பெரியார் சிலை அவமதிப்பு -கழகத் தலைவர் நாளிதழ் பேட்டி


பெரியார்_சிலை_அவமதிப்பு,
#கந்த_சஷ்டி_கவசம் குறித்த சர்ச்சை குறித்து
கழகத் தலைவர் #தோழர்_கொளத்தூர்_மணி அவர்கள் 18.07.2020 அன்று நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள #பேட்டி :

“தமிழகத்தில் அண்மைக்காலங்களில் திருவள்ளுவர் சிலைக்கு காவி துணி கட்டுவது, பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பத்திரிக்கையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தி பேசுவது, ஹைகோர்ட்டாவது மயிராவது என்று கோர்ட்டை அவமதிப்பது ஆகியவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவர்கள் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்வதில்லை; செய்தாலும் கைது செய்வதில்லை. ஆனால் கடந்த ஜனவரி மாதம் கந்தசஷ்டி கவசத்தில் எழுதப்பட்டுள்ள வாசகத்தை படித்து வீடியோ பதிவிட்ட வரை ஆறு மாதங்கள் கழித்து தேடிப்பிடித்து கைது செய்கிறார்கள். இதன் நோக்கம்தான் என்ன? நடவடிக்கை எடுத்தால் அனைவர் மீதும் சரிசமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்த சஷ்டியைப் படித்தவர் ஒன்றும் அதில் இல்லாததை படிக்கவில்லையே? அதிலுள்ள ஆபாச வார்த்தைகளை மதம் என்ற பெயரில் மக்கள் மீது திணிக்கப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் படித்துக் காண்பித்துள்ளார்
ஒரு மாணவனிடம் பாடப்புத்தகத்தைக் கொடுத்து அதைப் படித்தால் அதைக் குற்றம் என்று சொல்வது எப்படி தவறானதோ,
அதுபோலத்தான் இதுவும்.

நான் கேட்கிறேன் இவர்கள் தமிழ்க் கடவுள் முருகனை ஸ்கந்தனாக்கி கந்தனிடம் வேண்டுவது போல ஆண்பெண் குறிகளை குறிப்பிட்டு அதனை காக்கவேண்டும்.வட்டக் குதத்தை வடிவேல் காக்க வேண்டும் என்றெல்லாம் மிக இழிவான வார்த்தைகளைச் சொல்லி கடவுளிடம் வேண்டுவதாக பாடல் எழுதி உள்ளார்கள். அதை அவர்கள் மறுக்க முடியுமா? அல்லது அப்போது நாகரிகம் வளராத காலத்தில் இருந்தவர்கள் தவறாக எழுதி விட்டார்கள். நாங்கள் இப்போது இருப்பவர்கள் அந்த ஆபாச வார்த்தையை மறுக்கிறோம் என்றாவது சொல்வார்களா?

பார்ப்பனர்கள் முருகனை கந்தன் ஆக்கினார்கள்.அவர்களில் யாராவது முருகன் என்று பெயர் வைத்திருக்கிறார்களா? ஏன் வைப்பதில்லை? முருகன் தமிழர் கடவுள் என்பதால்தானே? ஆனால் கந்தர் பெயரை மட்டும் வைத்துக் கொள்கிறார்களே! அது அவர்கள் என்பதால்தானே? இப்போதும் புராணங்களில் உள்ள ஆபாசத்தை நீக்காமல் இந்து என்கிற பெயரில் திணித்து வருகிறார்களே ?
பெரும்பான்மை மக்களை சூத்திரர்கள் வேசி மக்கள் என்று இழிவுபடுத்தி வருகிறார்களே? அது சரியா?
நான் கேட்கிறேன் வால்மீகி ராமாயணம் தமிழ் மொழிபெயர்ப்பில் ராமன் பிறப்பு பற்றியும் அஸ்வமேத, புத்திரகாமேஷ்டி யாகம் குறித்தும் உள்ளதை பொதுமக்கள் முன்பு இவர்களால் படித்து காட்ட முடியுமா ?
அதேபோல லிங்க புராணத்தையும் இவர்கள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் படித்துக் காட்டி அதை புனிதம் என்று சொல்ல முடியுமா?
இந்து என்று சொல்லி அனைத்து இழிவுகளையும் இந்துக்கள் தலையில் சுமத்துவதால் புரிந்தவர்களுக்குக் கோபம் வருகிறது. இது நியாயமான கோபமே ஆகும்.

தமிழக அரசும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கான அரசாக உள்ளதா அல்லது பார்ப்பன இந்துத்துவ அரசியலுக்கான அரசாக இது செயல்படுகிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகிறது.”

You may also like...