இந்திய ஒன்றியம் தமிழர்களுக்கென குற்றப்பரம்பரை சட்டத்தை வைத்துள்ளதா? – திவிக தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் காட்டம்
தமிழ்நாடு நாள் விழாவை கொண்டாடியதாக தோழர் பொழிலன் உள்ளிட்ட 15 தோழர்களை சிறைப்படுத்திய தமிழ்நாடு அரசை கண்டிக்கின்றோம்! தமிழ்நாடு உருவான நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாளாக அரசு விழா எடுத்து கொண்டாடி வரும் வேளையில், தமிழ்நாடு நாள் விழா மற்றும் தமிழ்நாட்டு கொடி ஏற்றியதற்காக தமிழக மக்கள் முன்னனியின் தலைவரும், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் பொழிலன், தோழர் ஜான் மண்டேலா ஆகியோர் செங்கற்பட்டு சிறையிலும் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் (ஏசு) ச.குமார், சு.நாகேந்திரன், சு.செல்வம் மற்றும் வட சென்னையை சேர்ந்த தோழர்கள் சேகர் (MRF), ஆ.பாரத்குமார், அ.லோகநாதன், கு.பார்த்திபன், மு.சதிஷ், சு.சுரேஷ், சு.முரளி, இரா.அண்ணாதுரை, பு.சந்தோஷ், சி.வீரன் ஆகியோரை 124-A உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பொன்னேரி சிறையிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். பாஜக- அதிமுக அரசுகளின் இந்த அடக்குமுறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஒருபக்கம் தமிழ்நாடு நாள் விழாவை அரசு விழா என்று...