Category: திவிக

தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

தோழர் ஃபாரூக் அவர்கள் கடந்த 16.03.2017 அன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தோழர் பாரூக் அவர்களுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் உள்ளது. பெரிய பொருளாதார பிண்ணனி இல்லாத நிலையிலும் கூட தன் குடும்ப வருமானத்திற்கான உழைப்பின் இடையேயும் இந்த சமூகம் குறித்த அக்கரையோடு சிந்தித்து அதற்காக ஜனநாயகத் தன்மையோடு இயங்குகிற எமது கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமுதாய பணியாற்றியவர். தோழர் ஃபாரூக் அவர்களின் எதிர்பாராத படுகொலையை அடுத்து அவரின் குடும்பம் சொல்லொனா துயரத்தில் ஆழ்ந்துள்ள இச்சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இப்போது நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தோழர் ஃபாரூக் அவர்கள் குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வோம். வாய்ப்பு உள்ள தோழர்கள் தங்களால் இயன்ற நிதியை கீழ் உள்ள கழகத்தின் பொருளாளர் தோழர் துரைசாமி அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தியுதவுமாறு வேண்டுகிறோம். K.S.Duraisamy Savings A/c No :...

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 19032017

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் உயர்கல்வி நிறுவனங்களில் தொடரும் தமிழ்நாட்டு மாணவர்களின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் 19032017 அன்று காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும்

தோழர் ஃபாருக் படுகொலைக்கு காரணமான மதவெறியர்களை கைது செய் ஆர்ப்பாட்டம்

மதவெறியர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட கோவை திராவிடர் கழக தோழர் பாரூக் படுகொலைக்கு காரணமான மதவெறியர்களை கண்டித்து காவல் துறையே கைது செய் என்று ஆர்ப்பாட்டம் என ஆரம்பித்து பின் சென்னை அண்ணா சாலையில் தந்தை பெரியார் சிலைக்கருகில் சாலை மறியலில் ஈடுப்பட்ட திவிக, தபெதிக, சேவ்தமிழ் இயக்க தோழர்கள் 60 கைது.  

பாரூக் இறையை மறுத்ததற்கா இரையானாய்?

பாரூக் இறையை மறுத்ததற்கா இரையானாய் மதவெறி மலத்திற்கு நீ மனிதம் பேசியதற்கா மரணம் பூசியிருக்கிறார்கள் மலம் தின்னிகள் … பாரூக் பெயருக்காக சிறையை தந்த மதமே கொள்கைக்காக மரணம் தந்ததும் நீயோ … நீ கழுத்தறுப்பட்டு வீசப்பட்டிருக்கிறாய் மனிதமற்ற மதங்களுக்கு புதிதில்லை மக்களின் கழுத்தறுப்பது … மதங்கள் அன்பை போதிக்கின்றன கைமாறாய் பாரூக் போன்ற மனிதங்களை தின்று … பாரூக் உன் குடும்பம் அழுகை நிறுத்தும் நேரம் காத்திருக்கிறோம் எங்கள் கையாலாகாத்தனத்தை சொல்லி அழ … இரா. செந்தில் குமார்

தோழர் ஃபாரூக்கை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்! கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 17032017

17032017 மாலை, தோழர் ஃபாரூக்கை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்! திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை தோழா் ஃபரூக் அவா்களை படுகொலை செய்த கொலைகாரர்களை உடனடியாக கைது செய்ய வலியுருத்தி கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 17. 03. 2017 வெள்ளி நேரம் : மாலை 4:00 மணிக்கு,, இடம்: சென்னை, அண்ணா சாலை, சிம்சன் பொியாா் சிலை அருகில். தலைமை : தோழர் உமாபதி, மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் . அனைத்து தோழா்களும் வரவும். திராவிடர் விடுதலைக் கழகம். சென்னை மாவட்டம் பேச:7299230363

தோழர் கோவை ஃபாரூக் படுகொலை !

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கழகத் தலைவர் வலியுறுத்தல் உடன் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன் அவர்கள். (கோவை அரசு தலைமை மருத்துவமனையில் கழகத் தலைவர் பேட்டி 17.03.17. கோவை.) நேற்று (16.03.2017)இரவு 11.00 மணிக்கு கோவை கழகத் தோழர் ஃபாருக் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

ஜேஎன்யூ மாணவர் முத்துகிருட்டிணன் இறுதி நிகழ்வு சேலம் 16032017

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்ட செய்லாளர் டேவிட் உள்ளிட்ட தோழர்கள், நேற்று மாலை 6-30 மணிக்குடெல்லி ஜவகர்லால் நேரு பலகலைக் கழகத்தில் தற்கொலை செய்ததாகக் கூறப்பட்ட ஆய்வு மாணவர் முத்துகிருட்டிணனின் இல்லம் சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி திபேன் அவர்களும் அவரது குழுவினருடன் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஆய்வு மாணவர்  சேலம் முத்துகிருட்டிணனன் உடல் இன்று ( 16-3-2017 )  காலை 6-00 மணியளவில் சேலம், அரிசிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாவட செய்லாளர் டேவிட், மாநகரத் தலைவர் பாலு, செயலாளர் பரமேசு, மூணாங்கரடு சரவணன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் திருச்செங்கோடு வைரவேல், ஆத்தூர் மகேந்திரன் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் காலை 8-00 மணிக்கே மாணவர் முத்துகிருட்டிணன் இல்லம் வந்துவிட்டனர்....

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் தின விழா கோவை 19032017

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் தின விழா கோவை 19032017

தமிழ்நாடு அறிவியல் மன்றம் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் மகளிர் தின விழா 📎கவியரங்கம் 📎ஆய்வரங்கம் 📎கலை நிகழ்ச்சிகள் 📎கருத்தரங்கம் சிறப்பரை- தோழர் கிரேஷ்பாணு தோழர் கொளத்தூர் மணி 19/03/2017 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்- அண்ணாமலை அரங்கம், இரயில் நிலையம் எதிரில் , சாந்தி திரையரங்கம் அருகில் .. கோவை. அனைவரும் வருக.

உடுமலை சங்கர் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 13032017 ! காணொளி

உடுமலை சங்கர் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 13032017 ! காணொளி

உடுமலை சங்கர் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் ! கழகத் தலைவர் அவர்கள் கருத்தரங்கில் பங்கேற்று ஆற்றிய உரை.(காணொளி) ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 13.03.2017 அன்று உடுமலைப்பேட்டையில் உள்ள ராணி வாணி மஹாலில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தோழர் கெளசல்யா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். பல்வேறு இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வை மக்கள் விடுதலை முன்னணி ஒருங்கிணைப்பு செய்திருந்தது.

‘சங்கர் நினைவு நாள்’ கருத்தரங்கம் உடுமலைப்பேட்டை 13032017

13032017 அன்று மாலை உடுமலைப்பேட்டையில் ‘சங்கர் நினைவு நாள்’ கருத்தரங்கம் . கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் “ஜாதி ஒழிப்புச் சமூகத்திற்காக அண்ணல் அம்பேத்கர் பெரியார் செய்ததும்-  நாம் செய்ய வேண்டியதும்” எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார். நாள் : 13.03.2017 திங்கட் கிழமை. நேரம் : மாலை 4.00 மணி இடம்: பாலாஜி திருமண மண்டபம், கல்பனா திரையரங்கு பின்புறம், உடுமலைப்பேட்டை. ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அணி திரள்வோம் வாரீர்! நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் வாசகர் வட்டம் . திருப்பூர் மாவட்டம்.

பாஜக அலுவலகம் இழுத்து மூடும் போராட்டம் சென்னை 14102017

பாஜக அலுவலகம் இழுத்து மூடும் போராட்டம் சென்னை 14102017

தமிழர்களை அழிப்பதையே ஒரே வேலையாக கொண்டுள்ள தமிழர் விரோத பாஜக அலுவலகம் இழுத்து மூடும் போராட்டம் மார்ச் 14 காலை 10 மணி சென்னை   காவிரி நதி நீர் மறுப்பு பவானி, மேகதாது, பாலாறு தடுப்பணைகள் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத் திணிப்பு தமிழக மீனவர்கள் படுகொலையில் கூட்டுச்சதி என்று தமிழர்களை அழிப்பதையே வேலையாக கொண்டுள்ள தமிழர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் தமிழின விரோதி பாஜகவை தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிப்போம்

ஜாதி மதவாத கூட்டு வன்முறைக்கு எதிரான தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி 11032017

பொள்ளாச்சி அருகே காளியப்பன் புதூரில் இந்து மத சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட சாதி – மதவாத கூட்டு வன்முறைக்கெதிரான தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் 11032017 மாலை 4 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்… திராவிடர் விடுதலை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினார்.. *தமிழக வாழ்வுரிமை கட்சி – நிறுவனர் தோழர் தி.வேல்முருகன் *ஆதித்தமிழர் பேரவை – பொ.செயலாளர் தோழர் நாகராசன் *தலித் விடுதலை கட்சி – தலைவர் தோழர் செங்கோட்டையன் *தமிழ் புலிகள் கட்சி – தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் *ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை – தலைவர் தோழர் ஆ.சு.பவுத்தன் *ஆதித்தமிழர் விடுதலை முன்னணி- அமைப்பாளர். தோழர் ரவிக்குமார் *SDPI –  தோழர் சாந் இப்ராகிம் *சமத்துவ கழகம் – தலைவர் தோழர் மு.கார்க்கி *தென்னை தொழிலாளர் சங்கம் தோழர் கருப்புசாமி ஆகிய தோழர்கள் கண்டனவுரை ஆற்றினர்…. *திராவிடர் கழகம் – பொதுகுழு உறுப்பினர் தோழர் பரமசிவம் பொறியாளர் *சமூக நீதிக் கட்சி – நிறுவனர் தோழர் பன்னீர் செல்வம் *மக்கள்...

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? புத்தக வெளியீட்டு பரப்புரை விழா திருச்சி

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா ! தோழர் பசு.கவுதமன் அவர்கள் தொகுத்துள்ள ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்.” எனும் நூலின் நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா 04.03.2017 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் திருச்சி,சத்திரம் பேருந்து நிலையம்,கலைஞர் அறிவாலையம் அருகில் உள்ள சுசி ஹாலில் நடைபெற்றது. 4000க்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ள A4 அளவு தாளில் அச்சிடப்பட்ட ரூபாய் 4000 மதிப்புள்ள இத்தொகுப்பு நூல் முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 2000த்திற்கு இந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கு நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் இயக்குனர் தோழர் தா.பாண்டியன் தலைமை தாங்கினார். ஜனசக்தி இதழின் பொறுப்பாசிரியர் தோழர் இந்திரஜித் அவர்கள், சி.பி.எம். மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நூல் குறித்த செய்திகளை பகிர்ந்து கொண்டு நூலின் முன் வெளியீட்டுத்திட்டத்திற்கு ஆதரவளித்து புத்தகத்தை வாங்கி பயன் பெற...

நெடுவாசல் மீட்போம்! இரயில் மறியல் போராட்டம் மதுரை 08032017

நெடுவாசல்மீட்போம் ! நாளை மதுரையில் ரயில் மறியல் போராட்டம். நாள் : 08.03.2017 நேரம் : காலை 10:30 மணி. இடம்: ரயில் நிலையம்,மதுரை. “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கை விடக் கோரியும் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழர் விரோதி மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும் திராவிடர்விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் பல்வேறு தோழமை அமைப்புகள் பங்கேற்கும் ரயில்மறியல் தொடர்புக்கு: மா.பா.மணிகண்டன், மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம், மதுரை மாவட்டம். 9600 40 8641  

நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் தக்கலை 04032017

குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  நீட் தேர்வைக் கண்டித்து தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. மாவட்டச் செயலாளர் தோழர் தமிழ் மதி தலைமைத் தாங்கினார். தோழர் நீதி அரசர் (தலைவர் பெ.தொ.க) முன்னிலை வகித்தார். தோழர் விஸ்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் பால் பிரபாகரன்,கழக பரப்புரைச் செயலாளர் கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தோழர்கள் மேசியா (ப.நா.புரம் ச.ம.தொ.செயலாளர்,வி.சி.க,) போஸ் (சமூக ஆர்வலர்)  முரளீதரன் (பொது பள்ளிகான மாநில மேடை செயலாளர்) தோழர்கள்  இரமேஸ், இராஜேஸ் குமார், இராதா கிருஸ்ணன் MCUP(I), ஜாண் மதி, சூசையப்பா, அனி ஆகியோர் கலந்துக் கொண்டனர். தோழர்கள் அனைவரும் மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை ஆவேசத்துடன் முழங்கினர். தோழர் மஞ்சு குமார் நன்றியுரையுடன் முடிந்தது. ட

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா !

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா ! தோழர் பசு.கவுதமன் தொகுத்த ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்.” நாள் : 04.03.2017 சனிக்கிழமை,மாலை 5 மணி. இடம் : சுசி ஹால்,கலைஞர் அறிவாலையம் அருகில், சத்திரம் பேருந்து நிலையம்,திருச்சி. தலைமை : தோழர் தா.பாண்டியன், இயக்குனர்,நியூசெஞ்சுரி புக் ஹவுஸ். வாழ்த்துரை : தோழர் இந்திரஜித், பொறுப்பாசிரியர், ஜனசக்தி. தோழர் ஶ்ரீதர், மாநிலக்குழு,உறுப்பினர் சிபி.எம். நூல் பரப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் பசு.கவுதமன். நூல் தொகுப்பாசிரியர்.

உலக மகளிர் தின விழா ! ஈரோடு 08032017

உலக மகளிர் தின விழா ! நாள் : 08.03.2017 புதன்கிழமை இடம்: ஈரோடு மாநகரம். நேரம் : காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை. அறிவுசார் வாழ்வியல் நிகழ்வுகளும், கருத்தரங்கம், தமிழர் கலை விழா பங்கு பெறுவோர் : மாண்புமிகு சுப்புலட்சுமி ஜெகதீசன், மேனாள் மத்திய அமைச்சர். பேராசிரியர் சரஸ்வதி, மக்கள் சிவில் உரிமைக் கழகம். கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக்கழகம். ஒருங்கிணைப்பு, தோழர் இரத்தினசாமி, அமைப்புச் செயலாளர், திராவிடர் விடுதலைக்கழகம்

மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் ! குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்.. மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து. நாள் : 04.03.2017 சனிக்கிழமை,காலை 9 மணி. இடம் : வட்டாட்சியர் அலுவலகம் முன்பு,அண்ணா சிலை அருகில்,தக்கலை,குமரி மாவட்டம். கண்டன உரை : தோழர் பால்.பிரபாகரன், பரப்புரைச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள்

நெடுவாசல் போராட்ட களத்தில் கழக தோழர்கள்

நெடுவாசல் போராட்ட களத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களோடு திருச்சி,பேராவூரணி கழக தோழர்கள். காணொளி இணைப்பு செய்தி மனோகரன் முத்துக்கண்ணன்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலை இடமாற்றம் – கழகம் மனு

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலையை இடமாற்றம் செய்வது குறித்த விவகாரத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.இரத்தினசாமி ஈரோடு மாநகராட்சி ஆணையாளரைச் சந்தித்து விண்ணப்பம் அளித்தார்.. சிலை இடமாற்றம் தொடர்பாக எந்தப் பணிகளாயினும் திராவிடர் விடுதலைக் கழகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் எப்பணியையும் செய்யக் கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.. மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் மாநிலத்தலைவர் தோழர்.கண குறிஞ்சி, திமுக மாவட்டப் பிரதிநிதி தோழர்.பகீரதன் ஆகியோர் உடனிருந்தனர் செய்தி பசி திவிக

இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று முழக்கத்துடன் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று மாபெரும் ஆர்ப்பாட்டம் …. உணர்வாளர்களே , தோழர்களே வாருங்கள் … 05032017 மாலை 3 : 00 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் 72992 30363

பேச்சுரிமையை மறுக்கும் தமிழக அரசு !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று 01032017 அன்று மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் காஸ் திட்டத்தை கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க கோரியும் மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது இந்த நிலையில் திடீரென 27022017 நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து மன்னார்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கடிதம் கொடுத்து உள்ளார் . நீதிமன்ற அனுமதிக்கு வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விரோத அரசுகளின் முகமூடிகள் மக்கள் மன்றத்தில் தோலுரிக்கப்படும் . செய்தி மன்னை காளிதாசு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் 01032017

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் 01032017

மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் ! ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க கோரியும் திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மத்திய அரசி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாள் : 01.03.2017 மாலை 6 மணிக்கு இடம் : மன்னார்குடி, பெரியார் சிலை அருகில். தலைமை : இரா .காளிதாசு மாவட்ட செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம் சிறப்புரை : தஞ்சை விடுதலைவேந்தன் தலைமை கழக பேச்சாளர் ம தி மு க  

குலுங்கியது கோவை – எங்கெங்கும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 24022017

கோவை வந்த மோடிக்கு கருப்பு கொடி. வனங்களை அழிக்கும் ஈஷா யோகா விழாவிற்க்கு வருகை தரும் மோடிக்கு எதிராக #திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 24022017 மாலை கருப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் காட்டப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர் ஈஷா மையத்தில் 122 அடி உயர சிவன் பொம்மையைத் திறக்க வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அணி அணியாய் தோழர்கள் ஆர்ப்பாட்டம்-கருப்புக் கொடி-கைது.. # முதல் அணியில் த.பெ.தி.க, த.மா.கா,வி.சி ,விவசாய சங்கங்களின் தோழர்கள்.. # இரண்டாம் அணியில் தி.க தோழர்கள்.. # மூன்றாம் அணியில் தி.வி.க, சமூக நீதிக் கட்சி,மாதர் சங்கம், DYFI தோழர்கள்.. குறிப்பு: கைது செய்து நேரே மண்டபத்திற்கு கொண்டு சென்றிருந்தால் கூட, நிகழ்வுகளை பொதுமக்கள் அறிய முடியாமல் போயிருக்கும்.. ஆனால் திவிக தோழர்களை கைது செய்து, மண்டபம் கிடைக்காமல் கோவை முழுதும் வீதிவீதியாய்...

அரியலூர் சிறுமி நந்தினியின் படுகொலையை கண்டித்து நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி 19022017

அரியலூர் மாவட்டத்தை சார்ந்த தலித் சிறுமி நந்தினியின் படுகொலையை கண்டித்து நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…   ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள்: சிறுமி நந்தினியின் கொலையை CBIக்கு மாற்று… இந்து முன்னணி அரியலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜாதி வெறியன் ராஜசேகரை கைது செய்… ராஜசேகர் மற்றும் அவனின் கூட்டாளிகளின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்து… தலித் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்து…

திருப்பூரில், அரியலூர் நந்தினிக்கு நீதி வழங்கக்கோரி கண்டன ஆர்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 10.02.2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.30 மணியளவில் திருப்பூர்,மாநகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்துமுண்ணனி மாவட்ட தலைவர் ராஜசேகரை கைது செய் ! வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்று ! நந்தினி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கு ! தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய் ! என முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களும் பங்கெடுத்தனர்.ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் சோழன், திருவள்ளுவர் பேரவை அருண்குமார்,இஸ்லாமிய அமைப்பின் ரஹ்மான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி,அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, மாவட்டத்தலைவர் முகில்ராசு,மாவட்ட செயலாளர் நீதிராசன், மாநகரசெயலாளர் மாதவன்ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர் சங்கீதா,கொளத்துப்பாளையம் ராமசாமி, முத்து,தனபால்,கருணாநிதி,அகிலன்,பரிமளராசன் உள்ளிட்ட கழகத்தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஜாதி மறுப்பு,சடங்கு மறுப்புத்திருமணம் ! திருப்பூர் 20022017

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 20.02.2017 அன்று காலை திருப்பூர் அம்மாபாளையம்,பெரியார் படிப்பகத்தில் க.விஜயலட்சுமி-ச.வீரகுமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு,சடங்கு மறுப்புத்திருமணம் மாவட்டகழகத்தலைவர் முகில்ராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு அதிமுக பகுதிசெயலாளர் இரா.கோபிநாதன், கழகத்தோழர் நகுலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தந்தத்தை இணையர்கள் கழகத்தோழர்கள் முன்னிலையில் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர். குட்டி பிரசாந்த்,மாநகர தலைவர் தனபால்,அமைப்பாளர் முத்து, தோழர் ஜெயா,நசீர்,பாலுசந்தர் கணேசன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மோடிக்கு கருப்புக்கொடி ! கோவை சூலூரில் 24022017

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ! நாள் : 24.02.2017 மாலை 4 மணிக்கு. இடம் : சூலூர் விமானப்படை தளம் அருகில். மோடியே, ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! எனும் முழக்கத்துடன்பிப். 24இல் கோவையில் தோழர்கள் திரளுகிறார்கள் கோவை வனப்பகுதியில் யானைகள், மிருகங்கள் வாழும் பகுதிகளை முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி வரும் ஈஷா மய்யத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், புதிய கட்டுமானங்களைத் திறந்து வைக்க பிரதமர் மோடி பிப்.24 ஆம் தேதி வருகிறார். இதை எதிர்த்து கோவை வரும் மோடிக்கு பிப். 24ஆம் தேதி கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், சுற்றுச் சூழல் மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துகின்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி போராட்டத்தில் பங்கேற்கிறார். தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் பல்வேறு முற்போக்கு...

பெரியார் : இன்றும் என்றும் நூல்அறிமுக விழா புதுச்சேரி 11022017

கோவை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பெரியார்:இன்றும் என்றும்’ நூலறிமுக விழா புதுச்சேரி வணிக அவையில் 11-2-2017 அன்று மாலை 6-00 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்தோரை புதுவை லோகு.அய்யப்பன் வரவேற்றார். விடியல் பதிப்பகத்தின் சார்பாக விஜயகுமார் நூல் வெளியீடும் அவசியம், முயற்சி குறித்து  எடுத்துரைத்தார். அடுத்து சூலூர்பாவேந்தர் பேரவை புலவர் செந்தலை கவுதமன் நூலை அறிமுகப்படுத்தி தெளிவான நீண்டதொரு சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே நூலுக்கு முன்பதிவு செய்திருந்தவர்களும் பிறரும் நூலின் படிகளைப் பெற்றுகளைப் பெற்றுக் கொண்டனர். இறுதியாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாறினார். விழாவில் ஏறத்தாழ 200 படிகள் விற்பனையாகின.

ஆதிக்க சாதி இந்துத்துவ கூட்டு வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! கோவை 13022017

13-2-2017, திங்கட்கிழமை மாலை 4-00 மணியளவில், கோவை வாட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, ஜாதி மதவாத ஆதிக்க கூட்டமைப்பின் சார்பில், பொள்ளாச்சி கா.க.புதூரில் ஜாதி,மதவாத ஆதிக்க சக்திகளால், பெரியார் திராவிடர் கழகம், சுயமரியாதை சமதர்ம இயக்கர் தலைவர் தோழர் கா.சு. நாகராசந்தாக்கப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளை பிற்பகல் 3-00 மணிவரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த ஆனைமலை காவல்துறையினர் தப்ப விட்டதற்கு உரிய நடவக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆத்தி தமிழர்- பேரவை பொதுச்செயலாளர் நாகராசன், எஸ்.டி.பி.ஐ., சமூகநீதிக் கட்சித் தலைவர் வழக்குரைஞர் பன்னீர்செல்வம், சமுத்துவ முன்னணி வழக்குரைஞர் கார்க்கி, வழக்குரைஞர்முருகேசன், முருகர் சேனை சிவசாமித் தமிழன், தமிழ்க் கல்வி இயக்கம் சின்னப்பா தமிழர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திராவிடர் கழக இளைஞர் அணி சிற்றரசு, புதுவை பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தலைவர் தீனா,  கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன்,...

கழகத்தின் போராட்ட எதிரொலி, ஆர்ப்பாட்டத்திற்கு முன்பே வெற்றி

இராமாநுசரின் ஆயிரமாவது ஆண்டு விழா என்ற பெயரில் இன்று 18022017 ஈரோடு பெருந்துறை ரோடு பரிமளம் மகாலில் நிகழ்வு ஒன்று நடக்க இருந்தது. இந்நிகழ்வில், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், ஈரோடு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் கலந்து கொள்ள இருந்தார்கள். மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாட்டில், இது போன்ற மதம் சம்பந்தப்பட்ட விழாக்களில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வது கூடாது என வலியுறுத்தி, காலை 10 மணிக்கு பரிமளம் மகால் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனிடையில் விழாவிற்கு எதிராய் மனு அளித்ததன் அடிப்படையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்கள். கழகத்தின் முயற்சிக்கு வெற்றி

பழங்குடிகளின் உரிமை மீட்பு கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 17022017

மதுரையில் காவல் துறைக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்.. குறவர் சமுதாய மக்களை திருடர்களாக சித்தரித்து தொடர்ச்சியாக அவர்கள் மீது பொய் வழக்கு போடும் போக்கை தொடரும் காவல் துறையினருக்கு தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனத்தை தெரிவித்து இன்று மதுரையில் நடைபெற்ற குறிஞ்சியர் நலச்சங்கம் சார்பிலான கண்டன ஆர்பாட்டத்தில் தலைமை உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புத் தோழர்கள் கலந்து கொண்டனர். செய்தி மா பா மணிகண்டன் உரிமை

கோவிந்தராசு-கீதா இணையர் மேட்டூரில் கட்டியுள்ள புதிய இல்லம் திறப்பு விழா மேட்டூர் 12022017

12-2-2017 அன்று சேலம் மேற்கு மாவட்டச் செய்லாளர் தோழர் ஸி.கோவிந்தராசு-கீதா இணையர் மேட்டூரில் கட்டியுள்ள புதிய இல்லத்தை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்துவைத்தார். நிகழ்வின் தொடக்கத்தில் இல்லத்தின் உரிமையாளர் கோவிந்தராசு, அவரது மகள் அருள்மொழி உள்ளிட்டோரின் பறையிசையோடு நிகழ்வு தொடங்கியது. அடுத்து கொள்கைப் பாடல்கள் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவினரால் பாடப்பட்டன. இந்நிகழ்விலும் தோழர் கோவிந்தராசுவும் அவரது மகள் அருள்மொழியும் கழகப் பாடல்கள் பாடப்பட்டன. அந்நிகழ்வில் இல்ல உரிமையாளர் கீதாவி அக்கா கணவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசு, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டு செயலாளர் கோபி இளங்கோவன், அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்களும் கலந்துகொண்டனர்

பெரியார் விருதாளர் அய்யா இனியன் பத்மநாபன் அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் விழா 15022017 ஈரோடு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு மாவட்ட ஆலோசகர், பெரியார் விருதாளர் அய்யா இனியன் பத்மநாபன்  அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் விழா 15,02,2017 புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு ஹோட்டல் ரீஜென்சியில் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்ற, தோழர்கள் நாத்திகஜோதி, சண்முகப்பிரியன், செல்லப்பன், வேணுகோபால், கவிஞர் சின்னப்பன், பாரதிதாசன் கல்லூரிப் பேராசிரியர் சதீஸ்குமார், ஆசிரியர் சிவகாமி, கிருஷ்ணமூர்த்தி, வசந்தி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன்  ஆகியோரதுவாழ்த்துரையை தொடர்ந்து……..             கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக அய்யா இனியன் பத்மநாபன் அவர்கள் ஏற்புரையில் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இவ்விழாவில் அய்யாவின் குடும்பத்தார்களும், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்ட தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தினர்.          பிறந்தநாள் விழா மகிழ்வாக அய்யா இனியன் பத்மநாபன் அவர்கள் கழக வளர்ச்சிக்கு ரூ...

பெரியாரியல் பயிற்சி வகுப்பு தூத்துக்குடி 12022017

பெரியாரியல் பயிற்சி வகுப்பு தூத்துக்குடி 12022017

வருகிற 12-02-2017 அன்று (ஞாயிறு) தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இடம்: முத்து மஹால் நேரம்: காலை 9 மணி. அனைவரும் வருக

ஜாதி மறுப்பு இணையர்களுக்கான பாராட்டு விழா மேட்டூர் 12022017

ஜாதி ஒழிய சமத்துவம் படைக்க புதிய உலகை உருவாக்க ஆதலால் காதல் செய்வீர்…. ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்போம் சமத்துவ சமூகம் படைப்போம்….. காலை 10 – 12 கருத்தரங்கம் நண்பகல் 12 – 1 இணையர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பிற்பகல் 2 – 3 கலை நிகழ்ச்சிகள் மாலை 3 – 4 இணையர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்துதல் மாலை 4 முதல் பாராட்டு விழா வாய்ப்புள்ள தோழர்கள் முன்பதிவு செய்து தவறாமல் கலந்து கொள்ளவும் 9965025847 8056460580 செய்தி இரண்யா

அரியலூர் நந்தினிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் ஆத்தூர் 06022017

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆத்தூரில்….. அரியலூர் சிறுமி நந்தினி வன்கொடுமை கொலையை கணடித்தும் இந்து முன்னனியியை சேர்ந்த ராஜசேகர் மற்றும் கொலையாளிகள் அனைவரையம் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். பங்கேற்றோர்… குடியுரிமை மக்கள் கழகம். பெண்கள் இணைப்புக் குழு. மார்க்சிய லெனினிஸ்ட். திராவிடர் கழகம். விடுதலை சிறுத்தைகள் கட்சி. திராவிடர் விடுதலைக் கழகம்.ஆத்தூர். செய்தி கணபதி

பொள்ளாச்சி திவிக ஆர்ப்பாட்டம் 06022017

பொள்ளாச்சி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக அரியாலூர் தழித்சிறுமி நந்தினியை பாலியல் செய்து கொலைசெய்த இந்து முண்ணனி காமுகனை கடுமையான தண்டனைச்சட்டம் இயற்றி நந்தினிக்கு நீதிகிடைக்கவேண்டும் எனறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .    

கோபி நகர தோழர் நாகப்பன் படத்திறப்பு 30012017

கோபி நகர தோழர் நாகப்பன் படத்திறப்பு 30012017

கடந்த 12.01.2017 அன்று மறைந்த கோபி நகர கழகத்தலைவர் தோழர் நாகப்பன் அவர்களின் படத்திறப்பு 30.01.2017 அன்று கொளப்பலூரில் நடைபெற்றது படத்திறப்பு நிகழ்விற்கு மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார் மாநில அமைப்பு செயலாளர் தோழர் இரத்தினசாமி, மாநில பொருளாளர் தோழர் துரைசாமி ஆகியோர் தோழர் நாகப்பன் அவர்களின் படத்தை திறந்து வைத்தனர் படத்திறப்பு நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் தோழர் சிவகாமி தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன் திராவிடர் கழக தோழர் யோகானந்தம் மணிமொழி மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். செய்தி ம. நிவாசு

கொளப்பலூர் கழகத்தின் சார்பாக தமிழர் திருவிழா 30012017

கொளப்பலூர் கழகத்தின் சார்பாக தமிழர் திருவிழா 30012017

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி கொளப்பலூர் கிளை கழகத்தின் சார்பாக கடந்த 30.01.2017 அன்று தமிழர் திருவிழா நடைபெற்றது இந்நிகழ்விற்கு கொளப்பலூர் கிளை கழக தலைவர் தோழர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் அவரின் தலைமை உரையின் போது சாலைகளில் தேங்காய் பூசணிக்காய் உடைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அதனை உடைப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி உரையாற்றினார் தொடர்ந்து திருச்சி விரட்டு கலை பண்பாட்டு மையத்தின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது கலைக்கழு சார்பாக மயிலாட்டம்,ஒயிலாட்டம்,பறையாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒன்னுமில்லை எனும் பகுத்தறிவு நாடகம் நடைபெற்றது. மக்கள் இன்றைய காலகட்டத்தில் ஒன்னுமில்லா விசயங்களுக்காக எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று நாடகத்தின் மூலம் விளக்கினார்கள் கலை நிகழ்ச்சியில் மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் அவர்கள் உரை நிகழ்த்தினார் அவர் உரையாற்றும் போது உயிரின தோற்றம் குறித்தும் அறிவியல் வளர்ச்சி குறித்தும் விளக்கமாக உரையாற்றினார் தொடர்ந்து இரவு 10.30 மணி வரை...

நந்தினிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட அரியலூர் மாவட்டம் செந்துரை அருகில் சிறுகடம்பூர் தலித் சிறுமி நந்தினி படுகொலையை கண்டித்தும் 1.நந்தினியின் கூட்டுபாலியல் வன்கொலையின் முக்கிய குற்றவாளி இந்து முன்னனி மாவாட்ட தலைவர் ராஜசேகரனை உடனே கைது செய். 2. தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதி மத கலவரங்களை தூண்டிவரும் இந்துமுன்னனி அமைப்பை தடைசெய். 3.நந்தினி குடும்பத்திற்கு ஒருகோடி நிதியும் அரசு வேலையும் உடனே வழங்கு. 4.சாதி மத அமைப்புக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எதிராகவும் சாதிய உணர்வோடு செயல்படும் காவல்துறை ஆய்வாளர் மற்றும் Dsp மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து உடனே கைது செய். 5. வழக்கினை CBI விசாரனைக்கு உத்திரவிடு. 6. நந்தினி குடும்பத்திற்க்கு உரிய பாதுகாப்பு வழங்கிடு. 7. மாவட்டதோறும் இயங்கும் தீண்டாமை ஒழிப்பு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடு. 8. SC ST வழக்குகளை விசாரிக்க தனி நீதீமன்றம்...

ஜாதி மறுப்பு இணையர்களுக்கான பாராட்டு விழா திருப்பூர் 12022017

ஜாதி ஒழிய சமத்துவம் படைக்க புதிய உலகை உருவாக்க ஆதலால் காதல் செய்வீர்…. ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்போம் சமத்துவ சமூகம் படைப்போம்….. தோழர்கள் முன்பதிவு செய்து தவறாமல் கலந்து கொள்ளவும்

விழுப்புரம் மாவட்டத்தில் 30 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் 30 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வனத் தாம்பாளையம் கிராமத்தில் இளையரசன் இல்லத்தில் நடைபெற்றது. ஜனவரி 8 மாலை 3 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் சிவராந்தகம், பள்ளி மேளயனூர், மருதூர் வனத்தாம் பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து முப்பது தோழர்கள், இளையரசன் தலைமையில் கழகத்தில் இணைந்தனர். பின் புதிய தோழர்களிடம் கழகச் செயல்பாடுகள் குறித்து விழுப்புரம் அய்யனார் உரை யாற்றினார். இந்நிகழ்வில் புதுச்சேரி தீனா, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் க. இராமன்,  கி. சாமிதுரை, மா. குமார், சென்னை ஜான் மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 02022017 இதழ்