Author: admin

பெருமாள் மலையில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பெருமாள் மலையில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம் கருப்புச் சட்டைகளின் வரலாற்றில் அழியா புகழ் கொண்ட பெருமாள் மலையில் நடந்தது. பெருமாள் மலைக்கு ஒரு வரலாற்று சிறப்பு உண்டு என்பது 1985 ஆம் ஆண்டு பக்தர்கள் சிலரால் கடவுளின் சக்தி என்ற முழக்கத்தோடு சென்னிமலை கோவில் படிக்கட்டில் மாட்டுவண்டி ஏற்றினார்கள். அதே சென்னிமலையில் இது கடவுளின் சக்தி அல்ல; மனித சக்தி தான் என்று கூறி பெரியாரிஸ்டுகள் மாட்டு வண்டி ஏற்ற முயன்றபோது காவல்துறை தடுத்தது. அதன் பின்னர் சென்னிமலையைவிட செங்குத்தான படிகளைக் கொண்ட பெருமாள்மலையில் தோழர்கள் மாட்டுவண்டி ஏற்றி கடவுள் சக்தி என்ற புரட்டை முறியடித்தனர். அத்தகைய சிறப்பு மலை பெருமாள் மலை பகுதிக்கு உண்டு. கூட்டத்திற்கு பொ.இராசண்ணா தலைமையேற்க, மாவட்ட தலைவர் நாத்திகசோதி, அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். கிருட்டிணகுமார் வரவேற்புரை நிகழ்த்த, ஈசுவரமூர்த்தி, பகுத்தறிவாளர் பேரவை ப. சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவை....

ஓடுகிறார்…. ஓடுகிறார்… நாராயணசாமி ஓடுகிறார்

ஓடுகிறார்…. ஓடுகிறார்… நாராயணசாமி ஓடுகிறார்

கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் தலைவர் எஸ்.வி. உதயகுமாருக்கு வெளிநாட்டுப் பணம் ரூ.150 கோடி வந்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து, பொதுக் கூட்டங்களிலும் பேசி வந்தார். அமைச்சர் நாராயணசாமியின் இந்த அவதூறுக்கு எதிராக உதயகுமார், மத்திய அமைச்சர் நாராயண சாமிக்கு தனது வழக்கறிஞர் இராதாகிருடடிணன் வழியாக தாக்கீது அனுப்பியிருந்தார். உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் நாராயணசாமி, தொண்டு நிறுவனங்கள் வழியாக உதயகுமாருக்கு பணம் வருவதாகத் தாம் கூறவே இல்லை என்றும், தான் கூறாத ஒன்றை கூறுவதாக உதயகுமார் கூறி, தன்னை களங்கப்படுத்துவதாகவும், தனது வழக்கறிஞர் வழியாக பதில் அனுப்பியுள்ளார். இதன் மூலம்  ‘வீரம்’ பேசிய நாராயணசாமி, தலைகுப்புற சரணடைந்துள்ளார். “உங்களுடைய கட்சிக்காரர் உதயகுமார் கூறியிருப்பதுபோல், அமைச்சர் நாராணசாமி, அவருக்கு எதிராக, எந்தப் புகாரையும் கூறவில்லை. அவர் நடத்தும் தொண்டு நிறுவனம் வரியாக ரூ.150 கோடி பெற்றதாக அமைச்சர் நாராயணசாமி ஒரு...

சங்கரன் கோயில் இடைத் தேர்தல்:  ம.தி.மு.க. வேட்பாளருக்கு கழகம் ஆதரவு

சங்கரன் கோயில் இடைத் தேர்தல்: ம.தி.மு.க. வேட்பாளருக்கு கழகம் ஆதரவு

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் குறித்து கழகத்தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரியார் திராவிடர் கழகம், களத்தில் நின்ற எந்த அணியையும் ஆதரிக்க இயலாத நிலையில் தேர்தலில் விலகி நின்றது. இப்போது சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் தனித்தனியாக களம் இறங்கியுள்ளன. போட்டியிடும் கட்சிகளில் முல்லைப் பெரியாறு உரிமை, கூடங்குளம் எதிர்ப்பு, ஈழத் தமிழர் பிரச்சனை, தூக்குத் தண்டனை எதிர்ப்பு போன்ற தமிழர் உரிமைகளுக்காக முனைப்புடன் போராடி, வாதாடி வரும் அமைப்பான ம.தி.மு.க., தனது கட்சியின் வேட்பாளரை (தோழர் சதன் திருமலைக்குமார்) நிறுத்தியுள்ளது. தமிழர்களின் உரிமைக்கான களங்களில் உறுதியுடன் முனைப்பாகப் போராடிவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நிறுத்தியுள்ள வேட்பாளரை ஆதரித்து வெற்றிப் பெறச் செய்ய வேண்டுமாய் சங்கரன்கோயில் தொகுதி வாக்காளர்களை பெரியார் திராவிடர் கழகம் கேட்டுக் கொள்கிறது. ம.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டங்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் ஒரு நல்வாய்ப்பு எனக் கருதி...

‘இடிந்தகரை’ மக்கள் குரல் தமிழகத்தின் போர்க்குரலானது அணுசக்திக்கு எதிராக ஆர்ப்பரித்த மக்கள்

‘இடிந்தகரை’ மக்கள் குரல் தமிழகத்தின் போர்க்குரலானது அணுசக்திக்கு எதிராக ஆர்ப்பரித்த மக்கள்

இடிந்தகரை பொது மக்கள் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கடந்த பல மாதங்களாக நடத்தி வந்த போராட்டம் தமிழக மக்களின் ஒருமித்த உரிமைப் போராட்டமாக உருவெடுத் துள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி தலைநகர் சென்னையில் திரண்ட மக்கள் சக்தி இதை உறுதி செய்துவிட்டது. அணுமின் சக்திக்கு எதிராக நடக்கும் போராட்டம் கூடங்குளம், இடிந்தகரை கிராம மக்களின் போராட்டமல்ல; தமிழக மக்களின் போராட்டம் என்பதை சென்னையில் பிப்.26 ஆம் தேதி நடந்த எழுச்சி மிக்க கருத்தரங்கம், மாபெரும் பேரணி, கடலலைபோல் மக்கள் திரண்டிருந்த திறந்த வெளி மாநாடு – ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியது. நாட்டில் பணபலம், அதிகார பலத்துடன் உலா வரும் தேர்தல் அரசியல் பகாசுர கட்சிகளின் பங்களிப்பின்றி வெகு மக்கள் இயக்கங்களுடன் இணைந்து மக்கள் நடத்திய இந்த அணுஉலை எதிர்ப்பியக்க மாநாடு, உலகம் முழுதும் நடந்து வரும் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தில் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும். பல்லாயிரக்கணக்கில் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் பல்வேறு...

பனிமலர்-சதீஷ் சாதி மறுப்பு மணவிழா

பனிமலர்-சதீஷ் சாதி மறுப்பு மணவிழா

கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் இரா.பன்னீர்செல்வம் – தமிழ்ச் செல்வி ஆகியோரின் மகளும், சூலூர்  கழகத் தோழர் வீரமணியின் தங்கையுமான ப. பனிமலர் – இரா. சதீஷ் நாராயணன் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 27.2.2012 அன்று பேராசிரியர் சரசுவதி தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்க்கைத் துணை ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்தார். பொதுச் செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கு.இராமகிருட்டிணன், பேராசிரியர் புரட்சிக்கொடி, சூலூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சூ.ர. தங்கவேலு, வழக்கறிஞர் தடா சந்திரசேகர், வழக்கறிஞர் மகாலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இது ஒரு சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணமாகும். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 08032012 இதழ்

கழகத் தோழர் இரா. டேவிட் – இரா. தீபாஸ்ரீ    வாழ்க்கைத் துணை ஏற்பு விழா

கழகத் தோழர் இரா. டேவிட் – இரா. தீபாஸ்ரீ வாழ்க்கைத் துணை ஏற்பு விழா

22.1.2012 அன்று காலை 11.30 மணிக்கு சேலம் மேற்கு மாவட்டசெயலாளர் தோழர் இரா. டேவிட் – இரா. தீபாஸ்ரீ இணையரின் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையேற்க, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார். இவ்விழாவில் ம.தி.மு.க சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக் கண்ணன், சேலம் சங்கீதா மெடிக்கல் பாலசுப்ரமணியன், சேலம் மேற்கு மாவட்ட கழகத் தலைவர் சக்திவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். பெரியார் முழக்கம் 08032012 இதழ்

டில்லியின் அதிகார ஆணவம்

டில்லியின் அதிகார ஆணவம்

‘தேசிய பயங்கரவாத தடுப்பு மய்யம்’ ஒன்றை உருவாக்க மத்திய உள் துறை அமைச்சகம் மேற் கொண்ட முயற்சிக்கு காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் கடுமையாக எதிர்த்ததால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. மத்திய உளவு நிறுவனமே மாநிலங் களில் நேரடியாக தலையிட்டு பயங்கர வாத நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காகவே இந்த அமைப்பு உரு வாக்கப்பட்டுள்ளது. மாநில முதல மைச்சர்களை கலந்து ஆலோசிக்கா மலே ‘சட்டாம் பிள்ளைத்’தனமாக மத்திய அரசு செயல்பட்டது. மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் காங்கிரசோ, பா.ஜ.க.வோ, மத்தியில் அமைச்சரவை அமைக்க முடியாது என்ற நிலை வந்த பிறகும் காங்கிரஸ் ஏதோ, அகில இந்திய அளவில் செல்வாக்குள்ள கட்சி போல கற்பனைக் கனவில் மிதந்து கொண் டிருக்கிறது. உண்மையில் சோனியா காந்தி, இப்படி ஒரு கற்பனையில் மூழ்க்கிக் கிடந்தவர்தான். 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு நம்பிக்கை யில்லா வாக்கெடுப்பில் கவிழ்ந்தபோது சோனியா, தன்னிடம் 272 நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆதரவு...

நெடுமானூரில் கழகக் கூட்டம்

நெடுமானூரில் கழகக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 12.2.2012  ஞாயிறு மாலை 6 மணியளவில் கழகக் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நெடுமானூரில் நடைபெற்றது. தெ.செ. நாவாப் பிள்ளை தலைமை தாங்கினார். மு. திரு நாவுக்கரசு, பெரியசாமி, ரா. சிவராமன், ச. வசந்தகுமார் ஆகியோர் முன்னலை வகிக்க, ச.கா. இளையராசா வரவேற்புரையாற்றினார். செ. பிரபு, திருமால், நா.வெற்றிவேல், ந. அய்ய னார் ஆகியோர் கருத்துரையாற்றினர். இறுதியாக காவை இளவரசன் ‘மந்திரமல்ல தந்திரமே’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நிகழ்த்தினார். விழுப்புரம் கணேசன், பெரியார் வெங்கட், கி.ஆசைத்தம்பி, க.இராமர், கல்லை சங்கர் உள்பட ஏராளமான தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அ.ரமேசு நன்றி கூறினார். விழுப்புரம், கடுவனூர் கிளை கழகத் தோழர்களால் உருவாக்கப் பட்டது திராவிடன் சடுகுடு குழு. 18.1.2012 புதன் அன்று பொங்கல் விழாவை முன்னிட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 20 குழுவினர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிப் பெற்ற அணியினருக்கு முதல் பரிசுத்...

திருப்பூரில் கழகம் நடத்திய பொங்கல் விழா

திருப்பூரில் கழகம் நடத்திய பொங்கல் விழா

கழகம் சார்பாக திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் மூன்றாம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தை பொங்கல் விழா 22.1.2012 காலை நடைபெற்றது. அலமேலு பாலாஜி மருத்துவமனை மருத்துவர் மனோகர் பொங்கல் வழங்கி விழாவைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாலை 6 மணி வரை நடைபெற்றது. முல்லை பெரியாறு நாயகன் கர்னல் பென்னிகுயிக் படத்திற்கு சு. துரைசாமி (மாவட்ட தலைவர்) மாலை அணிவித்து துவக்கி வைத்தார். க. அகிலன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இரவு 7 மணிக்கு முல்லைப் பெரியாறு சிக்கலும் தீர்வும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.  தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். கழகத் தோழர்கள் மாஸ்கோ நகர் சம்பூகன், விசயன், பாடகர் தியாகு, மாநகரச் செயலாளர் முகில்ராசு, கிளாகுளம் செந்தில், கோபிநாத், மாதவன், தம்பி, பாலு, நீதியரசன், சாமுண்டிபுரம் மூர்த்தி, தண்டபாணி,...

உண்மைகளை மறைக்கும் இலங்கை விசாரணை ஆணையம்

உண்மைகளை மறைக்கும் இலங்கை விசாரணை ஆணையம்

இலங்கை தனக்குத் தானே ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்துக்கொண்டதற்குக் காரணம் சர்வதேச அளவில் உருவான அழுத்தம்தான். டப்ளின் நகரில் செயல்படும் மக்கள் ‘நிரந்தரத் தீர்ப்பாயம்’ – அதைத் தொடாந்து பான்கி மூன் நியமித்த மூவர்குழு விசாரணை அறிக்கைகள் – இலங்கை அரசின் போர்க் குற்றத்தை உறுதிப்படுத்தின. அய்ரோப்பிய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பின. இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி இலங்கை அரசு ஒரு விசாரணை ஆணையம் அமைக்கும் நிலைககு தள்ளப்பட்டது. ஏற்கனவே இலங்கை அதிபர் நியமித்த பல ஆணையங்கள் உருப்படியாக எந்த விளைவுகளையு ம் ஏற்படுத்தாத நிலையில், மீண்டும் இலங்கை ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது கண் துடைப்பு என்றே சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறின. இந்த விசாரணை ஆணையத்தின் தலைவரான சி.ஆர். டி.சில்வா, இலங்கை அரசின் தலைமை சட்ட அதிகாரியாவார். 2006-2009 ஆம் ஆண்டில் இலங்கை அதிபர் ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு...

அணுஉலை ஆபத்து விளக்கக் கூட்டம்

அணுஉலை ஆபத்து விளக்கக் கூட்டம்

வடசென்னை பெ.தி.க. சார்பில் கடந்த 22.2.12 அன்று புரசைவாக்கம் பகுதியில் அணுஉலை ஆபத்து என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கழக தலைவர் கொளத்தூர் மணி, துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர்கள், சுந்தரராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வடசென்னை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் குமாரதேவன் வரவேற்புரையாற்ற, மாவட்ட தலைவர் எ.கேசவன் தலைமையேற்க சமர்பா குமரன் மற்றும் நாத்திகன் இன எழுச்சிப் பாடல்கள் நிகழ்ச்சி தொடங்கியது. பெரியார் முழக்கம் 08032012 இதழ்

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி

1912 பார்ப்பன ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த காலம் இது! நூற்றுக்கு மூவராக மட்டுமேயிருந்த பார்ப்பனர்கள் அரசு உயர் பதவிகள் அனைத்திலும் மிகப் பெரிய அளவில் இடம் பெற்று ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக, ஒரு கணக்கெடுப்பின்படி டிப்டி கலெக்டர்களில் 55ரூ, சப்ஜட் களில் 83ரூ, மாவட்ட முன்சீப்களில் 72ரூ பார்ப்பனர்களாகவே இருந்தனர். உயர் பதவியிலுள்ள பார்ப்பனர்கள் தமக்குக் கீழ் உள்ள பார்ப்பனரல்லாதாரைப் பாரபட்சமாக நடத்துதல், பதவி உயர்வு பெறவிடாமல் அழுத்தி வைத்தல், சுய ஜாதி அபிமானத்துடன் அவர்களை இழிவுபடுத்துதல் ஆகிய கொடுமைகளைப் புரிந்து வந்தனர். இக்கொடுமைகளையும், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளியில் எடுத்துச் சொல்லக்கூட திராணி அற்றவர்களாகப் பார்ப்பனரல்லாத அரசு அலுவலர்கள் இருந்தனர். இந்த நிலையில் சென்னை ரெவின்யூபோர்டு அலுவலகத்திலும், மற்றும் சில அரசு அலுவலகங்களிலும் பணி புரிந்த சில பார்ப்பனரல்லாத எழுத்தர்களும் அலுவலர்களும் தங்கள் குறைகளை வெளியிடவும் பார்ப்பன ஆதிக்கத்தால்தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடவும், “சென்னை அய்க்கிய சங்கம்” என்ற...

மதுரைப் பகுதியில் சட்டவிரோத ‘பால்ய’ திருமணங்கள்

மதுரைப் பகுதியில் சட்டவிரோத ‘பால்ய’ திருமணங்கள்

மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுமிகளுக்குத் திருமண வயது வரும் முன்பே ‘பால்ய விவாகம்’ நடத்தும் கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சில குறிப்பிட்ட சாதிப் பிரிவைச் சார்ந்தவர்கள், பள்ளிப் படிப்பு படிக்கும் போதே, பெண்கள் ‘காதலில்’ சிக்கி விடுவார்கள் என்று அஞ்சியும் அதனால் தங்களின் குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்றும், அதைத் தவிர்க்கவே இளம் வயதில் திருமணம் செய்து வைத்து விடுவதாகவும் கூறுகிறார்கள். உசிலம்பட்டி அருகே வி.கல்லுப்பட்டியைச் சார்ந்த 8வது படிக்கும் 13 வயது சிறுமிக்கு அவரைவிட 17 வயது அதிகமுள்ள மணமகனுக்கு அடுத்த சில வாரங்களில் திருமணம் நடைபெற உள்ளது. இது தங்களின் சாதி வழக்கமாகத் தொடர்ந்து வருகிறது என்கிறார்கள். பெண்ணின் தாய்க்கு 11 வயதிலும், பெண்ணின் மூத்த சகோதரிக்கு 12 வயதிலும் திருமணம் நடந்ததாம். ‘எங்களுக்கு குடும்ப கவுரவமும் உறவுகளுமே முக்கியம்’ என்கிறார், 70 வயது மூதாட்டி கருப்பாயி. தாய்மாமனுக்கு பெண் கேட்க முழு உரிமை உண்டு. “எனக்கு பெண்...

பெண்ணுரிமையை மறுக்கும் தனியுடைமை

பெண்ணுரிமையை மறுக்கும் தனியுடைமை

இப்போது இங்கு பெண்ணுக்குத் தாலி கட்டப்பட்டது. இதற்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லப்பட்டாலும் இந்தத் தாலி கட்டுவதானது, “இந்தப் பெண் இந்த மாப்பிள்ளையினுடைய சொத்து” என்கின்ற அறிகுறிக்கு ஆகத்தான். இந்தத் தத்துவம் சுலபத்தில் மாறிவிடும் என்று நான் கருத முடியவில்லை. தாலி கட்டாத கல்யாணம் நடந்த போதி லும் மணப்பென் மணமகனுடைய சொத்து என்பது மாறிவிடும் என்று நான் நினைக்க முடியவில்லை. ஏனெனில், இத் திருமணத்துக்குச் சம்மந்தப் படாத கற்பு என்பது ஒன்று பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப் பட்டிருக்கிறது. கற்பு என்பதைச் சுகாதாரத்தையும், சரீரத் தத்துவத்தையும், பொது ஒழுக்கத்தையும் பொறுத்து நான் ஆதரிக்கிறேன் என்றாலும் இன்று அந்த முறையில் கற்பு கையாளப்படுவதில்லை. உதாரணம் என்னவென்றால் கற்பு ஆண்களுக்கு வலியுறுத்தப்படுவதில்லை என்பதிலிருந்தே உணர்ந்து கொள்ளலாம். அதற்கு உதாரணம் என்னவென்றால் இந்துக் கடவுள்கள் என்பவற்றிற்கும்கூட ஆண் கடவுள்களுக்குக் கற்பு வலியுறுத்தப்படுவதில்லை. ஆதலால், அந்த – அதாவது ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு...

ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேசப் பிடி இறுகுகிறது போர்க்குற்றங்கள்: அய்.நா. விவாதிக்குமா?

ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேசப் பிடி இறுகுகிறது போர்க்குற்றங்கள்: அய்.நா. விவாதிக்குமா?

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவிலுள்ள அய்.நா. அவையில் (அமெரிக்காவின் நியுயார்க்கிலும் அய்.நா. மன்றம் உள்ளது) தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையில் தமிழர்கள் மீதான போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலிமை பெற்று வருகிறது. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரலாம் என்று தெரிகிறது. அய்.நா.வில் எந்த நேரத்திலும் எந்த மாற்றமும் நிகழலாம் என்பதால்  அந்தத் தீர்மானம் கொண்டு வரப்படும்போதுதான் அது உறுதியாகும். ஆனாலும், அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தின் நகல், மனித உரிமைக் குழுவில் இடம் பெற்றுள்ள 47 உறுப்பு நாடுகளுக்கும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் கூட இலங்கை மீது சர்வதேச போர்க் குற்ற விசாரணையை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நகல் தீர்மானம் கூறுவது என்ன? இலங்கை அரசு, தனக்குத் தானே நியமித்துக் கொண்ட ‘கற்ற படிப்பினை மற்றும் பாதிப்பிலிருந்து மீட்டல்’ என்ற (எல்.எல்.ஆர்.சி.)...

உலகம் – உயிர் – சாதி தோன்றியது, இப்படித்தான்!

உலகம் – உயிர் – சாதி தோன்றியது, இப்படித்தான்!

ஆதாரங்களுடன் அறிவியல் கூறும் ஆராய்ச்சி முடிவுகளின்படி பிக்பேங்க் என்ற பெரிய வெடிச் சிதறல் காரணமாக இந்த ‘அண்டம்’ என்னும் பிரபஞ்சம் தோன்றி 1500 கோடி ஆண்டுகள் ஆகின்றது. அதன் தொடர்ச்சியாக விண்மீன் (நட்சத்திர) மண்டலங்களும் (கேலக்ஸி), அவற்றின் விண்மீன்களும் தோன்றின. இந்த அண்டத்தில் கோடானுகோடி விண்மீன்களை உள்ளடக்கிய கோடிக்கணக்கான விண்மீன் மண்டலங்கள் உள்ளன என்பதைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உருவான விண்மீன் மண்டலங்களில் ஒன்றுதான் நமது கதிரவ விண்மீனை (சூரிய நட்சத்திரத்தை) உள்ளடக்கிய பால்வெளி விண்மீன் மண்டலம் (மில்கி வே கேலக்ஸி) ஆகும். நமது இந்தப் பால்வெளி விண்மீன் மண்டலத்தில் மட்டும் நம் கதிரவனைப் போன்ற 20000 கோடி விண்மீன்கள் உள்ளன. பால்வெளி விண்மீன் மண்டலத்திலுள்ள நம் கதிரவ விண்மீன் தோன்றி இன்றைக்கு 500 கோடி ஆண்டுகள் ஆகின்றது. இன்னும் 600 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு நமக்கு ஒளி தந்து நம் உயிருக்கு ஆதாரமாக இருக்கும் இந்தக்...

திராவிடர் இயக்கம்: படிப்பினையும் தேவையும்

திராவிடர் இயக்கம்: படிப்பினையும் தேவையும்

திராவிடர் இயக்கம் குறித்து ‘இந்தியா டுடே’ இதழுக்கு (மார்ச் 14) கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை இது. சில சிறு மாற்றங்களுடன் ‘இந்தியா டுடே’ வெளியிட் டுள்ளது. இதழுக்கு அனுப்பிய முழுமையான கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். தமிழ்நாட்டின் சமூக வரலாற்றிலிருந்து திராவிடர் இயக்கத்தைப் பிரித்துப் பார்க்க இயலாது. இப்போது மீண்டும் திராவிடர் இயக்கம் பற்றிய விவாதங்கள் தொடங்கியுள்ளன. உண்மையில் ‘திராவிடர் இயக்கம்’ – அன்று சென்னை மாகாணத்தில் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்கு நீதி கேட்டு உருவானதுதான். தென்னாட்டில் அடங்கி யிருந்த கேரளா, ஆந்திரா, கருநாடக மாநிலங்களை உள்ளடக்கி எழுந்தது அல்ல. இஸ்லாமியர், கிறிஸ்தவர் உட்பட, பார்ப்பனரலலாதவர்கள் உரிமைக் குரல் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே தனி மனிதர்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கியது. 1909 ஆம் ஆண்டில் சென்னையில் புருஷோத்தம (நாயுடு), சுப்பிரமணியம் என்ற இரு வழக்கறிஞர்கள், பார்ப்பனரல்லாத மாணவர்களின் ‘கல்வி...

புழல் சிறைக் கைதியின் கடிதம்

புழல் சிறைக் கைதியின் கடிதம்

கடந்த சில மாதங்களாக சிறையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டைப் படித்து வருகிறோம். வெளியில் நடக்கும் செய்திகளை அறிந்து மிகவும் உற்சாகம் பெற்று வருகிறோம். 19.1.2012 இதழில் வெளிவந்த ‘25 ஆண்டுகளாக நடக்கும் கூடங்குளம் எதிர்ப்பு இயக்கம்’ என்ற கட்டுரை மிகச் சிறப்பாக உண்மைகளை விளக்கியது. கூடங்குளம் எதிர்ப்பு திடீரென்று தோன்றியதாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தரகு முதலாளிகளுக்கு சேவகம் செய்து வரும் ஏடுகளுக்கு இந்தக் கட்டுரை சரியான பதிலாக இருந்தது. – வே. சுந்தரமூர்த்தி, புழல் மத்திய சிறை பெரியார் முழக்கம் 15032012 இதழ்

புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா சேர்ப்பு: சென்னை மாவட்டக் கழகம் தீவிரம்

புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா சேர்ப்பு: சென்னை மாவட்டக் கழகம் தீவிரம்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தாக்கள் சேர்க்கும் பணியில் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் முனைப்பாக செயல்பட்டு வருகின்றனர். 500 சந்தாக்களை இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறார்கள். முதல் கட்டமாக பிப்.23 அன்று தலைமை அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் 100 சந்தாதாரர்களுக்கான தொகை, முகவரிப் பட்டியலை தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, கழகத் தலைவரிடம் வழங்கினார். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் பெருமளவில் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் இயக்க நூற்றாண்டு  கருத்தரங்குகளை மாநாடுபோல் நடத்துவது என்றும், புரட்சிக் கவிஞர் விழாவை பகுத்தறிவு தமிழ் உணர்வாளர்களை அழைத்து, அறிவியல் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழர் புரட்சிப் பண்பாட்டு விழாக்களாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கேசவன், வழக்கறிஞர் குமாரதேவன், தென்சென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தபசி குமரன் உள்ளிட்ட தோழர்கள் பலரும் கருத்தினைக்...

நெடுவாசல் மீட்போம்! இரயில் மறியல் போராட்டம் மதுரை 08032017

நெடுவாசல்மீட்போம் ! நாளை மதுரையில் ரயில் மறியல் போராட்டம். நாள் : 08.03.2017 நேரம் : காலை 10:30 மணி. இடம்: ரயில் நிலையம்,மதுரை. “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கை விடக் கோரியும் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழர் விரோதி மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும் திராவிடர்விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் பல்வேறு தோழமை அமைப்புகள் பங்கேற்கும் ரயில்மறியல் தொடர்புக்கு: மா.பா.மணிகண்டன், மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம், மதுரை மாவட்டம். 9600 40 8641  

நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் தக்கலை 04032017

குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  நீட் தேர்வைக் கண்டித்து தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. மாவட்டச் செயலாளர் தோழர் தமிழ் மதி தலைமைத் தாங்கினார். தோழர் நீதி அரசர் (தலைவர் பெ.தொ.க) முன்னிலை வகித்தார். தோழர் விஸ்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் பால் பிரபாகரன்,கழக பரப்புரைச் செயலாளர் கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தோழர்கள் மேசியா (ப.நா.புரம் ச.ம.தொ.செயலாளர்,வி.சி.க,) போஸ் (சமூக ஆர்வலர்)  முரளீதரன் (பொது பள்ளிகான மாநில மேடை செயலாளர்) தோழர்கள்  இரமேஸ், இராஜேஸ் குமார், இராதா கிருஸ்ணன் MCUP(I), ஜாண் மதி, சூசையப்பா, அனி ஆகியோர் கலந்துக் கொண்டனர். தோழர்கள் அனைவரும் மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை ஆவேசத்துடன் முழங்கினர். தோழர் மஞ்சு குமார் நன்றியுரையுடன் முடிந்தது. ட

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா !

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா ! தோழர் பசு.கவுதமன் தொகுத்த ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்.” நாள் : 04.03.2017 சனிக்கிழமை,மாலை 5 மணி. இடம் : சுசி ஹால்,கலைஞர் அறிவாலையம் அருகில், சத்திரம் பேருந்து நிலையம்,திருச்சி. தலைமை : தோழர் தா.பாண்டியன், இயக்குனர்,நியூசெஞ்சுரி புக் ஹவுஸ். வாழ்த்துரை : தோழர் இந்திரஜித், பொறுப்பாசிரியர், ஜனசக்தி. தோழர் ஶ்ரீதர், மாநிலக்குழு,உறுப்பினர் சிபி.எம். நூல் பரப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் பசு.கவுதமன். நூல் தொகுப்பாசிரியர்.

உலக மகளிர் தின விழா ! ஈரோடு 08032017

உலக மகளிர் தின விழா ! நாள் : 08.03.2017 புதன்கிழமை இடம்: ஈரோடு மாநகரம். நேரம் : காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை. அறிவுசார் வாழ்வியல் நிகழ்வுகளும், கருத்தரங்கம், தமிழர் கலை விழா பங்கு பெறுவோர் : மாண்புமிகு சுப்புலட்சுமி ஜெகதீசன், மேனாள் மத்திய அமைச்சர். பேராசிரியர் சரஸ்வதி, மக்கள் சிவில் உரிமைக் கழகம். கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக்கழகம். ஒருங்கிணைப்பு, தோழர் இரத்தினசாமி, அமைப்புச் செயலாளர், திராவிடர் விடுதலைக்கழகம்

மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் ! குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்.. மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து. நாள் : 04.03.2017 சனிக்கிழமை,காலை 9 மணி. இடம் : வட்டாட்சியர் அலுவலகம் முன்பு,அண்ணா சிலை அருகில்,தக்கலை,குமரி மாவட்டம். கண்டன உரை : தோழர் பால்.பிரபாகரன், பரப்புரைச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள்

நெடுவாசல் போராட்ட களத்தில் கழக தோழர்கள்

நெடுவாசல் போராட்ட களத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களோடு திருச்சி,பேராவூரணி கழக தோழர்கள். காணொளி இணைப்பு செய்தி மனோகரன் முத்துக்கண்ணன்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலை இடமாற்றம் – கழகம் மனு

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலையை இடமாற்றம் செய்வது குறித்த விவகாரத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.இரத்தினசாமி ஈரோடு மாநகராட்சி ஆணையாளரைச் சந்தித்து விண்ணப்பம் அளித்தார்.. சிலை இடமாற்றம் தொடர்பாக எந்தப் பணிகளாயினும் திராவிடர் விடுதலைக் கழகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் எப்பணியையும் செய்யக் கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.. மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் மாநிலத்தலைவர் தோழர்.கண குறிஞ்சி, திமுக மாவட்டப் பிரதிநிதி தோழர்.பகீரதன் ஆகியோர் உடனிருந்தனர் செய்தி பசி திவிக

இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று முழக்கத்துடன் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று மாபெரும் ஆர்ப்பாட்டம் …. உணர்வாளர்களே , தோழர்களே வாருங்கள் … 05032017 மாலை 3 : 00 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் 72992 30363

பேச்சுரிமையை மறுக்கும் தமிழக அரசு !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று 01032017 அன்று மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் காஸ் திட்டத்தை கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க கோரியும் மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது இந்த நிலையில் திடீரென 27022017 நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து மன்னார்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கடிதம் கொடுத்து உள்ளார் . நீதிமன்ற அனுமதிக்கு வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விரோத அரசுகளின் முகமூடிகள் மக்கள் மன்றத்தில் தோலுரிக்கப்படும் . செய்தி மன்னை காளிதாசு

இந்தத் துணிச்சலுக்குப் பெயர்தான் பெரியார்

இந்தத் துணிச்சலுக்குப் பெயர்தான் பெரியார்

இந்தி எதிர்ப்புப் போரில் இளைஞர்கள், பெண்கள், அவர்களுடன் சில கைக்குழந்தைகள் என எல்லோரும் சிறை சென்றனர். இறுதியில் 1938 டிசம்பரில் பெரியாரும் சிறை புகுந்தார். அவர் சிறை சென்ற நாளில், தமிழ்நாடே ஆர்ப்பரித்து நின்றது. அப்போது அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் வரலாற்றுப் புகழ் பெற்றது. நீதிபதியின் முன்னால் நின்று, தன்னுடைய கூற்றை எழுதிப் படித்தார் பெரியார். “இந்த நீதிமன்றம் காங்கிரஸ் மந்திரிசபைக்குக் கட்டுப்பட்டதாக உள்ளது. நீங்களும் ஒரு பார்ப்பனர் வகுப்பைச் சேர்ந்தவர். எனவே இந்த நீதிமன்றத்தில் நான் நியாயத்தை எதிர்பார்க்கவில்லை” என்று வெளிப்படையாகக் கூறினார். இப்படி ஒருவர் எங்கேனும் நீதிமன்றத்தில் கூறியிருப்பாரா என்று தெரியவில்லை. இறுதியில் அவர் கூறியுள்ள வரிகள் எண்ணி எண்ணி வியக்கத்தக்கனவாக உள்ளன. அந்த வரிகளை அப்படியே பார்க்கலாம்: “எனவே கோர்ட்டாரவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தி அடையும் வண்ணம், எவ்வளவு அதிகத் தண்டனை கொடுக்கமுடியுமோ அவ்வளவையும், பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி...

தோழர் விடுதலை இராசேந்திரன் மின்னூல்கள்

இந்தியா விலைபோகிறது! – விடுதலை க. இராசேந்திரன் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/9.pdf சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள் – விடுதலை இராசேந்திரன் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/24.pdf தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு? – விடுதலை இராசேந்திரன் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/34.pdf பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம் – விடுதலை இராசேந்திரன் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/09/panpattu-samooka.pdf மரண தண்டனையை ஒழிப்போம் – விடுதலை இராசேந்திரன் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/63.pdf மனுதர்மம் என்ற அதர்மம் – தொகுப்பு விடுதலை இராசேந்திரன்  http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/67.pdf மோடித்துவ முகமூடி – விடுதலை க. இராசேந்திரன்  http://dvkperiyar.com/wp-content/uploads/2015/11/modithuva-mugamudi.pdf

தோழர் கொளத்தூர் மணி மின்னூல்கள்

இடஒதுக்கீடு உரிமை போராட்ட வரலாறு – கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/7.pdf ஈழம் முதல் அணுவுலை வரை.. சமகால பிரச்சனைகளில் பெரியாரியல் பார்வை – கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/09/elam-muthal-anu-vulai-varai.pdf காந்தியார் படுகொலைநாள் – கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/18.pdf சுதந்திர வேட்கை- கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/26.pdf சேதுக் கால்வாய்த் திட்டம் – கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/27.pdf தமிழர் பண்பாடு- கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/32.pdf திராவிடர் கழகம்- பெயர் மாற்றம் – தோழர் கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/37.pdf தோழர் கொளத்தூர் மணியுடன் நேர்காணல் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/40.pdf பார்ப்பன இந்திய தேசிய – பன்னாட்டுக்கொள்ளை – கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/45.pdf பெயருக்கு பின்னால்…கொளத்தூர் மணி உரை http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/52.pdf பெரியாருக்கு எதிரான ‘முனை மழுங்கும்’ வாதங்கள் – கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/09/periyarukku-ethirana.pdf பெரியாரும் தனிதமிழ்நாடும் – கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/58.pdf விடுதலை வேட்கை- கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/72.pdf

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் 01032017

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் 01032017

மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் ! ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க கோரியும் திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மத்திய அரசி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாள் : 01.03.2017 மாலை 6 மணிக்கு இடம் : மன்னார்குடி, பெரியார் சிலை அருகில். தலைமை : இரா .காளிதாசு மாவட்ட செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம் சிறப்புரை : தஞ்சை விடுதலைவேந்தன் தலைமை கழக பேச்சாளர் ம தி மு க  

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (2)

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (2)

1913  சென்னை அய்க்கிய சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நடேசனார் மருத்துவமனைத் தோட்டத்திலேயே சிறப்பாக நடைபெற்றது. ஓரிருவரைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் ஆண்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டதானது பார்ப்பனர் தம் ஆதிக்கம் ஏனையோரை எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது என்பதைக் காட்டியதுடன், பார்ப்பனரல்லாதார் எனும் உணர்வின் ஒருமித்த வலிவையும் உணர்த்தியது. “சென்னை அய்க்கிய சங்கம்” என்ற பெயர் இச்சங்கத்தின் நோக்கத்தையும், ஆற்றும் பணியையும் குறிக்கும் வகையில் இல்லாமல், பொருத்தமற்றதாகக் காணப்படுவதால் ‘பார்ப்பனர் அல்லாதார் சங்கம்’ என்ற பெயர் முன்மொழியப்பட்டு விவாதிக்கப்பட்டது. பார்ப்பனரல்லாதார் என்று ஏன் எதிர்மறைப் பெயரால் குறிக்க வேண்டும்? திராவிடர் சங்கம் என்றே பெயரிடலாம் என்ற கருத்து பெரும்பான்மையோரால் முன்மொழியப்படவே சென்னை அய்க்கிய சங்கம் என்ற பெயரானது, ‘திராவிடர் சங்கம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. சென்னைக்கு வருகை தந்த ராயல் கமிஷனின் முன் அன்றைய அரசுத் தலைமைச் செயலாளராயிருந்த அலெக்ஸாண்டர் கார்டியூ சென்னை மாகாணத்தில் கல்வி மற்றும் வேலை...

தலையங்கம் தேசிய கட்சிகள் விடை பெறுகின்றன!

தலையங்கம் தேசிய கட்சிகள் விடை பெறுகின்றன!

இந்தியாவில் அய்ந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு தேசியக் கட்சி களுக்கும் எதிராகவே வந்துள்ளன. உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியை வீழ்த்தி, சமாஜ்வாடி கட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ளது.  இராகுல் காந்தி களமிறங்கியும் உ.பி.யில் காங்கிரஸ், நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. பஞ்சாபில் அகாலிதளத்தின் பிரகாஷ்சிங் பாதல், ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். பா.ஜ.க., அகாலிதளத்தின் கூட்டணி கட்சியாகும். கடந்த முறை ஊழல் புகார்களில் பா.ஜ.க. அமைச்சர்கள் பதவி விலகிய நிலையிலும் ஆட்சியின் எதிர்ப்புகளை காங்கிரஸ் கட்சியால் அறுவடை செய்ய முடியவில்லை. முலாயம்சிங் மகன் அகிலேஷ், உ.பி. தேர்தலுக்கு பொறுப்பேற்றதுபோல் பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் மகன் சுக்பீர்சிங் பாதல் தேர்தல் பொறுப்பை ஏற்று செயல்பட்டார். இந்து வாக்கு வங்கி, பா.ஜ.க.வுக்கும் ஜாட் சீக்கியர் வாக்கு வங்கி அகாலிதளத்துக்கும், பிற்படுத்தப்பட்ட சீக்கியர், ஜாட் அல்லாத சீக்கியர், தலித் சீக்கியர் வாக்கு வங்கி காங்கிரசுக்கும் இருந்த நிலையை மாற்றி, சுக்பீர்சிங்,...

8 நாட்கள் 84 பகுதிகளில் மரண தண்டனைக்கு எதிராக பரப்புரைப் பயணம்

8 நாட்கள் 84 பகுதிகளில் மரண தண்டனைக்கு எதிராக பரப்புரைப் பயணம்

மரணதண்டனைக்கு எதிராக வடாற்காடு மாவட்டம் சோலையார் பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தொகுதிகளில் உள்ள 84 ஊர்களில் பரப்புரைப் பயணம் நடந்தது. பிப்.15 இல் தொடங்கி பிப். 22 வரை 8 நாட்கள் நடந்த பரப்புரை பயணத்தில் மூன்று தமிழர் தூக்குத் தண்டனைக்கு எதிராக முன் வைத்த கருத்துகளை நியாயங்களை பல்லாயிரக்கணக்கான மக்கள் செவிமெடுத்தனர். பரப்புரைப் பயணம் பற்றிய செய்தித் தொகுப்பு: தோழர்கள் சிவலிங்கம் மற்றும் குட்டிமணி (பா.ம.க. ஒன்றிய செயலாளர்) ஆகியோர் வழிகாட்டுதலில் எட்டு நாட்கள் தெருமுனைப் பிரச்சாரப் பயணம் திருப்பத்தூர், சோலையார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு தொகுதிகளில் பல்வேறு சிற்றூர், பேரூர் மற்றும் நகரங்களில் சிறப்பாக நடந்து முடிந்தது. குமரேசன் மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் நிதியும், கே.சி.காமராஜ் திருமண மண்டபமும், வ.கி.அருணா மகிழுந்தும், ப.அன்பழகன் (தி.மு.க.) ஓய்விட அறையும் கொடுத்துதவினர். உணவு வழங்கியோர்: வ. கண்ணதாசன் (ம.தி.மு.க.), திருப்பத்தூர்அய்யம்பேட்டை பாலு (விடுதலை சிறுத்தைகள்), சா.பெரியார்தாசன்...

சென்னை பல்கலையில் பொதுச் செயலாளர்  விடுதலை இராசேந்திரன் அன்னை சரோஜினி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு

சென்னை பல்கலையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அன்னை சரோஜினி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு

சென்னை பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத் துறையில் அன்னை சரோஜினி நினைவு அறக்கட்டளை சார்பில் 7.3.2012 அன்று பிற்பகல் 3 மணியளவில் பவள விழாக் கலையரங்கில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியாரின் மனித நேயம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவரும், பெரியார் நாத்திகக் கருத்துகளில் தீவிர ஈடுபாடு கொண்டு   பணி ஓய்வு பெற்ற பிறகு தனது இல்லத்தில் மாதம் தோறும் மனித நேய பகுத்தறிவுக் கூட்டங்களை நடத்தியவருமான மருத்துவர் பேராசிரியர் கே. நடராசன், தனது துணைவி யார் நினைவாக நிறுவிய அறக்கட்டளையே அன்னை சரோஜினி நினைவு அறக்கட்டளை யாகும். தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் அரசு வரவேற்புரையைத் தொடர்ந்து, விடுதலை இராசேந்திரன் ஒரு மணி நேரம் உரை யாற்றினார். ஆன்மீகவாதிகள், அறநெறி யாளர்கள், சான்றோர்கள் என்று எல்லோரும் மனித நேயத்தை வலியுறுத்தினாலும், பெரியாரின் மனித நேயம் உள்ளடக்கத்திலும் பண்புகளிலும்...

கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிறார்கள் கருவறை பார்ப்பன ஆதிக்கம் ஒழிகிறது!

கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிறார்கள் கருவறை பார்ப்பன ஆதிக்கம் ஒழிகிறது!

கேரளாவில் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் பார்ப்பனர் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்ற ‘பிறப்பு ஆதிக்கம்’ ஒழிந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அமைதிப் புரட்சி நடந்து முடிந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் கேரள தேவஸ்வம் போர்டு காலியாக இருந்த 100 அர்ச்சகர் பதவிகளில் 50 பார்ப்பனரல்லாதாரை அர்ச்சகராக நியமனம் செய்துள்ளது. கேரள தேவஸ்வம் போர்டு சார்பாக அர்ச்சகர் பதவிக்கு அனைத்து சாதியினரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. பிறகு அவர்கள் நேர்முகப் பேட்டிக்கு அழைக்கப்பட்டனர். மொத்தம் 199 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 40 சதவீதம் பேர் பார்ப்பனரல்லாத அனைத்து சாதிப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள்.  கேரள கூடுதல் தலைமை செயலாளர் கே.ஜெயக்குமார் கூறுகையில்: “ஒருவர் உள்ளத்தாலும் செயல்களாலும் தான் ‘பிராமணர்’ ஆக முடியுமே தவிர, பிறப்பால் அல்ல இதைத்தான் பழங்கால புனித நூல்கள் கூறுகின்றன” என்றார். மலையாள இந்துவாகவும் ‘தந்திர சாஸ்திரங்கள்’ – பூசை முறைகள் பற்றி தெரிந்தவர் களாகவும் உள்ளவர்கள்...

திருவான்மியூரில் சுயமரியாதை சுடரொளிகள் படத்திறப்பு

திருவான்மியூரில் சுயமரியாதை சுடரொளிகள் படத்திறப்பு

குத்தூசி குருசாமி – குருவிக்கரம்பை வேலு சுயமரி யாதைப் பேரவை சார்பில் 1.4.2012 காலை 10 மணியளவில் திருவான்மியூரில் (பி.டி.இராபர்ட் இல்லம், 132 வால்மீகி தெரு, இரண்டாம் தளம்) சுயமரியாதை சுடரொளிகள் நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குத்தூசி குருசாமி, குருவிக்கரம்பை வேலு, சென்னை தே.மு.சண்முகம், த. லோகநாதன் படங்களை முறையே கவிஞர் தமிழேந்தி, முனைவர் வளர்மதி, ம.அருள்முகம், மருத்துவர் சவுந்தர பாண்டியன் திறந்து வைத்து உரையாற்றுகிறார்கள். பெரியார் முழக்கம் 22032012 இதழ்

அய்.நா. அலுவலகம் முன் தமிழர்களைத்  தாக்கிய சிங்கள குண்டர்கள்

அய்.நா. அலுவலகம் முன் தமிழர்களைத் தாக்கிய சிங்கள குண்டர்கள்

ஜெனிவாவில் நடக்கும் அய்.நா. கூட்டத்தில் பங்கேற்று வரும் மக்கள் உரிமை கண்காணிப்பக இயக்குனர் ஹென்றி டிஃபேன் ஜூனியர் விகடன் ஏட்டில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து: “இலங்கை விவகாரத்தைப் பேசுவதற்காக ஒரு தனி அமர்வு இருந்தது. இலங்கையில் இருந்து வந்திருந்த மனித உரிமையாளர்கள் சுனிலா, நிமல்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினார்கள். அமர்வுக்கு நேரில் வர முடியாத சரவணமுத்து என்பவர் ‘ஸ்கைப்’ மூலமாகப் பேசினார். அதே சமயம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி ஐரோப்பாவைச் சார்ந்த தமிழ்ச் சமுதாயத்தினர் சுமார் 5000 பேர் மாநாட்டு அரங்குக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இலங்கை அரசும் அங்கே தனியாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இதற்காக, இலங்கையில் இருந்து 126 பேரை அவர்களே அழைத்து வந்து இருந்தார்கள். இவர்கள் தவிர, அடியாட்களையும் அனுப்பி இருந்தது இலங்கை அரசு. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ்...

சர்ச்சையைக் கிளப்பும் அமெரிக்கத் தீர்மானம்: முதலில் சர்வதேச விவாதம் தொடங்கட்டும்!

சர்ச்சையைக் கிளப்பும் அமெரிக்கத் தீர்மானம்: முதலில் சர்வதேச விவாதம் தொடங்கட்டும்!

அமெரிக்க தீர்மானத்தின் மீது கடைசியாக நாடாளுமன்றத்தில் வாய் திறந்த பிரதமர் மன்மோகன் சிங், அய்.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் இறுதி நகல், தம்மிடம் இல்லை என்றும், அதை ஆதரிக்கும் மனப்போக்கில் இந்தியா இருப்பதாகவும் (ஐnஉடiநேன வடி எடிவந) கூறியுள்ளார். போருக்குப் பிறகு இலங்கை அரசு நியமித்த விசாரணை ஆணையமும் அந்த ஆணையத்தின் பரிந்துரையை இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததும் அவசர நிலை அங்கே தளர்த்தப்பட்டதும், உள்ளாட்சித் தேர்தலுக்கு இலங்கை அரசு தயாராகி வருவதும் உறுதியான நடவடிக்கைகள் என்று மன்மோகன் சிங் கூறுகிறார். இலங்கை அரசின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன் வைக்க மன்மோகன் சிங் தயாராக இல்லை. இது பற்றி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, “பிரதமர் உரையில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டது பற்றி எதையுமே குறிப்பிடவில்லை. மனித உரிமை மீறலுக்காக இலங்கை அரசு கண்டிக்கப்படும் என்றும் கூறவில்லை. இது மழுப்பலான, பயனில்லாத பதில்” என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவின்...

‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ அறிக்கையால் மேலும் நெருக்கடி போர் முடிந்த பிறகு இலங்கையின் கொடூரமான மனித உரிமை மீறல்கள்

‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ அறிக்கையால் மேலும் நெருக்கடி போர் முடிந்த பிறகு இலங்கையின் கொடூரமான மனித உரிமை மீறல்கள்

இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு, போர் முடிந்த பிறகு இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை, கடந்த 13 ஆம் தேதி அய்.நா.வின் அறிக்கையாக சமர்ப்பித்தது. இலங்கை அரசுக்கு உலக அரங்கில் மேலும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ள அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் இவை: சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் 9வது பிரிவு, “எந்த ஒரு நபரையும் சட்ட விரோதக் காவலிலோ, கைது செய்தோ, அடையாளம் தெரியாத ரகசிய இடத்திலோ தடுத்து வைக்கக் கூடாது” என்று திட்டவட்டமாக கூறுகிறது. இது சர்வதேச சட்டமாக ஏற்கப்பட்டுள்ளது. எல்லா அரசு களையும் இது கட்டுப்படுத்தும்; சாக்கு போக்குகள் எதையும் கூறி அரசு இந்த பிரகடனத்திலிருந்து விலகி நிற்க முடியாது. ஆனால், சட்ட விரோதமாக பல்வேறு அடக்கு முறை சட்டங்களின் கீழ் காவலில் தடுத்து வைப்பது சிறீலங்காவில் தொடர் கதையாகும். 1971 ஆம்...

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (3) அன்னிபெசன்ட் எடுத்த ‘ஆரிய அவதாரம்’

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (3) அன்னிபெசன்ட் எடுத்த ‘ஆரிய அவதாரம்’

1915 பார்ப்பனரல்லாத இளைஞர்களின் இன எழுச்சியின் வெளிப்பாடாக திராவிடர் சங்கத்தின் சார்பில் ‘திராவிடப் பெருமக்கள்’ மற்றும் பார்ப்பனரல்லாதார் கடிதங்கள் ஆகிய இரு வெளியீடுகள் வந்தன. பார்ப்பனர் அல்லாதாரின் கல்வியை ஊக்குவித்தும், பார்ப்பனருடன் போட்டியிட்டு முன்னேறும் வகையில் ஒன்று சேர்ந்து உழைக்கும்படி தூண்டும் வகையில் அமைந்த 21 கடிதங்களைக் கொண்டது, ‘பார்ப்பனர் அல்லாதார் கடிதங்கள்’ என்ற நூலாகும். இவ்விரு நூல்களும், எஸ்.கே.என். என்னும் சுருக்கப் பெயர் (முழுப் பெயர் தெரியவில்லை) உள்ளவரால் எழுதப்பட்டு, ‘இந்தியன் பாட்ரியாட்’ எனும் இதழாசிரியர் சி.கருணாகரமேனனால் வெளியிடப்பட்டவை ஆகும். செப்டம்பர் 25 இல் ‘ஹோம் ரூல்’ இயக்கத்தைத் தொடங்கிய அன்னிபெசன்ட் அம்மையார், அதனை முற்றிலும் பார்ப்பனர் நலனுக்கே அர்ப்பணித்தமையினை உணர்ந்த பார்ப்பனரல்லாத தலைவர்கள் மேலும் விழிப்புற்றுக் கிளர்ந்தெழுந்தனர். ஏற்கனவே காங்கிரசில் ஈடுபட்டு உழைத்து வந்த தியாகராயர், நாயர் ஆகியோர், தென்னாட்டுப் பார்ப்பனர்களும் வடநாட்டு ஆதிக்கமும் ஒன்று சேர்ந்து தென்னிந்திய திராவிடர்களுக்கு அநீதி இழைத்து வரும் ஓர் அமைப்பே காங்கிரஸ்...

டெல்லி பல்கலையில் ‘இந்து’ ராம் திணறல்; மாணவர்கள் அதிரடி கேள்விகள்

டெல்லி பல்கலையில் ‘இந்து’ ராம் திணறல்; மாணவர்கள் அதிரடி கேள்விகள்

ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் எதிராக நஞ்சை கக்கி எழுதியவரும், ராஜபக்சேயின் தமிழகப் பிரதிநிதியாக செயல்பட்டவருமான ‘இந்து’ ராம் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் மாணவர்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தார். கடந்த 14.3.2012 அன்று மாலை ஜவகர்லால் நேரு பல்கலை விடுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு சார்பில் ‘ஊடகங்களின் ஒழுங்கு’ என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருந்தார். உரை முடிந்தவுடன், மாணவர்கள் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தனர். “நீங்கள் ஊடக ஒழுங்கைக் காப்பாற்றினீர்களா? ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் பத்திரிகை ஒழுங்கைப் பின்பற்றாமல், ராஜபக்சேயின் முகவராக செயல்பட்டது தான், ஊடக ஒழுங்கா? கண்மூடித்தனமாக சீனாவை விமர்சனமின்றி ஆதரிப்பது சரியா? ‘இலங்கா ரத்னா’ விருதை இலங்கை அரசிடமிருந்து பெற்றது ஏன்? கொலைக் குற்றம் சாட்டப் பட்ட இளைய சங்கராச்சாரி விஜயேந்திரனை ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு வரும்போது எல்லையில் நீங்களே காரில் சென்று அழைத்து வரலாமா? என்ற கேள்விகளை சரமாரியாகத் தொடுத்தனர். “போருக்குப் பிறகு தமிழர்...

உலகம் – உயிர் – சாதி தோன்றியது, இப்படித்தான்!

உலகம் – உயிர் – சாதி தோன்றியது, இப்படித்தான்!

(சென்ற இதழ் தொடர்ச்சி) ஏன், எதற்கு எப்படி? என்று எதையுமே ஆராய்ச்சி செய்து பார் என்று ஏதென்சு நகரத்து இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டிய அறிஞர் சாக்ரடீசு நஞ்சு கொடுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பகுத்தறிவு பேசிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த புரூனோ என்ற பகுத்தறிவாதி 16.2.1600 இல் ரோமன் சர்ச்சில் வைத்து உயிரோடு எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வரலாற்றையும் நாம் மறந்து விடுவதற்கில்லை! போலியான மதக் கருத்துகளை யாரும் எதிர்க்கத் துணியவில்லை! துணிந்த ஒரு சிலரோ மக்கள் கூட்டத்தின் முன்பாக எரிக்கப்பட்டனர்.! கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர்! தூக்கிலிடப்பட்டனர்! கை கால்கள் துண்டிக்கப்பட்டனர்! இத்தகைய கொடுமையான தண்டனைகளை நேரில் கண்டபின் யாருக்கு போலி மதக் கருத்துகளை எதிர்க்கத் துணிவுண்டாயிருக்கும்? இவ்வாறு அறிவியல் உண்மைகளுக்குப் புறம்பான கருத்துகளை தங்கள் மத நூல்களில் கொண்டுள்ள அனைத்து மதங்களும் மக்களின் அறியாமை அச்சம், மூடநம்பிக்கை போன்றவைகளை அடித்தளமாகக் கொண்டு அழகாகவும், உறுதியாகவும் மனித சமுதாயத்தில் நிலைநிறுத்தப்பட்டன. உலகில்...

ராஜபக்சே நடத்தும் ‘ரவுடி அரசு’: அய்.நா. அதிகாரி கூறுகிறார்

ராஜபக்சே நடத்தும் ‘ரவுடி அரசு’: அய்.நா. அதிகாரி கூறுகிறார்

“ராஜபக்சே தனது அரசை ரவுடிகளின் நிறுவனமாக மாற்றியமைத்துள்ளார். (Rogue Institution) அப்படி மாற்றிக் கொண்ட சித்திரவதை, ஆள் கடத்தல் படுகொலைகளை அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தி, பெரிய அளவில் செய்து வருகிறார்” – இப்படி அய்.நா.வின் சித்திரவதைகளுக்கு எதிரான அய்.நா.வின் சிறப்புப் பிரதிநிதியே குற்றம் சாட்டியுள்ளார். இத்தகவலை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள் வி.சுரேஷ் மற்றும் டி.கே. நாகசாய்யா, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளனர். (மார்ச் 16, 2012) எந்த ஒரு குறிப்பிட்ட அரசுக்கும் எதிராக கண்டன தீர்மானம் வருவதை இந்தியா ஆதரிக்காது என்று இந்திய அரசு எடுத்துள்ள நிலையை அவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். மனித உரிமை மீறல் என்பதற்கான விளக்கம் என்ன? ஏதேனும் ஒருவர் அக்குற்றத்தை செய்கிறார்; அவர் இராணுவத்தினராக இருக்கலாம்; போலீசாக இருக்கலாம். மனித உரிமை மீறலுக்கு உள்ளாகிறவர், பொது மக்கள்; ஆயுதமற்ற நிராயுதபாணிகள். இவை எல்லாமே எப்படி நிகழ்கின்றன? சூன்யத்திலா? ஏதேனும் ஒரு...

‘அச்சம்’ போக்க வேண்டும் என்ற ஜெயலலிதா ‘அச்சுறுத்தி’ திணிக்கிறார்

‘அச்சம்’ போக்க வேண்டும் என்ற ஜெயலலிதா ‘அச்சுறுத்தி’ திணிக்கிறார்

மக்களின் அச்சத்தைப் போக்கிய பிறகே கூடங்குளம் அணுமின் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றார், முதல்வர் ஜெயலலிதா. அச்சத்தைப் போக்கும் வரை, திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால், தமிழக முதல்வர் நியமித்த விஞ்ஞானிகள் குழு, கூடங்குளம் இடிந்தகரை பகுதி மக்களை சந்திக்கவே மறுத்தது. மக்களின் அச்சம் அப்படியே நீடிக்கிறது. இப்போது முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களை அச்சுறுத்தி, 5000 போலீசையும், துணை ராணுவப் படைகளையும் குவித்து, போராட்டக் குழு தலைவர்கள் மீது தேச விரோதம் உள்ளிட்ட கொடூரமான சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து, கைது செய்து சிறையிலடைத்து, கூடங்குளம் அணு உலையைத் திறக்கப் போகிறது. ஈழத்தில் தமிழர்களை ஒழிக்கத் திட்டமிட்ட இலங்கை ராணுவம், அவர்களை முல்லைத் தீவு நோக்கி நெருக்கித் தள்ளியதுபோல், இடிந்தகரை மக்களும் இப்போது துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று நாடகமாடிய ஜெயலலிதா – இப்போது மக்களை அச்சுறுத்தி கூடங்குளம்...

அடக்கு முறையில் திணிக்கப்படும் அணுமின் நிலையம்

அடக்கு முறையில் திணிக்கப்படும் அணுமின் நிலையம்

எதிர்பார்த்தது நடந்து விட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை அப்பகுதி மக்கள் எதிர்ப்பை யும் மீறி துப்பாக்கி முனையில் இயங்கச் செய்வதற்கு தமிழக அமைச்சரவை முடிவெடுத் துள்ளது. ஒரு அணுஉலை அமைப்பதற்கு மேற்கொள்ளப் பட வேண்டிய அடிப்படையான ஆய்வுகளைப் புறக்கணித்துவிட்டு, பன்னாட்டு ஒப்பந்தத்தை பன்னாட்டு நிறுவனங்களின் மின்சாரம் தேவைக்காக இந்தியப் பார்ப்பன பனியா ஆட்சி, மக்கள் மீது திணிப்பதற்கு இப்போது மாநில ஆட்சியும் துணை போகிறது. அணு உலை தேவையா இல்லையா என்ற விவாதங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்; ஒரு அணு உலை அமையப் போகும் இடத்தின் நிலவியல் என்பது மிக முக்கியமாக ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும். அதற்காக அணுசக்தித் துறை வி.ஆர். வென்குலேர்ச்சர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு 1972 ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது.   நிலவியல் அமைப்பு, அதன் நிலைத்த தன்மை (ழுநடிடடிபiஉயட ளவயbடைவைல) கட்டாயம் ஆராயப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்திய பல்வேறு அம்சங்களில் முக்கியமானதாகும்....

கூடங்குளம் மக்கள் போராட்டத்தை ஒடுக்காதே! தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு

கூடங்குளம் மக்கள் போராட்டத்தை ஒடுக்காதே! தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு

கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் இடிந்த கரை மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பாளையங்கோட்டையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர்  மணி, இந்த ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பு விடுத்திருந்தார். மார்ச் 23 ஆம் தேதி பாளையங்கோட்டை ஜவகர் திடலில் பெரியார் திராவிடர் கழகம் ம.தி.மு.க., நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, த.தே.பொ.க., தமிழர் தேசிய விடுதலை இயக்கம், ஆதித் தமிழர் பேரவை, பா.ம.க., எஸ்.டி.பி.அய்., தமிழ்ப் புலிகள், காஞ்சி மக்கள்  மன்றம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், இந்திய தவ்ஹித் ஜமாத், அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்பு அமைப்பினரும், அணுஉலை எதிர்ப்பாளர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். பாளையங்கோட்டையிலிருந்து இடிந்தகரை நோக்கி பேரணியாக பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் புறப்படத் தயாரானார்கள். முன்னதாக ஜவகர் திடலில் நடந்த...

‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ அறிக்கையால் மேலும் நெருக்கடி போருக்குப் பிறகு சட்ட விரோத கைது-சித்திரவதைகள்

‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ அறிக்கையால் மேலும் நெருக்கடி போருக்குப் பிறகு சட்ட விரோத கைது-சித்திரவதைகள்

இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு, போர் முடிந்த பிறகு இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை, கடந்த 13 ஆம் தேதி அய்.நா.வின் அறிக்கையாக சமர்ப்பித்தது. இலங்கை அரசுக்கு உலக அரங்கில் மேலும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ள அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் இவை: இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 9(1)ன் கீழ், எந்தக் குற்றமும் குறிப்பிடாது ஒருவரை 18 மாதம் காவலில் வைக்க முடியும். அதற்குப் பிறகு, அவர் விடுதலை செய்யப்பட் டால், அவரது நடமாட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம் முடக்க முடியும். இந்த நடவடிக்கைகளை கேள்வி கேட்கவோ அல்லது நீதிமன்றம் தலையிடவோ உரிமையில்லை என்று பயங்கரவாத தடுப்புச் சட்டம் கூறுகிறது. கைதுக்கான ஆணை இல்லாமலே போலீஸ் கைது செய்யலாம். 72 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். கைது சட்டப்படி சரியானதுதானா என்று கேள்வி...