Author: admin

“குழந்தைகள் பழகு முகாம் – 2018”

“குழந்தைகள் பழகு முகாம் – 2018”

“5 நாட்கள் ” ‘முன் பதிவு ஆரம்பம்.’ வரும் 2018 மே மாதம் கோடைக்கால பள்ளி விடுமுறையில் “தமிழ்நாடு அறிவியல் மன்றம்” நடத்தும் ‘குழந்தைகள் பழகு முகாம்’ (5 நாட்கள்) நடைபெற உள்ளது. குழந்தைகள் பழகு முகாமில் கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல் பெருக்குதல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை புனைதல், கட்டுரை வரைதல், அறிவியல் சார்ந்த விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும் ‘தேதி, இடம், கட்டணம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்’ கோடையில் கொண்டாடுவோம் ! பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக்குவோம் ! 10 வயது முதல் 15 வயது முடிய உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள : தோழர் ஆசிரியர் சிவகாமி, தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம் அலைபேசி எண் : 87785 43882 வாட்ஸ் அப் எண் : 99437 48175

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” –  சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும்  ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” – சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” – சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள்  ”டாக்டர் அம்பேத்கர் – இந்திய சமூகம்” எனும் தலைப்பில் முற்பகல் முதல் அமர்வில் கருத்துரையாற்றுகிறார். பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நிகழவிருக்கிறது. நாள் : 03.04.2018 செவ்வாய்க்கிழமை. நேரம் : காலை 09.30.மணி. இடம் : பவளவிழா கலையரங்கம்,மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகம்.

வருமான வரித்துறை அலுவலகம் பூட்டுபோடும் போராட்டம்.!

வருமான வரித்துறை அலுவலகம் பூட்டுபோடும் போராட்டம்.!

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக… காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்க்குலைக்கும் மத்திய அரசை கண்டித்து…. நாள் : 02.04.2018 (திங்கட்கிழமை) நேரம் : காலை 10 மணி இடம் : நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகம், சென்னை.

செங்கோட்டை போராட்டம் வெற்றி

செங்கோட்டை போராட்டம் வெற்றி

தோழர்களே! வணக்கம். கடந்த 06-03-2018 சென்னையில் நாம் திட்டமிட்டபடி, இராமராஜ்ஜிய இரத யாத்திரையை 20-03-2018 அன்று செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்டம் பெருந்திரளோடு நடந்து முடிந்துள்ளது. நாம் எதிர்பாராத அரசியல் விளைவுகள் மூலம் பலப்படுத்தியுள்ளது. பத்து மாவட்டங்களில் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவலாக்கப்பட்டது. #செங்கோட்டை_போராட்டம்_வெற்றி மார்ச் 20 இராமராஜ்ஜிய இரத யாத்திரை தடுப்பு மறியல் தலைவர்கள் தோழர் தொல்.திருமாவளவன் – வி.சி.க தோழர் கொளத்தூர் மணி – தி.வி.க தோழர் வேல்முருகன் – த.வா.க தோழர் கு.இராமகிருஷ்ணன் – த.பெ.தி.க தோழர் ஜவாஹிருல்லா – ம.ம.க தோழர் தெகலான்பாகவி – எஸ்.டி.பி.ஐ தோழர் கே.எம்.சரீப் – த.ம.ஜ.க தோழர் திருவள்ளுவன் – தமிழ்ப்புலிகள் உள்ளிட்ட தலைவர்கள் செங்கோட்டை மறியலுக்கு வரும் வழியில் செங்கல்பட்டு, மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் என முன்னெச்சரிக்கை எனும் பேரில் மார்ச் 19, 20 கைது செய்யப்பட்டனர். முதல் நாள் இரவு முதல் தமிழ்நாடெங்கும் முன்னெச்சரிக்கைக்...

கபாலி – கோயில் சொத்துக்களை விழுங்கும் ஆத்தீகர்கள்

கபாலி – கோயில் சொத்துக்களை விழுங்கும் ஆத்தீகர்கள்

“கோயில் சொத்துகளை எல்லாம் நாத்திகம் பேசும் திராவிடக் கட்சியினர் விழுங்கி வருகின்றனர். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அறநிலையத்துறையிடம் இருந்து கோயில்களை பிடுங்கி, சுதந்திரமான ஆன்மீகவாதிகள் அடங்கிய வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்து முன்னணி கோரி வருகிறது. மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர்  அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும்,  காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன்....

தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்கவரும் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது

தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்கவரும் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது

இதற்கு முன்பு இரண்டு முறை இந்து அமைப்புகள் ரத யாத்திரையை நடத்தியுள்ளனர். குஜராத் மாநிலம், சோமநாதபுரத்திலிருந்து அத்வானி தொடங்கிய ரத யாத்திரை. அடுத்து, கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை முரளி மனோகர் ஜோஷி சென்ற ரத யாத்திரை. இந்த இரண்டு ரத யாத்திரைகளும் வன்முறையைத் தூண்டிவிட்டு சமுதாய பதற்றத்தை ஏற்படுத்தியவைதான். ஒன்று பாபர் மசூதி இடிப்பில் முடிந்தது. இப்போதும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள சூழலில் வட இந்தியாவில் உள்ள அல்லது இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மக்களின் மன உணர்வை வாக்குகளாக மாற்றும் முயற்சியாகத் தான் இதைப் பார்க்கிறோம். இந்தப் பயணம் வந்துகொண்டிருக்கிற எல்லா இடங்களிலும் பாஜகவும், ஆர்எஸ்.எஸ்ஸும்தான் ஆதரவாக இருந்து கொண்டிருக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து எல்லா மாநிலங்களின் டிஜிபிகளுக்கும் ரத யாத்திரை குழுவுக்கு அனுமதியும் பாதுகாப்பும் அளிக்க வேண்டுமென்று அறிக்கை வந்ததாகவும் செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டில் நிலவுகிற பொது அமைதி, எல்லாரோடும் இணங்கி இருக்கிற ஓர் இணக்கமான சூழலை உடைத்து...

இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை 20032018

இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை 20032018

மார்ச் 20 காலை 8மணி தமிழக எல்லை செங்கோட்டை_புளியரை_சந்திப்பில் இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை புளியரை சந்திப்பு மார்ச் 20 காலை 8 மணி இராமராஜ்ஜிய இரத யாத்திரை தடுப்பு மறியல் தலைவர்கள் தோழர் வை.கோ – ம.தி.மு.க தோழர் தொல்.திருமாவளவன் – வி.சி.க தோழர் சீமான் – நாம் தமிழர் தோழர் கொளத்தூர் மணி – தி.வி.க தோழர் வேல்முருகன் – த.வா.க தோழர் கு.இராமகிருஷ்ணன் – த.பெ.தி.க தோழர் ஜவாஹிருல்லா – ம.ம.க தோழர் தெகலான்பாகவி – எஸ்.டி.பி.ஐ தோழர் எஸ்.எஸ்.ஆரூண்ரசீது – ம.ஜ.கட்சி தோழர் சரீப் – த.ம.ஜ.க தோழர் பாளை ரஃபீக் – ம.ம.மு.கழகம் தோழர் பாலன் – த.தே.ம.முன்னணி தோழர் அதியமான் – ஆ.த.பேரவை தோழர் திருவள்ளுவன் – தமிழ்ப்புலிகள் தோழர் ஜக்கையன் – ஆ.த.கட்சி தோழர் பொழிலன் – த.ம.மு தோழர் வெண்மணி – ஆ.த.கட்சி தோழர் தமிழ்நேயன் –...

மலேசியாவில் தோழர் ஃபாரூக்கின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு !

மலேசியாவில் தோழர் ஃபாரூக்கின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு !

மலேசியாவில் தோழர் ஃபாரூக்கின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு ! நேற்று 17.3.2018. மாலை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் திராவிடர் விடுதலை கழகத்தின் கொள்கை வீரர் தோழர் ஃ பாரூக் அவர்கட்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரை ஆற்றிய சான்றோர்கள். மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய தலைவர். மானமிகு ஐயா. எப்.காந்தராசு. மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவர். எழுத்தாண்மை ஏந்தல் பெரு. அ. தமிழ்மணி. மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் கோலாலம்பூர் மாநில தலைவர். மானமிகு தோழர். அன்பு இதயன். மருத்துவர். ஐயா. பாரி சுந்தரம். தோழர். ரபீக். மருத்துவர். விஜயப்பிரியா. மானமிகு தோழர். மக்கள் பிரதிநிதி சரவணன். மானமிகு தோழர். காஞ்சி அசோக். மலேசிய மேனாள் காவல்துறை துணை ஆய்வாளர். மானமிகு ஐயா. மதியழகன். மற்றும், தோழர்கள் .   படங்களுக்கு https://www.facebook.com/dvk12/posts/2096859697264586

செய்நன்றி கொன்றவன் என்ற பழிச்சொல்லில் இருந்து மீள வாய்ப்பளியுங்கள் – தோழர் கொளத்தூர் மணி எழுத்தாளர் ஏகலைவனுக்கு கோரிக்கை

செய்நன்றி கொன்றவன் என்ற பழிச்சொல்லில் இருந்து மீள வாய்ப்பளியுங்கள் – தோழர் கொளத்தூர் மணி எழுத்தாளர் ஏகலைவனுக்கு கோரிக்கை

ஏகலைவன் அவர்களுக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பதில். —————————— தோழர், நீங்கள் கூறியதைப் போலன்றி இரவிச்சந்திரனன், நளினியைத் தவிர அனைவரையும் சிறையில் சந்திதுள்ளேன். (மேலும் நான் ஏதேனும் நூல் எழுதுவதாய் இருந்தால் அடிக்கடி சந்திக்கலாம்) மரணதண்டனைக் குறைப்புக்குப் பின்னர் மனுவில் பெயர் எழுதிக் கொடுத்தும் பலமுறை முருகனும் சாந்தனும் சந்திக்க வந்ததில்லை. கடந்த மூன்றாண்டுகளாக சிறைக்கு சென்று ‘யாரையும்’ பார்ப்பதில்லை என்பது உண்மையே, பல காரணங்கள் அதற்குண்டு. நீங்கள் கூறியுள்ளவாறு கவுந்தபாடி பேரறிவாளன் என்னிடம் புத்தகத்தைக் கொடுக்கவில்லை. மீண்டும் ஒருமுறை அவரிடமே உறுதிசெய்து கொள்ளுங்கள். //தாங்கள் மிகப்பெரும் தலைவர். இதில் உள்ள எழுவரையுமே சந்தித்தீர்களா. யார் யாரை? எத்தனைமுறை என்றெல்லாம் நான் கேட்க முடியாது. அது தேவையற்றதும் கூட.// என்னைத்தான் கேட்கமுடியாது. அவர்களையே கேட்டிருக்கலாமே? பார்க்கப்போகாத இந்த காலகட்டத்தில்கூட அவர்களுக்காக வெளியே இருந்து என்னென்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை அவர்களே சொல்வார்களே! பெரியார் பெயரைக் குறிப்பிடாதது தொடர்பாக பெரியார்மீது...

எழுத்தாளர் ஏகலைவன் – வரலாறுகளை அறிந்து கொள்ளவும்

எழுத்தாளர் ஏகலைவன் – வரலாறுகளை அறிந்து கொள்ளவும்

“எழுத்தாளர் ஏகலைவன் அவர்களின் இரண்டு பதிவுகள் குறித்தே எனது இப்பதிவு”  – தலைவர் தோழர் கொளத்தூர் மணி முதல் பதிவு ஏகலைவன் தி.மு.க. வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு எழுதியது…. காவல்துறையின்கெடுபிடிகள் ……. *பரோலில் வந்தவருக்கு நியாயங்களும், உரிமைகளும் மறுக்கப்படுகிறது;.* ———————————————— இராஜீவ் படுகொலையில், தம்பி அருப்புக்கோட்டை இரா.பொ.இரவிச்சந்திரனைச் சேர்க்கப்பட்டு , ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்த வழக்கு சரியானபடி புலனாய்வு செய்யப்படவில்லை என்று நாம் பலமுறை சொல்லி வருகிறோம். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரோல் வழங்கியுள்ளது. பரோலுக்கு பல கட்டுப்பாடுகள் இருக்கட்டும். அவரை சந்தித்து நலன் கேட்க வருபவர்களிடமும் நெருக்கடிகளையும், கடும் கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது காவல் துறை. வீட்டைச் சுற்றி அதிகமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதே போல மற்ற ராஜீவ் படுகொலையில் தண்டனை பெற்று பரோலில் வந்தவர்களுக்கெல்லாம் இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. இரவிச்சந்திரனுக்கு மற்றவர்களைப் போல ஊடக வெளிச்சமும் இல்லை, மற்ற கைதிகளுக்கு கிடைக்கும்...

எது பிரிவினை மனப்பான்மை?   புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

எது பிரிவினை மனப்பான்மை? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

பிண்ணாக் குநிறம் பிளவிலாக் குளம்புகள் வெண்முகம் நீள்காது மிகமிக அழகு தெருவில் புகுந்து தெருவிலென் வீட்டின் அருகில் வந்ததும் அருமை! அருமை! வீட்டினுள் புகுந்து காட்டுத் தழையென்று சுவடிகள் துணிகளை மென்று தின்றதும் சொல்லொணாப் புதுமை! சொல்லொணாப் புதுமை! வாய்தி றந்து வண்ணம் பாடித் தூய்மையைத் துடைத்ததும் மெச்சத் தக்கது. துணிவாய் அடுக்களைச் சோற்றுப் பானையை உருட்டி முழுதும் இனிதாய் உண்டதைப் பார்க்கப் பார்க்கப் பார்ப்போர் கண்கள் மகிழ்ச்சி மத்தாப் பாக விளங்கின. தன்னுளம் தாங்காது வீட்டின் தலைவன் வாய்பெ ருத்த வடக்குக் கழுதையே! வெளியே போநீ என்று விளம்பினேன் இதுபி ரிவினை மனப்பான்மை என்று கத்துகின் றதே கழுதை! கத்துகின் றதே கழுதை! நிமிர்வோம் பிப் 2018 இதழ்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் பரவுகிறது!

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் பரவுகிறது!

தோழர்கள் ஆங்காங்கே ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டங்களை உருவாக்கி இதழில் வெளிவரும் கட்டுரைகளை விவாதித்து வருகிறார்கள். சென்னை, திருப்பூர், கொளத்தூர்,  நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்வுகள் விவாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வாசகர் வட்டம் விரிவடையட்டும். – ஆசிரியர் குழு நிமிர்வோம் பிப் 2018 இதழ்

“இரணியன் வேடமிட்டு நடிக்க நான் ஆசைப்படுகிறேன்” புரட்சிக் கவிஞர் நாடகம் குறித்து பெரியார்

“இரணியன் வேடமிட்டு நடிக்க நான் ஆசைப்படுகிறேன்” புரட்சிக் கவிஞர் நாடகம் குறித்து பெரியார்

9.9.1934 அன்று ‘சீர்திருத்த நாடக சங்கத்தாரால், சென்னையிலுள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் மாலை 5.30 மணிக்குப் பெரியார் தலைமையில் நிகழ்ந்த, புதுவை பாரதிதாஸன் (பாவேந்தர்) இயற்றிய ‘இரணியன்’ (பிற்பாடு தான் அது, ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்றாகி இருக்கிறது) நாடகம்தான், ஆரிய-திராவிடர் இனப்பிரச்சனையை முன்வைத்து, பழைய புராணத்தைப் புரட்டிப் போட்டு, திராவிட இயக்கச் சிந்தனைகளை முன்வைத்து நிகழ்ந்த மிகப்பெரும் நாடகமாகத் தெரிகிறது. பெரியார் தன் தலைமையுரையில், இங்கு சங்கீத வித்வான்களே நாடக மேடையைக் கைப்பற்றிக் கொண்டதானது, நாடகக்கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடகாபிமானமும் சங்கீதத்தில் திருப்பப்பட்டு விட்டது என்றும் தான் கருத வேண்டும். நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும், தற்கால உணர்ச்சிக்கும் தேவைக்கும் சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழைமையைப் பிரச்சாரம் செய்யவும், மூடநம்பிக்கை, வர்ணாச்சிரமம், ஜாதிவித்தியாச உயர்வு தாழ்வு, பெண்ணடிமை, பணக்காரத்தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும் அவைகளைப் பாதுகாக்கவும் தான் நடிக்கப்படுகின்றதே ஒழிய வேறில்லை… இப்படிப்பட்ட கதைகள் ஒழிக்கப்பட...

சுயமரியாதைத் திருமணம் பற்றி அண்ணா

சுயமரியாதைத் திருமணம் பற்றி அண்ணா

‘அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவு களஞ்சியம்’நூலிலிருந்து “அண்மையில் எங்கோ ஓர் இடத்தில் பாரத பிரசங்கம் நடந்ததாம். அதன் கடைசி நாளன்று பீமன் வேடம் போடுபவன் துரியோதனனைக் கொல்வதற்காகப் படுகளம் நடந்தது. அன்று ஆறு அடி நீளமுள்ள துரியோதனன் உருவம் மண்ணினால் செய்யப் பட்டிருந்தது. இதனை பீமவேடதாரி வெட்டி வீழ்த்தினான். இதனைச் சுதேசமித்திரன் பத்திரிகை படம் பிடித்து பெரிதாகப் போட்டுக் காட்டியிருக்கிறது. இப்படிப்பட்ட கேவலமான பழக்கங் களையும், அர்த்தமற்ற திருவிழாக்களையும், பொருத்தமற்ற சடங்குகளையும் விட்டொழித்தால்தான் நாம் உண்மையிலேயே முன்னேற முடியும். ஆகவேதான் சீர்திருத்தத் திருமணங்கள் நடப்பதன் மூலம் அறிவுப் பணி நன்கு வேரூன்றி நிலைத்துப் பரவ வழியிருக்கிற தென்று குறிப்பிடுகிறோம். சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவிக் கிடக்கும் மூடக் கொள்கைகள் தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே! ஆகவேதான் இப்படிப்பட்ட மணம் செய்து கொள்ளும் இந்த மணமக்களை நாம் பெரிதும் பாராட்டுகிறேன். மனதார வாழ்த்துகிறேன். இந்தத் திருமணத்தில் தேவாரம் ஒன்று பாடுவார்களா?...

சிறுபான்மை ஜாதிகளை விலக்கி வைக்கும் ‘ஜனநாயகம்’

சிறுபான்மை ஜாதிகளை விலக்கி வைக்கும் ‘ஜனநாயகம்’

எண்ணிக்கை பலம் குறைந்த ஜாதிகளை ஜனநாயக அமைப்பு விலக்கி வைப்பதை ஏன் கட்சிகள் விவாதிக்க முன்வருவதில்லை? பெயரோடு சாதிப் பட்டத்தை வழக்கமாகவே சேர்த்துக்கொண்ட காலத்தில்கூட இப்போதைய சாதி உணர்வு இருந்ததில்லை. போவதாகப் போக்குக்காட்டி, அந்த உணர்வு புது வேகத்தில் தலையெடுத்திருக்கிறது. ஒரு தேர்தல் உத்தியாகச் சாதிகளை உள்ளே இழுத்து, அவற்றைச் சீரணித்துக்கொள்ளலாம் என்று கட்சிகள் நம்புகின்றன. விளைவு என்னவென்றால், கட்சிகள் பெரும்பான்மைச் சாதிகளின் கூட்டமைப்புகளாக மாறிவிடுவதுதான். இந்த நிலையில் சிறிய சாதிகளை ஜனநாயக அரசியல் என்ன செய்கிறது என்பதை விவாதிக்க வேண்டும். ஊருக்கு ஒரு ஆச்சாரி. கொல்லர் ஒருவர். பத்தர், குயவர், மேளக்காரர், வாணியரும் ஒவ்வொருவர். இப்படியே வண்ணார், மருத்துவர் என்று ஊருக்கு ஒன்றிரண்டாக இறைந்து எண்ணிக்கை வலுவிழந்தவை இருநூறுக்கு மேலான சிறிய சாதிகள். கிராமங்கள் தன்னிறைவு பெற்ற குடியரசுகள் என்ற பெருமையைப் பெற்றது இந்தச் சாதிகளின் கைவினைப் பங்களிப்பால். ஆனால், அரசியல் கணக்குக்குள் இவை எப்போதுமே வராதவை. ஒரு பெரும்பான்மைக்...

திருமூலரை எதிர்க்காத பார்ப்பனர்கள் வள்ளலாரை எதிர்ப்பது ஏன்?  கரு. ஆறுமுகத்தமிழன்

திருமூலரை எதிர்க்காத பார்ப்பனர்கள் வள்ளலாரை எதிர்ப்பது ஏன்? கரு. ஆறுமுகத்தமிழன்

வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வைதீக மதத்திற்கு எதிராக ஆகமத்தை அடிப் படையாகக் கொண்ட சைவ மதம் உருவானது. சாதி, வருண வித்தி யாசத்தை மறுத்த புத்த, சமண மதங்களை வீழ்த்தவேண்டும் என்று வந்தபோது வைதீகத்தோடு சைவம் சமரசம் செய்து கொண் டது. வேதத்தை ஒப்புக்கொண்ட சைவம், வைதீகத்திற்குள் கரைந்து விட்டது. ராஜராஜ சோழன் காலத் தில் சமஸ்கிருதம் கோவிலுக்குள் நுழைந்து அனைத்தும் சமஸ்கிருத மயமானது. தமிழகத்திற்குள் கிறிஸ்துவம் பரவியது. சாதியை மறுத்து அனைவருக்கும் கல்வி கொடுத்தது. இதற்கெதிராக பல இயக்கங்கள் உருவாகின. தமிழை வளர்க்க ஆறுமுக நாவலர் சைவவித்யா சாலைகளை நிறுவினார். வைதீக வயப்பட்ட சைவத்தை கற்பித்தார். இதிலிருந்து வள்ளலார் மாறு பட்டு மணிவாசகர், திருமூலர், தாயுமானவரைப் பின்பற்றி ‘சமரச சன்மார்க்க’ நெறியை உருவாக் கினார். முரண்பட்ட வைதீக மரபையும் தமிழ் மரபையும் ஒன்றென இணைத்த திருமூலர், வைதீகத்தை யும், பிராமணர்களையும் கடுமையாகக் கேலி செய்தார். கோவில், சமயமரபுகளை உருவாக்கிய அவரே,...

அரசு கட்டுப்பாட்டிலிருந்து கோயில்களை விடுவிக்கலாமா? – விடுதலை அரசு

அரசு கட்டுப்பாட்டிலிருந்து கோயில்களை விடுவிக்கலாமா? – விடுதலை அரசு

கோயில்களை அரசுப் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்று இந்துத்துவாதிகள் பார்ப்பனர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறதா? இத்தனை பெரிய கோயில்களை கட்டியது யார்? மன்னர்கள்- அரசுகள். யாருடைய பணம்? மக்களை கசக்கி பிழிந்து வசூலித்த வரிப் பணம். எவருடைய உழைப்பு? மக்களின் உழைப்பு. திருவரங்கம் கோவிலை கட்டிமுடித்த உழைப்பாளிகள்  கூலிகேட்டு குழந்தை குட்டி களோடு ஒட்டிய வயிற்றுடன் நின்றபோது  “இந்த உலகத்தில்தான் பசிக்கும், பசி தீர்க்க காசு வேண்டும்! ஆனால் வைகுந்தத்தில் பசிக்காது… காசும் தேவைப்படாது! உங்களை நித்யமான  வைகுந்தம் அனுப்புகிறேன்”  என்றுகூறி அவர்கள் அனைவரையும் ஓடத்தில் ஏற்றி கரைபுரண்டு ஓடிய கொள்ளிடம் ஆற்றின் நடுவில் ஓடத்தை கவிழ்த்துக் கொன்றான் திருமங்கை ஆழ்வான். திருவானைக்கா கோயிலில் ஒரு மதில் சுற்றின் பெயர்: விபூதி பிரகாரம்! ஏனிந்த பெயர்? ஊரையே வளைத்து மைல் கணக்கில் கட்டப்பட்ட நீண்ட கருங்கல் மதில்சுவற்றை கல்சுமந்து கட்டிய நமது முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட கூலி விபூதி! மட்டும்தான்! எதற்கு? பசியால் கண்கள்...

வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

‘நிமிர்வோம்’ மாத இதழை தொடர்ந்து வாசித்து வருகிறேன். வரலாற்றுச் செய்திகளையும் தற்கால அரசியல் பொருளியல் பிரச்சினைகளையும் பெரியார் பார்வையில் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக நவம்பர் மாத இதழில் வந்த கட்டுரைகள். காந்தி ஜாதியை ஆதரித்தாரா? எதிர்த்தாரா? என்ற கட்டுரை காந்தி பற்றிய புதிய புரிதலைத் தந்தது. காஞ்சா அய்லய்யா பேட்டியில் ‘சமூகக் கடத்தல்’ குறித்து விரிவாக விளக்கியிருந்தார். அந்த சொற்றொடரே சிந்தனையைக் கிளறிவிட்டது. குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டால் ஆண் ஆண்மையற்றவன், பெண் மலடியானவள் சொத்துக்கு வாரிசு இல்லாமல் போய்விடும் வயதானால் பார்த்துக்கொள்ள ஆள் இருக்கமாட்டார்கள் என்பதையெல்லாம் அடித்து நொறுக்கி  குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்து வாழும் தம்பதிகள் குறித்து வெளிவந்த கட்டுரை மிகவும் சிறப்பு. 1957 நவம்பர் 26 சாதியை ஒழிக்க சட்டத்தை எரித்து சிறை சென்ற கருஞ்சட்டைத்  தோழர்களின் தியாகத்தை வாசிக்கும் போது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. களப்பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலைக் கொடுத்தது. ஜனவரி மாத இதழ் கார்ப்பரேட்...

டார்வினின் பரிணாம கோட்பாடு தவறா? மத்திய அமைச்சருக்கு அறிவியல்பூர்வ மறுப்பு

டார்வினின் பரிணாம கோட்பாடு தவறா? மத்திய அமைச்சருக்கு அறிவியல்பூர்வ மறுப்பு

“டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு விஞ்ஞான ரீதியாக தவறானது. அதனை பள்ளி, கல்லூரிப் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும். மனிதன் இந்த பூமியில் எந்தக் காலத்திலும் மனிதனாகவே இருந்துள்ளான். குரங்கு மனிதனாக மாறியதாக நம் முன்னோர்கள் எங்கும் கூறவில்லை” என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் அதிரடியாகப் பேசியுள்ளார். ஜனவரி 19 அன்று ஒளரங்காபாத்தில் அனைத்திந்திய வைதிக சம்மேளன நிகழ்ச்சியில் பேசும்போது இவ்வாறு உரையாற்றியுள்ளார்.அத்துடன் நில்லாமல் “நான் அடிப்படை ஏதும் இல்லாமல் இதைக் கூறவில்லை. டார்வினுடைய கொள்கைக்கு உலகம்முழுவதும் எதிர்ப்பு இருக்கிறது. நான் கலைப்பிரிவு பின்னணியிலிருந்து வந்தவன் அல்ல. தில்லி பல்கலைக் கழகத்தில் வேதியியல் பிஎச்.டி. பட்டம் வாங்கியவன். நானும் அறிவியல் மனிதன்தான்” என்று கூறி தனது கருத்துக்கு வலுவூட்ட முயன்றிருக்கிறார் சத்யபால் சிங். நமக்கோ `நானும் ரவுடிதான்’ என்று வடிவேலு ஒரு படத்தில் அலப்பறை செய்ததுதான் நினைவுக்கு வருகிறது! கிராஃபிக்சில் காண்பிப்பது மாதிரி நமது முன்னோர்கள்...

தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் நடுவண் ஆட்சி

தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் நடுவண் ஆட்சி

மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்தளிக்க 15ஆவது நிதிக் குழு பின்பற்றும் அளவீடுகள், காரணிகள் தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதை புள்ளி விவரங்களுடன்  அலசுகிறது கட்டுரை. நடுவண் அரசு வசூலிக்கும் வரி வருவாயில் ஒரு பகுதியை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 280 (1)ன் படி ‘நிதிக் குழு’ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது. தற்போது 14ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகள் (2015-20) செயல்பட்டுக் கொண்டிருக்கிறன. கடந்த ஆண்டு நவம்பரில் பதினைந்தாவது நிதிக் குழு அமைக்கப்பட்டு, அதற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவின் பரிந்துரைகள் வருகின்ற 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் 31 வரையில் அமலில் இருக்கும். இந்த 15ஆவது நிதிக் குழுவின் தலைவராக ஒன்றிய வருவாய்த் துறை செயலாளராக இருந்த என்.கே.சிங் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி 2017ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளார். மேலும் இந்தக்...

கோயில் கொள்ளைகளை சட்டமன்றத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர் ப. திருமாவேலன்

கோயில் கொள்ளைகளை சட்டமன்றத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர் ப. திருமாவேலன்

‘தாடி இல்லாத இராமசாமி’ தகுதி அடிப்படையில் 20 சதவீத இடஒதுக்கீடு செய்த முன்னாள் முதல்வர் பிரகாசம் உத்தரவை இரத்து செய்து வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை உறுதியாக அமுல்படுத்தினார் ஓமாந்தூரார். தமிழகம் வந்த காந்தியிடம் பார்ப்பனர்கள், இவர் இராமசாமி ரெட்டியார் அல்ல; தாடியில்லாத இராமசாமி நாயக்கர் என்று புகார் மனு தந்தனர். தங்களின்  பிள்ளைகளுக்கு பொறியியல் படிப்பு மறுக்கப்படுகிறது என்றார்கள். காந்தியார் பதிலடி தந்தார். பிராமண தர்மம் – வேதம் படிப்பது; வேதம் ஓதுவது தானே; என்ஜினியரிங் படிப்பது எப்படி பிராமண தர்மம் என்று திருப்பி விட்டார். பார்ப்பனர்கள் வாயடைத்துப் போனார்கள். இந்திய சுதந்திரத்துக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. அன்றைய சென்னை மாகாணத்து முதலமைச்சரான பிரகாசம், பல தவறுகளுக்கு  அடித்தளம் இடுபவராக இருந்தார்.  அவரை மாற்றுவதற்கு ராஜாஜியும் காமராஜரும் திட்டமிட்டார்கள். அடுத்ததாக யாரைக் கொண்டு வரலாம் என்று யோசித்தார்கள். அவர்கள் மனதில் உதித்தார் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே...

‘நிமிர்வோம்’ கவிஞர் தாரை வடிவேலன், தாரமங்கலம்

‘நிமிர்வோம்’ கவிஞர் தாரை வடிவேலன், தாரமங்கலம்

சாதிமுறைக் கல்யாணம் சாய்த்திடுக ஆணோடு பாதி எனநின்ற பெண்ணோடு – நீதி நயந்தே சுதந்திரத்தை நல்கிடுக போற்றிச் சுயமரியா தையாய் நிமிர். அந்தணர்க்கு நீயடிமை அல்லவென நின்றிடுக வந்தமொழி ஓட்டிடுக வண்டமிழை – வந்தனைசெய் அயல் மொழிக்(கு) ஆட்பட்(டு) அடிமையாய் நில்லாச் சுயமரியா தையாய் நிமிர். கடவுளில்லை என்றுபெரி யார்சொன்ன காரணத்தை நடைமுறையில் வைத்துப்பார் நன்றே – மடமை பயக்கும் இடமாகக் கோவிலை நீக்கி சுயமரியா தையாய் நிமிர். சூத்திரராய் நம்மைவைத்துச் சோதரரில் சாதிவைத்த ஆத்தியத்தில் நம்பெரியார் அந்திமகா லத்தும் அயர்ச்சி சிறிதுமின்றி ஆற்றினார் தொண்டு சுயமரியா தையாய் நிமிர்.   நிமிர்வோம் பிப் 2018 இதழ்

‘இராஜாஜி’யே கூறுகிறார் ‘ஆண்டாள்’ ஒரு கற்பனை

‘இராஜாஜி’யே கூறுகிறார் ‘ஆண்டாள்’ ஒரு கற்பனை

‘ஆண்டாள் என்பதே ஒரு கற்பனை; அது பெரியாழ்வாரால் உருவாக்கப்பட்டது’ என்று தீவிர வைணவரும் பார்ப்பனர்களின் தலைவராகக் கொண்டாடப்பட்டவருமான இராஜாஜி எனும் இராஜகோபாலாச்சாரியாரே கூறியிருக்கிறார். வைணவத்தைப் பரப்புவதற்காக பல்லாண்டுகாலமாக நடத்தப் பெறும் ‘திருவேணி’ எனும் ஆங்கிலப் பத்திரிகையில் 1946 செப்டம்பர் இதழில் இராஜகோபாலாச் சாரியின் இந்தக் கட்டுரை ‘ஆண்டாள் என்பவர் யார்?’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டாளின் பக்தியை சிலாகித்து, ஜெ.பார்த்தசாரதி என்பவர் ‘திரிவேணி’ ஜூன் இதழில், ‘ஆண்டாளின் காதல் கதை’ (கூhந சுடிஅயnஉந டிக யனேயட) என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரைக்கு மறுப்பாக, இராஜ கோபாலாச்சாரியார் அதே பத்திரிகைக்கு இந்த மறுப்பை எழுதியிருக் கிறார். இராஜகோபாலாச்சாரியார் அனுமதியோடு இது வெளியிடப்படு கிறது என்கின்ற முன்னுரையுடன் ‘திருவேணி’ இதழ் அந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இராஜ கோபாலாச்சாரியின் ஆங்கிலக் கட்டுரையையும் அதன் தமிழாக்கத்தையும் ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது. “Who is Andal? – BY C. R. (After reading the “Romance...

‘தேவதாசி’ முறையை உருவாக்கியது யார்? வாலாசா வல்லவன்

‘தேவதாசி’ முறையை உருவாக்கியது யார்? வாலாசா வல்லவன்

சைவத்தைப் பரப்புவதற்கு பாடுபட்டவர்கள் நாயன் மார்கள். இவர்கள் 63 பேர். வைணவத்தைப் பரப்பு வதற்காகப் பாடுபட்டவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் 12 பேர். இதில் ஆண்டாள் என்பவரும் ஒருவராவார். ஆண்டாள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக வரலாற்றில் எழுதியுள்ளனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பது தமிழகத்தில் களப்பிரர்களை அழித்துவிட்டு பல்லவர்கள் கோலோச்சிய காலம். அதாவது சமணத்தையும், பௌத்தத்தையும் அழித்து சைவ, வைணவ சமயங்களைப் புதுப்பிக்கத் தொடங்கிய காலம். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர் களுக்கு இருந்த உரிமைகள் நீக்கப்பட்டன. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டு உழு குடிகளுக்கு கொடுக்கப் பட்டது. எனவே வரலாற்றில் அதை ‘இருண்ட காலம்’ என்று எழுதிவிட்டனர். குப்தர்கள் ஆட்சி ‘பொற்காலம்’ என்று படிக்கிறோம். என்ன காரணம்? பார்ப்பனர்களுக்கு பணமும், பொருளும் வாரிவாரி வழங்கப்பட்டன. இதிகாசங்களில் இடம் பெற்றிருந்த பெயர் களெல்லாம் ஊர்ப் பெயர்களாக மாற்றப்பட்டன. ஆகவே அது பொற்காலம் என அழைக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், பார்ப்பனர்கள் சுகமாக இருந்தால்...

ஆண்டாளும் ‘தேவதாசி’ மரபும்

ஆண்டாளும் ‘தேவதாசி’ மரபும்

‘ஆண்டாள்’ தேவதாசி மரபைச் சார்ந்தவராக இருக்கலாம் என்று கவிஞர் வைரமுத்து, ஆய்வாளர் ஒருவர் கருத்தை மேற்கோள் காட்டியதற்காக வைணவப் பார்ப்பனர்கள் வீதிக்கு வந்து போராடிய காட்சிகளை தமிழகம் பார்த்தது. கவிஞர் வைரமுத்து கூறிய கருத்தில் மாறுபாடு இருந்தால் அதை ஆதாரங்களோடு மறுக்கலாம்; விவாதங்களும் உரையாடல்களும் நடத்தலாம். ஆனால், ‘ஆண்டாள்’ குறித்தோ அல்லது ‘வேதமதம்’ குறித்தோ எவரும் விமர்சிக்கக்கூடாது என்பதும், அது இந்துக்களுக்கு விரோதம் என்றும் ஜீயர்கள் வன்முறை மிரட்டல்களில் இறங்குவதும்தான், இவர்கள் பேசும் ‘சகிப்புத் தன்மை’ என்பதன் இலக்கணமா என்று கேட்கிறோம். ‘ஆண்டாள்’ என்பதே ஒரு கற்பனை என்று வைணவப் பார்ப்பனர் களின் அரசியல் குரு இராஜகோபாலாச்சாரியார் எழுதிய கட்டுரையை இந்த இதழில் வெளியிட்டிருக்கிறோம். ‘திரிவேணி’ என்ற வைணவர்களுக்கான இதழே இந்தக் கட்டுரையையும் 1946ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறது. ஜீயர்கள் இதற்கு என்ன பதிலைக் கூறப் போகிறார்கள்? பக்தி இலக்கியங்கள்தான் தமிழை வளர்த்தன என்று அவ்வப்போது தமிழ்நாட்டின் பக்தி மேடைகளிலிருந்து குரல்கள் ஒலித்து...

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச். ராஜாவைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உருவ பொம்மை எரிப்புகள் நடந்தன. குமரி மாவட்டத்தில் 07-03-2017 புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீநாத்திடம் புகார் மனு வழக்குரைஞர் வே.சதா (மாவட்டத் தலைவர்) தலைமையில் தமிழ்மதி (மாவட்டச் செயலாளர்), நீதி அரசர் (தலைவர், பெரியார் தொழிலாளர் கழகம்), சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்), அப்பாஜி (வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர், தி.மு.க), வைகுண்ட ராமன், வின்சென்ட் ஆகியோரால் வழங்கப் பட்டது. ஆனைமலை : கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின்  ஒருங் கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் 07-03-2018 மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது. ஆனைமலை நகரச் செயலர் வே.அரிதாசு தலைமையில், நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது. கண்டன உரையாக நாகராசு (திராவிடர் கழகம்), பரமசிவம் (சிபிஎம் ), மணிமாறன்  (வெல்ஃபேர் பார்ட்டி), அப்பன்குமார் (விசிக), சாந்துசாகுல்அமீது (இந்திய...

‘காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு’ முடிவு இரத யாத்திரையை எதிர்த்து செங்கோட்டையில் மறியல்!

‘காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு’ முடிவு இரத யாத்திரையை எதிர்த்து செங்கோட்டையில் மறியல்!

நாடு தழுவிய அளவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் காவி பயங்கரவாத நடவடிக்கைகள் பரவலாகி  வருகின்றன. தமிழ்நாட்டை தங்களது பிடியில் கொண்டு வரச் செய்யும் முயற்சியாக ஆர்.எஸ்.எஸ். பேரணிகளை நடத்தினார்கள். இச் செயலுக்கு ஒத்துப்போன தமிழ்நாடு அரசு, மோடியின் பொம்மை அரசாகவே இருந்துவருகிறது. நிவேதிதா நூற்றைம்பதாவது ஆண்டு நினைவு இரதயாத்திரை மத்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன் தொடங்கி வைக்க கோவையிலிருந்து சனவரி 22 முதல், பிப்ரவரி 22 சென்னை வரைநடந்து முடிந்துள்ளது.     27 மாவட்டங் களினூடாக 35 கல்லூரிகளுக்குள் நுழைந்து இரண்டு இலட்சம் மாணவர்களைச் சந்தித்து, 3000 கி.மீ பயணத்தை முடித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்னே மட்டும் வளர்மதி மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவை கல்வி நிறுவனங்களைக் காவி மயமாக்கும் முயற்சியின் பகுதியாகும். விஸ்வ ஹிந்து பரிசத்தின் ஏற்பாட்டில் அயோத்தி முதல் இராமேஸ்வரம் வரை “இராமராஜ்ய இரதயாத்திரை” என்ற பெயரில் கீழ்வரும் முழக்கங்களை முன்வைத்து பிப்ரவரி...

உள் துறை ஆதரவுடன் உலா வரும் ‘இராமராஜ்ய யாத்திரை’

உள் துறை ஆதரவுடன் உலா வரும் ‘இராமராஜ்ய யாத்திரை’

கடந்த கால கலவர யாத்திரைகளை கட்டமைத்தவர் இன்றைய பிரதமர் மோடி மீண்டும் இராம ராஜ்ய யாத்திரையை பா.ஜ.க. பின்னால் இருந்து கொண்டு பரிவாரங்களை முன்னிறுத்தித் தொடங்கியிருப்பதன் பின்னணியை  அலசுகிறது, கட்டுரை. 2014 ஆம் ஆண்டில், “ஊழல்” காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தின் மூலம்தான் ஆட்சி அமைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பொருளாதார உதவி செய்யக் கூடிய உலகளாவிய ஆதரவாளர்களின் உதவியோடு, “அச்சே தின் (ஹஉஉhந னin)”, “தூய்மை இந்தியா” போன்ற அலங்காரப் சொற்களால் மக்களைக் கவர்ந்தார் மோடி. கடந்த 3 ஆண்டுகளில், பொது வாழ்க்கை சீரழிந்துவிட்டது. அதன் விளைவுகளிலிருந்து மீள்வது மிகக் கடினம்! ஃபாசிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி காவிக் கும்பலை ஊக்குவிப்பதும், சிறுபான்மையினர் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து மதவாத நஞ்சைப் பரப்புவதும், ஜனநாயகத்தைத் திட்டமிட்டு சீரழிப்பதும், பாராளுமன்ற நல்லொழுக்கத்திற்குக் கேடு விளைவிப்பதும், நிறுவனங்களைக் காவி மயமாக்குவதும், பண மதிப்பிழப்பு (னுநஅடிnவைளையவiடிn) போன்ற பகுத்தறிவற்ற முடிவுகளை எடுப்பதும், ஜி.எஸ்.டி.யை அவசரமாக செயல்படுத்தியதும்,...

‘ஜென்னி-மார்க்ஸ்’ பிறப்பு மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன்கொடை

‘ஜென்னி-மார்க்ஸ்’ பிறப்பு மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன்கொடை

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் அவர்களின் மகன் வீரமணி-மேரி இணையருக்கு பிப்ரவரி 18ஆம் தேதி பிறந்த பெண் குழந்தைக்கு ஜென்னி மார்க்ஸ் என்று பெயரிடப் பட்டுள்ளது. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இந்த இணையர், குழந்தைப் பிறப்பு மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். (நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்-ஆர்) பெரியார் முழக்கம் 15032018 இதழ்

தூத்துக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்

தூத்துக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 11-03-2018 அன்று தூத்துக்குடி முத்து மஹாலில் ஒரு நாள் “பெரியாரியல் பயிலரங்கம்” நடைபெற்றது. இதில் திராவிடர் இயக்க வரலாறு பற்றியும், வகுப்புரிமை வரலாறு பற்றியும், தந்தை பெரியாரின் போராட்ட வரலாறு பற்றியும், தமிழர்- திராவிடர் பற்றிய விளக்கங்களையும், திராவிடர் இயக்கத்தின் மீதான அவதூறுகளுக்கு விளக்கங்களையும்,  திராவிடர் விடுதலைக் கழகத்தின் போராட்ட வரலாறு பற்றியும் மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் விரிவாக பயிற்சியளித்தார். பயிற்சி வகுப்புக்கு பின்னர் கலந்து கொண்ட பயிற்சி யாளர்கள் தங்களுக்கு தோன்றிய சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு விளக்கம் பெற்றனர். இப்பயிற்சி வகுப்பில் 25க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். காலை மாலை தேநீருடன் மதிய உணவாக பிரியாணி வழங்கப் பட்டது. இப்பயிற்ச்சி வகுப்புக்கான ஏற்பாட்டை தூத்துக்குடி திவிக மாவட்டச் செயலாளர் இரவி சங்கர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். பெரியார் முழக்கம் 15032018 இதழ்  

123 நாடுகளில் பெரியார் சிலை குறித்து தேடல்கள்

123 நாடுகளில் பெரியார் சிலை குறித்து தேடல்கள்

உலக அளவில் சிலை என்று தேடினால், இணையத் தேடலில் இடம்பெறும் முதன்மை வார்த்தையாகப் ‘பெரியார் சிலை’ உள்ளது. 6 கண்டங்கள், 123 நாடுகளில் சிலை குறித்த தேடல் கடந்த 4 நாள்களில் அதிகம் இடம் பிடித்துள்ளது. தேடல் அதிகம் உள்ள இடங்கள் அனைத்துமே தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக அளவில் சிலை குறித்து அதிகம் தேடிய நாடுகளாகச் சீனா, நேபாளம், இரான் ஆகிய நாடுகள் உள்ளன. சிலை குறித்த தேடலில், திரிபுரா லெனின் சிலை, பெரியார் சிலை, யார் லெனின் போன்றவை உலக அளவில் தேடப்பட்டுள்ளன. இந்திய அளவிலான தேடலிலும் இதே முடிவுகள்தான் பிரதிபலித்தன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பெரியார் குறித்துத் தேடியுள்ளன. பெரியார் முழக்கம் 15032018 இதழ்

சி.பி.எஸ்.இ. வினாத்தாளில் ‘வர்ணாஸ்ரம’ பெருமை

சி.பி.எஸ்.இ. வினாத்தாளில் ‘வர்ணாஸ்ரம’ பெருமை

நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் தேர்வுகள் தொடங்கியுள்ளன. அதில் 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் பிரிவுக்கான வினாத்தாளில், பிஞ்சு உள்ளங்களில் ‘வர்ணாஸ்ரமத்தை’த் திணிக்கும் வினா ஒன்று கேட்கப்பட்டுள்ளது. “இந்து மத வர்ணாஸ்ரமத்தின்படி மிகக் கீழான ஜாதி எது? 1. பிராமணன், 2. சூத்திரர்கள், சத்திரியர்கள், 4. வனப்பிரஸ்தர்கள் என 4 வாய்ப்புகள் தரப்பட்டுள்ளது. இதில் எது சரி என்பதை 6ஆம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து ‘டிக்’ செய்ய வேண்டும். ‘சூத்திரன்’ தான் கீழான ஜாதி என்று கூறினால்தான் மதிப்பெண். வரலாற்று புத்தகத்தில் வர்ணாஸ்ரம ஜாதி அமைப்புப் பற்றி விரிவாக விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இவற்றைப் பின் பற்றக்கூடாது என்று கடைசியில் ஒரு வரியை மட்டும் பாதுகாப்பாக சேர்த்துள்ளனர். இளம் மாணவர்கள் பின்பற்றவே கூடாத ஒரு கருத்தை ஏன் பாடத் திட்டத்தில் சேர்த்து ‘சூத்திரன்’ தான் இழிவான ஜாதி என்று...

தலையங்கம் சிலிர்த்தெழுந்தது தமிழினம்!

தலையங்கம் சிலிர்த்தெழுந்தது தமிழினம்!

திரிபுராவில் லெனின் சிலை உடைப்பை நியாயப்படுத்தியும்,  அடுத்து தமிழ்நாட்டில் ஜாதி வெறியர் ஈ.வெ.ரா. சிலை உடைக்கப்படும் என்றும், பா.ஜ.க.வின் தேசியச் செயலாளராக உள்ள எச். ராஜாவின் முகநூல் பதிவு தமிழகத்தையே பெரியாருக்கு ஆதரவாக சிலிர்த்தெழச் செய்துவிட்டது.  ‘அப்படி ஒரு பதிவை நான் போடவில்லை; என்னுடைய வலைதளப் பொறுப்பை ஏற்றுள்ள ஊழியர் (அட்மின்) தவறாகப் பதிவேற்றி விட்டார்.’ என்று பதுங்கினார் எச். ராஜா. அவர் கக்கிய நஞ்சை அவரையே திரும்ப விழுங்க வைத்தது இந்த எழுச்சி. பிரதமர் மோடியும் பா.ஜ.க. தலைவர் அமீத்ஷாவும் மத்திய  அமைச்சர் பொன் இராதா கிருஷ்ணனும், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையும் எச்.ராஜா வின் கருத்தை ஏற்க முடியாது என்று  அறிவிக்கும் நிலையை உருவாக்கியது – தமிழ்நாட்டின் சிலிர்ப்பு. பெரியாரை அவ்வப்போது விமர்சனத்துக்குள்ளாக்கி வந்த சில தமிழ்த் தேசிய அமைப்புகளும் கலைத் துறையினரும் தங்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்து நின்ற ‘பெரியார்’ மீதான உணர்வுகளை வெளிப்படுத்தினர். கேரள முதல்வர்...

ஜாதி மறுப்பு திருமணங்களுடன் திருப்பூரில் கழகத்தின் மகளிர் நாள் எழுச்சி மாநாடு

ஜாதி மறுப்பு திருமணங்களுடன் திருப்பூரில் கழகத்தின் மகளிர் நாள் எழுச்சி மாநாடு

திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் மகளிர் நாள் மாவட்ட மாநாட்டு பேரணி  12.03.2018 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் இருந்து துவங்கியது. பேரணிக்கு முன்பாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு ஜாதி ஒழிப்பு முழக்கங்களுடன் மாலை  அணிவித்தனர். பேரணியை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கொடி அசைத்து துவங்கி வைத்தார். பேரணிக்கு கழகத் தோழர் சுசீலா தலைமை தாங்கினார். பேரணி முன் வரிசையில் பறை முழக்கமும், கழக மகளிரின் நடனத்துடன் சென்றது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என வரிசையில் சுயமரியாதை இயக்கப்பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள், போராளிகளின் படங்களை தாங்கிப் பிடித்தபடி கொள்கை முழக்கங்களுடன் எழுச்சியுடன் அணி வகுத்தனர். சாலையின் இருபுறமும் மக்கள் பேரணியை பார்வையிட்டனர். திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையை பேரணி அடைந்தது. கழகத் தலைவர்  கொளத்தூர் மணி பெரியார் சிலை, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அங்கு...

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.”

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.”

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.” திருப்பூர் இராயபுரத்தில் 12.03.2018 மாலை 6 மணியளவில் மகளிர் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.மாநாட்டிற்கு தோழர் பார்வதி தலைமையேற்றார்.தோழர் சரண்யா வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக பெரியார் பிஞ்சுகள் யாழினி,யாழிசை,அமுதினி ஆகியோரும் மாணவர்கழகத்தின் வினோதினி,வைத்தீஸ்வரி, சுதா,மணிமொழி,கனல்மதி ஆகியோர் பெரியார் இயக்கப்பாடல்களை பாடினார்கள். தொடர்ந்து கோவை நிமிர்வு கலையகத்தின் அதிரும் பறையிசை மேடையில் துவங்கியது. பறை இசையின் தொன்மை,புகழ் ஆகியவற்றின் விளங்கங்களுடன் அதன் தேவையையும் நடனத்துடன் கூடிய விளக்கமாக நிகழ்த்தியது பொதுமக்களின் கரவொலியுடன் பேராதரவை பெற்றது. மாணவர்கழகத்தின் காருண்யா அவர்கள் மகளிர் தினம் குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார்.அடுத்து பகுத்தறிவு வழக்காடு மன்றம் நடைபெற்றது. கருத்துச்செறிவுடன் நடந்த விவாதக்களத்தில் வாதங்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்க்கப்பட்டது. மாலை நிகழ்விற்கு தலைமையேற்ற தோழர் பார்வதி அவர்கள் பெரியாரியல் தன் வாழ்வில் கொடுத்த தன்நம்பிக்கையையும், துணிச்சலையும் எடுத்துரைத்தார். தோழர் பசு.கவுதமன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மாநாட்டில் நடைபெற்றது.இரண்டு ஜாதி மறுப்புத் திருமணங்களும்...

தோழர் பசு.கவுதமன் அவர்கள் எழுதிய நூல்கள் வெளியீடு !

தோழர் பசு.கவுதமன் அவர்கள் எழுதிய நூல்கள் வெளியீடு !

தோழர் பசு.கவுதமன் அவர்கள் எழுதிய நூல்கள் வெளியீடு ! திருப்பூரில் 12.03.2018 அன்று நடைபெற்ற மகளிர் நாள் மாநாட்டில் தோழர் பசு கவுதமன் அவர்கள் எழுதிய ”பெரியாரிய பெண்ணிய சிந்தனைகள்” எனும் நூலை தோழர் சிவகுரு (பாரதி புத்தகாலயம்) அவர்கள் வெளியிட தோழர் ஈரோடு பிரேமா அவர்கள் பெற்றுக்கொண்டார். ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலை கழகத்தலைவர் வெளியிட தோழர் காருண்யா பெற்றுக்கொண்டார். தோழர் சிவகுரு நூல்கள் குறித்து அறிமுகம் செய்து உரையாற்றினார்.

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற  ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்’

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்’

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்” 12-3-2018 திருப்பூரில் நடைபெற்ற மகளிர் தின மாநாட்டில் இரண்டு ஜாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவேற்றிவைத்தார். சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், ஆவணியூர், வி.என்.பாளையம் தங்கம்மாள்-அண்ணாமலை ஆகியோரின் மகன் செல்வகுமார் – எடப்பாடி வட்டம்,ஜலகண்டபுரம் சாலை காவலர் குடியிருப்பில் வசிக்கும் சின்னராசு-மயில் ஆகியோரின் மகள் ஸ்வாதிப்பிரியா ஆகியோருக்கும், சேலம்,உடையாப்பட்டி, சாந்தி-கிருஷ்ணன் ஆகியோரின் மகன் பிரபு – பழனியில் வசிக்கும் செல்வி-வடிவேல் ஆகியோரின் மகள் பிரியதர்ஷினி ஆகியோருக்கும் மாநாட்டு மேடையில் வாழ்க்கை இணையேற்பு நிகழ்ந்தது. இரண்டு இணையேற்பும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் இடையே நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.”  ‘எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி’

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.” ‘எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி’

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.” ‘எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி’ திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் மகளிர் நாள் மாவட்ட மாநாட்டு பேரணி 12.03.2018 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் இருந்து துவங்கியது. பேரணிக்கு முன்பாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகத்தின் மகளிர் ஜாதி ஒழிப்பு முழக்கங்களுடன் மாலை அணிவித்தனர். பேரணியை கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.பேரணியை கழகத்தோழர் சுசீலா அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். பேரணி முன் வரிசையில் பறைமுழக்கமும்,கழக மகளிரின் நடனத்துடன் சென்றது.குழந்தைகள், பெண்கள்,ஆண்கள் என வரிசையில் சுயமரியாதை இயக்கப்பெண்கள்,சமூக செயற்பாட்டாளர்கள்,போராளிகளின் படங்களை தாங்கிப்பிடித்தபடி கொள்கை முழக்கங்களுடன் எழுச்சியுடன் பேரணி நடந்தது.சாலையின் இருபுறமும் மக்கள் நடைபெற்ற பேரணியை உன்னிப்பாக கவனித்தனர். திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையை பேரணி அடைந்தது. கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் சிலை,அண்ணா...

“சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா உடுமலைப்பேட்டை 13032018

“சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா உடுமலைப்பேட்டை 13032018

(13.03.2018) உடுமலைப்பேட்டையில், தோழர் கெளசல்யா அவர்களின் “சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். நாள் : 13.03.2018 செவ்வாய் நேரம்: மாலை 3 மணி இடம்: காயத்திரி திருமண மண்டபம், கொழுமம், உடுமலைப்பேட்டை.

எச் இராஜாவை வளைக்கும் சட்டப்பிரிவுகள்

எச் இராஜாவை வளைக்கும் சட்டப்பிரிவுகள்

ராஜாவை வளைக்கும் சட்டப் பிரிவுகள்! பெரியார் சிலை பற்றி பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சமூக வலைதலத்தில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ராஜாவின் பதிவைத் தொடர்ந்தே திருப்பத்தூரில் பெரியார் சிலை தாக்கப்பட்டது. எனவே தமிழகத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டு, நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயல்படும் ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயரட்சகன் புகார் அளித்தார். அதன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், வழக்குபதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுபற்றி ஜெயரட்சகன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் வழக்கறிஞர் துரை அருணிடம் பேசினோம். “பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஹெச்.ராஜா தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையில் பகைமையை மூட்டும் வகையில் பேசிவருகிறார். சமூக...

அமேசானின் தானியங்கி சூப்பர் ஸ்டோர் பொருளாதார சுரண்டலை உறுதி செய்யும் முதலாளித்துவ கட்டமைப்பு

அமேசானின் தானியங்கி சூப்பர் ஸ்டோர் பொருளாதார சுரண்டலை உறுதி செய்யும் முதலாளித்துவ கட்டமைப்பு

அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் 100% தானியங்கி சூப்பர் ஸ்டோரை அமைத்திருக்கிறது. ஒரே ஒரு வேலையாள் கூட இல்லாத இது அறிவியல் வளர்ச்சியின் உச்ச கட்டம். நவீன விஞ்ஞானம் இயந்திரங்கள் மனிதனை உடல் உழைப்பிலிருந்து விடுவித்திருக்கின்றன. மனித உழைப்பை எளிதாக்கி, மனிதன் அதிக நேரத்தை தன் குடும்பத்தோடும், பொழுது போக்குக்காகவும் செலவிடலாம் என்கிற நிலையை உருவாக்கி இருக்கிறது. எந்த அறிவியல் கண்டுப்பிடிப்பும் தனி மனிதனால் கண்டுபிடிக்கப்படுவதாக தோன்றினாலும், உண்மை அப்படி இல்லை. உலக வரலாற்றில் மனித சமுதாயத்தின் வளர்ச்சியின் விளைவே அறிவியல் வளர்ச்சியும், மனித வாழ்வின் அனைத்து மேம்பாடுகளும். அமேசானின் அமெரிக்காவில் அமைத்திருக்கும் தானியங்கி சூப்பர் ஸ்டோர் மனித சமூகத்தின் வளர்ச்சியின் பெருமைக்குரிய மைல்கல். இதன் பலன்கள் மனித குலத்தின் பலனாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். அதனால் மிச்சப்படுத்தப்பபட்ட மனித உழைப்பின் பலன். தொழிலாளர்கள் வேலை நேரக் குறைப்பாக, பொருளாதாரப் பயன்கள் சமூக மேம்பாட்டின் உயர்வாக மாற வேண்டும். ஆனால் இதற்கு நேர் மாறாக...

நீதித்துறையில் காவிகளின் ஊடுறுவல் !  காவிகளின் மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பதா?

நீதித்துறையில் காவிகளின் ஊடுறுவல் ! காவிகளின் மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பதா?

நீதித்துறையில் காவிகளின் ஊடுறுவல் ! காவிகளின் மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பதா? (24.02.2018) கோவையில் ஆர்.எஸ்.எஸ்.சின் வழக்கறிஞர் பிரிவான அகில பாரத அதிவக்த பரிஷத் எனும் அமைப்பும்,அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழகப் பிரிவும் இணைந்து நடத்தும் மாநில வழக்கறிஞர் 2வது மாநாட்டை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி துவக்கி வைத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளவிருக்கிறார் என்கிற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இவ்ர் கோவையில் மாவட்ட நீதிபதியாக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ABVP மாநாட்டில் பங்கேற்றவர் என்ற செய்தியை அறிய வரும்போது நமக்கு மேலும் பெரும் அதிர்ச்சியே ஏற்படுகிறது. இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பற்றதன்மைக்கு இது எதிரான செயலாகும்.இந்திய அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீதித்துறையில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியே இப்படி ஒரு மதவாத அமைப்பின் நிகழ்ச்சியை துவங்கி வைப்பது நீதித்துறையின் மத சார்பற்றதன்மையையும், நம்பிக்கையையும் சீர்குலைக்கும் செயலே ஆகும். முன்பு பெங்களூருவில் கர்நாடக...

தூத்துக்குடியில் தமிழ்நாடு மாணவர் கழகம் கல்லூரி மாணவர்களிடம் பரப்புரை !

தூத்துக்குடியில் தமிழ்நாடு மாணவர் கழகம் கல்லூரி மாணவர்களிடம் பரப்புரை !

தூத்துக்குடியில் தமிழ்நாடு மாணவர் கழகம் கல்லூரி மாணவர்களிடம் பரப்புரை ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட மாணவர் கழகம் சார்பாக 21.02.2018 அன்று “மாணவர்களே! இருள் சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்” எனும் தலைப்பில் தமிழக மாணவர்கள் எவ்வாறு இந்த இந்துத்துவ மோடி அரசால் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான அரசுப் பணிகள் எவ்வாறு பிறருக்கு தாரைவார்க்கப்படுகின்றன, 60% இட ஒதுக்கீடு வைத்திருக்கிற தமிழ்நாட்டில் நமக்கான வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெளி மாநில மாணவர்கள் பெரும்பான்மையாக பங்கெடுக்கும் அளவிற்கு கதவை திறந்து விட்டுருக்கிற பா.ஜ.க. எடுபிடி அரசான தமிழக அரசின் நயவஞ்சகத்தை ஒரு துண்டறிக்கையாக தயார் செய்து அதை தூத்துக்குடியில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களிடம் பரப்பி விழிப்புணர்வை உண்டாக்கும் முயற்சியில் துண்டறிக்கை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.. இதற்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. பல...

ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் ஜாதி எதிர்ப்பு போராளிகளுக்கும் பாராட்டு விழா !

ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் ஜாதி எதிர்ப்பு போராளிகளுக்கும் பாராட்டு விழா !

மதுரையில், ஜாதி மறுப்பு இணையோர்களுக்கும், ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் ஜாதி எதிர்ப்பு போராளிகளுக்கும் பாராட்டு விழா ! மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 13.02.2018 அன்று மாலை 5 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள ராமசுப்பு அரங்கத்தில் நடைபெற்றது. சிறப்புரை : கழக பரப்புரை செயலாளர்.பால்.பிரபாகரன் ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் தமிழ் புலிகள் கட்சி பொது செயலாளர் பேரறிவாளன் சிபிஎம்எல் மக்கள் விடுதலை பாரதி கண்ணம்மா -பாரதி கண்ணம்மா அறக்கட்டளை பேராசிரியர் முரளி -Pucl ரபீக்ராஜா-இளந்தமிழகம் வெண்மணி -தபெதிக ஆனந்தி – குறிஞ்சியர் விடுதலை இயக்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திராவிடர் விடுதலைக் கழகம்,மதுரை மாவட்டம்.

‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” ஏன் ? விளக்கமளிக்கும் துண்டறிக்கை !

‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” ஏன் ? விளக்கமளிக்கும் துண்டறிக்கை !

”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” ஏன் ? விளக்கமளிக்கும் துண்டறிக்கை ! தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 02.03.2018 வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில் கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் தோழர்களால் ”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” நடத்தப்பட்டது. நம் தாய்மொழி தமிழை இழிவுபடுத்தும் ஆரிய பார்ப்பனர்களின் போக்கை கண்டித்தும்,தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்து இம்மண்ணிற்கு தொடர்பே இல்லாத செத்துப்போன சமஸ்கிருத மொழியில் வாழ்த்துப்பாடலை பாடியிருக்கும் இந்து சனாதனவாதிகளுக்கு எதிராக தமிழ்மொழி வாழ்த்துப்பாடலை தோழர்கள் பொதுவெளியில் பாடி மக்களிடம் இதுகுறித்த பரப்புரைகளை மிக சிறப்பாக முன்னெடுத்தனர்.

”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி”

”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி”

”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” ”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 02.03.2018 வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில், சேலம் மாவட்டம், கொளத்தூர், மேட்டூர் பேருந்து நிலையங்களில் தோழர்களால் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஜெயேந்திரனாலும், சென்னை ஐ.ஐ.டி.யிலும் தமிழ் மொழி வாழ்த்து அவதிக்கப்பட்ட செய்திகளை விளக்கிக் கூறிவிட்டு, அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவோம் எனக் கேட்டுக் கொள்ள எல்ல பேருந்துகளிலும் பொதுமக்கள் எழுந்துநின்று பாடினர். நம் தாய்மொழி தமிழை இழிவுபடுத்தும் ஆரிய பார்ப்பனர்களின் போக்கை கண்டித்தும்,தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்து இம்மண்ணிற்கு தொடர்பே இல்லாத செத்துப்போன சமஸ்கிருத மொழியில் வாழ்த்துப்பாடலை பாடியிருக்கும் இந்து சனாதனவாதிகளுக்கு எதிராக தமிழ்மொழி வாழ்த்துப்பாடலை தோழர் பொதுவெளியில் பாடி மக்களிடம் இதுகுறித்த பரப்புரைகளை மிக சிறப்பாக முன்னெடுத்தனர்.

“பெரியாரியல் பயிலரங்கம்” தூத்துக்குடி 11032018

“பெரியாரியல் பயிலரங்கம்” தூத்துக்குடி 11032018

“பெரியாரியல் பயிலரங்கம்”.. தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “பெரியாரியல் பயிலரங்கம்”.. நாள்: 11-03-2018, ஞாயிறு.. இடம்: முத்து மஹால், தூத்துக்குடி. பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற உள்ளன விருப்பமுள்ளோர் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.  · Provide translation into English

இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் சென்னை 06032018

இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் சென்னை 06032018

இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் – முடிவுகள் 20 அன்று இராஜபாளையம் வழியாக மதுரை வரும் இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் – (சென்னை_06_03_2018) முடிவுகள். 1. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் இராமராஜ்ஜிய இரத யாத்திரை தமிழகத்தில் நுழைய அனுமதிக்காதே என தமிழகக் காவல்துறைத் தலைவரிடம் மனு அளிப்பது 2. இரதயாத்திரையை தமிழ்நாட்டில் நுழையும் செங்கோட்டை எல்லையிலேயே #தடுப்பு_மறியல்! தலைவர்கள் திரளாகக் கட்சியினருடன் கலந்து கொள்வது. 3. நெல்லை, மதுரை, விருதுநகர், தென்காசி, இராஜபாளையம் ஆகிய இடங்களில் போராட்டத் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்துவது 4. காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு எனும் பெயரில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைப்பது. தொடர் செயல்பாடுகளை முன்னெடுப்பது 5. தோழர் மீ.த.பாண்டியன் ஒருங்கிணைப்பாளர் எனத் தீர்மானிக்கப்பட்டது. கூட்ட ஒருங்கிணைப்பு – தலைமை தோழர் மீ.த.பாண்டியன் தலைவர், தமிழ்தேச மக்கள் முன்னணி பங்கேற்றோர்: தோழர் கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் தோழர்...

பேராவூரணியில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

பேராவூரணியில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

பேராவூரணியில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! மதவெறியைத் தூண்டும் வகையில் பேசிவரும் எச். இராசாவைக் தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – பேராவூரணி பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம். பேராவூரணி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் எச். ராசாவைக் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேல் “திரிபுரா மாநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த, புரட்சியாளர் லெனின் சிலையை, தற்போது அம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் உடைத்தெரிந்திருக்கும் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உலகில் தலைசிறந்த தலைவர்களின் சிலைகளை எல்லா நாடுகளும் அமைத்துப் போற்றி வருகிறது. இந்தியாவின் தேசத் தந்தை காந்தியடிகளின் சிலை உலகெங்கும் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. பகுத்தறிவுத் தந்தைப் பெரியாரின் சிலை உலகெங்கிலும் அமைக்கப்பட்டு போற்றப்படுகிறது. சமூகத்தில் சிறந்த சிந்தனைகளை போற்றுவதும் அச்சிந்தனை...