“சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் – சென்னை 18072018

 

திராவிடர் விடுதலைக் கழகம் தென்சென்னை மாவட்டம், திருவான்மியூர் பகுதியில் கடந்த 18.07.2018 (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு….

“சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் தோழர்.ந.விவேக்(தென்சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் மு.தமிழ்தாசன், சே.கந்தன், பா.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்.இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து கூட்டத்தின் தொடக்கமாக “யாழ்” பறையிசை முழக்கத்தோடு, வீதி நாடகங்களை நடத்தினர். தோழர்.ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் காமராசரின் வரலாற்றை குறித்து எடுத்துரைத்தார்.

பின்பு இந்த கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற பேராசிரியர்.சுந்தரவள்ளி அவர்கள் காமராசரின் சமூகநீதி வரலாற்றை நினைவு கூர்ந்து பகுதி மக்களிடையே எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ச்சியாக, பெரம்பலூர் துரை தாமோதரனின் மந்திரமல்ல.! தந்திரமே.! அறிவியல் விளக்க நிகழ்ச்சியை பகுதி மக்களிடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்த்தினார். பகுதி மக்களும் அறிவியல் விளக்கத்தை ஆர்வமுடன் கவனித்தனர்.

இறுதியாக தோழர்.மா.தேன்ராஜ்(திருவான்மியூர் பகுதி அமைப்பாளர்) நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

You may also like...