சைவ மடங்களையும் ஆட்டிப் படைக்கும் மனுதர்மம்
மதுரை ஆதினம், நித்யானந்தாவை தனது வாரிசாக அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்து மத கட்சிகளே நித்யானந்தா நியமனத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களையும், தாக்குதல்களை யும் நடத்தி வருகின்றன. கருநாடக பா.ஜ.க. ஆட்சி நித்யானந்தாவை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் சைவ மடங்கள் 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டன. புத்த மதம், சமண மதம் வேகமாகப் பரவியதால் உருவான நெருக்கடிகளை எதிர்கொள்ளவே இந்த மடங்கள் உருவாயின. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற சைவத் ‘திருமேனிகள்’ ஊர் தோறும் கோயில் கோயிலாகச் சென்று பதிகம் பாடினர். சைவத்திலும் மனுதர்மமான பார்ப்பனியம் புகுந்து சைவக் கடவுள்களை பார்ப்பனமாக்கியது. சைவக் கடவுளான சிவன், பார்ப்பன ஊடுருவலால் ‘உருத்திரன்’ ஆனான். பார்ப்பன யாகங்களை நடத்தி, ‘உருத்திரனை’ப் போற்றி ‘மகாதேவன்’ என்று மாற்றினார்கள். தமிழ்க் கடவுள் என்று கூறப்பட்ட முருகன், பார்ப்பன ‘மனுதர்ம’ ஊடுருவலால் கந்தனாகவும், சுப்ரமணியனாகவும் மாற்றப்பட்டான். வீரத்தின் கடவுளாக...
