பெருமாள் மலையில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்
பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம் கருப்புச் சட்டைகளின் வரலாற்றில் அழியா புகழ் கொண்ட பெருமாள் மலையில் நடந்தது. பெருமாள் மலைக்கு ஒரு வரலாற்று சிறப்பு உண்டு என்பது 1985 ஆம் ஆண்டு பக்தர்கள் சிலரால் கடவுளின் சக்தி என்ற முழக்கத்தோடு சென்னிமலை கோவில் படிக்கட்டில் மாட்டுவண்டி ஏற்றினார்கள். அதே சென்னிமலையில் இது கடவுளின் சக்தி அல்ல; மனித சக்தி தான் என்று கூறி பெரியாரிஸ்டுகள் மாட்டு வண்டி ஏற்ற முயன்றபோது காவல்துறை தடுத்தது. அதன் பின்னர் சென்னிமலையைவிட செங்குத்தான படிகளைக் கொண்ட பெருமாள்மலையில் தோழர்கள் மாட்டுவண்டி ஏற்றி கடவுள் சக்தி என்ற புரட்டை முறியடித்தனர். அத்தகைய சிறப்பு மலை பெருமாள் மலை பகுதிக்கு உண்டு. கூட்டத்திற்கு பொ.இராசண்ணா தலைமையேற்க, மாவட்ட தலைவர் நாத்திகசோதி, அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். கிருட்டிணகுமார் வரவேற்புரை நிகழ்த்த, ஈசுவரமூர்த்தி, பகுத்தறிவாளர் பேரவை ப. சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவை....