வெளிநாட்டுத் தோழர்களுக்கு வேண்டுகோள் அன்புள்ள தோழர்களே!

 

இன்று நமது தமிழ் மொழியையும், தமிழர் நாகரீகத்தையும் கொலை செய்து தமிழர்களை, ஆரியர்களுக்கும் ஆரிய நாகரீகத்திற்கும் அடிமைப்படுத்தி பழைய மனுதர்ம முறைக்குக் கொண்டுவர இந்தி மொழியை கட்டாயமாகப் புகுத்த சென்னை மாகாண முதல் மந்திரி கனம் ஆச்சாரியார் முயற்சித்து விட்டார்.

இதைக் கண்டித்து சென்னை மாகாணம் முழுதும் பெருத்த கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. இது சம்மந்தமாக சுமார் 114 பேர்கள் வரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சுமார் 41 பேர்கள் வரை தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். இன்னும் பலரை கைது செய்யலாம்.

ஆகையால் வெளிநாட்டிலுள்ள தமிழ்நாட்டுத் தோழர்களே இந்தப் போரைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி தொடர்ந்து செய்ய வேண்டுமானால் அதிகமான பணம் வேண்டும். ஆகையால் நீங்கள் உங்களாலான பண உதவி செய்யும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்.

குடி அரசு – வேண்டுகோள் – 03.07.1938

You may also like...