அண்ணா பிறந்தநாள்: கழகம் மாலை அணிவிப்பு

மயிலாடுதுறை : 15.09.2019 அன்று காலை 10 மணிக்கு அண்ணா 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப் பட்டது. உடன் மயிலாடு துறை கழகத் தோழர்கள் சென்றிருந்தனர். முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கோவை : 15.09.2019 அன்று காலை 9 மணிக்கு, கழகத்தின் சார்பில் காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பப்பட்டது.

வெங்கட், கிருஷ்ணன், அறிவரசு, மாதவன் சங்கர், நிர்மல், கிருஷ்ணமூர்த்தி, செந்தில் வடிவேல், மன்சூர் அலி, ராஜ்.  மேலும் திராவிட விழுதுகள் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 19092019 இதழ்

You may also like...