Category: திவிக

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

சேலம் – சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், 16.11.2019 அன்று சேலம் இளம்பிள்ளை நகர அமைப்பாளர் தனசேகர் இல்லத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கலந்துரையாடல் கூட்டத்தில், நீலச் சட்டைப் பேரணிக்கு தோழர்கள் அதிகளவில் பங்கேற்பது, சேலத்தில் அலுவலகம் அமைப்பது, கிளைக் கழக பயிற்சி வகுப்புகள், மாணவர் பிரச்சினைக்கான துண்டறிக்கைகளை கல்லூரி முன்பு மாணவர்களிடத்தில் கொடுப்பது போன்ற கருத்துக்கள் தோழர்களால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இறுதியாக கழகத் தலைவர், தோழர்களிடத்தில் கழகச் செயல்பாடுகள் மற்றும் நீலச் சட்டைப் பேரணிக்கு அதிகளவில் பங்கேற்பதன் நோக்கம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். கலந்துரையாடலில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சேலம் மாநகரத் தலைவர், சேலம் சரவணன் (மூணாங்கரடு), கிழக்கு...

பேரா பி விருத்தாசலனார் நினைவேந்தல் கருத்தரங்கம் ! – தஞ்சாவூர் 17112019

பேரா பி விருத்தாசலனார் நினைவேந்தல் கருத்தரங்கம் ! – தஞ்சாவூர் 17112019

பேரா பி விருத்தாசலனார் நினைவேந்தல் கருத்தரங்கம் ! நாள் : 17.11.2019.ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி இடம் : நாவலர் ந.மு.வேங்கட்டசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, தஞ்சாவூர். கருத்துரை : சமூக விடுதலை எனும் தலைப்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும், ஊடக அறம் எனும் தலைப்பில் ஊடகவியலாளர் திரு.ஜென்ராம் அவர்களும் கருத்துரையாற்றுகிறார்கள்.  

கழகத் தலைவர் தோழர் ஆறுதல்

கழகத் தலைவர் தோழர் ஆறுதல்

கடந்த 06.11.2019 அன்று முடிவெய்திய திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக அமைப்பாளர் தோழர் அகிலன் அவர்களின் தாயார் முனியம்மாள் அவர்களின் இல்லத்திற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வந்திருந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் அப்போது கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி,மாவட்டத் தலைவர் முகில் ராசு, அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாதவன், அய்யப்பன், பல்லடம் சண்முகம், பரிமளராசன் உள்ளிட்ட தோழர்கள் உடன் இருந்தனர்.

இராசிபுரத்தில் கழகம் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம்

இராசிபுரத்தில் கழகம் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் இராசிபுரம் சார்பில் 10.11.2019 அன்று காலை 10 மணியளவில் இராசிபுரம் பட்டணம் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில்  பெரியாரியல் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சுமதி மதிவதனி வரவேற்புரையாற்றினார். இராசிபுர நகர அமைப்பாளர் பிடல் சேகுவேரா தலைமை வகிக்க, நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் முன்னிலை வகித்தார். மேலும் நிகழ்வில், பொன். நல்லதம்பி (தி.மு.க பேரூர் செயலாளர்), சுந்தரம் (அ.தி.மு.க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர்), இரத்தினம் (வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் மதுரை), மோகன் தாஸ் (தி.மு.க மாவட்ட மாணவரணி அமைப்பாளர்), கைலாஷ் (இராசிபுரம் ஒன்றிய செயலாளர் ம.தி.மு.க.) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்து கொண்டனர். காலை அமர்வில், ‘பெரியார்-அம்பேத்கர் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். உணவு இடைவேளைக்கு பின், ‘இட ஒதுக்கீடு மற்றும் சட்ட எரிப்பு போராட்ட வரலாறு’ குறித்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் உரையாற்றினார்....

வில்வித்தையில் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டு

வில்வித்தையில் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டு

திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் தமிழரசி-கொளத்தூர் குமார் ஆகியோரின் மகன் இனியன், காவலாண்டியூர் கலைச்செல்வி- விஜயகுமார்  ஆகியோரின் மகன் வளவன், அக்டோபர் 5, 6 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு வில்வித்தை சங்கம் (TAAT) நடத்திய மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றனர். அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அழைத்துப் பாராட்டினார். பெரியார் முழக்கம் 07112019 இதழ்

அரசுப் பேருந்துகளில் மத சுவரொட்டிகளை அகற்றக் கோரி கோவை கழகம் மனு

அரசுப் பேருந்துகளில் மத சுவரொட்டிகளை அகற்றக் கோரி கோவை கழகம் மனு

அரசுப் பேருந்துகளில் திட்டமிட்டு ஒட்டப்பட்டுள்ள மத அடையாள சுவரொட்டிகளை அகற்றுமாறு 16.10.2019 அன்று அரசு போக்குவரத்து கழகக் கோவை மாவட்ட மேலாண் இயக்குநரைச் சந்தித்து கோவை திவிக சார்பில் நேருதாஸ் தலைமையில்  மனு அளிக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட மேலாண் இயக்குநர், அப்படி இருந்தால் தவறு தான் நிச்சயம் இதன் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.  உடன் கலந்து கொண்ட தோழர்கள்: ஃபெரோஸ், வேல்முருகன் புஇக, இராவணன் தமிழ்ப் புலிகள்,  அஸ்வின் புஇமு,  ஜின்னா. பெரியார் முழக்கம் 07112019 இதழ்

வணிக நிறுவன விளம்பரப் பலகைகளில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் இயக்கம் கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் முடிவு

வணிக நிறுவன விளம்பரப் பலகைகளில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் இயக்கம் கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் முடிவு

திராவிடர் விடுதலைக் கழக  கல்லக்குறிச்சி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 02.11.2019 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சங்கராபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் க. மதியழகன், மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை, மாவட்டச் செயலாளர் க. இராமர், மாவட்ட துணை செயலாளர் மு.நாகராசு, மாவட்ட அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ. முருகன், ந. வெற்றிவேல், அன்பு ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கலந்தாய்வு கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கல்லக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து சமுதாய (குமுகாய) மக்களும் நுகர்வோராக வணிகம் செய்கின்ற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விளம்பர பலகையில் எழுதப்பட்டுள்ள சாதி பெயர்களை அகற்றக்கோரி மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்வதோடு  சாதி பெயர் எழுதப் பட்டுள்ள வணிக நிறுவன உரிமையாளர்களிடம்  சாதி பெயரை அகற்றக்கோரி வேண்டுகோள் வைப்பது என்று மாவட்ட கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையிலிருந்து...

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக சத்தியமங்கலம் நகர அமைப்பாளர் மூர்த்தி – பூங்கொடி இல்லத் திறப்பு விழா  கெம்பநாயக்கன்பாளையம் சத்தியில், 03.11.2019 அன்று காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். நிகழ்வில் ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை திருப்பூர் மாவட்டத் தோழர்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம் 3.11.2019 அன்று சத்தி கெம்பநாயக்கம் பாளையம் திரு. கிட்டுசாமி தோட்டத் தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர்  இரத்தினசாமி தலைமை யேற்று நோக்கவுரை ஆற்றினார். கழகத்தின் அடுத்த செயல் திட்டமாக மக்கள் சந்திப்பு இயக்கமும், கிராமங்கள் தோறும் பரப்புரைப் பயணமும், மருத்துவ முகாம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் உள்ளிட்டவைகளை நடத்த ஆலோசனை வழங்கினார். கழக மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மண்டலம் உள்ளடக்கிய ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை புறநகர், கோவை, நாமக்கல் மற்றும் திருப்பூர்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 11ஆவது சந்திப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 11ஆவது சந்திப்பு

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாத இதழான நிமிர்வோம் 11ஆவது வாசகர் வட்ட சந்திப்பு, தலைமை அலுவலகத்தில் 03.11.2019 அன்று மாலை 5.30 மணி யளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். தேன்ராஜ் மற்றும் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்டத்தின் நோக்கம் மற்றும் இனி வரும் காலங்களில் வாசகர் வட்ட சந்திப்புகள் குறித்து, நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் யுவராஜ் தொடக்கவுரை யாற்றினார். அதைத் தொடர்ந்து, வாசகர் வட்டத்தின் முதல் அமர்வில், ‘இசை நாடகத் துறையில் பெரியார் இயக்கம் விளைவித்த கலகம்’ என்ற தலைப்பில் அருண்குமார், ‘உயர்ஜாதி – ஏழை இடஒதுக்கீடு குறித்து’ தினேஷ்குமார், ‘சாதியக் கொடுமை யும் திராவிட இயக்கமும்’ என்ற தலைப்பில் ஊடகவியலாளரும் கழகத் தோழருமான பிரகாசும் உரையாற்றி னார்கள். இரண்டாம் அமர்வில், சட்ட எரிப்பு போராட்டத்தின் பெருமை மிகு வரலாறு குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்...

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! “சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?”

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! “சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?” திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை : அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி விட்டது. இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன.ஆனால் இது சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் தரப்பில் எடுத்துவைத்த வாதங்கள் அத்தனைதையையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதும், இந்துத்துவாவாதிகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றையும் உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ராமர் கோயிலை இடித்து விட்டு தான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று சங்பரிவார்கள் பிரச்சாரம் செய்தன.அங்கு கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. 1949...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்

பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச் செய்யப்படுவதா? அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரான இந்த இந்துத்துவ அடையாள திணிப்புகள் தமிழக அரசின் விழாக்களில் திட்டமிட்டு செய்யப்படுமானால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கை ! பெரியார் பல்கலைக் கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழா 24.10 2019 அன்று சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பல்கலைக் கழக துணைவேந்தர் பொ. குழந்தைவேலு, உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் பெரியாரின் படம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது தற்செயலாய் நடந்தது அல்ல. இந்துத்துவவாதிகளால் திட்டமிடப்பட்ட கடும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும். இந்நிகழ்வு நடைபெற்ற சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் ஆளுயர பெரியார் சிலை உள்ளது. இந்த பெரியார் சிலையின்...

திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின் 141 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 16.10.2019 அன்று மாலை 5 மணிக்கு அம்பத்தூர் ஓ.டி முருகன் கோவில் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக, பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா –  திருக்குறள் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு ,  தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர், சௌ.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இல.குமார் வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து, அ.சி.சின்னப்பத் தமிழர் (தமிழ்வழிக் கல்வி இயக்கம்), ஆவடி நாகராசன் ( தந்தை பெரியார் திராவிடர் கழகம்), சிவ செந்தமிழ்வாணன் (தமிழ் தேசக் குடியரசு இயக்கம்), க.சூரியா (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), என்.கே.மூர்த்தி (டாக்டர் கலைஞர் பத்திரிக்கையாளர் சங்கம்), கார்வேந்தன் (திராவிடர் கழகம்), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்) ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக பூ.இராமலிங்கம், (திராவிடர் கழகம்) ...

தீவாளி, நல்விழா நாளா? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தீவாளி, நல்விழா நாளா? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா? தீயனா? அசுரன்என் றவனை அறைகின் றாரே? இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே? இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது? இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர் பன்னு கின்றனர் என்பது பொய்யா? இவைக ளைநாம் எண்ண வேண்டும். எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா? வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம். ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும் தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது! ‘உனக்கெது தெரியும் உள்ளநா ளெல்லாம் நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா? ‘ என்று கேட்பவனை ‘ஏனடா குழந்தாய்! உனக்கெது தெரியும் உரைப்பாய் ‘என்று கேட்கும்நாள் மடமை கிழிக்கும்நாள் அறிவை ஊட்டும்நாள் மானம் உணருநாள் இந்நாள். தீவா வளியும் மானத் துக்குத் தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவீரே! நிமிர்வோம் அக்டோபர் 2019 மாத இதழ்

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்

  09.10.2019 அன்று ஜாதி  ஒழிப்பு போராளி தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாளை யொட்டி  பரமக்குடி யிலுள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச் செய லாளர் சந்திர போஸ் ஆகியோர் காலை 10:30 மணிக்கு புகழஞ்சலி செலுத்தினர். உடன் திராவிடர் விடுதலைக் கழக மதுரை மாவட்டச் செயலாளர் மணி அமுதன், மேலூர் பொறுப்பாளர் சத்யமூர்த்தி, ஆய்வு மாணவர் மாளவிகா, பொன்னான்டி உள்ளிட்ட மதுரை மாவட்டக் கழகத்  தோழர்கள் மற்றும் தியாகி இமானுவேல் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாலை 5 மணிக்கு  தியாகி இமானுவேல் பேரவை மானாமதுரையில் ஏற்பாடு செய்திருந்த ‘ஜாதி ஒழிப்பு கருத்தரங்’கிற்கு  தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச் செயலாளர் சந்திர போஸ் தலைமை தாங்கினார்.  தமிழ்த் தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் கே.எம்.ஷெரீப், கழகத் தலைவர் கொளத்தூர்...

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச்செய்யப்படுவதா ?  கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச்செய்யப்படுவதா ? கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !

” *பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச்செய்யப்படுவதா ?* *”கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !”* அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரான இந்த இந்துத்துவ அடையாள திணிப்புகள் தமிழக அரசின் விழாக்களில் திட்டமிட்டு செய்யப்படுமானால் *கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கை !* பெரியார் பல்கலைக் கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழா 24.10 2019 அன்று சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாநில ஆளுனர் பன்வாரிலால் புரோகித்,தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,பல்கலைக் கழக துணைவேந்தர் பொ.குழந்தைவேலு,உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் பெரியாரின் படம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.இது தற்செயலாய் நடந்தது அல்ல. இந்துத்துவ வாதிகளால் திட்டமிடப்பட்ட கடும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும்.(காண்க : அழைப்பிதழ் ) இந்நிகழ்வு நடைபெற்ற சேலம் பெரியார் பல்கலைக் கழக...

சீமான், விளம்பர விரும்பி… கைத்தட்டலுக்காகப் பேசுகிறார்!”  – கொளத்தூர் மணி

சீமான், விளம்பர விரும்பி… கைத்தட்டலுக்காகப் பேசுகிறார்!” – கொளத்தூர் மணி

  நன்றி:- ஜூனியர் விகடன் `ஆமாம், நாங்க தான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். இந்திய ராணுவத்தை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பி, தமிழின மக்களை அழித்தொழித்த தமிழின துரோகி ராஜீவ் காந்தியை, தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்’ – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்தக் கடும் சர்ச்சைப் பேச்சு தான் தமிழக, ஏன் இந்திய அரசியலில் ஹாட் டாபிக். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவரும், சீமானின் அரசியல் முகம் அறியாத கால கட்டத்திலேயே தனது இயக்கத்தின் கூட்டங்களில் மேடையேற்றிப் பேச வைத்தவருமான திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்தோம். “உங்களுக்கும் சீமானுக்குமான தொடர்பு எப்படி உருவானது?” “திரைப்பட வாய்ப்பு தேடி கிராமங்களிலிருந்து புறப்பட்டு வரும் பலருக்கும் அடைக்கலம் கொடுப்பார் கவிஞர் அறிவுமதி. அப்படி வந்தவர் தான் சீமான். 2001 ஆம் ஆண்டு, தந்தை...

கோவையில் 2019 டிசம்பர் 15 நீலச் சட்டைப் பேரணி

கோவையில் 2019 டிசம்பர் 15 நீலச் சட்டைப் பேரணி

கோவையில் 2019 டிசம்பர் 15 நீலச் சட்டைப் பேரணி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்வைத்து, எதிர்வரும் 2019 டிசம்பர் 15 ஞாயிறு அன்று கோவை மாநகரில் நீலச்சட்டைப் பேரணியும், ஜாதி ஒழிப்பு மாநாடும் நடத்துவதென 20-10-2019 ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது கழகத் தோழர்களும், ஜாதி ஒழிப்பில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும், நீலச் சட்டையோடு பேரணியிலும் மாநாட்டிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டு, ஜாதி ஒழிப்புக்கு வலுசேர்க்க, உடனே திட்டமிடுமாறு உரிமையுடன் வலியுறுத்துகிறோம் கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

சுயமரியாதை கால்பந்து போட்டி நிகழ்ச்சி தள்ளிவைப்பு

சுயமரியாதை கால்பந்து போட்டி நிகழ்ச்சி தள்ளிவைப்பு

சென்னை தொடர் மழையின் காரணமாக, தந்தை பெரியாரின் 141 ஆவது பிறந்தநாள் கால்பந்து போட்டி(20.10.2019) மற்றும் பரிசளிப்பு விழா, மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் (23.10.2019) ஆகியவை தள்ளி வைக்கப்படுகிறது.. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்   மயிலை பகுதி சென்னை திவிக  

மயிலாடுதுறையில் ஒரு நாள் பயிற்சி முகாம்

மயிலாடுதுறையில் ஒரு நாள் பயிற்சி முகாம்

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 8.10.2019 அன்று பெரியாரியல் பயிற்சி முகாம் கீழ் நாஞ்சில் நாடு பகுதியிலுள்ள பாலாஜி திருமண மண்டபத்தில் நடந்தது. குடந்தைப் பகுதியில் கழகத்தில் இணைந்த தோழர்கள் தரங்கம்பாடி நன்னிலம் பகுதி மற்றும் மயிலாடுதுறைத்  தோழர்கள் ஆதரவாளர்கள் 68 பேர் கலந்து கொண்டனர். பெரியார் யுவராஜ் கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். தலைமைக் குழு உறுப்பினர் இளைய ராஜா பயிற்சி முகாம் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.  தஞ்சை தோழர் பசு. கவுதமன், சாக்கோட்டை இளங்கோவன் உரையைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் இயக்கத்தின் அடிப்படை இலட்சியம் அணுகுமுறை பெரியார் இயக்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து  வகுப்புகள் எடுத்தனர். பயிற்சியாளர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அதற்கு கழகத் தலைவர், பொதுச் செயலாளர் விளக்கமாக பதில் அளித்தனர். மாலை 7 மணி வரை பயிற்சி வகுப்பு நடந்தது. மயிலாடுதுறை...

பெரியார் கொள்கை விளக்கக் கூட்டங்கள்

பெரியார் கொள்கை விளக்கக் கூட்டங்கள்

குமாரபாளையத்தில் : 28.09.2019 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு, மு.கேப்டன் அண்ணாதுரை தலைமை வகிக்க, மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்ட செயலாளர் சரவணன், காளிபட்டி பெரியண்ணன், இராசிபுரம் பிடல் சேகுவேரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் தொடக்கமாக காவை இளவரசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் கோபி வேலுச்சாமி, பகுத்தறிவுக் கருத்துக்களை நகைச்சுவையாக எடுத்துக் கூறினார். இறுதியாக கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வின் மோசடிகள் போன்றவற்றைப் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினார். குமாரபாளையம் பகுதி  மோகன் நன்றி கூறினார். பொதுக் கூட்டத்திற்கு காளிப்பட்டி, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், இராசிபுரம், ஈரோடு, பவானி பகுதிகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் இல்லம் திராவிடமணி இல்லத்தில் தோழர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மதுரையில் :  30...

காவல் நிலையங்களில் ஆயுத பூஜை நிறுத்தக் கோரி கோவை கழகம் காவல்துறையில் மனு

காவல் நிலையங்களில் ஆயுத பூஜை நிறுத்தக் கோரி கோவை கழகம் காவல்துறையில் மனு

அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த பண்டிகைகள் கொண்டாடக்கூடாது என்று அரசாணை உள்ளது. எனவே அந்த அரசாணையை அரசு அதிகாரிகள் முறையாக காப்பாற்ற வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  5.10.2019  அன்று கோவை மாநகர காவல் ஆணையாளரிடமும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும்  கழகத் தோழர்கள்  நிர்மல், வெங்கட், கிருஷ்ணன், இயல் ஆகியோர் மனு கொடுத்தனர். பெரியார் முழக்கம் 10102019 இதழ்

தமிழகம் தழுவி கழகம் ஆர்ப்பாட்டம் கல்வி நகலைக் கிழித்து கழகத்தினர் கைது

தமிழகம் தழுவி கழகம் ஆர்ப்பாட்டம் கல்வி நகலைக் கிழித்து கழகத்தினர் கைது

காமராசர் நினைவு நாளான அக்.2 ஆம் தேதி புதிய கல்விக் கொள்கை நகலைக் கிழித்தெறியும் ஆர்ப்பாட்டங்களை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தித் தொகுப்பு: சென்னை : தேசிய கல்விக் கொள்கையின் நகல் கிழிப்புப் போராட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் காமராசர் நினைவு நாளான அக். 2ஆம் தேதி பகல் 11.30 மணியளவில் நடந்தது. காமராசர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தோழர்கள் புதிய கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெறு என்ற முழக்கத்துடன் கல்விக் கொள்கை நகலை கிழித்து எறிந்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெண் தோழர்கள் உள்ளிட்ட 70 தோழர்கள் கைதானார்கள். சிந்தாதிரிப் பேட்டையில் திருமண மண்டபத்தில் வைக்கப் பட்டனர். அங்கே பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் புதிய கல்வித் திட்டத்தின் ஆபத்துகளை...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா,  திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

தந்தை_பெரியார்_பிறந்தநாள்_விழா, #திருக்குறள்_மாநாடு_விளக்கப்_பொதுக்கூட்டம்.. நாள்: 12.10.2019 மாலை 5 மணி இடம்: அம்பத்தூர், முருகன் கோவில் அருகில் சிறப்புரை: #தோழர்_கொளத்தூர்_மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் #தோழர்_பொழிலன் தமிழக மக்கள் முண்ணனி #தோழர்_திருமுருகன்_காந்தி ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம் #தோழர்_குடந்தை_அரசன் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி

திருப்பூரில் பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைப்பிரச்சாரம் !

திருப்பூரில் பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைப்பிரச்சாரம் !

திருப்பூரில், பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைப் பிரச்சாரம் ! பறையிசையுடன்………. நாள் : 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ! தெருமுனை பிரச்சாரம் நடைபெறும் இடங்கள் : 1)கொங்கணகிரி 2)பாரதிநகர் 3)சாரதா நகர் 4)கிருஷ்ணா நகர் 5) மாஸ்கோநகர் நிகழ்ச்சி ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் திருப்பூர் மாவட்டம்.

கழக ஏடுகளுக்கு நன்கொடை

கழக ஏடுகளுக்கு நன்கொடை

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட வடசென்னை கழக  இணையர்கள் தினகரன்-ஜெயந்தி ஆகியோர் குழந்தைப் பிறந்த மகிழ்வாக கழக ஏடுகளின் வளர்ச்சிக்கு ரூ.10,000/-த்தை பெரியார் பிறந்த நாளான செப். 17 அன்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 03102019 இதழ்

பெரியார் யுவராஜ்-லீலாவதி  ஜாதி-தாலி சடங்கு மறுப்பு மணவிழா

பெரியார் யுவராஜ்-லீலாவதி ஜாதி-தாலி சடங்கு மறுப்பு மணவிழா

சென்னை மாவட்ட ‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட அமைப்பாளரும் கழக செயற்பாட்டாளருமான பெரியார் யுவராஜ்-லீலாவதி ஜாதி-சடங்கு-தாலி மறுப்பு மணவிழா, செப். 22, 2019 அன்று மயிலாடுதுறை சோழம்பேட்டை கே.ஜி.ஆர். திருமண மண்டபத்தில் மாலை 7 மணியளவில் நிகழ்ந்தது. நாகை மாவட்ட கழகச் செயலாளர் மகேஷ் வரவேற்புரையாற்றினார். தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைத்தார். முன்னதாக கோவை கழகத் தோழர் இசைமதி – பெண்ணுரிமைப் பாடல் பாடினார். கோவை கழக செயல்பாட்டாளர் நிர்மல்குமார், கழகத் தோழர் இசைமதி ஆகியோர் ஜாதி மறுப்பு மணவிழாவை பொதுக் கூட்ட மேடையில் நடத்திக் கொண்டனர். தோழர் இசைமதியின் சகோதரியே லீலாவதி என்பது குறிப்பிடத்தக்கது. கொள்கையை உறவாக்கிக் கொள்ளும் பண்பாட்டுப் புரட்சியை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நிகழ்த்தி கழகத்துக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். கோவையிலிருந்து தனி...

வீதி நாடகம் கலை நிகழ்வுகளுடன் மேட்டூர் பயணக் குழு நடத்திய எழுச்சிப் பிரச்சாரம்

வீதி நாடகம் கலை நிகழ்வுகளுடன் மேட்டூர் பயணக் குழு நடத்திய எழுச்சிப் பிரச்சாரம்

17.09.2019 தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாளில் மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரைப் பயணம் சமத்துவபுரத்தில் காலை 10 மணிக்கு  தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சார பயணத்தை துவக்கி வைத்தார். பயணம் சமத்துவபுரம், மல்லிகுந்தம், மேச்சேரி, நங்கவள்ளி, குஞ்சாண்டியூர், சுஊ பிளாண்ட், ராமன் நகர், புதுச் சாம்பள்ளி, மேட்டூர் சுளு, தேசாய் நகர், சேலம் கேம்ப், தங்கமாபுரி பட்டிணம், காவேரி கிராஸ், மாதையன் குட்டை, புதுக் காலனி, பெரியார் நகர், தூக்கணாம்பட்டி, காவேரி நகர், சின்ன பார்க், பாரதிநகர், குமரன் நகர், பொன்னகர், ஆஸ்பத்திரி காலனி, ஒர்க் ஷாப் கார்னர், பெரியார் பேருந்து நிலையம், மேட்டூர் நகர படிப்பகம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் கொடி யேற்று விழாவாகவும் இரு சக்கர வாகன பேரணியாகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவினை கழகப் பொறுப்பாளர்களும் தோழர் களும் சிறப்பாக நடத்தினார்கள். கொடியேற்று...

மக்கள் பேராதரவோடு நடந்த திருப்பூர், கோவை பரப்புரை

மக்கள் பேராதரவோடு நடந்த திருப்பூர், கோவை பரப்புரை

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பிரச்சாரப் பயணத்தில் 4 நாட்களிலும் பெண் தோழர்கள் துண்டறிக்கை கொடுப்பது கடைகளில் வசூல் செய்வது என்று சிறப்பாக செய்தார்கள், குறிப்பாக, பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகளிடம் கருத்துகளை அதிகம் கொண்டு சேர்க்கப்பட்டது, திருப்பூர் அருள்புரம் பகுதி இந்து முன்னணி அதிகம் உள்ள பகுதி அங்கு நிறைய பேர் நிகழ்ச்சியை கேட்டார்கள்; புத்தகங்களும் வாங்கி சென்றார்கள், கோவை, செட்டிபாளையம், பனப்பட்டி, புதிய பகுதி எந்த இடையூறும் இன்றி சிறப்பாக நிகழ்வு நடந்தது, உடுமலை பேருந்து நிலையத்தில், பேருந்துகளில் பயணம் செய்வேரிடம், ஒவ்வொரு பேருந்திலும் நிர்மல்குமார் கருத்துகளை சொல்ல தோழர்கள், முனியப்பன், கிருஷ்ணன் இருவரும் நிதி வசூல் செய்தார்கள். நல்ல வரவேற்பு இருந்தது 1 மணி நேரத்தில் இரண்டாயிரத்து தொண்ணூற்று ஒரு ரூபாய் வசூல் செய்தார்கள், காங்கேயம் பேருந்து நிலையத்தில் நிகழ்வு நடக்கும் போது இந்து முன்னணியைச் சேர்ந்த 4 – 5 பேர் வந்து வீடியோ எடுத்து...

நகல் கிழிப்பு ஏன்? சென்னையில் ஒரு நாள் பரப்புரைக் கூட்டங்கள்

நகல் கிழிப்பு ஏன்? சென்னையில் ஒரு நாள் பரப்புரைக் கூட்டங்கள்

கல்விக் கொள்கை நகல் கிழிப்புப் போராட்டத்தை விளக்கி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் செப். 30 அன்று காலை முதல் இரவு வரை சென்னையில் பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் நடந்தது. ஓட்டேரி, வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி, மேற்கு சைதாப்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நடந்த பரப்புரை கூட்டங்களுக்கு முறையே தட்சிணாமூர்த்தி, சங்கிதா, இராஜி, ப. அருள், மனோகர், கரு. அண்ணாமலை தலைமை தாங்கினர். இரா. உமாபதி, அய்யனார், சுகுமார் கூட்டங்களில் உரையாற்றினர். நாத்திகன் பாடல்களைப் பாடினார். 22 தோழர்கள் பயணக் குழுவில் இடம் பெற்றனர். துண்டறிக்கைகள் மக்களிடம் வழங்கப்பட்டன. பெரியார் முழக்கம் 03102019 இதழ்

கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

28.9.2019 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில், கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக் கோட்டையை அடுத்த சிகரபள்ளி குமார் தோட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி  முன்னிலையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட வர்களை மாவட்டக் கழகச் செயலாளர் குமார் வர வேற்றுப் பேசினார். வாஞ்சிநாதன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினர் தொடர்ந்து அலேசீபம் பழனி, நீலகிரி கிருஷ்ணன், உத்தனப்பள்ளி முனிராஜ், தாசனபுரம் சுப்பு, யூபுரம் மல்லேஷ் ஆகியோர் தங்கள் கருத்துக்களையும், கழக செயல்பாட்டு திட்டங் களையும் குறித்து கருத்துக்களை முன் வைத்தனர். அவரைத் தொடர்ந்து கழக அமைப்புச் செய லாளர் ஈரோடு இரத்தினசாமி கழகத்தின் நிலைப் பாடுகள் குறித்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எழுச்சியுடன் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்தும், பெரியாரியல் கொள்கைகளை விளக்கியும் அவற்றை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகளை எடுத்துக் கூறியும்...

எழுச்சி நடைபோட்டது பள்ளிபாளையம் கழக மாநாடு

எழுச்சி நடைபோட்டது பள்ளிபாளையம் கழக மாநாடு

‘சமூக நீதியைப் பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தைத் திணிக்காதே’ என்ற முழக்கங்களை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்களுக்கான பரப்புரைப் பயணக் குழுக்கள் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஒன்று சேர்ந்தன. சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருப்பூர், கோபி, மேட்டூரிலிருந்து கழக செயல்பாட் டாளர்கள், பெண்களும் ஆண்களும் மக்களைச் சந்தித்து தமிழகத்தைச் சூழ்ந்து நிற்கும் வேலை, கல்வி உரிமைகள் பறி போகும் ஆபத்துகளை எடுத்து விளக்கினர். கலை நிகழ்வுகள், மேடைப் பேச்சுகள், துண்டறிக்கைகள், நூல்கள் வழியாக மக்களிடம் கருத்துகள் கொண்டு போய் சேர்க்கப் பட்டன. கட்சிகளைக் கடந்து கிராமங் களிலும் நகரங்களிலும் மக்கள் பேராதரவுடன் இந்தப் பரப்புரைப் பயணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. செப். 20ஆம் தேதிபிற்பகல் பயணக் குழுவினர் பள்ளிப்பாளையம் நோக்கி வரத் தொடங்கினர். நேரு திடலில் நிறைவு விழா மாநாடு மாலை 6 மணியளவில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்....

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம்

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம்

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டமானது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணியளவில் துவங்கியது. சேலம் மாநகர அமைப்பாளர் தோழர் பாலு அவர்களின் கண்டன முழக்கங்கள் எழுப்ப அதை தொடர்ந்து கழக தலைவர் அவர்கள் புதிய தேசிய கல்வி கொள்கையின் நகல் கிழித்தெரியும் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி கண்டன உரையாற்றினார். அதை தொடர்ந்து நம் தோழர்களின் கண்டன முழக்கங்களோடு புதிய தேசிய கல்வி கொள்கையின் வரைவு நகல்கள் கிழித்தெரிய பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் டேவிட் ஒருங்கிணைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 110 தோழர்கள் கலந்து கொண்டனர். 5 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 85 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோட்டை கமலா மஹால் மண்டபத்தில்...

திருப்பூர் நகர திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் நகர திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் நகர திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம் தோழர் முத்துலட்சுமி அவர்கள் வீட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிபாளையம் மாநாட்டு தீர்மானத்தின் படி புதிய கல்வி கொள்கை 2019 வரைவு அறிக்கை கிழித்தெரியும் போராட்டத்தை மாவட்ட தோழர்கள் அனைவரையும் ஒருங்கிணைந்து அக் 2ஆம் தேதி சிறப்பாக நடத்துவது எனவும் அய்யா பெரியாரின் 141 வது பிறந்த நாள் விழாவை  நகரம் முழுவதும் கொடியேற்று விழாவாக அக் 9ஆம் தேதி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தோழர்கள் முத்துலட்சுமி, முத்து, நீதிராசன், முகில்ராசு, துரைசாமி, அகிலன், அய்யப்பன், தனபால், யாழினி, யாழிசை ஆகியோர் கலந்து கொண்டனர்

தந்தை பெரியாரால் தலை நிமிர்ந்தோம் பொதுக்கூட்டம் மேலூர் மதுரை 23092019

தந்தை பெரியாரால் தலை நிமிர்ந்தோம் பொதுக்கூட்டம் மேலூர் மதுரை 23092019

மேலூர் மண்ணில் பெரியார் கொள்கையை பரப்பும் பொதுக் கூட்டம்.. தந்தை பெரியாரால் தலை நிமிர்ந்தோம் பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் .. செப்டம்பர் 23 மாலை 6 மணிக்கு துவங்குவதாக இருந்த பொதுக்கூட்டம் மழை காரணத்தால் நாளை 4 மணிக்கே மேலூரில் கலை நிகழ்ச்சிகளோடு – பொதுக்கூட்டம் துவங்கியது திருநங்கை செயற்பாட்டாளர் அன்பு அம்மா பாரதி கண்ணம்மா… பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார்கள் எழுச்சியுடன் நடந்த பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்களுக்கும் கூட்டத்திற்க்கு முக்கிய பங்காற்றிய தோழர் பக்ருதீன் அவர்களுக்கும் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நினைவு பரிசை வழங்கி சிறப்பித்தார்கள் செய்தி மணி அமுதன்  

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள்

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள்

தீர்மானம் எண் : 1 தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75 விழுக்காடு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் ! தமிழ்நாட்டில் பல இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நிலையில், மத்திய அரசு பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட நாட்டுக்காரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளமே அழிந்துபோகும் ஆபத்தை நாம் சந்திக்க வேண்டி வந்துவிடும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை அழிப்பது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே வடநாட்டு பண்பாட்டில் மூழ்கச் செய்து விடும். இந்த பேராபத்தைத் தடுக்க, மகாராஷ்டிரா ஆந்திரா இராஜஸ்தான் மாநில அரசுகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் குறைந்தது 75 விழுக்காட்டு வேலைவாய்ப்புகளை – தனியார் தொழில் நிறுவனங்களிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதுவே தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வாக...

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு !

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு !

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு ! 20.09.2019 வெள்ளிக்கிழமை ஈரோடு,பள்ளிபாளையம்,நேரு திடலில் மாநாடு நடைபெற்றது எங்கள் தலைமுறையை வாழவிடு ! தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே ! எனும் முழக்கத்துடன் தமிழ்நாட்டின் 5 முனைகளில் இருந்து 2 கட்டங்களாக மக்களை சந்தித்த பரப்புரை பயண குழு தோழர்கள் பறிக்கப்ப்படும் தமிழர்களின் உரிமைகள் குறித்து பரப்புரை செய்து அதன் நிறைவு விழா மாநாடாக இம்மாநாடு நடைபெற்றது. உரிமை முழக்க பாடல்களுடன் துவங்கியது மாநாடு. சிறப்பான வீதி நாடகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றன.அடுத்ததாக பரப்புரை பயண குழு தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கழக நிர்வாகிகள் உரைகளை அடுத்து கழகத்தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநாட்டில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

லீலாவதி-பெரியார் யுவராஜ் ஜாதி – தாலி – சடங்கு மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா !

லீலாவதி-பெரியார் யுவராஜ் ஜாதி – தாலி – சடங்கு மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா !

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாடுதுறை, சோழம்பேட்டை, கே.ஜி.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விணையேற்பு விழாவில் இருவீட்டார், கழகத்தின் முன்னணி நிர்வாக்கிகள், தோழர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழங்கப்பட்டது.

கனிமொழி- பத்மநாதன் திருமணம்

கனிமொழி- பத்மநாதன் திருமணம்

கோவை போத்தனூரில் உள்ள சங்கம் திருமண மண்டபத்தில் 8.9.2019 அன்று மாலை 7 மணிக்கு தோழர்கள் கனிமொழி – பத்மநாதன் ஆகியோருக்கு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையேற்று நடத்தி வைத்தார். திமுகவின்  முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, அந்தியூர் செல்வராஜ், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்,  தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி உரையாற்றினர். திருமணத்தில் கோவை பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 19092019 இதழ்

அண்ணா பிறந்தநாள்: கழகம் மாலை அணிவிப்பு

அண்ணா பிறந்தநாள்: கழகம் மாலை அணிவிப்பு

மயிலாடுதுறை : 15.09.2019 அன்று காலை 10 மணிக்கு அண்ணா 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப் பட்டது. உடன் மயிலாடு துறை கழகத் தோழர்கள் சென்றிருந்தனர். முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோவை : 15.09.2019 அன்று காலை 9 மணிக்கு, கழகத்தின் சார்பில் காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பப்பட்டது. வெங்கட், கிருஷ்ணன், அறிவரசு, மாதவன் சங்கர், நிர்மல், கிருஷ்ணமூர்த்தி, செந்தில் வடிவேல், மன்சூர் அலி, ராஜ்.  மேலும் திராவிட விழுதுகள் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 19092019 இதழ்

கழகத்தில் இணைந்தனர்

கழகத்தில் இணைந்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஸ்ரீராம், மாதவன், சுரேஷ், விஜய், கரண், அசோக்ராஜ், சின்னப்பதாஸ், மாரியப்பன், மணிகண்டன், தமிழ், மணிசேகரன், தேவேந்திரன், அருண் ஆகியோர்  திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்துள்ளனர். கும்பகோணம் அம்மன்பேட்டை கிளை அமைப்பாளராக ராஜ்குமாரும், கும்பகோணம் நகர அமைப்புச் செயலாளராக அசோக்கும் கழகத்தால் தலைமை ஒப்புதலோடு நியமிக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டக் கழகத் தலைவரும் தலைமைக் கழகப் பேச்சாளருமான சாக்கோட்டை இளங்கோவன் முயற்சியில் இவர்கள் கழகத்தில் இணைந்துள்ளனர். பெரியார் முழக்கம் 19092019 இதழ்

குடியாத்தம் இரா.ப.சிவா- ஜெ.பிரவினா மணவிழா

குடியாத்தம் இரா.ப.சிவா- ஜெ.பிரவினா மணவிழா

திராவிடர் விடுதலைக் கழகம் வேலூர் மாவட்ட செயலாளர் இரா.ப.சிவா-ஜெ.பிரவினா ஆகி யோரது வாழ்விணை ஏற்பு விழா 01.09.2019 அன்று காலை 10 மணி யளவில் குடியாத்தம், அம்மணாங் குப்பத்தில் உள்ள மதுரா மஹாலில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஜெ.செந்தமிழ் வரவேற்பு கூறினார். மருத்துவர் நா.எழிலன் (இளைஞர் சங்கம்), பால்.பிரபாகரன் (கழகப் பரப்புரைச் செயலாளர்), ப.திலிபன் (வேலூர் மாவட்ட செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார்.   நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார். பெரியார் முழக்கம் 12092019 இதழ்

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து! புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து! புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது

மதத்தை அரசியலாக்கும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் பதட்டத்தை உரு வாக்கி வருகிறது. வணிகர்கள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியினரால் நன்கொடை கேட்டு துன்புறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர். இந்து அரசியல் அமைப்புகளே தங்களுக்குள் மோதிக் கொள்கின்றன. போலி தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவே இந்த ஆண்டு விநாயகன் சிலை ஊர்வலம் நடத்துகிறோம் என்று இந்து முன்னணி வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இப்படி அறிவித்த பிறகும் விநாயகன் சிலை நிறுவுவோர் பெற வேண்டிய அரசுத் துறை அனுமதிகளை காவல் துறையே பெற்றுத் தருகிறது. ‘விநாயகன்’ என்பதே தமிழ் வழிபாட்டுக்குரிய கடவுளாக இருந்தது இல்லை. புலிகேசி மன்னன் காலத்தில் மராட்டியத்துக்கு படை எடுத்துச் சென்றபோது வெற்றியின் நினைவு சின்னமாக படைத் தளபதி வாதாபியிலிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டதுதான் ‘விநாயகன்’ சிலை. திலகர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக விடுதலை பெறவேண்டும் என்று நடத்திய போராட்டங் களுக்கு ‘விநாயகனை’ அரசியலுக்குப் பயன் படுத்தினார். அந்த மத...

ஒரே தத்துவம் ஒரே கலாச்சாரம் கொண்டதா இந்து மதம்…????  அசுரர்களை வரவேற்கும் திருஓணம்..!!

ஒரே தத்துவம் ஒரே கலாச்சாரம் கொண்டதா இந்து மதம்…???? அசுரர்களை வரவேற்கும் திருஓணம்..!!

ஒரே தத்துவம் ஒரே கலாச்சாரம் கொண்டதா இந்து மதம்…???? அசுரர்களை வரவேற்கும் திருஓணம்..!! தேவர் அசுரர் போராட்டங்களை சித்தரிப்பது தான் நமது புராணக் கதைகள். வேறு வகையாக சொல்லவேண்டுமானால், ஆரிய திராவிடப் போராட்டத்தில் ஆரியர்களை எதிர்த்து கேள்வி கேட்ட திராவிடர்களை, ஆரியர்கள் சூழ்ச்சியின் வாயிலாக அழித்து ஒழித்ததை நியாப்படுத்தும் கதைகளே புராணக் கதைகள். வரலாறுநெடுக இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், கேரளத்தின் கதையோ வேறு விதமாக இருக்கிறது. கேரளத்தில் இன்றைக்கு மலையாளிகள் திருஓணம் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். வாமணன் திருமால் வடிவம் எடுத்து அங்கே நல்லாட்சி செய்த மாவேலி யிடம் மூன்று வரங்களை கேட்டான். மாவேலி ஒரு அசுரன். தேவர்களை எதிர்த்தவன். தேவர்களை எதிர்த்த அசுரனை சூழ்ச்சியால் ஒழிப்பதற்காக, வாமணன் என்ற வேடம் எடுத்து, மாவேலி அரசனிடம் எனக்கு மூன்று அடிகளைத் தர வேண்டும் என்று அவன் கேட்டான். மன்னனும் ஒப்புக் கொண்டார். தேவனாகிய வாமணன் முதல் அடியில் உலகம் முழுவதையும்...

இரா ப சிவா – ஜெ பிரவீனா வாழ்விணையேற்பு விழா ! குடியேற்றம் 01092019

இரா ப சிவா – ஜெ பிரவீனா வாழ்விணையேற்பு விழா ! குடியேற்றம் 01092019

இரா ப சிவா – ஜெ பிரவீனா வாழ்விணையேற்பு விழா ! 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை,காலை 10.00 மணியளவில் வேலூர் மாவட்டம்.அம்மனா குப்பம், குடியேற்றம், மதுரா மஹாலில் தி.மு.க.மகளிர் அணி செயலாளர் கவிஞர் கனிமொழி MP, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, அவர்கள் வாழ்விணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்து உரையாற்றினார். கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழமை அமைப்பினர் கலந்து கொண்டனர்.

புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது !

புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது !

மதத்தை அரசியலாக்கும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் பதட்டத்தை உருவாக்கி வருகிறது. வணிகர்கள், இந்து முன்னணி,இந்து மக்கள் கட்சியினரால் நன்கொடை கேட்டு துன்புறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர்.இந்து அரசியல் அமைப்புகளே தங்களுக்குள் மோதிக் கொள்கின்றன. போலி தமிழ்த்தேசியத்துக்கு எதிராகவே இந்த ஆண்டு விநாயகன்சிலை ஊர்வலம் நடத்துகிறோம் என்று இந்து முன்னணி வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.இப்படி அறிவித்த பிறகும் விநாயகன் சிலை நிறுவுவோர் பெற வேண்டிய அரசுத் துறை அனுமதிகளை காவல் துறையே பெற்றுத் தருகிறது.‘விநாயகன்’ என்பதே தமிழ் வழிபாட்டுக்குரிய கடவுளாக இருந்தது இல்லை. புலிகேசி மன்னன் காலத்தில் மராட்டியத்துக்கு படை எடுத்துச் சென்றபோது வெற்றியின் நினைவு சின்னமாக படைத் தளபதி வாதாபியிலிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டதுதான் ‘விநாயகன்’ சிலை. திலகர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக விடுதலை பெறவேண்டும் என்று நடத்திய போராட்டங்களுக்கு ‘விநாயகனை’ அரசியலுக்குப் பயன்படுத்தினார். அந்த மத அரசியல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சுதந்திரத்துக்குப் பிறகும் தொடர்ந்தது. இந்து முன்னணி...

எச். ராஜா கிராமத்துக்குள் நுழைய விடாமல் துரத்தப்பட்டார்

எச். ராஜா கிராமத்துக்குள் நுழைய விடாமல் துரத்தப்பட்டார்

கடலூர் மாவட்டம் அரியநாச்சி எனும் கிராமத்தில் கோயிலை புதுப்பிப்பது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சார்ந்த இரு பிரிவினருக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் செயலாளர்களில் ஒருவரான பார்ப்பனர் எச். ராஜா ஒரு பிரிவினருக்கு ஆதரவாக அக்கிராமத்துக்குள் நுழைய முயன்றார். அப்போது அரியநாச்சி கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எச். ராஜாவை கிராமத்துக்குள்ளேயே நுழைய விடாது கருப்புக் கொடி காட்டி தடுத்தனர். ஆன்மீகத்தின் பெயரால் மக்களைப் பிளவு படுத்தும் எச். ராஜா ஒழிக என்று முழக்கமிட்டனர். கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. வேறு வழியின்றி எச். ராஜா அவமானப்பட்டு திரும்பிப் போனார். தி.மு.க., அ.தி.மு.க.வினர் இணைந்து கண்டன சுவரொட்டிகளை ராஜாவுக்கு எதிராக ஒட்டியது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 0509209 இதழ்

தோழர் சக்திவேல் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு நன்கொடை

தோழர் சக்திவேல் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு நன்கொடை

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ச. விஜய்-அம்மு, ஜாதி மறுப்பு சுயமரி யாதை இணை யேற்பு விழா 25.8.2019 அன்று மாலை 7 மணியளவில் சென்னை பெரும் பாக்கத்திலுள்ள சமூக நலக் கூடத் தில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மணவிழாவை நடத்தி வைத்தார். கழக ஏட்டுக்கு மணவிழா மகிழ்வாக ரூ.5000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 0509209 இதழ்

மயிலாடுதுறை மா.க. கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு; நினைவு நூல் வெளியீடு

மயிலாடுதுறை மா.க. கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு; நினைவு நூல் வெளியீடு

திராவிடர் விடுதலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆகியோரின் மூத்த சகோதரர் மா.க. கிருட்டிண மூர்த்தி (85) ஆகஸ்டு 19ஆம் தேதி முடிவெய்தினார். கூட்டுறவுத் துறையில் இணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மா.க. கிருட்டிணமூர்த்தி, தீவிரமான பெரியாரிஸ்ட். தனது சகோதரர்களை பெரியார் இயக்கத்தை நோக்கிக் கொண்டு வந்தவர். அவரது விருப்பப்படி உடல் புதுச்சேரி ‘மகாத்மா காந்தி’ அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. படத்திறப்பு நிகழ்வு ஆகஸ்டு 29 அன்று மயிலாடுதுறை வாசுகி மகாலில் மாலை 6 மணியளவில் நடந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். திராவிடர் விடுதலைக்கழகத் தோழர்களும் திராவிடர் கழகத் தோழர்களும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் நண்பர்களும் உறவினர்களும் திரளாகப் பங்கேற்றனர். நிகழ்வில்  மா.க. கிருட்டிணமூர்த்தி மகன் கி. தளபதிராஜ் எழுதிய ‘விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?’ என்ற நூல் வெளியிடப்பட்டது....

கழகப் பரப்புரைப் பயண விளக்கக் கூட்டங்கள்

கழகப் பரப்புரைப் பயண விளக்கக் கூட்டங்கள்

வேட்டைக்காரன் புதூரில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண விளக்கப் பொதுக்கூட்டம் 26.08.2019 அன்று மாலை 6 மணிக்கு  பொள்ளாச்சி வேட் டைக்காரன் புதூரில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஒன்றியச் செயலாளர் அரிதாசு தலைமை வகித்தார்.  ஒன்றிய தலைவர் அப்பாதுரை முன்னிலை வகித்தார். நிகழ்வில் கழக பொருளாளர் துரைசாமி, செயற்குழு உறுப்பினர் மடத்துகுளம் மோகன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி உரையாற்றினர். முனைவர் சுந்தர வள்ளி,  திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். தோழர்கள் வினோதினி – மணி இணையர்களின் குழந்தைக்கு நிறைமதி என கழகத் தலைவர் பெயர் சூட்டினார். சபரிகிரி நன்றி கூறினார். இந்நிகழ்வில், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஆனமலை பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரத்தில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு பயணத் தின்  பிரச்சார பயண விளக்க  பொதுக் கூட்டம் 26.08.2019 அன்று மாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட...

பரப்புரைப் பயணம் மீண்டும் செப். 17இல் தொடங்குகிறது

பரப்புரைப் பயணம் மீண்டும் செப். 17இல் தொடங்குகிறது

ஆகஸ்ட் 25ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கிய ‘மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண’த்துக்கு தமிழகம் முழுதும் காவல் துறை வழங்கிய அனுமதியை திடீரென மறுத்தது. வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு, தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுறுவல் ஆகிய பிரச்சினைகளை காவல்துறை காரணமாகக் கூறியது. அதைத் தொடர்ந்து கழகத்தின் பரப்புரைப் பயணம் தள்ளி வைக்கப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளில் மீண்டும் பரப்புரைப் பயணம் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடங்குகிறது. செப். 20இல் நாமக்கல் பள்ளிப் பாளையத்தில் நிறைவு விழா மாநாடு நடைபெறும். காவல்துறைக்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. தோழர்களே, தயாராவீர்! பெரியார் முழக்கம் 0509209 இதழ்