திருப்பூரில், அரியலூர் நந்தினிக்கு நீதி வழங்கக்கோரி கண்டன ஆர்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 10.02.2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.30 மணியளவில் திருப்பூர்,மாநகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்துமுண்ணனி மாவட்ட தலைவர் ராஜசேகரை கைது செய் !
வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்று !
நந்தினி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கு !
தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய் !
என முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களும் பங்கெடுத்தனர்.ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் சோழன்,
திருவள்ளுவர் பேரவை அருண்குமார்,இஸ்லாமிய அமைப்பின் ரஹ்மான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி,அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, மாவட்டத்தலைவர் முகில்ராசு,மாவட்ட செயலாளர் நீதிராசன், மாநகரசெயலாளர் மாதவன்ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தோழர் சங்கீதா,கொளத்துப்பாளையம் ராமசாமி, முத்து,தனபால்,கருணாநிதி,அகிலன்,பரிமளராசன் உள்ளிட்ட கழகத்தோழர்கள் கலந்து கொண்டனர்.

16807146_1892615834355641_1821991367605941876_n 16830712_1892615657688992_7623192646095478038_n 16830793_1892614991022392_3251905062000846816_n

You may also like...