Category: பெரியார் முழக்கம்

ஜோயல் பிரகாஷ் மரணத்துக்கு நீதி  கேட்டு விழுப்புரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜோயல் பிரகாஷ் மரணத்துக்கு நீதி கேட்டு விழுப்புரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜோயல் பிரகாஷ் மரணத்திற்கு நீதி  கேட்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 25.11.17 காலை 11 மணியளவில் வளவனூரில்  நடைபெற்றது. தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார்,  விழுப்புரம் மேற்கு மாவட்டத் தலைவர் மதியழகன்,  கடலூர் மாவட்ட செயலாளர் பாரதிதாசன்,  பெரியார் சாக்ரட்டீஸ், அமைப்பாளர் சாமிதுரை, இரவி கார்த்திகேயன், கோகுல்காந்திநாத், ஜெயக்குமார் பெரியார் தி.வி.க, பெரியார் சிந்தனையாளர் இயக்கம்  தீனா, பரத்  மற்றும் தோழர்கள்,  தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி கொள்கை பரப்பு செயலாளர் விஜி மற்றும் விழுப்புரம் அஜி மற்றும் கலைகல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர் லூசியா,  மருத்துவர் தீரன் வினோத், வனத்தாம் பாளையம் பெரியார் ஜெயரட்சகன் சிறீதர்,  பாபு,  லாஸ் பேட்டை மாணிக்கம்,  திருமுருகன், திருவண்டார் கோயில் விஜயன்,  கிருஷ்ணராஜ்,  மற்றும் மேற்கு மாவட்டதி.வி.க தோழர்கள் மற்றும் விழுப்புரம் புதுச்சேரி பகுதி தோழர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 30112017...

விழுப்புரத்தில் ஜாதி ஒழிப்புப்  போராளிகளுக்கு வீர வணக்க நாள்

விழுப்புரத்தில் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்க நாள்

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் தலைமையில் ஜாதி ஒழிப்பிற்காக சட்ட எரிப்பு போரட்டத்தில் உயிர்நீத்த, சிறைசென்ற போராளிகள் 60 ஆம் ஆண்டு நினைவும் தமிழீழத் தலைவன் பிரபாகரன் 63 ஆவது பிறந்தநாள் நிகழ்வும் 26.11.17 காலை 10 மணியளவில்  வனத்தாம்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ஜெயரட்சகன், மாவட்ட செயலாளர் இராவண இராமன், மாவட்ட அமைப்பாளர் சிறீதர் நிவேதிதா, பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் தீனா,  பெலிக்ஸ், கிளை பொறுப்பாளர்கள் பாபு,  தமிழ், சிறீநாத், விசிக பொறுப்பாளர் தெய்வ நாயகம் மற்றும் அப்பகுதித் தோழர்கள் திரளாக பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30112017 இதழ்

மதுக்கூர் மைதீன் நினைவேந்தல்

மதுக்கூர் மைதீன் நினைவேந்தல்

10-11-2017 அன்று மாலை 6-00 மணியளவில், உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம், உயர்நீதி மன்றத்தில் தமிழ் – போராட்டக் குழு ஆகியவற்றின் சார்பாக, மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள இராமசுப்பு அரங்கத்தில், இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் தலைவர் மதுக்கூர் மைதீன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, உயர்நீதி மன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மீ.தா.பாண்டியனின் தலைமை யில் நடைபெற்றது. மதுக்கூர் மைதீன் படத்தை உயர்நீதி மன்றத்தில் தமிழ் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் கு.ஞா.பகத்சிங் திறந்து வைத்தார். இளந்தமிழகம் இயக்கத்தின் ரபீக் ராஜா, இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் துணைத் தலைவர் நத்தம் சேக் பரீத், மருது மக்கள் இயக்கத்தின் முத்துபாண்டி, தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் இமயம் சரவணன், வழக்குரைஞர் எழிலரசு உள்ளிட்ட பலரும் நினைவேந்தல் உரையாற்றினர். இறுதியாக உரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வளர்ந்துவரும் கூலிப்படை கலாச்சாரம், செய்தியை சேகரிக்காமல் காவல்துறையின் கருத்தையே...

குடியாத்தத்தில் அம்பேத்கர்-பெரியார்  கருத்தரங்கம்

குடியாத்தத்தில் அம்பேத்கர்-பெரியார் கருத்தரங்கம்

12-11-2017 ஞாயிறு அன்று மாலை 6.00 மணி யளவில், குடியாத்தம் அம்பேத்கர் மண்டபத்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், அம்பேத்கர்-பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் ஆசிரியர் அருணிடம் பயிற்சி பெற்ற மாணவர்களின் பறை முழக்கம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பெரியாரிய விழுது யாழினி உள்ளிட்ட பலரும், வேலூர் கற்பி பாசறை பாலா, வழக்குரைஞர் அருண், பரப்புரை செயலர் பால் பிரபாகரன் ஆகியோரும் உரையாற்றினர். கழகத் தோழர்களின் “இப்பெல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க” என்ற வீதிநாடகம் நிகழ்த்தப்பட்டது. இந்து மதவெறி துறைத் தலைவரின் ஜாதியப் பாகுபாட்டு வன்முறை காரணமாக, தன் வாழ்வை முடித்துக் கொண்ட, வேலூரைச் சேர்ந்த சென்னை, கவின்கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் (எ) பிரகாசின் படத்தை, பள்ளிகொண்டா தளபதி கிருஷ்ணசாமியுடன் பணியாற்றிய பெரியவர் மோகன்  திறந்துவைத்தார். “பெரியாரின் ஜாதி ஒழிப்புப் பணிகள்” என்ற தலைப்பில் உரையாற்றிய நீலப் புலிகள் இயக்கத் தலைவர் பேராசிரியர் டி.எம்.புரட்சிமணி, பெரியார்...

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடையாதாம்!

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடையாதாம்!

டிசம்பர் 1ஆம் தேதி நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் தோழர்கள் மக்களிடம் விளக்கிப் பேசுவதற்கான சில குறிப்புகள். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 85 இலட்சத்துக்கும் அதிகம். ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் குறைந்த ஊதியத்தில் பணி நிரந்தரமின்றி எந்த நேரத்திலும் வேலை இழக்கும் ஆபத்துகளை தலை மேல் சுமந்து நிற்கும் இளைஞர்கள் பல இலட்சம். வளர்ச்சி நோக்கிய திட்டங்கள், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கும் தொழில் திட்டங்கள் குறித்து தமிழக ஆட்சி யாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. தமிழ்நாட்டில் நடக்கும் ‘கொத்தடிமை ஆட்சியை’, மத்திய பா.ஜ.க. ஆட்சி மிரட்டி, தமிழகத்தில் தேர்தலை சந்திக்காமலேயே பினாமி ஆட்சியை நடத்தி வருகிறது. மத்திய அரசில் பிரதமர் அலுவலகத்திலிருந்தும் ஏனைய துறைகளிலிருந்தும் பா.ஜ.க.வின் நம்பிக்கைப் பெற்ற உயர் அதிகாரிகள் தமிழகத்தின் மிக முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அண்மையில் மத்திய அரசின் ‘ஆயுஷ்’ அமைச்சக அதிகாரியாக பணியாற்றிய ஓடெம்டே என்பவர், தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு,...

பெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார் சூலூர் கூட்டத்தில் உடுமலை கவுசல்யா பேச்சு

எனக்கு உரிமை படைத்த மேடையில் நிற்கும் உணர்வு எனக்கு இங்கே அதிகமாகக் கிடைக்கிறது. இந்த மேடை என்று சொல்வது திராவிடர் விடுதலைக் கழகம் என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல. சாதி ஒழிப்புக்காக தூய உள்ளத்தோடு உழைக்கிறவர் களான அதுவும் கருஞ்சட்டைகளோடு நிற்கையில் கர்ப்பப்பைக்குள் நிற்பதாகவே உணர முடிகிறது. ஆம் இது எனக்கான இடம், நீங்கள் என் சொந்தங்கள் என்ற உணர்வு இயல்பாகவே வந்து விடுகிறது. சாதியைப் பாதுகாக்கும் ஐந்து சட்ட விதிகளை பெரியார் கொளுத்திய நாள் இன்று! அதன் வரலாறு , அடக்குமுறை, வீரச்சாவுகள் குறித்தெல்லாம் எனக்குப் பின்னால் தோழர்  கொளத்தூர் மணி அவர்கள் பேச இருக்கிறார். நான் புதிதாகக் கற்கத்  தொடங்கியுள்ள மாணவிதான். நானும் கற்கத்தான் இங்கே வந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த சில செய்திகளை கீற்று போன்ற இணையத்தில் படித்து கிடைத்த புரிதல்களை மட்டும் இங்கே முன் வைக்க விரும்புகிறேன். பெரியார் ஆணைக்கிணங்க சட்டத்தைக் கொளுத்திய 16 வயதே  நிரம்பிய சிறுவன்...

நவம்பர் 26இல் ஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரித்து சிறையேகிய போராளிகள் நினைவு நாள் சூலூரில் சூளுரைத்தது கழகம்

1957 நவம்பர் 26இல் தமிழ்நாடு முழுதும் அரசியல் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை எரித்து 6மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறையேகிய பெரியார் இயக்கத்தின் போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்து சூலூரில் கழகம் பொதுக் கூட்டம் நடத்தியது. போராட்ட வரலாறுகளை கழகத் தலைவர் கொளத்தூர் மணி விரிவாக விளக்கினார். ஜாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தொடர கழகம் சூளுரைத்தது. கோவை மாவட்டம் சூலூரில் 26.11.2017 அன்று ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரித்த ஜாதி ஒழிப்பு வீரர்கள் நினைவைப் போற்றும் வகையில் மாலை 6.00 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகப் பொதுக்கூட்டம் தொடங்கியது. சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில், சட்ட எரிப்பு போராளி ஆனைமலை ஏ.கே. ஆறுமுகம் முன்னிலையில் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மேட்டூர் டிகேஆர் பகுத்தறிவு இசைக்குழுவின் பகுத்தறிவு பறையிசையைத்  தொடர்ந்து, சட்ட எரிப்பு நாள் வீரர்களை நினைவு கூர்ந்து திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில் ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி,...

நன்கொடை

நன்கொடை

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, ‘நிமிர்வோம்’ இதழுக்கு ரூ.2000மும், ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு ரூ.1000மும் நன்கொடை வழங்கினர். பெண்ணாகரம் பரமசிவம் ரூ.500/- ‘நிமிர்வோம்’ இதழுக்கு வழங்கினார். பாரூக் வழக்கு நிதி : சேலம் கிழக்கு மாவட்டத்தில் நடந்த தோழர்கள் சந்திப்பின் போது ஏற்காடு  பெருமாள் பிரபாகரன்,  பாரூக் குடும்ப நிதியாக 10,000/-வழங்கினார்கள். (நன்றியுடன் பெற்றுக் கொண் டோம்-ஆர்) பெரியார் முழக்கம் 23112017 இதழ்

கோகுல்-பிரேமா இணையேற்பு விழா

கோகுல்-பிரேமா இணையேற்பு விழா

12-11-2017 அன்று காலை 11-00 மணிக்கு, சேலம், சிவதாபுரம் மாணிக்கம் திருமண மண்டபத்தில், தோழர் கோகுலக் கண்ணனுக்கும், கழகப் பொறுப்பாளர் ஏற்காடு பெருமாளின் அக்கா மகள் பிரேமாவுக்கும், ஜாதி, தாலி, சடங்கு மறுப்பு இணையேற்பு விழாவை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வீரபாண்டி ஆ. இராசா தலைமையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்திவைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கில் கழகத் தோழர்கள் அரங்கு நிரம்பி வழியும் வண்ணம் திரளாகத் திரண் டிருந்தனர். விழா நிறைவில் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. இளம்பிள்ளை கழகத் தோழர்கள் மணவிழாப் பரிசாக ஒரு மோட்டார்  சைக்கிளை வழங்கினர். கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு மணமகன் கோகுலக்கண்ணன் ரூ.10,000/- நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் 23112017 இதழ்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை இலங்கையை ஒற்றையாட்சியாக்கிட சர்வதேச சதி

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை இலங்கையை ஒற்றையாட்சியாக்கிட சர்வதேச சதி

‘அறிவாயுதம்’ அமைப்பின் சார்பில் நவ.18 ஆம் தேதி தியாகராயர் நகர் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் “இனஅழிப்பை சட்டப்பூர்வ மாக்கும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. புகழூர் விசுவநாதன் தலைமை தாங்கினார். வைகோ, மணியரசன், வேல்முருகன், கவிஞர் காசி ஆனந்தன், ஆய்வாளர் திருநாவுக்கரசு, கா.அய்யநாதன், பேராசிரியர் ஜெயராமன், இராமு மணிவண்ணன், இயக்குனர் கவுதமன், தனியரசு எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலரும் பேசினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசுகையில் குறிப்பிட்டதாவது: ஒவ்வொரு முறையும் இலங்கைப் பேரினவாத அரசு, தன் மீதான சர்வதேச அழுத்தங்கள் வரும் போதெல்லாம் உலக நாடுகளில் கவனத்தை திசை திருப்பு ஒப்பந்தங்கள், சட்டத் திருத்தங்கள் கொண்டு வருவதும், பிறகுஅவற்றைக் குப்பைக் கூடையில் வீசுவதும் வழக்கமாகிவிட்டது. இப்போது இலங்கை அரசு அதன் புதிய அரசியலமைப்பில் கொண்டு வரப்பட இருக்கும் மாற்றங்களை முன்மொழிந் திருக்கிறது. இனி எதிர்காலங்களில் ஈழத் தமிழர் தேசிய இனம் தங்களின் அடையாளம் மற்றும்...

மேட்டூர் தோழர் சுகுமார் முடிவெய்தினார்

மேட்டூர் தோழர் சுகுமார் முடிவெய்தினார்

மேட்டூர் ஆர்.எஸ். பகுதியைச் சார்ந்த கழகத் தோழர் சுகுமார், 13.11.2017 மாலை முடிவெய்தினார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல்நலமின்றி இருந்தார். தனது இறுதி நிகழ்வை சடங்குகள் இல்லாமல் நடத்த வேண்டும் என்றும் இயக்கத்தின் சீருடையான நீல நிற ஜீன்ஸ், கருப்புச் சட்டை அணிவிக்க வேண்டும் என்றும், தோழர்களே தனது இறுதி நிகழ்வை நடத்த வேண்டும் என்றும் குடும்பத் தினரிடம் தனது இறுதி விருப்பத்தைத் தெரிவித்து இருக்கிறார். அதன்படியே அக்குடும்பத்தினரும் அவரது இறுதி நிகழ்வை நடத்தினர்.ஒரு பெரியார் தொண்டன் கம்பீரமாய் விடைபெற்றார். இயக்கமே குடும்பமாய் நின்று வீர வணக்கம் செலுத்தியது. கழக மகளிர் அவரது உடலை இடுகாடு வரை சுமந்து வந்தனர். கழகத் தலைவர் உள்ளிட்ட ஏராள மான தோழர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 23112017 இதழ்

இந்து – ஜாதிவெறி பேராசிரியரின் துன்புறுத்தலுக்கு பலியானார்  தலித் மாணவர் பிரகாஷ்

இந்து – ஜாதிவெறி பேராசிரியரின் துன்புறுத்தலுக்கு பலியானார் தலித் மாணவர் பிரகாஷ்

சில நாட்களுக்கு முன்னர், தனது துறைத் தலைவரின் ஜாதி, மத வெறுப்புப் பாகுபாட்டு நடவடிக்கைகளால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட சென்னை கவின்கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷின் இல்லத்துக்கு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எவிடென்ஸ் கதிர், வேலூர் ஆவணப்பட இயக்குநர் பாலா, குடியாத்தம் சிவா, கழகத்  தோழர்கள் ஆகியோருடன் சென்று, மாணவரின் குடும்பத்தினரை சந்தித்தார். கல்லூரியில் துறைத் தலைவராய் இருந்த இரவிக்குமார் என்பவர், சிறந்த கலைஞனாயும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாய் சிறந்த மாணவருக்கான விருதினைப் பெற்றுவந்த மாணவர் பிரகாஷை, அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்பதையும், பிறப்பால் இந்துவான மாணவர் கிருத்துவ மாதா கோவிலுக்கு சென்று வழிபடுகிறார் என்பதையும் அறிந்தவுடன் தொடர்ச்சியாக கேவலமாக வகுப்பறையில் மிகவும் இழிவுபடுத்தி வந்துள்ளார். இதனைப் பலமுறை கல்லூரி முதலவரிடம் தனியேயும், மாணவர்களுடனும், பெற்றோரை உடன் அழைத்துச் சென்றும் புகார் கூறியும் கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொடுமைப்படுத்துதல் தான் அதிகரித்துள்ளது. அதனால் மனமுடைந்த மாணவர் பிரகாஷ், வீடியோவிலும்,...

தமிழர் தேசிய அடையாளத்தை முற்றாக ஒழிக்கும் இலங்கையில் புதிய அரசியல் சட்டம்

தமிழர் தேசிய அடையாளத்தை முற்றாக ஒழிக்கும் இலங்கையில் புதிய அரசியல் சட்டம்

எந்த ஒரு சட்டமும் நியாய மதிப்பீட்டிற்கு (கூநளவ வடி குயசைநேளள) உட்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பது உலக வரைமுறை. அதாவது நியாய மதிப்பீடுகள் காலப் போக்கில் மாற்றம் பெறலாம். அதற்கேற்ப சட்டத்தில் மாற்றம் செய்யும் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டதாக சட்டம் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் ஆப்ரிக்க இன மக்களை அடிமைகளாக வைத்துக் கொள்வதை சட்டம் அனுமதித்தது. அங்கீகரித்தது. அடிமைத்தனம் சட்டப் பூர்வமானதாக இருந்தது. ஆனால் காலப் போக்கில் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட்டது. அடிமைத் தனம் அநாகரிகமானது என்பதை மக்கள் உணர்ந் தனர். அது மனித உரிமைகளுக்கு எதிரானது என்பதை புரிந்துக் கொண்டனர். அதற்கேற்ப அமெரிக்க சட்டத்தி லும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அடிமைத் தனத்தை சட்ட விரோதமாகவும் சமத்துவத்தை வலியுறுத்தியும் பல சட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதுதான் நியாய மதிப்பீடு என்று வழங்கப்படுகிறது. ஆக இந்த நெகிழ்வுத்தன்மை எந்தவொரு சட்டத்திலேனும் மறுக்கப்படுமானால் அது உலக சட்ட வரையறைகளுக்கே...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க உதவுங்கள் : சோனியாவுக்கு நீதிபதி கே.டி.தாமஸ் உருக்கமான கடிதம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க உதவுங்கள் : சோனியாவுக்கு நீதிபதி கே.டி.தாமஸ் உருக்கமான கடிதம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு தூக்குத் தண்டனை விதித்து உச்சநீதிமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி கே.டி.தாமஸ், காங்கிரஸ் தலைவரும் ராஜிவ் காந்தி மனைவியுமான சோனியாவுக்கு அக்டோபர் 18ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். 1991ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கில் சிறைப் படுத்தப்பட்டுள்ளோரின் தண்டனை குறைப்புக்கு பரந்த உள்ளத்தோடு, சோனியா தனது சம்மத்தை தெரிவிக்க முன்வர வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுள்ளார். அவரது கடிதத்தின் விவரம்: “2014ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, ராஜிவ் கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருக்கும் 7 பேருக்கும் தண்டனைக் குறைப்பு வழங்க தமிழ்நாடு அரசு முன் வந்தபோது மத்திய அரசு எதிர்த்தது. அந்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நீங்களும் ராகுல் காந்தியும், வாய்ப்பிருந்தால் பிரியங்காவும் குடியரசுத் தலைவருக்கு தண்டனைக் குறைப்பு வழங்கலாம் என்று உங்கள் சம்மதத்தை தெரிவித்து ஒரு கடிதம் எழுதுவீர்களே யானால், மத்திய அரசு,...

தமிழக வேலை வாய்ப்புகளை வடநாட்டுக்கு ‘தாரை வார்க்க’ சதி! தமிழ்நாடு தேர்வாணையத்தின் அதிர்ச்சி அறிவிப்பு

தமிழக வேலை வாய்ப்புகளை வடநாட்டுக்கு ‘தாரை வார்க்க’ சதி! தமிழ்நாடு தேர்வாணையத்தின் அதிர்ச்சி அறிவிப்பு

தமிழ்நாட்டில் மாநில அரசுப் பணிகளுக்கு 9,351 பேர் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 2018 பிப்ரவரியில் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 07.11.2016 அன்று திருத்தப்பட்ட தேர்வாணைய விதிமுறைகளின்படி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 2016இல் செய்த திருத்தம், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்; நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது. இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என சலுகை வழங்குகிறது, தமிழ்நாடு அரசு! நேரடியாக 31 விழுக்காட்டுப் பொதுப்பட்டியலில் உள்ள பணியிடங்களை பிற மாநிலங்கள் மற்றும் பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்ள வாய்ப்பளிக்கிறது தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு! அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் பட்டியலிலும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்...

இணையதள பயன்பாட்டாளர்கள் கலந்துரையாடல்

இணையதள பயன்பாட்டாளர்கள் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்டத்தின் இணையதள பயன் பாட்டாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 14.10.2017மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கழக இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், தோழர்களிடம் இணைய தளத்தின் பயன்கள்,  தோழர்களின் சந்தேகங்களுக்கு விரிவான விளக்கத்தை யும், திவிக இணையதளத்தின் முழு பயன் பாடுகள் குறித்தும் விளக்கி கூறினார். பெரியார் முழக்கம் 16112017 இதழ்

சித்தோட்டில் பெரியார் பிறந்த நாள் கூட்டம்

சித்தோட்டில் பெரியார் பிறந்த நாள் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்டம், சித்தோடு கிளை, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 01.10.2017 மாலை 6 மணிக்கு சித்தோடு சாணார்பாளையத்தில் பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் விழா. பிரபாகரன் தலைமையில், யாழ் எழிலன் முன்னிலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. காவை இளவரசனின் மந்திரமல்ல தந்திரமே நிகழ்வைத் தொடர்ந்து சித்தோடு முருகேசன் பகுத்தறிவு பாடல்கள் பாடினார். இறுதியாக தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரை நிகழ்த்தினார். கமலக் கண்ணன் நன்றி கூறினார். சித்தோடு பிரபு, கதிர், நடராஜன், சத்தியராஜ், ராஜேஷ், சவுந்தர், ஆசீர்வாதம், ரங்கம்பாளையம் விஜயரத்தினம், கிருஷ்ணன், மணி மேகலை, மகிழன், மதி , காவலாண்டியூர் சந்தோஷ், சதீஸ், ரமேஸ்,  மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியன், கோபி தியாகு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரியார் முழக்கம் 16112017 இதழ்

தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர் பொறியாளர் அம்புரோஸ் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழக தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பொறியாளர்.அம்புரோஸ், சாலை விபத்தில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மரணம் அடைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் உடல் அடக்கம் அக்டோபர் 27ஆம் தேதி காலை புதுக்கோட்டையிலுள்ள அவர் இல்லம் அருகில் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம், குமரி மாவட்ட செயலாளர் தமிழ்மதி, மாவட்ட அமைப்பாளர் நீதியரசர், முன்னாள் மாவட்ட தலைவர் சூசையப்பா, திருநெல்வேலி மாவட்ட தலைவர் பால்வண்ணன், மாவட்ட அமைப்பாளர் அன்பரசு, தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப் பாளர் தமிழ்செல்வம், கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் மாசிலாமணி, செயலாளர் சுப்பையா, பொருளாளர் சங்கர், ஆதி தமிழர் பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் அருந்ததியராசு, நெல்லை கலைக் கண்ணன், விடுதலை சிறுத்தைகள் தென்மண்டல செயலாளர் சே.சு.தமிழ் இனியன்,...

பேரா. நன்னன் ‘நிமிர்வோம்’ இதழுக்கு வழங்கிய இறுதி பேட்டி

பேரா. நன்னன் ‘நிமிர்வோம்’ இதழுக்கு வழங்கிய இறுதி பேட்டி

“முதுமை தளர்வுடன் இருந்தாலும் மூளை 24 மணி நேரமும் பெரியாரையும் மொழியையும் அசை போட்டே இருக்கிறது”   பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நன்னன் தனது 94ஆம்அகவையில் கடந்த 7.11.2017 அன்று சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். அவரது உடலில் கருஞ்சட்டை அணிவிக்கப்பட்டிருந்தது. கழக சார்பில் கழகப் பொறுப்பாளர்கள் தபசி குமரன், அன்பு தனசேகர், வேழவேந்தன், உமாபதி, அய்யனார், செந்தில்குமார், துரைராசு, ராஜூ, குகன் உள்ளிட்ட தோழர்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். கழகத்தின் ‘நிமிர்வோம்’ மாத இதழ் கடந்த பிப்ரவரி மாதம் அவரது நேர்காணலை பதிவு செய்தது. இதுவே அவரது இறுதி நேர்காணலாகவும் அமைந்துவிட்டது. பேராசிரியர் நன்னன் அவர்களின் முழுமையான ‘தன் வரலாறாக’ வெளி வந்திருந்த நேர்காணலிலிருந்து சில பகுதிகளை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இங்கே பதிவு செய்கிறது. பெரியாருடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது? அன்றைக்கு மாயவரம் (மயிலாடுதுறை) அருகே உள்ள வடகரை எனும் முஸ்லிம்கள் அதிகம்...

ஆதித் தமிழர் பேரவை நடத்திய தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம்

தீபாவளி பண்டிகை என்பது தமிழர்களின் துக்கநாள் என்று அறிவித்த துணிவு , தந்தை பெரியார் ஒருவருக்கே இருந்தது, அதை பின்பற்றி ஆதித்தமிழர் பேரவை கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளியை புறக்கணித்து மக்களிடையே தொடர் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஆதரவாகக் குரல் தந்த ஒத்த கருத்துடைய ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து கருத்தரங்கம் ஒன்றை ஆதித் தமிழர் பேரவை ஈரோட்டில் அக்.18ஆம் தேதி ‘தீபாவளி’ நாளில் நடத்தியது. ‘தீபாவளி’யை தமிழர்கள் புறக்கணிக்க இந்த கருத்தரங்கம் வேண்டுகோள் விடுத்தது. சாதிவெறி, மதவெறி, ஆதிக்க தலித் வெறி, அடிப்படை மதவெறி, ஆணவப் படுகொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள், கருத்துரிமை பறிப்பு, கல்வி உரிமை சிதைவு, மாநில உரிமை மறுப்பு என நீளும் பார்ப்பனிய பயங்கரவாதத்தால் நாட்டை மீண்டும் மனுவின் கொடுங்கோலுக்கு அழைத்துச் சென்று, ஒரே நாடு, ஒரே மொழி, ஒற்றை கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நடைமுறைப்படுத்தி, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய ஒன்றியத்தின் அரசியல்...

இந்து மக்கள் கட்சியின் ‘நேர்மை’

இந்து மக்கள் கட்சியின் ‘நேர்மை’

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). தொழில் அதிபரான இவர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், “ இந்து மக்கள் கட்சி (அர்ஜூன் சம்பத் பிரிவு) மாநில இளைஞர் அணி செயலாளர் பாலச்சந்தர் (27) என்பவர் தன்னை மிரட்டி அடிக்கடி பணம் கேட்டு தொல்லைக் கொடுப்பதாகவும், தனது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய அதிகாரி சகாதேவன் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தார். பாலசந்தர் கைது செய்யப்பட்டார். காவல் நிலைய விசாரணை யில், பாலசந்தர் ஏற்கனவே பல பொய் புகார்கள் கொடுத்து காவல் நிலையத்துக்கு தொல்லை கொடுத்தாக தெரிய வந்தது. இந்து மக்கள் மக்கள் கட்சி அலுவலகம் முன்பு மாட்டு தலையைப் போட்டு நாடகம் ஆடி யதும் இவர்தான் என்று கண்டுபிடிக்கப் பட்டது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பாலசந்தர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல்...

பெரியார் தொண்டரின் நேர்மை

தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியில் உள்ள 5.75 இலட்சம் பணத்தை இரயில்வே நிர்வாகத் திடம் பொய்யாமொழி என்ற கூலித் தொழிலாளி ஒப்படைத்தார். அவரின் செயலை இரயில்வே நிர்வாகம் பாராட்டியிருக்கிறது. சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார். இவர் கடந்த 1ஆம் தேதி சேலம் விரைவு இரயிலில் சென்னை வந்தபோது அவர் கொண்டுவந்த பையில் 10.75 இலட்சம் ரூபாயை பையுடன் தவறவிட்டார். சென்னை எழும்பூர் சென்றதும் கொண்டுவந்த பெட்டியில் பணம் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து எழும்பூர் இரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் இரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் உள்ள பணத்தை எடுத்த பொய்யாமொழி போலீஸில் ஒப்படைத்தார். 10.75 இலட்சரூபாயில் 5.75 இலட்சம் மட்டுமே இருந்த காரணத்தால், இரயில்வே போலீஸார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அப்போது வேறு ஒரு மர்மநபர் ஒருவர்...

தலையங்கம் உச்சநீதிமன்றத்தின் ‘அதிகார நீதி’

தலையங்கம் உச்சநீதிமன்றத்தின் ‘அதிகார நீதி’

இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையாக உச்சநீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்ட சூழல் அண்மைக் காலமாக உருவாகியுள்ளது. அதனால் உச்சநீதிமன்றம் விவாதங்களுக்கு அப்பாற்பட்டநேர்மையான அமைப்பாக செயல்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. ஆனால் என்ன நடக்கிறது? இப்போது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள்மீது இலஞ்சப் புகார் குற்றச் சாட்டுகள் வரத் தொடங்கியிருக்கின்றன. ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த ஒரு கல்வி அறக்கட்டளை – மருத்துவக் கல்லூரி தொடங்க மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி கேட்டது. மருத்துவக் கவுன்சில் மறுக்கவே நீதிமன்றத்தை நாடியது அந்த அறக்கட்டளை. நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற நீதிபதிகளுக்கு இலஞ்சம் பெற்றுத் தரும் விஸ்வநாத் அகர்வால் என்ற இடைத்தரகரை நாடியது. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தருவதாக உறுதி கூறிய அந்த தரகர், அதற்கு நீதிபதிகளுக்கு கொடுப்பதாகக் கூறி பெரும் தொகையை இலஞ்சமாகப் பெற்றார். இது குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி பெரும் தொகை இலஞ்சமாக பெற்றதை உறுதி...

ஒரு முதல்வருக்கான எல்லைக்குள் கலைஞர் போராடினார்

தமிழகத்தில் சாதி – மதப் பதற்றமற்ற சமூகச் சூழலை, சமூக அமைதியை உருவாக்குவதில் தொடர்ந்து பங்காற்றி வரும் பெரியாரிய அமைப்புகளைத் தேவைப்படும்போதெல்லாம் நேரடியாகவே பயன்படுத்திக் கொள்வது கலைஞரின் இயல்பு. இந்த உறவு தமிழகத்தின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் எப்படிப் பங்களிக்கிறது என்று விவரித்தார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. ‘தமிழ் இந்து’வின் ‘தமிழ் திசை’ குழுமம் வெளியிட்ட ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ மலருக்கு அளித்த பேட்டி. பெரியாரிய அமைப்புகளைத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்கள் எப்படி பயன்படுத்திக் கொண்டார்கள்? நேரடியான உறவு என்பதைக் காட்டிலும், கொள்கை அடிப்படையிலான பரஸ்பரமரியாதை சார்ந்த உறவு என்று இதைக் குறிப்பிடலாம். ஒரு இடத்தில் பொருளாதார முன்னேற்றம் நடக்க வேண்டும், தொழில் வளர்ச்சி வேண்டும் என்றால், முதலில் அங்கு சமூக நல்லிணக்கம் வேண்டும். அதேபோல், சமூகத்தில் புரட்சிகரமான செயல் திட்டங்களை அரசாங்கம் கொண்டுவர முனையும்போது அதற்கேற்ற கருத்துச் சூழல் சமூகத்தில் உருவாகியிருக்க வேண்டும். திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்கள்...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி பெரியார் கனவை நினைவாக்கினோம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெருமிதம்

கேரள கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் பெரியாரின் கனவு நிறைவேறியிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமையுடன் கூறினார். மதுரையில் 3 நாட்கள் நடந்த தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு முன்னணியின் அகில இந்திய மாநாட்டின் நிறைவாக நவம்பர் 6ஆம் தேதி எழுச்சிமிகு பேரணி – பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கேரள முதல்வர் பேசியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதிய ரீதியிலான ஒடுக்கு முறை தலித்துகளுக்கு எதிராக நடந்து வருகிறது. பண்டைக்காலம் முதல் பல்வேறு வடிவங்களில் நடந்துவரும் ஒடுக்குமுறையை சகித்துக் கொண்டிருக்க முடியாது. சாதியத்தை தூக்கிப் பிடிக்கும் ஆர்எஸ்எஸ் தலைமையின் கீழ் உள்ள பாஜக அரசு இந்தஒடுக்குமுறை நீடிக்க வேண்டும் என விரும்புகிறது. அதன் காரணமாக நாடு முழுவதும் இந்தஒடுக்குமுறை தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலித் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்பியவர்கள் உண்டு. ஆனால் அவர்களால் தலித்மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற முடியவில்லை. ஆர்எஸ்எஸ் தலைமை...

எச்சரிக்கின்றன ஆய்வுகள் மரபணு நோய்களை உருவாக்குகின்றன ஒரே ஜாதித் திருமணங்கள்

எச்சரிக்கின்றன ஆய்வுகள் மரபணு நோய்களை உருவாக்குகின்றன ஒரே ஜாதித் திருமணங்கள்

சமீபத்தில் இந்திய மற்றும் அமெரிக்க மரபணு ஆய்வாளர்கள் ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகச் சொந்த சாதிக்குள்ளே திருமணம் செய்யும் போக்கின் விளைவாகப் பல சமூகங்களிடையே பல்வேறு மரபணு பரம்பரை நோய்கள் பல்கிப் பெருகியுள்ளன என்று அந்த ஆய்வு எச்சரிக்கை செய்கிறது. குறிப்பிட்ட சாதிச் சமூகத்தில் மரபணு சார்ந்த பரம்பரை நோய்கள் இயல்பைவிட கூடுதலாக இருக்கின்றன எனவும் உள்ளபடியே அகமண உறவு காரணமாகவே இவை உரு வாயின எனவும் ஹைதராபாதில் உள்ள சி.சி.எம்.பி. ஆய்வு நிறுவனத்தைச் சார்ந்த ஆய்வளர்கள் நிறுவியுள்ளனர். சாதி என்பது சமூக நோய் மட்டுமல்ல சமூகத்தில் மரபணு நோயையும் கூடுதலாக்கிப் பொதுச் சுகாதார ஆபத்தையும் ஏற்படுத்துகிறது என்று சுட்டு கிறது இந்த ஆய்வு. நெருங்கிய உறவு முறைக்குள் திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தைக்கு ஏற்படும் மரபியல் நோய் ஆபத்து குறித்து நாம் ஏற்கெனவே அறிவோம். இந்த ஆய்வு, சாதிக்குள் நடக்கும் அகமண திருமணமும் இவ்வாறே மரபியல் நோய்களை...

‘செயற்கை அறிவூட்டல்’ எனும் அறிவியல் புரட்சி

‘செயற்கை அறிவூட்டல்’ எனும் அறிவியல் புரட்சி

இயந்திரங்களுக்கு ஊட்டப்படும் செயற்கையான அறிவானது, மனிதர்களே இனி இந்த வேலைகளுக்குத் தேவையில்லை என்ற அளவுக்குச் செயல்படும் நிலையை ‘சூப்பர்-இன்டலிஜென்ஸ்’ எனலாம். பல ஆண்டுகளாக விவாதிக்கப்படும் இந்தக் கருப்பொருள், சமீபத்தில் சமூக வலைதளத்தில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க், ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் இடையில் சச்சரவை ஏற்படுத்தி விட்டது. “செயற்கை அறிவாற்றலை உருவாக்குவதில் முன்னேற்றம் ஏற்படுவது நல்லது, அது கார் விபத்துகளையும், நோய் ஏற்படுவதையும் தடுத்துவிடும்” என்றார் ஸக்கர்பெர்க். “செயற்கை அறிவாற்றலை முறைப்படுத்தத் தவறினால் பூமியை இயந்திரங்களே தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளக்கூடிய அழிவுக் காலம் ஆரம்பித்து விடலாம்” என்று மஸ்க் எச்சரித்தார். செயற்கை அறிவு தொடர்பாக அறிவியல் புனை கதைகளில் சாத்தியம் இருப்பதாக எழுதப்பட்டதைத் தவிர, இந்த விவாதத்துக்கு முன்னோடியாக வரலாறு ஏதும் உண்டா? சிலிக்கான் பள்ளத்தாக்கு ஜாம்பவான்களான மஸ்க் முதல் பில் கேட்ஸ் மற்றும் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்டோர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தத்துவ...

சென்னை தோழர்களின் இரண்டாம் கட்ட பரப்புரை: மக்கள் பேராதரவு

சென்னை தோழர்களின் இரண்டாம் கட்ட பரப்புரை: மக்கள் பேராதரவு

இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித் தன்மை காப்போம்; சமூக நீதி சமத்துவப் பரப்புரைப் பயணம், சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 23.9.2017 முதல் 28.9.2017 வரை நடைபெற்றது. ஒரு நாளைக்கு நான்கு இடங்களில் என்று நான்கு நாள் இந்த பரப்புரை நடைபெற்றது. 23.9.2017 அன்று காலை 10 மணியளவில் குமணன்சாவடி நிறுத்தம் அருகில் துவக்கப்பட்ட பரப்புரைப் பயணத்தில் பயண துண்டறிக்கை வழங்கிய தோழர்களிடம் சிறீதர் என்பவர் இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கிக் கொடுத்தார். சென்னை மொபைல் நிறுவனம் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் தோழர்களுக்கு வழங்கினர். பிரகாசு என்பவர் ரூ.500 நன்கொடை வழங்கியதோடு, தங்கள் பகுதியில் பரப்புரை செய்தால் அதற்கான செலவை நானே ஏற்றுக் கொள்வதாக கூறினார். இதனைத் தொடர்ந்து காலை 11.30 மணியளவில் போரூர் நான்கு முனை சாலையில் பரப்புரை  நடைபெற்றது. அங்கு நடைபெற்ற பரப்புரையைப் பார்த்தப் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் ரூ.500 நன்...

நீதிமன்றங்கள் கொசுக்களையும் ஒழிக்குமா?

நீதிமன்றங்கள் கொசுக்களையும் ஒழிக்குமா?

நீதிமன்றத்தில் வந்த கொசு வழக்கு!உச்சநீதிமன்றம் என்றாலே ‘உச்சிக்குடுமி’ மன்றம் தான் என்று தமிழ்நாட்டில் பாமர மக்கள் கூட கூறுவது வழக்கம். அந்த உச்சநீதிமன்றம் தலையிடாத பிரச்சினையே இல்லை என்ற நிலை வந்து விட்டது.  நாடாளுமன்றத்தையே கலைத்துவிட்டு நீதிபதிகளை மட்டும் தேர்தலில் போட்டியிட வைத்து அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர்களே நீதிபதி களாகலாம் என்ற முறை வந்து தொலைந்தால்கூட வரவேற்கலாம் போலிருக்கிறது. ‘உச்சிக் குடுமி’ மன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தலித் நீதிபதிகூட இல்லை. ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டும் இருக்கிறார். அவரும் தமிழ்நாட்டிலிருந்து சென்ற பானுமதி என்பவர் தான், இப்போது தலைமை நீதிபதியாக இருக்கும் ஒரிசா பார்ப் பனர். அவரது குடும்பத்திலிருந்து வந்துள்ள மூன்றாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. ‘அவாளின்’ குடும்ப சொத்தாகி விட்டது. அண்மையில் இந்த உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு வந்தது; நீதிபதிகளை கடும் ஆத்திர மடையச் செய்த அந்த வழக்கை  எத்தனை பேர்...

தலையங்கம் அறிவியல் ‘கடவுள்’ தயாராகி விட்டார்!

தலையங்கம் அறிவியல் ‘கடவுள்’ தயாராகி விட்டார்!

மனிதர்கள் மூளை சிந்திக்கிறது; அந்த சிந்தனை தான் மனிதர்களையும் வாழ்க்கையையும் வழி நடத்தி வருகிறது. இந்த ‘மூளை’க்குள் மனித சமூகத்தை முன்னேற்றும் கருத்துகளும் மனித சமூகத்தை சீரழித்து பின்னுக்கு இழுத்துச் செல்லும் கருத்துகளும் பதிகின்றன. ஒரு மனிதன் சமூக வெளியிலிருந்து கண்களால், காதுகளால், பேச்சுகளால் பெறப்படும் கருத்துகளே மூளைக்குள் பதிவாகி அந்த மூளை அதன் வழியாக சிந்திக்கும் செயல்பாட்டை நிகழ்த்துகிறது. ‘வேதங்களை’ப் படித்து தங்களது மூளைக்குள் ஏற்றிக் கொண்டு அதை பிற மக்கள் கற்றுக் கொள்ளக் கூடாது என்று ‘எழுத்து வடிவத்தை’ நீண்டகாலத்துக்குத் தராமல் இருந்தார்கள் பார்ப்பனர்கள். ஏனைய மனிதப் பிறவிகளின் ‘மூளை’யை விட தங்கள் ‘மூளை’யே மேலானது; உயர்வானது. இது கடவுளால் தங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்று இன்று வரை கூறி வருகிறார்கள். அந்த ‘மூளை’யின் கற்பனையிலேயே கடவுள் உருவாக்கப் பட்டது; மதம் உருவாக்கப்பட்டது; மதத்தின் தத்துவங்கள் உருவாக்கப்பட்டன. ‘மனுதர்மம்’ என்ற மனித விரோத சட்டத்தை உருவாக்கியதும், ஹிட்லர், முசோலினி,...

இரயில்வே துறையை தனியார் மயமாக்க சதி!

இரயில்வே துறையை தனியார் மயமாக்க சதி!

இரயில்வே துறையை மத்திய அரசாங்கம் படிப்படியாகத் தனியாருக்குத் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதனைக் கண்டிக்கின்றோம். தனியாருக்குத் தாரை வார்க்கும் செயல்களை மத்தியஅரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளருமான தபன் சென் கூறினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் தபன் சென் பேசியதாவது: ‘‘இந்தியாவின் பிரதானப் போக்குவரத்து அமைப்பாகச் செயல்படும் ரயில்வே துறையை கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாகத் தனியாரிடம் தாரை வார்த்திட அரசாங்கம்எடுத்துவரும் நாசகாரக் கொள்கைகளுக்கு எதிராக என்னுடைய எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வேயில் துப்புரவுப் பணிகள், உணவு வழங்கும் பணிகள், நிர்வாகப் பணிகள் முதலானவை – அவுட்சோர்சிங் மூலமாகத் தனியாரிடம் தரப்பட்டு விட்டன. ஒவ்வோராண்டும் 150 இரயில் என்ஜின்கள் (லோகோமோடிவ்ஸ்) வாங்குவதற்கான உத்தரவாதத் துடன் அமெரிக்க நிறுவனமானஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடனும், பிரான்ஸ் நிறுவனமான அல்ஸ்டாம் நிறுவனத்துடனும்...

வேத பார்ப்பனியம் கட்டமைத்த ‘தேவதாசி’ முறை தொடரும் அவலம்

வேத பார்ப்பனியம் கட்டமைத்த ‘தேவதாசி’ முறை தொடரும் அவலம்

பெண்களை கோயில்களுக்கு அர்ப் பணிக்கும் தேவதாசி முறை இப்போதும் நீடிக்கிறது. இளம் பெண்களை கோயில் களுக்கு காணிக்கையாக்கி அவர்கள் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் அர்ச்சகர்கள், கோயிலுக்கு உரிமையாளர் களால் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தும் சமூகக் கொடுமையை பார்ப்பனியம் மதச் சடங்காக சமூகத்தில் திணித்திருந்தது. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி இந்த இழிவை ஒழிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவர் மேலவை உறுப்பினரானபோது இந்த இழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். பெரியார், முத்துலட்சுமியின் முயற்சிக்கு தீவிர ஆதரவு அளித்தார். இந்த மசோதா விவாதத்துக்கு வந்தபோது காங்கிரசிலிருந்த சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள், இந்துமத சடங்குகளில் அரசு குறிக்கிடக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெ ரிவித்தனர். இப்படி ‘தேவதாசி’களாக்கப்படு கிறவர்கள், ‘தேவதாசி’ குடும்பப் பெண்களாகவே இருந்தனர். சட்டத்தால் தடை செய்யப்பட்ட பிறகும் பெண்கள் மீது சுமத்தப்பட்ட இந்த கொடுமை ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்திலும் தமிழ்நாட்டில்...

ஆயுத பூஜையைக் கண்டித்து மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

ஆயுத பூஜையைக் கண்டித்து மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

27.09.2017 அன்று சேலம் மாவட்டம் மேட்டூரில் மத்திய மாநில அரசுகளின் நவோதயா பள்ளி திட்டம் அரசு பள்ளிகளில் யோகா வகுப்பு அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை இவைகளை  தடைசெய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார்  தலைமை உரைக்குப் பின் சி. கோவிந்தராஜ் (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.சக்திவேல்,  இரண்யா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் மேட்டூர் ஆர்.எஸ். காவேரி கிராஸ், நங்கவள்ளி, கொளத்தூர், தார்க்காடு, காவலாண்டியூர் தோழர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.குமரப்பா நன்றி உரை நிகழ்த்தினார். பெரியார் முழக்கம் 02112017 இதழ்

ரோகிங்யா முஸ்லிம்கள் உரிமை கோரி  காஞ்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

ரோகிங்யா முஸ்லிம்கள் உரிமை கோரி காஞ்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைத்த ரோகிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த கோரியும் இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்திருக்கும் அம்மக்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை கழகத் தோழர் ரவி பாரதி ஒருங்கிணைத்தார். தோழர்கள் டி.கன்னிவேல், பிரகாஷ், இராமசெயம், காஞ்சி அமுதன் (பாலாற்று பாதுகாப்பு கூட்டியக்கம்), மேகலா (மக்கள் மன்றம்), ஷாஜகான் (மனிதநேய மக்கள் கட்சி), செந்தமிழ்குமரன் (தமிழ்தேச மக்கள் கட்சி) ஆகிய தோழமை அமைப்பு தோழர்கள் உரையாற்றினர். ஏழுமலை நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 02112017 இதழ்

‘வந்தே மாதரம்’ சந்தித்த வழக்குகள்!

‘வந்தே மாதரம்’ சந்தித்த வழக்குகள்!

தேசியப் பாடலான வந்தே மாதரத்தை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாடுவதைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டிருக் கிறது, சென்னை உயர் நீதிமன்றம். அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம். 2013-ல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதிய வீரமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட உத்தரவு இது. வந்தே மாதரம் முதலில் எழுதப்பட்டது எந்த மொழியில் என்ற கேள்விக்கு வங்காளம், உருது, மராத்தி, சம்ஸ்கிருதம் ஆகிய நான்கு விடைகளில் வங்காள மொழியைத் தேர்ந்தெடுத்ததாகவும், ஆனால் சம்ஸ்கிருதம்தான் சரியான விடை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியதாகவும், அந்தக் கேள்விக்கு ஒரு மதிப்பெண் அளித்தால், தான் தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர் ஆகிவிட வாய்ப்புள்ளதாகவும் தனது மனுவில் வீரமணி குறிப்பிட்டிருந்தார். தவறான கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. ஆனால், இந்த வழக்கில்...

தலையங்கம்‘தேவ-அசுரப்’ போராட்டம் முடியவில்லை

தலையங்கம்‘தேவ-அசுரப்’ போராட்டம் முடியவில்லை

காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். இல்லை; அதற்கான சான்றுகளும் இல்லை என்று பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி விவாதங்களில் சாதிக்கிறார்கள். அவர் ஆர்.எஸ்.எஸ்.காரரா? அதில் உறுப்பினரா? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். கோட்சே ஒரு ‘சித்பவன்’ பார்ப்பனர்; அவரை காந்திக்கு எதிராக துப்பாக்கி தூக்க வைத்தது. அவரிடமிருந்த ‘இந்துத்துவம்’ என்ற அரசியல் மதவெறி என்பதை அவர்கள் மூடிமறைக்கப் பார்க்கிறார்கள். காந்தி கொலையில் தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சே, நாராயணன் ஆப்தே இருவருமே பார்ப்பனர்கள். “சங்பரிவார் குடும்பத்தில் வளர்ந்தவர்கள் நாங்கள்” என்று இந்தக் கொலையில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனையில் 15 ஆண்டுகாலம் கழித்து பிறகு விடுதலை செய்யப்பட்ட நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே வெளிப்படையாகவே கூறுகிறார். இப்போது உச்சநீதிமன்றத்தில் காந்தி கொலை குறித்து ஒரு வழக்கு – காந்தி கொலை நடந்து முடிந்து சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறது. மும்பையைச் சார்ந்த ‘அபினவ் பாரத்’ என்ற அமைப்பைச் சார்ந்த டாக்டர் பங்கஜ் பத்னிஸ் என்பவர் இந்த வழக்கை...

பெட்ரோலியக் கொள்ளையில்  பா.ஜ.க. அரசின் பங்கு!  பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன்

பெட்ரோலியக் கொள்ளையில் பா.ஜ.க. அரசின் பங்கு! பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன்

பெட்ரோலியப் பொருட்களின் விலை இந்தியச் சந்தையில் உயர்ந்து காணப்படுவதுடன் தொடர்ந்து உயர்ந்தும் வருகிறது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை முன்பு இருந்ததை விடக் குறைவாக இருந்தாலும் இங்கு அதீத விலைக்கு விற்கப்படுவதற்குக் காரணம் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் மிக அதிக அளவில் அவற்றின் மீது விதிக்கும் பல்வேறு வரிகளே. ரூ.21.50 அடக்க மாகும் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது வரி விதித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.70-80 வரை விலையை வசூலித்து அரசுகள் ஒரு மாபெரும் வரிக் கொள்ளையில் ஈடுபடுகின்றன என நாம் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தோம். பல ஊடகங்களும், ஊடக விவாதங்களும் இதனை எடுத்துக் கூறின. வலைத் தளங்களிலும் ஆளும் பா.ஜ.க. அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த விமர்சனங்களை எதிர்கொள்ளப் பா.ஜ.க.வினரும் அதன் ஆதரவாளர்களும் பல தந்திர வேலை களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் அப்படி ஈடுபடாவிட்டால் தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும். அந்தத் தந்திரங்களில் ஒன்று...

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் பணியில் அமர்த்து! தலைமைச் செயலகம் முற்றுகை! 150 பேர் கைது!

தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் வேத, ஆகம, வழிபாட்டு முறை ஆகியவற்றைக் கற்று, உரிய சமயத் தலைவர்களிடம் தீட்சையையும் பெற்ற 206 பேர் கடந்த பல ஆண்டுகளாக பணி அமர்த்தப்படாமல் காத்துக் கிடக்கின்றனர். அவர்களது நியமனத்துக்கு எதிராக ஆதி சைவ சிவாச்சாரிகள் நல சங்கம் என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 2015 டிசம்பரில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது. அந்த தீர்ப்புக்குப் பின்னர்தான், கேரள அரசு 6 தாழ்த்தப் பட்டோர் உள்பட 36 பார்ப்பனர் அல்லாதாரை தேவஸ்வம்போர்டு கோயில்களில் நியமித்து, அவர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிவிட்டார்கள். கேரள அரசைத் தொடர்ந்து கர்நாடக அரசும் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கப் போவதாக அறிவித்து விட்டது. இந்த நிலையில், தமிழகம்தான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 90 ஆண்டுகளாக பல்வேறு வழிகளில் வலியுறுத்தும் மாநிலமாக இருந்து வருகிறது. இனியும் தமிழக அரசு எவ்வித சலனமும் இன்றி அமைதி காக்கக்...

வெளி வந்துவிட்டது!   ‘நிமிர்வோம்’  அக்டோபர் இதழ்

வெளி வந்துவிட்டது! ‘நிமிர்வோம்’ அக்டோபர் இதழ்

பெரியார் காந்தியுடன் நடத்திய நேரடி விவாதம்= நீட் மருத்துவக் கல்வி தரத்தை உயர்த்தாது பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை நிறுத்தும் பார்ப்பனியம்! கடும் சரிவில் இந்திய பொருளாதாரம் முதலீட்டாளர்கள் ஓட்டம் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…             தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி, ‘நிமிர்வோம்’ மாத இதழ், 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363 பெரியார் முழக்கம் 26102017 இதழ்

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக தோழர்களை சந்திக்கிறார்கள்

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக தோழர்களை சந்திக்கிறார்கள்

தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாவட்ட வாரியாக கழகத் தோழர்களை கீழ்க்கண்ட பயணத் திட்டப்படி சந்திக்கிறார்கள். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ சந்தா திரட்டுதல், கழகக் கட்டமைப்பு நிதி திரட்டுதல் குறித்து கழகத் தோழர்களிடம் கலந்து பேசுகிறார்கள். சுற்றுப் பயண விவரம்: 26.10.2017 –       காலை 10.00 – ஈரோடு வடக்கு – ஈரோடு மாலை 5.00 – ஈரோடு தெற்கு  – கோபி 27.10.2017  – காலை 10.00 – சேலம் மேற்கு – மேட்டூர். மாலை 5.00 – கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி. 28.10.2017  – காலை 10.00 – தருமபுரி – தருமபுரி. மாலை 5.00 – சேலம் கிழக்கு – சேலம். 29.10.2017  – காலை 10.00 – நாமக்கல்-திருச்செங்கோடு. மாலை 5.00 – திருப்பூர் –...

கழக தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார் திருப்பூரை உலுக்கிய பெரியார் பிறந்தாள் வாகன பேரணி

கழக தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார் திருப்பூரை உலுக்கிய பெரியார் பிறந்தாள் வாகன பேரணி

பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழா செப்.17 அன்று திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக பெரியார் கூட்டமைப்பின் ஊர்வலம் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இரயில் நிலையம் பெரியார் சிலை வரை 3 மணி நேரம் கொட்டும் மழையில் நடைபெற்றது 02.10.2017 அன்று காலை 10 மணிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி  பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். உடன் கழக பொருளாளர் துரைசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர் பொறுப்பாளர்களோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, நாமக்கல் மாவட்ட தோழர்களும் இருந்தனர். காலையில் இரயில் நிலையம் முன் அமைந்துள்ள பெரியார் சிலை அருகில் தோழர்கள் ஒன்று கூடினர். பறை முழக்கம் இசைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இருசக்கர வாகன பேரணியையும், 24 இடங்களில் கழக கொடியேற்றும் விழாவையும் கழகக் கொடியசைத்து தலைவர் கொளத்தூர் மணி வாகன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பறை முழக்கங் களோடு விளம்பர பதாகைகள், கழக...

நெடுவாசலில் எச்.ராஜாவை விரட்டி அடித்தோம்!

நெடுவாசலில் எச்.ராஜாவை விரட்டி அடித்தோம்!

‘ஆனந்தவிகடன்’ ஏட்டுக்கு வளர்மதி அளித்த பேட்டியி லிருந்து சில பகுதிகள்: 2014-ம் ஆண்டு… சிதம்பரம் அண்ண hமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே கடுமையான போராட்டம். மாணவர்களை அடித்து விரட்ட போலீஸைக் கல்லூரிக்குள் இறக்குகிறது நிர்வாகம். தடியடி நடத்துவதற்குக் கையிலிருந்த பிரம்பை இறுக்கிப் பிடித்தபடி, மாணவர்களை நோக்கி ஆயிரம் பூட்ஸ் கால்கள் நடந்துவர அவர்களுக்கு எதிரே நின்று ஒரே ஒரு மாணவி உரத்த குரலில் பேசுகிறார்; அவர்தான் வளர்மதி. “அது எப்போ இருந்து ஆரம்பிச்சதுன்னு கேட்டீங்கன்னா, ஜே.என்.யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் அடைஞ்ச சமயத்துலதான். ரோஹித் வெமூலாவோட மரணத்திற்கு நீதிகேட்டுப் போராடினவர் முத்துக்கிருஷ்ணன். மாணவர்கள் சமூக நீதியை நோக்கி எழுச்சி அடையணும்னு தொடர்ந்து பேசிட்டு வந்தவர். அவர் தற்கொலை செஞ்சிருக்கவே மாட்டார்னு நாங்க நம்புறோம். அவர் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டபோது ஊர்த்தலைவர்கள், போலீஸ்காரர்கள் எல்லாம் சேர்ந்து முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு நிறைய அழுத்தம் கொடுத்து அவர் உடலை எரிக்கிற...

குண்டர் சட்டத்தில் கைதான வளர்மதி வீர உரை

குண்டர் சட்டத்தில் கைதான வளர்மதி வீர உரை

அடக்குமுறை சட்டங்களால் எங்கள் இலட்சியத்தை ஒழித்து விட முடியாது! நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் கிராமங்களில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு எடுத்து நிலத்தையும் நீரையும் பாழ்படுத்துவதை எதிர்த்துப் போராடும் மக்களுக்காக துண்டறிக்கை வழங்கியதற்காக கைது செய்யப் பட்டவர் வளர்மதி. சென்னையில் ஜாதி ஒழிப்புக்கான பெண் போராளிகள் அறைகூவல் நிகழ்வில் பங்கேற்று தனது உரையில் குறிப்பிட்டதாவது: பெண் போராளிகளின் அறைகூவல் என்று இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பெண் போராளிகள் யார்? அவர்களும் இந்த சமூகத்தி லிருந்து வந்தவர்களே. குடும்ப – ஜாதி கட்டமைப்புக்குள் ‘அடங்கிப் போ; பணிந்து வாழ்; அதுவே பெண்ணிற்குப் பெருமை’ என்கிற சூழலில் வளர்ந்த பெண்கள் அதை உடைத்துக்  கொண்டு எப்படி வெளியே வந்தார்கள்? இந்தப் போராளிப் பெண்களுக்கு உரிமைகளை எவரும் கொடுத்துப் பெறவில்லை  அவர்களாகவே தங்கள் உரிமைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவர்கள். ‘நான் எனது மகளுக்கு எனது மனைவிக்கு எல்லா உரிமைகளை யும் வழங்கியிருக்கிறேன்’ என்று கூறுகிறவர்கள் இருக்கிறார்கள்....

அரசுத் துறைகளைப் பயன்படுத்தி அமித் ஷா மகன் ஊழல்

அரசுத் துறைகளைப் பயன்படுத்தி அமித் ஷா மகன் ஊழல்

ஊழலை ஒழிப்பதற்கே இரவு பகலாக பிரதமர் நரேந்திர மோடி பாடுபடுகிறார் என்று பாஜக-வினர் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். பாஜக தலைவர் அமித் ஷாவின் மகனும் தொழிலதிபருமான ஜெய் அமித் ஷா ஒரு மிகப்பெரிய ஊழலில் நீந்திக் கொண்டிருக்கக் கூடும் என்ற, தொழில் துறை யினரையும் அசர வைக்கிற செய்தி இப்போது வெளி வந்திருக்கிறது. இணையதள ஏடாகிய ‘தி ஒயர்’ ஞாயிறன்று (அக்.8) வெளியிட்டுள்ள அந்தச் செய்தி எந்த அளவுக்கு அதிகார பலம் சுயநல நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நரேந்திர மோடி பிரதமரான பிறகு, பாஜக தலைவராக அமித் ஷா பதவியேற்ற பிறகு, இந்த மூன்று ஆண்டுகளில் அவரது மகன் ஜெய் அமித் ஷாவின் நிறுவன வணிக விற்று வரவு 16,000 மடங்கு எகிறியிருப்பதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. இந்தச் செய்தியை வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்ற ஜெய் அமித்ஷாவின் வழக்குரைஞரின் மிரட்டலை மீறி வெளியிடப்பட்டுள்ள...

‘அதானியே வெளியேறு’; ஆஸ்திரேலிய சுற்றுச் சூழல் அமைப்புகள் போர்க் கொடி

‘அதானியே வெளியேறு’; ஆஸ்திரேலிய சுற்றுச் சூழல் அமைப்புகள் போர்க் கொடி

பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரும், அவரது ஆதரவுடன் குறுகிய காலத்திலேயே நாட்டின் பெரும்பணக்காரராக உருவெடுத்து இருப்பவருமான கௌதம் அதானியின், ஆஸ்திரேலிய நிலக்கரிச் சுரங்கத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள்  போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் நியூ சவூத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள போண்டி கடற்கரை, சிட்னி, பிரிஸ்பேன், மெல்போர்ன், கோல்ட் கோஸ்ட் ஆகிய நகரங்களில் சுமார் 40 இடங்களில் ஆயிரக்கணக்கில் திரண்ட அந்நாட்டு மக்கள், ளுகூடீஞ ஹனுஹசூஐ, ஹனுஹசூஐ ழுடீ ழடீஆநு (அதானியே நிறுத்து ; உன் நாட்டிற்கே திரும்பு) என்ற பதாகைகளை உயர்த்தியும், முழக்கங்களை எழுப்பியும் எதிர்ப்பு தெரிவித்தனர். குஜராத்தை தலைமையகமாக கொண்ட அதானி நிறுவனம், ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ளது. மோடியின் ஆசியுடன், பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து ரூ. 6 ஆயிரம் கோடி ரூபாயை கடனாகப் பெற்ற அதானி, கடந்தாண்டு மோடி ஆஸ்திரேலியா சென்றபோது, கூடவே சென்று நிலக்கரி சுரங்கத்தை ஏலத்தில் எடுத்தார். 16.5 பில்லியன் டாலர்கள்...

தலையங்கம் ஜப்பான் முன்னாள் பிரதமர் எச்சரிக்கிறார்

தலையங்கம் ஜப்பான் முன்னாள் பிரதமர் எச்சரிக்கிறார்

அரசுகளின் ‘வளர்ச்சித் திட்டங்கள்’ மக்கள் முன்னேற்றத்துக்கு அவர்களின் மேம்பாட்டுக்கு எந்த வகையில் உதவுகின்றன என்பது இப்போது விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. 1990இல் ‘உலக மயமாக்கல்’ என்ற கோட்பாட்டின் கீழ் உலக வர்த்தக நிறுவனத்துடன் இந்திய பார்ப்பன ஆட்சி உடன்பாடு செய்து கொள்வதற்கு முன் கொண்டு வரப்பட்ட வளர்ச்சித் திட்டங்களினால் மக்கள் பயன் பெற்றார்கள் என்பது உண்மை.  பொதுத் துறை நிறுவனங்கள் வழியாக வேலை வாய்ப்புகள் பொருளியல் வளர்ச்சிகள் வந்தன. ஆனால் உலக மயமாக்கல் கொள்கைக்குப் பிறகு மக்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு பன்னாட்டு நிறுவனங் களின் சுரண்டல்களுக்கு முன்னுரிமை தரப்படும் நிலை உருவானது. உள்ளூர் சிறு, குறு தொழில்கள் முற்றிலும் நசுக்கப்பட்டு விவசாயத் துறை வஞ்சிக்கப் பட்டு இயற்கை வளங்களை சூறையாடி மக்களின் வாழ்வாதாரங்களை நசுக்குவதே அதன் நோக்கமாகி விட்டன. எனவே வளர்ச்சித் திட்டங்கள் மக்களின் வாழ்வதாரத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் அந்த மாநில மக்களின் வளர்ச்சிக்கும் பயன்படுவதாக இருக்க  வேண்டும். உலகின் பல்வேறு...

தமிழக அரசே! பயிற்சி பெற்று காத்திருக்கும் 206 அர்ச்சகர்களையும் அறநிலையத் துறை கோவில்களில் உடனே பணியமர்த்து!

தமிழக அரசே! பயிற்சி பெற்று காத்திருக்கும் 206 அர்ச்சகர்களையும் அறநிலையத் துறை கோவில்களில் உடனே பணியமர்த்து!

தோழமை இயக்கங்களின் ஆதரவோடு – தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம் – முற்றுகை போராட்டம்! தலைமை       :                 கொளத்தூர் மணி கழகத் தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் நாள்     :                 அக்டோபர் 30, 2017   – காலை 10 மணி செய்து விட்டது கேரளம்! அறிவித்து விட்டது கர்நாடகம்! விதைத்த தமிழகம் சோம்பிக் கிடப்பதா? தோழர்களே, அணி திரள்வீர்! – திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் பெரியார் முழக்கம் 26102017 இதழ்

ஜாதியமைப்பை ஒழிக்காமல் ‘தூய்மை பாரதம்’ பேசுவது  மோசடியே!

ஜாதியமைப்பை ஒழிக்காமல் ‘தூய்மை பாரதம்’ பேசுவது மோசடியே!

மோடியின் தூய்மை இந்தியா திட்டம் வெற்று முழக்கமாக நிற்கிறது. உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. உண்மையில் தூய்மை இந்தியா ஒன்றை உருவாக்க வேண்டுமானால் அடிப்படையாக செய்யப்பட வேண்டியது என்ன? ஜாதிக்கும் ஜாதி அடிப்படையிலேயே பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பு உறுதி செய்திருக்கும் ஜாதிக்கும் தொழிலுக்கும் இடையிலான உறவு துண்டிக்கப்பட வேண்டும். ஜாதிக்கொரு தொழிலை தர்மமாக்கிக் கொண்டிருக்கிற பார்ப்பன இந்தியாவில் ஒரு போதும் ‘தூய்மை இந்தியா’ உருவாகவே முடியாது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் – கையில் மலம் எடுக்கும் துப்புறவுத் தொழி லாளர்களின் விடுதலைக்கான ‘சஃபாய்கரம் சாரி அந்தோலன்’ அமைப்பின் நிறுவனர் பெஸ்வாடா வில்சன். உலகின் தலைசிறந்த ‘மகாசாய் விருதை’ 2016ஆம் ஆண்டில் பெற்றவர். செப். 29, ஆங்கில ‘இந்து’ நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். தூய்மை இந்தியாவுக்கான ‘சுவாச் பாரத்’ திட்டத்தை மோடி அறிவித்து 3 ஆண்டுகளுக்குப் பிறகும், நாட்டில், தெருக்களை சுத்தப்படுத்தி, கழிப்பிடங்களை சுத்தப்படுத்தும் ஜாதிப் பிரிவினர் பற்றி...

கேரளாவில் சமூகப் புரட்சி: தலைமை அர்ச்சகரானார் தலித் இளைஞர்

கேரளாவில் சமூகப் புரட்சி: தலைமை அர்ச்சகரானார் தலித் இளைஞர்

150 ஆண்டுகால பழமை வாய்ந்த மணப்புரம் சிவன் கோயிலின் தலைமை அர்ச்சகராக (மேல் சாந்தி) 22 வயது புலையர் சமூகத்தைச் சார்ந்த யாது கிருஷ்ணா என்ற தலித் பதவி ஏற்றுக் கொண்டார். சமஸ்கிருதத்தில் மேல் பட்டப் படிப்பு படித்த இந்த இளைஞர் 10 ஆண்டுகளாக அர்ச்சகர்களுக்கான பயிற்சி – பூஜை முறைகளைக் கற்றுத் தேறியவர். ‘தேவஸ்வம் போர்டு’ நடத்திய தேர்வில் 4ஆவது இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார் இந்த இளைஞர். 150 ஆண்டுகாலமாக பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக இருந்த இந்த கோயிலில் ‘தலித்’ ஒருவர் தலைமை அர்ச்சகராகியுள்ளார். பெரியார் முழக்கம் 19102017 இதழ்

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக தோழர்களை சந்திக்கிறார்கள்

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக தோழர்களை சந்திக்கிறார்கள்

தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாவட்ட வாரியாக கழகத் தோழர்களை கீழ்க்கண்ட பயணத் திட்டப்படி சந்திக்கிறார்கள். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ சந்தா திரட்டுதல், ‘நிமிர்வோம்’ வாசகர் அமைத்தல், கழகக் கட்டமைப்பு நிதி திரட்டுதல் குறித்து கழகத் தோழர்களிடம் கலந்து பேசுகிறார்கள். சுற்றுப் பயண விவரம்: 26.10.2017 –       காலை 10.00 – ஈரோடு வடக்கு – ஈரோடு மாலை 5.00 – ஈரோடு தெற்கு  – கோபி 27.10.2017  – காலை 10.00 – சேலம் மேற்கு – மேட்டூர். மாலை 5.00 – கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி. 28.10.2017  – காலை 10.00 – தருமபுரி – தருமபுரி. மாலை 5.00 – சேலம் கிழக்கு – சேலம். 29.10.2017  – காலை 10.00 – நாமக்கல்-திருச்செங்கோடு. மாலை 5.00...