Category: திவிக

இரண்டாம் கட்ட மாணவர் சந்திப்பு ஈரோடு 07012018

இரண்டாம் கட்ட மாணவர் சந்திப்பு… நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் சார்பில், ஈரோட்டில் பெரியார் JCB என்ற இடத்தில் இன்று(07.01.2018) காலை 11 மணிக்கு தோழர் இனியவன் தலைமை வகிக்க, தோழர் ரத்தினசாமி(மாநில அமைப்புச் செயலாளர்) முன்னிலையில், மாணவர்கள் கலந்துரையாடல் தொடங்கியது. நிகழ்விற்கு, வெப்படை, பூந்துறை, மல்லசமுத்திரம், சென்னிமலை, திருச்செங்கோடு போன்ற பகுதிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில், புதிய மாணவர்கள் கலந்து கொண்டதால், மாணவர்களின் சமகால ப்ரச்சனைகளான, நீட் தேர்வு, TNPSC-ன் தமிழக மாணவர்களுக்கு எதிரான அறிவிப்பு, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உதவித்தொகை குறைப்பு போன்றவைகளைப் பற்றி  தோழர் ரத்தினசாமி(மாநில அமைப்புச் செயலாளர்), தோழர் வைரவேல்(நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்), தோழர் வேனுகோபால்(ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர்) ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். அதன்பின், மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், முதல் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்நிகழ்விலும் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவதாக ஈரோடு மண்டலம் சார்பாக ஈரோட்டில் மாணவர்கள் மாநாடு நடத்துவது, என்ற...

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெண்கள் சுயமரியாதை மாநாட்டின் வரவு -செலவுகள்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெண்கள் சுயமரியாதை மாநாட்டின் வரவு -செலவுகள் மொத்த நன்கொடை வசூல்=225323  செலவுகள் காஞ்சி மக்கள் மன்றம் வகையில் 33000 மேடை ஒலிபெருக்கி 19500 டீசல் 2000 துண்டறிக்கை சுவரொட்டி. 8650 உணவு. 12300 மாநாட்டு அழைப்பாளர்களுக்கான போக்குவரத்து மற்றும் தங்கும் விடுதி செலவு 26600 நாற்காலி 3440 சுவர் விளம்பரம் 25000 பதாகைகள் 22500 நாட்காட்டி 1400 நன்கொடை ரசீது 1200 திருமண மாலை 200 வெளியூர் தோழர்கள் தங்க வீட்டு வாடகை 2000 வசூல் குழு  மற்றும் உணவு செலவு 8740.    போட்டோ-வீடுயோ 5000 இதர செலவுகள் 1360 கழக இதழ்களான நிமிர்வோம், புரட்சிப் பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக..40000 மாவட்ட வளர்ச்சி நதியாக 12433 ஆக மொத்தம் 225323      —————————–  ஈரோடு தெற்கு மாவட்டத்தில் நடைபெற்ற பெண்கள் சுயமரியாதை மாநாடு சிறக்க நன்கொடை அளித்து உதவியவர்களின் பட்டியல் கமலக்கண்ணன்...

பெரியார் நினைவுநாள் கோவை 24122017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியாரின் 44வது நினைவுநாள் மிகச்சிறப்பாக மாவட்ட தலைவர் நேருதாசு தலைமையில் மாலையிட்டு, பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நன்றி உணர்வுடன்  முழக்கமிட்டு மாணவர் கழக பொறுப்பாளர் தோழர் வைதீஸ்வரி உறுதிமொழியை முன்மொழிய அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். உடன் விடுதலை சிறுத்தைகள் தோழர்கள் இணைந்து நினைவுநாள் நிகழ்வு நடந்தது..         – கோவை திவிக.

சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் உருவ படத்தை நீக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் 04012018

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் உருவ படத்தை நீக்கியதை கண்டித்தும் பட்டு நகரம்பேரறிஞர் அண்ணா படத்தை தவிர்த்தும் மற்ற மத அடையாளங்கள் இடம் பெறாமல் ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி வரைந்த படங்களை அகற்றிய காஞ்சி மக்கள் மன்ற தோழர்களை கைது செய்த காவல்துறையை கண்டித்தும், வழக்குகளை திரும்ப பெற கோரியும் திராவிடர் விடுதலைக்கழக காஞ்சி மாவட்டம் சார்பாக 4/1/18 அன்று பெரியார் தூண் காஞ்சிபுரம் அருகே நடைப்பெற்றது காஞ்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரவிபாரதி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி, தலைமை கழக உறுப்பினர் தோழர் அய்யனார், வேலூர் மாவட்டம் பா சிவா மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறை சென்ற மீண்ட காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் நால்வருக்கும் கறுப்பாடை அணிவித்து...

திருப்பூரில், தமிழ்நாடு மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் ! 01012018

திருப்பூரில், தமிழ்நாடு மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் ! தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக திருப்பூர் பகுதி பொறுப்பாளர் தோழர் கனல்மதி அவர்கள் வீட்டில் 01.01.2018 அன்று காலை 11.00 மணிக்கு தொடங்கி 2.30 மணிவரை கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழக மாணவர்களின் வேலை வாய்ப்பு உரிமையை பறிக்கின்ற வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நுழைவுத் தேர்வு சட்டத்தை கல்லூரி மாணவன்களுக்கு விளக்கும் வகையில் துண்டறிக்கை பரப்புரை செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தோழர்கள் தேன்மொழி,கனல்மதி, வைதீஸ்வரி,சபரி,விவேக் சமரன்,எழில்அரசி, மதுலதா,பிரசாந்த்,சுவேதா,மோகன்ராஜ்,பிரசாந்த், பாண்டிச்செல்வி,பிரபா,உகஸ்ரீ,முகிலன்,சுதன்,ராகுல் உள்ளிட்ட தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் சிவகாமி,தோழர் முகில்ராசு, தோழர் மணிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட புதிய தோழர்கள் ஆர்த்தி,வினேத் இணையர் மதிய உணவு ஏற்பாட்டை செய்திருந்தனர்.

தந்தை பெரியார் நினைவு நாள் – ஈரோடு வடக்கு மாவட்டம் 24122017

தந்தை பெரியார் நினைவு நாள் – ஈரோடு வடக்கு மாவட்டம். தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு 24.12.2017 அன்று காலை ஈரோடு வடக்கு மாவட்டம் கழகத்தின் சார்பில் கோபி பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு அறிவியல் மன்ற தோழர் கற்பகம் மற்றும் மணிமொழி ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்வில் மாநில வெளியீட்டு செயலர் இராம.இளங்கோவன்,நிவாஸ்,அருளானந்தம், சுப்பிரமணி,ரகுநாதன் மற்றும் அறிவியல் மன்ற தோழர்கள் ஆசைத்தம்பி, விசயசங்கர் மாணவர் கழக தோழர் அறிவுமதி,பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட பொறுப்பாளர்கள் யுவராஜ், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்

நிமிர்வோம் வாசகர் வட்டம் – சென்னை 31122017

நிமிர்வோம் வாசகர் வட்டம் – சென்னை. திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாத இதழான “நிமிர்வோம்” இதழை குறித்து வாசகர் வட்டம் 31.12.2017 அன்று மாலை 6 மணிக்கு தலைமைக் குழு உறுப்பினர் தோழர்.ந.அய்யனார் அவர்கள் தலைமையில் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டத்தினை தோழர்.வே.இராமசாமி ஒருங்கிணைத்தார். இந்த வாசகர் வட்டத்தின் பிப்ரவரி மற்றும் மார்ச் 2017 இதழைக் குறித்து விவாதிக்கப்பட்டது. வாசகர் வட்டத்தில் இதழைக் குறித்து தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், பிரகாஷ், மதன்குமார், வே.இராமசாமி போன்ற தோழர்கள் இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை குறித்து தங்களது பார்வையும், கருத்துகளையும் எடுத்துரைத்தனர். வாசகர் வட்டத்தில் சிறப்புரையாற்ற தோழர்.க.காமராசன் அவர்கள் “வால்கோவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை குறித்து தன் ஆழமான கருத்துகளையும், நூலின் சிறப்புகளை குறித்து தோழர்களிடம் தெளிவான விளக்கத்தை கொடுத்தார். இறுதியாக, தோழர்.மா.தேன்ராஜ் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

வேலூரில் “தலைநிமிர்ந்தோம் இவர்களால்” பொதுக்கூட்டம் ! 24122017

வேலூரில் “தலைநிமிர்ந்தோம் இவர்களால்” பொதுக்கூட்டம் ! 24.12.2017 மாலை வேலூரில் காஞ்சி மக்கள் மன்றம் சார்பாக “தலைநிமிர்ந்தோம் இவர்களால்” என்ற தலைப்பில் தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு வேலூர் மாவட்டத்தை சார்ந்த தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் மக்கள் மன்றம் ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் SDPI, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆவணப்பட இயக்குனர் போன்றவர்களுடன் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் பொதுக் கூட்டத்தில் பெரியாரின் நினைவு நாளை நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார்.

நீட் எதிர்ப்புக் கருத்தரங்கத்தினிடையில் ஒரு வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு ! மதுரை 23122017

நீட் எதிர்ப்புக் கருத்தரங்கத்தினிடையில் ஒரு வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு ! 23-12-2017 வெள்ளிக் கிழமை, மதுரை,இராமசுப்பு அரங்கில் நடைபெற்ற நீட் எதிர்ப்புக் கருத்தரங்கத்தினிடையில் ஒரு வாழ்க்கை இணையேற்பு நிகழ்வும் நடந்தேறியது. சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், செட்டியூரைச் சேர்ந்த இராசேந்திரன் – இராசாமணி இணையரின் மகன் பூபதிதாசுக்கும், கவலாண்டியூர் சம்பத் – இராஜேஸ்வரி இணையரின் மகள் தாரணிக்கும், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் மீ.த.பாண்டியன் உறுதிமொழிகள் கூறி, வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்தார். மணமக்கள் மணவிழா மகிழ்வாக பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.10,000/= (பத்தாயிரம்) வழங்கினர்.

நீட் எதிர்ப்புக் கருத்தரங்கம் – மதுரை 23122017

23-12-2017 வெள்ளிக் கிழமை, மாலை 6-00 மணியளவில், மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள இராமசுப்பு அரங்கத்தில், மதுரை மாவட்ட நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாக நீட் எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் அரங்கமாய் நடைபெற்றக் கல்வியாளர் அரங்கம், நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின், ஒருங்கிணைப்பாளர் தோழர் ரபீக் ராஜா (இளந்தமிழகம்) தலைமை வகித்தார். குடியாத்தம் அரசுக் கலைக் கல்லூரி, முன்னாள் முதல்வரும், கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமாகிய முனைவர் ப.சிவக்குமார், மதுரைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு – புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் செயலாளருமாகிய முனைவர் முரளி, கல்வியாளர் பர்வதவர்த்தினி ஆகியோர் உரையாற்றினர். அடுத்து நடைபெற்ற அரசியல் அரங்கிற்கு, தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் முகிலரசன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனியமுதன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம். செரீப், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் மீ.த....

‘சுயமரியாதை சுடரொளி’ பொறிஞர்  அம்புரோசு நினைவேந்தல் கூட்டம்

‘சுயமரியாதை சுடரொளி’ பொறிஞர் அம்புரோசு நினைவேந்தல் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, 2017 அக்டோபர் 26ஆம் நாள் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் கடந்த 2017 டிசம்பர் 17ஆம் நாள் தூத்துக்குடி மூவிபுரம் முத்து மகாலில் நினை வேந்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கோ.அ.குமார் தலைமை வகித்தார். ஆழ்வை ஒன்றியத் தலைவர் நாத்திகம் பா.முருகேசன், தூத்துக்குடி வே.பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறைந்த சுயமரியாதை சுடரொளி பொறிஞர் சி. அம்புரோசு நினைவலைகளை, கழகத் தோழர்கள் செ. செல்லத்துரை, ச.கா. பாலசுப்பிரமணியன், குமரி மாவட்ட அமைப்பாளர் சேவியர் (எ) தமிழரசன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சு. அன்பரசு, கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் குறும்பை மாசிலாமணி, தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் கண்ணதாசன், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் ச. தமிழன், சட்டக் கல்லூரி மாணவர் அர்ஜூன், எஸ்.டி.பி.அய். கட்சி மாவட்டப் பொருளாளர்...

சேலத்தில் கழக செயலவைக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 29.12.2017 அன்று சேலம் விஜயராகவாச்சாரியார் அரங்கில் பகல் 11.30 மணியளவில் தொடங்கியது. வரவேற்புரை –  கோவிந்தராஜ், கடவுள் மறுப்பு – ஈரோடு மணிமேகலை. உரை நிகழ்த்தியோர்: ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) , வீ. சிவகாமி (த.நா. அறிவியல் மன்றம்), பாரி சிவகுமார் (தமிழ்நாடு மாணவர் கழகம்), விஜயகுமார் (இணையதள பொறுப்பாளர்), பரிமளராசன் (முகநூல் பொறுப்பாளர்), இராம. இளங்கோவன் (வெளியீட்டு செயலாளர்), தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் சக்திவேல் (மேட்டூர்), பன்னீர் செல்வம் (சூலூர்), அய்யனார் (சென்னை), உமாபதி (சென்னை), மணிமேகலை, சண்முகப்பிரியன், சூரியக்குமார், நாத்திகஜோதி, சாமிநாதன், முத்துப்பாண்டி, முகில் ராசு, நீதியரசன், பாரதிதாசன், செந்தில் (விருதுநகர்), காமாட்சிபாண்டியன் (மதுரை), மருதமுத்து, அன்பு (நாகை), தாமோதரன் (பெரம்பலூர்), இளையரசன் (விழுப்புரம்),  கிருஷ்ணன் (கிருஷ்ணகிரி), இரத்தினசாமி, வேழவேந்தன், செந்தில், டேவிட் (சேலம் கிழக்கு), வேணுகோபால் (பவானி), துரைசாமி (பொருளாளர்), மோகன் (மடத்துக்குளம்),...

பெரியார் 44ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம் கிருஷ்ணராயபுரம் 06012018

6-1-2018 சனிக்கிழமை மாலை 6-00 மணியளவில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், கோவக்குளத்தில் பெரியாரின் 44ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம், பேரூர்க் கழக ம.தி.மு.க. மாணவரணியின் ஏற்பாட்டில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு கரூர் மாவட்ட ம.தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் பொறியாளர் காமராஜ் தலைமையேற்றார். தமது தலைமை உரையில் பெரியாரைப் பின்பற்றவேண்டிய தேவைகளை விளக்கியதோடு.கோவக்குளத்தில் பெரியாரின் நினைவு நாளன்று நிறுவப்பட்ட பெரியாரின் மார்பளவு சிலை வருவாய், காவல்துறையால் அகற்றச் செய்யப்பட்டதை எடுத்துரைத்ததோடு, அடுத்த பெரியார் நினைவு நாளுக்குள் அச்சிலை உரிய அனுமதியோடு நிறுவப்படும் என்பதை உறுதிபட எடுத்துரைத்தார். மாவட்ட ம.தி.மு.க.விவசாய அணித் துணைச்செயலாளர் மரு.முத்து வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் ம.தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், கரூர் பகுத்தறிவு மன்றத் தலைவர் வழக்குரைஞர் குடியரசு, த.பெ.தி.க. மாவட்டத் தலைவர் கு.கி.தனபால், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முல்லையரசு, தி.மு.க. பேரூர்க் கழக செயலாளர் எம்.மகாலிங்கம் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி...

கோவையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு வரவேற்பு

கோவையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு வரவேற்பு

27.12.2017 காலை கோவை வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற் பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட பெரியார் இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி மற்றும் கழகத்தோழர்கள் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 04012018 இதழ்

கோவையில், நூல் வெளியீட்டு விழா

கோவையில், நூல் வெளியீட்டு விழா

“இருட்டினில் வாழும் வெளிச்சங்கள்” நூல் வெளியீட்டு நிகழ்வு 27.12.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் கோவை  அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது.  த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் நூலை வெளியிட, கழகத் தலைவர் கொளத்தூர் மணிநூலை பெற்றுக்கொண்டார்.  தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 04012018 இதழ்

சேலம் தீர்மானம் எதிரொலி: களப்பணியைத் தொடங்கினர் நாமக்கல், ஈரோடு கழக மாணவர்கள்

சேலம் தீர்மானம் எதிரொலி: களப்பணியைத் தொடங்கினர் நாமக்கல், ஈரோடு கழக மாணவர்கள்

ஈரோட்டில் டிசம்பர் 16 ஆம் தேதி கூடிய தலைமைக் குழு தீர்மானங்களை செயல்படுத்த உடனடியாக களமிறங்கினர். நாமக்கல் ஈரோடு மாவட்டக் கழகத் தோழர்கள், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் சார்பில்  மாணவர்கள் சந்திப்பு, திருச்செங்கோடு பெரியார் மன்றத்தில் 31.12.2017 அன்று காலை 11:30 மணிக்கு தொடங் கியது. நிகழ்வில், ராசிபுரம், மல்லசமுத்திரம், பவானி, திருச்செங்கோடு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். மனோஜ் தலைமை வகிக்க, தோழர்கள் வே.ஜீவிதா மற்றும் நித்யா முன்னிலை வகிக்க மாணவர்கள் கலந்துரையாடல் தொடங்கியது. மாணவர்களிடையே, நீட், தமிழ்நாடு தேர்வாணையத்தின் தமிழர் விரோத போக்கு, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை குறைப்பு போன்றவைகளைப் பற்றி விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்து கொண்ட புதிய மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். கலந்துரையாடலுக்குப் பின்,  சமூக வலைதளங்களில் மாணவர்கள் பிரச்சனைகளை பரப்புதல், கல்லூரி நுழைவாயிலில் காலை நேரங்களில் (வாய்ப்பைப் பொறுத்து) துண்டறிக்கைகளை கொடுத்தல், துறை சார்ந்த மாணவர்களின் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு துண்டறிக்கைகளை...

சேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவுகள்

மாணவர்களிடையே விழிப்புணர்வு இயக்கம் சமூக நீதி மறுக்கப்பட்டு, கல்வி வேலை வாய்ப்புகளை இழந்து, இருண்ட எதிர்காலம் நோக்கிச் செல்லும் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களிடையே விழிப்புணர்வை ஊட்டி, அவர்களின் உரிமைப் போராட்டத்துக்கு தயார் செய்யும் பரப்புரை இயக்கங்களைத் தொடங்க சேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவு செய்தது. கல்லூரிகள் மாணவர் விடுதிகளில் இந்த ஆபத்துகளை ஆதாரங்களோடு விளக்கும் வெளியீடு, துண்டறிக்கைகளை தயார் செய்து, மாணவர்களிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மாணவர் கழகத்தின் இந்த செயல் திட்டத்துக்கு கழகப் பொறுப் பாளர்கள் முழுமையாக அனைத்து உதவிகளை யும் வழங்குவது எனவும் தலைமைக்குழு முடிவு செய்தது. 29122017 வெள்ளியன்று, சேலம் விஜய ராகவாச்சாரி அரங்கில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகச் செயலவையில் இயற்றப் பட்டத் தீர்மானங்கள். சமூக நீதிக் கொள்கைகளால், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டிய தமிழ்நாடு இன்று மோசமான நிலையில் பின்னடைந்து, தமிழக இளைஞர்களின் எதிர் காலத்தையே...

திவிக செயலவை தீர்மானம் சேலம் 29122017

29122017 வெள்ளியன்று, சேலம் விஜயராகவாச்சாரி அரங்கில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகச் செயலவையில் இயற்றப்பட்டத் தீர்மானங்கள் தீர்மானம் 1 சமூக நீதிக் கொள்கைகளால், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டிய தமிழ்நாடு இன்று மோசமான நிலையில் பின்னடைந்து, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம், இந்தியா சராசரியைவிட அதிகமாகிவிட்டது என்றும், வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படாததே காரணம் என்றும் கூறியுள்ளது இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், மாநில அரசுப் பணி நியமனங்களுக்கு, இந்தியாவின் அனைத்து மாநிலத்தினரும், நேபாளம், பூட்டான் நாட்டவரும், வெளிநாடுகள் பலவற்றிலிருந்து நிரந்தரமாக குடியமரும் நோக்குடன் இந்தியா வந்துள்ளோரும் – தமிழ்மொழி தெரியாதோரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பிற மாநிலத்தவர்களுக்கு பணி...

தோழர் ஆ.ராசா அவர்களுக்கு வரவேற்பு ! கோவை 27122017

தோழர் ஆ.ராசா அவர்களுக்கு வரவேற்பு ! இன்று 27.12.2017 காலை கோவை வந்த தோழர் ஆ.ராசா அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி,த.பெ.தி.க. பொதுச் செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட பெரியார் தொண்டர்கள் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர்.

இருட்டினில் வாழும் வெளிச்சங்கள் நூல் வெளியீட்டு விழா 27122017 கோவை

கோவையில், நூல் வெளியீட்டு விழா ! ”இருட்டினில் வாழும் வெளிச்சங்கள்” நூல். கழகத்தலைவர் கலந்து கொண்டு நூலைப்பெற்றுக்கொண்டு உரையாற்றினார். நாள் : 27.12.2017.புதன் கிழமை. நேரம் : காலை 10.00 மணி. இடம் : அண்ணாமலை அரங்கம்,சாந்தி திரையரங்கம் அருகில்,கோவை. நூல் வெளியிட்டவர் : தோழர் கோவை கு.ராமகிருட்டிணன், பொதுச்செயலாளர். த.பெ.தி.க. மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கனார்கள்      

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….டிசம்பர் 2017

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் “டிசம்பர் 2017” மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 📝 திராவிட இயக்கம் அரசியலுக்குப் போயிருக்க கூடாது…. கவிக்கொண்டல் “மா.செங்குட்டுவன்” 🗿 கற்பிதங்களை கட்டுடைத்த “அவ்வை” 📚 பெரியார் எதிர்த்த “ஆண்மை”யும்” “கேட்டர்” பில்லர் நாயகியும்… 📑 பார்ப்பனிய அதிகாரப் பிடியில் மத்திய அரசு… 📃 “வருணமும் – சாதியும்”… இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰 ஆண்டு சந்தா – ₹ 240/- 💰 இதழ் விலை – ₹ 20/- திராவிடர் விடுதலைக் கழகம்- தொடர்புக்கு : 7299230363 (தோழர்.இரா.உமாபதி)

பெரியார் நினைவு நாள் குமரி 24122017

தந்தை பெரியார்-ன் 44-வது,நினைவு நாளை முன்னிட்டு,திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம். சார்பாக 24-12-2017 ஞாயிறு காலை 9.00மணிக்கு தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.தோழர்.நீதிஅரசர்(பெ.தொ.க தலைவர்)  தலைமைதாங்கினார். தோழர்.கேரளாபுரம் முருகன்(விடுதலை சிறுத்தைகள் கட்சி,நில மீட்பு இயக்கம்.மாநில துணைச் செயலாளர்)சத்தியதாஸ் (வி.சி.க,நி.மீ.இ,குமரி மே.மா.செயலாளர்)ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தோழர்.போஸ்(மார்க்சிய சிந்தனைமய்யம்,குமரி மாவட்டம்)பிரசாத்(தீண்டாமை ஒழிப்பு முன்னனி)செல்வி மேரி(பெ.தொ.க.)மற்றும் கழகத் தோழர்கள் அனீஸ்,விஸ்ணு,மஞ்சு குமார் ,இராஜேஸ் குமார்.ஆகியோர் கலந்துக்கொண்டு வீரவணக்க முழக்கங்கள் முழங்கினர்.

பெரியார் நினைவு நாள் சேலம் மேற்கு 24122017

24.12.17 இன்று காலை 9.30 மணி யளவில் சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பிபில் கோனூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். பின்னர் 11.00 மணியளவில் மேட்டூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் மாவட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் கு.சூரியகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வரும் செயலவைக் கூட்டத்தில் கழக வளர்ச்சி நிதி அளிப்பது, பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்களுக்கு சந்தா ஒப்படைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேட்டுர் நகர செயலாளர் தோழர் சுரேசுகுமார் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.

மதுரையில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் மணவிழாவோடு நடந்தது

மதுரையில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் மணவிழாவோடு நடந்தது

23-12-2017  வெள்ளிக் கிழமை, மாலை 6-00 மணியளவில், மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள இராமசுப்பு அரங்கத்தில், மதுரை மாவட்ட நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாக நீட் எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் அரங்கமாய் நடைபெற்றக் கல்வியாளர் அரங்கத்திற்கு நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின், ஒருங்கிணைப்பாளர் ரபீக் ராஜா (இளந்தமிழகம்) தலைமை வகித்தார். குடியாத்தம் அரசுக் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வரும், கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமாகிய முனைவர் ப.சிவக்குமார், மதுரைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு – புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளருமாகிய முனைவர் முரளி, கல்வியாளர் பர்வதவர்த்தினி ஆகியோர் உரையாற்றினர். அடுத்து நடைபெற்ற அரசியல் அரங்கிற்கு, தமிழ்ப்புலிகள் கட்சியின் முகிலரசன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம். செரீப், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் மீ.த....

கழகம் எடுத்த பெரியார் நினைவு நாள்

பேராவூரணி : பேராவூரணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திரு வேங்கடம் தலைமையில் ஒன்றியப் பொறுப்பாளர் சீனி. கண்ணன், தமிழக மக்கள் புரட்சிக் கழக பரப்புரைச்  செயலாளர் ஆறு நீலகண்டன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மெய்ச்சுடர் நா.வெங் கடேசன், த.ம.பு.க. இரா மதியழகன், ஆயில் மதியழகன், தி.வி.க நகர அமைப்பாளர் தா. கலைச்செல்வன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க  தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். காதல் திருமணம் செய்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். குமரி : பெரியாரின் 44ஆவது, நினைவு நாளை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம். சார்பாக 24-12-2017 ஞாயிறு காலை 9.00மணிக்கு தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.  நீதிஅரசர் (பெ.தொ.க தலைவர்)  தலைமை...

வேலூரில் பெரியார் நினைவு நாள்: மக்கள் மன்றம் எழுச்சியுடன் நடத்தியது

வேலூரில் பெரியார் நினைவு நாள்: மக்கள் மன்றம் எழுச்சியுடன் நடத்தியது

காஞ்சி மக்கள் மன்றம் பெரியார் நினைவு நாளை டிசம்பர் 24 அன்று வேலூரில் எழுச்சியுடன் நடத்தியது. பெரியார் பூங்கா அருகில் மாலை 5 மணியளவில் மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்வுகள் தொடங்கின. மக்கள் மன்ற தோழர்கள் கோபி வரவேற்புரையாற்ற சதீஷ் தலைமை தாங்கினார். நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார். விடுதலை சிறுத்தைகள் மாநில அமைப்புச் செயலாளர் நீலசந்திரகுமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷாஜஹான், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் சிங்கராயர், எஸ்.டி.பி.அய். மாநில பொறுப்பாளர் ஜி.எஸ். இக்பால், கண் மருத்துவர் தி.ச. முகமது சயி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் சுதாகர், ஆவணப்பட இயக்குனர் பாலா, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் சிவா, மக்கள் மன்றம் தோழர்கள் அபிநயா, திலகவதி ஆகியோர் கலை நிகழ்ச்சிகளுக்கு இடையிடையே...

கீழ்வெண்மணி: மறைக்கப்படும் உண்மைகள்

கீழ்வெண்மணி: மறைக்கப்படும் உண்மைகள்

கீழ்வெண்மணி படுகொலையில் வரலாற்றில் மறைக்கப்படும் பகுதியை சுட்டிக்காட்டுகிறார் பசு. கவுதமன். ‘தடம்’ இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் முழுமையான வடிவம். 25.12.1968, மனிதகுல வரலாற்றில் மறக்கமுடியாத கருப்பு தினம்.  44 மனித உயிர்கள், மனிதர்கள் என்று சொல்லப்பட்டவர்களாலேயே கொளுத்தப்பட்ட கொடும் கோரநாள். ஆயிற்று அய்ம்பது ஆண்டுகள் ! இந்த அய்ம்பது ஆண்டுகளிலும் எப்போதும் , எல்லோராலும் சொல்லப்பட்டது, “அரைப்படி நெல் கூலிஉயர்வு கேட்டதற்காக…  ”  இது கூலி உயர்வு மட்டுமேயான பிரச்சனையா? அல்லது அந்த மிகப்பெரிய அவலச் சம்பவத்தை – துயர விளைவை அப்படித்தான் குறுக்கி, சுருக்கிவிட முடியுமா? 62களின் இறுதிகளிலிருந்து நாகை தாலுக்காவில் வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டச் சூழலில், ஆய்மழை தங்கவேலு , சிக்கல் பக்கிரிசாமி, இருஞ்சூர் சின்னப்பிள்ளை, கேக்கரை ராமச்சந்திரன் ஆகியோர்களின் உயிர்பலி என்ற தொடர்ச்சியின் உச்சகட்ட வெளிப்பாடுதான் வெண்மணியின் 44 மனித உயிர்களை பலிகொண்ட தீயின் கங்குகள்.! “ மோதலுக்குக் காரணம் நெல் உற்பத்தியாளர் சங்கத்திற்கும், இடது கம்யூனிஸ்ட்...

தந்தை பெரியார் 44வது நினைவு நாள் சென்னை 24122017

தந்தை பெரியாரின் 44வது நினைவு நாளான இன்று 24.12.2017 சென்னை சிம்சன் பெரியார் பாலம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர். விடுதலை இராசேந்திரன்அவர்கள் தலைமையில் சென்னை மாவட்ட திவிக தோழர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். உடன் தலைமை நிலைய செயலர் தோழர் தபசி குமரன், தென்சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், செயலாளர் தோழர் உமாபதி, வடசென்னை மாவட்ட தலைவர் யேசுகுமார், செயலாளர் செந்தில் FDL மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டு ஜாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராய் உறுதியேற்றனர் பின்னர் தோழர்கள் 10.00 மணிக்கு தியாகராய நகரிலும், 10:30 மணிக்கு ஆலந்தூர், 11மணிக்கு இராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து வீர வணக்கம்.

அரசு தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்!

தமிழ்நாட்டின் அரசுப் பணிகளுக்கு பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. திருச்சி : திருச்சி மாவட்ட கழகச் சார்பாக 14.12.2017 வியாழன் காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தைக் கண்டித்து, அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமை வகித்தார். பல் மருத்துவர் எஸ்.எஸ். முத்து, திருவரங்க நகரச் செயலாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்துரை வழங்கியோர்: செந்தில் (இளந்தமிழகம்), வின்செட் (மாநகரத் தலைவர், த.பெ.தி.க.), பாலாஜி (மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மே 17 இயக்கம்), வழக்குரைஞர் தமிழழகன் (ஆசிரியர், ‘தமிழ்க்காவிரி’), அன்பழகன் (பெரியார் பாசறை), பஷீர் அகமது (மக்கள் உரிமை மீட்பு இயக்கம்), வழக்குரைஞர் பொற்கொடி ஆகியோர்.  டார்வின்தாசன் (கழக மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்) நன்றியுரையாற்றினார்.  தோழர்கள் குணா, முருகானந்தம், மு.மனோகரன், டி.வி.மெக்கானிக் மணி, அவரது துணைவியார்,...

ஈரோடு மாநாடு பெண்களுக்கு அழைப்பு சுயமரியாதைக்குப் போராடுங்கள்!

‘பெண்கள் சுயமரியாதைக்குப் போராட முன் வரவேண்டும்’ என்று ஈரோடடில் நடந்த சுய மரியாதை மாநாடு பெண்களுக்கு அறைகூவலை விடுத்தது. அரங்குகளில் மண்டபங்களில் மட்டுமே ஒலித்து வந்த பெண்ணுரிமைக் கருத்துகளை திறந்தவெளி மாநாடாக நடத்தி வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம். சென்னையில் ஜாதி ஒழிப்புக்கு அழைப்பு விடுத்தது பெண்கள் மாநாடு. ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதைக்குப் போராட முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத் துள்ளது. ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பெண்கள் சுயமரியாதை மாநாடு டிசம்பர் 16 மாலை, வீரப்பன் சத்திரம் சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. கோவை, சேலம், மேட்டூர், திருப்பூர், ஈரோடு, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோழர்கள், தோழியர்கள் மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்தனர். காஞ்சி மக்கள் மன்றத்தின் பறையிசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின.  தொடர்ந்து பெண்ணுரிமை, ஜாதி எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு கருத்துகளைக் கொண்டு பாடல்களையும், இசை நாடகங்களையும் நிகழ்த்தினர். கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தன. பெரியார் படத்துடன்...

தமிழ் மதி இல்லவிழா குமரி மாவட்டம் பள்ளியாடி 10122017

குமரி மாவட்ட கழகச் செயலாளர் தோழர்.தமிழ் மதி-பிறேம லதா இணையர் மகன் தமிழ் நவிலன் முதல் பிறந்த நாள் விழா 10-12-2017,ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00மணிக்கு பள்ளியாடி திரு இருதய அரங்கில் வைத்து கொண்டாடப்பட்டது. விழாவில் தோழர் தமிழ் மதி-யின் உறவினர்கள்,கழகத் தோழர்கள்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர்கள்,சமூக ஆர்வலர்கள் பெருவாரியாகக் கலந்துக் கொண்டனர். தோழர்.தமிழ் மதி அவர்கள் பிறந்த நாள் ஏன் கொண்டாடுகிறோம் என்றும், தமிழ் பெயர் ஏன்சூட்டினோம் என்றும் கூறி வரவேற்புரையாற்றினார். அறிவுக்களஞ்சியம் நிறுவனர் தோழர்.பேபி செபக்குமார் மந்திரமல்ல!தந்திரமே!எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். பின்பு கழகத் தலைவர் தோழர்.கொளத்தூர் மணி தமிழ் நவிலன் பிறந்த நாளில் பெற்றோருக்குச் அறிவுரையாக சோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம், போன்ற மூடநம்பிக்கைகள் குறித்தும்,பிள்ளைகளை சமூகத்துடன் இணைந்து வாழக்கற்றுக்கொடுக்க வேண்டுமென்றும்,கூறி தமிழ் நவிலன் சமூகச் சிந்தனையுடன் வாழ, வளர, வெல்ல வேண்டுமென வாழ்த்துரையாற்றினார். நிகழ்வில் தமிழ் நவிலன் கேக் வெட்டி உறவுகளுக்கு ஊட்ட விழா...

திராவிடத்தால் எழுந்தோம் விளக்கப் பொதுக்கூட்டம் குமரி குலசேகரம் அரசமூடு 09122017

திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம். நடத்திய “திராவிடத்தால் எழுந்தோம்”விளக்கப் பொதுக்கூட்டம். குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 09-12-2017,சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு குலசேகரம் அரசமூடு சந்திப்பில் நடைப் பெற்ற”திராவிடத்தால் எழுந்தோம்” விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தோழர். வழக்குரைஞர்.வே.சதா, குமரி மாவட்ட பெரியார் தொழிலாளர் கழக தலைவர் தோழர்.நீதி அரசர் ஆகியோர் தலைமைத் தாங்கினர். கழகத் தோழர்கள்,தமிழ் அரசன்,தமிழ் மதி,மஞ்சு குமார்,ஜாண் மதி,சூசையப்பா,இரமேஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்.விஸ்ணு வரவேற்புரையாற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள்;கேரளாபுரம் முருகன்,மேசியா,சத்தியதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அறிவுக்களஞ்சியம் நிறுவனர் தோழர்.பேபி செபக்குமார் மந்திரமல்ல! தந்திரமே! எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார். கழகப் பரப்புரைச்செயலாளர் தோழர்.பால்.பிரபாகரன் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்; அவர்தனது உரையில் திராவிடர் இயக்கத்தினால் உழைக்கும் மக்களான பிற்படுத்தப் பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் அடைந்திருக்கும் நன்மைகள் மற்றும் வாழ்க்கைத் தர உயர்வையும், தமிழ்நாட்டிற்கு திராவிடர் இயக்கம் ஆற்றியப்...

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் சேலம் 07122017

07122017 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வடநாட்டாருக்கு தாரைவார்க்கும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்துhர் மணி அவர்கள் தலைமை ஏற்றார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் (திவிக) தோழர் இரா. டேவிட் அவர்கள் முன்னிலை வகித்தார். கண்டனஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்(சிபிஎம்)தோழர் பி. தங்கவேல் , மாவட்ட செயலாளர் (சிபிஐ) தோழர் எ. மோகன், த.மு.மு.க மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் தோழர் பி. யூனுhஸ் அகமத் , சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்(திவிக) சி. கோவிந்தராசு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிறைவாக கழகத் தலைவர் தோழர் கொளத்துhர் மணி அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி உரை நிகழ்த்தினார். திவிக கிழக்கு மாவட்ட...

பெண்கள் சுயமரியாதை மாநாட்டிற்காக சுவரொட்டி ஒட்டும் பணியில் கழகத்தோழர்கள்

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் டிசம்பர் 16 அன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ”பெண்கள் சுயமரியாதை மாநாட்டிற்காக சுவரொட்டி ஒட்டும் பணியில் கழகத்தோழர்கள் !

புதுச்சேரியில் திவிக நடத்திய ‘’மாவீரர் நாள்’’

புதுச்சேரியில் திவிக நடத்திய ‘’மாவீரர் நாள்’’ தமிழீழத் தாயக விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த விடுதலைப் புலிகளுக்கான மாவீரர் நாள் புதுச்சேரி அரியாங்குப்பத்திலுள்ள கேப்டன் மில்லர் அரங்கத்தில் 27.11.2017 திங்கட்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர். கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் தந்தை பெரியார் சதுக்கத்திலிருந்து சுடர் ஏந்தி மில்லர் அரங்கத்திற்கு திவிக தோழர்களும் தமிழ் இன உணர்வாளர்களும் பேரணியாக வந்தடைந்தனர். மாலை 6.05 மணிக்கு தியாகச் சுடரையும் அதன்பின் தமிழீழ தேசியக் கொடியையும் தோழர். கொளத்தூர் மணி அவர்கள் ஏற்றினார்கள். தோழர்கள் அனைவரும் விளக்கேற்றி மாவீரர்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர்.லோகு.அய்யப்பன் அவர்கள் வீரவணக்க உரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் வீரவணக்க உரையாற்றினார். அதில் ”தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக விடுதலைப் புலிகள் செய்த அளப்பரிய...

கழகம் எடுத்த அம்பேத்கர் நினைவு நாள்

திருப்பூரில் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் திருப்பூரில் அம்பேத்கர் நினைவு நாளான 06.12.2017 அன்று காலை 11 மணியளவில் அம்பேத்கர் சிலைக்கு  கழகத் தலைவர் கொளத்தூர் மணி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பொருளாளர் துரைசாமி, அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, தனபால், அகிலன், மாதவன் பரிமளராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். பேராவூரணியில் பேராவூரணியில் தமிழக மக்கள்  புரட்சிக் கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து  நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநில கொள்கைபரப்புச் செயலாளர் ஆறு.  நீலகண்டன் தலைமையில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை  செய்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சித.திருவேங்கடம், தா.கலைச்செல்வன்,  சுப.செயச்சந்திரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தோழர்கள் ஏனாதி சம்பத், ஆயில்  மதியழகன், இரா மதியழகன், ரெட்டவயல் மாரிமுத்து, கிறித்தவ நல்லெண்ண இயக்க  பொறுப்பாளர் ஆயர் த.ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன்...

தேர்வாணையத்தை எதிர்த்து கழக ஆர்ப்பாட்டங்கள்

தமிழ் தெரியாதவர்களும் பிற மாநிலத்தவரும் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் வேலை வாய்ப்புத் தேர்வுக்கு மனு செய்யலாம் என்ற தமிழ்நாடு தேர்வாணைய அறிவிப்பைத் திரும்பப் பெறக் கோரி கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம்  சார்பாக மாவட்டத்  தலைவர் வழக்கறிஞர் வே.சதா தலைமையில்  05.12.207 அன்று மாலை  4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை வடநாட்டாருக்குத் தாரை வார்க்கும் அரசுத் தேர்வாணையத்தையும் தமிழக அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் தமிழ்மதி, மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், மாவட்டப் பொருளாளர் மஞ்சுகுமார்,  பெரியார் தொழிலாளர் கழகத் தலைவர்  நீதியரசர், செயலாளர் ஜான்மதி, சூசையப்பா, ஸ்டெல்லா, ராஜேந்திரன்,  அருந்ததியர் காலனி ஆறுமுகம் , குமரேசன் (ஆதித் தமிழர் கட்சி) , சிவராஜ பூபதி (மக்கள் அதிகாரம்), வழக்கறிஞர்கள் மைக்கிள் ஜெரால்டு, சுதர்மன், சமூக ஆர்வலர்  போஸ்,  புத்தோமணி, மணிகண்டன், விஷ்ணு,...

நீடாமங்கலம் சாதியக் கொடுமை-நூல் ஆய்வரங்கம்

பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை ந.பசுபதியின் 12-ஆம் ஆண்டு நினைவு நாளில் ‘ரிவோல்ட்’ நடத்தும் ‘நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்’நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்தில்  25.11.2017 மாலை 5 மணிக்கு தொடங்கியது பெரியாரிய எழுத்தாளர் பசு கவுதமன் தலைமையேற்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிவகுரு வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர் சண்முகசுந்தரம் ஒருங்கிணைப்பில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாலர் சாமுவேல்ராஜ், தபெதிக பிரச்சாரச் செயலர் சீனி விடுதலை அரசு, மதிமுக வெளியீட்டுச் செயலர் வந்தியதேவன் ஆய்வுரை நிகழ்த்தினர் வரலாற்று ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ இரா வேங்கடாசலபதி இந்நூல் வெளிவர நூலாசிரியர் எவ்வாறெல்லாம் உழைத்தார் என்றும் தான் எப்படியெல்லாம் அவரை வழிகாட்டி விரைவில் நூல் வெளிவர நெருக்குதல் அளித்தேன் என்பதை சுவைபட எடுத்துரைத்தார் நூலாசிரியர் ஆ திருநீலகண்டன் தன்னுரையில் கழகத் தோழர்கள் மற்றும் பெரியாரிய பற்றாளர்கள் இந்நூல் வெளிவர எவ்வோறெல்லாம் உடனுதவினார்கள் என்றும், தான் எவ்வாறெல்லாம் நூல் வெளிவர களவுழைப்பை...

நமது அடுத்த ஒன்று கூடல் ஈரோட்டில்! டிசம்பர் 16, ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு.

நமது அடுத்த ஒன்று கூடல் ஈரோட்டில்! டிசம்பர் 16, ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு.

சென்னையில் ஜாதி ஒழிப்புக்காக பெண்கள் அறைகூவல் விடுத்த அந்த எழுச்சி நிகழ்வுகள், தோழர்களின் உள்ளங்களில் இப்போதும் பசுமையாய் பதிந்து நிற்கிறது. அடுத்து, ஈரோட்டில் கூடுகிறோம்! மதவெறி சக்திகள், ஜாதி வெறி சக்திகள், பெண்களின் சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் சவால் விடும் ஒடுக்கு முறைகள், மதம் கட்டமைத்த கற்பிதங்கள் – – இவை அனைத்துக்கும் எதிராக விழிப்புணர்வு களம் நோக்கி பெண்களை அணி திரட்டும் மாநாடு இது. மாநாட்டுப் பணிகளில் நிதி வசூலில் பெண் தோழர்கள் முழு வீச்சில் களமிறங்கி செயல்படுகின்றனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடக்க விழாவை எழுச்சியுடன் நடத்திய அதே ஈரோட்டில்… மீண்டும் கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் உணர்வாளர்களும் ஒன்று கூட இருக்கிறார்கள். கொள்கை உறவுகளின் ஒன்று கூடுதலிலும் சந்திப்பிலும் நமக்கு நாமே நம் உணர்வுகளை கூர் தீட்டிக் கொள்கிறோம். மத விழாக்களும் மூடநம்பிக்கை சடங்குகளையும் முற்றாகப் புறந்தள்ளி, புதிய சமூகத்துக்கான பாதை அமைக்க களத்தில் நிற்கும் பெரியாரியலாளர்களுக்கு இந்த மாநாடுகளும்...

டிசம்பர் 16இல் ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு

இடம் :                 வீரப்பன் சத்திரம், ஈரோடு மாலை 5 மணி வரவேற்புரை               :                 கவிப்பிரியா தலைமை       :                 மணிமேகலை முன்னிலை                   :                 சங்கீதா, முத்துலட்சுமி உரை : சுப்புலட்சுமி ஜெகதீசன் (முன்னாள் மத்திய இணை அமைச்சர்-தி.மு.க.) பால பாரதி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) ஓவியா (பெண்ணிய செயல்பாட்டாளர்) திவ்ய பாரதி (ஆவணப்பட இயக்குனர்) ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) நிறைவுரை : கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் நன்றியுரை : சுமதி காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள், பறையிசையோடு நிகழ்ச்சிகள் நடக்கும். ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், ஈரோடு மாவட்டம் (தெற்கு) தோழர்களே! மாநாட்டுக்கு திரண்டு வாரீர்!   பெரியார் முழக்கம் 30112017 இதழ்

விடுதலைப் புலிகளின் முதல் இராணுவப் பயிற்சி முகாம் நடந்த பகுதியில் ‘மாவீரர் நினைவகம்’ அமைகிறது

புலியூரில் உணர்ச்சிப் பெருக்குடன் ‘மாவீரர் நாள்’ சேலம் மாவட்டம், கொளத்தூர் ‘தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு’ சார்பில் நவம்பர் 27ஆம் தேதி, மாவீரர் நாள் புலியூர் பிரிவில் உணர்ச்சியுடன் நடந்தது. கொளத்தூர் – புலியூர் பிரிவுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. இந்தப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் இராணுவப் பயிற்சி முகாம் 1983 முதல் 1986ஆம் ஆண்டு வரை நடந்தது. விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதி பொன்னம்மான், வழிகாட்டுதலில் நடந்த இந்த முகாமில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்கள் பயிற்சி பெற்றனர். மேதகு பிரபாகரன் பலமுறை முகாமுக்கு வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கிறார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அப்போது திராவிடர் கழகத்தில் செயல்பட்டு வந்தார். அவருக்கு உரிமையான தோட்டத்தில்தான் மூன்று ஆண்டுகள் பயிற்சிகள் நடந்தன. பெரியார்  இயக்கத் தோழர்களின் முழு ஒத்துழைப் போடு இந்த முகாம் நடந்தது. உள்ளூர் பகுதி வாழ் மக்களின்...

குடிசைப் பகுதி மக்களின் கட்டாய வெளியேற்றத்தைக் கண்டித்து முதல்வர் வீடு முற்றுகை: தோழர்கள் கைது

குடிசைப் பகுதி மக்களின் கட்டாய வெளியேற்றத்தைக் கண்டித்து முதல்வர் வீடு முற்றுகை: தோழர்கள் கைது

சென்னை ஆயிரம் விளக்கு பகுதிகளில் அமைந்துள்ள திடீர் நகர், மக்கீஸ் தோட்டம் பகுதி குடியிருப்பில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் தமிழக அரசை கண்டித்து….. 25.11.2017 அன்று காலை 11 மணிக்கு பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்தை திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த பொறுப்பாளர்கள், தென் சென்னை மாவட்டச் செய லாளர் இரா. உமாபதி, வடசென்னை மாவட்ட செயலாளர் செந்தில் (எப்.டி.எல்.), தலைவர் ஏசுகுமார், மயிலை தோழர்கள் மாரி, சுகுமார், இராவணன், சிவா, குமரேசன், ஜா. உமாபதி, மாணிக்கம், யுவராஜ், இலட்சுமணன், தேன்ராஜ் உள்ளிட்ட கழகத்தினர், தமிழ்நாடு இளைஞர்கள் இயக்கம் ராஜா, அம்பேத்கர் மக்கள் படை மதிபறையனார், இளந்தமிழகம் செந்தில், பச்சைத் தமிழகம்  மற்றும் பல்வேறு இயக்கத்தை சார்ந்த தோழர்கள் ஒன்றிணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பினர். தமிழக அரசுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பி, முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட...