வேட்டைக்காரன் புதூரில் காந்தியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

ஆனைமலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வேட்டைக்காரன் புதூரில் காந்தி படுகொலை நாள் கண்டன பொதுக்கூட்டம் 07.02.2018 மாலை 6 மணிக்கு நடைபெற்றது நிகழ்வின் தொடக்கமாக ரோஜா கலைக் குழுவின் பறை இசை முழக்கத்துடன் தொடங்கி, மா.ப.கண்ணையன் பாடல்கள் முழங்க, காவை.இளவரசனின் மந்திரமல்ல…தந்திரமே! நடைபெற்றது. நிகழ்ச்சியின் தலைமையேற்று சோ.மணி மொழி, வரவேற்புரை இரா.ஆனந்த், தொடக்கவுரையாக சிவகாமி, வே.வெள்ளிங்கிரி, மடத்துக்குளம் மோகன், கா.சு.நாகராசு (த.தி.க), கழகப் பொருளாளர் துரைசாமி, நிறைவுரையாக கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். நன்றி உரை வினோதினி. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோழர்கள் வே.அரிதாசு, அப்பாதுரை, மணி, சிவா, குமார், சபரிகிரி, விவேக், முருகேசன், கணேசன், கஜா சிறப்பாக செய்தனர். நிகழ்ச்சியில் தென்னை மரத் தொழிலாளர்கள் கருப்புசாமி, திராவிடர் கழகத் தோழர்கள், த.பெ.தி.க. தோழர்கள், தி.வி.க. தோழர்கள், வி.சி.க தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த சிறிய கிராமத்தில் 2000 ரூபாய்க்கு கழக நூல்கள் விற்பனை ஆயின.

பெரியார் முழக்கம் 22022018 இதழ்

You may also like...