தமிழா  என்ன செய்யப்போகிறாய் இந்தி வந்து விட்டது!

 

பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த – தமிழனின் தன் மானத்தை அழித்து தமிழனை ஆரியருக்கு என்றென்றும் நிலையான அடிமையாக்க ஹிந்தி தமிழ் மக்களுக்கு கட்டாயப் படிப்பாக ஏற்படுத்தப்பட்டாய் விட்டது.

யாரால்? ஆரியரால்

எப்படி? தமிழ் மக்களின் ஒன்றுபட்ட கூக்குரலைச் சிறிதும் மதியாமல்

தமிழா இனி என்ன செய்யப்போகிறாய்?

தலை வணங்கி வரவேற்கப் போகிறாயா?

எதிர்த்து நின்று விரட்டி அடிக்கப்போகிறாயா?

இதில்தான் தமிழன் இருப்பதா இறப்பதா என்கின்ற முடிவு இருக்கிறது.

தலை வணங்குவதானால் காங்கரசில் இரு. எதிர்த்து நிற்பதானால் உன் பெயரை எதிர்ப்புக் கமிட்டிக்குக் கொடு.

குடி அரசு – அறிவிப்பு – 15.05.1938

You may also like...