விழுப்புரத்தில் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்க நாள்

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் தலைமையில் ஜாதி ஒழிப்பிற்காக சட்ட எரிப்பு போரட்டத்தில் உயிர்நீத்த, சிறைசென்ற போராளிகள் 60 ஆம் ஆண்டு நினைவும் தமிழீழத் தலைவன் பிரபாகரன் 63 ஆவது பிறந்தநாள் நிகழ்வும் 26.11.17 காலை 10 மணியளவில்  வனத்தாம்பாளையத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ஜெயரட்சகன், மாவட்ட செயலாளர் இராவண இராமன், மாவட்ட அமைப்பாளர் சிறீதர் நிவேதிதா, பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் தீனா,  பெலிக்ஸ், கிளை பொறுப்பாளர்கள் பாபு,  தமிழ், சிறீநாத், விசிக பொறுப்பாளர் தெய்வ நாயகம் மற்றும் அப்பகுதித் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 30112017 இதழ்

You may also like...