Author: admin

குஜராத் நீதிபதியின் ”மனுஸ்மிருதி” தீர்ப்பு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்

குஜராத் நீதிபதியின் ”மனுஸ்மிருதி” தீர்ப்பு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்

அகமதாபாத்: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கருக்கலைப்பு வழக்கில் ‘மனுஸ்மிருதி’யை மேற்கொள் காட்டி குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.   பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், கருக்கலைப்புக்கு அனுமதி கோரி சிறுமியின் தந்தை குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சமிர் தாவே, கருக்கலைப்பு தொடர்பாக முடிவு எடுக்கும் முன் சிறுமி மற்றும் அவரது வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ராஜ்கோட் மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்.   மருத்துவ நிபுணர்கள் குழு வரும் 15-ம் தேதிக்குள் இது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, அந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என கூறியுள்ளார்.   இந்த உத்தரவின்போது சில கருத்துக்களை நீதிபதி சமிர் தாவே தெரிவித்தார். “சமஸ்கிருதத்தில்...

தலையங்கம் பட்டியல் தயாரிப்புப் பணியைத் தொடங்கி விட்டீர்களா?

தலையங்கம் பட்டியல் தயாரிப்புப் பணியைத் தொடங்கி விட்டீர்களா?

கழக செயல் வீரர்களே கிராமங்களில் நிலவும் தீண்டாமை சக மனிதர்களின் சுயமரியாதையை பறித்து இழிவுபடுத்தும் அவலங்களை கணக்கெடுக்கும் பட்டியல் தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டீர்களா?   சேலம் மாநாட்டில் நாம் உருவாக்கிய செயல்திட்டத்தை நாம் விரைவு படுத்த வேண்டும் வேறு எந்த அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் செய்ய முன்வராத இந்த எதிர்நீச்சல் போடும் சமுதாயக் கடமையை நாம் சுமந்து களம் இறங்கி உள்ளோம்.   கிராமங்களில் அரசியல் சட்டங்கள் ஆட்சி செய்யவில்லை, மாறாக உள்ளூர் சாதி ஆதிக்கவாதிகள் தங்களின் சாதிவெறியை பழக்கவழக்கம், பண்பாடு என்ற பெயரில் விளிம்பு நிலை மக்கள் மீது திணிக்கிறார்கள். பார்ப்பனியத்தின் அடிமைகளாகி ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து கோரத் தாண்டவம் ஆடுகிறார்கள்.   கோயிலுக்குள் தீண்டாமை, பொது வீதிகளில் நடப்பதற்கு தடை, தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை, முடி வெட்டும் கடைகளில் தீண்டாமை, திருவிழாக்களில் பங்கேற்பதற்கு தடை, சுடுகாட்டில் சடலங்களை புதைக்கவும் தடை, மரணத்திற்குப் பிறகும்...

வினா – விடை

வினா – விடை

இந்தியாவின் அடுத்தப் பிரதமராக தமிழர் வர வேண்டும்   – அமித்ஷா அதுக்கு சீமானின் சம்மதத்தை வாங்கிட்டிங்களா ஜீ!   தமிழ்நாட்டில் 25 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் – அமித்ஷா அமலாக்கத்துறை, வருமானவரித்துறைக்கு எல்லாம் தொகுதிகளை கைப்பற்றும் உரிமை இல்லை ஜீ   மதுரை ஆதீனம் பல்லக்கில் மனிதர்கள் சுமக்க பட்டினப்பிரவேசம்                                      – செய்தி டெல்லிக்கு விமான சவாரி, உள்ளூரில் பல்லக்கு சவாரி   கர்பிணிப் பெண்கள் இராமயணமும் மகாபாரதமும் படித்தால் சுகப்பிரசவம் நடக்கும்                         – தமிழிசை உண்மைதான், குந்திதேவி சூரியனோடு உறவு கொண்டு கர்ணனை பெற்றவளாயிற்றே!   பெரியார் முழக்கம் 15062023 இதழ்

ஆதினங்களின்  பல்லக்கு சவாரியை  தடை  செய் மயிலாடுதுறையில் கழகம் – தோழமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம், கைது

ஆதினங்களின் பல்லக்கு சவாரியை தடை செய் மயிலாடுதுறையில் கழகம் – தோழமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம், கைது

சைவத்தையும் தமிழையும் பரப்புவதற்காக சைவ மதங்கள் உருவாக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. ஆனால் ஆதீனங்கள் இன்றைக்கு அந்த பணியை விட்டுவிட்டு இந்துத்துவாவின் தூதர்களாக மாறிப் போய் இருக்கிறார்கள். மோடிக்கு நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது நேரு சென்று செங்கோல் ஒன்றை ஆதீனங்கள் பரிசாக அளித்து இருக்கின்றன.   அந்த செங்கோல் மவுண்ட் பேட்டன்  பிரபுவிடம் இந்தியாவில் ஆட்சி  மாற்றத்திற்கு அடையாளமாக தரப்பட்டது என்று  ஒன்றிய ஆட்சியும், அமித்ஷாவும் கட்டிவிட்ட கற்பனைகளை திருவாடுதுறை ஆதீனம் இந்து நாளேட்டில் அளித்த பேட்டியில் மறுத்துவிட்டார். அப்படி எந்த ஆதாரமும் இல்லை என்றும், எதற்காக மவுண்ட் பேட்டனிடம் போய் செங்கோலை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார். ஆக பாஜகவின் பொய்யான கதை வசனம் கிழிந்து தொங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.   இந்த மடாதிபதிகள் மோடியின் ஆட்சி தான் இந்த காலம் முழுவதும் நீடித்திருக்க வேண்டும் என்று அரசியலும் பேசி இந்துத்துவாவின் பரப்புரையாளர்களாக மாறிப்போய் இருப்பதோடு  தருமபுரம்...

தீண்டாமைப் பட்டியல் : ஈரோடு தெற்கு மாவட்டம் களமிறங்குகிறது

தீண்டாமைப் பட்டியல் : ஈரோடு தெற்கு மாவட்டம் களமிறங்குகிறது

ஈரோடு தெற்கு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் மே 26, மாலை 6 மணியளவில் மாவட்டச் செயலாளர் எழிலன் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏப்ரல் 29.30 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெற்ற இது தமிழ்நாடு இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு மிக எழுச்சியோடு நடைபெற உழைத்திட்ட அனைத்து தோழர்களுக்கும் கூட்டம் பாராட்டுதலையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. மே 21-இல் சேலத்தில் கூடிய தலைமை செயலவை கூட்டத்தில் தலைமை அறிவித்த வைக்கம் போராட்டம் இன்னும் முடியவில்லை  . இன்றும் தொடரும் தீண்டாமையை கணக்கெடுக்கும் பணியை இரண்டு குழுவாக பிரிந்து ஜூன் 04,05 ஆகிய தேதிகளில் கிராமப்புரங்களில் நிலவும் தீண்டாமையை கணக்கெடுத்து தலைமைக்கு தெரிவிப்பது. “எது திராவிடம்? எது சனாதனம்?” என்ற தலைப்பில் ஈரோடு புறநகர் பகுதிகளில் 25 கூட்டங்களும், மாநகரப் பகுதிகளில் 25 கூட்டம் என 50 கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. தெருமுனைக் கூட்டங்களின் நிறைவுக் கூட்டம் ஈரோடு...

மேல்பாதி – திரெளபதி கோயிலில் பட்டியல் சமூகத்தின் நுழைவு உரிமை மறுப்பைக் கண்டித்து மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

மேல்பாதி – திரெளபதி கோயிலில் பட்டியல் சமூகத்தின் நுழைவு உரிமை மறுப்பைக் கண்டித்து மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மேல்பாதி திரெளபதி கோவிலில் பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும், ஜாதி வெறியர்களை கண்டித்தும், இந்து அறநிலையத்துறையின் கீழுள்ள அனைத்து கோவில்களிலும் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமைகளை நிலை நிறுத்திட கோரியும் மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மா.பா.மணிஅமுதன் தலைமை தாங்கினார்.மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி முன்னிலை வகித்தார்.   தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் வெ.கனியமுதன், தமிழ்தேசியப் புலிப்படைத் தலைவர் ஆ.முத்துப்பாண்டி, மக்கள் தமிழகம் கட்சி பொதுச்செயலாளர் நிலவழகன், மக்கள் சட்ட உரிமை இயக்கம் அண்ணாத்துரை, புரட்சிகர இளைஞர் முன்னணி குமரன், நிலக்கோட்டை வீர லட்சுமி, “உயர்நீதி மன்றத்தில் தமிழ் போராட்டக்குழு” ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பகத்சிங், தமிழ்தேச குடியரசு இயக்கம் மெய்யப்பன், தபெதிக தமிழ் பித்தன், கடலூர் மாவட்டச் செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள். யோகேஸ், வேங்கைமாறன், குமார்,...

சமத்துவபுரம் – டைடல் பார்க் – இரண்டுமே தேவை ஏ.எஸ். பன்னீர்செல்வம்

சமத்துவபுரம் – டைடல் பார்க் – இரண்டுமே தேவை ஏ.எஸ். பன்னீர்செல்வம்

சமத்துவபுரம், டைடல் பார்க் [தொழில்நுட்பப் பூங்கா] இரண்டுமே ஒரே நேரத்தில் தொடங்கப்பட வேண்டும் என்பதே பெரியார்,அண்ணா பார்வை, என கலைஞர் கூறினார் கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னைச் சந்திக்கும் பத்திரிகையாளர்களும் கல்வியாளர்களும் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை நான் எழுதுவதற்கான காரணம் என்னவென்று தொடர்ந்து கேட்டுவருகின்றனர். ஒரு தேசத்தை உருவாக்குவதில் இரண்டு விதமான கற்பனைகள் உண்டு: ஒரு கற்பனைக்கு Holding together என்றும் மற்றொரு கற்பனைக்கு Coming together என்றும் அரசியல் விஞ்ஞானத்தில் கூறப்படுகிறது. இதில் Holding together என்ற கருத்தாக்கத்தில் அரசு இயந்திரத்துக்கும் பாதுகாப்புத் துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து, மக்களுக்கான அதிகாரம் மற்றும் உரிமைகள் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படுகின்றன. ஆனால், Coming together என்ற கருத்தாக்கத்தில் சாமானிய மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள் முதலியவை முக்கியத்துவம் பெற்று, அரசு இயந்திரம் மக்களின் உரிமைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாக மாறுகிறது. கலைஞரின் செயல்திட்டம்: அதிகாரக் குவிப்பில் நம்பிக்கை உடைய கட்சிகள் அனைத்தும் Holding...

சைவம் – வைணவம்

சைவம் – வைணவம்

சைவம், சிவம், ஆகமம், தேவாரம், திருவாசகம் என்கிற வார்த்தைகளும் ஆரியத்தை அடிப்படையாகக் கொண்டவை என்னும் வழக்கை சுலபத்தில் தள்ளிவிட முடியாது மற்றும் சைவக் கடவுள்கள் பெயரும் கடவுளின் பெண் சாதிப் பிள்ளைகளின் பெயரும் அனேகமாய் முழுதும் ஆரிய மொழிப் பெயர்களே தவிர வேறில்லை.  மற்றும் அப்பெயர்களுக்கு ஏற்ற காரணங்களும் அக் காரணங்களுக்கு ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட கதைகள்  தாம் ஆதாரமேயொழிய வேறில்லை மற்றும் அப் பெயர்களுக்கும் கதைகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட புராணங்கள் என்பதும் பெரிதும் ஆரிய மூலத்திலிருந்து மொழி பெயர்த்ததாக சொல்லப்படுபவைகளை அல்லாமல் வேறு இல்லை. சைவம் என்கிற பெயரும், சிவன் என்றால் அன்பு என்கின்ற வியாக்கியானமும் கூட ஆரிய கொள்கைகளை சிறப்பாகவே ஆபாசங்களையும், வேள்விக் கொடுமைகளையும் முறையே வெளியாக்கியும்  ஒழிக்கவும்  வந்த  புத்த இயக்கத்தை  எதிர்த்து  அவரது கொள்கையை ஒழிக்கவே சைவம் என்பதாக ஒன்று கற்பிக்கப்பட்ட தே தவிர மற்றபடி அச் சைவம் என்பதற்கும் அதன் கொள்கைகளுக்கும் அதில் காணப்படும் பல்வேறு கடவுள்களுக்கும்...

சோதிடத்தையும் சட்டத்தையும் இனைத்து தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம் ; உச்சநீதிமன்றம் கண்டனம்

சோதிடத்தையும் சட்டத்தையும் இனைத்து தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம் ; உச்சநீதிமன்றம் கண்டனம்

உத்திரபிரதேசத்தில் ஒரு நீதிபதி சட்டத்தையும் சோதிடத்தையும் ஒன்றாக இணைத்து தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார். சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை உருவாக்கிய இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. பாலுறவு வன்கொடுமைக்கு உள்ளான ஒரு பெண் நீதி கேட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினார், அலகாபாத் நீதிபதி அந்த பெண்ணை பாலுறவுக்கு உள்ளாக்கியவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று  ஒரு தீர்ப்பை வழங்கினார்.  குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது, எனவே நான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். அதற்குப் பிறகு அந்த நீதிபதி அலகாபாத் பல்கலைக்கழகத்தின் சோதிடத் துறைக்கு இரண்டு பேர் ஜாதகத்தை எடுத்துச் சென்று அந்த பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிந்து அதன் பிறகு முடிவு செய்யுங்கள் என்று ஒரு வினோதமான தீர்ப்பை கொடுத்து விட்டார். இந்த தீர்ப்பை சமூக வலைதளங்களில் பார்த்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர...

தலையங்கம்    தொடர்வண்டித் துறையில் ’நவீனத் தீண்டாமை’

தலையங்கம் தொடர்வண்டித் துறையில் ’நவீனத் தீண்டாமை’

ஒடிசா இரயில் விபத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. மிகக் கொடூரமான இரயில் விபத்தாக இது அமைந்துவிட்டது.  300க்கும் மேற்பட்ட உயிர்கள் இதுவரை பலியாகி விட்டன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர்வண்டி சமூகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. சமூகத்தினுடைய மக்களின் அசைவியக்கங்களை அது துரிதப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் சாதி, மத, வர்ணாசிரம பேதம் இல்லாமல் அனைத்து சாதியினரையும் அனைத்து மதத்தினரையும் சுமந்து செல்கின்ற ஒரு வாகனமாக அது மாறியது. பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய தொடர் வண்டி மற்றும் நவீன தொழிற்சாலைகள் காரணமாக இந்தியாவில் தேக்கமுற்றுக் கிடந்த சமுதாயம் உடையத் தொடங்கியது என்றார் காரல் மார்க்ஸ். தேக்கமுற்ற சமுதாயம் என்பதை விளக்க வேண்டுமானால் பார்ப்பன அதிகார கட்டமைப்பு சமுதாயம் உடையத் தொடங்கியது என்பதே ஆகும். இந்த பார்ப்பன அதிகார கட்டமைப்பு சமுதாயத்தினால் உலகில் ஏனைய நாடுகளில் நிகழ்ந்ததைப் போல இங்கே நில உடமை முதலாளித்துவ சமூகங்கள் உருவாகவில்லை. மார்க்சிய மொழியில் கூற வேண்டுமானால்...

பாஜகவும் பாலியல் குற்றச்சாட்டுகளும் ;

பாஜகவும் பாலியல் குற்றச்சாட்டுகளும் ;

உத்தரகாண்ட் மாநிலத்தில்  பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் பல்காரியா கடந்த ஆண்டு அக்டோபரில் தனது அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.  இதை வெளியே சொல்ல கூடாது என தனது டிரைவரையும் கடுமையாக தாக்கினார். மற்றும் அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2018ல் முன்னாள் ஒன்றிய பாஜக அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது ஆறு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். கொல்கத்தாவில் பேட்டி தருகிறேன் என்று கூறி ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் மீது ஈரத் துண்டை போட்டு வெற்றிகரமாக மறைத்து விட்டது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு.   அரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. [இவரும் பாஜகவில் பொறுப்பில் இருந்தார்] தனது நண்பர் ஆசிஷ் குமாருடன் சேர்ந்து IAS அதிகாரியின் மகளை பாலியல்...

பாஜகவின் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டுகள்

பாஜகவின் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டுகள்

ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் நாட்டுக்காக பதக்கம் வென்று பெருமை சேர்க்க வேண்டும் என்பதை தங்களது இலக்காக கொண்டு விளையாடி வருகின்றனர். அதற்காக பல்வேறு தியாகங்களையும் விலையையும் கொடுத்து  போராடுகின்றனர். ஒலிம்பிக்கில் தங்களது நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பதக்கம் வென்று சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் உலக நாடுகள் பல ஆயிரம் கோடியை செலவு செய்து வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி யுமான பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீராங்கனைகள் பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என்பது மல்யுத்த வீராங்கனைகளின்  குற்றச்சாட்டு. இவரால் பாதிக்கப்பட்ட வீராங்கனைகளில் 7 பேர் இவர் மீது டெல்லி கண்ணா ப்ளேஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பாஜக எம்பி என்பதால் வழக்கம்போல் புகாரைக் கிடப்பில் போட்டது டெல்லி காவல்துறை. நீதிமன்றம் தலையிட்ட பின்னர் தான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க...

இந்தியாவில் ஏன் ரயில் விபத்துகள்?

இந்தியாவில் ஏன் ரயில் விபத்துகள்?

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாததே காரணம் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இலட்சம் கோடியை செலவிடாத ரயில்வே துறை 2017 – 2018 ஆம்  நிதியாண்டில் – ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்த ரூ.1 இலட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியை ரயில்வே துறை பயன்படுத்தவில்லை, இதை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இருப்பதாக கூறிவிட்டது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய கணக்கு தணிக்கை அறிக்கையில் [CAG] இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டெல்லி: நவீன தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி ரயில் விபத்துகளை வளர்ந்த நாடுகள் தடுக்கும் நிலையில், ஒடிசா விபத்தால் இந்திய ரயில்வேயின் விபத்து தடுப்பு தொழில்நுட்பம் கேள்விக்குறியாகி உள்ளது. ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தால், இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு திறன்கள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்த விபத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரயில் விபத்துக்கள், தடம் புரண்டது, ரயில்கள் மோதுவது உள்ளிட்ட காரணங்களால்...

வேதங்கள் அறிவியல் கோட்பாடுகளாம்; இஸ்ரோ தலைவர் உபதேசம்

வேதங்கள் அறிவியல் கோட்பாடுகளாம்; இஸ்ரோ தலைவர் உபதேசம்

ஜோதிடத்தை மய்யமாக வைத்து எழுதப்பட்ட வேதங்கள் தான் அறிவியல் கோட்பாடு களின் பிறப்பிடம் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம் நாத் வேத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   “அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப் பிடமே வேதங்கள்தான். ஆனால், மேற்குலக படைப்பு கள்போல் அவை வேறு போர்வையில் கொடுக்கப்பட் டுள்ளன” என்று சமஸ்கிருத வேத பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறியுள்ளார்.   மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகரிஷி பாணினி சமஸ்கிருத மற்றும் வேதிக் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.   அவர் மேலும் பேசுகையில்,  “அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடம் வேதங்களே. ஆனால், மேற்குலக படைப்பு கள் போல் அவை வேறு போர்வையில் கொடுக்கப் பட்டுள்ளன. கணிதத்தின் அல்ஜீப்ரா, ஸ்கொயர் ரூட்ஸ், நேரம் தொடர்பான கணக்குகள், கட்டுமானக் கலை, பிரபஞ்சத்தின் கட்டமைப்பு, விமான அறிவியல், உலோக...

கோவை – சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் மாநாட்டுத் தீர்மானங்களை செயல்படுத்த – தோழர்கள் தீவிரம்

கோவை – சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் மாநாட்டுத் தீர்மானங்களை செயல்படுத்த – தோழர்கள் தீவிரம்

சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், 28.05.2023 ஞாயிறு மாலை 6 மணியளவில், முருகேசன் திருமண மண்டபத்தில்  சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது.   கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நோக்கவுரையாற்றினார்.  மாவட்டத் தலைவர் வேழவேந்தன் முன்னிலை வகித்தார்.   நிகழ்வில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கான வரவு செலவு கணக்குகள் குறித்தும் செயலவையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் “எது திராவிடம்! எது சனாதானம்!” சென்னையில் 200 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அன்பு தனசேகரன், கரு.அண்ணாமலை உட்பட்ட சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், பகுதி கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் 25.5.2023 அன்று கோவை இரயில் நிலையம் அருகேயுள்ள வழக்கறிஞர் கார்கி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் கூட்டம்  நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு...

சனாதனத்தின் கொடூர வரலாறு (3) சுயமரியாதை திருமண சட்டத்தில் பெரியார் தந்த திருத்தம் தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்

சனாதனத்தின் கொடூர வரலாறு (3) சுயமரியாதை திருமண சட்டத்தில் பெரியார் தந்த திருத்தம் தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்

1954 : தீண்டப்படாதார் கோயில் நுழைவு உரிமையை பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். காசி விசுவநாதன் கோயிலில் தீண்டப்படாதவரை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பார்ப்பனர்கள் அவர்களுக்கென்று தனி வழி ஒன்றை உருவாக்கி அந்த வழியாக மட்டும்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று கூறினார்கள். ஏனைய பிற சாதி பக்தர்களோடு கலந்து அவர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று பெரும் போராட்டத்தை நடத்தினர்.   1955 :  தீண்டாமையை ஒழித்து சட்டம் கொண்டுவரப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதை அமுல்படுத்துவதற்கு இந்திய அரசு சட்டமேற்றியது. அந்த சட்டத்தில் அம்பேத்கர் தெரிவித்த பல கருத்துகளை புறக்கணித்தது.   1956 பம்பாய் சட்டமன்றம் கோயில் நுழைவுக்கு ஒரு சட்டம் இயற்றியது, சுவாமி நாராயணன் பரம்பரை என்ற ஒரு பிரிவினர் யாரை கோவிலுக்கு விடலாம் என்கின்ற உரிமை தங்களுக்கு உண்டு என்று உரிமை கோரி சில பிரிவினருக்கு அனுமதி மறுத்து கோயிலை மூட உரிமை தங்களுக்கு உண்டு என்று வாதிட்டனர்....

பழந்தமிழர் பெருமை தேவையில்லை

பழந்தமிழர் பெருமை தேவையில்லை

வீணாகப் பழந்தமிழர் கொள்கை என்பதும், பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பது அந்நியனை ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோ தான் பயன்படக்கூடியதாக ஆகிவிட்டன. இனி நம்முடைய எந்த சீர்திருத்தத்திற்கும் அந்தப் பேச்சு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பகுத்தறிவுவாதியின் கடமையாகி விட்டது.   பழந்தமிழன் வந்து போதிக்கத் தகுந்த நிலையில் இன்று நமது சமூகம் இல்லை. பழந்தமிழன் கொள்கை எதுவும் இன்று எந்த மனித சமூகத்திற்கும் அவசியமும் இல்லை. மனிதன் காலத்தோடு, மாறுதலோடு செல்ல வேண்டியவனே ஒழிய வேறில்லை. வேண்டுமானால் மடையர்களைத் தட்டி எழுப்ப ஒரு ஆயுதமாக அதைக் கொள்ளலாம். ஆனால் சாது மக்களை ஏமாற்ற அதை பயன்படுத்திவிடக் கூடாது என்பதோடு அவ்வளவு மடையர்களாகவும் நாம் இல்லை. இன்று நம் பண்டிதர் பலருக்குப் பகுத்தறிவு இல்லாமல் போனதற்கு காரணமே பழந்தமிழர் வாழ்க்கை, பழங்கொள்கை  பேச்சைப் பேசி இனி ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லை   ஆதலால், பொதுமக்கள் பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு...

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பாஜக எம்பி மீது 40 கிரிமினல் வழக்குகள்

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பாஜக எம்பி மீது 40 கிரிமினல் வழக்குகள்

பாலியல் குற்றசாட்டுக்குள்ளான பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யாமல் – பாஜக ஆட்சி காப்பாற்றி வருகிறது. பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராடுகிறார்கள். புதிய நாடாளுமன்றத்தின் முன்பு போராடச் சென்ற வீராங்கனைகளை காவல்துறை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.   மல்யுத்த வீரர் – வீராங்கனைகளை குண்டுக் கட்டாக தூக்கி கைது செய்த சம்பவத்திற்கு தில்லி மகளிர்ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பிரிஜ் பூஷண் சரண்  சிங்கை உடனடியாக கைது  செய்யுமாறு தில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவிற்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், “இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷண் சிங் மீது ஒரு சிறுமி உட்பட பல மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்  வைத்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் மீது ஏற்கனவே 40 கிரிமினல்  வழக்குகள் உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு 2 எப்.ஐ.ஆர்கள்...

செங்கோல் நாடகம்

செங்கோல் நாடகம்

டெல்லி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சோழர் கால செங்கோலை நிறுவி இருப்பதாக ஒன்றிய ஆட்சி கூறுகிறது. மோடி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒரு மதச் சடங்காக மாற்றி இருக்கிறார், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கூட அனுப்பப்படாமல் அவமானபடுத்தப்பட்டிருக்கிறார்.   அவர் ஏன் அவமதிக்கப்பட்டார் என்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று அவர் ஒரு பெண்; இரண்டு அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்; மூன்றாவது கணவனை இழந்தவர்; பார்ப்பனிய தர்மப்படி வேதச் சடங்குகளில் இவர் பங்கேற்க முடியாது எனவே தான் அவர் இந்த புறக்கணிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். திறப்பு விழாவுக்கு தேர்வு செய்யப்பட்ட நாள் சாவர்க்கர் பிறந்தநாள், சாவர்க்கர் மனுஸ்மிருதியை இந்தியாவின் புனிதமான இந்துக்களின் வழிகாட்டும் நூல் என்று பெருமைப்படுவதோடு எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்துள்ளார் (Women in Manushmirthi – Volume 4, Prabhat Publishers) மனுஸ்மிருதிப்படி...

வினா விடை

வினா விடை

சர்வதேச நாடுகள் நெருக்கடியான சிக்கல்களுக்கு தீர்வுகாண இந்தியாவையே நாடுகின்றன.             – ஆளுநர் தமிழிசை உண்மை தான் நெருக்கடிகளை திசைதிருப்பி மக்களை ஏமாற்ற இங்கே இலவச ஆலோசனைகள் வண்டி வண்டியாக கிடைக்கும்.   கோவிந்தராஜர் ஸ்ரிதேவி பூதேவியுடன் திருப்பதியில் கற்பக விருட்ச வாகனத்தில் வீதி வீதியாக உலா வந்தார்     – செய்தி கற்பக விருட்சம் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு? பெட்ரோல் வண்டியா? டீசல் வண்டியா?   கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் பாஜக அணிகளின் தலைவர்களை மாவட்ட தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் – அண்ணாமலை அவர்களின் பட்டியலை வைத்து கட்சியில் பதவி உயர்வு வழங்கி கவுரவிக்க உதவியாக இருக்கும், அதனால் தான்!   தீட்சிதர்கள் நடத்திய குழந்தை திருமண படங்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்த்துள்ளன                 – செய்தி அதனால் என்ன? அவர்கள் கைலாயத்தில் இருந்து சிவ பெருமானோடு வந்த பூ தேவர்கள். இந்தியாவின் சட்டங்கள் அவர்களுக்கு பொருந்தாது, சந்தேகம் என்றால் ஆளுநரைக் கேட்டுக் கொள்ளுங்கள்.  

தமிழ்நாட்டு “ஆவினை” குஜராத் அமுல் விழுங்க சதித் திட்டம்

தமிழ்நாட்டு “ஆவினை” குஜராத் அமுல் விழுங்க சதித் திட்டம்

தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக ஆட்சி, தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஆவின் பால் நிறுவனத்தை சீர்குலைத்து – குஜராத் “அமுல்” பாலை விற்க சதித்திட்டம் தீட்டிவருகிறது. தமிழக முதல்வர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்.   ஆவினில் தயிர் பெயரை ‘தஹி’ என்று மாற்றுவதற்கு ‘நஹி’ என்று கூறி எதிர்ப்பு தெரிவித்ததால், புதிய வழியில் குஜராத்தின் அமுல் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேநேரத்தில், கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் அமுல் பால் (தூத்) தொழில் தொடங்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலை நீடித்தால் கிராம பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஊரக பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாநிலத்தில் உள்ள நுகர்வோர்களுக்கு சரியான விலையில் தரம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட பால் மற்றும் பால்...

சேலம் மாநில மாநாட்டுக்கு நிதி பங்களிப்பு வழங்கிய மாவட்டங்கள்

சேலம் மாநில மாநாட்டுக்கு நிதி பங்களிப்பு வழங்கிய மாவட்டங்கள்

ஈரோடு : ரூ.1,00,000 கோபி : ரூ.1,00,000 நாமக்கல் : ரூ.1,00,000 திருப்பூர்  : ரூ.50,000 தர்மபுரி : ரூ.50,000 கோவை : ரூ. 40,000 தஞ்சை மற்றும் திருச்சி : ரூ.50,000 மதுரை : ரூ. 25,000 மயிலாடுதுறை : ரூ. 25,000   பெரியார் முழக்கம் 25052023 இதழ்

“புரட்சிப் பெரியார் முழக்கம்” தோழர்களுக்கு வேண்டுகோள்

“புரட்சிப் பெரியார் முழக்கம்” தோழர்களுக்கு வேண்டுகோள்

“புரட்சிப் பெரியார் முழக்கம்” பொறுப்பாளராக கழகத் தோழர் அன்னூர் விஷ்ணு செயல்பட்டு வருகிறார். பெரியார் முழக்கம் தொடர்பாக தோழர்கள் கீழ்க்கண்ட அலைபேசி எண்ணுக்கு அவரைத் தொடர்புக் கொள்ளவும். அலைபேசி எண் : 8973341377 விடுதலை இராசேந்திரன் ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம் பெரியார் முழக்கம் 25052023 இதழ்

திலீபன் மீது கொலை வெறித் தாக்குதல் வேலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

திலீபன் மீது கொலை வெறித் தாக்குதல் வேலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

திலீபன் மீது காவலர்கள் முன்னிலையில் கொலை வெறித் தாக்குதல் நடத்திய ராமமூர்த்தி தலைமையிலான வன்முறை கும்பலை கைது செய்! திலீபன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறு! எனும் கோரிக்கைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் முன்பு 08.05.2023 திங்கள் காலை 10.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் பெரப்பேரி திலீபன், தன் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு எதிராக ஊர் கட்டுப்பாடு போட்டதை எதிர்த்து போராடியதற்காகவும், தன் கிராமத்தில் பொது வழிப் பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான ஆணையைப் பெற்று வந்தார். இந்நிலையில்...

சனாதனத்தின் கொடூர வரலாறு (2) கோயில் நுழைவு உரிமை சந்தித்தத் தடைகள்

சனாதனத்தின் கொடூர வரலாறு (2) கோயில் நுழைவு உரிமை சந்தித்தத் தடைகள்

பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொடங்கி சுதந்திர இந்தியாவில் சனாதனம் பேசி பார்ப்பனியம் எந்த ஒரு சிறு சமூக மாற்றத்தையும் தடுத்து வந்ததோடு நீதி மன்றங்களிலும் வழக்குத் தொடர்ந்தது. ஆண்டு வாரியாக சனாதனக் கொடுமைகள் அது தொடர்பான வழக்குகள் குறித்து ஒரு சுருக்கமான ஆண்டுகள் வழியான தொகுப்பு. மனோஜ் மிட்டல் எழுதி அண்மையில் வெளிவந்த மிகச்சிறந்த நூலான ஜாதியப் பெருமை (Caste Pride) நூலிலிருந்து: (சென்ற இதழ்த் தொடர்ச்சி) 1926 : மராட்டியப் பகுதிகளில் பிராமண அர்ச்சகர்கள் பரம்பரை அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்துக்கும் தங்களை அதிகாரபூர்வ அர்ச்சகர்களாக நியமித்துக் கொண்டனர். எந்த வைதீக சடங்குகளும் நடத்தும் உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று உரிமை கோரினார்கள். வெளியில் இருந்து ஒரு அர்ச்சகர் சடங்கு நடத்தி கட்டணம் வாங்கியதை எதிர்த்து நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தனர். பம்பாய் உயர் நீதிமன்றம் புரோகித பார்ப்பனர்கள் பரம்பரை உரிமையை உறுதி செய்து தீர்ப்பளித்து விட்டது. வைதீக சடங்குகள்...

ஹிட்லர் வழியில் பாஜக

ஹிட்லர் வழியில் பாஜக

பாரதிய ஜனதா கட்சி ஒரு வகுப்புவாத கட்சி என்பதற்கு சான்றாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் அருவா மாவட்டத்தில் மவுரியா நகரசபைத் தலைவராக இருக்கும் யஷ்பால் பேனா, இவர் தனது மகள் ஒரு இஸ்லாமியரை காதலித்தார் என்பதை ஏற்றுக் கொண்டு இருவருக்கும் திருமணம் செய்வதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து இம்மாதம் 28ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. குடும்ப நிகழ்ச்சியான  திருமணத்திற்கு அரசியல் கட்சியான பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது. உத்தரகாண்டில் இந்து அமைப்பினர் இந்தத் திருமணத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.  அதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாக தான் இருப்பதால் இந்தத் திருமணம் நடைபெறுவதை விரும்பவில்லை என்று கூறி தனது மகளின் திருமணத்தை ரத்து செய்து இருக்கிறார். பா.ஜ.க.வினர் அசைவம் சாப்பிடக் கூடாது; பா.ஜ.க.வினர் பிராமணனை வணங்க வேண்டும் என்றுகூட போராட்டம் நடத்தினாலும் வியப்பு இல்லை. திருமணம் என்பது தனிமனித உரிமையைச் சார்ந்தது.  இருவரும் காதலித்தார்கள்; இருவரும் திருமணம் செய்ய...

தலையங்கம் தோழர்களே, தயாராவீர்!

தலையங்கம் தோழர்களே, தயாராவீர்!

வைக்கம் போராட்டத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் “வைக்கம் போர் முடியவில்லை” எனும் தலைப்பில் ஜாதித் தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுக்க திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் சாக்கடை மலகுழிகளை சுத்தம் செய்யும் ஆபத்தான இழிவு வேலைகளுக்கு மனிதர்களைப் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. நச்சுக் காற்றில் சிக்கி பல தலித் தோழர்கள் உயிரிழக்கிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தி செயல்பட முன் வந்திருப்பதை நாம் பாராட்டி வரவேற்கிறோம். மனித கழிவுகளை மனிதர்கள் எடுப்பது சட்டப்படி தடை செய்யப்பட்ட நிலையில் இந்த அவலம் தமிழகத்தில் அதிகம் நடப்பதை முதல்வர் நேர்மையோடு ஒப்புக்கொண்டு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். முதல் கட்டமாக நகர பகுதிகளில் நவீன இயந்திரங்களை அடுத்த நான்கு மாத காலத்துக்குள் முழுமையாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இனிவரும் காலங்களில் மனிதர்கள் செய்யும்...

எழுச்சியுடன் நடந்த செயலவை

எழுச்சியுடன் நடந்த செயலவை

சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்டம் மே 21 காலை 10:30 மணியளவில் குகை ஜிபி கூடத்தில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் கோவிந்தராஜ் கடவுள் ஆத்மா மறுப்புகளைக் கூறத் தொடங்கியது. மாநகரச் செயலாளர் ஆனந்தி வரவேற்புரையாற்ற பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செயலவை நோக்கம் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன்மொழிந்தார் . 30 தோழர்கள் மாநாட்டின் வெற்றி, எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து கருத்துகளை முன் வைத்தனர். மாநாட்டின் வரவு செலவு கணக்குகளையும் அவையின் முன் வைத்தனர், புரட்சிப் பெரியார் முழக்கம் வரவு செலவுக் கணக்குகளை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செயலவையில் முன் வைத்தார். 85 தோழர்கள் செயலவையில் பங்கேற்றனர். மதியம் அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. காலை 10:30 மணிக்கு தொடங்கிய செயலவை உணவு இடைவேளையைத் தொடர்ந்து மாலை 6 மணி வரை நீடித்தது....

சேலம் மாவட்ட கழகத்திற்குப் பாராட்டு

சேலம் மாவட்ட கழகத்திற்குப் பாராட்டு

திராவிடம் – சனாதனத்தை விளக்கும் 1000 தெருமுனைக் கூட்டங்கள்: சேலத்தில் கூடிய கழக செயலவை முடிவுகள் ஜூன் 1 முதல் 30 வரை தீண்டாமையைப் பின்பற்றும் கிராமங்களின் பட்டியல் தயாரிப்பு சேலத்தில் கடந்த மே 21ஆம் தேதி சேலம் குகை ஜி.பி.கூடத்தில் நடந்த கழகச் செயலவைக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த தீர்மானங்கள். சேலம் மாவட்டக் கழகத்திற்குப் பாராட்டு : திராவிடர் விடுதலைக் கழகம் ஏப்ரல் 29, 30 தேதிகளில் சேலத்தில்  நடத்தி முடித்த மாநில மாநாடு மாபெரும் வெற்றியை ஈட்டி தந்துள்ளது. தேர்தல் அரசியல் சார்பற்ற பெரியார் இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்களும் ஆண்களும் இலட்சிய உறுதியோடு திரண்டு நின்ற காட்சி, கழகத்தை பலராலும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்த மாநாடு. பெரியாரியத்தை அடுத்த தலைமுறை வீரியத்தோடு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை  உறுதியாக்கி யிருப்பதோடு எதிரிகளுக்கு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது. இந்த பெரும்பணியை ஆர்வத்தோடு சுமப்பதற்கு...

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் எதிர்வரும் மே 21, 2023 காலை 10 மணியளவில் கழகச் செயலவைக் கூடுகிறது. பொருள் : மாநாடு பற்றிய ஆய்வு, எதிர்காலச் செயல் திட்டங்கள் மற்றும் மாநாடு வரவு செலவுகள் ஒப்படைத்தல். செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்துக் கொள்ள வேண்டுகிறோம். இடம் : ஜி.பி. ஹால், 52ஊ/1, பென்சன் லைன் ரோடு, குகை ஆண்கள் உயர்நிலைப் பள்ளி அருகில், சேலம், கொளத்தூர் மணி, தலைவர் விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர் பெரியார் முழக்கம் 18052023 இதழ்  

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் : கழகத் தலைவர் தலைமையில் நடந்தது

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் : கழகத் தலைவர் தலைமையில் நடந்தது

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 11.05.2023 வியாழன் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மேட்டூர் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் சேலத்தில் நடைபெற்ற இரண்டு நாள் மாநில மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மாநாட்டு வரவு செலவு கணக்குகளை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் ஆகியோர் மாநாடு குறித்தும், மாநாட்டிற்காக உழைத்த தோழர்களைப் பற்றியும், தோழர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் இந்த மாநாடு சிறக்க உதவியாக இருந்தது என்று தமது உரையில் குறிப்பிட்டனர். அதன் பிறகு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர, நகர, ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்களும், தோழர்களும், மாநாடு குறித்தும் மாநாட்டிற்காக தங்கள் பகுதியில் திரட்டிய நன்கொடை மற்றும் செலவு...

இளைஞர்களே, இதுதான் பார்ப்பனியம்! சனாதனத்தின் கொடூர வரலாறு

இளைஞர்களே, இதுதான் பார்ப்பனியம்! சனாதனத்தின் கொடூர வரலாறு

பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொடங்கி சுதந்திர இந்தியாவில் சனாதனம் பேசி பார்ப்பனியம் எந்த ஒரு சிறு சமூக மாற்றத்தையும் தடுத்து வந்ததோடு நீதி மன்றங்களிலும் வழக்குத் தொடர்ந்தது. ஆண்டு வாரியாக சனாதனக் கொடுமைகள் அது தொடர்பான வழக்குகள் குறித்து ஒரு சுருக்கமான ஆண்டுகள் வழியான தொகுப்பு. மனோஜ் மிட்டல் எழுதி அண்மையில் வெளிவந்த மிகச்சிறந்த நூலான ஜாதியப் பெருமை (ஊயளவந ஞசனைந) நூலிலிருந்து: 1795 :  உயர் ஜாதியினரிடம் நல்ல பெயர் வாங்கும் நோக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனி காசி பார்ப்பனர்களுக்கு மட்டும் தூக்கு தண்டனையிலிருந்து விதிவிலக்கு அளித்தது. 1816 : கீழ் ஜாதிக்காரர்கள் சிறு குற்றங்கள் செய்தாலும் அவர்களை ஆடு மாடுகள் அடைக்கும் பட்டிகளில் அடைத்து வைக்கும் தண்டனையைக் கிழக்கிந்திய கம்பெனி அறிமுகப்படுத்தியது. 1829 : உயர்ஜாதியினரின் கடும் எதிர்ப்பு களையும் மீறி வில்லியம் பென்ட்டிங் கணவன் இறந்த நெருப்பில் மனைவி தானாக விரும்பி வீழ்ந்தாலும் அல்லது கட்டாயப்படுத்தி நெருப்பில் தள்ளப்பட்டாலும்...

கொடைக்கானலில் ஆளுநருக்குக் கழகம் கருப்புக் கொடி

கொடைக்கானலில் ஆளுநருக்குக் கழகம் கருப்புக் கொடி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானலுக்கு வருகை தந்ததை ஒட்டி அவருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகச் செயல்படுவதையும், சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதைக் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டன. பின்னர் கழகத் தோழர்கள் மருதமூர்த்தி, பெரியார், மாக்சிம் கார்கி, ராஜா, கபாலி, ஆயுதன், வீரா, ஜீவா, துர்க்கைராஜ், சிவா, முருகன் உள்ளிட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுக்கப்பட்டனர். பெரியார் முழக்கம் 18052023 இதழ்

விடுதலை சிகப்பி மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்

விடுதலை சிகப்பி மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்

கவிஞர் விடுதலை சிகப்பி மீது சென்னை அபிராமபுரம் காவல்துறை பொய் வழக்கு ஒன்றை பதிவு செய்திருக்கிறது. அவர் இந்து கடவுள்களை அவமதித்து விட்டார் என்று பாரத் இந்து முன்னணி என்ற ஒரு அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவிஞர் விடுதலை சிகப்பி கவிதையில் மலக்குழியில் இறக்கிவிடப்பட்டு அன்றாடம் செத்து ஒழிவதற்கென்றே சில ஜாதிகளை கடவுள் தான் படைத்தார் என சொல்லப்பட்டால் அந்த கடவுள் ஒருநாள் இறங்கி இந்த வாழ்வு எவ்வளவு கொடியது என்பதை நேரடியாக உணரட்டும் என்ற ஆவேசத்துடன் அவர் எழுதிய கவிதை. தன்னுடைய கற்பனை சிந்தனைத் திறனை இராமன், இலட்சுமணன் மலக்குழியில் இறங்குவது போல் அவர் சித்தரித்தார். இது இந்து கடவுள்களைப் புண்படுத்திவிட்டது என்று ஓலமிடுகிறார்கள். சக மனிதனை ஜாதியின் பெயரால் இழி தொழில் செய்ய வைத்து மனித மலத்தை எடுக்கச் சொல்வதும், மலக்குழியில் இறங்கச் சொல்வதும் எவ்வளவு பெரிய சமூக அவமானம். எவ்வளவு பெரிய...

காங்கேயத்தில் நிர்வாண சாமியார்கள்: நடவடிக்கை எடுக்கக் கழகம் கோரிக்கை

காங்கேயத்தில் நிர்வாண சாமியார்கள்: நடவடிக்கை எடுக்கக் கழகம் கோரிக்கை

காங்கேயம் நகராட்சி அலுவலகத்திற்குள் நிர்வாண சாமி யார்களை அழைத்து வந்து ஆசி வாங்கியது தொடர்பாக ஆணையர், மாநகராட்சி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் இணைந்து கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மே 13, சனிக்கிழமை அன்று திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல்துறை ஆணையாளர் அவர்கள் விசாரணையின் அடிப்படையில் புகார் மனுவின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் முகில் ராசு, முகநூல் பொறுப்பாளர் பரிமள ராசன், சங்கீதா, இராமசாமி, மாரிமுத்து, ஆதித்தமிழர் பேரவை அவிநாசி மணி, தமிழ்மாறன், து.தலைவர் கு.ஜானகி, புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழமுதன், வேலு, மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு கார்மேகம் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 18052023 இதழ்

பா.ஜ.க. இல்லாத தென்னகம்

பா.ஜ.க. இல்லாத தென்னகம்

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்றிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி சந்தித்து இருக்கிறது. பாஜக செய்த வெறுப்பு அரசியலை மக்கள் ஆதரிக்க தயாராக இல்லை என்பதையே இந்த தேர்தல் நமக்கு உணர்த்துகிறது. கர்நாடக மாநிலத்திற்கு என்று சில தனித்த பண்புகள் உண்டு. அதை சமூக நீதி மாநிலமாக மாற்றி அமைத்த பெருமை தேவராஜ் அர்ஸ் என்பவரையே சாரும். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்தவர் தேவராஜ் அர்ஸ். தமிழ்நாட்டில் 69ரூ  இட ஒதுக்கீடு வருவதற்கு முன்பே கர்நாடகாவில் 71% இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய சமூக நீதிப் போராளி அவர்.  மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தவர் அவர். சென்னை சைதாப்பேட்டையில் திராவிடர் கழகம் நடத்திய மண்டல் கமிஷன் இயக்கத்திற்கு ஆதரவான மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியவர் தேவராஜ் அர்ஸ்.  சமூக நீதி மாநிலமாகத் திகழ்ந்த கர்நாடகாவில் பிற்காலத்தில்...

மக்களைக் குழப்பும் போலி அறிவியல்

மக்களைக் குழப்பும் போலி அறிவியல்

பெரியார் இயக்கம் என்பதே ஒரு அறிவியல் இயக்கம் தான். நாம் பேசாத அறிவியல் இல்லை. எனினும் இன்றைய சூழலில், போலி அறிவியலைப் பற்றியும் நாம் பேச வேண்டியுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முந்தைய சமுதாயத்தில், அறிவியல் பேசுபொருளாக இருக்கவில்லை. ஆனால் இன்று அறிவியல் பேசுபொருளாக உள்ளது. இதனால் நேர்மறை விளைவுகளும் உண்டு; எதிர்மறை விளைவுகளும் உண்டு. புதிய விஞ்ஞான கண்டு பிடிப்புகளால் நம் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றங்கள் நேர்மறையான விளைவுகளாகும். அதே வேளையில், மக்களிடம் இருக்கும் அறிவியல் சொற்கள் மீதான ஆர்வத்தை பயன்படுத்திக் கொண்டு, அச்சொற்களை வைத்தே பொய்யான தகவல்களை பரப்புவது, எதிர்மறையான விளைவாகும். இச்சூழ்நிலையே நம்மை போலி அறிவியலைப் பற்றி பேசத் தூண்டுகிறது. போலி அறிவியல் என்றால் என்ன? ஒரு பொய்யான மூடநம்பிக்கை கருத்து, அறிவியல் முலாம் பூசப்பட்டு, உண்மையைப் போல காட்டப்படும் போது, அது போலி அறிவியலாகிறது. (Pseudoscience). உதாரணமாக, சனீஸ்வரன் கோயிலை எடுத்துக் கொள்வோம். திருநள்ளாறு சனீஸ்வரன்...

கலிபோர்னியாவில் ஜாதிக்குத் தடை

கலிபோர்னியாவில் ஜாதிக்குத் தடை

அமெரிக்காவில் சீட்டில் நகரசபையைத் தொடர்ந்து – கலிபோர்னியா மாநிலத்திலும் ஜாதி ஒழிப்புத் தீர்மானம் நிறைவேறியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.  ஜாதிப் பாகுபாடுகளைத் தடை செய்கிறது அத் தீர்மானம். ஜாதிய நிகழ்வுகள் நடத்துவது அதில் பங்கேற்பது குற்றம் என்கிற தீர்மானம் 34 உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.  இந்த தீர்மானத்திற்கு ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவென்றால் இந்த மசோதாவை கலிபோர்னியாவின் செனட் சபையில் கொண்டு வந்தவர் ஆயிஷா மஹால் என்ற இஸ்லாமியப் பெண்.  கலிபோர்னியா மாகாண சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண்ணும் இவர்தான்.  இவர் ஆப்கான் – அமெரிக்க தம்பதிகளுக்குப் பிறந்தவர். இதற்காக முழு முயற்சிகளில் இறங்கி இந்த மசோதாவை ஒரு மாதத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தினார்.   செனட் சபையின் சட்ட ஆலோசனைக் குழு மசோதாவைப் பரிசீலித்து ஒப்புதல் தந்தது. ஜாதி, தீண்டாமையை எதிர்த்து அமெரிக்காவில் போராடிக் கொண்டிருக்கும்...

பொதுச் செயலாளர் விடுதலை  இராசேந்திரன் உரை மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளம் நமது தோழர்களின் உழைப்பு – அர்ப்பணிப்பு

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளம் நமது தோழர்களின் உழைப்பு – அர்ப்பணிப்பு

மாநாட்டில் நிறைவாக உறுதிமொழியைப் படிப்பதற்கு முன், கழகப் பொதுச் செயலாளர் நிகழ்த்திய சுருக்கமான உரை: இந்த மாநாட்டைப் பொறுத்த வரை மாநாடு அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இருக்கிற நமது தோழர்கள் ஆற்றிய பணி மிகப் பெரிய அளவிடற்கரியது; மதிப்புக்குரியது. குறிப்பாக கடைவீதிகளில் சாதாரண மக்களை சந்தித்து கடைவீதி வசூல் என்ற ஒரு இயக்கத்தைத் தொடங்கி இரண்டு மூன்று வாரங்களாக தோழர்கள் இதே பணியை செய்து மாநாட்டிற்கு நிதி திரட்டினார்கள். சுவர் எழுத்து விளம்பரங்களை செய்தனர், மாநாட்டுப் பணிகளில் தங்களை முழுமையாக மூழ்கடித்து, அர்ப்பணித்து  செயல்பட்டனர். இந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியடைவதற்கு அடித்தளமிட்டது, கழகச் செயல் வீரர்களின் கடுமையான உழைப்பு ஒன்று மட்டும்தான் என்பதை இந்த மாநாட்டின் வழியாக நாம் சொல்லியாக வேண்டும். சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் அந்த மாவட்ட கழகத் தோழர்கள் கடைவீதி வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள். தொடர்ச்சியாக மக்களை சந்தித்து சாதாரண மக்களிடம்,...

செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் போல் சேலம் மாநாட்டுத் தீர்மானங்களும் வெற்றி பெறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் போல் சேலம் மாநாட்டுத் தீர்மானங்களும் வெற்றி பெறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

கழக மாநில மாநாட்டில் (ஏப்.30) இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைஅமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையின் கடந்த இதழ் தொடர்ச்சி. பெரியாரின் தொண்டினை படம்பிடிக்கும் வரிகள்! தந்தை பெரியாரின் தொண்டினைப் பற்றி ஒருவர் எழுதியிருந்ததைப் படித்தேன். “அவரின் கையெழுத்து நன்றாக இருக்காது, ஆனால் நாம் அழகாக எழுதினோம். அவரின் பேச்சு கொச்சையாக இருந்தது, ஆனால் நாம் அழகுத் தமிழில் பேசினோம். அவர் பள்ளிக்கூடம் கூட தாண்டவில்லை, ஆனால் நாம் பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெற்றோம். அவர் உடை கைலியும் சட்டையுமாய் இருந்தது. ஆனால் நாம் கோட்சூட் அணிந்தோம். தந்தையே உன்னை போற்றுகிறோம், தலைநிமிர்ந்து வாழ்த்துகிறோம்.” பெரியாரையும் அவர் ஆற்றிய தொண்டினையும் சிறப்பாக படம்பிடிக்கும் வரிகள் இவை. ஒவ்வொரு கூட்டத்திலும் பேசத் தொடங்கும் போது, பெரியார் இப்படி சொல்கிறார். “என்னுடைய கருத்துக்களையும் என்னுடைய அனுபவங்களையும் உங்களுக்குச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. இதனைப் போன்றே, நான் சொல்லுகின்ற கருத்துக் களை சிந்தித்துப்...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம்  மாநாட்டு உரை நூலாக வெளி வந்து விட்டது

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் மாநாட்டு உரை நூலாக வெளி வந்து விட்டது

சேலம் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரை; சென்னையில் கழகம் நடத்திய தமிழர் திருநாள் விழாவில் நிகழ்த்திய உரைகளை இணைத்து “இது தமிழ்நாடு!” எனும் தலைப்பில் நூலாக கழகம் வெளியிட்டுள்ளது. கடந்த மே 7ஆம் தேதி திருவல்லிக்கேணி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி நூலையும் மாநாட்டு செய்திகள் அடங்கிய “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழையும் அமைச்சரிடம் நேரில் வழங்கினார். நூல் விலை : ரூ.30/- நூல் தேவைப்படுவோர் கழக தலைமை நிலையத்தை தொடர்பு கொள்ளவும். தொடர்பு எண் :  + 91 98416 53200 / +91 8973341377 பெரியார் முழக்கம் 11052023 இதழ்

தலையங்கம் எல்லை மீறாதீர், ஆளுநரே!

தலையங்கம் எல்லை மீறாதீர், ஆளுநரே!

மே 4 ஆம் தேதி வெளிவந்த கூiஅநள டிக ஐனேயை நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். வழக்கமான உளறல்கள் தான் இந்த பேட்டியிலும் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டை சீண்டி பார்த்திருக்கிறார். திராவிட மாடல் என்ற ஒன்று கிடையாது. அது காலாவதியான தத்துவம், விரக்தியான மனநிலையில் இருக்கிறவர்கள் அது நீடிக்க வேண்டும் என்பதற்காக தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நாம் “ஒரே பாரதம் ஒரே இந்தியா” என்ற கொள்கையின் கீழ் வாழ்கிறவர்கள், இதற்கு எதிரானது தான் திராவிட மாடல். அது காலாவதியாகிவிட்டது என்று அவர் பேசியிருக்கிறார். திராவிட மாடலுக்கு எதிராக உருவான சனாதன தர்மத்தைத் தான் தனது கொள்கை என்று இந்த பேட்டியில் உயர்த்துப் பிடிக்கிறார் ஆளுநர் ரவி. ஆக திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது, ஆரிய மாடலான சனாதனம் தான் நமக்கான அடையாளம் என்று பச்சையாக ஆரியப் பெருமை பேசுகிறார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “காலாவதியானது...

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!

சேலத்தில் எதிர்வரும் மே 21, 2023 காலை 10 மணியளவில் கழகச் செயலவைக் கூடுகிறது. பொருள் : மாநாடு பற்றிய ஆய்வு, எதிர்காலச் செயல் திட்டங்கள் மற்றும் மாநாடு வரவு செலவுகள் ஒப்படைத்தல். செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்துக் கொள்ள வேண்டுகிறோம். இடம் பின்னர் அறிவிக்கப்படும். கொளத்தூர் மணி, தலைவர் விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர்   பெரியார் முழக்கம் 11052023 இதழ்

மதவாத ஆட்சி அமைக்க மன்னராட்சி உருவாகும் ஆபத்து பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த உறுதி ஏற்போம்! ஜனநாயக சக்திகளுக்கு சேலம் மாநாடு அறைகூவல்

மதவாத ஆட்சி அமைக்க மன்னராட்சி உருவாகும் ஆபத்து பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த உறுதி ஏற்போம்! ஜனநாயக சக்திகளுக்கு சேலம் மாநாடு அறைகூவல்

இந்து இராஷ்டிரம் அமைக்க மன்னராட்சியை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் ஆபத்துகள் எதிர்நோக்கியுள்ள நிலையில் பா.ஜ.க. அணியை வீழ்த்த மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்று சேலத்தில் கூடிய (ஏப்.29, 30, 2023) திராவிடர் விடுதலைக் கழக மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. இது தமிழ்நாடு; இளம் தலைமுறை எச்சரிக்கை மாநாட்டுத் தீர்மானங்கள்: வேத மத ஆட்சியின் ஆபத்து : 1) தமிழ்நாட்டில்  நீண்டநெடுங்காலமாக பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதை, சமூகநீதி, பெண்ணுரிமைக் கொள்கைகளை சீர்குலைத்து வேத பார்ப்பனிய ஆட்சியை இந்துத்துவம் என்ற பெயரில் கொண்டுவர ஒன்றிய பாஜக ஆட்சி திட்டமிட்டு செயல்பட்டு வரும் நிலையில் அந்த ஆபத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் வேத பார்ப்பனியம் ஆட்சிக்கு வந்தால் நாம் அடிமையாகி படுகுழியில் தள்ளப்படுவோம் என்றும் நமது முன்னோர்கள் பெற்று தந்த தன்மான உணர்வை இழந்து கீழ் மக்கள் ஆகிவிடும் ஆபத்து உருவாகிவிடும் என்பதையும் இம்மாநாடு தமிழர்களுக்குச்...

மாநாட்டு மலர் வெளிவருகிறது

மாநாட்டு மலர் வெளிவருகிறது

சேலம் மாநாட்டில் கருத்தரங்கம், ஆய்வரங்கம், வரலாற்று அரங்கங்களில் கருத்தாளர்கள் நிகழ்த்திய உரைகள் முழுமையாக தொகுக்கப்பட்டு சேலம் மாநாட்டு மலராக விரைவில் வெளிவர இருக்கிறது. உரையாற்றிய கழகத் தோழர்கள் தங்களது உரையை எழுத்து வடிவில் விரைவாக அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் 04052023 இதழ்

சனாதனத்துக்கு தமிழ்நாட்டில் சவக்குழி!

சனாதனத்துக்கு தமிழ்நாட்டில் சவக்குழி!

மாநாட்டின் இறுதி நிகழ்வாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சனாதன எதிர்ப்பு உறுதி மொழியை வாசிக்க, தோழர்கள் உறுதி எடுத்தனர். உறுதி மொழி விவரம்: இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாட்டில் அந்த கொள்கை உணர்வோடும் இலட்சிய துடிப்போடும் ஆயிரக் கணக்கில் கூடியிருக்கிற இளைஞர் களாகிய நாங்கள் கீழ்கண்ட உறுதியினை ஏற்கிறோம். ஜாதியற்ற தமிழர்களாக வாழ்ந்த நமது சமூகத்தை ஆரியம் ஊடுருவி வர்ணாசிரம சனாதனத்தால் வீழ்த்தியது. 1916இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம், பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்து உருவான திராவிடர் கழகம் தொடர்ந்து வந்த திராவிட ஆட்சிகள் ஆகியவற்றின் உழைப்பால் திராவிடர் என்ற பெருமையோடு நாம் தலை நிமிர்ந்தோம். பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுத்து நம்மை இழிமக்களாக்கிய ஆரிய சனாதனத்திற்கு எதிரானது எங்கள் திராவிடம். ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான சமத்துவம் சம நீதியே எங்கள் திராவிடம். ஆனால் சனாதன ஒன்றிய ஆட்சி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சமத்துவத்தை...

அரசியலில் பங்கேற்காத இந்த இயக்கத்தை நோக்கி திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தைப் பார்த்து வியக்கிறேன் – மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்

அரசியலில் பங்கேற்காத இந்த இயக்கத்தை நோக்கி திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தைப் பார்த்து வியக்கிறேன் – மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்

  சனாதனத்தை வேரறுப்போம், வெறுப்பு அரசியலை வீழ்த்துவோம், மாநில உரிமைகளைக் காப்போம் என்ற முழக்கங்களோடு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநில மாநாட்டில்” கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமையடை கிறேன். இந்த இரண்டு நாள் மாநாடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு முன்னணி பேச்சாளர்கள் எல்லாம் பங்கேற்று கருத்துரை வழங்கியிருக்கிறார்கள். இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி இருக்கக்கூடிய அண்ணன் கொளத்தூர் மணி அவர்களுக்கும் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திவிகவுடன் எனக்கு நெருக்கம் குறிப்பாக இந்த மேடையில் நம்முடைய கொள்கையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிற ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இளைஞர்களுக்கு நம்முடைய கருத்துக்களை கொள்கைகளை விளக்கக்கூடிய ஒரு முயற்சியாக திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் சார்பாக நடந்த “திராவிட மாடல் பயிற்சிப் பாசறை” கடந்த ஆறு மாதங்களில் “திராவிட இயக்க வரலாறு”,...

சுயமரியாதை எங்கள் அடையாளம்  சனாதனம் எமக்கு அவமானம்

சுயமரியாதை எங்கள் அடையாளம் சனாதனம் எமக்கு அவமானம்

திராவிடர் விடுதலை கழகம் நடத்திய சனாதனத்துக்கு எச்சரிக்கை விடும் இளைஞர் மாநாட்டிலிருந்து (ஏப்ரல் 29, 30 – 2023) சில செய்தித் துளிகள் : மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார், தேர்தல் களத்தில் தனது வெற்றிக்கு வாக்காளர்களிடம் வாக்குகளைச் சேகரித்த கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு நன்றி கூறியதோடு தன்னுடைய அரசியல் கட்சி திமுக என்றாலும் சமுதாய அமைப்பு – திராவிடர் விடுதலைக் கழகம் தான் என்று பெருமையுடன் குறிப்பிட்டார். சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பயிற்சி முகாம்களில் ‘உயிர் தோற்றம்’ குறித்து தாம் பேசியதையும் தனது தேர்தல் வெற்றிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கடுமையாக உழைத்ததை யும் நினைவு கூர்ந்தார். மேடையில் அமைக்கப்பட்ட பதாகையில் ‘சுயமரியாதை எங்கள் அடையாளம்; சனாதனம் எமக்கு அவமானம்’ என்று ஒரு பக்கத்திலும். ‘பன்முகத் தன்மையை சிதைக்காதே; ஒற்றைப்...

சனாதன சக்திகளுக்கு எச்சரிக்கை வரலாறு படைத்தது சேலம் மாநாடு  ஆர்ப்பரித்து அணிவகுத்த கருஞ்சட்டைகள்  வைக்கம் போராட்டம் முடியவில்லை

சனாதன சக்திகளுக்கு எச்சரிக்கை வரலாறு படைத்தது சேலம் மாநாடு ஆர்ப்பரித்து அணிவகுத்த கருஞ்சட்டைகள் வைக்கம் போராட்டம் முடியவில்லை

வைக்கம் நூற்றாண்டையொட்டி வைக்கம் போராட்டம் முடியவில்லை எனும் தலைப்பில் ஜாதி – தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்க கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்தவெளி மாநாட்டில் முன்மொழிந்த தீர்மானம் வைக்கம் போராட்டம் முடிந்து 100 ஆண்டுகள்உருண்டோடிவிட்டன. வைக்கத்தில் மகாதேவன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தீண்டப்படாத மக்கள் நடமாடும் உரிமைக்காகத் தொடங்கிய போராட்டம் ஒரு வருடம் 7 மாதங்கள் நீடித்தது. பிற்காலத்தில் கோயில் நுழைவு உரிமைக்கும் வழிவகுத்த இந்தப் போராட்டத்தை பெரியார், டி.கே. மாதவன் உள்ளிட்ட தலைவர்கள் வழி நடத்தினார்கள்.  போராட்டத்தில் பங்கேற்றதற்காக கிரிமினல் சட்டப் பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டு இரண்டு முறை சிறை ஏகி கடுங்காவல் தண்டனைக்கு உள்ளாகிய ஒரே தலைவர் பெரியார்தான். வைக்கம் வீதிகளில் நடமாடும் உரிமை கிடைத்தாலும் நாடு முழுதும் வைக்கங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வளர்ச்சிப் பாதையில் வழிகாட்டும் தமிழ்நாட்டில் கிராமங்களில் ஜாதி தீண்டாமைக் கொடுமைகள் நீடிக்கவே செய்கின்றன. ஜாதிய...

12 மணி நேர வேலை சட்டம்; அரசு திரும்பப் பெற வேண்டும்

12 மணி நேர வேலை சட்டம்; அரசு திரும்பப் பெற வேண்டும்

1948ஆம் ஆண்டு இயற்றபட்ட தொழிற்சாலை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. தொழிலாளர் களின் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தி அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த சட்டத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தரும் விளக்கம் ஏற்றுக் கொள்வதாக இல்லை. பல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்போது இப்படி கடநஒiடெந hடிரசள என்ற ஒரு சட்ட திருத்தத்தை அவர்கள் கோருகின்றனர். அதற்காகவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது, தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை, அவர்கள் விரும்பினால் வேலை செய்யலாம் என்று ஒரு விளக்கத்தை அவர் வழங்கியிருக்கிறார். முதலாளிகளிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அவர்கள் தொழிலாளிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதில்...