கொமாரப் பாளையத்தில் கழகக் கொடி ஏற்றம்

275.2012 அன்று கொமாரபாளையம் கழகம் நடத்திய திராவிட இயக்க நூற்றாண்டு விழா மனு சாஸ்திர எரிப்பு விளக்கக் கூட்டம் கொமாரபாளையம் நகரப் பகுதியில் நடைபெற்றது. அதையொட்டி புதிய கழகக் கொடிக் கம்பங்களில் கழகக் கொடிகள் ஏற்றப்பட்டன. காவேரி நகர் புதுப்பாலம் அருகில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், நகராட்சி அலுவலகம் அருகில்  பொதுச் செய லாளர் இராமகிருட்டிணனும், மெயின்ரோடிலுள்ள ஆர்.ஏ.எஸ். தியேட்டர் அருகில் நகர தலைவர் இரா. திராவிடமணியும், பேருந்து நிலையம் அருகில் கேப்டன் அண்ணாதுரையும் கழகக் கொடிகளை ஏற்றி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் மு.சாமிநாதன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 12072012 இதழ்

You may also like...