதலைக் கழகம் #இந்தி_திணிப்பை_எதிர்ப்போம்.! #இழந்துவரும்_உரிமைகளை_மீட்போம்.!! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு சென்னை 04062017

04062017 அன்று சென்னையில் “தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு” மாநாடு. இந்தித்திணிப்பை எதிர்ப்போம் ! இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! எனும் முழக்கத்தோடு, திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் சார்பில்.. நாள் : 04.06.2017. ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 4 மணி இடம் : திருவான்மியூர் தெப்பக்குளம், சென்னை – 41. தலைமை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம். சிறப்புரை : நீதியரசர்.அரிபரந்தாமன், முன்னாள் நீதிபதி,உயர் நீதி மன்றம்,சென்னை. தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம். பேராசிரியர்.சரசுவதி அவர்கள். மற்றும் கழக நிர்வாகிகள்,தோழர்கள் ! காஞ்சி மக்கள் மன்றத்தினரின் பறையிசை, புரட்சிகர கலை நிகழ்ச்சி இடம்பெறும். விழித்தெழுவோம்.! தடுத்து நிறுத்துவோம்.! தமிழர்களே வாரீர்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

பேரறிவாளனின் தந்தை ஐயா குயில்தாசன் பவள விழா சென்னை 28052017

பேரறிவாளனின் தந்தை ஐயா குயில்தாசன் பவள விழாவில் சென்னையில் நடைபெற்றது. அதில் ஐயாவிற்கு மரியாதை செய்யும் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பெரியாரியல்வாதிகள்

தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு – சென்னை சுவரொழுத்து பணிகள்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்…. “இந்தி திணிப்பை எதிர்ப்போம் – இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” “தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு” சென்னை திருவான்மியூர் பகுதியில் “ஜீன் 04″ல் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கான சுவர் விளம்பரம் தென்சென்னை பகுதியை சுற்றிலும் எழுதப்பட்டது…… முந்தைய நாள் தொடர்ச்சியாக 20052017 அன்று இரவும் தோழர்கள் சுவர் விளம்பரத்திற்காக பணிகளை மேற்கொண்ட போது….. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு சென்னை 04062017

வெகுஜன மக்களின் மனதில் இந்தி படிப்பது அறிவென்றும், இந்தியை படித்தால் உயர்வென்றும் திட்டமிட்டு திணிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இந்தியை மொழியாக வட மாநிலத்தவர்கள் பிழைப்பிற்காக தென் மாநிலங்களில் கூலி வேலைக்கும், கட்டிட வேலைக்கும் என புலம் பெயர்ந்தபடி உள்ளனர். வட மாநிலங்களில் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளவர்கள் கூட, தரமான கல்விக்கு தென் மாநிலங்களை, குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளை தேர்ந்தெடுக்கின்றனர். காரணம் தமிழர்களுக்கு என்று தனித்துவமாக கலாச்சாரம், நாகரிகம் போன்றவையே காரணம். இந்தி படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? நிச்சயம் இல்லை அந்நிய மொழி அறிதல் அறிவே. ஆனால் அதுவே கட்டாயமாக்கப்பட்டு திணிக்கையில் நிச்சயமாய் எதிர்க்கக் கூடியதே . இந்தி ஏன் திணிக்கப்படுகிறது. பெரிதாய் ஆய்வுகள் தேவையில்லை. தனக்கென நாடில்லா ஆரியம், அகன்ட பாரத கனவிற்கு இந்து மதம் கொண்டு இந்தியாவை வடிவமைப்பது போலவே, அதை மேலும் பலப்படுத்தும் வண்ணம் ஒருமொழி கலாச்சாரத்தை கொண்டுவர முயலும் மொழி திணிப்பே இந்தியை அறிவென்பது. உலகத்தின் ஆதி...

களப்பணிகளில் கழகத் தோழர்கள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கழகத்தின் களப்பணிகள் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் தொகுப்பு. ஈரோட்டில் ‘கனி ராவுத்தர்’ குளம் மீட்பு இயக்கத்தின் தொடர் போராட்டம் ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலை களால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப் பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து மக்கள் திரள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு என்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர்...

சென்னை திவிக செயல்வீரர் செந்தில் அவர்களின் தந்தை மறைவு 05052017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்.இரா.செந்தில் குமார் (FDL) அவர்களின் தந்தையார் இரா.இராமலிங்கம் இன்று (05.05.2017) காலை இயற்கை எய்தினார்… மதச்சடங்குகளை தவிர்த்து தந்தையார் இரா.இராமலிங்கம் அவர்களின் உடலை பெண்களே மயானம் வரை சுமந்து சென்றனர்… திராவிடர் விடுதலை கழகத்தின் வீரவணக்கத்தின் முழக்கத்தோடு தந்தையாரின் உடல் தகனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது…. இறுதி நிகழ்வில் சென்னை மாவட்ட செயலாளர்.தோழர்.உமாபதி அவர்கள் கழகத்தின் சார்பாக தந்தையார் இரா.இராமலிங்கம் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.. கழகத்தின் நிலைய செயற்குழு உறுப்பினர் தோழர்.அய்யனார் அவர்கள் இறுதி நிகழ்வில் மதச் சடங்குகளை தவிர்த்து பெண்களே ஏற்று நடத்திய தந்தையாரின் இறுதி நிகழ்வுக்கு பாராட்டையும் ….குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்டார்.

கக்கூஸ் ஆவணப்படம் சென்னை 01052017

மலக்குழியில் மனிதர்களை இறக்கும் இழிவிற்கு முடிவு கட்டுவோம்…… “கக்கூஸ் ஆவணப்படம்” திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவகத்தில் இன்று மாலை திரையிடப்பட்டது…. இதில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் தோழர்.அன்பு தனசேகரன் அவர்களின் தலைமையில் ஆவணத் திரைப்படம் திரையிடப்பட்டது… இதில் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தோழர்.தபசி குமரன், சென்னை மாவட்ட தலைவர் தோழர்.வேழவேந்தன் மற்றும் இயக்க தோழர்கள் வந்திருந்தனர்… சென்னை மாவட்ட செயலாளர் தோழர்.உமாபதி அவர்கள் ஆவணப்படத்தின் திரையிடலை ஒருங்கிணைத்து நடத்தினார்.. திரையிடலுக்கு பிறகு பேசிய தோழர்.அன்பு தனசேகரன் அவர்கள் மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் மடமையை பற்றியும், ஆவணத் திரைப்படத்தை பற்றியும் இயக்க தோழர்கள் இதற்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் பேசி கலந்துரையாடலை முடித்தார்

தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு – ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாம் 30042017

“கழக செயல் வீரர் ” தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று… ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாம்…. இன்று காலை (30.04.2017) 10 மணிக்கு ஆரம்பமானது.தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தோழர்.வீ.சிவகாமி அவர்கள் வந்திருந்த அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கான சிறுகதை, விளையாட்டு பயிற்சி என பல்வேறு விதமாக கலந்துரையாடினார்…. வந்திருந்த சிறுவர், சிறுமிகளுக்கு குளிர்பானம் மதிய உணவுகளும் வழங்கப்பட்டது…. மதிய பொழுதில் சமூக கல்வி நிறுவனத்தின் தோழர்.சியாம் சுந்தர் மற்றும் தோழர்.மோகினி அவர்கள் சிறுவர், சிறுமிகளுக்கு ஓவியப்போட்டி, சிறுகதை என பல்வேறு பயிற்சிகளை அளித்து சிறுவர், சிறுமிகளுடன் பழகி கலந்துரையாடினார்கள்…. இறுதியாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் பழகு முகாமின் சிறுவர், சிறுமிகளை வழிநடத்திய தோழர்.சியாம் சுந்தர் மற்றும் தோழர்.மோகினி அவர்களுக்கு கழக மாத இதழ் நிமிர்வோம் புத்தகத்தை வழங்கினார். அதையடுத்து வந்திருந்து பழகு முகாமில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகளுக்கு சான்றிதழ்...

தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை 30042017

“கழக செயல் வீரர் ” தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று…. காலை தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் நினைவிடத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், சென்னை மாவட்ட நிர்வாகிகள், இயக்க தோழர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தை சார்ந்த தோழர்கள் வந்திருந்தனர்….. தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் நினைவிடத்தில் தோழர்.அன்பு தனசேகரன் அவர்கள் வீரவணக்கம் முழக்கம் எழுப்பி, தோழர்.பத்ரி நாராயணன் அவர்களுடன் தன்னுடைய வாழ்நாள் அனுபவங்கள் அவரின் பெரியாரின் கொள்கையும் பற்றியும் பேசி தனது ஆழ்ந்த இரங்கலோடு மரியாதை செலுத்தினார்கள்… நினைவிடத்தில் வந்திருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி , திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளின் தோழர்கள், தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் பழகிய நாட்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு வீரவணக்கத்தை செலுத்தினார்கள்… தமிழ்நாடு அறிவியல் மன்றத்திலிருந்து வந்திருந்த தோழர்.வீ.சிவகாமி அவர்கள் தோழர்.பத்ரி நாராயணன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்…....

“பாவேந்தர்” பாரதிதாசன் 127வது பிறந்தநாள் சென்னை 29042017

தை ஒன்றே தமிழர் புத்தாண்டு என்று முழங்கிய மக்கள் கவிஞன் “பாவேந்தர்” பாரதிதாசன் 127வது பிறந்தநாளான இன்று 29042017 … சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள “பாவேந்தர்” பாரதிதாசன் அவர்களின் திருஉருவச்சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையச் செயலாளர் தோழர். தபசி குமரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்… கழக வழக்கறிஞர் தோழர்.துரை அருண் சென்னை மாவட்ட தலைவர் தோழர்.வேழவேந்தன், மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி அவர்களுடன் மாவட்ட தோழர்கள் பங்கேற்றனர்

“ஜாதி ஒழிப்புப் போராளி” புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம் சென்னை 23042017

“ஜாதி ஒழிப்புப் போராளி” டாக்டர்.B.R.அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம் சென்னை பெரம்பூர் சடையப்ப தாஸ் தெருவில் அமைந்துள்ள தாய் ராம்பாய் பவன் 23042017 அன்று மாலை 5 மணிக்கு நடந்தது.   இந்நிகழ்வில் கருத்துரை  தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் அம்பேத்கரை திசை திருப்பும் சதி என்ற தலைப்பிலும், எழுத்தாளர் வே.மதிமாறன் அவர்கள் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு தத்துவம் பற்றியும் மிக தெளிவாக தங்கள் கருத்துக்களை வழங்கினர் அம்பேத்கரின் அறிய வேண்டிய சிந்தனைகள் ஆழமான புரிதலோடு அனைவரும் அறிந்து சென்றார்கள்.

“கழக செயல் வீரர்” தோழர் செ.பத்ரி நாராயணன் நினைவு நாள் – குழந்தைகள் பழகு முகாம் சென்னை 30042017

“கழக செயல் வீரர்” தோழர் செ.பத்ரி நாராயணன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாள்…. ” ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாம்” வருகிற ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவிருக்கிறது…. இடம் : விஜய் திருமண மண்டபம், லாயிட்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை -600014 பயிற்சியாளர்கள் : ஆசிரியர்.வீ.சிவகாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம். தோழர்.ஜெ.சியாம் சுந்தர், சமூக கல்வி நிறுவனம். சிறப்பு அழைப்பாளர் : தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக வருங்கால இளைய சமுதாய தோழர்கள், தோழிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெற வாரீர்….. குறிப்பு : * காலை 8 மணியளவில் தோழர்.செ.பத்ரி நாராயணன் அவர்களின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்த இயக்கம் சார்ந்த தோழர்கள் அனைவரும் வரவும்….. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363  

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சென்னை 14042017

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை சார்பாக அண்ணல் அம்பேத்கர் 126 ஆம் பிறந்தநாள் விழா அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு கழகத் தோழர்களுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் டாக்டர்.அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் உடன் சென்னை மாவட்ட இயக்க தோழர்கள் டாக்டர் அம்பேத்கருக்கு முழக்கமிட்டு மரியாதை செலுத்தினார்கள். அதை தொடர்ந்து, மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த கழக தோழர்கள் வாகன ஊர்வலமாக டாக்டர் அம்பேத்கருக்கு முழக்கமிட்டு டாக்டர். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்….. டாக்டர்.அம்பேத்கருக்கு திராவிடர் விடுதலைக் கழக மயிலாப்பூர் பகுதி தோழர்கள் முன்னிலையில் துப்புரவு பணியாளர்கள் கேக் வெட்டி…..அந்த பகுதி மக்களுக்கு கேக் வழங்கப்பட்டது…. இறுதியாக ராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் டாக்டர்.அம்பேத்கர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னை 15042017

திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பாக….. “கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்” கடந்த 31 நாட்களாக டெல்லி – ஜந்தரில் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளை கண்டு கொள்ளாத மத்திய மோடி அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது.. விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஏற்க கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்…. மத்திய மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்து சைதாப்பேட்டை T.K. திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்…. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363 செய்தி ஜான் மண்டேலா      

தோழர் பாரூக் படுகொலை – கண்டனமும் காலத்தின் தேவையும் கருத்தரங்கம் சென்னை 04042017

04042017 திங்கட்கிழமை மாலை 6-00 மணியளவில் சென்னை, கவிக்கோ மன்றத்தில், துவக்கு இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பில், தோழர் பாரூக் படுகொலை – கண்டனமும் காலத்தின் தேவையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் வரவேற்று துவக்கு இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர் கவிஞர் இசாக் உரையாற்றி, நிகழ்வினை நெறிப்படுத்தினார். திராவிட இயக்கத் தமிழர்ப் பேரவையின் முத்தையா குமரன், விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்ட செயலாளர் தமீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மைத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோரைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உரையாற்றினார். அவரது உரையில் பெரியார் இயக்கத்துக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் நிலவும் நல்லுறவு பெரியார் காலம் முதல் இன்றுவரை தொடர்ந்துவரும் பாங்கினையும், சிறுபான்மை மக்கள்மீது எங்கிருந்து தாக்குதல் வந்தாலும் முதலில் களத்துக்கு வருபவர்கள் திராவிடர் கழகங்களைச் சார்ந்தோரே என்றும்,...

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு சென்னை மாவட்ட கழகம் நிதியுதவி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு சென்னை மாவட்ட கழகம் நிதியுதவி

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடந்த மாணவர்கள் எழுச்சியை அடக்கும் பொருட்டு தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டி தன தாக்குதலுக்கு ஆளான நடுக்குப்பம், ரூதர்புரம், மாட்டாங்குப்பம் பகுதி தலித் மக்களுக்கு அனைத்திந்திய மாணவர் அமைப்பு சார்பாக பொருளுதவியும், நிதியுதவியும் மாணவர் அமைப்பு நிர்வாகி தோழர் அன்பு தலைமையில், பேராசிரியர் ராமு. மணிவண்ணன் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் பேராசிரியர் ராமு. மணிவண்ணன் மற்றும் தமிழ்நாடு மாணவர் அமைப்பு சென்னை மாவட்ட செயலாளர் தோழர். ஜெயபிரகாஷ், திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் தோழர். இரா. உமாபதி, திவிக தோழர்.இரா. செந்தில் குமார் (FDL) கலந்துக் கொண்டு உதவிகளை வழங்கினர். மாணவர் அமைப்பை சார்ந்த தோழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை கள ஆய்வு செய்து, அவர்களில் அதிகம் பாதிக்கப் பட்டிருந்த முப்பது குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு பொருளுதவியும், மருத்துவ உதவி தேவைப்பட்ட மூன்று குடும்பத்தினருக்கு பண உதவியும் வழங்கினர். உதவிகள் பெற்ற...

சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் இன்று 02042017

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் இன்று 2.4.17 மாலை 6 மணிக்கு மாவட்ட தலைவர் உமாபதி தலைமையில் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் முன்னிலையில் தலைமைக் கழகத்தில் நடந்து. இதில் குறிப்பாக புரட்சி பெரியார் முழக்கம் சந்தா உயர்த்துதல், நிமிர்வோம் இதழ் மக்கள் மத்தியில் பரவலாக கொண்டு சேர்த்தல் மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கூட்டம் நடத்துதல் என பல்வேறு தளங்களில் பெரியரியலை முன்னெடுப்பதை கலந்தாலோசிக்க பட்டது.

தோழர் ஃபாரூக் குடும்ப நிதி – இனமுரசு சத்தியராஜ் ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்

இனமுரசு சத்தியராஜ் அவர்கள் தோழர் ஃபரூக் குடும்ப நிதியாக ௹பாய் ஒரு லட்சம் வழங்கினார். இனமுரசு சத்தியராஜ் அவர்கள், பகுத்தறிவு கருத்துக்களை பேசிய காரணத்தினால் இசுலாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் ஃபாருக் குடும்ப நிதியாக Rs 1,00,000/= (ரூபாய் ஒரு லட்சம்) வழங்கினார். அப்போது திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன், மாவட்டச் செயலாளர் தோழர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், கழகத் தோழர் செந்தில் Fdl ஆகியோர் இருந்தனர்.

சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்…

ஞாயிறு 02042017 மாலை 5 மணியளவில் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட செயலாளர் தோழர். உமாபதி தலைமையில் நடைபெறவிருக்கிறது டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாள் விழா… புரட்சி பெரியார் முழக்கம் வார ஏடு சந்தா … நிமிர்வோம் மாத இதழ் சந்தா… என பல்வேறு விசயங்களில் நமது அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்க படவுள்ளது. ஆகையால், சென்னை மாவட்ட பகுதி பொறுப்பாளர்கள், சென்னை மாவட்ட இயக்க தோழர்கள், சென்னை மாவட்ட பகுதி தோழர்கள், அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் இதில் கலந்துக் கொள்ள கோருகிறோம். இடம் : திராவிடர் விடுதலைக் கழகம், தலைமை அலுவலகம், நடேசன் சாலை, டாக்டர் அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை- 600004 தொடர்புக்கு : 7299230363

தோழர் ஃபாரூக் படுகொலையும் நமது நிலையும்…. கருத்தரங்கம் சென்னை 26032017

மனிதநேயப் போராளி … தோழர் ஃபாரூக் படுகொலையும் நமது நிலையும் …. கருத்தரங்கு சென்னை இராயப்பேட்டையில் 26032017 நடைபெற்றது. கருத்தரங்கம் தோழர் ஃபாரூக்கின் படத்திறப்போடு துவங்கியது. கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தனது உரையில் … நாத்திகர்கள் மேடைகளில் நமது தோழமை இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு அவர்களது உரையை துவங்கும் போது ” உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என்று பிரார்த்தித்தவனாக .. உங்கள் முன் பேச துவங்குகிறேன் ” என்றே துவங்குவர். அது நாத்திகர்களின் மேடை மற்றும் நம் கொள்கைக்கு மாறானது என்ற போதும், அது தோழர்களின் கருத்துரிமை என்றும், அதற்கு முழு சுதந்திரம் தரப்பட்டிருக்கிறது என்றும் ., தோழமை அமைப்புகளின் கொள்கை உணர்விற்கு நாத்திகர்கள் மேடை எவ்வாறு கருத்துச் சுதந்திரத்தோடு நடந்துக் கொண்டிருந்ததை சுட்டிக் காட்டினார் … இந்த கருத்தை கருத்தரங்கிற்கு வந்திருந்த...

தமிழ்நாட்டு மாணவர்களின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 19032017

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக 19032017 அன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தமிழநாட்டு மாணவர்களின் மர்ம மரணத்திற்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மத்திய கைலாஷ் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 20 மாணவர்கள் கைது

சென்னையில் தோழர்கள் சாலை மறியல்

சென்னையில் தோழர்கள் சாலை மறியல்

ஃபாரூக் கொலையுண்டார் என்ற செய்தியறிந்து அடுத்த சில மணி நேரங்களிலே சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அண்ணாசாலையில் சாலை மறியலில் ஈடு பட்டனர். தோழமை அமைப்புகள் மே 17, இளந்தமிழகம், த.பெ.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். “கடவுள் உண்டு என்று கூறும் உரிமை உனக்கு உண்டு என்றால் இல்லை என மறுக்கும் உரிமை எமக்கு உண்டு. கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை” என்று தோழமை அமைப்புகளே உணர்ச்சிகரமாக முழக்கமிட்டனர். பெரியார் சிலை அருகே 30 நிமிடம் சாலைபோக்குவரத்து நின்றது. காவல்துறை 70க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து இரவு விடுதலை செய்தது. தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலையில் இந்த மறியல் நடந்தது. பெரியார் முழக்கம் 23032017 இதழ்

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 19032017

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் உயர்கல்வி நிறுவனங்களில் தொடரும் தமிழ்நாட்டு மாணவர்களின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் 19032017 அன்று காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும்

தோழர் ஃபாருக் படுகொலைக்கு காரணமான மதவெறியர்களை கைது செய் ஆர்ப்பாட்டம்

மதவெறியர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட கோவை திராவிடர் கழக தோழர் பாரூக் படுகொலைக்கு காரணமான மதவெறியர்களை கண்டித்து காவல் துறையே கைது செய் என்று ஆர்ப்பாட்டம் என ஆரம்பித்து பின் சென்னை அண்ணா சாலையில் தந்தை பெரியார் சிலைக்கருகில் சாலை மறியலில் ஈடுப்பட்ட திவிக, தபெதிக, சேவ்தமிழ் இயக்க தோழர்கள் 60 கைது.  

பாரூக் இறையை மறுத்ததற்கா இரையானாய்?

பாரூக் இறையை மறுத்ததற்கா இரையானாய் மதவெறி மலத்திற்கு நீ மனிதம் பேசியதற்கா மரணம் பூசியிருக்கிறார்கள் மலம் தின்னிகள் … பாரூக் பெயருக்காக சிறையை தந்த மதமே கொள்கைக்காக மரணம் தந்ததும் நீயோ … நீ கழுத்தறுப்பட்டு வீசப்பட்டிருக்கிறாய் மனிதமற்ற மதங்களுக்கு புதிதில்லை மக்களின் கழுத்தறுப்பது … மதங்கள் அன்பை போதிக்கின்றன கைமாறாய் பாரூக் போன்ற மனிதங்களை தின்று … பாரூக் உன் குடும்பம் அழுகை நிறுத்தும் நேரம் காத்திருக்கிறோம் எங்கள் கையாலாகாத்தனத்தை சொல்லி அழ … இரா. செந்தில் குமார்

தோழர் ஃபாரூக்கை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்! கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 17032017

17032017 மாலை, தோழர் ஃபாரூக்கை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்! திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை தோழா் ஃபரூக் அவா்களை படுகொலை செய்த கொலைகாரர்களை உடனடியாக கைது செய்ய வலியுருத்தி கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 17. 03. 2017 வெள்ளி நேரம் : மாலை 4:00 மணிக்கு,, இடம்: சென்னை, அண்ணா சாலை, சிம்சன் பொியாா் சிலை அருகில். தலைமை : தோழர் உமாபதி, மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் . அனைத்து தோழா்களும் வரவும். திராவிடர் விடுதலைக் கழகம். சென்னை மாவட்டம் பேச:7299230363

பாஜக அலுவலகம் இழுத்து மூடும் போராட்டம் சென்னை 14102017

பாஜக அலுவலகம் இழுத்து மூடும் போராட்டம் சென்னை 14102017

தமிழர்களை அழிப்பதையே ஒரே வேலையாக கொண்டுள்ள தமிழர் விரோத பாஜக அலுவலகம் இழுத்து மூடும் போராட்டம் மார்ச் 14 காலை 10 மணி சென்னை   காவிரி நதி நீர் மறுப்பு பவானி, மேகதாது, பாலாறு தடுப்பணைகள் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத் திணிப்பு தமிழக மீனவர்கள் படுகொலையில் கூட்டுச்சதி என்று தமிழர்களை அழிப்பதையே வேலையாக கொண்டுள்ள தமிழர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் தமிழின விரோதி பாஜகவை தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிப்போம்

இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று முழக்கத்துடன் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று மாபெரும் ஆர்ப்பாட்டம் …. உணர்வாளர்களே , தோழர்களே வாருங்கள் … 05032017 மாலை 3 : 00 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் 72992 30363