நந்தினிக்கு நீதி கேட்டு நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அரியலூர் தலித் சிறுமி நந்தினி மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை கொலையை கண்டித்து நீதிக் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் நடை பெற்றது. கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு  மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன் தலைமை ஏற்க,  நங்கவள்ளி அன்பு கண்டன உரையாற்றினார். அவரை தொடர்ந்து தலைமை செயற் குழு உறுப்பினர்களான சக்திவேல்,  விழுப்புரம் அய்யனார் மற்றும் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக கழக மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார். ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் வந்திருந்தனர். கண்ணன் நகர செயலாளர் நன்றியுரை கூறினார் .அறுபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் . பேருந்து நிலையத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கவனிக்க ஆர்ப்பாட்டம் சிறப்பாக அமைந்தது.

பெரியார் முழக்கம் 23022017 இதழ்

You may also like...