Author: admin

அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: நீதிக்கட்சி ஆட்சியின் சமூக நீதி சாதனைகள்

அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: நீதிக்கட்சி ஆட்சியின் சமூக நீதி சாதனைகள்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி: நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயர், சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் முதன் முதலாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி.தியாகராயர், சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் சென்னை மாநகரில் கட்டாய ஆரம்பக் கல்வியும், பார்வையற்றோர் பள்ளியும், பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது நீதிக்கட்சி அரசு. 1922 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பில் மட்டுமின்றி பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டுமென நீதிக்கட்சி அரசு ஆணை பிறப்பித்தது. ஒவ்வொரு அரசுத் துறையிலும் அந்தந்த துறைகள் மூலமாகவே...

மனித உறுப்புகளை கூறு போட்ட ‘மனுதர்ம’த்துக்கு மாணவி தந்த மரண அடி

மனித உறுப்புகளை கூறு போட்ட ‘மனுதர்ம’த்துக்கு மாணவி தந்த மரண அடி

உலகத்தைப் “படைத்த” பிர்மா, தனது தலையிலிருந்து ‘பிராமணனை’யும், தோளிலிருந்து ‘சத்திரியனை’யும், தொடையிலிருந்து ‘வைசியனை’யும், காலிலிருந்து ‘சூத்திரனை’யும்  படைத்ததாக ‘மனுசாஸ்திரம்’ கூறுகிறது. பிறப்பின் அடிப்படையிலே மனுதர்மம் கற்பித்த இந்த ஏற்றத் தாழ்வுகளை, சாதியமைப்பு உள்வாங்கிக் கொண்டது. சாதியமைப்பு, ‘மனு சாஸ்திரத்தை’ அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகிறது. இதன் காரணமாகவே சாதிப் பிளவுகள் சமூகத்தை சீரழித்து வருகின்றன. சாதி மாறி திருமணம் செய்து விட்டால், சாதிச் சமூகமும், சாதிக் குடும்பமும் துள்ளிக் குதிக்கின்றன. வாழத் தகுதியற்றவர்களாக்கி, மரண தண்டனை வழங்கவும் குடும்பத்தினரே முற்படுகின்றனர். ‘பிர்மா’ தனது உடலையே ‘தலை’, ‘தோள்’, ‘தொடை’, ‘கால்’களை ஏற்றத் தாழ்வுக்கு உள்ளாக்கிய இந்த சமூகக் கொடுமை, மனித உடலுக்குள்ளேயே கூறு போடும் இந்த ‘சமூக வக்கிரம்’ சுக்குநூறாக உடைத்தெறியப்பட வேண்டும். அதுவே ‘மனித நேயம்’ என்பதற்கு சான்றாக இப்போது ஒரு உள்ளத்தை நெகிழச் செய்யும் செய்தி வந்துள்ளது. கோவையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் படித்த மாணவி சரண்யா, தனது...

வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று

வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று

ஆட்சி மொழிக்குரிய தமிழ்ச் சொற்களை உருவாக்கியவரும், பல அரசுப் பணிகளை வகித்தவரும், ‘செந்தமிழ் புரவலர்’ என்று பாராட்டப் பெற்ற வருமான கீ.இராமலிங்கனார், தனது சுயசரிதையை ‘என் வரலாறு’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். அதில் புரியாத மொழியான ‘சமஸ்கிருத மந்திரங் களால்’ – அதை நம்புவோர், ஏமாற்றப்படும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார்: எனக்கு இளமையிலிருந்தே “இவ் வடமொழிச் சடங்கு முறை தமிழ் மக்களுக்கு எவ்வளவு புறம் பானது?” என்பது உள்ளத்தினை உறுத்தி வந்தது; “கண்ணற்ற கபோதிகளாய்த் தமிழ் மக்கள் ஏமாந்து, இச் சடங்குகளுக்கு அடிமைகளாகி  விட்டிருக் கின்றனரே!” என வருந்தலானேன். ஓசூரில் நான் குடியிருந்த வீட்டிற்கெதிரே புரோகிதர் ஒருவர் குடியிருந்தார்.  அவர் மனைவியின் தம்பி பன்னிரண்டு அகவைச் சிறுவன். கோடை விடுமுறைக்குத் தன் அக்கா வீட்டிற்கு வந்திருந்தான். அவன் அப்போதே தனியே சென்று, தமிழர் வீட்டுச் சடங்குகளை நடத்தி வைத்துவிட்டு, அரிசி, காய்கறி முதலியவற்றைச் சுமந்து வருவான். ஒருநாள் அவனை “எங்கிருந்து இவற்றைக் கொண்டு...

கழக அமைப்பு முறைகளை மாற்றியமைக்க மாநில செயற்குழு முடிவு

கழக அமைப்பு முறைகளை மாற்றியமைக்க மாநில செயற்குழு முடிவு

7.7.2012 அன்று காலை கழக மாநில செயற்குழுக் கூட்டம், சென்னை இராயப்பேட்டை முருகேசன் திருமண மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் துரைசாமி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 5.7.2012 அன்று காலை சமூக விரோதிகளால் சுடப்பட்டும், வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளர் பழனி (எ) மு. பழனிசாமிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அரசும் காவல்துறையும் இதில் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் தலைமை செயற்குழுக் கூட்டத்தில் கழகத்தில் நிலவும் கழகப் பணிகளிலுள்ள சுணக்கம், கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தைப் பரப்புதல், தமிழக அரசியல் சூழல், கழகத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றைப் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதியில், கழகத்தின் அமைப்பு முறையை...

அதிகாரத் திமிர் வெறியாட்டங்களை எதிர்த்து நின்ற  தோழர்  பழனி  கொடூரமாகக் கொல்லப்பட்டார்

அதிகாரத் திமிர் வெறியாட்டங்களை எதிர்த்து நின்ற தோழர் பழனி கொடூரமாகக் கொல்லப்பட்டார்

தனது சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களின் கருத்துரிமைகளை மறுத்து கொத்தடிமைகளாக மிரட்டி ஒடுக்கி வைத்திருந்த தளி சட்டமன்ற உறுப்பினரின் அதிகாரத் திமிரை எதிர்த்து நின்ற கழகத் தோழர் பழனி சுடப்பட்டு, வெட்டப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான கிருட்டிண கிரி மாவட்டத்தில் “தளி” சட்டமன்ற தொகுதி இருக்கிறது. இந்திய பொதுவுடமை கட்சியைச் சார்ந்த இராமச்சந்திரன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவரின் சொந்த ஊர் தளி தொகுதியின் எல்லை ஓரமாக இருக்கும் கெலமங்களம் (வேப்பினப்பள்ளி தொகுதியின் எல்லையோரம்). கெலமங்களத்தை சுற்றியுள்ள பல ஊர்களிலும் இவர் சார்ந்திருக்கும் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இயங்கக் கூடாது என்ற கருத்துள்ள அராஜவாதியாக இருந்து வருகிறார். தி.மு.க.வைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம், இந்தப் பகுதிக்குப் பிரச்சாரம் செய்ய வந்தபோது, இவரது ஆட்களால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கவும் பட்டார். தன்னை பொது வுடமைக் கட்சியில் இணைத்துக் கொண்டிருந் தாலும், கடந்த பதினைந்து...

பொது நலனை சிதைக்கும் ‘மனு சாஸ்திரம்’

பொது நலனை சிதைக்கும் ‘மனு சாஸ்திரம்’

‘பிராமணர்களுக்கு மட்டும்’ என்று அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வெளிப்படையாக விளம்பரங்களே வருவதை ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். அதை வெளியிட்ட ‘இந்து’ஏட்டின் மீது, பத்திரிகைக் குழுவுக்கு சென்னை மருத்துவர் இனியன் இளங்கோ புகார் கூறியதன் அடிப்படையில், ‘இந்து’ அந்த விளம்பரத்தை வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, ‘இந்து’ நாளேடு (ஜூலை8, 2012) டெல்லி, பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களில் வாடகைக்கு வீடுகளை விடுவதில் ‘இனப் பாகுபாடு’ காட்டப்படுகிறது என்ற விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தலைநகரமான டெல்லியில் முஸ்லீம்கள் என்றாலே, அவர்களுக்கு வீடு வாடகைக்கு தரப்படுவதில்லை. நகரின் ஒதுக்குப்புறத்தில் முஸ்லீம்கள் வாழும் நெருக்கடியான பகுதிகளுக்குள்ளேயே தள்ளப்படுகிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. சென்னையில் முஸ்லீம்களுக்கும், ‘தலித்’களுக்கும் இதே நிலைதான். ‘சைவமா? அசைவமா?’, அசைவக்காரர்களுக்கு வீடு இல்லை என்று கூறிவிடுகிறார்கள். மாமிச உணவு சமைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் வாடகைக்கு விடப்படும் நிலையும் உண்டு. உணவு முறையில் புகுத்தப்பட்ட ‘மனுதர்மம்’ வாழ்க்கையில் மட்டுமல்ல; வாடகைக்கு வீடு கிடைப்பதிலும்கூட விட்டு வைக்காமல், துரத்தி...

புள்ளி விவரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த திராவிடர் இயக்கம்

புள்ளி விவரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த திராவிடர் இயக்கம்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி: 1925 ஆம் ஆண்டு பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்தார். இவ்வியக்கம் ஆரம்ப காலத்தில் நம் நிலை எப்படி இருந்தது? ஹிட்லர், ஜெர்மன், யூதர்களிடம் கொண் டுள்ள மனப்பான்மைக்குக் காரணங்கள் என்ன வென்று அவர் சொல்லுகின்றாரோ, அவைகளும், அவைகளுக்கு மேற்பட்ட காரணங்களுமே இங்கே நம் மாபெருந்தலைவர்கள் இவ்வியக்கத்தை ஆரம்பிப்பதற்குக் காரணங்களாயிருந்தன. கல்வி 1915 ஆம் ஆண்டில், நம் இயக்கம் ஆரம்பிக்கப்படு முன் கல்வித் துறையில் பார்ப்பனரல்லாத மக்கள் எந்நிலையிலிருந்தார்கள் என்பதைச் சிறிது கவனிப் போம். கல்வித் துறை நிர்வாகத்தில் மொத்தம் 518 பதவி களில் 400 பதவிகள் பார்ப்பனர்கள் கையிலிருந்தன. 73 பதவிகளை ஆங்கிலே இந்தியர்கள், யூரேஷியர்கள், கிறிஸ்தவர்...

தமிழக அரசே; குற்றவாளிகளை தப்பவிடாதே!  தோழர் பழனிக்கு தமிழகம் முழுதும் வீரவணக்கப் பேரணிகள் சென்னை

தமிழக அரசே; குற்றவாளிகளை தப்பவிடாதே! தோழர் பழனிக்கு தமிழகம் முழுதும் வீரவணக்கப் பேரணிகள் சென்னை

வீரமரணம் அடைந்த பழனிச்சாமி வீர வணக்கப் பேரணி சென்னையில் 14.7.2012 மாலை 4 மணியளவில் மயிலாப்பூர் கழகத் தலைமை அலுவலகத்திலிருந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் புறப்பட்டது.   கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் முன்னிலை வகித்தார். வீர வணக்க முழக்கங்களுடன் பேரணி மயிலாப்பூர் டாக்டர் நடேசன் சாலை – அய்ஸ் அவுஸ் – வி.எம். சாலை வழியாக இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தை வந்தடைந்தது. ஒரு மணி நேரம் நடந்த இந்தப் பேரணியை வீதியின் இருபுறமும் மக்கள் திரண்டு பார்த்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேரணியில் பங்கேற்றார். இராயப்பேட்டை கழக அலுவலகமான பெரியார் படிப்பகம் அருகில் வீரவணக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ‘சேவ் தமிழ்’ அமைப்பைச் சார்ந்த செந்தில், திருமுருகன் (மே 17 இயக்கம்), எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலை சிறுத்தைகள்), வழக்கறிஞர் குமாரதேவன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர்...

தோழர் பழனி வீரவணக்க கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறைகூவல் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் போராட்டம்

தோழர் பழனி வீரவணக்க கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறைகூவல் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் போராட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரில் நிலப் பிரபுத்துவவாதியாக தளி சட்டமன்றத் தொகுதியில் தனியான ‘வன்முறை அரசை’ நடத்தி வந்த ஆதிக்கவாதிகளை மக்களுக்காக தட்டிக் கேட்ட கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் மு.பழனி படுகொலையைக் கண்டித்து வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் பொதுக் கூட்டம் 15.7.2012 மாலை 4.30 மணியளவில் இராயக்கோட்டை பேருந்து நிலைய மைதானத்தில் உருக்கத்துடனும் உணர்ச்சியுடனும் நடைபெற்றது. அராஜக அடக்குமுறைக்கு எதிராக பொது மக்கள் பிற்பகல 3 மணியிலிருந்தே திரளத் தொடங்கி விட்டனர். இந்த கொலை வெறியாட்டங்களைத் தட்டிக் கேட்க எவருமே கிடையாதா என்ற மனப் புழுக்கத்தில் ஏங்கிக் கொண்டிருந்த பொது மக்களின் உணர்வுகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக இந்தக் கூட்டம் இருந்தது. அச்சத்தின் பிடியில் உறைந்து கிடந்த ஏழை எளிய மக்கள் அச்சத்தை உதறி எறிந்துவிட்டு ஆவேசத் துடன் திரண்டு நின்றதைப் பார்க்க முடிந்தது. இராயக்கோட்டைப் பேருந்து மைதானம் முழுவதும் மக்கள் தலையாகவே காட்சியளித்தது. முன்புறம் போடப்பட்டிருந்த இருக்கைகள் முழுமையாக...

இளம் விஞ்ஞானியின் நன்கொடை

இளம் விஞ்ஞானியின் நன்கொடை

தூத்துக்குடியில் பிறந்து, அமெரிக்காவில் உயர் கல்வியும் முனைவர் பட்டமும் பெற்ற இளம் விஞ்ஞானி தோழர் இராசா, பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளையும், பெரியார் முழக்கம் ஏட்டையும் இணைய தளங்கள் வழியாக படித்து மகிழ்ந்து ஜூலை 6 ஆம் தேதி கழகத் தலைமை அலுவலகம் தேடி வந்தார். தற்போது தமிழகம் வந்து, முகப்பேர் மேற்கு பகுதியில் தங்கியுள்ள தோழர் இராசா, தம்முடைய உயர்கல்வி பெறும் நிலை உயர்வுக்குக் காரணமான பெரியார் தொண்டினை நன்றியுடன் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் நினைவு கூர்ந்தார். விரைவில் சாதி மறுப்பு திருமணத்தை எளிமையாக பதிவு செய்ய விருப்பதையும் தெரிவித்தார். தான் பொருளாதார நிலையில் இன்னும் வளரவில்லை. ஆனாலும் இந்த கழகத்துக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்று கூறி, ரூ.1000 நன்கொடையை பொதுச் செயலாளரிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 26072012 இதழ்

பொள்ளாச்சியில் கராத்தே போட்டி: இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

பொள்ளாச்சியில் கராத்தே போட்டி: இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

பொள்ளாச்சி கராத்தே கழகம் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் போட்டி பொள்ளாச்சியில் பல்லடம் ரோடிலுள்ள திருமண மண்டபத்தில் தொடங்கியது. போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் வந்தனர். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இலங்கையைச் சேர்ந்த 2 கராத்தே வீரர்கள், பயிற்சியாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதை அறிந்த பொள்ளாச்சி நகர பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் ம.தி.மு.க.வினர் கராத்தே போட்டி நடத்தும் நிர்வாகிகளிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  எக்காரணம் கொண்டும் இலங்கை வீரர்கள் இங்கு வரக்கூடாது. எங்கள் எதிர்ப்பையும் மீறி அவர்கள் பொள்ளாச்சி வந்தால் மீண்டும் இலங்கை செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்தனர். இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் விமான நிலைய அதிகாரிகள், ‘நீங்கள் பொள்ளாச்சி சென்று கராத்தே போட்டியில் பங்கேற்கக் கடும் எதிர்ப்புள்ளது. எனவே இங்கிருந்து திரும்பி விடுங்கள்’...

தோழர் பழனிக்கு திருச்சியில் வீர வணக்கம்

தோழர் பழனிக்கு திருச்சியில் வீர வணக்கம்

சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட கிருட்டிணகிரி மாவட்ட பெரியார் தி.க. அமைப்பாளர் பழனிச்சாமிக்கு வீர வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி கலைஞர் அறிவாலயத்திலிருந்து அண்ணா சிலை வரை வீரவணக்க ஊர்வலம் 14.7.2012 சனி மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் டாக்டர் எஸ்.எஸ். முத்து தலைமையிலும் திருவரங்க நகர செயலாளர் அசோக் முன்னிலையிலும் நடைபெற்றது. மா.பெ.பொ.கட்சி மாவட்ட செயலாளர் கலியபெருமாள், ஆதித் தமிழர் பேரவை உறந்தை ரமணா, பெரியார் பாசறை அமைப்பாளர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தமிழாதன், சட்ட எரிப்புப் போராளி முத்துச் செழியன் (பெ.தி.க.),  பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர்  ஆரோக்கியசாமி மற்றும் அகில இந்திய இளைஞர் இயக்கம் டார்வின் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கழக மாவட்ட இணை செயலாளர் த. புதியவன் மற்றும் குணா ஆகியோர் கண்டன உரையாற்றினர். கழக மாவட்ட பொருளாளர் மு.மனோகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்ட செயலாளர் வே.கந்தவேல் குமார் நன்றியுரையாற்றினார்....

பள்ளிக் குழந்தைகள் முடியை வெட்டும் மனுதர்ம வெறி

பள்ளிக் குழந்தைகள் முடியை வெட்டும் மனுதர்ம வெறி

சூத்திரனுக்குகல்வியைத் தரக் கூடாது என்று மனுதர்மம் கூறுவதற்கு எதிராக வந்ததுதான் கட்டாயக் கல்வி சட்டம் என்று திருப்பூரில் நடந்த சாதி ஒழிப்பு நிறைவுப் பொதுக் கூட்டத்தில் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. 6 வயது முதல் 14 வயது வரை அனைவருக்கும் கல்வியை கட்டாயமாக்கும் இந்தச் சட்டம், தனியார் பள்ளிகள் 25 சதவீதம் ஏழைக் குழந்தைகளை கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் இந்தப் பிரிவைக் கடுமையாக எதிர்க்கின்றன. பெங்களூரிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி அதிர்ச்சி யளிக்கிறது. பெங்களூரில், ‘நந்தினி லே அவுட்’ பகுதியிலுள்ள ஆக்ஸ்போர்டு ஆங்கிலப் பள்ளியில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட இந்த ஏழைக் குழந்தைகள், மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட, அவர்களின் தலைமுடியை வெட்டியுள்ளனர். வகுப்பறையிலும் அவர்களுக்கு கடைசி இடத்தில்தான் இடம். அவர்கள் கொண்டு வரப்படுகிற உணவு டப்பாக்கள், பள்ளி நுழைவு வாயிலில் சோதனையிடப்படுகின்றன. பள்ளி வருகைப் பதிவேட்டிலேயே இவர்களின் பெயர்கள்...

தமிழக அரசின் பாராட்டத்தக்க ஆணை

தமிழக அரசின் பாராட்டத்தக்க ஆணை

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அனைத்து சுயநிதி கல்லூரிகளிலும் ஆதி திராவிடர் பழங்குடி மாணவர்களுக்கு 100 சதவீத கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்ற பாராட்டத்தக்க ஆணையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தலித் பழங்குடி மாணவர்கள் நலன் கருதி அரசு ஆணையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இங்கே வெளியிடுகிறது. பெரியார் முழக்கம் 26072012 இதழ்

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள்

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள்

தமிழ் மன்னர்கள் நடத்தியது மனுதர்ம அடிப்படை யிலான பார்ப்பன ஆட்சியே என்பதையும் மனு சாஸ்திரம் எரிக்கப்படவேண்டும் என்றும் மறைந்த பெரியாரியலாளர் வழக்கறிஞர் கரூர் பூ.அர. குப்புசாமி எழுதிய கட்டுரையை இன்றைய பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். அவர் 1985 இல் வெளியிட்ட ‘மன்னர்களும் மனுதர்மம்’ நூலில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. நம் அப்பாவி மக்கள் ஏதோ மறைந்துபோன ஒரு நூலை – மனுதர்மத்தை – ஏன் இப்போது கொளுத்த வேண்டும் என்பதாக நினைக்கக்கூடும். ஆனால், இன்றைய சமூக அமைப்பு, நடை முறைகள், நம்பிக்கைகள், நல்லது கெட்டது பற்றிய உணர்வு, ஏன் ஊர் அமைப்புக்கூட தர்மசாத்திரங்கள் என்று சொல்லப்பட்ட பார்ப்பனிய ஏற்பாடுகளின் படி நாடாண்ட மன்னர்கள் பல நூற்றாண்டு கால மாக சமூகத்தின் மீது பலாத்காரமாகத் திணித்து நிலை நாட்டியவை என்பதை அவர்கள் அறிய மாட் டார்கள். நிலைநாட்டிவிட்ட பிறகு அவை இன்று இயல்பாகத் தோன்றுகின்றன – அவ்வளவு தான். சாமான்ய மக்கள்கூட ‘மனுநீதி...

‘வருண பகவானு’க்கு பூசை போட ரூ.17 கோடியை விரயமாக்கும் கருநாடக பா.ஜ.க. ஆட்சி

‘வருண பகவானு’க்கு பூசை போட ரூ.17 கோடியை விரயமாக்கும் கருநாடக பா.ஜ.க. ஆட்சி

கருநாடக பா.ஜ.க. – குடுமி பிடிச் சண்டையில் முதலமைச்சர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இப்போது முதல்வராக வந்திருப்பவர் ஜெகதீஷ் ஷட்டர். இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர் என்று ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ‘இந்துத்துவ நாத்திகர்’ ஆட்சி, தமது மாநிலத்தில் நிலவும் வறட்சியைப் போக்க மாநிலம் முழுதும் உள்ள 34,000 கோயில்களிலும் ‘வருண ஜெபம்’ நடத்த உத்தரவு போட்டுள்ளது. பார்ப்பனர்களைக் கொண்டு பூஜைகளையும், ஹோமங்களையும் நடத்தப் போகிறதாம். இதற்காக அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.17 கோடி. வறட்சி நிவாரணத்துக்காக நிதி கேட்டு மத்திய அரசு கதவுகளைத் தட்டிக் கொண்டே 17 கோடியை வீண்விரயமாக்குகிறது பா.ஜ.க. ஆட்சி. அரசின் இந்த நடவடிக்கையை சட்டமன்றத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியைச் சார்ந்த சி.எஸ்.புட்டே கவுடா, மகாதேவ பிரசாத் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், துறை அமைச்சராக உள்ள கோட்டா சீனிவாஸ் பூசாரி என்பவர், “நான கடவுளை நம்புகிறேன். வருண பகவானை வேண்டினால்...

இராமகோபாலனே! கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பது யார்?

இராமகோபாலனே! கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பது யார்?

‘இந்து முன்னணி’ இராமகோபாலன் அய்யர் அவ்வப்போது அறநிலையத்துறைக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவார். இந்து கோயில்களை அரசின் அறநிலையத் துறை கட்டுப் படுத்தக் கூடாதாம். ‘இந்து’க்களைக் கொண்ட தனி வாரியம் அமைத்து, அவர்களின் முழுக் கட்டுப் பாட்டிலேயே விட்டுவிட வேண்டுமாம். இதே போன்ற அறிக்கையை இப்போது மீண்டும் வாந்தி எடுத்துள்ளார். இந்துக் கடவுளர்கள் அரசுக் கட்டுப் பாட்டில் இருக்கக் கூடாது என்றால் அது பார்ப் பானின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதே ‘இவாளின்’ துடிப்பு! அப்படித் தான் 1927 வரை இருந்தது. கோயிலில் குவிந்து கிடந்த நிலங்களும், தங்கம், வைரம், வெள்ளி, வைடூரியங் களும் பார்ப்பனர்களால் சுருட்டப்பட்டன. இந்த பெருச்சாளிகளிடமிருந்து மீட்பதற்கு முதல் கடிவாளம் போட்டது, நீதிக்கட்சி ஆட்சி தான். பனகல் அரசர்  முதலமைச்சராக இருந்தபோது, அவர்தான் மக்கள் வழங்கிய சொத்துக்களை பார்ப்பனர்களின் கொள்ளையிலிருந்து தடுக்க அறங்காவலர்களைக் கொண்ட ஒரு வாரியத்தை உருவாக்கினார்.  இராமகோபாலய்யர் கதறிக் கொண்டிருக்கும்...

மார்க்சிய லெனினிய  தோழர் தொப்பி குமாரின் படுகொலை

மார்க்சிய லெனினிய தோழர் தொப்பி குமாரின் படுகொலை

சட்டமன்ற உறுப்பினர் தளி இராமச்சந்திரன் மற்றும் அவரது ஆட்களின் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்து  28.4.2012 அன்று கெலமங்கலத்தில் பெரியார் திராவிடர் கழக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூட்டத்தில் பங்கேற்று, தளி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இக்கூட்டத்தில் இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிய-லெனினிஸ்ட்) அமைப்பைச் சார்ந்த தோழர்களும் பங்கேற்றனர்.  அடுத்த நாள் 29.4. 2012 அன்று லெனின் பிறந்த நாளுக்காக மார்க்சிய லெனினியக் கட்சி பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்துக்கு காவல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்யுமாறு ராமச்சந்திரன் வற்புறத்தவே ஏப்.28 ஆம் தேதி இரவு 10 மணிக்கு, 29 ஆம் தேதி நிகழ இருந்த கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. பெரியார் திராவிடர் கழகத்தை, சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக இக்கட்சி தூண்டிவிடுவதாக ராமச்சந்திரனும் அவரது ஆட்களும் கருதினார்கள். கூட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து...

தலைமறைவு தளி சட்டமன்ற உறுப்பினர் வங்கிக் கணக்கு முடக்கம் அதிர்ச்சி தரும் நில மோசடி – படுகொலைகள்

தலைமறைவு தளி சட்டமன்ற உறுப்பினர் வங்கிக் கணக்கு முடக்கம் அதிர்ச்சி தரும் நில மோசடி – படுகொலைகள்

தேடப்பட்டு வரும் தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வெளி மாநிலங்களில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வங்கிகள் மூலம் பண பரிவர்த்தனை எதுவும் மேற்கொண்டு விடக் கூடாது என்பதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட 22 பேரின் வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட் டுள்ளன. இது குறித்து தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர், “கொலையாளிகள், தங்களின் இருப் பிடத்தை அடிக்கடி மாற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது எங்களுக்கு சில துப்பு கிடைத்தள்ளது. அதைக் கொண்டு விசாரித்து வருகிறோம். மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. கொலையாளிகள் எங்கும் தப்பிவிட முடியாது. அவர்களை நாங்கள் நெருங்கி விட்டோம். இன்னும் ஓரிரு நாட்களில் தலைமறைவாக உள்ள கொலையாளிகள் பிடிபடுவார்கள்” என்று கூறியுள்ளார். இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர்கள் சிலர் கல்குவாரிகள் போன்ற தொழில்கள் செய்து வருகிறார்கள். அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் 115 பேர்...

குலுங்கியது கோவை – எங்கெங்கும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 24022017

கோவை வந்த மோடிக்கு கருப்பு கொடி. வனங்களை அழிக்கும் ஈஷா யோகா விழாவிற்க்கு வருகை தரும் மோடிக்கு எதிராக #திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 24022017 மாலை கருப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் காட்டப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர் ஈஷா மையத்தில் 122 அடி உயர சிவன் பொம்மையைத் திறக்க வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அணி அணியாய் தோழர்கள் ஆர்ப்பாட்டம்-கருப்புக் கொடி-கைது.. # முதல் அணியில் த.பெ.தி.க, த.மா.கா,வி.சி ,விவசாய சங்கங்களின் தோழர்கள்.. # இரண்டாம் அணியில் தி.க தோழர்கள்.. # மூன்றாம் அணியில் தி.வி.க, சமூக நீதிக் கட்சி,மாதர் சங்கம், DYFI தோழர்கள்.. குறிப்பு: கைது செய்து நேரே மண்டபத்திற்கு கொண்டு சென்றிருந்தால் கூட, நிகழ்வுகளை பொதுமக்கள் அறிய முடியாமல் போயிருக்கும்.. ஆனால் திவிக தோழர்களை கைது செய்து, மண்டபம் கிடைக்காமல் கோவை முழுதும் வீதிவீதியாய்...

அரியலூர் சிறுமி நந்தினியின் படுகொலையை கண்டித்து நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி 19022017

அரியலூர் மாவட்டத்தை சார்ந்த தலித் சிறுமி நந்தினியின் படுகொலையை கண்டித்து நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…   ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள்: சிறுமி நந்தினியின் கொலையை CBIக்கு மாற்று… இந்து முன்னணி அரியலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜாதி வெறியன் ராஜசேகரை கைது செய்… ராஜசேகர் மற்றும் அவனின் கூட்டாளிகளின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்து… தலித் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்து…

திருப்பூரில், அரியலூர் நந்தினிக்கு நீதி வழங்கக்கோரி கண்டன ஆர்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 10.02.2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.30 மணியளவில் திருப்பூர்,மாநகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்துமுண்ணனி மாவட்ட தலைவர் ராஜசேகரை கைது செய் ! வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்று ! நந்தினி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கு ! தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய் ! என முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களும் பங்கெடுத்தனர்.ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் சோழன், திருவள்ளுவர் பேரவை அருண்குமார்,இஸ்லாமிய அமைப்பின் ரஹ்மான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி,அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, மாவட்டத்தலைவர் முகில்ராசு,மாவட்ட செயலாளர் நீதிராசன், மாநகரசெயலாளர் மாதவன்ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர் சங்கீதா,கொளத்துப்பாளையம் ராமசாமி, முத்து,தனபால்,கருணாநிதி,அகிலன்,பரிமளராசன் உள்ளிட்ட கழகத்தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஜாதி மறுப்பு,சடங்கு மறுப்புத்திருமணம் ! திருப்பூர் 20022017

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 20.02.2017 அன்று காலை திருப்பூர் அம்மாபாளையம்,பெரியார் படிப்பகத்தில் க.விஜயலட்சுமி-ச.வீரகுமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு,சடங்கு மறுப்புத்திருமணம் மாவட்டகழகத்தலைவர் முகில்ராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு அதிமுக பகுதிசெயலாளர் இரா.கோபிநாதன், கழகத்தோழர் நகுலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தந்தத்தை இணையர்கள் கழகத்தோழர்கள் முன்னிலையில் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர். குட்டி பிரசாந்த்,மாநகர தலைவர் தனபால்,அமைப்பாளர் முத்து, தோழர் ஜெயா,நசீர்,பாலுசந்தர் கணேசன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மோடிக்கு கருப்புக்கொடி ! கோவை சூலூரில் 24022017

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ! நாள் : 24.02.2017 மாலை 4 மணிக்கு. இடம் : சூலூர் விமானப்படை தளம் அருகில். மோடியே, ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! எனும் முழக்கத்துடன்பிப். 24இல் கோவையில் தோழர்கள் திரளுகிறார்கள் கோவை வனப்பகுதியில் யானைகள், மிருகங்கள் வாழும் பகுதிகளை முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி வரும் ஈஷா மய்யத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், புதிய கட்டுமானங்களைத் திறந்து வைக்க பிரதமர் மோடி பிப்.24 ஆம் தேதி வருகிறார். இதை எதிர்த்து கோவை வரும் மோடிக்கு பிப். 24ஆம் தேதி கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், சுற்றுச் சூழல் மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துகின்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி போராட்டத்தில் பங்கேற்கிறார். தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் பல்வேறு முற்போக்கு...

சென்னையில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு விழா

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் காதலர் தினத்தை யொட்டி ஜாதிமறுப்பு திருமணம் செய்த காதல் இணையர்களுக்கு பாராட்டு விழா 14.02.2017 அன்று மாலை 6 மணியளவில் கழக தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டச்செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். செந்தில் குனுடு முன்னிலை வகித்தார். 10 ஜாதி மறுப்பு இணையர்களைப் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அரங்க. குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்ட தலைவர் வேழவேந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். ரவிபாரதி, தாஜ் நிஷா ஆகியோர் கவிதை வாசித்தனர்.  அருள்தாஸ் பாடல்களை பாடினார். இந்நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது. பாராட்டு விழா 9 மணியளவில் நிறை வடைந்தது. பாராட்டுப் பெற்ற  ஜாதிமறுப்பு திருமணம் செய்த காதல் இணையர் ஜெயமாலா-மனோகர்;...

அய்யா இனியன் பத்மநாபன் 90ஆம் அகவை விழா

அய்யா இனியன் பத்மநாபன் 90ஆம் அகவை விழா

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு மாவட்ட ஆலோசகர், பெரியார் விருதாளர் அய்யா இனியன் பத்மநாபன் 90 ஆவது பிறந்தநாள் விழா 15.02.2017 புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு ஹோட்டல் ரீஜென்சியில் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். தோழர்கள் நாத்திகஜோதி, சண்முகப்பிரியன், செல்லப்பன், வேணுகோபால், கவிஞர் சின்னப்பன், பாரதிதாசன் கல்லூரிப் பேராசிரியர் சதீஸ்குமார், ஆசிரியர் சிவகாமி, கிருஷ்ணமூர்த்தி, வசந்தி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  கழகத் தலைவர் கொளத்தூர் மணி  வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக அய்யா இனியன் பத்மநாபன் ஏற்புரையில் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இவ்விழாவில் அய்யாவின் குடும்பத்தார்களும், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்ட தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பிறந்தநாள் விழா மகிழ்வாக அய்யா இனியன் பத்மநாபன், கழக வளர்ச்சிக்கு ரூ. 1000  வழங்கினார். பெரியார் முழக்கம் 23022017 இதழ்

ஹிட்லர் – முசோலினியை ஆதரித்த-ஆர்.எஸ்.எஸ்.

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து. (சென்ற இதழ் தொடர்ச்சி) இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் இரண்டாவது உலக யுத்தமும் நடந்து கொண்டிருந்தது. அந்த காலகட்டங்களில் யூதர்களை இனப்படுகொலை செய்து, உலக வரலாற்றில் இன்று வரை வெறுக்கப்படும் இனப் படுகொலையாளர் ஹிட்லரை ஆதரித்ததுதான் ஆர்.எஸ்.எஸ். ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடியை தங்கள் கொடியாக வைத் திருந்தார்கள்; முதல் உலகப் போர் நடந்தபோது இந்தியாவில் ஆயுதம் தாங்கிய உள்நாட்டுப் புரட்சியை நடத்தி இந்தியாவை ‘இந்து இராஜ்யமாக்க’த் திட்ட மிட்டார்கள். அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த ஹெட்கேவர் என்ற ‘சித்பவன்’ பார்ப்பனர், தங்களது குருவான திலகரிடம் இந்த யோசனையை முன் வைத்தபோது, திலகர் அது  நடைமுறையில் தோல்வியைத் தழுவி விடும் எனக் கூறிவிட்டார். ஹிட்லரின்...

மேட்டூர் கோவிந்தராசு-கீதா இல்லத் திறப்பு

மேட்டூர் கோவிந்தராசு-கீதா இல்லத் திறப்பு

12.2.2017 அன்று சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராசு-கீதா இணையர் மேட்டூரில் கட்டியுள்ள புதிய இல்லத்தை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந் திரன் திறந்துவைத்தார். நிகழ்வின் தொடக் கத்தில் இல்லத்தின் உரிமையாளர் கோவிந்தராசு, அவரது மகள் அருள்மொழி உள்ளிட்டோரின் பறையிசையோடு நிகழ்வு தொடங்கியது. அடுத்து கொள்கைப் பாடல்கள் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவினரால் பாடப் பட்டன. இல்ல உரிமையாளர் கீதாவின் அக்கா கணவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டு செயலாளர் கோபி இளங்கோவன், அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். கழக வளர்ச்சிக்கு ரூ.2000/- நிதி பொதுச் செயலாளரிடம் வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 23022017 இதழ்

நந்தினிக்கு நீதி கேட்டு நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

நந்தினிக்கு நீதி கேட்டு நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அரியலூர் தலித் சிறுமி நந்தினி மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை கொலையை கண்டித்து நீதிக் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் நடை பெற்றது. கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு  மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன் தலைமை ஏற்க,  நங்கவள்ளி அன்பு கண்டன உரையாற்றினார். அவரை தொடர்ந்து தலைமை செயற் குழு உறுப்பினர்களான சக்திவேல்,  விழுப்புரம் அய்யனார் மற்றும் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக கழக மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார். ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் வந்திருந்தனர். கண்ணன் நகர செயலாளர் நன்றியுரை கூறினார் .அறுபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் . பேருந்து நிலையத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கவனிக்க ஆர்ப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. பெரியார் முழக்கம் 23022017 இதழ்

கா.சு. நாகராசன் மீது, ஜாதி வெறி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கா.சு. நாகராசன் மீது, ஜாதி வெறி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

13-2-2017, திங்கட்கிழமை மாலை 4-00 மணியளவில், கோவை வாட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, ஜாதி மதவாத ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில், பொள்ளாச்சி கா.க.புதூரில் ஜாதி, மதவாத ஆதிக்க சக்திகளால், பெரியார் திராவிடர் கழகம், சுயமரியாதை சமதர்ம இயக்கத் தலைவர் கா.சு. நாகராசன் தாக்கப் பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளை பிற்பகல் 3 மணி வரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த ஆனைமலை காவல்துறையினர் தப்ப விட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் நாகராசன், எஸ்.டி.பி.ஐ. அபுகசிர், சமூகநீதிக் கட்சித் தலைவர் வழக்குரைஞர் பன்னீர் செல்வம், சமத்துவ முன்னணி வழக்குரைஞர் கார்க்கி, வழக்குரைஞர் முருகேசன், முருகர் சேனை சிவசாமித் தமிழன், தமிழ்க் கல்வி இயக்கம் சின்னப்பா தமிழர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திராவிடர் கழக இளைஞர் அணி சிற்றரசு, புதுவை பெரியார்...

சர்வாதிகாரியை தேர்வு செய்யும் ஜனநாயகம்

சர்வாதிகாரியை தேர்வு செய்யும் ஜனநாயகம்

இந்தியாவின் ஜனநாயகம் தேர்தல் முறை குறித்து, பெரியார் கருத்துகளின் தொகுப்பு. கட்சியின் பெயரால் அரசாங்கம் நடைபெறுகிறதென்றால் அது எப்படிச் சனநாயகம் ஆக முடியும்? அவரவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்கு வேண்டிய நோக்கங்களின்படி எதையும் செய்து கொள்ளுகிறார்கள் என்றால் அவர்கள் மக்களின் விருப்பத் திற்கிணங்க ஆட்சி புரிந்ததாகக் கொள்ள முடியுமா? தனிப்பட்ட கட்சியின் பேரால்   வருபவரானாலும் அவர் பாரபட்சமின்றி யாவரையும் ஒன்றெனப் பாவித்து ஆட்சி புரிவதே முறையாகும். தன் கட்சிக்காக என்று நீதியையும் நேர்மையையும் கைவிடு வதென்பது முற்றிலும் ஒழுக்கமற்ற செயலாகும். – ‘விடுதலை’ 12.1.1956 சனநாயகம் என்று சொல்லுவதன் மூலம் நாம் எந்தவிதப் பலனும் அடைய முடியாது. நமக்கு அதில் எந்தவித உரிமையும் இருக்க முடியாது. இந்திய ஆட்சியில் இருக்கும் வரை நாம் மைனாரிட்டி நாட்டவர். அதில் அடிமையாகத்தான் இருக்க முடியும். சனநாயக இந்திய ஆட்சி முறை என்ற அந்த முறையே பித்தலாட்டமான முறையாகும். நம்மை நிரந்தரமாய் அடிமைப்படுத்தி ஆள ஏற்படுத்தப்...

தலையங்கம் தமிழக அரசியல் குழப்பம்: கழகத்தின் நிலைப்பாடு

தலையங்கம் தமிழக அரசியல் குழப்பம்: கழகத்தின் நிலைப்பாடு

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் ஒவ்வொரு நாளும் திடீர் திடீர் மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரத்தைக் கைப்பற்றுதலையே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் கட்சிகளில் அதன் ஒற்றை சர்வாதிகாரத் தலைமையில் வெற்றிடம் உருவாகிடும்போது கட்சி சிதறுண்டுதான் போகும். அணி சேர்க்கைகளுக்கு ஆதார சுருதியாக அதிகார மய்யங்களைக் கைப்பற்றுதலே இருக்குமே தவிர, கொள்கைப் பிரச்சினைகளுக்கு வாய்ப்பே இல்லை. அ.இ.அ.தி.மு.க. கட்சியே தமிழக பா.ஜ.க. தான். தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளுக்கு மத அடையாளம் தந்து, கட்சி நிகழ்வுகளையே மதச் சடங்குகளாக மாற்றிய கட்சி அது. பகுத்தறிவு சிந்தனைக்கோ, பகுத்தறிவாளர்களுக்கோ, அக்கட்சியில் துளியும் இடமில்லை. கட்சி அமைப்பும், ஜாதிய கட்டமைப்புக் குள்ளேயே முடங்கிக் கிடந்தது. இந்த நிலையில் பிளவுபட்டு நிற்கும் அணிகளில் எந்த அணி கொள்கைக்கானது என்ற ‘தேடல்களில்’ இறங்குவது, ‘இருட்டறைக்குள் கருப்புப் பூனையை’த் தேடும் கதையாகவே இருக்கும். பெரியார் வாழ்ந்த காலத்தின் அரசியல் களமும், பொது வாழ்க்கை நேர்மையும் முற்றிலும் வேறானது. தனது கொள்கைகளை முன்னெடுத்துச்...

ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! மோடிக்குக் கருப்புக் கொடி

ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! மோடிக்குக் கருப்புக் கொடி

பிப். 24இல் கோவையில் தோழர்கள் திரளுகிறார்கள் கோவை வனப்பகுதியில் யானைகள், மிருகங்கள் வாழும் பகுதிகளை முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி வரும் ஈஷா மய்யத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், புதிய கட்டுமானங்களைத் திறந்து வைக்க பிரதமர் மோடி பிப்.24 ஆம்  தேதி வருகிறார். இதை எதிர்த்து கோவை வரும் மோடிக்கு பிப். 24ஆம் தேதி கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், சுற்றுச் சூழல் மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துகின்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி போராட்டத்தில் பங்கேற்கிறார். தமிழகம் முழுது மிருந்தும் கழகத் தோழர்களும் பல்வேறு முற்போக்கு சமுதாய இயக்கத்தைச் சார்ந்த தோழர்களும் கோவை நோக்கி திரளுகிறார்கள். சமூக வலைதளங்களில் இந்த செய்திகள் வேகமாகப் பரவி வருகின்றன. சட்ட விரோத, சமூக விரோத நடவடிக்கை களில் ஈடுபட்டு வரும் ஜக்கி வாசு தேவுக்கு ஆட்சி...

பெரியார் : இன்றும் என்றும் நூல்அறிமுக விழா புதுச்சேரி 11022017

கோவை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பெரியார்:இன்றும் என்றும்’ நூலறிமுக விழா புதுச்சேரி வணிக அவையில் 11-2-2017 அன்று மாலை 6-00 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்தோரை புதுவை லோகு.அய்யப்பன் வரவேற்றார். விடியல் பதிப்பகத்தின் சார்பாக விஜயகுமார் நூல் வெளியீடும் அவசியம், முயற்சி குறித்து  எடுத்துரைத்தார். அடுத்து சூலூர்பாவேந்தர் பேரவை புலவர் செந்தலை கவுதமன் நூலை அறிமுகப்படுத்தி தெளிவான நீண்டதொரு சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே நூலுக்கு முன்பதிவு செய்திருந்தவர்களும் பிறரும் நூலின் படிகளைப் பெற்றுகளைப் பெற்றுக் கொண்டனர். இறுதியாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாறினார். விழாவில் ஏறத்தாழ 200 படிகள் விற்பனையாகின.

ஆகஸ்டு 5 இல் சுயமரியாதைத் தொண்டர்கள் படத்திறப்பு

ஆகஸ்டு 5 இல் சுயமரியாதைத் தொண்டர்கள் படத்திறப்பு

குத்தூசி குருசாமி – குருவிக் கரம்பை வேலு – சுயமரியாதைப் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்கத் தொண்டர் நாள் 5.8.2012 அன்று காலை 10 மணியளவில் திருவான்மியூரில் (பி.டி.இராபர்ட் இல்லம், 132 வால்மீகி நகர், இரண்டாம் தளம்) மருத்துவர் சவுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெறுகிறது. மூவலூர் இராமாமிர்தம் படத்தை வாலாசா வல்லவனும், பட்டுக்கோட்டை டேவிஸ் படத்தை கவிஞர் சிகாமணி யும், சுவரெழுத்து சுப்பையா படத்தை புதுகை இராசேந்திரனும் திறந்து வைத்து பேசுகிறார்கள். ஓவியா சிறப்புரையாற்றுகிறார். பெரியார் முழக்கம் 02082012 இதழ்

பார்ப்பன விரத மோசடிகள்

பார்ப்பன விரத மோசடிகள்

இந்த சதுர்மாஸ்ய விரத காலத்தில் பார்ப்பன மடத் தலைவர்களை சந்தித்து, அவர்களிடம் தங்கள் பிரச்சினைகளைக் கூறுவதற்கு சீடர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பது வாடிக்கை. இந்த பார்ப்பன விரதம் பற்றி சிலாகித்து, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் (ஜூலை 18) ஆர். சாமிநாதன் என்ற பார்ப்பனர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். முழுமையாக வேதநெறி வாழ்க்கையில் ‘பிராமணனாக’ வாழும் இந்தக் காலத்தில் இந்தப் பார்ப்பனர்களிடம் தங்களின் மனக் குமுறல்களை கொட்டினால், அதை வேதப் பார்ப்பன ‘குருக்கள்’ காதால் கேட்டு தலையாட்டினாலே கூற வந்தவர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடுமாம். இப்படியெல்லாம் எழுதும் அந்தப் பார்ப்பனர், ‘சதுர்மாஸ்ய விரத காலங்களில்’ பார்ப்பன குருக்களை சந்திப்பதுகூட வியாபாரமாகிவிட்டது என்றும், செல்வாக்குள்ளவர்கள் முக்கிய புள்ளிகள், தட்டு தட்டாக பொருட்களை வாங்கிக் கொண்டு கியூ வரிசையில் நிற்காமல் தனித் தரிசனம் பெற்று விடுகிறார்கள் என்றும் புலம்புகிறார். சங்கராச்சாரிகளையும் பார்ப்பன குருக்களையும் சந்திக்க வரும் கூட்டத்தினர், தங்களின் பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம், குடும்பப்...

தோழர் பழனி படுகொலையில் தேடப்பட்ட எம்.எல்.ஏ. சரண்

தோழர் பழனி படுகொலையில் தேடப்பட்ட எம்.எல்.ஏ. சரண்

கிருட்டிணகிரி மாவட்ட கழக அமைப்பாளர் தோழர் பழனி படுகொலையில் தலைமறைவாக இருந்த தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன், அவரது மாமனார் இலகுமய்யா, மைத்துனர் கேசவமூர்த்தி, சித்தராஜி மற்றும் ஒருவர் உட்பட 5 பேரும் ஜூலை 30 ஆம் தேதி காலை திருவண்ணாமலை முதலாவது நீதிமன்ற நடுவர் முன் சரணடைந்துள்ளனர்.  கொலை நடந்த ஜூலை 5 ஆம் தேதியி லிருந்து தலைமறைவாக இருந்த இவர்களை காவல்துறையின் தனிப்படைகள் தேடி வந்தன. இந்த கொலையில் 22 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே தனக்கு முன் பிணை கேட்டு தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன், உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். கடந்த 26 ஆம் தேதி இந்த முன் பிணை கேட்கும் மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி தளி ராமச்சந்திரன் சார்பில் வாதிட வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருட்டிணன் ஆஜர் ஆனார். உச்சநீதிமன்ற...

காவல்துறை கெடுபிடிகளை தகர்த்து எழுச்சியுடன் நடந்த வெள்ளோடு கூட்டம்

காவல்துறை கெடுபிடிகளை தகர்த்து எழுச்சியுடன் நடந்த வெள்ளோடு கூட்டம்

23.7.2012 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணிக்கு ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கள்ளுகடை மேடு பகுதியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக மனுதர்ம எரிப்புப் போராட்டம் ஏன்? என்பது பற்றிய விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை குடந்தை சிற்பி இராசன் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் பேரவை ப.சிவக்குமார் தலைமை வகித்தார். பெ.சே. மோகன்ராஜ், செல்லப்பன், செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிற்பி இராசன், சாமியார்களின் மோசடிகளையும், கடவுளர்களின் பிறப்புக் கதைகளையும் கூறி, மக்களின் மூளைக்கு வேலை கொடுத்தார். கூட்டத்தில் அமர்ந்திருந்த பக்தர்களிடம் கேள்விகளைக் கேட்டு, கடவுள் நம்பிக்கையை உடைக்கும் விதமான பதில்களை அவர்களிடமிருந்தே பெற்று, அதற்கு விளக்கம் அளித்தார். அடுத்தபடியாக மனுதர்ம எரிப்பு ஏன்? என்பது பற்றிய விளக்கப் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஈரோடு ஒன்றிய அமைப்பாளர் செ.சசிக்குமார் தலைமை வகித்தார். வெள்ளோடு கோபி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சென்னிமலை செல்லப்பன், பகுத்தறிவாளர் பேரவை...

ஜீவா வளர்த்த கட்சியில் “தளி இராமச்சந்திரன்களா?”  அரங்க குணசேகரன் கேள்வி

ஜீவா வளர்த்த கட்சியில் “தளி இராமச்சந்திரன்களா?” அரங்க குணசேகரன் கேள்வி

இராயக்கோட்டையில் 15.7.2012 அன்று நடந்த தோழர் பழனி படுகொலை கண்டன கூட்டத்தில் ‘தமிழக புரட்சிக் கழக’ அமைப்பாளர் அரங்க குணசேகரன் ஆற்றிய உரை: தோழர் பழனியை நான் 15 ஆண்டுகளாக அறிவேன். பெண்ணாகரத்திற்கு வருகின்ற காலத்தில் எல்லாம் தோழர் பழனியோடு அரசியல் உறவுகளைக் கொண்டு தோழமையுடன் பழகியிருக்கிறேன். ‘வர்க்க எதிரிகளை ஒழித்து, தமிழ்நாடு விடுதலையை சாதிக்க வேண்டும்’ என்ற கொள்கைகளை ஏற்று வர்க்கப் போராளியாக வாழ்ந்த பழனி, வர்க்கப் போருக்கு தடையாக நிற்கும் சாதி, மதத்தை தகர்த்தெறிய போராடும் பெரியார் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அவரை படுகொலை செய்ததன் மூலம், இந்த தளி சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டில் தான் இருக்கிறதா? இந்தப் பகுதியின் ஆட்சி தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதா? சி.பி.ஐ. தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் ஆளுகையில் இருக்கிறதா என்பதை தமிழக முதல்வர் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். 1971 இல் 5000 ஏக்கர் நிலம்...

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள் (2)

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள் (2)

தமிழ் மன்னர்கள் நடத்தியது மனுதர்ம அடிப்படையிலான பார்ப்பன ஆட்சியே என்பதையும் மனுசாஸ்திரம் எரிக்கப்பட வேண்டும் என்றும் மறைந்த பெரியாரிய லாளர் வழக்கறிஞர் கரூர் பூ.அர. குப்புசாமி எழுதிய கட்டுரையை இன்றைய பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். அவர் 1985 இல் வெளியிட்ட ‘மன்னர்களும் மனுதர்மம்’ நூலில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.  சென்ற இதழ் தொடர்ச்சி. கிராமம் ஊழியம் செய்யும் வகுப்பார்கள் யாரும் ஊரை விட்டு போகக் கூடாது. போனால் அவர்கள் மீது நடவடிக்கை உண்டு. சாதி ஆச்சாரங்களை வரையறுத்து இன்ன வகுப்பார் இன்னின்ன சடங்குகள், உடைகள், உரிமைகள் ஆகியவைகளைத் தான் கைக்கொள்ள வேண்டும் என (களப் பிரர் ஆட்சியில்) அரசாணை பிறப்பித்தனர். அந்த ஆணையும் சாத்திர வல்லுனரான பார்ப்பனர்களின் அபிப்பிராயப்படியே வழங்கப்பட்டது. உதாரணமாக அய்ந்து வகைப்பட்ட கம்மாளர்களை அவர்கள் பிரதிலே மாகளைக் காட்டிலும் உயர்ந்தவர் களான அனுலோமரைச் சேர்ந்தவர்கள் என்றும், எனவே அவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாம் என்றும் ஆனால் உபநயன மந்திரம்...

தலையங்கம் பெரியார் கூறுகிறார் நமது முக்கிய கொள்கை

தலையங்கம் பெரியார் கூறுகிறார் நமது முக்கிய கொள்கை

“சாதி ஒழிய வேண்டும் என்பதும் – நாடு பிரிய வேண்டும் என்பதும்தான் நம் கழகத்தின் முக்கிய கொள்கை. மூடநம்பிக்கை ஒழிய வேண்டும் என்பதும் – வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதும், மற்றவைகளும், இதன் உட்பிரிவுதான்.” – ‘விடுதலை’ 21.8.1957 “திராவிடர் இயக்கத்துக்கு முக்கியக் கொள்கை இந்நாட்டில் பறையன் என்றும், பார்ப்பான் என்றும், உயர்ந்த சாதிக்காரன், தாழ்ந்த சாதிக் காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்றிருப்பதையும் அறவே ஒழித்து, எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கைகளை நடைமுறையில் செய்வதே ஆகும்.” – ‘விடுதலை’ 8.7.1947 கட்சி – இயக்கம் “கட்சி எனப்படுவது குறிப்பிட்ட, அதாவது சில உத்தியோகங்களை அல்லது பட்டங் களை மக்களுக்கு வாங்கித் தருவது; ஓரளவு மக்களுக்கு நன்மை பயக்க முயற்சிப்பது. ஆனால், இயக்கம் என்பது அவ்வாறல்ல; மக்களின் நிரந்தர உரிமைக்கும் வாழ்க்கையின் நலனுக்கும் ஏற்ற வகையில் உழைத்து ஆவன செய்வது. இன்னுங் கூற வேண்டு...

செயற்குழுவில் பெரும்பான்மை ஆதரவு இருந்தும், கழகப் பெயரை நாமே பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தும் பெரியார் இயக்கத்தின் மாண்பு காக்க – நாமே பிரிந்து செல்கிறோம்!

செயற்குழுவில் பெரும்பான்மை ஆதரவு இருந்தும், கழகப் பெயரை நாமே பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தும் பெரியார் இயக்கத்தின் மாண்பு காக்க – நாமே பிரிந்து செல்கிறோம்!

ஒன்றுபட்ட இயக்கத்தில் செயல்பாடற்று முடங்குவதைவிட பிரிந்து போய் செயல்படுவதே சாலச் சிறந்தது புதிய பெயர் சூட்டி இயக்கப் பணிகளை முன்னெடுக்க… ஆக.12 இல் ஈரோட்டில் கூடுவோம், வாரீர்! பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை. அன்பார்ந்த தோழர்களுக்கு வணக்கம். நமது கழகத்துக்குள் தோழர் இராமக்கிருட்டிணன் அணியினருக்கும், நமக்குமிடையே கடந்த பல ஆண்டுகளாகவே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் பற்றி 07.07.2012 அன்று சென்னையில் நடந்து முடிந்த தலைமைச் செயற்குழுவில் விரிவாகவே விவாதித்தோம். பெரியார் கொள்கைகளை முன்னெடுப்பதில் கழகத்தில் நாம் சந்திக்க வேண்டியிருந்த முட்டுக்கட்டைகள் – எதிர்ப்புகள் குறித்து விளக்கினோம். ஒன்றுபட்ட இயக்கத்தில் செயல்படாமல் முடங்குவதைவிட, பிரிந்து நின்று செயல்படுவதே சாலச் சிறந்தது என்பதையும் கூறினோம். இதைத் தொடர்ந்து செயற்குழுவில் கருத்தைத் தெரிவித்த உறுப்பினர்களில் பெரும் பான்மையோர் (82க்கு 56 பேர்) பிரிந்து செயல்படுவதே நல்லது என்று கூறிய நிலையிலும்கூட, நாம் ஒற்றுமை...

டெசோ மாநாடு – கொளத்தூர் மணி அறிக்கை

டெசோ மாநாடு – கொளத்தூர் மணி அறிக்கை

தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டுக் குழுவினருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோளாக விடுத்துள்ள அறிக்கை: டெசோ நடத்தும் மாநாடு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. மத்தியில் ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாக உள்ள தி.மு.க. முன் முயற்சி எடுத்து நடத்தும் இந்த மாநாடு குறித்து – ஈழத்தில் வாழும் தமிழர்களும் – புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் கவலையுடனும், எதிர்பார்ப்புடனும் இந்த மாநாட்டு முடிவு களுக்குக் காத்திருக்கிறார்கள். தமிழ் ஈழ ஆதரவு அமைப்பு நடத்தும் மாநாட்டில்தமிழ் ஈழம் குறித்து தீர்மானங்கள் எதுவும் வராது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட கருத்து – தமிழர்களுக்கு முதல் அதிர்ச்சியாகிவிட்டது. தமிழ் ஈழம் குறித்த தீர்மானம் வரவில்லை என்றாலும், குறைந்தது கீழ்க்கண்ட முடிவுகளையாவது வலியுறுத்த வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. ஈழத் தமிழர்கள் – ஒரு தனித் தேசிய இனம் அவர்களுக்குத் தங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமை கோர...

தளி ராமச்சந்திரன் கும்பலிடம் பறிகொடுத்த நிலங்களை மீட்டெடுப்போம்

தளி ராமச்சந்திரன் கும்பலிடம் பறிகொடுத்த நிலங்களை மீட்டெடுப்போம்

தோழர் பழனி நினைவேந்தல் கூட்டத்தில் கொளத்தூர் மணி மக்களுக்கு அழைப்பு தளி ராமச்சந்திரன் மீது நாம் எடுக்கும் பழி தலைக்கு தலை எடுப்பது அல்ல; அந்த கும்பல் பறித்துள்ள நிலங்களை மக்களுக்கு மீட்டுத் தருவதுதான் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார். கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி இராயக் கோட்டையில் பழனி நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றதை பார்த்த பின்பு, தளி பகுதியைச் சார்ந்த சிலர், “இதுவரை எம்.எல்.ஏ.வின் அக்கிரமங்களை யாரும் எதிர்த்து தைரியமாக பேசியதில்லை. இந்தக் கூட்டத்தை பார்த்தவுடன் எங்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. இது போன்ற ஒரு கூட்டத்தை எங்கள் ஊரிலும் நடத்த வேண்டும் என்று கழகத் தோழர்களிடம் கேட்டுக் கொண்டனர்.” பெரியார் திராவிடர் கழகம் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ‘தளி’யில் 5.8.2012 ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட கழக அமைப்பாளர் பழனி நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. விவசாயக்...

பார்ப்பன அடிமையாக ஆட்சி செய்த சோழ மன்னர்கள்

பார்ப்பன அடிமையாக ஆட்சி செய்த சோழ மன்னர்கள்

ராஜ ராஜ சோழனின் பெருமை பேசுவோருக்கு பதிலடி தந்து துரை. இளமுருகு எழுதிய நூல் ‘ராஜ ராஜ சோழனின் மறுபக்கம்’. ராஜராஜன் பார்ப்பன மேலாண்மையை உயர்த்திப் பிடித்ததை ஆதாரங் களுடன் விளக்குகிறது. நூலிலிருந்து… தமிழ் மன்னர்கள் ஆகிய சோழர்கள் ஆரிய பார்ப்பனர்களுக்குச் சிறப்பிடம் அளித்து அவர்களின் அடிமைகளைப் போல் ஆட்சி செய்து இருக்கின்றனர். இராசராச சோழன் உள்பட அனைத்து மன்னர்களின் கதையும் இதுதான். பார்ப்பன அடிமைத்தனத்தின் உச்சத்தைத் தொட் டவன் இராசராச சோழன். அதைத் தெளிவாகச் சான்றுகளுடன் விளக்கும் பகுதி பார்ப்பனர் களுக்கும் மன்னர்களுக்கும் இடையே ஒரு தவிர்க்க முடியாத உறவு, பிரிக்க முடியாத உறவு இருந்து வந்தது. இது எல்லா நாடுகளிலும் காணப்பட்ட மதம் – அரசு / அரசர்கள் உறவைவிட நெருக்க மானது. பிறப்பின் அடிப்படையில் அமைந்தது. பார்ப்பனர்களின் நால் வகுப்பு முறை பிறப்பின் அடிப்படையில் தொழில்களை அமைக்கும் விதமாக அமைந்திருந்தது. ஒருவன் எந்த குலத்தில் பிறந்தானோ அந்தக்...

மாற்றம்,  நமக்குள் தேவை தோழர்களே!

மாற்றம், நமக்குள் தேவை தோழர்களே!

மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படு வதற்காகவே சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு சமூகப் புரட்சியில் ஏற்பட வேண்டியதே யொழிய சிரிப்பு, விளையாட்டில் ஏற்படக் கூடியதில்லை. இதற்காக அநேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டி வரும். அநேக காரியங்கள் மற்றவர்களால் நாம் துன்பமும் இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும், கீழ் நிலைமைக்கும் ஆளாகி வருகின் றோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல், நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைதல் என்பது ஒரு நாளும் முடியாத காரியமாகும். சமூகத்தில் மேல் சாதி, கீழ் சாதி, அடிமை சாதி என்பவர்கள் இருப்பதோடு ஆண், பெண் தன்மை களில் உயர்வும் தாழ்வும் இருந்து வருகின்றது. இவை தவிர ஏழை – பணக்காரன், முதலாளி – தொழிலாளி தன்மைகளும் இருந்து வருகின்றன. இவற்றுள் சில இயற்கையாக ஏற்பட்டவை யாகவும், இவ்வளவுக்குக்...

இளைஞர்களே!

இளைஞர்களே!

வாலிபர்கள் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டும். தற்சமயம் சிலருக்கு ஒவ்வொரு மயிர்க்காலிலும் சமயப்பித்து இருக்கிறது. சாதி மத வேற்றுமைகளை ஒழிக்க வேண்டுவது அத்தியாவசியம். எல்லாவற்றிற்கும் நம்பிக்கையோடு உழைக்க வேண்டும். ஒழுக்கம், அறிவு, ஆசை எல்லோருக்கும் உண்டென்பது உண்மை. இவைகளினால் இந்தியாவிலுள்ள 33 கோடி ஜனங்களுள் 16.5 கோடி பெண்களும் அடிமையாய் இருந்து, சந்தைக்குப் போய் மாடு வாங்குவது போல் நடத்தப்படுவது ஒழிய வேண்டும். அவர்கள் முதலில் தங்கள் வாழ்க்கையை ஊன்றிப் பார்த்துப் பிறகு உலகத்தைப் பார்க்க வேண்டும். சுயமரியாதை இயக்கம் வாலிபர்கள் கையிலிருக்கிறது. பெண்களும் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு சுயமரியாதை உணர்ச்சியை உணர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். பெரியார், (திராவிடன் – 21.02.1929) பெரியார் முழக்கம் 09082012 இதழ்

பெண்களின் உரிமைகளை மறுக்கும் ‘நாகா’ பண்பாடு

பெண்களின் உரிமைகளை மறுக்கும் ‘நாகா’ பண்பாடு

பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதையே பண்பாட்டின் அடிப்படையில் நாகாலாந்தில் எதிர்க்கிறார்கள். பழம் பெருமை பண்பாடு என்பதற்காக கண்மூடித்தனமாக ஏற்பது சமூகத்தையே சீரழித்து விடும் என்பதற்கு நாகாலாந்து கலவரமே உதாரணம். ஒரு வார காலம், கிளர்ச்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது – இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து. பிப்ரவரி 1 அன்று நடைபெறுவதாக இருந்த, தற்போது இரத்து செய்யப்பட்டு விட்ட, நகராட்சி மன்றத் தேர்தல்கள்தாம் கலவரத்துக்குக் காரணம். இவ்வமைப்புகளில் மகளிருக்கு 33ரூ ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை எதிர்த்துத்தான் இத்தனை களேபரமும். மற்ற மாநிலங்களில் உள்ளது போலவே தங்கள் மாநிலத்திலும், மகளிருக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும் என்று, நாகாலாந்து அன்னையர் சங்கம், நீதிமன்றம் சென்று வாதிட்டது. 2012இல் இருந்து 2016 வரை நான்கு ஆண்டுகள் போராடியதன் பலன் – இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம், மகளிருக்கு 33ரூ ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், 16 ஆண்டு களுக்குப் பின்,...

வெளி வந்துவிட்டது!

வெளி வந்துவிட்டது!

‘நிமிர்வோம்’ பிப்ரவரி இதழ் பெரியார் கொள்கைகளை வளர்த்தெடுக்க வேண்டும் – பேராசிரியர் நன்னன் அவர்களுடன் நேர்காணல் போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க இலங்கையின் சதி. – பூங்குழலி ‘டிரம்ப்பின்’ இந்துத்துவம். உலகையே கூறுபோடும் அக்கிரகாரங்கள். – சுப. உதயகுமார் நூற்றாண்டுகாணும் எம்.ஜி.ஆர் : நிறையும் குறையும் பஞ்சாங்கம் அறிவியலா? – புரட்சிகர விஞ்ஞானி மேக்நாத் சாகா தந்த பரிந்துரை மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம் மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363 www.dvkperiyar.com / nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 16022017 இதழ்