காந்தி எச்சரிக்கை – ஒரு காங்கரஸ் சி.ஐ.டி

 

காந்தியார் மந்திரிகள் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்திருப்பதாக பத்திரிகைகளில் பார்த்தேன். இதற்குக் காரணம் சில நாட்களுக்கு முன் சென்னையில் ஒரு மந்திரி தனது அந்தரங்க நண்பனுடன் நடு ஜாமத்தில் பெண் வேட்டைக்குச் சென்று திரும்பும் வேகத்தில் ஒரு நபரின் மீது மோட்டாரை விட்டுத் தள்ளினதோடு அந்த அடிபட்ட நபரை சிகிச்சைக்கு வேண்டிய காரியம் கூட செய்யாமல் விட்டு விட்டு ஓடிப்போய் விட்டதாகக் கூறப்படும் விஷயம் காந்தியாருக்குத் தெரிந்துதான் இம்மாதிரியான எச்சரிக்கை விட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.

போலீஸ் இலாக்கா கமிஷனருக்குக்கூட இது சேதி எட்டி கவர்னர் பிரபு காதுக்கு எட்டி இருப்பதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது.

குடி அரசு – செய்திக் குறிப்பு – 01.05.1938

You may also like...