Category: குடி அரசு 1938

காலஞ்சென்ற தோழர் ஏ.ஆர். சிவானந்தம்  வாழ்க்கை வரலாறு

காலஞ்சென்ற தோழர் ஏ.ஆர். சிவானந்தம் வாழ்க்கை வரலாறு

  உள்ளம் உவந்த உணர்ச்சியது வழியே கள்ளம் இன்றிக் காலங் கடத்தியவருள் தோழர் சிவானந்தம் ஒருவராவார். கரூர் தாலூகாவில் அரவக்குரிச்சியில் தோழர் இராமசாமி முதலியாரது திருமகனாக, 1884ம் ஆண்டிற் பிறந்தார். தோழர் இராமசாமி முதலியார் தொண்டை மண்டல வேளாள மரபினர். மிக்க செல்வந்தர். பிரபல மிராசுதாரருமாவர். தோழர் சிவாநந்தம் பண்டை முறைப்படி தமிழ்க்கல்வி நன்கு பயின்று தமது 20-வது வயதிலேயே குடும்ப பாரத்தையும் தாங்கலாயினார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்: சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமை யான்” என்னும் தமிழ் மறையின் தூய கொள்கையை நிலைபெறச் செய்ய வேண்டுமென்னும் உண்மை நோக்குடன் அவர் தமது 20-வது வயதில் பொது வாழ்க்கையிற் பெரிதும் ஈடுபடலாயினார். இயற்கையிலேயே ஏழைகளிடமும், தாழ்த்தப்பட்டோர்களிடமும் அளவற்ற பரிவும் அன்பும் உடையவர். இளமை தொட்டே தீண்டாமை, ஜாதி ஆணவம் முதலியவற்றை உள்ளூர வெறுத்து வந்தார். இவைகளே, மக்களுள் பிரிவினை உணர்த்தும் வன்பகையென்றும், இந்திய சமுதாயத்தை அரித்து வருங் கொடும் புழுக்களென்றும் உணர்ந்தவர்....

திருவிதாங்கூர் அலங்கோலம்

திருவிதாங்கூர் அலங்கோலம்

  திருவிதாங்கூர் திவான் ஸர்.சி.பி.ராமசாமி நடத்தும் ஹிட்லர் தர்பாரைக் கண்டித்து சென்னை “ஹிந்து” பத்திரிக்கை ஒரு நீண்ட தலையங்கம் எழுதத் துணிந்து முன் வர வேண்டுமானால் திருவிதாங்கூர் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்க வேண்டுமென்று நாம் கூறவும் வேண்டுமா? ஆம்! திருவிதாங்கூர் நிலைமை இனி ஒரு நாளும், எவராலும் பரிகரிக்கவே முடியாதபடி அவ்வளவு பாழாகப் போய் விட்டது. சர்.சி.பி. திவானாயிருக்கும் வரை திருவிதாங்கூர் நிலைமை சீர்படாது என்று சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. சர்.சி.பி.யின் அடக்குமுறைகளைத் தாங்க முடியாமல் இன்று திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழை, கோட்டயம் ஆகிய நான்கு நகரங்களிலும் சர்.சி.பி. சர்க்கார் பிறப்பித்திருக்கும் தடை யுத்தரவுகளை மீற திருவிதாங்கூர் சமஸ்தான காங்கரஸ் நிர்வாகிகள் தீர்மானித்து விட்டனர். இப்பத்திரிக்கை இன்று வெளிவருமுன் இந்த நான்கு நகரங்களிலும் சமஸ்தான காங்கரஸ் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பது நிச்சயம். தர்மராஜ்யம் எனப் புனை பெயர் பெற்ற திருவிதாங்கூரிலே கலவரங்களும், தடை யுத்தரவுகளும், சட்ட மறுப்புகளும்,...

இந்தி எதிர்ப்பும்  பார்ப்பனப் பத்திரிகைகளும்

இந்தி எதிர்ப்பும் பார்ப்பனப் பத்திரிகைகளும்

  இந்தி எதிர்ப்பு விஷயமாய் சென்னை மாகாணத்தில் இருந்து வரும் கிளர்ச்சியைப் பற்றியும், அது விஷயமாய் சர்க்கார் கையாளும் கொடுங்கோன்மை அடக்குமுறையைப் பற்றியும் அந்த அடக்குமுறையை சரியென்று சொல்லி பொது ஜனங்களை சமாதானப்படுத்த அரசாங்கத்தார் சொல்லும் காரணங்களாகிய அதாவது ்இந்தி எதிர்ப்பில் அரசாங்கத்துக்கு பல தொல்லைகள் ஏற்படுகிறது” என்பதைப் பற்றியும் மற்றும் ்இந்தி எதிர்ப்பு காரியங்கள் அரசாங்கத்தார் சகிக்கமுடியவில்லை” என்றும் “அது அரசாங்கமே நடைபெற வொட்டாமல் சங்கடத்தை விளைவிக்கக் கூடியதாய் இருக்கிறது” என்று திணறுவதாகக் காட்டிக் கொள்வதைப் பற்றியும் இந்தி எதிர்ப்புக்காரர்களுக்கு தாராளமான பணம் இருப்பதாகவும், கட்டுப்பாடாக இயக்கம் நடத்தப்படுவதாகவும் அதனால் தொண்டர்கள் ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல் புறப்பட்டு திக்குமுக்காடச் செய்வதால் கடுமையான அடக்குமுறைகளைக் கையாள வேண்டி இருந்தது என்று சொல்லுவதுடன் ஒரு பெரிய மெஜாரிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகள் தங்கள் இஷ்டப்படி காரியம் செய்யாமல் தடுக்கும்படியான பெரிய கிளர்ச்சியாய் போய் விட்டதால் இப்போது இதை அடக்க தங்களுக்கு இருக்கிற...

தமிழ் மக்களே!

தமிழ் மக்களே!

  பார்ப்பனர் ஆட்சி இந்தி என்றும், இந்துஸ்தானி என்றும் சொல்லிக்கொண்டு வடமொழியை (ஆரிய மொழியை) தமிழர்களுக்குள் வலுக்கட்டாயமாக நுழைப்பதின் கருத்து என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் மலையாளத்தைப் பாருங்கள். மலையாளத்தில் வடமொழியும் வடமொழி நூலும் புகுந்து ஆதிக்கம் பெற்ற பின்னரே மலையாளப் பெண்கள் அதிலும் மேல் ஜாதி உயர் குடும்பப் பெண்களை பார்ப்பனர்கள் வைப்பாட்டிகளாக அனுபவிக்க முடிந்தது. இன்றும் சில பெண்கள் பார்ப்பானுக்கு வைப்பாட்டிகளாக இருக்கவே விரும்புகிறார்கள். சில மலையாளிகள் தங்களை மலையாளித் தகப்பன் மகன் என்று சொல்லிக் கொள்வதைவிட மலையாளப் பார்ப்பானின் மகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறார்கள். நாம் எதற்காக இதை எடுத்துக்காட்டுகிறோம் என்றால் இந்தி – வடமொழி இந்நாட்டில் ஆதிக்கம் பெற்றால் தமிழ் மக்களை இந்த நிலைக்குத்தான் கொண்டு வந்து விடும் என்பதை எடுத்துக்காட்டவேயாகும். இப்பொழுது சூத்திரன் என்றால் யார்? சூத்திரச்சி என்றால் யார்? வடமொழி நூலும், பாஷையும் இங்கு ஆதிக்கமில்லாமல் இருந்தால் தமிழ் மக்களில்...

ஆச்சாரியார் கடற்கரைப் பேச்சு

ஆச்சாரியார் கடற்கரைப் பேச்சு

  தற்காலம் நமது நாட்டில் நடைபெறும் புரோகித ஆட்சியானது தனது தகுதியற்ற தன்மையையும், சக்தியற்ற தன்மையையும் வெளிப்படுத்திவிட்டது. சென்ற வாரம் சென்னை கடற்கரையில் பிரதம மந்திரி கனம் ஆச்சாரியார் தலைமையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஆச்சாரியாரும், மற்றொரு அய்யங்கார் பார்ப்பன மந்திரியான கனம் டாக்டர் ராஜனும் முக்கிய பேச்சாளர்களாக விளங்கி இருக்கிறார்கள். அதுபோலவே வெள்ளிக்கிழமை நடந்த சென்னை சட்டசபை நடவடிக்கையிலும் கனம் ஆச்சாரியாரும், ஆந்திரப் பார்ப்பனரான கனம் பிரகாசமும் முக்கிய பேச்சாளராக இருந்திருக்கிறார்கள். இவர்களது இரண்டு இடத்துப் பேச்சுகளிலும் கடற்கரைப் பேச்சைவிட சட்டசபைப் பேச்சு சற்று பிகுவாகவும், முறுக்காகவுமே இருந்திருக்கிறது. அதைப்பற்றி பின்னால் கவனிப்போம். என்றாலும் பார்ப்பன ஜாதிக்கு ஆட்சி தகாது என்பதும், அதற்கு ஆட்சி தெரியாது என்பதும் இந்த இரண்டு இடத்து 4 பேச்சுகளிலும் நன்றாய் விளங்கி விட்டது. கடற்கரைக் கூட்டத்தில் முதலில் பேசிய கனம் டாக்டர் ராஜன் முழுதும் நடுக்கத்துடன் உண்மைக்கு விரோதமாக, பித்தலாட்ட பாஷையில் கூட்டத்தாரை...

வங்காளம் கற்பிக்கும் பாடம்

வங்காளம் கற்பிக்கும் பாடம்

  வங்காளத்திலும் பாஞ்சாலத்திலும் சிந்துவிலும் ஆசாமிலும் முஸ்லிம் மந்திரிசபை ஏற்பட்டது. இந்தியாவிலே ராமராஜ்யம் ஸ்தாபித்து மீண்டும் வர்ணாச்சிரம ஆட்சியை நிலைநிறுத்தப் பாடுபட்டு வரும் காங்கரஸ்காரருக்கு மிக்க மனக் கொதிப்பையும் பொறாமையும் வயிற்றெரிச்சலையும் உண்டு பண்ணியது. சென்ற ஏப்ரில் 1 – ந்தேதி முதற்கொண்டே அந்த நான்கு மந்திரிசபைகளையும் கவிழ்க்க காங்கரஸ்காரர் பகிரங்கமாகவும் அந்தரங்கமாகவும் சூழ்ச்சிகள் செய்து வருகின்றனர். அவர்கள் முயற்சி பாஞ்சாலத்திலும் வங்காளத்திலும் ஆசாமிலும் பலிக்கவில்லை. சிந்துவில் ஓரளவு பலித்தது. முதலில் ஸர். குலாம் ஹúசேன் ஹிதயத்துல்லா ஸ்தாபனம் செய்த மந்திரி சபையைக் கவிழ்த்து காங்கரஸ்காரர் சொற்படி நடக்கும் அல்லாபக்ô மந்திரி சபையை ஏற்படுத்தினார். அந்த மந்திரி சபை முஸ்லிம் நலனுக்கு முரணாகவும் மாகாண க்ஷேமத்திற்கு பாதகமாகவும் நடந்து வருவதினால் அதைக் கவிழ்க்க வேண்டுமென்று முஸ்லிம் லீக் தீர்மானித்து விட்டது. தற்கால சிந்து மந்திரிகள் காங்கரஸ்காரர் உதவியினாலே உயர்வாழ வேண்டியவர்களாக இருக்கின்றனர் காங்கரஸ்காரருக்குச் சொந்த பலம் அதிகமில்லையாயினும் சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி பேசி...

பார்ப்பன ஆட்சி இன்னும்  என்ன செய்ய வேண்டும்?

பார்ப்பன ஆட்சி இன்னும் என்ன செய்ய வேண்டும்?

  “தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து, மனிதனைக் கடிக்க ஆரம்பித்து விட்டது” என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அது போல் பார்ப்பனீயம் அதாவது பார்ப்பன ஆட்சி, அங்கு கை வைத்து இங்கு கை வைத்து அடிமடியில் கையைப் போட்டுவிட்டது என்று சொல்ல வேண்டியதாகிவிட்டது. காங்கரசைப் பற்றியும், காந்தியைப் பற்றியும் நாம் எதிர்த்தும் மக்களை ஜாக்ரதையாய் இருக்க வேண்டுமென்று எச்சரித்து வந்ததுமானது, அரசியல் ஆதிக்கம் நமக்கு கூடாதென்றோ வெள்ளையர், அன்னியர் இந்நாட்டை விட்டு போகக் கூடாதென்றோ அல்ல என்பதை அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கின்றோம். ~subhead காந்தியையும் காங்கரஸையும் எதிர்ப்பதேன்? ~shend ஆனால் மற்றென்ன காரணம் என்றால் இந்நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து வயிறு பிழைக்க வந்து இந்நாட்டு ஆதி மக்களை பல வழிகளிலும் ஏய்த்தும், கொடுமைப்படுத்தியும் வெற்றி கொண்டு, அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி ஆட்சி புரிந்த 3 – வகையாரில் அதாவது ஆரியர், முஸ்லீம்கள், ஐரோப்பியர் ஆகியவர்களில் ஆரியர்களே மிக மிக கொடுமை செய்து மக்களை...

சுயமரியாதை இயக்கப் போதனை  “சாந்தி வாழ்வே எனது ஆசை”

சுயமரியாதை இயக்கப் போதனை “சாந்தி வாழ்வே எனது ஆசை”

  தோழர்களே! சுயமரியாதை இயக்கம் என்ன போதிக்கிறது என்பதை மக்கள் முதலில் தெரிந்து கொண்டால்தான் சுயமரியாதை இயக்கத்தில் சேருவதும் அதைப்பற்றி பேசுவதும் ஒருவனுக்கு பொருத்தமாகும். சுயமரியாதை இயக்கம் ஒவ்வொரு மனிதனையும் முதலில் தன்னை மதிக்கச் சொல்லுகிறது. தன்னை மதிப்பது என்றால் தனது பஞ்சேந்திரியங்களையும் அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இவைகளால் ஏற்பட்ட பிரத்தியக்ஷ அனுபவங்களைக் கொண்டு ஆராய்ந்தறிந்த உண்மையை மதிக்கச் சொல்லுகிறது. இன்று மனித சமூகத்தில் பெரும்பாலான மக்கள் அனேக காரியங்களில் இந்த தன்மையை மதிப்பதில்லை, அனேக காரியங்களுக்கு இந்த அனுபவங்களைப் பொருத்துவதில்லை. மனிதன் உலகிலுள்ள மற்ற ஜீவராசிகளை விட மேலானவன் என்பதற்கு எடுத்துச் சொல்லும் ஆதாரம் மற்ற ஜீவர்களுக்கு உள்ளதைவிட மேலான ஐம்புலன் உணர்ச்சி இருப்பதுதான் என்று சொல்லப்படுகிறது. இதைத்தான் சுயமரியாதை இயக்கமும் ஆதரித்து அவைகளை மரியாதை செய், அவற்றிற்கு மதிப்புக் கொடு, அவற்றின் முடிவுப்படி நட என்று சொல்லுகிறது. ~subhead நம்மவர்கள் போக்கு ~shend...

திருச்சியில் இந்தி எதிர்ப்பு படை  வழியனுப்பு உபசாரம்  7000 பேர் கூட்டம்

திருச்சியில் இந்தி எதிர்ப்பு படை வழியனுப்பு உபசாரம் 7000 பேர் கூட்டம்

  தோழர்களே! இன்றைய கூட்டம் இந்தி எதிர்ப்புப் பிரசாரத்துக்கு ஆக செல்லும் படையை வழியனுப்புவதற்காக என்றே கூட்டப்பட்டது என்பது அழைப்பு விளம்பரத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட கூட்டத்தில் வந்து சிலர் குழப்பம் விளைவிக்க நினைத்தது சுத்த முட்டாள்தனமாகும். இந்த கூட்டத்தில் இரண்டொருவர் ்காந்திக்கு ஜே” போடுவதும் ்இந்தி வாழ்க” என்று கத்துவதும் மண்ணை வாரி இறைத்து வேஷ்டியை வீசி மக்களை எழுந்து போகும்படி காலித்தனம் செய்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். கூட்டத்தை கலிபுல்லா சாயபு மிக்க வலுவுடன் அடக்கி இராவிட்டால் இன்று பலர் உதைபட்டு துன்பப்பட்டு இருப்பார்கள். போலீசும் இல்லாத இந்த சமயத்தில் காலிகளுக்கு இக்கூட்டத்தார் புத்தி கற்பிக்க ஆரம்பித்து இருந்தால் என்ன நிலை ஏற்பட்டு இருக்கும்? கூட்டத்தில் இந்தியை ஆதரிக்கிறவர்கள் எவ்வளவு பேர் என்று தோழர் கலீபுல்லா சாயபு கேட்டபோது கை தூக்கிய எண்ணிக்கையிலிருந்தே இத் தொல்லைக்காரர்களின் யோக்கியதை நன்றாய் விளங்கி இருக்கும். அவர்களும் பெரிதும் பார்ப்பனர்களாகத்தான் இருந்திருப்பதாய் தெரிகிறது. இம்மாதிரி காலித்தனத்தால்...

இந்தி எதிர்ப்பும் அரசாங்கமும் எதிரிகளும்

இந்தி எதிர்ப்பும் அரசாங்கமும் எதிரிகளும்

  இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காக இதுவரை 197-பேர்கள் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். நூற்று இருபது பேர்கள் வரை தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு 4 – மாதம், 5-மாதம், 6-மாதம் கடின காவலும், ஒரு மடாதிபதி சந்யாசிக்கு 2-வருஷ கடின காவலும், மற்றொரு பி.ஏ. படித்த யாழ்ப்பானத்து சன்யாசியாருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனையும் அளித்திருப்பதோடு இவர்கள் எல்லோருக்கும் ஜெயிலில் இ (சி) கிளாஸ் உணவும் தகுதியும்தான் கொடுக்கப்பட வேண்டுமென்றும் தீர்ப்பளித்து அந்தப்படியே அவர்கள் அத்தனை பேரையும் மொட்டை அடித்து கிரிமினல் கைதிகள் உடுப்புக் கொடுத்து மிகக் கொடூர வாழ்வு வாழும்படி நடத்தப்பட்டு வருகிறார்கள். சிறை சென்ற தொண்டர்களில் பலர் பெருத்த செல்வவான்களின் பிள்ளைகள் சிலர் மாதம் 100, 200 – ரூபாய் சம்பாதிக்கக் கூடியவர்கள். சில தொண்டர்களின் பெற்றோர்கள் சென்னை வந்து தொண்டர்களுக்குப் பல வித உபசாரங்கள் சொல்லி காங்கரஸ்காரர்கள் தயவு பிடித்து அழைத்துப் போக முயற்சித்தும் தொண்டர்கள் மறுத்து விட்டார்கள். இரண்டொரு லட்சாதிபதிகள்...

காவேரிப்பட்டணத்தில் தோழர் ஈ.வெ.ரா.  ஆடம்பரமான ஊர்வலம்  பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்

காவேரிப்பட்டணத்தில் தோழர் ஈ.வெ.ரா. ஆடம்பரமான ஊர்வலம் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்

  தான் இந்தி எதிர்ப்பு சம்பந்தமாய் வந்திருப்பதாகவும் இந்தி எதிர்ப்புக்கு அவர்கள் உதவியை எதிர்பார்ப்பதாகக் கூறி – சென்ற ஒரு வருட ஆட்சி பார்ப்பன வருணாச்சிரம ஆட்சியாக இருந்து வருகிறது என்பதைப் பல ஆதாரங்களைக் காட்டிப் பேசினார். உத்தியோகங்கள் எல்லாம் பார்ப்பன மயமாக்கப்பட்டிருக்கிறது என்றும் பார்ப்பனரல்லாதார் ஆங்கில உயர்தரக் கல்வி பெற்று உத்தியோகங்கள் அடைவதைத் தடுக்க வார்தாத் திட்டம் என்றும் இந்திப் பாடம் என்றும், உபாத்தியார், பள்ளிக்கூடம், சிலேட்டுப் பலகை எதுவுமின்றி அட்டைகள் மூலம் கல்வி போதிப்பது என்றும் கூறி நமது தமிழ் மக்கள் மேல்படிப்புப் பெறுவதைத் தடுப்பதன் மூலம் நமது மக்களைத் தற்குறிகளாக்கித் தாங்களே எல்லாப் பதவிகளையும் வகித்து என்றென்றும் தலைதூக்க முடியாமல் செய்யும் சூழ்ச்சியிலிறங்கி இருக்கிறார்கள் என்று விளக்கினார். காங்கரஸ்காரர்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாய் எடுத்துக் காட்டி எந்த ஒரு விஷயத்திலும் நாணயமாய் நடந்து கொள்ளவில்லை என்பதை ருசுக்களோடு எடுத்துக் காட்டினார். ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காலத்தில் இரட்டை ஆட்சியின்...

கிருஷ்ணகிரியில் ஈ.வெ.ரா.

கிருஷ்ணகிரியில் ஈ.வெ.ரா.

  இந்த காங்கரஸ் மந்திரி சபை பொய்யும் பித்தலாட்டமும் செய்து வோட்டுகளைப் பெற்று பதவிக்கு வந்தது என்பதை எடுத்து விளக்குகையில் போலீஸ் சர்க்கிளின்ஸ்பெக்டர் அருகாமையிலிருந்து கொண்டு ஒரு காங்கரஸ்காரன் பொய் என்று கூச்சலிட்டான். இரண்டொரு காங்கரஸ் காலிகள் ஆங்கங்கே நின்று கொண்டு கூச்சலிட்டுக் கூட்டத்தைக் கலைக்க முயன்றும் பலிக்காமையால் மறைந்து விட்டார்கள். பிறகு தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் எப்படி காங்கரஸ்காரர்கள் மானமிழந்து சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதாக சத்தியம் செய்து கொடுத்து சரணாகதியடைந்து மந்திரி பதவி பெற்றார்கள் என்றும், பிறகு வெள்ளைக்கார உத்தியோகஸ்தர்களையும் கவர்னரவர்களையும் துதிபாடித் திரிகிறார்கள் என்றும், வகுப்பு வாதமில்லாதவர்கள் மந்திரி பதவிகளிலும் உத்தியோகங் களிலும் தங்கள் பார்ப்பன வகுப்புக்கே சலுகை காட்டி வருகிறார்கள் என்றும், எப்படி வரியைக் குறைப்பதற்காகப் போனவர்கள் வரியை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள் என்றும் எப்படி கட்டாய இலவச கல்வி கொடுப்பதாகச் சொன்னவர்கள் கட்டாய இந்தியின் பேராலும், பள்ளிக்கூடங்களை மூடுவதன் மூலமும், வார்தா திட்டத்தின் மூலமும் அட்டை கடுதாசி...

சிறையில் இந்தி எதிர்ப்பாளர் துயரம்

சிறையில் இந்தி எதிர்ப்பாளர் துயரம்

  சட்டமறுப்புக் காலத்திலே கிரிமினல் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றியபோது இந்திய தேசீய வாதிகள் எல்லாம் ஒரு முகமாக எதிர்த்தனர். அச்சட்டங்களை நிறைவேற்றிய பிரிட்டிஷ் சர்க்கார் மீது ஓயாது வசை புராணம் பாடினர். தேர்தல் காலத்திலே அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை ஒரு முக்கிய பிரச்சினையாக மதித்துக் காங்கிரஸ்காரர் பதவியேற்றால் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதாகவும் வாக்குறுதியளித்து பாமர மக்களின் வோட்டுகளைப் பறித்தனர். காங்கரஸ்காரர் செய்த விஷமப் பிரசாரத்தின் பயனாகவும் காங்கரஸ்காரர் பதவிக்கு வந்தால் மண்ணுலகமே பொன்னுலகமாகிவிடுமென பாமர மக்கள் முட்டாள்தனமாக நம்பியதின் பயனாகவும் இப்பொழுது 7 – மாகாணங்களிலே காங்கரஸ் மந்திரிசபைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் எல்லைப்புற மாகாணத்தைத் தவிர வேறு எந்த காங்கரஸ் மாகாணத்திலும் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க முயற்சி செய்யப்படவே இல்லை. மாறாக காங்கரஸ்காரரால் வெறுக்கப்பட்ட ஸி.ஐ.டிகளும், 144 தடையுத்தரவுகளும் இன்றியமையாத தேவையென்றும் அவைகளின் உதவியின்றி எந்தச் சர்க்காரும் இயங்க முடியாதென்றும் காங்கரஸ் மந்திரிகளே பகிரங்கமாகக் கூற முன்வந்துவிட்டார்கள். காங்கரஸ் மந்திரிகள் கட்டளைப்படி...

சத்தியமூர்த்தி வாய்க்கொழுப்புக்கு ஆப்பு

சத்தியமூர்த்தி வாய்க்கொழுப்புக்கு ஆப்பு

  ஆச்சாரியார் மந்திரிசபையின் ஆச்சரியமான போக்கைப்பற்றியும், கட்டாய இந்தியின் தீங்கைப்பற்றியும், இந்தியால் தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலைக்கும், தமிழ் மக்கட்கும் நேரும் இன்னல்களைப் பற்றியும், அடக்கு முறையைப் பற்றியும், பிரஜா உரிமை, பேச்சுரிமை ஆகியவைகளைப்பற்றியும், கிரிமினல் அமென்மெண்ட் ஆக்டின் தன்மையைப்பற்றியும், காங்கரஸ் கட்சிக்கும் பார்ப்பனீயத்திற்கும் உள்ள ஒற்றுமையைப் பற்றியும், தேசீயப்போர்வையில் வகுப்புவாத ஆட்சி நடத்துவதுபற்றியும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், மதராஸ் ஆகிய விடங்களில் பள்ளிக்கூடங்களை மூடிவரும் கொடுஞ் செயல்களைப்பற்றியும், புதிய கடன் 3லீ கோடிக்கும், அதிக வரி 13க்கும் பள்ளிக்கூடங்களை மூடி வேறு வேலையிருக்க முடியுமா? என்பதுபற்றியும் மக்கள் கண்ணை மூடி காங்கரசை ஆதரித்ததினாலேயே கட்டாய இந்தி வந்து புகுந்தது என்றும் பொது ஜனங்கள் எதையும் நன்கு ஆலோசித்து உணர்ந்து செய்ய வேண்டும் என்றும் சுமார் 1லீ மணி நேரம் இடி முழக்க முழக்கினார். குறிப்பு: 08.07.1938 ஆம் நாள் தூத்துக்குடி மேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்....

ஒரு வருஷ ஆட்சி படலம்

ஒரு வருஷ ஆட்சி படலம்

  காங்கரஸ் மந்திரிகள் பதவி ஏற்று ஒரு வருஷமாகி விட்டது. அதாவது அவர்கள் தேர்தலுக்கு நிற்கும் போது மந்திரி பதவி ஏற்பதில்லை என்றும் அரசியல் சட்டத்தை உடைத்தெறிவதற்கும் ஏகாதிபத்தியத்தைத் தொலைப்பதற்காகவுமே சட்டசபைக்குப் போகிறோம் என்றும் சொல்லி பாமர மக்களை ஏய்த்து ஓட்டுப் பெற்று சட்டசபை அங்கத்தினர்களான பிறகு அரசியல் சட்டத்தை உடைப்பதானால் மந்திரி பதவி ஏற்றுத்தான் ஆகவேண்டுமென்றும் சொல்லி பதவி ஏற்க முன்வந்து காங்கரஸ் கமிட்டி பேரால் அனுமதி உண்டாக்கிக் கொள்ளத் துணிந்து கொண்டு பதவி ஏற்ற பிறகு அரசாங்கத்தார் தங்களை பதவியில் வைக்காவிட்டால் என்ன செய்வது என்று பயந்து அதற்காக ்நாங்கள் பதவி ஏற்றாலும் புதிய அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கிறோம்” என்கின்ற வாக்குறுதியை சர்க்காருக்கு கொடுக்கவும் காங்கரஸ் கமிட்டி மூலமே தீர்மானித்துக் கொண்டு அந்த வாக்குறுதி கொடுப்பதையும் பாமர மக்கள் ஏமாறும்படி அதாவது சர்க்காரை வாக்குறுதி கேட்பது போல் பாவனை செய்து அந்த வாக்குறுதி கேட்பதற்கு ஆக வாக்குறுதி...

ஆச்சாரியார் ஆட்சி நீடிக்க வேண்டும்  அடக்குமுறைகளும் வலுக்க வேண்டும்  அப்பொழுதுதான் மக்கள் உண்மையை உணர்வார்கள்

ஆச்சாரியார் ஆட்சி நீடிக்க வேண்டும் அடக்குமுறைகளும் வலுக்க வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் உண்மையை உணர்வார்கள்

  தலைவரவர்களே! தோழர்களே! இன்று இந்த சென்னை கடற்கரையில் இவ்வளவு பிரம்மாண்டமான கூட்டத்தில் நான் பேச நேர்ந்ததைப்பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கூட்டமானது எனது நண்பர் கனம் ஆச்சாரியார் அவர்கள் தமிழ் மக்கள் மீது பலாத்காரமாய் சுமத்தும் பார்ப்பன பாஷையாகிய ஹிந்தியைத் தடுப்பதற்காக கூட்டப்பட்ட ஹிந்தி எதிர்ப்புக் கூட்டமாகும் என்பது நீங்கள் அறிந்ததேயாகும். இது தோழர் ஆச்சாரியார் சென்ற வாரத்தில் இதே கடற்கரையில் ஹிந்தி ஆதரித்து பேசுவதற்காக என்று கூட்டப்பட்ட கூட்டத்தில் அதன் தலைவர் தோழர் முத்துரங்க முதலியார் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த மக்களை எழுந்து போகும்படி சொன்னது போல் அதாவது “இக்கூட்டம் ஹிந்தியை ஆதரிக்கின்றவர்களுக்கு மட்டுமேயன்றி ஆதரிக்காதவர்களுக்கு இங்கு வேலையில்லை” என்று சொல்லி போலீஸ் குதிரைப் படையை விட்டு கூட்டத்தைக் கலைத்தும் போலீஸ் தடியைக்கொண்டு கூட்டத்தை விரட்டியும் அடித்தது போல் இக்கூட்டம் ஒரு சாராருக்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. இக்கூட்டம் ஹிந்தியை எதிர்ப்பதற்கு உண்டான காரணங்களைச் சொல்லவே கூட்டப்பட்டதானாலும் அன்றைய தினம்...

தமிழர் இருப்பதா! இறப்பதா!

தமிழர் இருப்பதா! இறப்பதா!

  அமெரிக்கா செல்வப் பெருக்குடைய நாடு, சுதந்தர நாடு, ஜனநாயகத்துக்குப் பேர் போன நாடு. ஆனால் அமெரிக்க ஜனநாயகம் ஒரு புதுரகம். அமெரிக்க ஜனநாயகத்துக்கு அடிப்படையாக இருப்பது முதலாளி நாயகமே. இது கேட்போருக்குப் புதுமையாகத் தோன்றலாம். ஆனால் உண்மை நிலை அதுவே. ஜனநாயகத்தின் அங்கங்களான காங்கரஸ், தேர்தல் தொகுதி, வாக்காளர், பொதுத் தேர்தல் முதலிய விநோதங்கள் எல்லாம் அமெரிக்காவில் உண்டு. ஆனால் காங்கரசுக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் தோரணைதரன் விசித்திரமானது. அமெரிக்காவிலே ஆயில் கிங், மோட்டார் கிங், காட்டன் கிங் என பல கோடீசுரர்கள் உண்டு. தேர்தல் காலங்களில் இக்கோடீசுரர்கள் தம் ஆட்களைத் தேர்தலுக்கு நிறுத்தி தமது சொந்தப் பணத்தைச் செலவு செய்து வெற்றி பெறும்படி செய்துவிடுவார்கள். ஈட்டி எட்டின மட்டும்தான் பாயும்; பணமோ பாதாளம் வரை பாயக் கூடியது. ஆகவே இந்த கோடீசுரர்களின் கையாட்கள் தான் பொதுவாகத் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க காங்கரசுக்கு மெம்பர்களாகச் செல்வது. கோடீசுரர் உதவியினால் காங்கரஸ்...

வெளிநாட்டுத் தோழர்களுக்கு வேண்டுகோள்  அன்புள்ள தோழர்களே!

வெளிநாட்டுத் தோழர்களுக்கு வேண்டுகோள் அன்புள்ள தோழர்களே!

இன்று நமது தமிழ் மொழியையும், தமிழர் நாகரீகத்தையும் கொலை செய்து தமிழர்களை, ஆரியர்களுக்கும் ஆரிய நாகரீகத்திற்கும் அடிமைப்படுத்தி பழைய மனுதர்ம முறைக்குக் கொண்டுவர இந்தி மொழியை கட்டாயமாகப் புகுத்த சென்னை மாகாண முதல் மந்திரி கனம் ஆச்சாரியார் முயற்சித்து விட்டார். இதைக் கண்டித்து சென்னை மாகாணம் முழுதும் பெருத்த கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. இது சம்மந்தமாக சுமார் 114 பேர்கள் வரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சுமார் 41 பேர்கள் வரை தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். இன்னும் பலரை கைது செய்யலாம். ஆகையால் வெளிநாட்டிலுள்ள தமிழ்நாட்டுத் தோழர்களே இந்தப் போரைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி தொடர்ந்து செய்ய வேண்டுமானால் அதிகமான பணம் வேண்டும். ஆகையால் நீங்கள் உங்களாலான பண உதவி செய்யும்படி கேட்டுக் கொள்ளுகிறோம். குடி அரசு – வேண்டுகோள் – 03.07.1938

நமது விண்ணப்பம்

நமது விண்ணப்பம்

  இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வேண்டி ்நமது” சுயராஜ்ஜிய சர்க்கார் இதுவரை 120 பேர்களை அரஸ்ட் (கைது) செய்து சுமார் 40 பேர்கள் வரை கிரிமினல் அமெண்ட்மெண்ட் ஆக்ட் 7-1-எ படி 4-மாதம், 6-மாதம் கடின காவல் சிட்சை கொடுத்துத் தண்டித்து கேப்பைக்கூழும், களியும் போட்டு மொட்டை அடித்து ஜெயில் உடை கொடுத்து குல்லாய் போட்டு வேலை வாங்கி வருகிறார்கள். மற்றும் தோழர்கள் சி.டி.நாயகம் (மாஜி டிப்டி ரிஜிஸ்ட்ரார்), ஈழத்து சிவானந்த அடிகள் பி.எ. (ஒரு சந்யாசி), கே. எம். பாலசுப்பிரமணியம் பி.எ.பி.எல்., ஷண்முகநந்த சுவாமி (ஒரு சந்யாசி), சி.என். அண்ணாதுரை எம்.ஏ. (ரிவோல்ட் பத்திராதிபர்), சுவாமி அருணகிரி நாதர் (ஒரு மடாதிபதி) முதலாகிய முக்கியஸ்தர்களை 3-வருஷம் வரை தண்டிக்கும்படியான இண்டியன் பினல் கோட் சட்டம் 117 பிரிவுப்படி கைது செய்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிலர் ஜாமீனில் இருக்கிறார்கள் என்றாலும் இனியும் இந்த இரண்டு சட்டப்படியும் தினமும் 3 பேர்,...

ஒரு வருஷ ஆட்சி படலம்

ஒரு வருஷ ஆட்சி படலம்

  காங்கரஸ் மந்திரிகள் பதவி ஏற்று ஒரு வருஷமாகி விட்டது. அதாவது அவர்கள் தேர்தலுக்கு நிற்கும் போது மந்திரி பதவி ஏற்பதில்லை என்றும் அரசியல் சட்டத்தை உடைத்தெறிவதற்கும் ஏகாதிபத்தியத்தைத் தொலைப்பதற்காகவுமே சட்டசபைக்குப் போகிறோம் என்றும் சொல்லி பாமர மக்களை ஏய்த்து ஓட்டுப் பெற்று சட்டசபை அங்கத்தினர்களான பிறகு அரசியல் சட்டத்தை உடைப்பதானால் மந்திரி பதவி ஏற்றுத்தான் ஆகவேண்டுமென்றும் சொல்லி பதவி ஏற்க முன்வந்து காங்கரஸ் கமிட்டி பேரால் அனுமதி உண்டாக்கிக் கொள்ளத் துணிந்து கொண்டு பதவி ஏற்ற பிறகு அரசாங்கத்தார் தங்களை பதவியில் வைக்காவிட்டால் என்ன செய்வது என்று பயந்து அதற்காக ்நாங்கள் பதவி ஏற்றாலும் புதிய அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கிறோம்” என்கின்ற வாக்குறுதியை சர்க்காருக்கு கொடுக்கவும் காங்கரஸ் கமிட்டி மூலமே தீர்மானித்துக் கொண்டு அந்த வாக்குறுதி கொடுப்பதையும் பாமர மக்கள் ஏமாறும்படி அதாவது சர்க்காரை வாக்குறுதி கேட்பது போல் பாவனை செய்து அந்த வாக்குறுதி கேட்பதற்கு ஆக வாக்குறுதி...

ஆச்சாரியார் ஆட்சி நீடிக்க வேண்டும்  அடக்குமுறைகளும் வலுக்க வேண்டும்  அப்பொழுதுதான் மக்கள் உண்மையை உணர்வார்கள்

ஆச்சாரியார் ஆட்சி நீடிக்க வேண்டும் அடக்குமுறைகளும் வலுக்க வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் உண்மையை உணர்வார்கள்

  தலைவரவர்களே! தோழர்களே! இன்று இந்த சென்னை கடற்கரையில் இவ்வளவு பிரம்மாண்டமான கூட்டத்தில் நான் பேச நேர்ந்ததைப்பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கூட்டமானது எனது நண்பர் கனம் ஆச்சாரியார் அவர்கள் தமிழ் மக்கள் மீது பலாத்காரமாய் சுமத்தும் பார்ப்பன பாஷையாகிய ஹிந்தியைத் தடுப்பதற்காக கூட்டப்பட்ட ஹிந்தி எதிர்ப்புக் கூட்டமாகும் என்பது நீங்கள் அறிந்ததேயாகும். இது தோழர் ஆச்சாரியார் சென்ற வாரத்தில் இதே கடற்கரையில் ஹிந்தி ஆதரித்து பேசுவதற்காக என்று கூட்டப்பட்ட கூட்டத்தில் அதன் தலைவர் தோழர் முத்துரங்க முதலியார் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த மக்களை எழுந்து போகும்படி சொன்னது போல் அதாவது “இக்கூட்டம் ஹிந்தியை ஆதரிக்கின்றவர்களுக்கு மட்டுமேயன்றி ஆதரிக்காதவர்களுக்கு இங்கு வேலையில்லை” என்று சொல்லி போலீஸ் குதிரைப் படையை விட்டு கூட்டத்தைக் கலைத்தும் போலீஸ் தடியைக்கொண்டு கூட்டத்தை விரட்டியும் அடித்தது போல் இக்கூட்டம் ஒரு சாராருக்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. இக்கூட்டம் ஹிந்தியை எதிர்ப்பதற்கு உண்டான காரணங்களைச் சொல்லவே கூட்டப்பட்டதானாலும் அன்றைய தினம்...

தமிழர் இருப்பதா! இறப்பதா!

தமிழர் இருப்பதா! இறப்பதா!

  அமெரிக்கா செல்வப் பெருக்குடைய நாடு, சுதந்தர நாடு, ஜனநாயகத்துக்குப் பேர் போன நாடு. ஆனால் அமெரிக்க ஜனநாயகம் ஒரு புதுரகம். அமெரிக்க ஜனநாயகத்துக்கு அடிப்படையாக இருப்பது முதலாளி நாயகமே. இது கேட்போருக்குப் புதுமையாகத் தோன்றலாம். ஆனால் உண்மை நிலை அதுவே. ஜனநாயகத்தின் அங்கங்களான காங்கரஸ், தேர்தல் தொகுதி, வாக்காளர், பொதுத் தேர்தல் முதலிய விநோதங்கள் எல்லாம் அமெரிக்காவில் உண்டு. ஆனால் காங்கரசுக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் தோரணைதரன் விசித்திரமானது. அமெரிக்காவிலே ஆயில் கிங், மோட்டார் கிங், காட்டன் கிங் என பல கோடீசுரர்கள் உண்டு. தேர்தல் காலங்களில் இக்கோடீசுரர்கள் தம் ஆட்களைத் தேர்தலுக்கு நிறுத்தி தமது சொந்தப் பணத்தைச் செலவு செய்து வெற்றி பெறும்படி செய்துவிடுவார்கள். ஈட்டி எட்டின மட்டும்தான் பாயும்; பணமோ பாதாளம் வரை பாயக் கூடியது. ஆகவே இந்த கோடீசுரர்களின் கையாட்கள் தான் பொதுவாகத் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க காங்கரசுக்கு மெம்பர்களாகச் செல்வது. கோடீசுரர் உதவியினால் காங்கரஸ்...

வெளிநாட்டுத் தோழர்களுக்கு வேண்டுகோள்  அன்புள்ள தோழர்களே!

வெளிநாட்டுத் தோழர்களுக்கு வேண்டுகோள் அன்புள்ள தோழர்களே!

  இன்று நமது தமிழ் மொழியையும், தமிழர் நாகரீகத்தையும் கொலை செய்து தமிழர்களை, ஆரியர்களுக்கும் ஆரிய நாகரீகத்திற்கும் அடிமைப்படுத்தி பழைய மனுதர்ம முறைக்குக் கொண்டுவர இந்தி மொழியை கட்டாயமாகப் புகுத்த சென்னை மாகாண முதல் மந்திரி கனம் ஆச்சாரியார் முயற்சித்து விட்டார். இதைக் கண்டித்து சென்னை மாகாணம் முழுதும் பெருத்த கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. இது சம்மந்தமாக சுமார் 114 பேர்கள் வரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சுமார் 41 பேர்கள் வரை தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். இன்னும் பலரை கைது செய்யலாம். ஆகையால் வெளிநாட்டிலுள்ள தமிழ்நாட்டுத் தோழர்களே இந்தப் போரைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி தொடர்ந்து செய்ய வேண்டுமானால் அதிகமான பணம் வேண்டும். ஆகையால் நீங்கள் உங்களாலான பண உதவி செய்யும்படி கேட்டுக் கொள்ளுகிறோம். குடி அரசு – வேண்டுகோள் – 03.07.1938

நமது விண்ணப்பம்

நமது விண்ணப்பம்

  இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வேண்டி ்நமது” சுயராஜ்ஜிய சர்க்கார் இதுவரை 120 பேர்களை அரஸ்ட் (கைது) செய்து சுமார் 40 பேர்கள் வரை கிரிமினல் அமெண்ட்மெண்ட் ஆக்ட் 7-1-எ படி 4-மாதம், 6-மாதம் கடின காவல் சிட்சை கொடுத்துத் தண்டித்து கேப்பைக்கூழும், களியும் போட்டு மொட்டை அடித்து ஜெயில் உடை கொடுத்து குல்லாய் போட்டு வேலை வாங்கி வருகிறார்கள். மற்றும் தோழர்கள் சி.டி.நாயகம் (மாஜி டிப்டி ரிஜிஸ்ட்ரார்), ஈழத்து சிவானந்த அடிகள் பி.எ. (ஒரு சந்யாசி), கே. எம். பாலசுப்பிரமணியம் பி.எ.பி.எல்., ஷண்முகநந்த சுவாமி (ஒரு சந்யாசி), சி.என். அண்ணாதுரை எம்.ஏ. (ரிவோல்ட் பத்திராதிபர்), சுவாமி அருணகிரி நாதர் (ஒரு மடாதிபதி) முதலாகிய முக்கியஸ்தர்களை 3-வருஷம் வரை தண்டிக்கும்படியான இண்டியன் பினல் கோட் சட்டம் 117 பிரிவுப்படி கைது செய்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிலர் ஜாமீனில் இருக்கிறார்கள் என்றாலும் இனியும் இந்த இரண்டு சட்டப்படியும் தினமும் 3 பேர்,...

தமிழ்த்தாயின் மக்களுக்கு ஒர் வேண்டுகோள்

தமிழ்த்தாயின் மக்களுக்கு ஒர் வேண்டுகோள்

  தமிழ்த்தாயின் புதல்விகளே! புதல்வர்களே!! அக்ரகார முதல் மந்திரி கனம் ஆச்சாரியார் “தீட்டின மரத்திலே கூர்மை பார்ப்பது போல்” தமிழ் மக்களிடத்திலே தமது கூர்மையைக் காண்பிக்கிறார். தமிழ் மக்களால் ஓட்டுப்பெற்று முதல் மந்திரி பதவிக்கு வந்த கனம் ஆச்சாரியார், தமிழ் மக்களுக்கே துரோகம் செய்யத் துணிந்துவிட்டார். தேர்தல் காலத்தில் வாக்குக்கொடுத்ததும், தமிழ் மக்களால் மிக்க வேண்டப்படுவதுமான ஆலயப்பிரவேச மசோதாவை மூலையில் தள்ளிவிட்டு தமிழர்களால் வெறுக்கப்படுவதும் வேண்டப்படாததுமான அந்நிய பாஷையாகிய ஹிந்தியை தமிழ் மக்களிடத்தில் புகுத்தத் துணிந்திருப்பது கனம் ஆச்சாரியாரின் எதேச்சதிகாரமா? முதல் மந்திரி பதவி உத்தியோக மமதையா? பார்ப்பனத் தந்திரமா? அல்லது பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேடுவதின் நோக்கமா? என்று கேட்கிறேன். இந்த அற்ப அதிகாரத்திலேயே இவ்விதமான எதேச்சதிகாரம் தாண்டவமாடினால், பூரண சுயராஜ்யம் கிடைத்துவிட்டால் என்னவாகுமோ? அம்மம்ம!! மயிர் கூச்சுறுகின்றதே!!! தமிழ்நாட்டு வீரர்களே திரண்டெழுந்து ஆச்சாரியாரின் ஹிந்தி பாஷையை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்யுங்கள். தமிழ்நாட்டு தாய்மார்களே, தகப்பன் மார்களே! உங்களது...

ஹிந்தியும் முஸ்லிம்களும்

ஹிந்தியும் முஸ்லிம்களும்

  ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சியில் முஸ்லிம்கள் சம்மந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று காங்கரஸ் பத்திரிகைகள் முஸ்லிம்களுக்கு உபதேசம் செய்யப் புறப்பட்டு விட்டன. இந்த பத்திரிகைகளுக்கு திடீரென்று இந்த ஞானம் உதயமானது நமக்கு ஆச்சரியத்தை விளைவிக்கவில்லை. ஏனெனில் காங்கரஸ் பார்ப்பன ஆதிக்கமுள்ள ஸ்தாபனம் என்பதும் இந்நாட்டில் பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் அல்லாத மக்கள் மீது இவ்வளவு ஆதிக்கம் அதாவது பார்ப்பனர்கள் 100 -க்கு 3 பேர்களாயிருந்தும் பாக்கி உள்ள மக்களை விட தாங்கள் பெரிய ஜாதி என்றும், மற்ற ஜாதி மக்கள் மோக்ஷத்திற்கு போவதற்குத் தாங்களே தான் வழிகாட்டிகள் என்றும், தங்கள் மூலமே தான் எவரும் மோஷத்திற்குப் போகமுடியும் என்றும் மற்றும் எவன் எப்படிப்பட்ட பாதகமான பாவகாரியங்களைச் செய்தாலும் தங்கள் மூலமாக மன்னிப்புக் கேட்டு கொண்டால்தான் மன்னிக்கப்படும் என்றும் சொல்லிக் கொண்டு – உலக மக்கள் பாவத்தை அகலச் செய்ய கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொண்டு சரீரத்தால் பாடுபடாமல் வயிறு...

ஆச்சாரியார் அடக்குமுறைக்கு ஜே!

ஆச்சாரியார் அடக்குமுறைக்கு ஜே!

  இன்று இந்தியாவில் 7 மாகாணங்களில் நடப்பது காங்கரஸ் ஆட்சி. காங்கரசே சர்க்காராகவும் சட்டமாகவும் இருந்து, பெரும்பாலான ஓட்டுகளைக் கொண்டு வெற்றிபெற்ற பாத்தியதையால் நடத்தும் ஜனநாயக ஆட்சி, மற்றும் சுயராஜ்யத்தில் ஒரு சிறு பங்கு கிடைத்திருப்பதாகக் கருதி அரசியல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தங்களுக்கு இருக்கும் அதிகாரம் பூராவையும் செலுத்த பிரிட்டிஷாரிடம் அனுமதியும் “வாக்குறுதி”யும் பெற்று 100 – க்கு 85 வீதம் உள்ள மெஜாரிட்டி பலத்தில் நடத்தும் ஏகபோக ஆட்சியுமாகும். இப்படிப்பட்ட ஆட்சியில் காங்கரஸ்காரர்கள் செய்வது என்ன? கொடுத்த கடன் செல்லாது, வாங்கின கடன் கொடுக்க வேண்டியதில்லை. மனப்பூர்வமாக சம்மதித்து எழுதிக் கொடுத்தபடி நடக்க வேண்டியதில்லை. நடக்கும்படி கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. என்று சட்டம் செய்தாய்விட்டது. சமதர்மவாதிகள் பொது உடமை உணர்ச்சியாளர்கள் இதை ஆதரிக்கலாம். ஆனால் இந்த தனி உடமை ராஜ்யத்தில் கொடுக்கல் வாங்கல் நடக்க வேண்டுமே, அதற்கு சர்க்கார் என்னவழி செய்தார்கள்? இதன் மூலம் பணக்காரன் என்றும் பணக்காரனாய் இருக்கவும்...

நீடாமங்கலத்துக்கு “நீதி”

நீடாமங்கலத்துக்கு “நீதி”

  நீடாமங்கலத்தில் 28-12-37ல் நடைபெற்ற காங்கரஸ்காரர்கள் மகாநாட்டில் நடந்த சாப்பாட்டு பந்தியில் சில ஆதிதிராவிட கிறிஸ்தவ தோழர்கள் உட்கார்ந்து சாப்பிட்டதற்காக அவர்களை அடித்துத் தொந்திரவு செய்து மொட்டை அடித்து அவமானப்படுத்தியதாக “விடுதலை”ப் பத்திரிகையில் வந்த செய்தியை அம்மகாநாட்டை நடத்திய பிரமுகர்கள் பொய் என்று மறுத்ததுடன் அச்செய்தி வெளியானதால் தனக்கு மான நஷ்டம் ஏற்பட்டு விட்டதென்று விடுதலைப் பத்திரிகை பிரசுரிப்பவர் மீதும், ஆசிரியர் மீதும் டிப்டி மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் பிராது கொடுத்திருந்ததும் அந்த வழக்கு சுமார் 4, 5 மாதமாக நடந்து வந்ததும் வாசகர்கள் அறிந்த விஷயமேயாகும். இந்த 4, 5 மாதமாக நடந்த வழக்கு சகல விசாரணையும் முடிந்த பிறகு இம்மாதம் 15தேதி முடிவு கூறப்பட்டது. அம்முடிவானது விடுதலை பிரசுரிப்பவரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்களுக்கு ரூ.200 அபராதமும் விடுதலை பத்திராதிபரான தோழர் பண்டித முத்துசாமிப் பிள்ளை அவர்களுக்கு ரூ.200 அபராதமுமாக தண்டனை விதித்து முடிவு பெற்றுவிட்டது. இந்த வழக்கின் முடிவு...

ஆச்சாரியார் அறிக்கை

ஆச்சாரியார் அறிக்கை

  ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் பற்றி கனம் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அசோசியேட்டட் பிரஸ் நிருபருக்கு பேட்டி அளித்து பேசியதில் இப்போது உள்ள ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் இருந்து தாம் செய்து கொள்ள வேண்டிய முடிவானது “தமிழ் இருப்பதா ஒழிவதா என்பது அல்ல” வென்றும், ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களான தமக்கு இந்நாட்டு மக்களுக்கு தாராளமான முறையில் (தன் இஷ்டப்படி) கல்வி போதிக்க அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதை இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும் என்றும், இந்நாட்டை ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட தான் (சி.ஆர். ஆச்சாரியார், ப-ர்) ஆளுவதா அல்லது சிலருடைய மிரட்டுதலுக்குப் பயந்து விட்டு விட்டுப் போய்விடுவதா என்பதையும் ஒரு கை பார்த்து விடப் போவதாகவும் சொல்லி வீர கர்ஜனை புரிந்து இதை பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யச் செய்திருக்கிறார். ~subhead நமது கவலை என்ன? ~shend ஆகவே இதிலிருந்து இன்றைய தினம் கனம் ஆச்சாரியார் அவர்களுக்கு ஹிந்தியைக் கட்டாய பாடமாக ஆக்கும் காரியம் அவ்வளவு...

பழிக்குப் பழிவாங்கும்  பார்ப்பனர் ஆட்சி  – பார்ப்பனனல்லாதான்

பழிக்குப் பழிவாங்கும் பார்ப்பனர் ஆட்சி – பார்ப்பனனல்லாதான்

  தமிழ்நாட்டு அரசர்கள் பலதடவைகள் வடநாட்டுப் பார்ப்பன அரசர்களின் மேல் படை எடுத்துப் பார்ப்பன அரசர்களை முறியடித்து வெற்றிமாலை சூடி இருக்கின்றார்கள். இது கலிங்கத்துப்பரணி போன்ற பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்தால் தெள்ளிதின் விளங்கும். நந்தமிழர் தமிழ் நூல்களில் நல்ல தேர்ச்சி பெறாமலும், சிறிது தேர்ச்சிப் பெற்றாலும் பிராமண-புராண மூடபக்தியின் மிகுதியால் பகுத்தறிவு கொண்டு ஆராயாமலும் தளரவிட்டதினால் தான், உலகம் புகழ்ந்த நந்தமிழ் நாடு பலமின்றிப் பாழ்த்து வருகின்றது. பார்ப்பன அரசர்களை நம் வீரத்தமிழ் நாட்டரசர்கள் பல தடவைகளில் போரில் வென்று விறற்கொடி ஏற்றி இருக்கின்றார்கள். உதாரணமாக:- ஒரு சமயம் வடநாடுகளில் ஒன்றில் ஏதோ ஒரு விசேட சந்தர்ப்பத்தில் பல பார்ப்பன அரசர்கள் சேர்ந்திருந்தார்கள். அவர்களில் பிரபலஸ்தர்கள் கனகன், விஜயன் என்னும் இருவர். இவர்கள் எல்லோரும் உண்டுகளித்து உல்லாசமாக உரையாடிக் கொண்டிருக்கும்போது, தென்னிந்திய தண்டமிழ் அரசர்களைப் பற்றியும் பேச ஆரம்பித்தார்கள். அவர்களிலொருவன், தமிழரசர்களின் வீரப் பிரதாபங்களையும், போர்த் திறமைகளையும் பற்றிப் புகழ்ந்து பேசினான்....

ஹிந்திப் போர்

ஹிந்திப் போர்

  ஹிந்திப்போர் ஆரம்பமாகி விட்டது. ஹிந்தி எதிர்ப்பாளர் மூவர் சிறைப்படுத்தப்பட்டு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டு விட்டது. இருவர் ஜாமீனில் விடப்பட்டிருக்கின்றனர். இவைகள் எல்லாம் எதிர்பார்க்கப்பட்டவைகளே. சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டு நிருவாகக் கமிட்டியார் இவைகளையெல்லாம் எதிர்பார்த்தே முடிவு செய்திருக்கிறார்கள். நிர்வாகக் கமிட்டியார் நியமனம் செய்த சென்னை சர்வாதிகாரி தோழர் ஸி.டி. நாயகத்துக்குப் பதிலாக யார் சர்வாதிகாரியாக நியமிக்கப்படுவார் என்றும் மேற்கொண்டு என்ன நடக்குமென்றும் தெரியவில்லை. இதற்கிடையில், காங்கரஸ் தலைவர் தோழர் சுபாஷ் சந்திர போஸ் ஹிந்தி எதிர்ப்புத் தகவல்களைப் பூரணமாகத் தமக்கு தெரிவிக்க வேண்டுமென்று, ஹிந்தி எதிர்ப்பு சர்வாதிகாரி தோழர் ஸி.டி. நாயகத்தை எழுத்து மூலம் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு தோழர் ஸி.டி. நாயகம் ஏற்கனவே பதிலனுப்பிவிட்டதாகவும் காங்கரஸ் பத்திரிக்கைகளில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. தோழர் ஸி.டி. நாயகம் தோழர் சுபாஷ் போசுக்கு அனுப்பிய பதிலில் காங்கரஸ் தலைவர் சென்னைக்கு வந்து ஹிந்தி எதிர்ப்பின் வன்மையை நேரில் உணர வேண்டுமென்றும்,...

தமிழர் போர் மூண்டுவிட்டது எதற்காக?

தமிழர் போர் மூண்டுவிட்டது எதற்காக?

    ~subhead தமிழுக்காக ~shend தமிழர் தன்மானத்துக்காக தமிழர் அறிவு, கலை, வீரம் ஆகியவற்றிற்காக, எனவே ~subhead தமிழா உன் கடமை என்ன? ~shend மாதம் 75 ரூபாய் காசுக்கு எதிரியின் காலை நக்குவதா? அற்ப பதவிக்காக சகலத்தையும் உதிர்த்து தமிழை, தமிழனை, தமிழ்நாட்டை காட்டிக்கொடுத்துவிட்டு வளையல் போட்டுக்கொண்டு முக்காட்டிட்டு மூலையில் குந்தி இருப்பதா? சீச்சீ இது சிற்றினப் பிழைப்பல்லவா? ~subhead மற்றென்ன உன் கடமை? ~shend எதிரியின் கூட்டுறவை ஒழி. வீரத்துடன் வெளியில் வந்து மார்தட்டு. கிளர்ச்சிப் போரில் முன்னணியில் நில்லு. எதிரி வெட்கப்பட, அறிவு பெற, ஓடி ஒழிய உன் உயிர்விடத் தயாராகு. இவை உன்னால் ஆகாவிட்டால் காசுகொடுத்து ஆதரித்து நீ தமிழன் என்பதையாவது காட்டிக்கொள். குடி அரசு – அறிவிப்பு – 29.05.1938

காங்கரஸ் பித்தலாட்டம்

காங்கரஸ் பித்தலாட்டம்

  தோழர்களே! இன்னும் இரண்டொரு முக்கிய விஷயங்களைக் கூறிவிட்டு முடித்துக் கொள்ளுகிறேன். காங்கரஸ்காரர்கள் இன்று சர்க்காரில், சம்பளச் செலவு அதிகம், அதிகம் என்று கூறுகிறார்கள். இது யாரால் அதிகமாகியது என்று கவனியுங்கள். இந்த காங்கரஸ் ஏற்படாததற்கு முன்பு முன்சீப்பிற்கு 200 ரூபாய்தான் சம்பளம். இப்பொழுது 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு 70 ரூபாய் சம்பளம் கொடுத்து வந்தார்கள். இப்போது 150 ரூபாயில் ஆரம்பிக்கிறார்கள். இதுபோல்தான் எல்லா உத்தியோகஸ்தர்களுக்கும் சம்பளம் உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் வரி கொடுப்போர் பார்ப்பனரல்லாதார், உத்தியோகங்கள் பார்ப்போர் பார்ப்பனர்கள். ஆதலால் பணத்தின் அருமை அவர்களுக்குத் தெரியவில்லை கொள்ளையடித்தவரை லாபமென்று கருதினார்கள். காங்கரஸ் எல்லா உத்தியோகங்களும் இந்தியர்களுக்கு வேண்டும் என்றும் வெள்ளைக்காரர்களுக்குக் கொடுக்கும் சம்பளமே இந்தியர்களுக்கும் வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றியதுதான் காரணம். ~subhead காங்கரஸ் சாதித்ததென்ன? ~shend இதுதான் போகட்டும். காங்கரஸ் தேர்தலில் நின்று பாமர மக்களை ஏமாற்றி மங்களகரமான மஞ்சள்...

பகிரங்கக் கடிதங்கள்

பகிரங்கக் கடிதங்கள்

    ~subhead அகில இந்திய காங்கரசுக்கு, ~shend ஏ அநாதியே! நீ பிறந்ததற்கும், வளர்ந்ததற்கும் இப்படிப்பட்ட கேவலமான நிலைமைக்கு வருவாயென்று நான் நினைக்கவேயில்லை. உன்னிடத்தில் பித்தலாட்டக்காரர்களும், காலிகளும், கூலிகளும் நிறைந்திருந்தால் எப்படி உன்னைப் பொது ஜனங்கள் நம்பி தேசத்துக்காகப் பாடுபடுவார்கள். புரட்டிப் புரட்டிப் பேசுகிறவர்களையும், கொள்கை மாறும் பச்சோந்திகளையும் எப்பொழுது ஒழிக்கப்போகிறாய்? மதத்தையும், புராண இதிகாசங்களையும் காட்டி நீ இன்னும் எந்தனை காலத்துக்குப் பாமர மக்களை ஏமாற்ற முடியும்? அயோக்கியத்தனம் நிறைந்த ஒரு ஜன்மம் இருப்பதைவிட இறந்துவிடுவதே மேல். நீயாக ஒழியாவிட்டால் மற்ற சக்திகளெல்லாம் சேர்ந்து உன்னைக் கொஞ்ச காலத்தில் தொலைத்துவிடும் என்பதை அறியவும். குட்பை. ~subhead வர்ணாச்சிரமத்துக்கு, ~shend ஏ நடைப்பிணமே! நீ சாகிற காலத்திலே எதற்காக லபோ லபோ என்று அடித்துக் கொள்கிறாய்? உன்னாலேதான் உலகமே பாழாய்ப்போச்சே, இந்தியாவும் உருப்படவில்லையே. யார்செத்தாலும் சரி, யார் வாழ்ந்தாலும் சரி, கவலை யில்லாமல், நீ மாத்திரம் தின்று கொழுத்துக் கொஞ்சமும்...

இன்னமுமா காங்கரஸ்

இன்னமுமா காங்கரஸ்

  தமிழ்நாட்டில் காங்கரஸ் புரட்டுக்கும் பார்ப்பன சூழ்ச்சிக்கும் சாவுமணி அடித்தாய்விட்டது. சமீபத்தில் நடந்த தேர்தலில் இருந்து காங்கரஸ் என்பது பார்ப்பனர்களும், தகுதியற்றவர்களும் பதவிவேட்டை ஆடும் ஒரு பித்தலாட்ட ஸ்தாபனம் என்பது வெட்ட வெளிச்சமாய்விட்டது. மஞ்சள் பெட்டி என்றால் மக்கள் மயங்கி மெளடீகர்களாகும் மதிமோசமும் ஒழிந்துவிட்டது. இனி பார்ப்பனர்கள் பலாத்காரத்தாலும் மூர்க்கத்தனத்தாலும் பொது மக்களின் வரிப்பணத்தை வாரி வாரி காலிகளுக்கும் கூலிகளுக்கும் இறைத்து ஆள் சேர்த்துக் கொண்டு செய்யும் அட்டூழியத்தை ஆதரவாகக் கொண்டுமேதான் காங்கரஸ் இந்த நாட்டில் வாழவேண்டிய வெளிப்படையான நிலைமையில் இருந்து வருகிறது. இந்த நிலை கூட இனி எத்தனை நாளைக்கு இருக்கக் கூடும்? பொது ஜனங்கள் இந்த ஆட்களின் யோக்கியதைகளை நேரில் கண்டு மிக மிக சமீபத்திற்கு வந்து விட்டபடியால் அதுவும் வெளுத்துப் போகப் போகிறது என்பதில் ஐயமில்லை. ~subhead நாணயமற்ற காரியங்கள் ~shend இவ்வளவு தைரியமாய் நாம் எடுத்துக்காட்டுவதற்கு பிரத்தியட்ச ஆதாரம் சமீபத்தில் நடந்த முனிசிபல் கவுண்சிலர், சேர்மன்...

தொண்டர்களே – சென்னை செல்க

தொண்டர்களே – சென்னை செல்க

  அக்கிரகார சரணாகதி மந்திரிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் நெருங்கி விட்டது. தமிழ்நாட்டில் ஒரு சிறு அளவுக்கு இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஆரம்பித்த உடன் அதை ஒடுக்குவதற்கு அவசியமான அடக்குமுறைகளைக் கையாள முதல் மந்திரி தோழர் கனம் ஆச்சாரியார், காரியக் கமிட்டியார் அதிகாரம் பெற்று வந்து விட்டாராம். மற்றும் எப்படிப்பட்ட கிளர்ச்சியாய் இருந்தாலும் அதற்கு வகுப்புவாதம் என்கின்ற பெயரைக் கொடுத்து அடக்கி விட அனுமதி பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இதே சாக்கில் தன்னை ஆதரிக்காத பத்திரிக்கைகளையும் தங்களது உண்மையான நடத்தைகளையும் யோக்கியதைகளையும் உள் எண்ணங்களையும் வெளியிடும் பத்திரிகைகளையும் ஒழிப்பதற்கும் அனுமதி பெற்று வந்து விட்டார்களாம். ~subhead தலைவர்கள் யோக்கியதை ~shend இந்த “அனுமதி”களின் யோக்கியதை நாமறியாததல்ல காங்கரஸ் தலைவரின் யோக்கியதையையும், காரியக் கமிட்டியாரின் யோக்கியதையையும், காங்கரசின் சர்வாதிகாரியான காந்தியாரின் யோக்கியதையையும் பற்றி தனித்தனியாகவும், சேர்த்தும் பல தடவை எழுதியும் சொல்லியும் வந்திருக்கிறோம். கனம் ராஜகோபாலாச்சாரியாரின்...

காங்கரசும் மைனாரட்டியும்

காங்கரசும் மைனாரட்டியும்

  அன்புள்ள தலைவரவர்களே! இந்து முஸ்லீம் தோழர்களே!! நான் நேற்று இங்கு நடைபெற்ற நபிகள் பெருமான் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருவதற்கு இருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வேலையினால் வரமுடியவில்லை. அந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதற்காகவே இன்று இங்கு வந்திருக்கிறேன். இந்த ஒரு வாரமாகவே பல இடங்களுக்குச் சென்று தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்து வந்திருக்கிறேன். அதனால் எனது உடல் நிலையும் சரியாக இல்லை. அப்படி யிருந்தும் இங்கு பேசவேண்டுமென்ற ஆசையால் வந்தேன். ~subhead துக்க சேதி ~shend அப்படி வந்த நான் ரயிலை விட்டு இறங்கி காரில் ஏறியதும் என்னை ரயிலுக்கு அழைக்க வந்த எனது நண்பர் தோழர் யாகூப் சாயபு அவர்கள் ஒரு வருத்தமான விஷயம் கூறினார். அது கேள்விப்பட்ட நேரத்திலிருந்து என் மனம் துடிக்கிறது. அதாவது தோழர் பரமேஸ்வரம் செட்டியார் காலம் சென்று விட்டதாகக் கூறினார். தோழர் பரமேஸ்வரம் செட்டியார் அவர்கள் எனது அருமை நண்பர். நமதியக்கத்திற்காக...

தமிழா  என்ன செய்யப்போகிறாய்  இந்தி வந்து விட்டது!

தமிழா  என்ன செய்யப்போகிறாய் இந்தி வந்து விட்டது!

  பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த – தமிழனின் தன் மானத்தை அழித்து தமிழனை ஆரியருக்கு என்றென்றும் நிலையான அடிமையாக்க ஹிந்தி தமிழ் மக்களுக்கு கட்டாயப் படிப்பாக ஏற்படுத்தப்பட்டாய் விட்டது. யாரால்? ஆரியரால் எப்படி? தமிழ் மக்களின் ஒன்றுபட்ட கூக்குரலைச் சிறிதும் மதியாமல் தமிழா இனி என்ன செய்யப்போகிறாய்? தலை வணங்கி வரவேற்கப் போகிறாயா? எதிர்த்து நின்று விரட்டி அடிக்கப்போகிறாயா? இதில்தான் தமிழன் இருப்பதா இறப்பதா என்கின்ற முடிவு இருக்கிறது. தலை வணங்குவதானால் காங்கரசில் இரு. எதிர்த்து நிற்பதானால் உன் பெயரை எதிர்ப்புக் கமிட்டிக்குக் கொடு. குடி அரசு – அறிவிப்பு – 15.05.1938

ஈரோடு காங்கரஸ் நாற்றம்  பொதுஜனங்கள் வெறுப்பு  – நேரில் கண்டு சிரித்தவன்

ஈரோடு காங்கரஸ் நாற்றம் பொதுஜனங்கள் வெறுப்பு – நேரில் கண்டு சிரித்தவன்

  ஈரோடு, மே.10. ஈரோடு முனிசிபாலிட்டிக்கு மெஜாரிட்டியாக 16 காங்கரஸ் கெளன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று மாலை 5 மணிக்கு காங்கரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு சேர்மனைத் தேர்ந்தெடுப்பதற்காக காங்கரஸ் எலக்ஷன் ஆபீசில் அட்ஹாக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு தோழர்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், கோவை அவினாசிலிங்கம் செட்டியார், குட்டப்பாளையம் கே.எஸ். பெரியசாமிக் கவுண்டர், கோவை சுப்ரி முதலியவர்கள் விஜயம் செய்திருந்தார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 கெளன்சிலர்களும் விஜயம் செய்திருந்தார்கள். கடந்த மூன்று நான்கு தினங்களாக “பொது ஜனங்கள்” பெயரால் தோழர் எம்.எ. ஈசுவரன் அவர்களையே சேர்மனாகத் தேர்ந்தெடுக்க வேண்டு மென்று பல துண்டு பிரசுரங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. சேர்மன் பதவிக்கு பலர் அபேட்சித்தார்கள். இதில் தோழர்கள் எம். எ. ஈசுவரன் பெயரும், ஆர்.கே. வெங்கிடசாமி பெயரும் முதன்மையாக அடிபட்டன. தோழர் ஈசுவரனை ஆதரித்து பல வாலிபர்கள் வெளியில் நின்றுகொண்டு கிளர்ச்சிசெய்து, வெங்கிடசாமிக்குக் கொடுக்கக்கூடாதென்று ஆரவாரம் செய்தார்கள். “வெங்கிடசாமிக்குக் கொடுக்க வேண்டும்,...

நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி

நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி

  நம்நாட்டுப் பார்ப்பனீயமானது “தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து இப்போது மனிதனைக் கடிக்க வந்துவிட்டது” என்பது போல் உத்தியோக வேட்டை ஆடி, பிறகு நம் பிரமுகர்களையும் நமது ஸ்தாபனங்களையும் ஒழிக்க முயற்சியெடுத்து வெற்றி பெற்று பதவியும் ஆதிக்கமும் பெற்றவுடன் இனி என்றென்றும் தமிழ் மக்கள் சமூகமே தலையெடுக்க வொண்ணாதபடி செய்வதற்கு பல வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த முறைகளை திரை மறைவில் கையாடி வந்து இன்று வெளிப்படையாகவே வெளிவந்து ஹிந்தி என்ற கத்தியுடனும், வார்தா கல்வித்திட்டம் என்ற சூலாயுதத்துடனும் நின்றுகொண்டு தமிழர்களை வெட்டியும் குத்தியும் கொன்று புதைக்க முனைந்து விட்டது. ~subhead பார்ப்பனீயப் போராட்டம் ~shend தமிழ் மக்களில் எவருடைய ஆக்ஷேபணையையும் எப்படிப் பட்டவர்களுடைய கூக்குரலையும், யாருடைய அழுகையையும் லòயம் செய்யாமல் ஒரே அடியாய் “சம்ஹாரம் செய்து விட்டுத்தான் அமருவேன்” என்ற ஆணவத்துடன் அது (பார்ப்பனீயம்) தலைவிரித்தாடுகிறது. தமிழனுக்கு இன்று கதி இல்லை, நாதி இல்லை, நடுத் தெருவில் பெண்டு பிள்ளைகளுடன் இழுத்துப்...

பகிரங்கக் கடிதங்கள்

பகிரங்கக் கடிதங்கள்

    ~subhead தோழர் முத்துரங்கம் அவர்களுக்கு, ~shend தாங்கள் “ஆண்மை, ஆற்றல்” இல்லாதவர் என்றும், தாங்கள் தமிழ் மாகாணக் காங்கரஸ் கமிட்டித் தலைவராக இருக்கும் வரையில் காங்கரசில் ஊழல் இருக்கத்தான் செய்யும் என்றும் சொல்லப்படுகிறது. அத்துடன் தங்களுக்குச் சுயமதிப்பும், பொது நோக்கும் இல்லை யென்று ஏன் சொல்லக் கூடாது என்பதாக பலர் அபிப்பிராயப்படுகிறார்கள். பார்ப்பனத் தாசர் என்றால் எப்படி யிருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள பலர் ஆசைப்படுகின்றார்கள். தயை செய்து அவர்களின் முன் தாங்கள் பிராப்தமானாலே போதும் என்று நினைக்கிறேன். குட்பை. ~subhead தோழர் சுப்பராயன் அவர்களுக்கு, ~shend தாங்கள் போகும் இடங்களில் ஹிந்தியை எதிர்ப்பவர்கள் பொதுவாக சுயமரியாதைக்காரர்கள் என்றும் சிறப்பாகத் தோழர் ஈ.வெ.ரா. என்றும் சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள். இந்த மாதிரி தாங்கள் மாலை நேரத்தில்தான் சொல்லியிருக்க வேண்டும். ஆகையால் இனிமேல் காலை நேரத்தில் நிதானமாகப் பிரசங்கம் செய்வீர்களோனால் ஹிந்தியை எதிர்ப்பவர்கள் தமிழர்களே என்று உணர்ந்து கொள்வீர்கள். குட்பை....

ஹிந்தி வந்துவிட்டது இனி என்ன?  ஒருகை பார்க்க வேண்டியதுதான்

ஹிந்தி வந்துவிட்டது இனி என்ன? ஒருகை பார்க்க வேண்டியதுதான்

  தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு ஹிந்தி பாஷையை கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டுமென்று பார்ப்பன மந்திரி தோழர் ராஜகோபாலாச்சாரியார் பிடிவாதமாக முடிவு செய்துவிட்டார். தமிழ் மக்கள் எவ்வளவோ தூரம் முயன்றும், எத்தனையோ கூட்டங்கள் மூலம் தங்களது அதிருப்தியையும், ஆத்திரத்தையும் காட்டியும் கனம் ஆச்சாரியார் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. உண்மையில் தமிழ் மக்களுக்கு ஹிந்தி நஞ்சு என்பதை எடுத்துக்காட்ட தமிழ் மக்கள் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல. இன்று கனம் ஆச்சாரியார் மாத்திரமல்லாமல் கல்வி மந்திரியார் உள்பட மற்ற மந்திரிகளும் அவர்களது காரியதரிசிகளும் தமிழ் நாட்டில் பொதுக் கூட்டங்களில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் இந்த ஹிந்தியை கட்டாயமாக நுழைக்க முயற்சித்ததுதான் என்பதை மனப்பூர்த்தியாக ஆச்சாரியார் உணர்ந்தும் அறைக்குள்ளாகவே இருந்து கொண்டாவது ஹிந்தியை புகுத்திவிட்டுத் தான் மறு காரியம் பார்ப்பது என்கின்ற விரதம் பூண்டு விட்டார். எனவே இனி கேட்டுக் கொள்ளுவதாலோ கெஞ்சிக் கொள்ளுவதாலோ சமாதானமான முறையில் வேறு...

“பஞ்சகன்யாஸ்மரே…..”  – சித்திரபுத்திரன்

“பஞ்சகன்யாஸ்மரே…..” – சித்திரபுத்திரன்

  பார்ப்பன பாஷையில் ஒரு தோத்திர ஸ்லோக முண்டு. என்னவென்றால், “ஆகல்யா, துரோபதி, சீதா, தாரா, மண்டோதரி, ஸ்மிருதா, பஞ்சகன்யாஸ்மாரே நித்தயம் மஹாபாதக நாசனம்” இதன் கருத்து அகல்யை துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து கன்னிகைகளை தினம் நினைத்தால் மஹாபாதகமெல்லாம் நாசமாய் விடும் என்பதே. இதில் ஏற்பட்ட விவகாரத்திற்காகத்தான் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்கின்ற பழமொழி உண்டாக்கப்பட்டது. விவகாரத்தின் தன்மையாவது:- கோபமில்லாமல், பகுத்தறிவோடு கேட்க வேண்டும். ஏனென்றால், கோபம் வந்தால் பார்ப்பான் ஏமாற்றி விடுவான். கோபமில்லாவிட்டால் தான் அதிலிருக்கும் ரகசியம் விளங்கும். நான் கிளப்பப்போகும் விவாதம் இந்த ஸ்லோகத்தை எந்தப் பார்ப்பான் எழுதினானோ அந்தப் பார்ப்பான் எழுதி வைத்த சங்கதியைத்தான் சொல்லப்போகிறேன். ஆதலால் நான் என் உத்தேசப்படி சொல்லப்போவதாக நினைத்து ஏமாந்து போகாதீர்கள். இதில் கண்டிருப்பது வாஸ்தவமா, இல்லையா என்று ஒவ்வொரு பார்ப்பானையும் கேளுங்கள்; வாஸ்தவமல்ல வென்று சொன்னால் என்னைக் கேளுங்கள். முதலாவது அந்த ஸ்லோகத்தில் மேல்கண்ட ஐந்து...

பெண்கள் விடுதலைக்கு  “ஆண்மை” அழியவேண்டும்

பெண்கள் விடுதலைக்கு “ஆண்மை” அழியவேண்டும்

  பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அனேக இடங்களில் அனேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக்கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காக பெண் மக்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல் மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளை பலப்படுத்திக் கொண்டேபோகும் என்பது நமது அபிப்பிராயம். எதுபோலென்றால் இந்தியப் பொது மக்கள் விடுதலைக்கு வெள்ளைக்காரரும், பார்ப்பனரும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்துவருதின் பலனாக எப்படி நாளுக்குநாள் இந்திய மக்களுக்கு அடிமைத்தனம், விடுதலை பெறமுடியாதபடி பலப்பட்டு என்றென்றைக்கும் கட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறதோ, அது போலவும், சமூக சீர்திருத்தம், சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக்கொண்டு பார்ப்பனர்களும், புராணக்காரர்களும் சீர்திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக எப்படி சமூகக்கொடுமைகளும், உயர்வு...

பகிரங்கக் கடிதங்கள்

பகிரங்கக் கடிதங்கள்

  தோழர் அவர்களே! தங்களது ஆத்மசக்தி கடைசியாகத் தங்களைக் காலைவாரி விட்டுவிட்டதா? இல்லாவிட்டால் மனமுடைந்து இருளில் தடுமாறிக் கொண்டிருப்பதாகச் சொல்ல நேரிடுமா? அப்படியிருக்கும்போது மற்றவர்களையும் ஆத்மசக்தியை வளர்க்கச் சொல்லுகிறீர்களே. அவர்களையும் இருளில் திண்டாடவிடவா முடிவு செய்திருக்கிறீர்கள். இந்த யோசனை, “குருடன் குருடனுக்கு வழிகாட்டுவது” போலாகாதா? இந்தச் சந்தேகத்தைப் போக்குவதற்கு உடனே தங்களுடைய அந்தராத்மா (இன்னர் வாயிஸ்) என்ன சமாதானம் சொல்கிறதென்று கேட்டு அறிக்கை ஒன்று வெளியிடவும். அதற்குள் அவசரப்படுகிறவர்களுக்கு உங்கள் தடுமாற்றத்தைப் பற்றி நான் ஒரு வியாக்யானம் செய்து அவர்களை அடக்கிவைக்கிறேன். அதாவது முஸ்லிம் பொது மக்களை ஏமாற்ற இது ஒரு வழியென்று தோன்றுகிறது என்பதாகச் சொல்லிவைக்கிறேன். அந்த வியாக்கியானம் சரியா என்று தோழர் படேலை கேட்டுத் தெரிவிக்கவும். குட்பை. தோழர் மகாதேவ தேசாய் அவர்கள் இருக்கிற ஊர் தோழரே! தாங்கள் “ஹரிஜன்” பத்திரிகை நடத்துகிறீர்களே அதில் ஹரிஜன சமூகத்துக்காக ஒன்றையும் காணுமே. அந்தப் பேரை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றவா அல்லது...

காந்தி எச்சரிக்கை  – ஒரு காங்கரஸ் சி.ஐ.டி

காந்தி எச்சரிக்கை – ஒரு காங்கரஸ் சி.ஐ.டி

  காந்தியார் மந்திரிகள் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்திருப்பதாக பத்திரிகைகளில் பார்த்தேன். இதற்குக் காரணம் சில நாட்களுக்கு முன் சென்னையில் ஒரு மந்திரி தனது அந்தரங்க நண்பனுடன் நடு ஜாமத்தில் பெண் வேட்டைக்குச் சென்று திரும்பும் வேகத்தில் ஒரு நபரின் மீது மோட்டாரை விட்டுத் தள்ளினதோடு அந்த அடிபட்ட நபரை சிகிச்சைக்கு வேண்டிய காரியம் கூட செய்யாமல் விட்டு விட்டு ஓடிப்போய் விட்டதாகக் கூறப்படும் விஷயம் காந்தியாருக்குத் தெரிந்துதான் இம்மாதிரியான எச்சரிக்கை விட்டிருக்கலாம் என்று கருதுகிறேன். போலீஸ் இலாக்கா கமிஷனருக்குக்கூட இது சேதி எட்டி கவர்னர் பிரபு காதுக்கு எட்டி இருப்பதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது. குடி அரசு – செய்திக் குறிப்பு – 01.05.1938

ஜனநாயகமா? தடிநாயகமா?

ஜனநாயகமா? தடிநாயகமா?

  ஜனநாயகம் அல்லது குடி அரசு தோல்வியடைந்து விட்டது. முடி அரசு அல்லது யதேச்சாதிகார ஆட்சிதான் சிறந்தது என்கிறார் அந்தப் பழைய ஹோம்ரூல் வாதி திருவிதாங்கூர் திவான் ஸர்.ஸி.பி. ராமசாமி அய்யர், ஆனிபெசண்டு அம்மையாரின் பிரதம தளகர்த்தராய்- வலக்கையாய் இருந்த தோழர் ஸி.பி. ராமசாமி அய்யர் இப்பொழுது இவ்வாறு கூறக் காரணம் என்ன? அவரது சொக்காரரான சென்னை அக்ரகார மந்திரிகளின் யதேச்சாதிகாரப் போக்கைப் பார்த்து – ஹிட்லரிஸத்தைக் கண்டு வெறுப்படைந்து தான் அவர் ஒருகால் அப்படிச் சொல்லுகிறாரோ என்ற சந்தேகம் நமக்கு உண்டாகிறது. ஜனநாயக ஆட்சி நல்லதுதான். இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள ஆட்சிகளில் அதுவே சிறந்த ஆட்சியாம். அதைக் கண்டிப்பவர்கள் பிரதியாக ஒரு நல்ல ஆட்சிமுறையை இதுவரைக் கண்டு பிடிக்கவில்லையாம். இவை ஜனநாயக பக்தர்கள் கூறும் வாதங்கள். ஆனால் ஜனநாயக ஆட்சியை நடத்தி வைப்போர் ஜனநாயக தத்துவத்தையே அறியாமலிருந்தால் – அல்லது அறிந்திருந்தும் வேண்டுமென்றே யதேச்சாதிகாரத் தோரணையில் தர்பார் நடத்தினால் –...

எல்லாவரிகளும் எம்மனோர்க்குத்தானா?  புரோகிதர்களுக்கு ஏன் வரி இல்லை?  பிராமணர்களுக்கு சகல விதத்திலும் சலுகை  – பிராமணரல்லாதான்

எல்லாவரிகளும் எம்மனோர்க்குத்தானா? புரோகிதர்களுக்கு ஏன் வரி இல்லை? பிராமணர்களுக்கு சகல விதத்திலும் சலுகை – பிராமணரல்லாதான்

  தோழர்களே! இப்பொழுது சட்டசபை என்பது காங்கரஸ் சபை என்பதும், காங்கரஸ் என்பது பார்ப்பனர்கள் ஆதிக்கம் பெற்ற சபை என்பதும், நந்தமிழ் நாட்டார் அநேகர் அறிந்ததேயாகும். சட்டசபையில் பிராமண ஜாதி முன்னேற்றத்திற்காக எல்லா பிராமணர்களும் முழு வன்மையோடு உழைத்து வருவது, காங்கரஸ் பதவி ஏற்றதிலிருந்து கடந்த சில மாதங்களாக நடந்துவரும் நடவடிக்கைகளிலிருந்து பலர் அறிந்ததேயாகும். பல காங்கரஸ் பிரபலஸ்தர்களும் “பார்ப்பன நயவஞ்சக வார்த்தைகளுக்கிணங்கி மந்திரிப் பதவிகளை பார்ப்பனர்களுக்கு விட்டுவிட்டு பார்ப்பனரல்லாதார்க்கு ஏன் கஷ்டம் விளைவித்தோம்” என்று இப்பொழுது வருத்தப்படுவதாகவும் கேள்விப்படுகிறோம். இப்பொழுதிருக்கும் காங்கரஸ் சபையார் இயற்றும் எவ்வித சட்டங்களுக்கும் நாம் எல்லோரும் அடங்கி நடக்கத்தான் வேண்டும். அவர்களும், எல்லார்க்கும் பொதுவாகவும் சம்மதமாகவும் இருக்கும் சட்டங்களை ஏற்படுத்துவதே நியாயம். அதை விடுத்து அவர்கள் ஒருசாராருக்கு மட்டும் உதவி செய்வது அநியாயமல்லவா? அதற்குச் சில உதாரணங்களைத் தந்து இக்கட்டுரையை முடிப்போம். தோழர்களே! கூர்ந்து கவனியுங்கள். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து அதனால் கிடைக்கும்...

சேலம் மக்களே உஷார்

சேலம் மக்களே உஷார்

  சேலம் நகரசபைத் தோழர்கள் தேர்தல் விஷயமாக தோழர் ஜெகதீச செட்டியார் செய்து வரும் முயற்சி வெற்றி பெற்று வருவது கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தோழர் ஜெகதீச செட்டியார் கட்சியை ஆதரித்து காங்கரஸ்காரருடன் போட்டி போட சேலம் பிரபலஸ்தர்கள் வலிய வந்திருப்பதாயும் அவர்களில் சிலர் சேலம் நகரசபை மாஜித் தலைவர்கள் என்றும் அறிகின்றோம். ஆகவே தோழர் ஜெகதீச செட்டியார் கட்சி மிகவும் வலிமையுடைய கட்சியாக இருக்கு மென்பதற்குச் சந்தேகமே இல்லை. தண்ணீர் குழாய் கண்ராக்ட்டு சம்மந்தமாக காங்கரஸ் மந்திரியார் பின்பற்றி வரும் கொள்கை சுயமரியாதையுடையவர்களை யெல்லாம் தட்டி யெழுப்பாமலிருக்குமா? எனவே தோழர் ஜெகதீச செட்டியார் கடசிக்கு முழு வெற்றியேற்படும்படி சேலம் மகாஜனங்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 24.04.1938

ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்கள்

ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்கள்

  இம்மாதம் (ஏப்ரல்) 30ந் தேதி தமிழ் நாடெங்கும் முனிசிபல் தேர்தல்கள் நடக்கப் போகின்றன. அதில் காங்கரஸ்காரர்கள் போட்டி போட முனைந்து அபேட்சகர்களை நிறுத்தி இருக்கிறார்கள். இன்று முதல் 15 நாள்களுக்கும் தமிழ்நாட்டின் முக்கிய பட்டணங்கள் எல்லாம் கலவரமாகவும், குழப்பமாகவுமே இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. இது ஒருபுறம் இருக்க தேர்தல் பலாபலன்களைப் பற்றியும் நமக்கு கவலையில்லை. ஆனால் காங்கரஸ்காரர்களுக்கு முனிசிபாலிட்டிகளில் வேலை செய்ய ஒருவித திட்டமும் இல்லை என்பது யாவரும் அறிந்ததேயாகும். பின் ஏன் காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டி தேர்தல்களில் பிரவேசிக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் சொல்லும் சமாதானம் என்னவென்றால், முனிசிபாலிட்டிகளில் லஞ்சம் தாண்டவமாடுகிறதாம். முனிசிபாலிட்டிகளில் கண்டிராக்டர்கள் ராஜ்யம் நடக்கின்றதாம். முனிசிபாலிட்டிகளில் வகுப்புவாதம் தாண்டவமாடுகின்றதாம். முனிசிபாலிட்டிகளில் பணக்காரர்கள் ஆட்சி நடக்கிறதாம். முனிசிபாலிட்டிகளை காங்கரஸ்காரர் அல்லாதார் கைப்பற்றி விடுவதால் சுயராஜ்யம் கிடைப்பது தாமதப்பட்டு விடுகிறதாம். ஆகிய இந்த ஐந்து காரணங்களுக்காக காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டியை காங்கரஸ் கைப்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். இன்று தமிழ் நாட்டில்...